Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈழத் தமிழர்கள் விடயத்தில் ஜப்பான் மனித நாகரித்துடன் நடந்து கொள்ளவில்லை
+3
ப்ரியா
ரபீக்
கண்ணன்3536
7 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
ஈழத் தமிழர்கள் விடயத்தில் ஜப்பான் மனித நாகரித்துடன் நடந்து கொள்ளவில்லை
First topic message reminder :
ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பமும், அதனைத் தொடர்ந்து உருவான ஆழிப் பேரலையும் ஜப்பானிய மக்களுக்குப் பெரும் அவலத்தைக் கொடுத்துள்ளன. இரண்டாவது உலகப் போருக்குப் பின்னர் ஜப்பான் எதிர்கொண்ட மிகப் பெரும் நெருக்கடி இது என ஜப்பானியப் பிரதமர் நஓற்றா கான் தெரிவித்ததிலிருந்து அழிவுகளின் அவலத்தைப் புரிந்து கொள்ளலாம்.
ஜப்பானிய மக்களின் துயரத்தில் நாமும் கலந்துகொண்டு, அவர்களுக்கு ஆறுதலும், தேறுதலும் வழங்க வேண்டியது ஒவ்வொரு மனிதரதும் கடமையாகவே உள்ளது. ஈழத் தமிழர்களும் தம்மாலான உதவிகளை வழங்கி ஜப்பானிய மக்களது நல்லெண்ணத்தையும், புரிந்துணர்வையும் பெற்றுக்கொள்வது அவசியம்.
ஆயினும், தமிழீழ மக்களது அழிவுகளிலும், அவலங்களிலும் ஜப்பான் வகித்த பாத்திரத்தை நாம் மறந்துவிட முடியாதவர்களாகவும் உள்ளோம். இறுதி யுத்த கால அழிவுகளைத் தடுத்து நிறுத்தும் வல்லமை ஜப்பானுக்கும் இருந்தது. ஈழத் தமிழர்கள் இரக்கமற்ற வகையில் கொத்துக் கொத்தாகக் கொன்று குவிக்கப்பட்ட காலத்தில் ஜப்பான் மனித நாகரியத்துடன் நடந்து கொள்ளவில்லை என்ற வேதனை ஒவ்வொரு ஈழத் தமிழனது நினைவையும் விட்டகல மறுக்கின்றது. ஆழிப் பெரும் துயரின்போது ஆதரவு வழங்கிய ஜப்பான், இறுதிப் போரின் காலத்தில் மௌனமாக இருந்து ஒரு இன அழிப்பு யுத்தத்தைத் தடுத்து நிறுத்தத் தவறியது என்பதை யாரும் மறுத்துக் கூற முடியாது. முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்ட ஆன்மாக்களுக்கும், அடக்கப்பட்ட தமிழர்களுக்கும் இது ஆண்டவன் வழங்கிய தண்டனை என்ற திருப்தியை வழங்கியிருக்கக் கூடும். இப்போது ஜப்பான் என்றால், எப்போது மற்றய நாடுகள்? என்ற எதிர்பார்ப்பையும் அவர்களுக்கு வழங்கியிருக்கும்.
சிங்கள தேசத்தைப் பொறுத்தவரை, பெரும் கொடையாளி நாடாக இருந்த ஜப்பானில் ஏற்பட்ட பேரழிவுகள் அதிர்ச்சிகரமானது. சிங்கள தேசத்திற்கு வழங்குவதாக ஒப்புக்கொண்ட நிதிகள் இன்னமும் சில காலத்திற்கு ஜப்பானால் கொடுக்க முடியாமல் போகலாம் என்பதால், ஜப்பானின் பேரழிவு சிங்கள அரசுக்குப் பெரும் பொருளாதார நெருக்கடியை உருவாக்கும் என்று நம்பலாம். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு, உள்ளுர் விளை பொருட்களும் அழிவுக்குள்ளான நிலையில், ஜப்பானின் நிதி உதவிக்கும் வந்து சேர்ந்துள்ள ஆபத்து, சிங்கள தேசத்தை ஆட்டிப் படைக்கப் போகின்றது.
சிங்கள தேசத்தின் பொருளாதாரத் தாழ்வு நிலையைச் சாதகமாக்கிக்கொண்டு, இந்தியாவும் சீனாவும் இன்னமும் ஊன்றிக் கால்பதிக்கும் நில உருவாகும். அது, அழிவுகளுக்குள் வாழ எத்தனிக்கும் தமிழர்களை விடவும், சிங்கள மக்களுக்கு ஆபத்தும், அச்சுறுத்தலும் நிறைந்த கள நிலையை உருவாக்கப் போகின்றது. எனவே, புலம்பெயர் தமிழர்கள் இந்த சந்தர்ப்பத்தை விவேகமாகக் கையாள்வதன் மூலம் தமிழீழம் நோக்கிய பாதையை விரைவு படுத்தலாம்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வெறும் அறிக்கைப் போரை நிறுத்திவிட்டு, ஆக்கபூர்வமான நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும். புலம்பெயர் தமிழர்களை குழுக்களாக்கி உடைக்கும் கட்சி அரசியலிலிருந்து விடுபட்டு, அனைத்துத் தமிழர்களுக்குமான ஜனநாயக அமைப்பாக, புலம்பெயர் தமிழர்களை ஒன்றிணைப்பதில்தான் தமிழீழ மக்களின் அடுத்த கட்ட வெற்றி தங்கியுள்ளது.
- கரிகாலன்
22 Mar 2011
ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பமும், அதனைத் தொடர்ந்து உருவான ஆழிப் பேரலையும் ஜப்பானிய மக்களுக்குப் பெரும் அவலத்தைக் கொடுத்துள்ளன. இரண்டாவது உலகப் போருக்குப் பின்னர் ஜப்பான் எதிர்கொண்ட மிகப் பெரும் நெருக்கடி இது என ஜப்பானியப் பிரதமர் நஓற்றா கான் தெரிவித்ததிலிருந்து அழிவுகளின் அவலத்தைப் புரிந்து கொள்ளலாம்.
ஜப்பானிய மக்களின் துயரத்தில் நாமும் கலந்துகொண்டு, அவர்களுக்கு ஆறுதலும், தேறுதலும் வழங்க வேண்டியது ஒவ்வொரு மனிதரதும் கடமையாகவே உள்ளது. ஈழத் தமிழர்களும் தம்மாலான உதவிகளை வழங்கி ஜப்பானிய மக்களது நல்லெண்ணத்தையும், புரிந்துணர்வையும் பெற்றுக்கொள்வது அவசியம்.
ஆயினும், தமிழீழ மக்களது அழிவுகளிலும், அவலங்களிலும் ஜப்பான் வகித்த பாத்திரத்தை நாம் மறந்துவிட முடியாதவர்களாகவும் உள்ளோம். இறுதி யுத்த கால அழிவுகளைத் தடுத்து நிறுத்தும் வல்லமை ஜப்பானுக்கும் இருந்தது. ஈழத் தமிழர்கள் இரக்கமற்ற வகையில் கொத்துக் கொத்தாகக் கொன்று குவிக்கப்பட்ட காலத்தில் ஜப்பான் மனித நாகரியத்துடன் நடந்து கொள்ளவில்லை என்ற வேதனை ஒவ்வொரு ஈழத் தமிழனது நினைவையும் விட்டகல மறுக்கின்றது. ஆழிப் பெரும் துயரின்போது ஆதரவு வழங்கிய ஜப்பான், இறுதிப் போரின் காலத்தில் மௌனமாக இருந்து ஒரு இன அழிப்பு யுத்தத்தைத் தடுத்து நிறுத்தத் தவறியது என்பதை யாரும் மறுத்துக் கூற முடியாது. முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்ட ஆன்மாக்களுக்கும், அடக்கப்பட்ட தமிழர்களுக்கும் இது ஆண்டவன் வழங்கிய தண்டனை என்ற திருப்தியை வழங்கியிருக்கக் கூடும். இப்போது ஜப்பான் என்றால், எப்போது மற்றய நாடுகள்? என்ற எதிர்பார்ப்பையும் அவர்களுக்கு வழங்கியிருக்கும்.
சிங்கள தேசத்தைப் பொறுத்தவரை, பெரும் கொடையாளி நாடாக இருந்த ஜப்பானில் ஏற்பட்ட பேரழிவுகள் அதிர்ச்சிகரமானது. சிங்கள தேசத்திற்கு வழங்குவதாக ஒப்புக்கொண்ட நிதிகள் இன்னமும் சில காலத்திற்கு ஜப்பானால் கொடுக்க முடியாமல் போகலாம் என்பதால், ஜப்பானின் பேரழிவு சிங்கள அரசுக்குப் பெரும் பொருளாதார நெருக்கடியை உருவாக்கும் என்று நம்பலாம். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு, உள்ளுர் விளை பொருட்களும் அழிவுக்குள்ளான நிலையில், ஜப்பானின் நிதி உதவிக்கும் வந்து சேர்ந்துள்ள ஆபத்து, சிங்கள தேசத்தை ஆட்டிப் படைக்கப் போகின்றது.
சிங்கள தேசத்தின் பொருளாதாரத் தாழ்வு நிலையைச் சாதகமாக்கிக்கொண்டு, இந்தியாவும் சீனாவும் இன்னமும் ஊன்றிக் கால்பதிக்கும் நில உருவாகும். அது, அழிவுகளுக்குள் வாழ எத்தனிக்கும் தமிழர்களை விடவும், சிங்கள மக்களுக்கு ஆபத்தும், அச்சுறுத்தலும் நிறைந்த கள நிலையை உருவாக்கப் போகின்றது. எனவே, புலம்பெயர் தமிழர்கள் இந்த சந்தர்ப்பத்தை விவேகமாகக் கையாள்வதன் மூலம் தமிழீழம் நோக்கிய பாதையை விரைவு படுத்தலாம்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வெறும் அறிக்கைப் போரை நிறுத்திவிட்டு, ஆக்கபூர்வமான நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும். புலம்பெயர் தமிழர்களை குழுக்களாக்கி உடைக்கும் கட்சி அரசியலிலிருந்து விடுபட்டு, அனைத்துத் தமிழர்களுக்குமான ஜனநாயக அமைப்பாக, புலம்பெயர் தமிழர்களை ஒன்றிணைப்பதில்தான் தமிழீழ மக்களின் அடுத்த கட்ட வெற்றி தங்கியுள்ளது.
- கரிகாலன்
22 Mar 2011
Re: ஈழத் தமிழர்கள் விடயத்தில் ஜப்பான் மனித நாகரித்துடன் நடந்து கொள்ளவில்லை
ப்ரியா wrote:உண்மைதான் கலை அண்ணா ,கலை wrote:நாளை இந்தியாவில் எதுவும் இயற்கை பேரழிவு வந்தாலும் கைகொட்டி சிரிக்கும் ‘நாகரிக’ மக்கள் நிறைய உண்டு என்பது தெளிவாக விளங்கிக்கொள்ள முடிகிறது..
இயற்கை அழிவு எதிர்பாராத ஒன்று , ஆனால் எதிர் பார்க்கப் பட்ட அழிவுகளுக்கு
கோசம் எழுப்பியும் அப்பாவி பொதுமக்கள் எனது உறவினர்கள் உட்பட மண்ணோடு
மண்ணாக போனதை மக்கள் மறக்க மாட்டார்கள் . காலங்கள் மாறினாலும் வடுக்கள்
வேதனைகள் ரணங்கள் மாறாது .
என்ன இருந்தாலும் அல்லாரும் இந்த உலக அன்னையின் பிள்ளைகள் தான் . கை கொட்டி சிரிக்கவில்லை வேதனைப் படுகின்றார்கள் .
இன்றும் நான் ஈழத்தின் கோர யுத்தத்தினால் மனநிலை பாதிக்கப் பட்ட சுமார்
நூறு பெண் பிள்ளைகளுக்கு மாலை வேளைகளில் பாடம் நடத்துகின்றேன் , அங்கு
இருக்கும் போது நான் கூட இறைவனிடம் வேண்டுவேன் இந்த பிள்ளைகளின் . வாழ்வில்
மண்ணை அள்ளி போட்டவர்களுக்கு சரியான பாடத்தை கடவுளே நீர்தான் புகட்ட
வேண்டும் என .
இயற்கை அழிவுகளினால் பாதிக்கப் பட்ட மக்களுக்காகவும் பலியானவர்களுக்காகவும் வேதனைப் படுகின்றோம் .
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: ஈழத் தமிழர்கள் விடயத்தில் ஜப்பான் மனித நாகரித்துடன் நடந்து கொள்ளவில்லை
தங்களைப் பற்றி அறியதந்தமைக்கு நன்றி கலை அண்ணா
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: ஈழத் தமிழர்கள் விடயத்தில் ஜப்பான் மனித நாகரித்துடன் நடந்து கொள்ளவில்லை
கலை wrote: அன்பு வாலுப்பிரியா.. உனக்கு என் மனம் நன்காக தெரியும்.. ஈழத்தமிழர்கள் மீது என் பற்று எத்தனை என்பதற்கு சிறு உதாரணம் நான் 1983 ஆம் ஆண்டு கல்லூரியில் படித்துக்கொண்டு இருக்கும் போது இலங்கைப்பிரச்சினை உச்சத்தில் இருந்த நேரம்.. அப்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களைத் திரட்டி கும்பகோணம் அதிரும் படியான ஊர்வலத்தையும் கோரிக்கையையும் வைத்து இரகசிய போலீசாரின் க்ணக்கில் என் பெயரும் வரும் அளவுக்கு மூர்க்கமாக போராடியவன் நான். மேலும் குடந்தை ஸ்டாலின் என்பவர் நடத்திய ஈழப்போராளிகள் குழாமுக்கு சென்று அவர்களுடன் பேசி ஊக்கம் தந்து ஒரு கட்டத்தில் நானும் இயக்கத்தில் இணையும் வேகமும் வந்து என் தந்தையாரின் உருக்கமான ( ஒரே மகன் நான்) வேண்டுகோளைச் செவி சாய்த்து மனத்தளவில் மட்டுமே ஆதரவு தரவேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கப்பட்டேன்..
இன்று இணைய அளவில் வெறும் வாய்ச்சொல் பந்தலிடும் ஈழத்தமிழர் பாசத்தையும் காண்கிறேன். வயதாகிவிட்டது தான் ... ஆனால் உத்வேகம் இன்னும் குறையவில்லை. இதயம் பலவீனம் தான்.. ஆனால் சோர்ந்து விடவில்லை.
மனிதகுல நியாயங்களை நான் நடுநிலையாகப் பார்ப்பது பலருக்கு நான் இலங்கைத்தமிழருக்கு விரோதமாக பேசுவது போல் படுவது என் துரதிருஷ்டம் தான்..
புரிதலுக்கு நன்றி வாலுப்பிரியா..!
சரியான வார்த்தை கலை....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: ஈழத் தமிழர்கள் விடயத்தில் ஜப்பான் மனித நாகரித்துடன் நடந்து கொள்ளவில்லை
கலை wrote:
அன்பு வாலுப்பிரியா.. உனக்கு என் மனம் நன்காக தெரியும்.. ஈழத்தமிழர்கள் மீது என் பற்று எத்தனை என்பதற்கு சிறு உதாரணம் நான் 1983 ஆம் ஆண்டு கல்லூரியில் படித்துக்கொண்டு இருக்கும் போது இலங்கைப்பிரச்சினை உச்சத்தில் இருந்த நேரம்.. அப்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களைத் திரட்டி கும்பகோணம் அதிரும் படியான ஊர்வலத்தையும் கோரிக்கையையும் வைத்து இரகசிய போலீசாரின் க்ணக்கில் என் பெயரும் வரும் அளவுக்கு மூர்க்கமாக போராடியவன் நான். மேலும் குடந்தை ஸ்டாலின் என்பவர் நடத்திய ஈழப்போராளிகள் குழாமுக்கு சென்று அவர்களுடன் பேசி ஊக்கம் தந்து ஒரு கட்டத்தில் நானும் இயக்கத்தில் இணையும் வேகமும் வந்து என் தந்தையாரின் உருக்கமான ( ஒரே மகன் நான்) வேண்டுகோளைச் செவி சாய்த்து மனத்தளவில் மட்டுமே ஆதரவு தரவேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கப்பட்டேன்..
இன்று இணைய அளவில் வெறும் வாய்ச்சொல் பந்தலிடும் ஈழத்தமிழர் பாசத்தையும் காண்கிறேன். வயதாகிவிட்டது தான் ... ஆனால் உத்வேகம் இன்னும் குறையவில்லை. இதயம் பலவீனம் தான்.. ஆனால் சோர்ந்து விடவில்லை.
மனிதகுல நியாயங்களை நான் நடுநிலையாகப் பார்ப்பது பலருக்கு நான் இலங்கைத்தமிழருக்கு விரோதமாக பேசுவது போல் படுவது என் துரதிருஷ்டம் தான்..
புரிதலுக்கு நன்றி வாலுப்பிரியா..!
நன்றி அண்ணா , தங்களை அறியாதவள் நானல்ல , தங்களின் அயராத உழைப்பும் முயற்சியையும் கண்டு
வியந்திருக்கின்றேன் , தங்கள் மீது எப்போதும் அதிகமான பாசம் கலந்த
மரியாதை உணர்வு இருக்கின்றது .தற்போது தான் தங்களின் போராட்ட திறனை பற்றி
இந்த செய்தி வாயிலாக அறிய முடிந்ததையிட்டு மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன் .
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Re: ஈழத் தமிழர்கள் விடயத்தில் ஜப்பான் மனித நாகரித்துடன் நடந்து கொள்ளவில்லை
ப்ரியா wrote:கலை wrote:
அன்பு வாலுப்பிரியா.. உனக்கு என் மனம் நன்காக தெரியும்.. ஈழத்தமிழர்கள் மீது என் பற்று எத்தனை என்பதற்கு சிறு உதாரணம் நான் 1983 ஆம் ஆண்டு கல்லூரியில் படித்துக்கொண்டு இருக்கும் போது இலங்கைப்பிரச்சினை உச்சத்தில் இருந்த நேரம்.. அப்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களைத் திரட்டி கும்பகோணம் அதிரும் படியான ஊர்வலத்தையும் கோரிக்கையையும் வைத்து இரகசிய போலீசாரின் க்ணக்கில் என் பெயரும் வரும் அளவுக்கு மூர்க்கமாக போராடியவன் நான். மேலும் குடந்தை ஸ்டாலின் என்பவர் நடத்திய ஈழப்போராளிகள் குழாமுக்கு சென்று அவர்களுடன் பேசி ஊக்கம் தந்து ஒரு கட்டத்தில் நானும் இயக்கத்தில் இணையும் வேகமும் வந்து என் தந்தையாரின் உருக்கமான ( ஒரே மகன் நான்) வேண்டுகோளைச் செவி சாய்த்து மனத்தளவில் மட்டுமே ஆதரவு தரவேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கப்பட்டேன்..
இன்று இணைய அளவில் வெறும் வாய்ச்சொல் பந்தலிடும் ஈழத்தமிழர் பாசத்தையும் காண்கிறேன். வயதாகிவிட்டது தான் ... ஆனால் உத்வேகம் இன்னும் குறையவில்லை. இதயம் பலவீனம் தான்.. ஆனால் சோர்ந்து விடவில்லை.
மனிதகுல நியாயங்களை நான் நடுநிலையாகப் பார்ப்பது பலருக்கு நான் இலங்கைத்தமிழருக்கு விரோதமாக பேசுவது போல் படுவது என் துரதிருஷ்டம் தான்..
புரிதலுக்கு நன்றி வாலுப்பிரியா..!
நன்றி அண்ணா , தங்களை அறியாதவள் நானல்ல , தங்களின் அயராத உழைப்பும் முயற்சியையும் கண்டு
வியந்திருக்கின்றேன் , தற்போது தங்கள் மீது எப்போதும் அதிகமான பாசம் கலந்த
மரியாதை உணர்வு இருக்கின்றது .தற்போது தான் தங்களின் போராட்ட திறனை பற்றி
இந்த செய்தி வாயிலாக அறிய முடிந்ததையிட்டு மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன் .
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: ஈழத் தமிழர்கள் விடயத்தில் ஜப்பான் மனித நாகரித்துடன் நடந்து கொள்ளவில்லை
அன்பின் கலை அண்ணா ,மற்றும் ஈகரை உறவுகளுக்கு ,நான் ஒரு உறுத்தலாக உணருக்கிறீர்களோ தெரியாது ,அனாலும் நான் என் நிலமை பற்றி சொல்ல வெண்டும் என நினைக்கிறேன், எனது 7வயதிலிருந்தே எமது ஈழவிடுதலைப்போராட்டம் பற்றிய நினைவுகள் என் மனதில் பதிந்துள்ளன,இந்திய இராணுவம் தமிழீழம் வந்தகாலப்பகுதியில் நாங்கள் கொடி அசைத்து வரவேற்றதும் அவர்கள் எமக்கு கையசைத்ததும் எனக்கு 10 வயதில் நடந்தன ..ஜியாஜி என்ற வீரனுடன்நான் நட்பு பாராட்டியது இன்றவரை நினைவில் உள்ளன.அனால் அவர்கள் இங்கு நரவேட்டை ஆடியது அவர்களது இன்னொரு முகத்தை எனக்கு காட்டிற்று.நானோ அல்லது தமிழர்களோஇந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட விரும்பவில்லை அப்படி ஒரு நினைப்பும் என் சார்ந்தவர்களுக்கு இருக்கவில்லை. ராஜீவ் காந்தி கொலை அது ஏற்படுத்திய தாக்கம் இந்திய மக்களுக்கு அதிர்ச்சியான விடயம் .அதனை நானும் ஏற்றுக்கொள்கிறேன்.அனால் எம் தேசத்தில் நடந்தவைகள் அனைத்தும் தாய் தமிழகத்தில் அந்நேரத்தில் எம்மோடு தோளோடு தொள் நின்றவர்களுக்கு கூட தெரிய்வில்லை என்பதே உண்மை.அந்நேரத்தய தொலைதொடர்புகள ஒரு இறுக்க நிலமை அதனால் விடுதலைப்புலிகள் பழிக்கு பழி என்ற ரீதியில் ராஜீவ் மீது தாக்குதலை நடத்தினர். ஆனால் அதன் பின்னர் தமிழகத்து எமது உறவுகள் மீது கட்டவிழ்த்து விட்ட அராஜகம் கொஞச நன்சமல்ல.இன்னொரு உண்மை என்ன எனறால் ரோ தான் சிவராசா அண்ணண் ஆட்களுக்கு வீடுகள்மற்ற உதவிகள் செய்தனர் .அவர்களுக்கு தெரியும் ஏதொ செயபோகிறார்கள் என்று,அனால் என்ன என்று அவர்களால் இறுதிவரை கண்டுபிடிக்க முடியவில்லை.ராஜீவ் காந்தி கொலைக்கு பிறகு சம்மந்தப்பட்டவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்.1995ல் யாழில் நடந்த சமரில் லெப் கேணல் .அகிலாஅக்கா என்பவரும் வீரச்சாவடைந்தார்.அவர் தான் தப்பிய ஒரெ ஒருவர் .இப்பொ சிறை அனுபவிக்கும் எவருக்கும் (நளினி,மற்றவர்கள்)அதில் சம்மந்தம் இல்லை . எமக்கு உறுத்துவது காந்தி தேசம் ஏன் தியாகி திலீபனை மரணமடைடய விட்டது?எம்மை நம்பவைத்து கழுத்தறுத்தது?இன்றுவரை 40000 வரையிலான மாவீரர்களை இழப்பதற்கு இந்தியாவின் சுயநலம் மட்டும் தான் காரணம்("இலையுதிர் காலத்தில் வீழ்ந்தாரா,இல்லை அவர் இளவேனில் நாளில் உதிர்ந்தார்"காசி ஆனந்தன் வரிகளில் இருந்து)10 வருடங்களுக்கும் மேல எனது மக்களுக்காக நான் களங்கண்டிருக்கிரேன்.என்னால் சில விடையங்களை பகிர்ந்து கொள்ள முடியாது . கிட்டத்தட்ட 20 வருடங்களின் பின்னர் ஒரு தனிமனித பழிவாங்கலுக்காக ஒரு பெண்ணின் பின்னால் நிற்கும் காங்கிரஸ் ஒரு இனத்தையெ அழிக்க முன்வந்ததேன்?அப்போ என்ன நோக்கத்திற்காக இந்தியா அரம்பகாலத்தில் ஆயுதபயிற்சி அளித்தார்கள்? இப்போ எங்களது பிரச்சனை இந்தியாவை எதிர்ப்பதல்ல.அந்த அரசுடன் எச்சரிக்கையாக பழக வேண்டும் என்பதே. என் இனத்துக்கு நடந்த உண்மைகளை கொண்டு சேர்க்கனும் அவ்வளவுதான்......நன்றி
Re: ஈழத் தமிழர்கள் விடயத்தில் ஜப்பான் மனித நாகரித்துடன் நடந்து கொள்ளவில்லை
உங்கள் உணர்வுகளைப் பரிபூரணமாக உணர்ந்து மதிக்கிறேன் கண்ணன்.. ஆயினும் ஒரு காங்கிரஸின் செயல் பாடுகளை அதன் தலைமையின் செயல்பாடுகளை அவர்கள் செய்த அநியாயத்தை ஒரு நாட்டின் மேல் வஞ்சினம் வைப்பது ஏன் என்பது தான் என் கேள்வி..
நாளையே காங்கிரஸ் மூட்டை கட்டி அனுப்பபப்டலாம்.. வேறொரு கட்சி ஆட்சிக்கு வரலாம். அப்போதும் அந்த கட்சியையும் அதன் செயல்முறைகளையும் தான் விமரிசிக்க வேண்டுமே அல்லாது.. ஒட்டு மொத்த இந்திய இறையாண்மையைப் பழிப்பதும் அவதூறு கூறுவதும் ஏன் என்பது தான் என் கேள்வி..
ஆக நாம் இருவருமெ அவரவர கருத்தில் தெளிவாகத்தானே இருக்கிறோம்..?
புரிதல் இல்லாத விரிதல் எங்கே என்று புலப்படுகிறதா..?
நான் இத்தளத்தில் மட்டுமல்ல வேறொரு தளத்திலும் கூட முன்பு காங்கிரசின் செயல்பாடுகளையும் சோனியாவின் பழிவாங்கும் மனப்பான்மையையும் வெகுவாகக் கண்டித்து இருக்கிறேன். ஆனால் அந்த பழியை ஒரு நாட்டின் மேல் மொத்தமாக திணிப்பதை நான் ஏற்கவில்லை.
புரிந்திருக்கும் என நம்புகிறேன்.. வாருங்கள் ... அவரவர் நிலையினின்றும் பிறழாமல் கைகோர்த்து நின்று நமது எண்ணம் ஈழத்தமிழரின் நல்வாழ்வு தான் என்பதை உணர்ந்து செயல்படுவோம்..!
நன்றி கண்ணன்..!
நாளையே காங்கிரஸ் மூட்டை கட்டி அனுப்பபப்டலாம்.. வேறொரு கட்சி ஆட்சிக்கு வரலாம். அப்போதும் அந்த கட்சியையும் அதன் செயல்முறைகளையும் தான் விமரிசிக்க வேண்டுமே அல்லாது.. ஒட்டு மொத்த இந்திய இறையாண்மையைப் பழிப்பதும் அவதூறு கூறுவதும் ஏன் என்பது தான் என் கேள்வி..
ஆக நாம் இருவருமெ அவரவர கருத்தில் தெளிவாகத்தானே இருக்கிறோம்..?
புரிதல் இல்லாத விரிதல் எங்கே என்று புலப்படுகிறதா..?
நான் இத்தளத்தில் மட்டுமல்ல வேறொரு தளத்திலும் கூட முன்பு காங்கிரசின் செயல்பாடுகளையும் சோனியாவின் பழிவாங்கும் மனப்பான்மையையும் வெகுவாகக் கண்டித்து இருக்கிறேன். ஆனால் அந்த பழியை ஒரு நாட்டின் மேல் மொத்தமாக திணிப்பதை நான் ஏற்கவில்லை.
புரிந்திருக்கும் என நம்புகிறேன்.. வாருங்கள் ... அவரவர் நிலையினின்றும் பிறழாமல் கைகோர்த்து நின்று நமது எண்ணம் ஈழத்தமிழரின் நல்வாழ்வு தான் என்பதை உணர்ந்து செயல்படுவோம்..!
நன்றி கண்ணன்..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» கனடாவில் தஞ்சம் புகுந்துள்ள 350 ஈழத் தமிழர்கள்-
» ஈழத் தமிழர்கள் ஓரணியில் திரள வேண்டும்: விடுதலைப்புலிகள்
» கண் முன்னே அழியும் அடையாளங்கள்...கை பிசைந்து நிற்கும் ஈழத் தமிழர்கள்!
» கரைசேரா படகு அகதிகளாக ஈழத் தமிழர்கள் இந்தோனேஷியக் கடலில்
» ஈழத் தமிழினப் படுகொலைக்கு வாழ்த்து: ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் கேலிக்கூத்து
» ஈழத் தமிழர்கள் ஓரணியில் திரள வேண்டும்: விடுதலைப்புலிகள்
» கண் முன்னே அழியும் அடையாளங்கள்...கை பிசைந்து நிற்கும் ஈழத் தமிழர்கள்!
» கரைசேரா படகு அகதிகளாக ஈழத் தமிழர்கள் இந்தோனேஷியக் கடலில்
» ஈழத் தமிழினப் படுகொலைக்கு வாழ்த்து: ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் கேலிக்கூத்து
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|