ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேச்சுவார்த்தையில் சிக்கல் தீர்ந்தது, கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஜெயலலிதா சந்திப்பு

2 posters

Go down

பேச்சுவார்த்தையில் சிக்கல் தீர்ந்தது, கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஜெயலலிதா சந்திப்பு Empty பேச்சுவார்த்தையில் சிக்கல் தீர்ந்தது, கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஜெயலலிதா சந்திப்பு

Post by சிவா Sat Mar 19, 2011 9:17 am


இந்திய கம்யூனிஸ்டு உள்பட 7 கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு உடன்பாடு


கூட்டணி கட்சி தலைவர்களை ஜெயலலிதா நேற்று சந்தித்துப் பேசினார். இதைத்தொடர்ந்து கூட்டணியில் உருவாகி இருந்த சிக்கல் தீர்ந்தது. இந்திய கம்யூனிஸ்டு உள்பட 7 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்குவதில் உடன்பாடு ஏற்பட்டது.

கட்சிகள் அதிர்ச்சி


நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுடன், தே.மு.தி.க., ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு உள்பட பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி ஏற்பட்டது. இதில், ம.தி.மு.க.வை தவிர, மற்ற அனைத்து கட்சிகளுடனும் தொகுதி பங்கீடு எண்ணிக்கையில் உடன்பாடு ஏற்பட்டது. ம.தி.மு.க.வுக்கு 8, 9 என்ற அளவில் மட்டுமே தொகுதிகள் தரமுடியும் என்று கோரப்பட்டதால், ம.தி.மு.க.வுடன் தொகுதி உடன்பாடு ஏற்படவில்லை. அடுத்தகட்டமாக மற்ற கட்சிகளுடன் எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது குறித்து முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது போக, மீதியுள்ள 160 தொகுதிகளுக்கு அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல், கடந்த 16-ந் தேதி இரவு திடீர் என்று வெளியிடப்பட்டது. இதில், கூட்டணி கட்சிகள் கேட்டிருந்த தொகுதிகளுக்கும், அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதால், கூட்டணி கட்சிகளுக்கிடையே அதிருப்தி ஏற்பட்டது.

3-வது அணி

இந்த நிலையில், கம்யூனிஸ்டு உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் நேற்று முன்தினம் விஜயகாந்தின் தே.மு.தி.க. அலுவலகத்தில் கூடி ஆலோசனை நடத்தினார்கள். இதில், அ.தி.மு.க. தலைமையுடன் பேசி முடிவெடுக்க ஒரு நாள் அவகாசம் எடுத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்தனர்.

இந்த ஆலோசனை கூட்டம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 3-வது அணி உருவாகலாம் என்றும் கூறப்பட்டது.

உடன்பாடு

இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளை சமரசம் செய்யும் பணிகள் தொடங்கியது. நேற்று காலையும் இந்த சமரச பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடந்தது. இதில் கூட்டணி கட்சிகளுடன் சுமூகமான உடன்பாடு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து நேற்று மாலை 5.30 மணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், டி.கே.ரெங்கராஜன் எம்.பி. ஆகியோர் போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டுக்கு வந்தனர். அவர்களைத்தொடர்ந்து கூட்டணி கட்சியினர் ஒவ்வொருவராக வரத்தொடங்கினார்கள். இரவு 7 மணிக்கு தே.மு.தி.க. அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், இளைஞர் அணி செயலாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் வந்தனர்.

இறுதியாக 7.35 மணிக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் தா.பாண்டியன், மத்திய கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் ஆர்.நல்லகண்ணு ஆகியோர் போயஸ்கார்டனுக்கு வந்தனர்.

கூட்டணி கட்சி தலைவர்களுடன் 5 மணி நேரத்துக்கும் மேலாக ஜெயலலிதா பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்திய கம்யூனிஸ்டு போட்டியிடும் தொகுதிகள்

போயஸ் கார்டனில் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து கொண்டிருந்த நிலையில், இரவு 10.30 மணிக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் தா.பாண்டியன் வெளியே வந்தார். பேச்சுவார்த்தை குறித்து நிருபர்கள் அவரிடம் கேட்டதற்கு, பேச்சுவார்த்தை தொடர்ந்து கொண்டிருப்பதாகவும், வேட்பாளர் பட்டியலை அ.தி.மு.க. தலைமை வெளியிடும் என்றும் அவர் பதில் அளித்தார்.

அ.தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், அக்கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி தொகுதி உடன்பாடு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் நேற்று இரவு 11 மணியளவில் வெளியிடப்பட்டன. தொகுதிகள் விவரம் வருமாறு:-

1. திருத்துறைப்பூண்டி (தனி), 2. சிவகங்கை, 3. தளி, 4. குடியாத்தம் (தனி) 5. பெண்ணாகரம், 6.புதுக்கோட்டை, 7. வால்பாறை (தனி), 8. பவானிசாகர் (தனி) 9. ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி), 10. குன்னூர்.

தா.பாண்டியனை தொடர்ந்து பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில தலைவர் கதிரவன் வெளியே வந்தார். அவர் தங்கள் கட்சிக்கு உசிலம்பட்டி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிருபர்களிடம் தெரிவித்தார்.

மேலும் 5 கட்சிகள்

அ.தி.மு.க. கூட்டணியில் மேலும் 5 கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதுகுறித்து அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-


அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் இல்லத்தில் நேற்று இரவு அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள, மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் எம்.எச். ஜவாஹிருல்லாஹ் மற்றும் நிர்வாகிகள், அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் ந.சேதுராமன் மற்றும் நிர்வாகிகள், இந்திய குடியரசு கட்சியின் தலைவர் டாக்டர் செ.கு.தமிழரசன் மற்றும் நிர்வாகிகள், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் நிறுவன அமைப்பாளர் உ.தனியரசு மற்றும் நிர்வாகிகள் தனித்தனியே நேரில் சந்தித்தனர்.

அப்போது, 13.4.2011 அன்று நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத்தேர்தலில், அ.தி.மு.க.வின் தலைமையிலான கூட்டணியில், மனிதநேய மக்கள் கட்சி சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, ஆம்பூர், ராமநாதபுரம் ஆகிய மூன்று தொகுதிகளில் போட்டியிடுவது என்று ஒப்பந்தம் ஏற்பட்டது.

அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் திருச்சுழி தொகுதியில் போட்டியிடுவது என்றும், இந்திய குடியரசு கட்சி கீழ்வைத்தியணான்குப்பம் (தனி) (கே.வி.குப்பம்) தொகுதியில் போட்டியிடுவது என்றும், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை பரமத்தி-வேலூர் தொகுதியில் போட்டியிடுவது என்றும், ச.ம. கட்சி தென்காசி, நாங்குநேரி ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுவது என்றும் ஒப்பந்தம் ஆனது.

இந்த நிகழ்ச்சியின்போது, அ.தி.மு.க. பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம், தலைமை நிலையச் செயலாளர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினதந்தி


பேச்சுவார்த்தையில் சிக்கல் தீர்ந்தது, கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஜெயலலிதா சந்திப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பேச்சுவார்த்தையில் சிக்கல் தீர்ந்தது, கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஜெயலலிதா சந்திப்பு Empty Re: பேச்சுவார்த்தையில் சிக்கல் தீர்ந்தது, கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஜெயலலிதா சந்திப்பு

Post by மஞ்சுபாஷிணி Sat Mar 19, 2011 10:53 am

நாட்டை கொள்ளையடிக்க மக்களை சுரண்ட எப்படி எல்லாம் தில்லாலங்கடி வேலை செய்ய ஆள் செலக்ட் பண்றாங்க பாருங்க....

செய்தி பகிர்வுக்கு அன்பு நன்றிகள் சிவா...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பேச்சுவார்த்தையில் சிக்கல் தீர்ந்தது, கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஜெயலலிதா சந்திப்பு 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum