Latest topics
» புதுக்கவிதைகள்…by ayyasamy ram Today at 8:41 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தவறான முடிவுகள் எடுக்கும் சரியான மனிதர் வைகோ: தொண்டர்கள் விரக்தி
+3
அருண்
ரபீக்
கண்ணன்3536
7 posters
Page 1 of 1
தவறான முடிவுகள் எடுக்கும் சரியான மனிதர் வைகோ: தொண்டர்கள் விரக்தி
கடந்த, 2006 சட்டசபை தேர்தல் முதல், அ.தி.மு.க., கூட்டணியில் இருந்த ம.தி.மு.க., தற்போது அதிலிருந்து விலகியுள்ளது. இரண்டு மாதத்துக்கு அரசியல் துறவறம் மேற்கொள்ளப்போவதாக வைகோ அறிவித்துள்ளார். குட்டிக் கட்சிகள் கூட களம் காணத் தயாராகும் இந்த நேரத்தில், வைகோ போன்ற முதிர்ந்த அரசியல்வாதிகள் இத்தகையை முடிவை எடுத்தது, அரசியல் நோக்கர்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க.,வில் இருந்து திட்டமிட்டு வெளியேற்றப்பட்ட வைகோ, மீண்டும், 1999 லோக்சபா தேர்தலில், அக்கட்சியுடனே கூட்டணிக்கு சம்மதித்தது மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. அவருக்காக உயிர் நீத்தவர்களின் தியாகம் வீணானதாக விமர்சனம் எழுந்தது. "பா.ஜ., கூட்டணியிலிருந்து, அ.தி.மு.க., விலகி, தி.மு.க., இணைந்து, தாமும் உடன் இருக்க நேர்ந்தது காலத்தின் கட்டாயம்' என, அவர் காரணம் சொன்னாலும், பரம வைரிகள் பக்கத்து பக்கத்தில் இருப்பதை பாமரர்கள் ரசிக்கவில்லை. கூட்டு சேர்ந்தாகிவிட்டது. அடுத்து நடந்த, 2001 சட்டசபை தேர்தலில் ஒரு சீட்டுக்காக உணர்ச்சிவசப்படாமல் இருந்திருந்தால், 15 முதல் 20 எம்.எல்.ஏ.,க்களை அப்போதே ம.தி.மு.க., பெற்றிருக்கும். கூட்டணியில் வெளியேறி, தனித்துப் போட்டியிட்டு, அதையும் இழந்தார் வைகோ.
தொடர்ந்து மூன்று ஆண்டுகள் தி.மு.க., மீது சீறிப் பாய்ந்த அவர், 2004 லோக்சபா தேர்தலில் அவர்களோடு இணைந்து, "அண்ணன் கலைஞர், தம்பி வைகோ' என, மாறி மாறி கண்ணீர் உகுத்ததை, அடிமட்டத் தொண்டர்கள் விரும்பவில்லை.அதேபோல, 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும், மூன்று சீட்களுக்காக தி.மு.க.,வை முறைத்துக்கொண்டு, அ.தி.மு.க., அணியில் ஐக்கியமானார். "பொடா' சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட வடுக்கள் மறைந்திராத நேரமது. முதல் நாள், "பாசிச ஜெயலலிதா' என முழங்கியதும், மறுநாள், "அன்புச் சகோதரி' என முழங்கியதும், தர்மசங்கடத்தை ஏற்படுத்தின.அதன் பிறகு, அம்மையாருக்கு முழு விசுவாசமாகத் தான் இருந்தார் வைகோ. அந்த விசுவாசம், எல்லை கடந்து சென்றது தான் அவருக்கே வினையாக அமைந்தது. 2006 தேர்தலில், ஆறு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. அதிலும், ஒரு எம்.எல்.ஏ., இறந்துவிட்டார். அதற்காக நடந்த திருமங்கலம் இடைத்தேர்தலில், தொகுதியை அ.தி.மு.க., வுக்கு தாரை வார்த்துவிட்டார். அப்போதே கட்சிக்குள் முணுமுணுப்புகள் எழுந்தன.
அடுத்தடுத்து இரண்டு எம்.எல்.ஏ., கள் கட்சி தாவிவிட்டனர். ஆரம்ப காலத்தில் தோளோடு தோள் நின்ற அத்தனை பேரும், இன்றைய தேதியில் ம.தி.மு.க., வில் இல்லை. காரணம் ஆயிரம் இருக்கலாம், வைகோ பக்கமே நியாயம் இருக்கலாம், "முக்கிய புள்ளிகள் வெளியேறுகின்றனர்' என்ற ஒரு வரி மட்டும் தான் உலகத்தைச் சென்றடைந்தது. விலகிய அளவுக்கு புதிய ஆட்களைச் சேர்த்திருந்தால் கூட இத்தகைய விமர்சனங்கள் எழுந்திருக்காது.இந்த ஆட்சியில் நடந்த இடைத்தேர்தல்களைப் புறக்கணிப்பதென ஜெயலலிதா முடிவெடுத்தார். அதற்கும் உடன்பட்டார் வைகோ. "ஆட்சியைப் பிடிக்க நினைக்கும் அரசியல் கட்சிகள், தேர்தலைப் புறக்கணிப்பது நல்லதல்ல' என்பதை உணர்ந்து, அடுத்த தேர்தலிலேயே அ.தி.மு.க., போட்டியிட்டது.
சட்டசபையில் கூட, அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களுக்கும், தங்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பது போலத் தான் அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் நடந்து கொண்டனர். அத்தனை கட்சிகளும் ஆர்ப்பாட்டம், போராட்டம், மாநாடு என சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கையில், விசுவாசத்துக்கு குந்தகம் வந்துவிடக் கூடாது என அடக்கியே வாசித்தார் வைகோ.மாநிலம் முழுவதும் உள்ளூர் பிரச்னையில் உறியடி நடத்திக்கொண்டிருந்த போது, இலங்கைப் பிரச்னை பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருந்தார். 2009 லோக்சபா தேர்தலில், விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட போது கூட அதைத்தான் பிரசாரம் செய்தார்.இப்படி, பல நேரத்தில் அவர் எடுத்த தவறான முடிவுகள், நிதர்சனத்துக்கும், அந்த நல்ல மனிதருக்கும் இடையிலான இடைவெளியை அதிகரித்துக் கொண்டே சென்றன. இன்று, சட்டசபை பொதுத் தேர்தலையே புறக்கணிக்கும் முடிவை எடுத்திருக்கிறார்.சுருக்கமாகச் சொல்வதானால், தமிழகம் ஒரு நல்ல மனிதரை தொடர்ந்து கைவிட்டது; அவர் இன்று தமிழகத்தைக் கைவிட்டிருக்கிறார்.
Re: தவறான முடிவுகள் எடுக்கும் சரியான மனிதர் வைகோ: தொண்டர்கள் விரக்தி
சுருக்கமாகச் சொல்வதானால், தமிழகம் ஒரு நல்ல மனிதரை தொடர்ந்து கைவிட்டது; அவர் இன்று தமிழகத்தைக் கைவிட்டிருக்கிறார்..
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: தவறான முடிவுகள் எடுக்கும் சரியான மனிதர் வைகோ: தொண்டர்கள் விரக்தி
அவர் இப்படி முடிவெடுப்பதால் தொண்டர்களின் கதி என்ன வாகும்!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: தவறான முடிவுகள் எடுக்கும் சரியான மனிதர் வைகோ: தொண்டர்கள் விரக்தி
வேறென்ன அதோகதி தான்.....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: தவறான முடிவுகள் எடுக்கும் சரியான மனிதர் வைகோ: தொண்டர்கள் விரக்தி
இவரு சந்தர்ப்ப வாத அரசியல் செய்றவர்.இவர நம்பி போன தொண்டர்கள் தான் தலையா பிச்சுகனும்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: தவறான முடிவுகள் எடுக்கும் சரியான மனிதர் வைகோ: தொண்டர்கள் விரக்தி
அரசியலைப் பொருத்த்வரை சந்தர்ப்பவாதம் என்பது அனைவரும் செய்யக் கூடியது ,,,,,,,
கருணாநிதி ,ஜெயலலிதா அனைவருக்கும் இது பொருந்தும்
கருணாநிதி ,ஜெயலலிதா அனைவருக்கும் இது பொருந்தும்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: தவறான முடிவுகள் எடுக்கும் சரியான மனிதர் வைகோ: தொண்டர்கள் விரக்தி
அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா
அப்துல்- தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
Re: தவறான முடிவுகள் எடுக்கும் சரியான மனிதர் வைகோ: தொண்டர்கள் விரக்தி
தன்மானமுள்ளவர் தனியா நின்னு இருக்கனும் தேர்தலில்.. !
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Similar topics
» நடுவர்களின் தவறான முடிவுகள்
» அதிமுகவுக்கு எதிராக போராட்டம் வேண்டாம்: வைகோ அறிவிப்பால் தொண்டர்கள் குழப்பம்
» தனியார் பரிசோதனை மையத்தில் 44 பாசிட்டிவ் முடிவுகள் கொரோனா சோதனையில் தவறான தகவல்கள்:
» மாற்றம் & விரக்தி
» நம்பிக்கெட்டவன் நான்: கருணாநிதி விரக்தி
» அதிமுகவுக்கு எதிராக போராட்டம் வேண்டாம்: வைகோ அறிவிப்பால் தொண்டர்கள் குழப்பம்
» தனியார் பரிசோதனை மையத்தில் 44 பாசிட்டிவ் முடிவுகள் கொரோனா சோதனையில் தவறான தகவல்கள்:
» மாற்றம் & விரக்தி
» நம்பிக்கெட்டவன் நான்: கருணாநிதி விரக்தி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|