Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டுby heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈழத் தமிழர்கள் விடயத்தில் ஜப்பான் மனித நாகரித்துடன் நடந்து கொள்ளவில்லை
+3
ப்ரியா
ரபீக்
கண்ணன்3536
7 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
ஈழத் தமிழர்கள் விடயத்தில் ஜப்பான் மனித நாகரித்துடன் நடந்து கொள்ளவில்லை
ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பமும், அதனைத் தொடர்ந்து உருவான ஆழிப் பேரலையும் ஜப்பானிய மக்களுக்குப் பெரும் அவலத்தைக் கொடுத்துள்ளன. இரண்டாவது உலகப் போருக்குப் பின்னர் ஜப்பான் எதிர்கொண்ட மிகப் பெரும் நெருக்கடி இது என ஜப்பானியப் பிரதமர் நஓற்றா கான் தெரிவித்ததிலிருந்து அழிவுகளின் அவலத்தைப் புரிந்து கொள்ளலாம்.
ஜப்பானிய மக்களின் துயரத்தில் நாமும் கலந்துகொண்டு, அவர்களுக்கு ஆறுதலும், தேறுதலும் வழங்க வேண்டியது ஒவ்வொரு மனிதரதும் கடமையாகவே உள்ளது. ஈழத் தமிழர்களும் தம்மாலான உதவிகளை வழங்கி ஜப்பானிய மக்களது நல்லெண்ணத்தையும், புரிந்துணர்வையும் பெற்றுக்கொள்வது அவசியம்.
ஆயினும், தமிழீழ மக்களது அழிவுகளிலும், அவலங்களிலும் ஜப்பான் வகித்த பாத்திரத்தை நாம் மறந்துவிட முடியாதவர்களாகவும் உள்ளோம். இறுதி யுத்த கால அழிவுகளைத் தடுத்து நிறுத்தும் வல்லமை ஜப்பானுக்கும் இருந்தது. ஈழத் தமிழர்கள் இரக்கமற்ற வகையில் கொத்துக் கொத்தாகக் கொன்று குவிக்கப்பட்ட காலத்தில் ஜப்பான் மனித நாகரியத்துடன் நடந்து கொள்ளவில்லை என்ற வேதனை ஒவ்வொரு ஈழத் தமிழனது நினைவையும் விட்டகல மறுக்கின்றது. ஆழிப் பெரும் துயரின்போது ஆதரவு வழங்கிய ஜப்பான், இறுதிப் போரின் காலத்தில் மௌனமாக இருந்து ஒரு இன அழிப்பு யுத்தத்தைத் தடுத்து நிறுத்தத் தவறியது என்பதை யாரும் மறுத்துக் கூற முடியாது. முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்ட ஆன்மாக்களுக்கும், அடக்கப்பட்ட தமிழர்களுக்கும் இது ஆண்டவன் வழங்கிய தண்டனை என்ற திருப்தியை வழங்கியிருக்கக் கூடும். இப்போது ஜப்பான் என்றால், எப்போது மற்றய நாடுகள்? என்ற எதிர்பார்ப்பையும் அவர்களுக்கு வழங்கியிருக்கும்.
சிங்கள தேசத்தைப் பொறுத்தவரை, பெரும் கொடையாளி நாடாக இருந்த ஜப்பானில் ஏற்பட்ட பேரழிவுகள் அதிர்ச்சிகரமானது. சிங்கள தேசத்திற்கு வழங்குவதாக ஒப்புக்கொண்ட நிதிகள் இன்னமும் சில காலத்திற்கு ஜப்பானால் கொடுக்க முடியாமல் போகலாம் என்பதால், ஜப்பானின் பேரழிவு சிங்கள அரசுக்குப் பெரும் பொருளாதார நெருக்கடியை உருவாக்கும் என்று நம்பலாம். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு, உள்ளுர் விளை பொருட்களும் அழிவுக்குள்ளான நிலையில், ஜப்பானின் நிதி உதவிக்கும் வந்து சேர்ந்துள்ள ஆபத்து, சிங்கள தேசத்தை ஆட்டிப் படைக்கப் போகின்றது.
சிங்கள தேசத்தின் பொருளாதாரத் தாழ்வு நிலையைச் சாதகமாக்கிக்கொண்டு, இந்தியாவும் சீனாவும் இன்னமும் ஊன்றிக் கால்பதிக்கும் நில உருவாகும். அது, அழிவுகளுக்குள் வாழ எத்தனிக்கும் தமிழர்களை விடவும், சிங்கள மக்களுக்கு ஆபத்தும், அச்சுறுத்தலும் நிறைந்த கள நிலையை உருவாக்கப் போகின்றது. எனவே, புலம்பெயர் தமிழர்கள் இந்த சந்தர்ப்பத்தை விவேகமாகக் கையாள்வதன் மூலம் தமிழீழம் நோக்கிய பாதையை விரைவு படுத்தலாம்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வெறும் அறிக்கைப் போரை நிறுத்திவிட்டு, ஆக்கபூர்வமான நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும். புலம்பெயர் தமிழர்களை குழுக்களாக்கி உடைக்கும் கட்சி அரசியலிலிருந்து விடுபட்டு, அனைத்துத் தமிழர்களுக்குமான ஜனநாயக அமைப்பாக, புலம்பெயர் தமிழர்களை ஒன்றிணைப்பதில்தான் தமிழீழ மக்களின் அடுத்த கட்ட வெற்றி தங்கியுள்ளது.
- கரிகாலன்
22 Mar 2011
ஜப்பானிய மக்களின் துயரத்தில் நாமும் கலந்துகொண்டு, அவர்களுக்கு ஆறுதலும், தேறுதலும் வழங்க வேண்டியது ஒவ்வொரு மனிதரதும் கடமையாகவே உள்ளது. ஈழத் தமிழர்களும் தம்மாலான உதவிகளை வழங்கி ஜப்பானிய மக்களது நல்லெண்ணத்தையும், புரிந்துணர்வையும் பெற்றுக்கொள்வது அவசியம்.
ஆயினும், தமிழீழ மக்களது அழிவுகளிலும், அவலங்களிலும் ஜப்பான் வகித்த பாத்திரத்தை நாம் மறந்துவிட முடியாதவர்களாகவும் உள்ளோம். இறுதி யுத்த கால அழிவுகளைத் தடுத்து நிறுத்தும் வல்லமை ஜப்பானுக்கும் இருந்தது. ஈழத் தமிழர்கள் இரக்கமற்ற வகையில் கொத்துக் கொத்தாகக் கொன்று குவிக்கப்பட்ட காலத்தில் ஜப்பான் மனித நாகரியத்துடன் நடந்து கொள்ளவில்லை என்ற வேதனை ஒவ்வொரு ஈழத் தமிழனது நினைவையும் விட்டகல மறுக்கின்றது. ஆழிப் பெரும் துயரின்போது ஆதரவு வழங்கிய ஜப்பான், இறுதிப் போரின் காலத்தில் மௌனமாக இருந்து ஒரு இன அழிப்பு யுத்தத்தைத் தடுத்து நிறுத்தத் தவறியது என்பதை யாரும் மறுத்துக் கூற முடியாது. முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்ட ஆன்மாக்களுக்கும், அடக்கப்பட்ட தமிழர்களுக்கும் இது ஆண்டவன் வழங்கிய தண்டனை என்ற திருப்தியை வழங்கியிருக்கக் கூடும். இப்போது ஜப்பான் என்றால், எப்போது மற்றய நாடுகள்? என்ற எதிர்பார்ப்பையும் அவர்களுக்கு வழங்கியிருக்கும்.
சிங்கள தேசத்தைப் பொறுத்தவரை, பெரும் கொடையாளி நாடாக இருந்த ஜப்பானில் ஏற்பட்ட பேரழிவுகள் அதிர்ச்சிகரமானது. சிங்கள தேசத்திற்கு வழங்குவதாக ஒப்புக்கொண்ட நிதிகள் இன்னமும் சில காலத்திற்கு ஜப்பானால் கொடுக்க முடியாமல் போகலாம் என்பதால், ஜப்பானின் பேரழிவு சிங்கள அரசுக்குப் பெரும் பொருளாதார நெருக்கடியை உருவாக்கும் என்று நம்பலாம். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு, உள்ளுர் விளை பொருட்களும் அழிவுக்குள்ளான நிலையில், ஜப்பானின் நிதி உதவிக்கும் வந்து சேர்ந்துள்ள ஆபத்து, சிங்கள தேசத்தை ஆட்டிப் படைக்கப் போகின்றது.
சிங்கள தேசத்தின் பொருளாதாரத் தாழ்வு நிலையைச் சாதகமாக்கிக்கொண்டு, இந்தியாவும் சீனாவும் இன்னமும் ஊன்றிக் கால்பதிக்கும் நில உருவாகும். அது, அழிவுகளுக்குள் வாழ எத்தனிக்கும் தமிழர்களை விடவும், சிங்கள மக்களுக்கு ஆபத்தும், அச்சுறுத்தலும் நிறைந்த கள நிலையை உருவாக்கப் போகின்றது. எனவே, புலம்பெயர் தமிழர்கள் இந்த சந்தர்ப்பத்தை விவேகமாகக் கையாள்வதன் மூலம் தமிழீழம் நோக்கிய பாதையை விரைவு படுத்தலாம்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வெறும் அறிக்கைப் போரை நிறுத்திவிட்டு, ஆக்கபூர்வமான நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும். புலம்பெயர் தமிழர்களை குழுக்களாக்கி உடைக்கும் கட்சி அரசியலிலிருந்து விடுபட்டு, அனைத்துத் தமிழர்களுக்குமான ஜனநாயக அமைப்பாக, புலம்பெயர் தமிழர்களை ஒன்றிணைப்பதில்தான் தமிழீழ மக்களின் அடுத்த கட்ட வெற்றி தங்கியுள்ளது.
- கரிகாலன்
22 Mar 2011
Re: ஈழத் தமிழர்கள் விடயத்தில் ஜப்பான் மனித நாகரித்துடன் நடந்து கொள்ளவில்லை
அப்போ ஜப்பான்ல வந்தது சரி என்று கூறுகிறீரா?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: ஈழத் தமிழர்கள் விடயத்தில் ஜப்பான் மனித நாகரித்துடன் நடந்து கொள்ளவில்லை
அப்படி அல்ல ..நீங்கள் பிழையாக விழங்கி கொள்கிறீர்கள்.அவர்களின் துன்பத்தில் பங்கெடுக்கும் அதெவெளை அவர்கள் செய்த்தை நாம் மறக்க தயாரராக இல்லை அவ்வளவு தான் ....
Re: ஈழத் தமிழர்கள் விடயத்தில் ஜப்பான் மனித நாகரித்துடன் நடந்து கொள்ளவில்லை
ஜப்பானின் இந்த அழிவுகளால் ஒரு கணம் உலகமே கவலை கொண்டிருக்கின்றது . எல்லோரும் மனிதர்கள் தான் .
ஆனால் இலங்கையில் உள்ள தமிழ் மக்களை பொறுத்தவரை இது ஜப்பானுக்கொரு பாடமாக கருத வேண்டும் என நினைக்கின்றனர் ,
அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என சும்மாவா சொன்னார்கள் . எந்தவொரு அநீதிக்கும் உதவுபவர்களுக்கும் உதவியவர்களுக்கும் இது ஒரு பாடம் எனவும் நினைக்கின்றனர் . அனால் இதில் அப்பாவிப் பொதுமக்கள் பலியாகியதை துயர சம்பவமாகவும் நினைக்கின்றனர் .
ஆனால் ஜப்பானின் தவறுக்கு அப்பாவிமக்களை இதில் சம்பந்தப் படுத்தி கதைப்பதும் தவறாகும் . எல்லாமே விதியின் விளையாட்டும் , உலகின் மாற்றப் போக்குகளுக்கிணங்க காலச்சக்கரம் சுழல்வதும் தான் .
ஆனால் இலங்கையில் உள்ள தமிழ் மக்களை பொறுத்தவரை இது ஜப்பானுக்கொரு பாடமாக கருத வேண்டும் என நினைக்கின்றனர் ,
அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என சும்மாவா சொன்னார்கள் . எந்தவொரு அநீதிக்கும் உதவுபவர்களுக்கும் உதவியவர்களுக்கும் இது ஒரு பாடம் எனவும் நினைக்கின்றனர் . அனால் இதில் அப்பாவிப் பொதுமக்கள் பலியாகியதை துயர சம்பவமாகவும் நினைக்கின்றனர் .
ஆனால் ஜப்பானின் தவறுக்கு அப்பாவிமக்களை இதில் சம்பந்தப் படுத்தி கதைப்பதும் தவறாகும் . எல்லாமே விதியின் விளையாட்டும் , உலகின் மாற்றப் போக்குகளுக்கிணங்க காலச்சக்கரம் சுழல்வதும் தான் .
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Re: ஈழத் தமிழர்கள் விடயத்தில் ஜப்பான் மனித நாகரித்துடன் நடந்து கொள்ளவில்லை
ப்ரியா wrote:ஜப்பானின் இந்த அழிவுகளால் ஒரு கணம் உலகமே கவலை கொண்டிருக்கின்றது . எல்லோரும் மனிதர்கள் தான் .
ஆனால் இலங்கையில் உள்ள தமிழ் மக்களை பொறுத்தவரை இது ஜப்பானுக்கொரு பாடமாக கருத வேண்டும் என நினைக்கின்றனர் ,
அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என சும்மாவா சொன்னார்கள் . எந்தவொரு அநீதிக்கும் உதவுபவர்களுக்கும் உதவியவர்களுக்கும் இது ஒரு பாடம் எனவும் நினைக்கின்றனர் . அனால் இதில் அப்பாவிப் பொதுமக்கள் பலியாகியதை துயர சம்பவமாகவும் நினைக்கின்றனர் .
ஆனால் ஜப்பானின் தவறுக்கு அப்பாவிமக்களை இதில் சம்பந்தப் படுத்தி கதைப்பதும் தவறாகும் . எல்லாமே விதியின் விளையாட்டும் , உலகின் மாற்றப் போக்குகளுக்கிணங்க காலச்சக்கரம் சுழல்வதும் தான் .
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: ஈழத் தமிழர்கள் விடயத்தில் ஜப்பான் மனித நாகரித்துடன் நடந்து கொள்ளவில்லை
ப்ரியா wrote:ஜப்பானின் இந்த அழிவுகளால் ஒரு கணம் உலகமே கவலை கொண்டிருக்கின்றது . எல்லோரும் மனிதர்கள் தான் .
ஆனால் இலங்கையில் உள்ள தமிழ் மக்களை பொறுத்தவரை இது ஜப்பானுக்கொரு பாடமாக கருத வேண்டும் என நினைக்கின்றனர் ,
அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என சும்மாவா சொன்னார்கள் . எந்தவொரு அநீதிக்கும் உதவுபவர்களுக்கும் உதவியவர்களுக்கும் இது ஒரு பாடம் எனவும் நினைக்கின்றனர் . அனால் இதில் அப்பாவிப் பொதுமக்கள் பலியாகியதை துயர சம்பவமாகவும் நினைக்கின்றனர் .
ஆனால் ஜப்பானின் தவறுக்கு அப்பாவிமக்களை இதில் சம்பந்தப் படுத்தி கதைப்பதும் தவறாகும் . எல்லாமே விதியின் விளையாட்டும் , உலகின் மாற்றப் போக்குகளுக்கிணங்க காலச்சக்கரம் சுழல்வதும் தான் .
சரியான வார்த்தை பிரியா.. சின்ன பிள்ளைய இருந்தாலும் சரியான கருத்தை சொன்னேப்பா...
கண்ணுக்கு கண்ணும் காலுக்கு காலும் உயிருக்கு உயிரும் எடுப்பது பண்பல்லவே?
எங்கும் அலைக்கழிக்கப்படுவதும் அவதிப்படுவதும் மக்களே
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![ஈழத் தமிழர்கள் விடயத்தில் ஜப்பான் மனித நாகரித்துடன் நடந்து கொள்ளவில்லை 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
Re: ஈழத் தமிழர்கள் விடயத்தில் ஜப்பான் மனித நாகரித்துடன் நடந்து கொள்ளவில்லை
என்ன அநியாய கட்டுரைப்பா இது.ஜப்பான் அரசு செய்த தவறுக்கு மக்கள் எப்படி பொறுப்பு ஆக முடியும்.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: ஈழத் தமிழர்கள் விடயத்தில் ஜப்பான் மனித நாகரித்துடன் நடந்து கொள்ளவில்லை
இந்த கட்டுராயின் நோக்கம் மக்கள் இறந்ததை கொண்டாட அல்லஇந்த சம்பவத்தை சரியாக பயன்படுத்த வேண்டும் இதுதான் சொல்கிறார் உலகமே தமிழர்கள் கொல்லப்பட்டதை வேடிக்கை பார்த்தது ஜப்பான் நாடு மட்டுமல்ல
Re: ஈழத் தமிழர்கள் விடயத்தில் ஜப்பான் மனித நாகரித்துடன் நடந்து கொள்ளவில்லை
maniajith007 wrote:இந்த கட்டுராயின் நோக்கம் மக்கள் இறந்ததை கொண்டாட அல்லஇந்த சம்பவத்தை சரியாக பயன்படுத்த வேண்டும் இதுதான் சொல்கிறார் உலகமே தமிழர்கள் கொல்லப்பட்டதை வேடிக்கை பார்த்தது ஜப்பான் நாடு மட்டுமல்ல
நிச்சயமாக மணி . ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் ஆனால் ஜப்பானில் மிக முக்கியமான ஒருவரை தான் குறை சொல்கின்றார்கள் .தங்களுக்கு புரிந்திருக்கும் .
ஆனால் பழிக்கு பழி ரத்தத்துக்கு ரத்தம் ஒரு போதும் நிம்மதியை தராது . ஜப்பானில் பாதிக்கப் பட்டவர்கள் அப்பாவிப் பொது மக்களே . மனித உயிருக்கு விலை மதிப்பு ஏது ???
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Re: ஈழத் தமிழர்கள் விடயத்தில் ஜப்பான் மனித நாகரித்துடன் நடந்து கொள்ளவில்லை
ப்ரியா wrote:
நிச்சயமாக மணி . ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் ஆனால் ஜப்பானில் மிக முக்கியமான ஒருவரை தான் குறை சொல்கின்றார்கள் .தங்களுக்கு புரிந்திருக்கும் .
ஆனால் பழிக்கு பழி ரத்தத்துக்கு ரத்தம் ஒரு போதும் நிம்மதியை தராது . ஜப்பானில் பாதிக்கப் பட்டவர்கள் அப்பாவிப் பொது மக்களே . மனித உயிருக்கு விலை மதிப்பு ஏது ???
ப்ரியா இந்த தருணத்தை நாம் எவ்வாறு பார்க்கிறோம் என்பதில் இருக்கிறது ஜப்பான் தேசத்தின் இந்த அழிவை கண்டு மிகுந்த துயரம் உண்டு அதே தருணம் இந்த தருணத்தில் அவர்களின் தன்னம்பிக்கை முன்னை பலமடங்கு அதிகரித்து இருக்கிறது அவர்களுக்கு உதவி புரிவதும் அவர்கள் மீண்டும் பழய நிலயை அடய உதவ வேண்டியது நாம் கடமை அதே சமயம் நமது புதிய வழியை நாம் பயன்படுத்த வேண்டும் அல்லவா
Page 1 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கனடாவில் தஞ்சம் புகுந்துள்ள 350 ஈழத் தமிழர்கள்-
» ஈழத் தமிழர்கள் ஓரணியில் திரள வேண்டும்: விடுதலைப்புலிகள்
» கரைசேரா படகு அகதிகளாக ஈழத் தமிழர்கள் இந்தோனேஷியக் கடலில்
» கண் முன்னே அழியும் அடையாளங்கள்...கை பிசைந்து நிற்கும் ஈழத் தமிழர்கள்!
» ஈழத் தமிழினப் படுகொலைக்கு வாழ்த்து: ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் கேலிக்கூத்து
» ஈழத் தமிழர்கள் ஓரணியில் திரள வேண்டும்: விடுதலைப்புலிகள்
» கரைசேரா படகு அகதிகளாக ஈழத் தமிழர்கள் இந்தோனேஷியக் கடலில்
» கண் முன்னே அழியும் அடையாளங்கள்...கை பிசைந்து நிற்கும் ஈழத் தமிழர்கள்!
» ஈழத் தமிழினப் படுகொலைக்கு வாழ்த்து: ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் கேலிக்கூத்து
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|