ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க

+4
மஞ்சுபாஷிணி
உதயசுதா
ரபீக்
சிவா
8 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

உங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க - Page 2 Empty உங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க

Post by சிவா Wed Mar 23, 2011 12:27 pm

First topic message reminder :

உங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள் என்று கருதி உங்கள் வீட்டுப் பிள்ளைகளாம் எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள்!

அடுக்கடுக்கான அறிவிப்புகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை வெளியிட்டு தலைவர் கலைஞர் வேண்டுகோள்!


தலைவர் கலைஞர் அவர்கள் கழகத் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு உரையாற்றும் போது, ‘‘எங்களின் வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்ட வாக்குறுதிகள் என்று யாரும் கருதத் தேவையில்லை’’ என்றும் ‘‘உங்களுக்காக உழைப்பவர்கள், ஊரை வாழ வைப்ப வர்கள், உலகம் போற்றும் உத்தமர்கள் வழி நடப்பவர்கள் என்று கருதி உங்கள் வீட்டுப் பிள்ளைகளாம் எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள்’’ என்று வேண்டு கோள் விடுத்தார்.

தலைவர் கலைஞர் அவர்கள் கழகத் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு ஆற்றிய உரை வருமாறு:


கழகத்தின் பொதுச் செயலாளர், இனமான பேராசிரியர் அவர்களே, பொருளாளர் தம்பி மு.க.ஸ்டாலின் அவர்களே, அன்புக்கும் அளவற்ற மரியாதைக்கும் உரிய கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களே, அனைத்து தோழமைக் கட்சிகளையும் சேர்ந்த முன்னணி யினரே, என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புக்களே, வணக்கம்.

14-வது சட்டப் பேரவைத் தேர்தலுக்கான அறிக்கையினை வெளியிடுகின்ற நேரத்தில் முன்கூட்டி சில வார்த்தைகளைக் கூற விரும்புகிறேன்.

சொன்னதைச் செய்வோம் -செய்வதைச் சொல்வோம்


வாக்குறுதிகளிலேயே சிறந்த வாக்குறுதி - காப்பாற்ற வேண்டிய வாக்குறுதி - தேர்தல் வாக்குறுதி என்பதை அனைவரும் அறிவீர்கள். அதனால்தான் சில வாக்குறுதிகளை "காற்றிலே பறக்க விடப்பட்ட வாக்குறுதிகள்" என்று கேலி பேசுகிற நிலை இருப் பதையும் நாமனைவரும் நன்கறிவோம். அத்தகைய வாக்குறுதிகளாக திராவிட முன்னேற்றக் கழகம் வழங்குகிற வாக்குறுதிகள் ஆகி விடக்கூடாது என் பதற்காகவும் - அத்தகைய வாக்குறுதிகளை வழங்கி, அதை நிறைவேற்ற முடியாமல் ஆகி விடக்கூடாது என்பதற்காகவும் - அவ்வாறு ஆகாது என்பதற்காக வும்தான் - "சொன்னதைச் செய்வோம் - செய்வதைச் சொல்வோம்" என்று திட்டவட்டமாகக் கூறுவதை திராவிட முன்னேற்றக் கழகம் கடைப்பிடித்து வருகிற வாக்குறுதியாகக் கொண்டுள்ளது.

கடந்த தேர்தல்களின்போது வெளியிட்ட வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி விட்டோம் என்று நெஞ்சை நிமிர்த்து கூற இயலாதவாறு நிறைவேறாமல் எஞ்சியிருக்கும் வாக்குறுதிகளும் உண்டு. உதாரணமாக காவிரிப் பிரச்சினை - முல்லைப் பெரியாறு - சேது சமுத்திரத் திட்டம் - கச்சத் தீவு மீட்பு போன்ற இவைஅனைத்தும் ஆட்சியாளர் களாகிய எங்களின் தாமதத்தாலோ அல்லது அக்கறையின்மையாலோ இன்னும் நிறை வேறாமல் இருப்பவை அல்ல! இவைகள் மாத்திரமல்லாமல் - தமிழகத்தில் கடந்த தேர்தலில் நாங்கள் வழங்கிய கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் வாக்குறுதி கூட முற்றாக முடிவடையாமல் - முட்டுக்கட்டையாக இருப்பது வழக்குகள் - நீதிமன்றங்களிலே முடிவடை யாமல் இருப்பதுதான் என்பதை வாக்காளப் பெருமக்கள் நன்கறிவார்கள்.

எனவே சொல்வதைச் செய்வோம் என்ற உறுதி மொழி சிலவற்றில் நிறைவேற்றப் படாமல் இருப் பதற்கு இந்த அரசு மீது யாரும் குற்றம் கூறிவிட முடியாது.

முட்டுக்கட்டைகள் போடப்பட்டு ஓடாமல் நிற்கும் தேர் - அந்த முட்டுக்கட்டை அகற்றப் பட்டால் - மக்களின் மகிழ்ச்சி வெள்ளத்திற்கிடையே அசைந்தாடி ஊர்ந்து ஓடுவதைக் காண முடிகிறதல்லவா; அது போலத்தான் தவிர்க்க முடியாததும் சட்ட ரீதியாக தேவைப் படுவதுமான நீதிமன்றங்களின் தலையீடுகளால் - காவிரியானாலும் - பெரியாறு அணை ஆனாலும் - சேது சமுத்திரத் திட்டமானாலும் - இவற்றையெல்லாம் விரைந்து நிறைவேற்ற முடியாத நிலைமைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம் என்பதை அறிவுத் தெளிவுடை யோர் எவரும் ஆட்சேபிக்க மாட்டார்கள்.

எனவே இவ்வாறு தவிர்க்க முடியாத தாமதத்தால் தயங்கி நிற்கும் திட்டங்களையெல்லாம் இந்த அரசு தட்டிக் கழித்து விட்ட திட்டங்கள் என்று கருதி - நாங்கள் தேர்தல் அறிக்கையிலே கொடுத்த வாக்குறுதி களை "காற்றிலே பறக்க விட்ட வாக்குறுதிகள்" என்று யாரும் கருதத் தேவையில்லை.

உங்களுக்காகப் பணியாற்ற எங்களுக்கு உத்தரவிடுங்கள்

இன்றில்லாவிட்டால் நாளை - நாளை தவறினால் நாளை மறுநாள் - என்றோ ஒரு நாள் எப்படியும் நிறைவேற்றப்படக்கூடிய வாக்குறுதிகளைத்தான் திராவிட முன்னேற்றக் கழகமும், அதன் கூட்டணியிலே உள்ள கட்சிகளும் வழங்குகின்றன என்ற நம்பிக்கை யோடு இந்த அறிக்கையிலே காணும் திட்டங்களுக்கும் அறிவிப்புகளுக்கும் உங்கள் மனமார்ந்த வரவேற்பையும் - வாழ்த்துக்களையும் வழங்குவீர்கள் என்று எதிர்பார்த்து - ஏழையெளியோர் - சாதாரண, சாமான்ய மக்கள் - பட்டினங்களிலே வாழ்வோர் முதல் பட்டிக்காட்டிலே இருப்போர்வரை அனைவரும் எங்களை உங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள் - உலகம் போற்றும் உத்தமர்கள் வழி நடப்பவர்கள் என்று கருதி - உங்கள் வீட்டுப் பிள்ளைகளாம் எங்களை - உங்களுக்காகப் பணியாற்ற உத்தர விடுங்கள் என்று இந்தத் தேர்தல் அறிக்கையை வழங்குகின்ற நேரத்தில் - வணங்கி வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

என் உயிரினும் மேலான தமிழ்ப் பெருமக்களே! நமது திராவிட முன்னேற்றக் கழகம் சந்தித்த தேர்தல்களின் போது உங்கள் கட்டளையையேற்று களம் புகுந்த நேரத்தில் எல்லாம் - உங்கள் கால் மலர் களில் வைத்த தேர்தல் அறிக்கைகளில் "சொன்ன தைச் செய்வோம் - செய்வதைச் சொல்வோம்" என்று நான் குறிப்பிட்டிருந்தேன். அந்த வாசகத்தையொட்டி இந்தச் சட்டமன்றத் தேர்தலிலும் பிறிதொரு வாய்மை நிறை வாசகமாக இதோ "செய்ததைச் சொல்லி - அவற்றைத் தொடர்ந்து இனி செய்யப் போவதையும் விளக்குகிற அறிக்கை"யாக இந்த உறுதிமொழி அறிக்கையை உங்கள் பாதார விந்தங்களில் வைத்து வணங்குகிறேன்.

அறிவின் களஞ்சியம் அண்ணாவை வணங்கி தி.மு.க. தேர்தல் அறிக்கையை முன் வைக்கிறது!


இளங்குருத்துப் பருவத்தில் பொது வாழ்வைத் தொடங்கி சமூகம் - பொருளாதாரம் - அரசியல் மற்றும் கலை இலக்கியம் என பல துறைகளிலும் பணியாற்றிப் பாடுபட்டு என் வாழ்வின் ஒவ்வொரு துளியும் என் உயிரினும் மேலான தமிழ் மக்களாம் உங்களுக் காகவே எஞ்சிய நாட்களையும் செலவிடத் தயாராக இருக்கிற நான் கடந்த தேர்தல்கள் பலவற்றில் "சொல்வதைச் செய்வோம்" என்று உறுதிமொழி அளித்து அந்த உறுதிமொழி களை இயன்ற வரையில் நிறைவேற்றி வந்திருக்கிறேன். அதனால் இதுவரையில் சொன்னதைச் செய்தோம் - என்பவைகளைப் பட்டியலிட்டு - இனியும் செய்வதற்கான உறுதிமொழிகளை இணைத்து - இந்தத் தேர்தல் அறிக்கையை வெளியிடுகின்றேன்.

தமிழர்களின் நெஞ்சத்தில் என்றும் நீங்கா இடம் பெற்று இன உணர்வின் ஏந்தலாக, திராவிட இயக்கத்தின் ஒப்பற்றத் தலைவராக, கொள்கைக் குன்றமாக, அறிவின் களஞ்சி யமாக, திராவிட முன்னேற்றக் கழகத்தை வழிநடத்தும் ஆற்றலின் பேருருவாக விளங்கிய பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவிடம் நோக்கி, நன்றியைக் குவித்து, வீரவணக் கத்தைச் செலுத்தி, தி.மு.க. இத்தேர்தல் அறிக்கையை மக்கள் முன் வைக்கிறது.


உங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


உங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க - Page 2 Empty Re: உங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க

Post by சிவா Wed Mar 23, 2011 12:38 pm

நெசவாளர் நலன்

நீண்ட காலக் கண்ணோட்டத்தில் நெசவுத் தொழில் நலியாமல் இருப்பதற்கு நெசவாளர் களுக்கு கச்சாப் பொருள்களும், முதலீட்டுப் பொருள்களும் பெறுவதற்கு அதிக கூட்டுறவுக் கடன்களை வழங்க அரசின் சார்பில் உரிய நடவடிக்கைகளை மேற் கொள்வோம்.

கூட்டுறவு நெசவாளர்களுக்கு தற்போது மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் முதியோர் ஓய்வூதியத்தை 400 ரூபாயிலிருந்து 600 ரூபாயாக உயர்த்தி வழங்குவதோடு; கூட்டுறவுச் சங்கங்களில் தொடர்ந்து ஐந்தாண்டுகள் பணி புரிந்த 60 வயது நிறைவடைந்த அனைத்து நெசவாளர்களுக்கும் எண்ணிக்கை வரம்பின்றி ஓய்வூதியம் வழங்கு வோம்.

கைத்தறி நெசவாளர்களுக்கு தற்போது வழங்கப் பட்டு வரும் இலவச மின்சாரம் 100 யூனிட் என்பது 200 யூனிட்டாக உயர்த்தி வழங்குவோம்.

புதிதாக விசைத்தறி நிறுவனம் அமைப்பவர் களுக்கு விசைத்தறிகளை கொள்முதல் செய்வதற் கான வங்கிக் கடனுக்கு வட்டி மானியம் வழங்கு வோம்.

தற்போது இயங்கி வரும் ஐந்து கூட்டுறவு நூற் பாலைகளை நவீன மயப்படுத்துவதோடு; மூடிக் கிடக்கும் 13 கூட்டுறவு நூற்பாலைகளில் ஐந்து கூட்டுறவு நூற்பாலைகளை திறந்து இயக்கிட நடவடிக்கை மேற்கொள்வோம்.

பட்டுத் துணிகளின் விற்பனையை அதிகரித்திட வும் பட்டு நெசவாளர்களுக்கு ஊக்கம் அளித்திடவும் ஆண்டு முழுதும் உச்சவரம்பின்றி 10 சதவிகித சிறப்புத் தள்ளுபடி மானியம் வழங்குவோம்.

சாயப்பட்டறை பிரச்சினை

திருப்பூர், கரூர், ஈரோடு போன்ற பகுதிகளில் பின்னலாடை நிறுவனங்கள் மூலம் வெளியேற்றப்படும் சாயக் கழிவினால் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தகுந்த தீர்வாக, இயற்கை முறையைக் கையாண்டு அதிக உப்புத் தன்மை கொண்ட சாயக் கழிவு நீரை ஆவியாக்கும் முறையைப் பயன்படுத்த தீவிர முயற்சி மேற்கொள்வோம். இந்த முயற்சி வெற்றி பெற அரசின் சார்பில் அனைத்து உதவிகளும் செய்வோம்.

சிறுபான்மையர் நலன்

தி.மு. கழக ஆட்சிக் காலத்தில்தான் பௌத்த மதத்தைத் தழுவிய தலித் மக்களுக்கு ஆதி திராவிடர் பெறுகிற அனைத்துச் சலுகைகளும், உரிமைகளும் அளிக்கப்பட்டது போல், தலித் கிறிஸ்தவர்களும் ஆதிதிராவிடர் பட்டியலில் இடம் பெறுவதற்கு மத்திய அரசிடம் வலியுறுத்துவோம்.

மாநிலத்தில் சிறுபான்மையினர் கல்வி ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் பின்தங்கியுள்ள பகுதிகளில் குறிப்பாக சிறுபான்மை சமூகப் பெண்கள் பயனடையும் வகையில் சிறப்பு சலுகைகளுடன் கல்வி மேம்பாட்டுத் திட்டத்தைச் செயல்படுத்துவோம்.

கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் சிறுபான்மை சமுதாயத்தினர் உரிய பங்கினைப் பெறுவதற்கு ஏதுவாக, நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரைகளை விரைவில் செயல்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசை வலியுறுத்துவோம்.

சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிலையங்களுக்கும், வழிபாட்டுத் தலங்களுக்கும் தேவையான பாதுகாப்பினை வழங்குவோம்.

இஸ்லாமிய மக்களின் நீண்டகாலக் கோரிக்கையான இட ஒதுக்கீட்டுக் கொள்கையை ஏற்று 3.5 சத விகிதம் அளித்தது தி.மு. கழக ஆட்சிதான். இந்த ஒதுக்கீட்டு அளவினை மேலும் உயர்த்த வேண்டு மென்ற கோரிக்கை குறித்து பரிசீலிப்போம்.

ஆதி திராவிடர் நலன்

கழக ஆட்சி அமையும் போதெல்லாம் ஆதி திராவிடர், பழங்குடியினருக்கு உரிய இடஒதுக் கீட்டின் பங்கினை நடைமுறைப்படுத்தி பின்னடைவு காலிப்பணியிடங்களை நிரப்பி வரும் அணுகுமுறையை தொடர்ந்து கடை பிடிப்போம்.

தனியார் துறை நிறுவனங்களில் ஆதிதிராவிட மலைவாழ் மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட முன் வடிவை மத்திய அரசு கொண்டு வர வலியுறுத்துவோம்.

மத்திய அரசில் பணியாற்றும் இதர பின்தங்கியோர் பிரிவு அரசு ஊழியர்களுக்கு இது போன்ற சட்ட முன்வரைவு கொண்டு வரப்படும் என்று நாடாளு மன்றத்தில் அளித்த வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்துவோம்.

ஆதிதிராவிட, பழங்குடியினர் நலத்துறை நடத்தும் பல மாணவர் விடுதிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவோம். இம்மாணவர்களுக்கு உணவுக்காகச் செலவிடப்படும் உணவுக் கட்டணம் விலைவாசி உயர்வுக்கேற்றவாறு அவ்வப்போது ஆய்வு செய்யப்பட்டு உயர்த்திக் கொடுக்க ஆவன செய்வோம்.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் உயர் ஆய்வுப் பட்டங்களுக்கு ஆதிதிராவிட, பழங்குடியின மக்களுக்கு தற்போது இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இதுபோன்று தமிழ்நாட்டிலுள்ள எல்லாப் பல்கலைக்கழகங்களிலும் பி.எச்டி பட்டத்திற்கான இடஒதுக் கீடு முறையைப் பின்பற்ற அரசின் சார்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்வோம்.

ஆதி திராவிடர் மற்றும் மலைவாழ் மக்களுக்கு தனியார் துறையில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு ஏற்ற சட்ட விதிமுறைகளை வகுத்து நடைமுறைப் படுத்திட வேண்டு மென்று மத்திய அரசை வலியுறுத்துவோம்.

அந்தந்த மாநிலங்களில் வாழும் ஆதி திராவிடர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கைக்கேற்ப இட ஒதுக்கீட்டு அளவை அந்தந்த மாநிலங்களே நிர்ணயித்துக் கொள்ளும் வகையில் அரசியல் அமைப்புச் சட்டம் திருத்தப்பட மத்திய அரசை வலியுறுத்துவோம்.

ஆதி திராவிடர் மற்றும் மலைவாழ் மக்கள் நல ஆணையம் ஒன்று அமைப்போம்.

மனிதக் கழிவை மனிதனே அகற்றும் அவல நிலையை முற்றிலும் ஒழிக்க தி.மு. கழக ஆட்சியில் உறுதி பூண்டு அந்தத் தொழிலிலே ஈடுபட்டோருக்கு மாற்றுத் தொழில் புரிய நிதியுதவி மற்றும் பயிற்சி அளித்தல் - அவர்களுக்காக தூய்மைப் பணி புரி வோர் நல வாரியம் அமைத்தல் - கழிவு நீர் அடைப்பு களை அகற்ற இயந்திரங்கள் பயன்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு அவர்கள் வாழ்வில் ஒளியேற்ற முற்பட்டதைப் போலவே - அதனைத் தொடர்ந்து சாக்கடைகளை சுத்தம் செய்ய அவற்றில் இறங்கி - மூழ்கி - அதன் காரணமாகவே சில கொடிய வாயுக்கள் தாக்கி உயிரிழக்கின்ற சம்பவங்கள் நேர்வதை மனதிலே கொண்டு, சாக்கடைகளை சுத்தம் செய்ய நவீன இயந்திரங்களைப் பயன்படுத்த முனைவதோடு, அந்தப் பணியிலே ஈடுபட்டுள்ளவர்களுக் கும் மாற்றுப் பணி களை அளிப்பதற்கான முயற்சியிலே ஈடுபடுவோம்.

அனைத்துச் சமுதாயத்தினராலும், ஒதுக்கப்பட்ட நிலையில் இருந்த திருநங்கைகளுக்கு தி.மு. கழக ஆட்சியில்தான் நலவாரியம் அமைத்து, குடும்ப அட்டைகள் வழங்கி சமூகத்தில் ஒரு அந்தஸ்தை ஏற்படுத்திக் கொடுத்தோம். அவர்களின் நலன்களை மேலும் பாதுகாக்கத் தக்க வகையில் அவர்களுக்கு தனியாக சுய உதவிக் குழுக்களை அமைத்துத் தருவதோடு - அவர்களுடைய எஞ்சிய கோரிக்கைகளையும் முறைப்படி பரிசீலித்து முடிவுகள் மேற்கொள்வோம்.


உங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க - Page 2 Empty Re: உங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க

Post by சிவா Wed Mar 23, 2011 12:39 pm

வணிகர் நலன்

சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீடு களை அனுமதிப்பதால் கோடிக்கணக்கான சிறு வணிகர்களும், அதனை நம்பியுள்ள தொழிலாளர்களும் பாதிக்கப்படுவார்கள். எனவே, சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீடுகளை அனுமதிக்கக் கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்து வோம்.

அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலையேற்றத்திற்கும், தட்டுப்பாட்டிற்கும் முன் பேர ஊக வணிகம் காரணமாக அமைவதால் இதைத் தடை செய்வதற்கு மத்திய அரசை வலியுறுத்து வோம்.

வெள்ளம், தீ போன்ற இயற்கைச் சீற்றங்களாலும், கலவரங்களாலும் பாதிப்புக்குள்ளாகும் வணிகர்களுக்கு, வணிகர் நல வாரியத்தின் மூலம் நிவாரணம் அளித்திடத் தேவையான திட்டங்கள் செயல்படுத்துவதோடு, மருத்துவ உதவிகளும் வழங்க ஆவன செய்வோம்.

கலைஞர் வீடு வழங்கும் திட்டம்


கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் தற்போது கான்கிரீட் வீடுகள் கட்ட வழங்கப்படும் உதவி மானியமான வீடு ஒன்றுக்கு தலா 75 ஆயிரம் ரூபாய் என்பது ரூபாய் ஒரு இலட்சமாக உயர்த்தப்படும்.

கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் ஏற்கனவே அடையாள அட்டைகள் வழங்கப்பட்ட அத்தனை குடும்பங்களுக்கும் காங்க்ரீட் வீடுகள் கட்டித் தரப்படும். இந்த வீடுகளைப் பெற சிலருக்கு தகுதியில்லை என்ற நிபந்தனையும் மறுபரிசீலனை செய்யப்படும்.

அரசால் நிலங்கள் பல்வேறு காரணங்களுக்காக கையகப்படுத்தப் படுகின்ற நேரத்தில் வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை இரட்டிப்பாக்கி வழங்கு வதுடன் வாரிசுதாரர் களுக்கு வேலை வாய்ப்பும், நிலங்களில் அமையும் தொழிற்சாலைகளில் நில உரிமையாளர் கள் பங்குதாரர்களாகவும் ஆகி பயன் பெறத் தக்க வகையில் நில எடுப்பு வழிமுறைகளை மாற்றி அமைப்போம்.

அரசு அலுவலகங்களிலும் உள்ளாட்சி அமைப்பு களிலும் லஞ்சம், முறைகேடு போன்றவை ஏற்படாமல் நடவடிக்கை மேற்கொள்ள ஆங்காங்கு கண்காணிப்பு அமைப்புகள் உருவாக்கப்பட்டு, எழுப்பப்படும் புகார்கள் அதற்காக அமைக்கப்படும் சிறப்புத் தீர்ப் பாயத்தின் மூலம் உடனடியாக விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் தாமதமின்றி தண்டனை க்கு உள்ளாக்கப்படுவார்கள்.

ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் வருகின்ற முதல் பட்டதாரிகளுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை தருவோம்.

சென்னை மாநகராட்சிப் பகுதிகளிலும், அதன் சுற்று வட்டாரங்களிலும் வெளியேற்றப் படும் கழிவுநீர் சுத்திகரிக்கப்படுவதுடன், சென்னையில் உள்ள அடையாறு, கூவம் போன்ற நதிகளும் தூய்மைப் படுத்தப்படும்.

சென்னை நகர நெரிசலைக் குறைக்க சென்னைக்கு அருகில் புதிய சென்னை துணை நகரம் ஒன்றை உருவாக்குவோம்.

நகரங்களில் நடுத்தர மற்றும் குறைந்த வருவாய்ப் பிரிவினைச் சேர்ந்தவர்கள் பயன டையத் தக்க விதத்தில் அரசால் அறிவிக்கப்படும் இடங்களில் தனியார் நிறுவனங் களைக் கொண்டு குறைந்த செலவிலான வாடகைக் குடியிருப்புத் திட்டம் ஒன்றைச் செயல்படுத்துவோம்.

மாற்றுத் திறனாளிகள் நலன்

எல்லா கல்வி நிறுவனங்களிலும் உள்ள விடுதிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதி களை ஏற்படுத்தி விடுதிகளில் தங்கும் வசதிகளை உருவாக்குவோம்.

மாற்றுத் திறனாளிகள் எளிய முறையில் பயன்படுத்தும் வகையில் இனி கட்டப்படும் அனைத்துப் பொதுக் கட்டிடங்கள், அரசுக் கட்டிடங்கள் உரிய முறையில் வடிவமைக்கப் படுவதை கட்டாயமாக்கி சட்டம் இயற்றுவோம்.

பெருநகர மேம்பாட்டுத் திட்டம்

சென்னை உட்பட பெருநகரங்களின் அருகில் புதிய பெரிய ஏரிகள் உருவாக்கி குடிநீர்த் தேவைகளை நிறைவு செய்வோம்.

மாநகராட்சி, நகராட்சிகளில் குடிசைப் பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற வீடுகளுக்குப் பதிலாக பாதுகாப்பான வீடுகளை கட்டித் தருவோம்.

பேரூராட்சிப் பகுதிகளில் கணக்கெடுக்கப் பட்டுள்ள இரண்டரை இலட்சம் குடிசைகளு க்குப் பதிலாக கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பாதுகாப்பான காங்க்ரீட் வீடு களைக் கட்டித் தருவோம்.

சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளிலும் பிற நகராட்சி, மாநகராட்சிப் பகுதிகளிலும் சாலைகள், குடிநீர், திடக்கழிவு மேலாண்மை, கழிவு நீர் அகற்றுதல் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்த ஒரு சிறப்புத் திட்டம் வகுத்துச் செயல்படுத்துவோம்.

கிராமப்புறப் பகுதிகளில் உள்ள நவீன வசதிகளைக் கொண்ட ஆரம்ப சுகாதார நிலையங் களைப் போல நகர்ப் பகுதிகளிலும் நவீன ஆரம்ப சுகாதார நிலையங்களை அமைப்போம்.

கிழக்கு கடற்கரைச் சாலை பாண்டிச்சேரி வரை நான்கு வழிச் சாலையாக மாற்றுதல் - ராஜீவ் காந்தி சாலையில் தொடர் மேம்பாலங்கள் - எண்ணூர் துறைமுகத்தை சென்னை வெளிவட்ட சாலையுடன் இணைக்கும் இணைப்புச் சாலை போன்ற கட்டமைப்பு வசதி களைப் பெருக்கும் சாலைகளை அமைத்திடுவோம்.

தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கத் தேவையான அடிப்படைக் கட்டமைப்புகளுடன் கூடிய சென்னை - பெங்களூரு - மதுரை - கன்னியா குமரி போன்ற சிறப்பு வழித்தடங் களை ஏற்படுத்துவோம்.

கந்து வட்டி என்ற பெயரால் பல குடும்பங்கள் பாதிக்கப்படுவதை மனதிலே கொண்டு, அந்தக் கொடுமை நீங்க வழிவகை காண்போம்.


உங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க - Page 2 Empty Re: உங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க

Post by சிவா Wed Mar 23, 2011 12:40 pm


திருக்கோயில் நிலங்கள்


திருக்கோயில்களின் நிலங்களிலிருந்து சேர வேண்டிய குத்தகையை காலந்தவறாமல் முறைப்படுத்தி வசூல் செய்வதோடு; திருக்கோயில்களுக்குச் சொந்தமான காலி இடங்களைப் பாதுகாப்பதற்கும், திருக்கோயில்களுக்கு நல்ல வருவாய் ஈட்டக்கூடிய வகையில் பயன்படுத்துவதற்கும் ஏதுவாக, "நிலவங்கி’’ (டுயனே க்ஷயமே) ஒன்றை நிறுவுவோம். மேலும், திருக்கோயில்களுக்குச் சொந்தமான மனைகளில் நீண்டகாலமாகக் குடியிருப் போர், அந்த மனைகளை தங்களுக்கு கிரையம் செய்து தரவேண்டுமென்று கேட்டு வருவது குறித்து; சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு, பரிசீலித்துப் பரிந்துரை வழங்கிட, உயர்நிலைக் குழு ஒன்றினை அமைப்போம்.

அரசு அலுவலர்கள் நலன்

அரசு அலுவலர்களின் குறைகளை அவ்வப்போது களைந்திடவும், அரசு ஊழியர் சங்கங் களின் முறையீடுகளைக் கேட்டு, உரியகாலத்தில் தீர்வு காணவும், ஆணையம் ஒன்றினை அமைப்போம்.

ஆறாவது ஊதியக்குழு மற்றும் ஒருநபர் குழுவினால் களையப்படாமல் எஞ்சியிருக்கும் முரண்பாடுகள் மற்றும் குறைபாடுகளை விரைவாகக் களைவதற்கு உரிய நடவடிக்கை களை மேற்கொள் வோம்.

மார்ச், ஜூன், செப்டம்பர், டிசம்பர் ஆகிய மாதங் களின் இறுதியில் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெறுவோர்க்கு ஆண்டு ஊதிய உயர்வு தற்போது கிடைப்பதில்லை. அந்த நிலை யைத் தவிர்த்திட, இனி அந்த நான்கு மாதங்களின் கடைசி வாரத்தில் ஓய்வு பெறுவோர் க்கு ஆண்டு ஊதிய உயர்வு வழங்கிடுவோம்.

அரசுப் பணியில் உள்ள பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு தற்போது 3 மாதங்கள் என்றிருப்பதை; தாய்-சேய் நலன், பராமரிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு 4 மாதங்களாக உயர்த்தி வழங்குவோம். அரசுப் பணியில் உள்ள மகளிர்க்கு அனைத்து அலுவலகங்களிலும் தேவையான வசதிகளுடன் கூடிய ஓய்வறை உருவாக்குவோம்.

பொது விநியோகத் திட்டம்

ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசித் திட்டம் - துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில், செறியூட்டப்பட்ட கோதுமை மாவு ஆகியவற்றை மானிய விலையில் வழங்கும் சிறப்பு பொது விநியோகத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவோம்.

வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள பரம ஏழைகளான அந்தியோதயா குடும்ப அட்டைதாரர் களுக்கு தற்போது மாதந்தோறும் கிலோ ஒன்றுக்கு ஒரு ரூபாய் வீதம் வழங்கப்படும் 35 கிலோ அரிசியை இனி இலவசமாகவே வழங்குவோம். இதன் மூலம் தமிழகத்திலே உள்ள சுமார் 18.64 லட்சம் குடும்பங் கள் பயனடைவார்கள்.

குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ஒரு கிலோ அயோடின் கலந்த உப்பு மானிய விலையில் வழங்குவோம்.

விடுபட்ட பயனாளிகள் அனைவருக்கும் தொடர்ந்து இலவச எரிவாயு இணைப்புடன் கூடிய அடுப்புகளை வழங்குவோம். அதுபோலவே இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கப் படும் என்ற அடையாள அட்டை பெற்ற அனைவருக் கும் வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டிகளை வழங்குவோம்.

கடத்தலை ஒழிப்போம்

ஆற்று மணல் கடத்தல், அரிசி கடத்தல் போன்றவைகளை அடியோடு ஒழிப்பதற்கு - எத்தகைய முயற்சிகள் எடுத்தாலும் தொடரும் நிலைமையே உள்ளது. எனவே அத்தகைய தீமைகள் நடை பெறாமல் இருப்பதற்கும், கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை கடுமையாக தண்டிப்பதற்கும் சட்ட ரீதியான வழிவகைகளைக் காண்போம்.

பனை, தென்னை விவசாயிகள் நலன்

இளநீர், பதநீர் போன்றவற்றின் விற்பனையை ஊக்கப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட நீதியரசர் சிவசுப்ரமணியம் கமிஷனுடைய பரிந்துரைகளைப் பரிசீலித்து செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்வோம்.

இளநீர், பதநீர் போன்ற தென்னை, பனை பொருள்களை பதப்படுத்துவதற்கும், உரிய கலன்களில் அடைத்து விற்பனை செய்வதற்கும் தொழிற்சாலைகள் உருவாக, அரசின் சார்பில் ஆவன செய்வோம்.

முன்னாள் ராணுவத்தினர் நலம்

முன்னாள் இராணுவத்தினர் குடும்பத்தினரின் நல்வாழ்விற்காக குழு ஒன்று அமைத்து ஆய்வு செய்து அவர்களது நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு காண்போம்.

சுற்றுலா வளர்ச்சி

முக்கிய சுற்றுலா நகரங்களான மாமல்லபுரம், உதகமண்டலம், கொடைக்கானல், கன்னியா குமரி, திருவரங்கம், செஞ்சி, ராமேஸ்வரம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், தரங்கம்பாடி ஆகிய இடங்களில் சிறப்பு உள்கட்டமைப்பு வசதி அமைக்க உதவிப் பணிகள் மேற்கொண்டு சிறந்த சுற்றுலாத் தலங்க ளாக அவைகளை உருவாக்குவோம்.

நலத் திட்ட உதவிகள்

தமிழக அரசின் சார்பில் ஏழைப் பெண்கள் திருமண நிதி உதவித் திட்டத்தின் கீழ் தற்போது வழங்கப்படும் 25 ஆயிரம் ரூபாய் உதவி நிதியினை 30 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்குவோம்.

அதுபோலவே தற்போது கர்ப்பிணிப் பெண்களுக்கு தலா 6000 ரூபாய் வீதம் வழங்கப் படும் உதவித் தொகையை 10000 ரூபாயாக உயர்த்தி வழங்குவோம்.

தாய்மார்களின் சிரமங்களைப் பெரிதும் அறிந்துள்ள தி.மு. கழகம் கடந்த முறை அவர் களுக்காக இலவச வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டிகளை வழங்கியது போல - இந்த முறை அவர்களுக்காக இலவசக் கிரைண்டர் அல்லது மிக்சி என்ற இரண்டில் ஒன்றை அவர்களது விருப்பம் போல வழங்கும் திட்டத்தை தொடங்கி செயல் படுத்துவோம்.

திராவிட முன்னேற்றக் கழக அரசு இதுவரையிலே நிறைவேற்றியுள்ள வாக்குறுதிகளை யெல்லாம் எண்ணிப் பார்த்து - இந்தத் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள வாக்குறுதி களையும் பட்டியலிட்டுப் பார்க்கும் என்னரும் தமிழ் மக்களாம் வாக்காளப் பெருமக்கள் நிறைந்த நம்பிக்கையோடு தி.மு. கழகம் சொன்னதைச் செய்யும் - செய்வதைத் தான் சொல்லும் என்ற உறுதியோடு அனைத்துப் பிரிவு மக்களும் ஆதரவுக் கரம் நீட்டி தி.மு. கழகக் கூட்டணியில் உள்ள கட்சிகளின் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வீர்க ளேயானால் - உங்களால் அமையும் அரசு தமிழகத்தின் வளம் மேலும் மேலும் சிறக்கவும் - நமது இந்தியத் திருநாட்டின் வலிவும் பொலிவும் நிறைந்த ஜனநாயகம் இந்த வையகம் எங்கும் புகழ்க் கொடி நாட்டவும் - மத்திய அரசுடன் மாநில அரசு உறவுக்கு கை கொடுத்து உரிமைக்குக் குரல் கொடுக்கும் உன்னத நோக்கத்தைச் செயல் படுத்தி ஒருமைப்பாடு காப்போம், இறையாண்மையை உறுதி செய்வோம் - இப்படை தோற்கின் எப்படை ஜெயிக்குமென்று தோள் உயர்த்தி - தொண்டாற்றி வெல்வோம் இந்த ஜனநாயகம் காத்திடும் அறப்போராட்டத்தில் எனச் சூளுரைத்து உங்களுக்காக உழைப்பதற்கு எங்களுக்கு உத்தர விடுங்கள் என எல்லாப் பிரிவு மக்களையும் வேண்டிக் கேட்டுக் கொண்டு இந்தத் தேர்தல் அறிக்கையை உங்கள் இணையடி தொழுது வெளியிடுகி றேன்.

அண்ணா வழியில் அயராது உழைப்போம் ! ஆதரிப்பீர் தி.மு. கழகக் கூட்டணியை!

இவ்வாறு தேர்தல் அறிக்கையை வெளியிட்டு முதல்வர் கலைஞர் அவர்கள் உரையாற்றினார்.


உங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க - Page 2 Empty Re: உங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க

Post by அன்பு தளபதி Wed Mar 23, 2011 12:46 pm

இத்தனை முறை முதல்வராக இருந்தவர் இந்த திட்டங்களை முன்பே செயல்படுத்தி இருந்தால் இந்நேரம் தமிழகம் இந்தியாவின் வளர்ச்சியடைந்த ஒன்றாக இருந்திருக்கும்வழக்கம் போலவே இவைகளும் காகிதத்தோடு சரி நடைமுறைக்கு வருவது கடினம் காரணம் கலைஞர் செய்ய வேண்டும் யென நினைத்தாலும் அவரின் பெயரை சொல்லி அவரை சார்ந்தவர்கள் நடத்தும் அதிகாரதுஷ்ப்ரயோகங்கள் அதிகம் அவ்வளவு பெரிய குடும்பம் அவர்களுடயது
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

உங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க - Page 2 Empty Re: உங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க

Post by கலைவேந்தன் Wed Mar 23, 2011 12:55 pm

கடலில் தள்ளினாலும் ப்டகாய் மிதப்போம்... காற்றில் தள்ளினாலும் பட்டமாய்ப்பறப்போம்னு டயலாக் விடலையே ... சோகம்



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

உங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க - Page 2 Empty Re: உங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க

Post by உதயசுதா Wed Mar 23, 2011 1:40 pm

தலைப்பா மாத்தூங்கப்பா
எங்களுக்காக உழைப்பவர்கள்,எங்கள் பத்து தலைமுறைக்கும் சொத்து சேர்க்க காத்து இருப்பவர்கள்.எங்களுக்காக நீங்கள் வாக்கு அளிங்கள்


உங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க - Page 2 Uஉங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க - Page 2 Dஉங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க - Page 2 Aஉங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க - Page 2 Yஉங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க - Page 2 Aஉங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க - Page 2 Sஉங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க - Page 2 Uஉங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க - Page 2 Dஉங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க - Page 2 Hஉங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

உங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க - Page 2 Empty Re: உங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க

Post by மஞ்சுபாஷிணி Wed Mar 23, 2011 5:18 pm

உதயசுதா wrote:தலைப்பா மாத்தூங்கப்பா
எங்களுக்காக உழைப்பவர்கள்,எங்கள் பத்து தலைமுறைக்கும் சொத்து சேர்க்க காத்து இருப்பவர்கள்.எங்களுக்காக நீங்கள் வாக்கு அளிங்கள்

கரீட்டு..... உங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க - Page 2 224747944


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

உங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க - Page 2 Empty Re: உங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க

Post by தமிழ்ப்ரியன் விஜி Wed Mar 23, 2011 6:18 pm

வேண்டாம் வேந்தா நீங்கள் ஓய்வு எடுங்கள் ....


தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

உங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க - Page 2 Empty Re: உங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க

Post by ப்ரியா Wed Mar 23, 2011 7:45 pm

கலை wrote:கடலில் தள்ளினாலும் ப்டகாய் மிதப்போம்... காற்றில் தள்ளினாலும் பட்டமாய்ப்பறப்போம்னு டயலாக் விடலையே ... உங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க - Page 2 440806

அண்ணா இன்னொன்றும் சேர்க்கலாமே , எண்ணை சட்டியில் என்னை போட்டாலும் அப்பளமாக பொரிந்து உங்களுக்கு சுவையாகுவேன் ,

இப்பிடி கூட சொல்லலாம் தானே .... உங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க - Page 2 230655 உங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க - Page 2 230655


"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
உங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க - Page 2 Logo16


என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

உங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க - Page 2 Empty Re: உங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க

Post by கலைவேந்தன் Wed Mar 23, 2011 7:50 pm

அந்த அப்பளத்தை நீ இன்னும் விடலையா பிரியா கண்ணு..? ஜாலி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

உங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க - Page 2 Empty Re: உங்களுக்காக உழைப்பவர்கள் - ஊரை வாழ வைப்பவர்கள்: எங்களை உங்களுக்காகப் பணியாற்ற உத்தரவிடுங்கள், மு.க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics
» மோடியுடன் இணைந்து பணியாற்ற ஒபாமா ஆர்வம்'
»  செருப்பாட்டம் உழைப்பவர்கள், கழட்டி விடப்படுவார்கள்..!
» சட்டப்பேரவையில் ரகசிய வாக்கெடுப்புக்கு உத்தரவிடுங்கள்: குடியரசுத் தலைவரிடம் திமுக கோரிக்கை
» கிராமத்தில் பணியாற்ற மறுத்தால் டாக்டர்களுக்கு ரூ.2 கோடி அபராதம்
» செளதியில் வெளிநாட்டினர் 6 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்ற தடை வருகிறது!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum