ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் ஊருக்கு போகிறேன் : வைகோ

+2
அருண்
சிவா
6 posters

Go down

நான் ஊருக்கு போகிறேன் : வைகோ Empty நான் ஊருக்கு போகிறேன் : வைகோ

Post by சிவா Tue Mar 22, 2011 12:19 pm

நான் ஊருக்கு போகிறேன் : வைகோ Vaikoo10


ம.தி.மு.க.,வுக்கு 12 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முடியும் என்பதில் அ.தி.மு.க., திட்டவட்டமாக இருந்ததால் அக்கூட்டணியில் நீடிப்பது குறித்த இறுதி முடிவெடுப்பதற்கு ம.தி.மு.க., உயர்நிலைக்குழு மற்றும் மாவட்டச் செயலர்கள் கூட்டம், தாயகத்தில் நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு துவங்கி நேற்று அதிகாலை 4 மணி வரை விடிய, விடிய நடந்தது.

ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ மற்றும் உயர்நிலைக் குழு உறுப்பினர்கள், 56 மாவட்டச் செயலர்கள் கலந்து கொண்டனர்.

கடந்த 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி மலர்ந்த சம்பவங்களையும், 35 தொகுதிகளில் போட்டியிட்டு ஆறு தொகுதிகளில் வெற்றி பெற்றது, திருமங்கலம் இடைத்தேர்தலில் அத்தொகுதியை அ.தி.மு.க.,வுக்கு விட்டுக் கொடுத்தது, 2009ம் ஆண்டு பார்லிமென்ட் தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக நடந்த அவமான நிகழ்வுகளையும் வைகோ விவரித்தார்.

மேலும், வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவினருடன் முதல் கட்டமாக 35 தொகுதிகளும், இரண்டாவது கட்டமாக 30 தொகுதிகளும், மூன்றாவது கட்டமாக 21 தொகுதிகளும் ம.தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவினர் நடத்திய பேச்சுவார்த்தையை பற்றியும் வைகோ தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க., தரப்பில் ஆறு தொகுதிகளில் ஆரம்பிக்கப்பட்டு பின், எட்டு தொகுதிகள், ஒன்பது தொகுதிகள் என அதிகரித்து இறுதியாக 12 தொகுதிகள் வரை தருவதற்கு நடத்திய பேரத்தையும், வைகோ ஆவேசமாக விளக்கி பேசினார்.

தொகுதி பங்கீட்டில் ம.தி.மு.க.,வை அ.தி.மு.க., தலைமை திட்டமிட்டு புறக்கணிப்பதாக அவர் கடுமையாக குற்றம்சாட்டினார்.

ம.தி.மு.க., கொள்கைப் பரப்பு செயலர் நாஞ்சில் சம்பத் பேசும்போது, அ.தி.மு.க., தலைமையை கடுமையாக விமர்சித்தார். தலைவர்களின் எண்ண ஓட்டத்திற்கேற்ப மாவட்டச்செயலர்கள் 48 பேர், "அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற வேண்டாம்' என, தெரிவித்தனர்.

ஒரு சிலர் மட்டும் ம.தி.மு.க.,வின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அ.தி.மு.க., தரும் தொகுதியில் போட்டியிடுவதற்கு விருப்பம் தெரிவித்து பேசினர். அவர்களுக்கு வைகோ பதிலளித்து பேசும்போது, "நீங்கள் விரும்பினால் போட்டியிடுங்கள். நான் தொகுதிகளை கேட்க மாட்டேன். பிரசாரத்திற்கு வரமாட்டேன். என்னை அவமானப்படுத்தி விட்டனர்.

தேர்தலில் செலவு செய்வதற்கும் நமது கட்சியில் பணம் இல்லை' என்றார்.அதிகாலையில், ஐந்து பக்கம் கொண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதில், "புதிதாக ஒரு அணியை அமைக்க முயலுவதோ, தனித்து போட்டியிடுவதோ, ஏதோ ஒரு தரப்பினரை வெற்றி பெறச் செய்வதற்கு ம.தி.மு.க., கருவியாயிற்று என்ற துளியும் உண்மை அற்ற விமர்சனத்துக்கே வழி வகுக்கும்.

கண்களை விற்று சித்திரம் வாங்குவதைப் போல, சுயமரியாதையை இழந்து பதவியைப் பெற வேண்டிய தேவை ம.தி.மு.க., வுக்கு இல்லை. தன்மானத்தையும், சுயமரியாதையையும் இரு கண்களாகப் போற்றும் ம.தி.மு.க., 2011ல் நடக்கும் தமிழகம், புதுவை சட்டசபை பொதுத்தேர்தலில் மட்டுமே போட்டியிடுவது இல்லை' என, அக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து ஜெயலலிதா வைகோவுக்கு கடிதம் எழுதினார். ஆனால் வைகோ அந்த கடிதத்தி பரிசீலனை செய்யவில்லை. நேற்று மாலை சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் தனது சொந்த ஊரான கலிங்கப்பட்டிக்கு புறப்பட்டார்.

விமான நிலையத்தில் வைகோ பேட்டியளித்தார்.

’’தேர்தலை புறக்கணிக்க நீங்கள் எடுத்துள்ள முடிவு வருத்தத்தை அளிப்பதாகவும், முடிவு எப்படி இருந்தாலும் அன்பு சகோதரியின் நன்மதிப்பும், அன்பும் எப்போதும் இருக்கும் என்றும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா உங்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறாரே? இதுபற்றி உங்கள் கருத்து என்ன?'' என்று கேட்டதற்கு,

’’234 தொகுதிகளில் மற்ற கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய 74 தொகுதிகள் போக மீதமுள்ள 160 தொகுதிகளுக்கும் கடந்த 16-ந் தேதி அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலை அதன் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்த போதே ம.தி.மு.க.வை பிடரியை பிடித்து நாங்கள் வெளியேற்றுகிறோம் என்ற விதத்தில் அவமதித்து கூட்டணியை விட்டு வெளியேற்றி விட்டார்.

மக்கள் மன்றத்தில் அ.தி.மு.க. மீது ஏற்பட்ட விமர்சனத்தின் காரணமாக 19-ந் தேதி அன்று அ.திமு.க. எங்களுக்கு ஒதுக்க முன்வந்த தொகுதிகளின் எண்ணிக்கை 12 தான் என்பதையும் ஊடகங்களில், செய்தி ஏடுகளில் எண்ணிக்கை குறித்து உலவ விடப்பட்ட செய்திகள் உண்மை அல்ல என்பதையும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் அவர்கள் குறிப்பிட்ட 12 தொகுதிகள் என்பதில் இருந்து நாங்கள் நிறைவேற்றிய தீர்மானத்தில் குறிப்பிட்ட குற்றச்சாட்டை உண்மை என்று அவரே ஒப்புக்கொண்டு விட்டார்.

அ.தி.மு.க. தொண்டர்கள் மனதிலும், பொது மக்கள் மனதிலும் ஏற்பட்டுள்ள, அதிருப்தியின் காரணமாகவே எனக்கு இப்படியொரு கடிதத்தை அவர் எழுதியிருக்கிறார்’’ என்று பதிலளித்தார்.

நீங்கள் வெளியூர் சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாக செய்திகள் வருகிறதே? என்று கேட்டபோது, ``இல்லை எனது தாயாரை சந்தித்து நடந்த சம்பவத்தை விளக்குவதற்காக சொந்த ஊருக்கு செல்கிறேன். அம்மாவை பார்க்க செல்கிறேனே தவிர வேறு ஒன்றும் இல்லை.

இன்னும் இரண்டு மாதங்களுக்கு நான் எந்த அறிக்கையும் விடப்போவதில்லை. அமைதியாக இருந்து வேடிக்கை பார்க்கப்போகிறேன்’’ என்று தெரிவித்தார்.


நான் ஊருக்கு போகிறேன் : வைகோ Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நான் ஊருக்கு போகிறேன் : வைகோ Empty Re: நான் ஊருக்கு போகிறேன் : வைகோ

Post by அருண் Tue Mar 22, 2011 1:10 pm

இவர் எடுத்துருக்கும் முடிவு வருத்தமளிக்கிறது!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

நான் ஊருக்கு போகிறேன் : வைகோ Empty Re: நான் ஊருக்கு போகிறேன் : வைகோ

Post by உதயசுதா Tue Mar 22, 2011 1:44 pm

ஊருக்கு போங்க,அங்கேயே விவசாயம் செய்து பொழைச்சுகொங்க.
நீங்களும் உங்க கட்சியும்.சும்மா பாழா போனா வெட்டி வீராப்புக்காக கட்சி ஆரம்பிக்க வேண்டியது.அப்புறம் பாதிலயே எல்லாத்தையும் நிர்க்கதியா நிக்க வைக்க வேண்டியது.உங்களை மாதிரி தலைவர்களால் உங்களை நம்பி வரும் தொண்டர்கள் பாடுதான் திண்டாட்டம்


நான் ஊருக்கு போகிறேன் : வைகோ Uநான் ஊருக்கு போகிறேன் : வைகோ Dநான் ஊருக்கு போகிறேன் : வைகோ Aநான் ஊருக்கு போகிறேன் : வைகோ Yநான் ஊருக்கு போகிறேன் : வைகோ Aநான் ஊருக்கு போகிறேன் : வைகோ Sநான் ஊருக்கு போகிறேன் : வைகோ Uநான் ஊருக்கு போகிறேன் : வைகோ Dநான் ஊருக்கு போகிறேன் : வைகோ Hநான் ஊருக்கு போகிறேன் : வைகோ A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நான் ஊருக்கு போகிறேன் : வைகோ Empty Re: நான் ஊருக்கு போகிறேன் : வைகோ

Post by ரபீக் Tue Mar 22, 2011 1:46 pm

உதயசுதா wrote:ஊருக்கு போங்க,அங்கேயே விவசாயம் செய்து பொழைச்சுகொங்க.
நீங்களும் உங்க கட்சியும்.சும்மா பாழா போனா வெட்டி வீராப்புக்காக கட்சி ஆரம்பிக்க வேண்டியது.அப்புறம் பாதிலயே எல்லாத்தையும் நிர்க்கதியா நிக்க வைக்க வேண்டியது.உங்களை மாதிரி தலைவர்களால் உங்களை நம்பி வரும் தொண்டர்கள் பாடுதான் திண்டாட்டம்

அதுக்காக அம்மா கொடுக்கும் எட்டு பிச்சை தொகுதிகளுக்காக அவர் அந்த அம்மா பின்னாடி ,,,,மாதிரி அலைய சொல்றீங்களா அக்கா ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

நான் ஊருக்கு போகிறேன் : வைகோ Empty Re: நான் ஊருக்கு போகிறேன் : வைகோ

Post by உதயசுதா Tue Mar 22, 2011 1:48 pm

ரபீக் wrote:
உதயசுதா wrote:ஊருக்கு போங்க,அங்கேயே விவசாயம் செய்து பொழைச்சுகொங்க.
நீங்களும் உங்க கட்சியும்.சும்மா பாழா போனா வெட்டி வீராப்புக்காக கட்சி ஆரம்பிக்க வேண்டியது.அப்புறம் பாதிலயே எல்லாத்தையும் நிர்க்கதியா நிக்க வைக்க வேண்டியது.உங்களை மாதிரி தலைவர்களால் உங்களை நம்பி வரும் தொண்டர்கள் பாடுதான் திண்டாட்டம்

அதுக்காக அம்மா கொடுக்கும் எட்டு பிச்சை தொகுதிகளுக்காக அவர் அந்த அம்மா பின்னாடி ,,,,மாதிரி அலைய சொல்றீங்களா அக்கா ?
அம்மா கொடுக்கார தொகுதிகள் வேண்டாம்,அவர்கள் அந்தம்மாவிடம் கேட்ட தொகுதிகளிலாவது தனித்து போட்டி இடலாம் இல்லையா


நான் ஊருக்கு போகிறேன் : வைகோ Uநான் ஊருக்கு போகிறேன் : வைகோ Dநான் ஊருக்கு போகிறேன் : வைகோ Aநான் ஊருக்கு போகிறேன் : வைகோ Yநான் ஊருக்கு போகிறேன் : வைகோ Aநான் ஊருக்கு போகிறேன் : வைகோ Sநான் ஊருக்கு போகிறேன் : வைகோ Uநான் ஊருக்கு போகிறேன் : வைகோ Dநான் ஊருக்கு போகிறேன் : வைகோ Hநான் ஊருக்கு போகிறேன் : வைகோ A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நான் ஊருக்கு போகிறேன் : வைகோ Empty Re: நான் ஊருக்கு போகிறேன் : வைகோ

Post by ரபீக் Tue Mar 22, 2011 1:49 pm

உதயசுதா wrote:
ரபீக் wrote:
உதயசுதா wrote:ஊருக்கு போங்க,அங்கேயே விவசாயம் செய்து பொழைச்சுகொங்க.
நீங்களும் உங்க கட்சியும்.சும்மா பாழா போனா வெட்டி வீராப்புக்காக கட்சி ஆரம்பிக்க வேண்டியது.அப்புறம் பாதிலயே எல்லாத்தையும் நிர்க்கதியா நிக்க வைக்க வேண்டியது.உங்களை மாதிரி தலைவர்களால் உங்களை நம்பி வரும் தொண்டர்கள் பாடுதான் திண்டாட்டம்

அதுக்காக அம்மா கொடுக்கும் எட்டு பிச்சை தொகுதிகளுக்காக அவர் அந்த அம்மா பின்னாடி ,,,,மாதிரி அலைய சொல்றீங்களா அக்கா ?
அம்மா கொடுக்கார தொகுதிகள் வேண்டாம்,அவர்கள் அந்தம்மாவிடம் கேட்ட தொகுதிகளிலாவது தனித்து போட்டி இடலாம் இல்லையா

காலம் கடந்த பிறகு எப்படி போட்டி இடுவார்கள் ? டப்பு வேணும் இல்லையா ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

நான் ஊருக்கு போகிறேன் : வைகோ Empty Re: நான் ஊருக்கு போகிறேன் : வைகோ

Post by கலைவேந்தன் Tue Mar 22, 2011 6:36 pm

பணம் இல்லைன்னா..? அப்ப ஜெயலிதா காசுல ஜெயிச்சுடலாம்னு இருந்தாரா..? என்ன அநியாயம் இது..? அநியாயம்



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

நான் ஊருக்கு போகிறேன் : வைகோ Empty Re: நான் ஊருக்கு போகிறேன் : வைகோ

Post by அசுரன் Wed Mar 23, 2011 12:13 am

இந்த இருக்கமான தேர்தல் சூழலில் நல்ல காமெடி பீஸாக நம்மை மகிழ்விக்கிறார் வைகோ
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நான் ஊருக்கு போகிறேன் : வைகோ Empty Re: நான் ஊருக்கு போகிறேன் : வைகோ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum