புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by ayyasamy ram Today at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ச.சந்திரா கவிதைகள்..
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
அச்சமில்லை ! அச்சமில்லை ! ()- ச.சந்திரா
பாரதியின் ஆத்திச்சூடியில் நெற்றிச்சூடியாய்
இடம்பிடித்த தொடர் அச்சம் தவிர் என்பதே !
அடிமைத்தனமும் அச்சமும் உச்சத்தில் கொண்டோரை
ஊமைச் சனங்களென உரத்துக் கூறியவர் நம் பாரதி !
அச்சம் நீங்கியோர் மட்டுமே ஆண்மையுடையோரென
ஆணித்தரமாக உரைத்த ஆசுகவியும் இவர் !
பயம் என்பது மூடத்தனம் ;பயமின்மையே
ஞானத்தின் அடித்தளம் என உரைத்த ஞானி இவரே !
பாரதி இந்தியனுக்கு விதித்த நிபந்தனை பலவென்றாலும்
முதல் நிபந்தனை அச்சத்தை அகற்று என்பதே !
அறியாமை கல்லாமை பொய்யாமையென பற்பல கவிதை பாரதி
புனைந்திருந்தாலும் அஞ்சாமையே அவரது தாரக மந்திரம் !
பேசாப் பொருளைப் பேசத் துணிந்தவர் பாரதி ! எவரும்
கேட்கா வரத்தைக் கேட்கத் துணிந்தவரும் பாரதியே !
அஞ்சாமையை அஸ்திவாரமாகக் கொண்டு அழகிய
கவிமாளிகை கட்டிய காவிய நாயகனிவர் !
அச்சத்தைச் சுட்டுப் பொசுக்கி அங்கு சாம்பலுமின்றி
அழிக்கும் அக்னிபகவானை அணுகி நின்றவர் நம்பாரதி !
காலனே ! என் காலருகே வாடா ! என பாரதி
இறுதியாகப் பேசிய வார்த்தையும் அஞ்சாமை பற்றியதுதானே!
ஆம் !எமதர்மனையே எதிர்த்துப் பேசிய எகத்தாளன் நம் பாரதி!
விண்ணுலகிற்கு விருந்தானாலும் மண்ணுலகிற்கே மருந்தான பாரதி
வாக்கை மெய்ப்பிப்போம் !உள்ளத்திலும் உடலிலும் அச்சம் ஏதுமின்றி !
பாரதியின் ஆத்திச்சூடியில் நெற்றிச்சூடியாய்
இடம்பிடித்த தொடர் அச்சம் தவிர் என்பதே !
அடிமைத்தனமும் அச்சமும் உச்சத்தில் கொண்டோரை
ஊமைச் சனங்களென உரத்துக் கூறியவர் நம் பாரதி !
அச்சம் நீங்கியோர் மட்டுமே ஆண்மையுடையோரென
ஆணித்தரமாக உரைத்த ஆசுகவியும் இவர் !
பயம் என்பது மூடத்தனம் ;பயமின்மையே
ஞானத்தின் அடித்தளம் என உரைத்த ஞானி இவரே !
பாரதி இந்தியனுக்கு விதித்த நிபந்தனை பலவென்றாலும்
முதல் நிபந்தனை அச்சத்தை அகற்று என்பதே !
அறியாமை கல்லாமை பொய்யாமையென பற்பல கவிதை பாரதி
புனைந்திருந்தாலும் அஞ்சாமையே அவரது தாரக மந்திரம் !
பேசாப் பொருளைப் பேசத் துணிந்தவர் பாரதி ! எவரும்
கேட்கா வரத்தைக் கேட்கத் துணிந்தவரும் பாரதியே !
அஞ்சாமையை அஸ்திவாரமாகக் கொண்டு அழகிய
கவிமாளிகை கட்டிய காவிய நாயகனிவர் !
அச்சத்தைச் சுட்டுப் பொசுக்கி அங்கு சாம்பலுமின்றி
அழிக்கும் அக்னிபகவானை அணுகி நின்றவர் நம்பாரதி !
காலனே ! என் காலருகே வாடா ! என பாரதி
இறுதியாகப் பேசிய வார்த்தையும் அஞ்சாமை பற்றியதுதானே!
ஆம் !எமதர்மனையே எதிர்த்துப் பேசிய எகத்தாளன் நம் பாரதி!
விண்ணுலகிற்கு விருந்தானாலும் மண்ணுலகிற்கே மருந்தான பாரதி
வாக்கை மெய்ப்பிப்போம் !உள்ளத்திலும் உடலிலும் அச்சம் ஏதுமின்றி !
ஒரு கவிஞனின் அர்த்தப் புலம்பல்கள் (கவிதை )
உலகமெனும் மாமேடையில் யாம் இசைச்சக்கரவர்த்திகள்
கனவுக் கோட்டையின் உச்சியில் உலாவும் காவியநாயகர்கள்
ஆர்ப்பரிக்கும் கடற்கரையோர மணல்வெளியில் ஏகாந்தமாய்த் திரிவோம் !
எங்களின் நிரந்தர இருக்கைகளோ கதியற்ற நீரோடைகள்
வேதனையும் விரக்தியும் தவிர இப்பூவுலகம் எமக்கு எதை அள்ளித்தந்தது
வெள்ளிய நிலவுகூட எம்மீது ஊடல் கொண்டு வெம்மைஒளி வீசுகிறதே !
எது எப்படியானாலும் இன்னுயிர்களின் நகர்தலும் நடுக்கமும்
எம்போன்ற கவிஞர்களால் அல்லாது வேறு எவரால் நிகழும் ?
சாகாவரம் பெற்ற எங்களின் சங்கீத ஞானத்தால்
மன்னுலகில் மாநகரங்கள் முளைக்கும் ;தழைக்கும் !
எம் வரையறையற்ற கற்பனை ராஜாங்கத்தால்
மாமன்னர்களின் சிம்மாசனமும் செங்கோலும் உயரும் !
எம் வானவில் நிகர் வார்த்தை ஜாலங்களில் உள்ளது
பேரரசர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும்
எங்களில் ஒருவன் மனது வைத்தால் மணிமகுடம் சாயும் !எம் புத்தம்புது
கீதத்தின் நாவசைப்பு மகுடத்தில் மாணிக்கம் பதிக்கும் !
மண்ணில் புதைத்தாலும் புதைந்தாலும் மீண்டெழும் எம்குலம்
காலச்சக்கரச்சுழற்சியில் என்றுமே சிக்கித் தொலையாது !
எம் கணநேர கற்பனைச் சிறகடிப்பில்
விண்ணுக்கும் மண்ணுக்குமாக மலர் ஏணி அமைப்போம் !
எங்கள் எழுதுகோல்கள் அழிவுக்குப் பிரியா விடை கொடுக்கும் !
புதுமைக்கும் பழமைக்கும்கூட பாலம்கட்டும் பாக்களினால்
முக்காலமும் உணர்ந்த தீர்க்கதரிசிகளாம் யாம் நாகரிகத்தின்
கருவறை மட்டுமல்ல ;கல்லறையும்தான் என்பதில் ஐயமும் உண்டோ ?
கவிஞர்களின் தூயசுவாசங்கள் மட்டுமே நிர்ணயிக்கின்றன
பூலோகவம்சாவளிகளின் வரவுகளையும் செலவுகளையும்
எம் கற்பனை எல்லை வானைமுட்ட, அழகற்றவை அர்த்தப்படுத்தப்படும் !
இருக்கின்றவை அதிசயப்படுத்தப்படும் ; இல்லாதவை நிரூபணம் செய்யப்படும் ;
அரண்மனைவாசியானாலும் சரி !அகிலத்தின் கடைக்கோடிவாசியானாலும் சரி !
வானமெனும் கூரையின் கீழ் வாழ்வெனும் சமுத்திரத்தில் தத்தளிக்கும்போது
எம்கனவுகளின் ஊர்வலங்களே அவர்தம் நிகழ்கால நகர்தலுக்கு
கலங்கரைவிளக்கமாய் வழிகாட்டும் என்பது என்றேனும் பொய்க்கூற்றாகுமோ ?
மொழிபெயர்ப்பு : ச.சந்திரா
நன்றி :ஆர்தர் வில்லியம்
உலகமெனும் மாமேடையில் யாம் இசைச்சக்கரவர்த்திகள்
கனவுக் கோட்டையின் உச்சியில் உலாவும் காவியநாயகர்கள்
ஆர்ப்பரிக்கும் கடற்கரையோர மணல்வெளியில் ஏகாந்தமாய்த் திரிவோம் !
எங்களின் நிரந்தர இருக்கைகளோ கதியற்ற நீரோடைகள்
வேதனையும் விரக்தியும் தவிர இப்பூவுலகம் எமக்கு எதை அள்ளித்தந்தது
வெள்ளிய நிலவுகூட எம்மீது ஊடல் கொண்டு வெம்மைஒளி வீசுகிறதே !
எது எப்படியானாலும் இன்னுயிர்களின் நகர்தலும் நடுக்கமும்
எம்போன்ற கவிஞர்களால் அல்லாது வேறு எவரால் நிகழும் ?
சாகாவரம் பெற்ற எங்களின் சங்கீத ஞானத்தால்
மன்னுலகில் மாநகரங்கள் முளைக்கும் ;தழைக்கும் !
எம் வரையறையற்ற கற்பனை ராஜாங்கத்தால்
மாமன்னர்களின் சிம்மாசனமும் செங்கோலும் உயரும் !
எம் வானவில் நிகர் வார்த்தை ஜாலங்களில் உள்ளது
பேரரசர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும்
எங்களில் ஒருவன் மனது வைத்தால் மணிமகுடம் சாயும் !எம் புத்தம்புது
கீதத்தின் நாவசைப்பு மகுடத்தில் மாணிக்கம் பதிக்கும் !
மண்ணில் புதைத்தாலும் புதைந்தாலும் மீண்டெழும் எம்குலம்
காலச்சக்கரச்சுழற்சியில் என்றுமே சிக்கித் தொலையாது !
எம் கணநேர கற்பனைச் சிறகடிப்பில்
விண்ணுக்கும் மண்ணுக்குமாக மலர் ஏணி அமைப்போம் !
எங்கள் எழுதுகோல்கள் அழிவுக்குப் பிரியா விடை கொடுக்கும் !
புதுமைக்கும் பழமைக்கும்கூட பாலம்கட்டும் பாக்களினால்
முக்காலமும் உணர்ந்த தீர்க்கதரிசிகளாம் யாம் நாகரிகத்தின்
கருவறை மட்டுமல்ல ;கல்லறையும்தான் என்பதில் ஐயமும் உண்டோ ?
கவிஞர்களின் தூயசுவாசங்கள் மட்டுமே நிர்ணயிக்கின்றன
பூலோகவம்சாவளிகளின் வரவுகளையும் செலவுகளையும்
எம் கற்பனை எல்லை வானைமுட்ட, அழகற்றவை அர்த்தப்படுத்தப்படும் !
இருக்கின்றவை அதிசயப்படுத்தப்படும் ; இல்லாதவை நிரூபணம் செய்யப்படும் ;
அரண்மனைவாசியானாலும் சரி !அகிலத்தின் கடைக்கோடிவாசியானாலும் சரி !
வானமெனும் கூரையின் கீழ் வாழ்வெனும் சமுத்திரத்தில் தத்தளிக்கும்போது
எம்கனவுகளின் ஊர்வலங்களே அவர்தம் நிகழ்கால நகர்தலுக்கு
கலங்கரைவிளக்கமாய் வழிகாட்டும் என்பது என்றேனும் பொய்க்கூற்றாகுமோ ?
மொழிபெயர்ப்பு : ச.சந்திரா
நன்றி :ஆர்தர் வில்லியம்
முற்று முரண் ச.சந்திரா
இளநீர் விற்பவன் தாகத்துக்கு
தண்ணீர் அருந்துகிறான் அடிகுழாயில்.
புதுத் துணி தைக்கும் தையற்காரனின் மனைவி
கிழிந்த சட்டையை தைக்கிறாள் கையால்.
வீடுதோறும் நாளிதழ் போடும் சிறுவனின்
தந்தை செய்தி படிக்கிறார் தேநீர் கடையில்.
நர்ஸரிப் பள்ளிக்கு ஆட்டோ எடுப்பவரின் மகன்
நகராட்சிப் பள்ளிக்குச் செல்கிறான் நடந்து .
கேஸ் அடுப்பு பழுது பார்ப்பவரின்
வீட்டில் புகைகின்றது விறகடுப்பு !
ஊருக்கே தங்கத்தாலி செய்யும் ஆசாரியின்
மனைவி கழுத்தில் பித்தளை தாலி!
பங்களா வீடு கட்டும் கொத்தனார்
வசிக்கிறான் ஓலைக்குடிசையில்.
மலையும் சமுத்திரமுமாய் இருந்த
காலமெல்லாம் மாறிப் போய் தேசத்தின்
நான்கு பக்கமும் வறுமையே எல்லைக்கோடு !
முரணின் ஒட்டுமொத்த வடிவமாய். !
இளநீர் விற்பவன் தாகத்துக்கு
தண்ணீர் அருந்துகிறான் அடிகுழாயில்.
புதுத் துணி தைக்கும் தையற்காரனின் மனைவி
கிழிந்த சட்டையை தைக்கிறாள் கையால்.
வீடுதோறும் நாளிதழ் போடும் சிறுவனின்
தந்தை செய்தி படிக்கிறார் தேநீர் கடையில்.
நர்ஸரிப் பள்ளிக்கு ஆட்டோ எடுப்பவரின் மகன்
நகராட்சிப் பள்ளிக்குச் செல்கிறான் நடந்து .
கேஸ் அடுப்பு பழுது பார்ப்பவரின்
வீட்டில் புகைகின்றது விறகடுப்பு !
ஊருக்கே தங்கத்தாலி செய்யும் ஆசாரியின்
மனைவி கழுத்தில் பித்தளை தாலி!
பங்களா வீடு கட்டும் கொத்தனார்
வசிக்கிறான் ஓலைக்குடிசையில்.
மலையும் சமுத்திரமுமாய் இருந்த
காலமெல்லாம் மாறிப் போய் தேசத்தின்
நான்கு பக்கமும் வறுமையே எல்லைக்கோடு !
முரணின் ஒட்டுமொத்த வடிவமாய். !
நிலமகள் பச்சை வண்ண
பட்டாடை களையப்பட்டு
கந்தர் கோலத்துடன் காட்சி
!
நாற்று நட்ட பெண்களெல்லாம்
காற்று வாங்கிக் கொண்டு
தீப்பெட்டிஆபீஸ் பேரூந்தில் பயணம் !
களையெடுத்தவரெல்லாம் இன்று
நூற்பாலைக்கு பறக்கின்றனர்
பருத்திப்பஞ்சை விட வேகமாக !
பூமகள் மேனி அளக்கப்பட
சிலுவைத் தழும்புகளாய்
அதில் கல் ஆணிகள் !
புல்பூண்டுகள் இருந்த இடத்தில்
இன்று கற்குவியல்களும்
கான்கீரீட் கலவையும்
.
மந்தையிலிருந்து ஆடுகள்
அனைத்துமே தப்பின
இலைதழை இல்லாமல் !
பசும்பயிர்கள் வாழ்ந்த இடத்தில்
பலமாடி கட்டிடங்கள்
பளிங்கு கற்கள் பதிக்கப்பட்டு !
ஐந்தறிவு ஜீவனின் சொத்தை
அபகரிக்கும் ஆறறிவுமனிதன் மீது
வழக்கு தொடுக்க மனுநீதி
முதல்
மக்கள் நுகர்வோர்
மன்றம்வரை
எச்சட்டத்தில் இடமுண்டு ?
யாரேனும் பதில் சொல்வீரோ ?
பட்டாடை களையப்பட்டு
கந்தர் கோலத்துடன் காட்சி
!
நாற்று நட்ட பெண்களெல்லாம்
காற்று வாங்கிக் கொண்டு
தீப்பெட்டிஆபீஸ் பேரூந்தில் பயணம் !
களையெடுத்தவரெல்லாம் இன்று
நூற்பாலைக்கு பறக்கின்றனர்
பருத்திப்பஞ்சை விட வேகமாக !
பூமகள் மேனி அளக்கப்பட
சிலுவைத் தழும்புகளாய்
அதில் கல் ஆணிகள் !
புல்பூண்டுகள் இருந்த இடத்தில்
இன்று கற்குவியல்களும்
கான்கீரீட் கலவையும்
.
மந்தையிலிருந்து ஆடுகள்
அனைத்துமே தப்பின
இலைதழை இல்லாமல் !
பசும்பயிர்கள் வாழ்ந்த இடத்தில்
பலமாடி கட்டிடங்கள்
பளிங்கு கற்கள் பதிக்கப்பட்டு !
ஐந்தறிவு ஜீவனின் சொத்தை
அபகரிக்கும் ஆறறிவுமனிதன் மீது
வழக்கு தொடுக்க மனுநீதி
முதல்
மக்கள் நுகர்வோர்
மன்றம்வரை
எச்சட்டத்தில் இடமுண்டு ?
யாரேனும் பதில் சொல்வீரோ ?
ஊடலும் ஊடல் நிமித்தமும் ( கவிதை ) ச.சந்திரா
நிலமகளுக்கும் வானமகளுக்குமான
ஊடலில் விளைச்சல் நிலங்களெல்லாம்
வீட்டடி மனைகளாய் !
பூமாதேவியின் கற்பைச் சூறையாட
வந்து நிற்கின்றன
ஆழ்துளையிடும் இயந்திரங்கள் !
நெற்கதிர்கள் உரசும் ஒலியற்றுப் போய்
உயிருக்கு உத்திரவாதம் தரும்
இரும்புக் கம்பிகளைத் துண்டிக்கும் சத்தம் !
தானியக் குவியல்கள்
இருந்த இடத்திலோ
கற்குவியல்கள் !
மலடிப் பட்டம் சுமந்தபின்னும்
நிலமகளுக்குத் தான் நாணம் ஏது ?
நிமிர்ந்தே நிற்கிறாள் பங்களாவாய் !
பூவுலக நிலைமையை எடுத்துச்சொல்ல
உழவு மாடுகளெல்லாம் சரக்குவாகனத்தில்
விண்ணுலகத்திற்கு விரைவுப் பயணம்
மண்ணுலகத் தூதுவர்களாய் !
நிலமகளுக்கும் வானமகளுக்குமான
ஊடலில் விளைச்சல் நிலங்களெல்லாம்
வீட்டடி மனைகளாய் !
பூமாதேவியின் கற்பைச் சூறையாட
வந்து நிற்கின்றன
ஆழ்துளையிடும் இயந்திரங்கள் !
நெற்கதிர்கள் உரசும் ஒலியற்றுப் போய்
உயிருக்கு உத்திரவாதம் தரும்
இரும்புக் கம்பிகளைத் துண்டிக்கும் சத்தம் !
தானியக் குவியல்கள்
இருந்த இடத்திலோ
கற்குவியல்கள் !
மலடிப் பட்டம் சுமந்தபின்னும்
நிலமகளுக்குத் தான் நாணம் ஏது ?
நிமிர்ந்தே நிற்கிறாள் பங்களாவாய் !
பூவுலக நிலைமையை எடுத்துச்சொல்ல
உழவு மாடுகளெல்லாம் சரக்குவாகனத்தில்
விண்ணுலகத்திற்கு விரைவுப் பயணம்
மண்ணுலகத் தூதுவர்களாய் !
முற்று முரண் (கவிதை)
ச.சந்திரா
இளநீர் விற்பவன் தாகத்துக்கு
தண்ணீர் அருந்துகிறான் அடிகுழாயில்.
புதுத் துணி தைக்கும் தையற்காரனின் மனைவி
கிழிந்த சட்டையை தைக்கிறாள் கையால்.
வீடுதோறும் நாளிதழ் போடும் சிறுவனின்
தந்தை செய்தி படிக்கிறார் தேநீர் கடையில்.
நர்ஸரிப் பள்ளிக்கு ஆட்டோ எடுப்பவரின் மகன்
நகராட்சிப் பள்ளிக்குச் செல்கிறான் நடந்து .
கேஸ் அடுப்பு பழுது பார்ப்பவரின் வீட்டில்
புகைகின்றது விறகடுப்பு !
ஊருக்கே தங்கத்தாலி செய்யும் ஆசாரியின்
மனைவி கழுத்தில் பித்தளை தாலி!
பங்களா வீடு கட்டும் கொத்தனார்
வசிக்கிறான் ஓலைக்குடிசையில்.
மலையும் சமுத்திரமுமாய் இருந்த
காலமெல்லாம் மாறிப் போய் தேசத்தின்
நான்கு பக்கமும் வறுமையே எல்லைக்கோடு !
முரணின் ஒட்டுமொத்த வடிமாய். !
ச.சந்திரா
இளநீர் விற்பவன் தாகத்துக்கு
தண்ணீர் அருந்துகிறான் அடிகுழாயில்.
புதுத் துணி தைக்கும் தையற்காரனின் மனைவி
கிழிந்த சட்டையை தைக்கிறாள் கையால்.
வீடுதோறும் நாளிதழ் போடும் சிறுவனின்
தந்தை செய்தி படிக்கிறார் தேநீர் கடையில்.
நர்ஸரிப் பள்ளிக்கு ஆட்டோ எடுப்பவரின் மகன்
நகராட்சிப் பள்ளிக்குச் செல்கிறான் நடந்து .
கேஸ் அடுப்பு பழுது பார்ப்பவரின் வீட்டில்
புகைகின்றது விறகடுப்பு !
ஊருக்கே தங்கத்தாலி செய்யும் ஆசாரியின்
மனைவி கழுத்தில் பித்தளை தாலி!
பங்களா வீடு கட்டும் கொத்தனார்
வசிக்கிறான் ஓலைக்குடிசையில்.
மலையும் சமுத்திரமுமாய் இருந்த
காலமெல்லாம் மாறிப் போய் தேசத்தின்
நான்கு பக்கமும் வறுமையே எல்லைக்கோடு !
முரணின் ஒட்டுமொத்த வடிமாய். !
தமிழன்னையின்
உலா (கவிதை )கவிதாயினி ச.சந்திரா
நாவலத்தின்
முதன்மொழி தமிழ்மொழி !
முச்சங்கம்
கண்ட மூத்தமொழி தமிழ்மொழி !
தமிழே
!நீ கரிகாலன் அவையில் கன்னித்தமிழாய்
பாண்டியன்
அவைதனில் பைந்தமிழாய்
சேரன்
செங்குட்டுவன் அவையில் செந்தமிழாய்
மொத்தத்தில் மூவேந்தர் அவைதனில் முத்தமிழானாய் !
ஆணுக்குப்பெண்
இணையென நிரூபித்த நித்திலத்தமிழ் நீ !
ஆம்.!
ஆதிமந்தியாரின் அரசவையில் அழகுதமிழ் நீ !
ஔவையாரின்
அருகில் அமிழ்தத்தமிழ் நீ !
வெள்ளிவீதியாரிடம்
விளையாடிய வெண்தமிழ் நீ !
பார்மகளிரின்
பாவிலோ பசுந்தமிழ் நீ !
ஆண்டாளின்
அருளில் அற்புதத்தமிழ் நீ !
மூவாத்
தமிழே !நீ தானே அன்று
மோசிக்கீரனுக்கு
முரசுக்கட்டிலை அளித்தாய் !
பாரிக்கும்
கபிலனுக்கும் பாலம் அமைத்தாய் !
திருவள்ளுவரிடம்
திளைத்தாய் !தித்தித்தாய் !
தொல்காப்பியத்தில்
துலங்கிய தூயதமிழாம் நீ
கம்பனின்
கரங்களில் கற்பூரத் தமிழாய்
இளங்கோவடிகளின்
இதழில் இன்பத் தமிழாய்
நாயன்மார்களின்
நாவில் நறுந் தமிழாய்
ஆழ்வார்களின்
அன்பில் அருந் தமிழாய்
உ.வே.சாவின்
உயிரில் உவப்புத் தமிழாய்
சித்தர்களின்
சிந்தனையில் சித்திரத்தமிழாய்
வீரமாமுனிவரிடம்
வீறுதமிழாய் இருந்த நீ
மகாகவியிடம்
மயங்கிச் சாய்ந்தாய் மதுரத்தமிழாய்
பாரதிதாசனிடமோ
பண்பாடினாய் பாமரத்தமிழில்
கண்ணதாசனிடம்
கனிந்தாய் !காவியத் தமிழாய்
இன்னும்
எத்தனை எத்தனை வடிவம்தான் நினக்கு
தமிழே
!நீ தொன்மொழி !தென்மொழி !தேன்மொழியுங்கூட
எளிமை இனிமை பழமை புதுமை
கலந்த
பொன்மொழி !நீ எம் கண்மொழி !
தமிழன்னையே
!இலக்கணமாய் பின் இலக்கியமாய்
உரைநடையாய்
உலவிய நீ இன்று
புத்தாடை புனைந்து புதுக் கவிதையாய்
நடனமிடும்
நற்காலம் !இது இலக்கியப் பொற்காலம் !
இக்காலம்
நிலைபெற தமிழா !தமிழ் உமது முரசமாகட்டும் !
தமிழ்ப்
பண்பாடு நமது கவசமாகட்டும் !
தமிழ்
சார்ந்த அறிவு உம் படைக்கலம் ஆகட்டும் !
அன்னைத்தமிழ்
அலைகடல்தாண்டி அகிலம் எட்டட்டும் !
உலா (கவிதை )கவிதாயினி ச.சந்திரா
நாவலத்தின்
முதன்மொழி தமிழ்மொழி !
முச்சங்கம்
கண்ட மூத்தமொழி தமிழ்மொழி !
தமிழே
!நீ கரிகாலன் அவையில் கன்னித்தமிழாய்
பாண்டியன்
அவைதனில் பைந்தமிழாய்
சேரன்
செங்குட்டுவன் அவையில் செந்தமிழாய்
மொத்தத்தில் மூவேந்தர் அவைதனில் முத்தமிழானாய் !
ஆணுக்குப்பெண்
இணையென நிரூபித்த நித்திலத்தமிழ் நீ !
ஆம்.!
ஆதிமந்தியாரின் அரசவையில் அழகுதமிழ் நீ !
ஔவையாரின்
அருகில் அமிழ்தத்தமிழ் நீ !
வெள்ளிவீதியாரிடம்
விளையாடிய வெண்தமிழ் நீ !
பார்மகளிரின்
பாவிலோ பசுந்தமிழ் நீ !
ஆண்டாளின்
அருளில் அற்புதத்தமிழ் நீ !
மூவாத்
தமிழே !நீ தானே அன்று
மோசிக்கீரனுக்கு
முரசுக்கட்டிலை அளித்தாய் !
பாரிக்கும்
கபிலனுக்கும் பாலம் அமைத்தாய் !
திருவள்ளுவரிடம்
திளைத்தாய் !தித்தித்தாய் !
தொல்காப்பியத்தில்
துலங்கிய தூயதமிழாம் நீ
கம்பனின்
கரங்களில் கற்பூரத் தமிழாய்
இளங்கோவடிகளின்
இதழில் இன்பத் தமிழாய்
நாயன்மார்களின்
நாவில் நறுந் தமிழாய்
ஆழ்வார்களின்
அன்பில் அருந் தமிழாய்
உ.வே.சாவின்
உயிரில் உவப்புத் தமிழாய்
சித்தர்களின்
சிந்தனையில் சித்திரத்தமிழாய்
வீரமாமுனிவரிடம்
வீறுதமிழாய் இருந்த நீ
மகாகவியிடம்
மயங்கிச் சாய்ந்தாய் மதுரத்தமிழாய்
பாரதிதாசனிடமோ
பண்பாடினாய் பாமரத்தமிழில்
கண்ணதாசனிடம்
கனிந்தாய் !காவியத் தமிழாய்
இன்னும்
எத்தனை எத்தனை வடிவம்தான் நினக்கு
தமிழே
!நீ தொன்மொழி !தென்மொழி !தேன்மொழியுங்கூட
எளிமை இனிமை பழமை புதுமை
கலந்த
பொன்மொழி !நீ எம் கண்மொழி !
தமிழன்னையே
!இலக்கணமாய் பின் இலக்கியமாய்
உரைநடையாய்
உலவிய நீ இன்று
புத்தாடை புனைந்து புதுக் கவிதையாய்
நடனமிடும்
நற்காலம் !இது இலக்கியப் பொற்காலம் !
இக்காலம்
நிலைபெற தமிழா !தமிழ் உமது முரசமாகட்டும் !
தமிழ்ப்
பண்பாடு நமது கவசமாகட்டும் !
தமிழ்
சார்ந்த அறிவு உம் படைக்கலம் ஆகட்டும் !
அன்னைத்தமிழ்
அலைகடல்தாண்டி அகிலம் எட்டட்டும் !
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|