Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழக அரசியல்- ஒரு பார்வை
+4
உதயசுதா
மகா பிரபு
சாமி யார்?
Lakshman
8 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
தமிழக அரசியல்- ஒரு பார்வை
First topic message reminder :
தமிழ் நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள் எண்ணிக்கை 234. நாடாளுமன்ற
தொகுதிகளின் எண்ணிக்கை 39. 1986 வரை தமிழ் நாட்டில் இரண்டு அடுக்கு சட்ட
மன்றங்கள் இருந்தன. தற்பொழுது ஒரு அவை மட்டுமே உள்ளது. மாநகராட்சிகள்,
நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் ஆகியவற்றுக்கும் ஐந்து ஆண்டுக்கு
ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்து எடுக்கப்
படுகின்றனர்.
தமிழ் நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளாக திராவிட
முன்னேற்றக் கழகம் மற்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவை
விளங்குகின்றன.காங்கிரஸ் கட்சி, மார்க்சிய கட்சிகள், பாட்டாளி மக்கள் கட்சி
, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் தேசிய
முற்போக்கு திராவிடக் கழகம் , பாரதிய ஜனதா கட்சி,மனிதநேய மக்கள்
கட்சி,புதிய தமிழகம் கட்சி, மூவேந்தர் முன்னேற்ற கழகம், அகில இந்திய
சமத்துவ மக்கள் கட்சி,மற்றும் முஸ்லிம் லீக் ஆகியவையும் குறிப்பிடத்தக்க
முக்கியத்துவம் வாய்ந்த கட்சிகளாக உள்ளன.
காமராஜர் , ஈ. வெ.
ராமசாமி, அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றவர்கள் தமிழக
அரசியலில் முக்கியம் வாய்ந்தவர்களாகக் கருதப்படுகின்றனர். ஊழல்,
காழ்ப்புணர்ச்சி, அரசியல் பகை போன்ற குற்றச்சாட்டுகள் பெரும்பான்மையாக
இருந்தாலும், தமிழகத்தின் வளர்ச்சிக்கும், சமூக மாற்றங்களுக்கும் தமிழக
அரசியல் முக்கிய ஊன்றுகோலாக இருந்தது என்று சொல்வது மிகையாகாது.
தமிழக அரசியல் ( 1900 -1947 ) :
தமிழகத்தின்
முதல் அரசியல் கட்சியாக நீதிக்கட்சி விளங்கியது. 1916 ஆம் ஆண்டு தியாகராய
செட்டி அவர்களால் தொடங்கப்பட்டது. மதராஸ் மாகாணத்தில் 1920 இல் நடந்த
தேர்தலில் 98 தொகுதிகளில் 63 தொகுதிகள் வெற்றி பெற்று பெரும்பான்மையாக
ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் கட்சியில் இருந்த பெரியார், இட ஒதுக்கீடு
சம்பத்தப்பட்ட கொள்கையில் கருத்து வேறுபாடு காரணங்களினால் நீதிக் கட்சியில்
சேர்ந்தார். 1944 ஆம் ஆண்டு நீதிக் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார்.
பின்பு நீதிக் கட்சியை திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றினார். அக்கட்சி
பின்பு திராவிட கொள்கைகளும், ஹிந்தி எதிர்ப்பு கொள்கைகளும், தனித் திராவிட
நாடு கொள்கைகளும் மக்களிடம் பரப்பி கொண்டு வந்தது. ஆட்சி அதிகாரத்தில்
விருப்பம் இல்லாமல் இருந்த பெரியாரை விட்டு பிரிந்த அறிஞர் அண்ணா பின்பு (
திராவிட முன்னேற்றக் கழகம் ) திராவிட முன்னேற்ற கழகத்தைத் தொடங்கினார்.
தமிழக அரசியல் ( 1947 -1962 ) :
''இந்திய சுதந்திரத்திற்கு பின் காங்கிரஸ் அனைத்து மாநிலங்களிலும் ஜனநாயக
முறையில் பெரும் வெற்றியைப் பெற்றது.என்று சொல்வது மிகையாகது." மொழி
அரசியல் இக்கால கட்டத்தில் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்ற ராஜாஜி சிறிது
காலத்திலேயே கட்சிக்குள்ளே ஏற்ப்பட்ட கருத்து வேறுபாடுகளால் முதலமைச்சர்
பதவியை துறந்தார். இதன் பின் முதல்வர் பதவி ஏற்ற காமராஜ் தமிழகத்தில் மிக
பெரிய அளவில் கல்வி மற்றும் தொழில் துறையில் பெரும் புரட்சி
ஏற்படுத்தினார். இவர் காலத்தில் தொடங்கிய மதிய உணவு திட்டம் இன்று தமிழகம்
கல்வியறிவில் சிறந்து விளங்க முக்கிய காரணமாக உள்ளது. இன்று தமிழகத்தில்
உள்ள அனைத்து அரசு பள்ளிகளிளும் முதல் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு
உள்ள அனைத்து மாணவ மாணவிகளுக்கு மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்
படுகின்றது. மேலும் விவசாயம் மற்றும் தொழில் வளம் பெருகிட இந்த ஆட்சி
உதவியது. தமிழக அரசியலில் மிக முக்கியமான கல்வி மற்றும் தொழில் வளர்ச்சி
இக்காலத்தில் ஏற்பட்டதால் அரசியல் ஆர்வலர்கள், பெரும்பானவர்கள் கட்சி,
கொள்கை வேறுபாடின்றி பாராட்டும் 'பொற் கால ஆட்சி' முக்கிய கூறாக
விளங்கியது. திராவிட இயக்கத்தில் இருந்து பிரிந்த அண்ணா 1949ஆம் ஆண்டு
திராவிட முன்னேற்ற கழகத்தைத் சென்னை இராயபுரம் ராபின்சன் பூங்காவில்
தொடங்கினார்கள். 1952ஆம் ஆண்டு முதல் இந்தி எதிர்ப்பு போராட்டம் பெரியாரால்
தொடங்கி வைக்கப்பட்டது.'''''
தமிழக அரசியல் ( 1962 -1967 ) :
965 மற்றும் 1968ஆம் ஆண்டு நடைப்பெற்ற ஹிந்தி எதிர்ப்பு போராட்டங்கள் தமிழக அரசியலில் பெரிய மாற்றங்களை கொண்டு வந்தது.
தனி தமிழ்நாடு போராட்டங்கள் 1939 முதல் இருந்தாலும் 1963ஆம் அன்றைய பிரதமர்
நேரு கொண்டு வந்த சட்டம் தனிநாடு கேட்கும் கட்சிகளை தடை செய்தது. பின்பு
அண்ணா அக்கோரிக்கையை கைவிட்டார். 1960களில் திமுக போராடிய ஹிந்தி எதிர்ப்பு
போராட்டங்கள் 1967 தேர்தலில் அவர்களுக்கு பேரும் வெற்றியை கொண்டு வந்தது.
அன்று முதல் இன்று வரை திராவிட கட்சிகளே தமிழக ஆட்சி கட்டிலில்
அமர்கின்றனர்.
தமிழக அரசியல் ( 1967 -1971 ) :
அண்ணா முதலமைச்சர் கட்டிலில் 2 ஆண்டுகள் வகித்தார். இக்காலத்தில் மதராஸ்
மாகாணம் என்பது தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட்டது. இரு மொழி கொள்கையும்,
சுயமரியாதை கல்யாணம், இட ஒதுக்கீடு ஆகியவை சட்டங்களாக இயற்றப்பட்டன.
இரண்டே ஆண்டுகள் ஆட்சி செய்தாலும் நிறைய சமூக மாற்றங்களுக்கு இந்த ஆட்சி
முக்கிய பங்கு வகித்தது. எம். ஜி. ஆர், எஸ். எஸ். ஆர், கண்ணதாசன், சிவாஜி
போன்ற சினிமா பிரபலங்கள் இக்கால கட்டத்தில் அரசியல் களத்தில் புகழ்
பெற்றனர். 1969ஆம் ஆண்டு அண்ணா மறைவுக்கு பின்னர் எம். ஜி. ஆர் உதவியால்
கருணாநிதி முதல்வரானார். இக்கால கட்டத்தில் திமுக கட்சியில் உயர் மட்ட
தலைவர்களுக்குள் கருத்து வேறுபாடு எற்பட்டது. கண்ணதாசன், சிவாஜி போன்றோர்
அரசியலில் பிரகாசிக்கவில்லையென்றாலும் எம்.ஜி.ஆர் மக்களிடையே மிக பிரபலம்
அடைந்தார். கருணாநிதி சதியால் திமுக-விலிருந்து பிரிந்த எம்.ஜி.ஆர் 1972ஆம்
ஆண்டு அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்னும் தனி கட்சியை தொடங்கினார்.
தமிழக அரசியல் ( 1977 -1990 ) :
தனி கட்சியை ஆரம்பித்த எம்.ஜி.ஆர் 1977 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில்
பெரும்பான்மையான வெற்றிப் பெற்று தமிழக முதல்வரானார். அவர் ஆண்ட இக்கால
கட்டத்தில் நிறுத்தி வைத்திருந்த மதிய உணவு திட்டத்தை மறுபடியும் தொடங்கி
வைத்தார். மேலும் உயர் கல்வியிலும் நிறைய மாற்றங்களை கொண்டு வந்தார்.
இக்கால கட்டத்தில் தமிழ் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது, மேலும் பல புதிய
பொறியியல் கல்லூரிகள், மற்றும் மருத்துவ கல்லூரிகளும் தொடங்க வைக்கப்பட்டன.
1988ஆம் எம்.ஜி.ஆர் மறைந்தவுடன் குறுகிய காலம் அவர் மனைவி ஜானகி
ராமச்சந்திரன் முதல்வர் பதவியில் இருந்தார்.
தமிழக அரசியல் ( 1991 -2006 ) :
1991 முதல் 1996 வரை ஆண்ட ஜெயலலிதா 1996ஆம் ஆண்டு நடைப்பெற்ற தேர்தலில்
பெரும் தோல்வி அடைந்தார். பின்பு 1996 முதல் 2001 வரை கருணாநிதி முதல்வர்
பதவி வகித்தார். இக்கால கட்டத்தில் மதிமுக கட்சி உருவானது. பின்பு 2001ஆம்
ஆண்டு ஆட்சி பொறுப்பேற்ற அதிமுக 2006 வரை ஆட்சி பொறுப்பில் இருந்தது.
சினிமா நடிகர் விஜயகாந்த் தேசிய திராவிட முற்போக்கு கழகம் என்னும் கட்சியை
தொடங்கனார். 2006ஆம் ஆண்டு நடைப்பெற்ற தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சிக்கு
வந்தது.
தமிழக அரசியல் ( 2006 ) :
தமிழக அரசியலில் முதன் முறையாக பெரும்பான்மை கிடைக்காத காரணத்தினால் திமுக
காங்கிரஸ், கட்சியின் உதவியால் கூட்டனி ஆட்சி அமைத்தது.மேலும் இந்த
கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது...
குறிப்பு : நான் படித்த மற்றும் சேகரித்த செய்தி ஆகும...
தமிழ் நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள் எண்ணிக்கை 234. நாடாளுமன்ற
தொகுதிகளின் எண்ணிக்கை 39. 1986 வரை தமிழ் நாட்டில் இரண்டு அடுக்கு சட்ட
மன்றங்கள் இருந்தன. தற்பொழுது ஒரு அவை மட்டுமே உள்ளது. மாநகராட்சிகள்,
நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் ஆகியவற்றுக்கும் ஐந்து ஆண்டுக்கு
ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்து எடுக்கப்
படுகின்றனர்.
தமிழ் நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளாக திராவிட
முன்னேற்றக் கழகம் மற்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவை
விளங்குகின்றன.காங்கிரஸ் கட்சி, மார்க்சிய கட்சிகள், பாட்டாளி மக்கள் கட்சி
, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் தேசிய
முற்போக்கு திராவிடக் கழகம் , பாரதிய ஜனதா கட்சி,மனிதநேய மக்கள்
கட்சி,புதிய தமிழகம் கட்சி, மூவேந்தர் முன்னேற்ற கழகம், அகில இந்திய
சமத்துவ மக்கள் கட்சி,மற்றும் முஸ்லிம் லீக் ஆகியவையும் குறிப்பிடத்தக்க
முக்கியத்துவம் வாய்ந்த கட்சிகளாக உள்ளன.
காமராஜர் , ஈ. வெ.
ராமசாமி, அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றவர்கள் தமிழக
அரசியலில் முக்கியம் வாய்ந்தவர்களாகக் கருதப்படுகின்றனர். ஊழல்,
காழ்ப்புணர்ச்சி, அரசியல் பகை போன்ற குற்றச்சாட்டுகள் பெரும்பான்மையாக
இருந்தாலும், தமிழகத்தின் வளர்ச்சிக்கும், சமூக மாற்றங்களுக்கும் தமிழக
அரசியல் முக்கிய ஊன்றுகோலாக இருந்தது என்று சொல்வது மிகையாகாது.
தமிழக அரசியல் ( 1900 -1947 ) :
தமிழகத்தின்
முதல் அரசியல் கட்சியாக நீதிக்கட்சி விளங்கியது. 1916 ஆம் ஆண்டு தியாகராய
செட்டி அவர்களால் தொடங்கப்பட்டது. மதராஸ் மாகாணத்தில் 1920 இல் நடந்த
தேர்தலில் 98 தொகுதிகளில் 63 தொகுதிகள் வெற்றி பெற்று பெரும்பான்மையாக
ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் கட்சியில் இருந்த பெரியார், இட ஒதுக்கீடு
சம்பத்தப்பட்ட கொள்கையில் கருத்து வேறுபாடு காரணங்களினால் நீதிக் கட்சியில்
சேர்ந்தார். 1944 ஆம் ஆண்டு நீதிக் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார்.
பின்பு நீதிக் கட்சியை திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றினார். அக்கட்சி
பின்பு திராவிட கொள்கைகளும், ஹிந்தி எதிர்ப்பு கொள்கைகளும், தனித் திராவிட
நாடு கொள்கைகளும் மக்களிடம் பரப்பி கொண்டு வந்தது. ஆட்சி அதிகாரத்தில்
விருப்பம் இல்லாமல் இருந்த பெரியாரை விட்டு பிரிந்த அறிஞர் அண்ணா பின்பு (
திராவிட முன்னேற்றக் கழகம் ) திராவிட முன்னேற்ற கழகத்தைத் தொடங்கினார்.
தமிழக அரசியல் ( 1947 -1962 ) :
''இந்திய சுதந்திரத்திற்கு பின் காங்கிரஸ் அனைத்து மாநிலங்களிலும் ஜனநாயக
முறையில் பெரும் வெற்றியைப் பெற்றது.என்று சொல்வது மிகையாகது." மொழி
அரசியல் இக்கால கட்டத்தில் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்ற ராஜாஜி சிறிது
காலத்திலேயே கட்சிக்குள்ளே ஏற்ப்பட்ட கருத்து வேறுபாடுகளால் முதலமைச்சர்
பதவியை துறந்தார். இதன் பின் முதல்வர் பதவி ஏற்ற காமராஜ் தமிழகத்தில் மிக
பெரிய அளவில் கல்வி மற்றும் தொழில் துறையில் பெரும் புரட்சி
ஏற்படுத்தினார். இவர் காலத்தில் தொடங்கிய மதிய உணவு திட்டம் இன்று தமிழகம்
கல்வியறிவில் சிறந்து விளங்க முக்கிய காரணமாக உள்ளது. இன்று தமிழகத்தில்
உள்ள அனைத்து அரசு பள்ளிகளிளும் முதல் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு
உள்ள அனைத்து மாணவ மாணவிகளுக்கு மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்
படுகின்றது. மேலும் விவசாயம் மற்றும் தொழில் வளம் பெருகிட இந்த ஆட்சி
உதவியது. தமிழக அரசியலில் மிக முக்கியமான கல்வி மற்றும் தொழில் வளர்ச்சி
இக்காலத்தில் ஏற்பட்டதால் அரசியல் ஆர்வலர்கள், பெரும்பானவர்கள் கட்சி,
கொள்கை வேறுபாடின்றி பாராட்டும் 'பொற் கால ஆட்சி' முக்கிய கூறாக
விளங்கியது. திராவிட இயக்கத்தில் இருந்து பிரிந்த அண்ணா 1949ஆம் ஆண்டு
திராவிட முன்னேற்ற கழகத்தைத் சென்னை இராயபுரம் ராபின்சன் பூங்காவில்
தொடங்கினார்கள். 1952ஆம் ஆண்டு முதல் இந்தி எதிர்ப்பு போராட்டம் பெரியாரால்
தொடங்கி வைக்கப்பட்டது.'''''
தமிழக அரசியல் ( 1962 -1967 ) :
965 மற்றும் 1968ஆம் ஆண்டு நடைப்பெற்ற ஹிந்தி எதிர்ப்பு போராட்டங்கள் தமிழக அரசியலில் பெரிய மாற்றங்களை கொண்டு வந்தது.
தனி தமிழ்நாடு போராட்டங்கள் 1939 முதல் இருந்தாலும் 1963ஆம் அன்றைய பிரதமர்
நேரு கொண்டு வந்த சட்டம் தனிநாடு கேட்கும் கட்சிகளை தடை செய்தது. பின்பு
அண்ணா அக்கோரிக்கையை கைவிட்டார். 1960களில் திமுக போராடிய ஹிந்தி எதிர்ப்பு
போராட்டங்கள் 1967 தேர்தலில் அவர்களுக்கு பேரும் வெற்றியை கொண்டு வந்தது.
அன்று முதல் இன்று வரை திராவிட கட்சிகளே தமிழக ஆட்சி கட்டிலில்
அமர்கின்றனர்.
தமிழக அரசியல் ( 1967 -1971 ) :
அண்ணா முதலமைச்சர் கட்டிலில் 2 ஆண்டுகள் வகித்தார். இக்காலத்தில் மதராஸ்
மாகாணம் என்பது தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட்டது. இரு மொழி கொள்கையும்,
சுயமரியாதை கல்யாணம், இட ஒதுக்கீடு ஆகியவை சட்டங்களாக இயற்றப்பட்டன.
இரண்டே ஆண்டுகள் ஆட்சி செய்தாலும் நிறைய சமூக மாற்றங்களுக்கு இந்த ஆட்சி
முக்கிய பங்கு வகித்தது. எம். ஜி. ஆர், எஸ். எஸ். ஆர், கண்ணதாசன், சிவாஜி
போன்ற சினிமா பிரபலங்கள் இக்கால கட்டத்தில் அரசியல் களத்தில் புகழ்
பெற்றனர். 1969ஆம் ஆண்டு அண்ணா மறைவுக்கு பின்னர் எம். ஜி. ஆர் உதவியால்
கருணாநிதி முதல்வரானார். இக்கால கட்டத்தில் திமுக கட்சியில் உயர் மட்ட
தலைவர்களுக்குள் கருத்து வேறுபாடு எற்பட்டது. கண்ணதாசன், சிவாஜி போன்றோர்
அரசியலில் பிரகாசிக்கவில்லையென்றாலும் எம்.ஜி.ஆர் மக்களிடையே மிக பிரபலம்
அடைந்தார். கருணாநிதி சதியால் திமுக-விலிருந்து பிரிந்த எம்.ஜி.ஆர் 1972ஆம்
ஆண்டு அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்னும் தனி கட்சியை தொடங்கினார்.
தமிழக அரசியல் ( 1977 -1990 ) :
தனி கட்சியை ஆரம்பித்த எம்.ஜி.ஆர் 1977 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில்
பெரும்பான்மையான வெற்றிப் பெற்று தமிழக முதல்வரானார். அவர் ஆண்ட இக்கால
கட்டத்தில் நிறுத்தி வைத்திருந்த மதிய உணவு திட்டத்தை மறுபடியும் தொடங்கி
வைத்தார். மேலும் உயர் கல்வியிலும் நிறைய மாற்றங்களை கொண்டு வந்தார்.
இக்கால கட்டத்தில் தமிழ் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது, மேலும் பல புதிய
பொறியியல் கல்லூரிகள், மற்றும் மருத்துவ கல்லூரிகளும் தொடங்க வைக்கப்பட்டன.
1988ஆம் எம்.ஜி.ஆர் மறைந்தவுடன் குறுகிய காலம் அவர் மனைவி ஜானகி
ராமச்சந்திரன் முதல்வர் பதவியில் இருந்தார்.
தமிழக அரசியல் ( 1991 -2006 ) :
1991 முதல் 1996 வரை ஆண்ட ஜெயலலிதா 1996ஆம் ஆண்டு நடைப்பெற்ற தேர்தலில்
பெரும் தோல்வி அடைந்தார். பின்பு 1996 முதல் 2001 வரை கருணாநிதி முதல்வர்
பதவி வகித்தார். இக்கால கட்டத்தில் மதிமுக கட்சி உருவானது. பின்பு 2001ஆம்
ஆண்டு ஆட்சி பொறுப்பேற்ற அதிமுக 2006 வரை ஆட்சி பொறுப்பில் இருந்தது.
சினிமா நடிகர் விஜயகாந்த் தேசிய திராவிட முற்போக்கு கழகம் என்னும் கட்சியை
தொடங்கனார். 2006ஆம் ஆண்டு நடைப்பெற்ற தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சிக்கு
வந்தது.
தமிழக அரசியல் ( 2006 ) :
தமிழக அரசியலில் முதன் முறையாக பெரும்பான்மை கிடைக்காத காரணத்தினால் திமுக
காங்கிரஸ், கட்சியின் உதவியால் கூட்டனி ஆட்சி அமைத்தது.மேலும் இந்த
கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது...
குறிப்பு : நான் படித்த மற்றும் சேகரித்த செய்தி ஆகும...
அன்புடன் லக்ஷ்மண்
" இறப்பு என்பது உண்மை
இருக்கும் வரை உதவி செய் "
" இறப்பு என்பது உண்மை
இருக்கும் வரை உதவி செய் "
Lakshman- பண்பாளர்
- பதிவுகள் : 91
இணைந்தது : 17/03/2011
தேர்தலில் ஜெயலலிதா நிச்சயம் ஜெயிப்பார்
என்ன நண்பர்களே படிச்சீங்களா? யார் அடுத்த முதல்வர்னு தெரிஞ்சிருப்பீங்க. நானும் ஜோதிடம் படிச்சேன். ஆனால் ஜோதிடர் அல்ல. நெருங்கியவர்களுக்கு மட்டும் சொல்லுவேன். நான் படிச்சது கிருஷ்ணமூர்த்தி பத்ததின்க்ற முறை. நான் ஜெயலலிதாவுக்கு ஜால்ரா அடிக்ற ஆள்னு நெனச்சிராதீங்க. கெரகம் சொல்றதத்தான் நாங்க சொல்ல்வோம். நீங்க வேணா நான் சொல்றத சவாலா எடுத்துக்குங்க . எங்களோட ஜோதிடக்கநிப்பு தவறுனா ( கால்குலேசன் மிஸ் ஆகாதுங்கோ) என்ன பண்ணனும்னு நீங்களே சொல்லுங்க.உதயசுதா wrote:இவரு சொல்ற மாதிரி அந்தம்மா ஆட்சிக்கு வந்தா ஓகே.இல்லைன்னா இவர என்ன பண்றது?maniajith007 wrote:http://saamiyaar.blogspot.com/2011/03/blog-post_15.html இப்போ போயி பாருங்கஉதயசுதா wrote:வாங்க வாங்க ன்னு கூபிடரிங்க.ஆனா வந்தா page not found ன்னு வருது.என்ன காமெடி பண்றீங்களா?சாமி யார்? wrote:நண்பர்களே, இந்த (2011) தேர்தலில் யார் உறுதியாக ஜெயிப்பார்கள் என்பதை படித்து விட்டீர்களா? படிக்கவில்லை என்றால் இங்க http://saamiyaar.blogspot.com/2011/03/blog-post_15.எச்டிஎம்எல் கொஞ்சம் வந்துட்டு போங்க. அன்புடன் அழைக்கிறேன். ஒரு பார்வை பாத்துட்டு போங்களேன். அட வாங்க சார். நன்றி சார் (நீங்க வர போகிறதற்கு )
சாமி யார்?- பண்பாளர்
- பதிவுகள் : 120
இணைந்தது : 24/03/2011
Re: தமிழக அரசியல்- ஒரு பார்வை
நாங்க இந்த கணிப்பை ஸ்பெக்ட்ரம் ஊழல் ஆரம்பிக்கும் முன்னரே தெரியப்படுத்தி விட்டோம். இந்த தளத்தில் நான் பதிந்தது ரொம்ப லேட். சரி பரவாயில்லை. நீங்கள் எங்களின் ஜோதிடக்கணிப்பை இப்பொழுது ஏளனம் செய்து கொள்ளுங்கள். ஆனால் அடுத்த மாதம் வாக்குப்பதிவு முடிந்த பின்னர் எங்களின் கூற்று பலிக்கும் பட்சத்தில் அந்த ஒரு நிமிடம் நான் கூறியதை நினைவு கூர்ந்தால் அதுவே நான் ஜோதிடம் படித்ததற்கான பாக்கியமாக கருதுகிறேன்.உதயசுதா wrote:மணி நடக்கும் அரசியல் நிலவரங்களை வச்சு யார் வேண்டுமானாலும் சொல்லலாம் இவர்தான் முதல்வர் ஆவார்,இல்லை என்று.அதுக்கு எதுக்கு ஜோசியம், ஜாதகம்.maniajith007 wrote:உதயசுதா wrote:
இவரு சொல்ற மாதிரி அந்தம்மா ஆட்சிக்கு வந்தா ஓகே.இல்லைன்னா இவர என்ன பண்றது?
இல்லைக்கா இங்கே நேத்து நடந்த கூத்து இருக்கே முதல்வர் தான் தொகுதிக்கு போரார்னு அரை மணி நேரம் முக்கியமான சாலை மூடிட்டாங்க பெரும்பாலும் அந்த அம்மாவுக்கு ஆதரவுதான் ஆனால் காலம் தான் பதில் சொல்லும்
சாமி யார்?- பண்பாளர்
- பதிவுகள் : 120
இணைந்தது : 24/03/2011
Re: தமிழக அரசியல்- ஒரு பார்வை
நாங்க ண்ணா நீங்க மட்டுமா இல்ல இன்னும் நாலு பேர் கூட்டு சேர்ந்து ஜோசியம் சொல்றீங்களா.சாமி யார்? wrote:நாங்க இந்த கணிப்பை ஸ்பெக்ட்ரம் ஊழல் ஆரம்பிக்கும் முன்னரே தெரியப்படுத்தி விட்டோம். இந்த தளத்தில் நான் பதிந்தது ரொம்ப லேட். சரி பரவாயில்லை. நீங்கள் எங்களின் ஜோதிடக்கணிப்பை இப்பொழுது ஏளனம் செய்து கொள்ளுங்கள். ஆனால் அடுத்த மாதம் வாக்குப்பதிவு முடிந்த பின்னர் எங்களின் கூற்று பலிக்கும் பட்சத்தில் அந்த ஒரு நிமிடம் நான் கூறியதை நினைவு கூர்ந்தால் அதுவே நான் ஜோதிடம் படித்ததற்கான பாக்கியமாக கருதுகிறேன்.உதயசுதா wrote:மணி நடக்கும் அரசியல் நிலவரங்களை வச்சு யார் வேண்டுமானாலும் சொல்லலாம் இவர்தான் முதல்வர் ஆவார்,இல்லை என்று.அதுக்கு எதுக்கு ஜோசியம், ஜாதகம்.maniajith007 wrote:உதயசுதா wrote:
இவரு சொல்ற மாதிரி அந்தம்மா ஆட்சிக்கு வந்தா ஓகே.இல்லைன்னா இவர என்ன பண்றது?
இல்லைக்கா இங்கே நேத்து நடந்த கூத்து இருக்கே முதல்வர் தான் தொகுதிக்கு போரார்னு அரை மணி நேரம் முக்கியமான சாலை மூடிட்டாங்க பெரும்பாலும் அந்த அம்மாவுக்கு ஆதரவுதான் ஆனால் காலம் தான் பதில் சொல்லும்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: தமிழக அரசியல்- ஒரு பார்வை
நாங்கள்=இறைவன்+அடியேன்+கிரகங்கள்
சாமி யார்?- பண்பாளர்
- பதிவுகள் : 120
இணைந்தது : 24/03/2011
Re: தமிழக அரசியல்- ஒரு பார்வை
உங்கள் ஆரூடத்திற்கு நன்றி பெரியவரே...
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: தமிழக அரசியல்- ஒரு பார்வை
மக்கள் யார் பக்கம் என்று இன்னும் ஒரு மாதத்தில் தெரிந்துவிடும். அதற்குள் எதற்கு ஆரூடம்
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Page 2 of 2 • 1, 2
Similar topics
» 6மணி நேரம் : மின்வெட்டு இரண்டு மடங்கானது. .
» தமிழக அரசியல் செய்திகள்
» இலங்கை தமிழர்கள் தமிழக அரசியல் கட்சிகளை நம்புவது இல்லை: நாராயணசாமி
» தமிழக இப்தார் விருந்தில் அரங்கேறும் அரசியல்
» தமிழக அரசியல் கட்சிகளின் கூட்டணி வரலாறு-அன்று முதல் இன்று வரை
» தமிழக அரசியல் செய்திகள்
» இலங்கை தமிழர்கள் தமிழக அரசியல் கட்சிகளை நம்புவது இல்லை: நாராயணசாமி
» தமிழக இப்தார் விருந்தில் அரங்கேறும் அரசியல்
» தமிழக அரசியல் கட்சிகளின் கூட்டணி வரலாறு-அன்று முதல் இன்று வரை
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|