ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

Top posting users this week
ayyasamy ram
அர்த்தமுள்ள இந்துமதம் - Page 9 Poll_c10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 9 Poll_m10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 9 Poll_c10 
heezulia
அர்த்தமுள்ள இந்துமதம் - Page 9 Poll_c10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 9 Poll_m10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 9 Poll_c10 
Abiraj_26
அர்த்தமுள்ள இந்துமதம் - Page 9 Poll_c10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 9 Poll_m10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 9 Poll_c10 
mini
அர்த்தமுள்ள இந்துமதம் - Page 9 Poll_c10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 9 Poll_m10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 9 Poll_c10 
mohamed nizamudeen
அர்த்தமுள்ள இந்துமதம் - Page 9 Poll_c10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 9 Poll_m10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 9 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

அர்த்தமுள்ள இந்துமதம்

4 posters

Page 9 of 15 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 15  Next

Go down

அர்த்தமுள்ள இந்துமதம் - Page 9 Empty அர்த்தமுள்ள இந்துமதம்

Post by Admin Sun Nov 02, 2008 11:36 am

First topic message reminder :

அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் I


1. உறவு


அர்த்தமுள்ள இந்துமதம் - Page 9 Kanari10

‘மனிதன் சமூக வாழ்க்கையை மேற்கொண்டு விட்ட ஒரு மிருகம்’ என்றார் ஓர் ஆங்கில அறிஞர்

காட்டு மிராண்டிகளாகச் சிதறிக்கிடந்த மனிதர்கள் குடிபெயர்ந்து ஊர்ந்து வந்து ஓரிடத்தில் சேர்ந்தார்கள். அதனால் அவர்கள் சேர்ந்து வாழ்ந்த இடம் ‘ஊர்’ என்று அழைகப்படது.
அதில் பலர் நகர்ந்து வந்து பெருங்கூட்டமாக ஓரிடத்தில் குடியேறினார்கள். அவ்விடம் ‘நகரம்’ என்றழைக்கப்பட்டது.

தனி மனிதர்கள் ‘சமூக’மாகி விட்டார்கள்.

தனி மனிதனுக்கான நியதிகளோடு சமுதாயத்திற்காகச் சில சம்பிரதாயங்களும் உருவாயின.

அந்தச் சம்பிரதாயங்களுள் சில புனிதமாக்க் கருதப்பட்டு தருமங்களாயின.

கணவன் - மனைவி உறவு, தாய்-தந்தை பிள்ளைகள் உறவு, தயாதிகள்- பங்காளிகள் உறவு, ஊர்ப்பொது நலத்துக்கான கூட்டுறவு முதலியவைகள் தோன்றின.

தந்தைவழித் தோன்றல்களெல்லாம் ‘பங்காளி’ களாவும், தந்தையுடன் பிறந்த சகோதரிகளெல்லாம் ‘தாயாதி’ களாகவும் ஒரு மரபு உருவாயிற்று.

வார்த்தைகளை கவனியுங்கள்.

தந்தைவழி பங்குடையவன் என்பதாலே ‘பங்காளிய யாகவும், தாயை ஆதியாக வைத்து விளைந்த சகோதரத்துவம் ‘தாயாதி’ என்றும் கூறப்பட்டது.

‘சகோதரன்’ என்ற வார்த்தையே ‘சக உதரன்- ஒரே வயிற்றில் பிறந்தவன்’ என்பதைக் குறிக்கும்.

சம்பிரதாயங்களாகத் தோன்றிய உறவுகள் மரபுகளாகி, அந்த மரபுகள் எழுதாத சட்டங்களாகிவிட்டன.

இந்த உறவுகளுக்குள்ளும், பொதுதவாகச் சமூகத்திலும் நிலவ வேண்டிய ஒழுக்கங்கள் சம்பிரதாயங்களாகி, மரபுகளாகி, அஐயும் சட்டங்களாகி விடன.
இந்தச் சட்டங்களே நமது சமூகத்தின் கௌரவங்கள்: இந்த வேலிகள் நம்மைக் காவல் செய்கின்றன.

இந்த உறவுகள், ஒழுக்கங்களுக்கும் நம்மதிக்குமாக உருவாக்கப்பட்டவை.
ஆனால் இவை மட்டும்தானா உறவுகள்?

இந்து மதம் அதற்கொரு விளக்கம் சொல்கிறது.

“பிறப்பால் தொடரும் உறவுகளல்லாமல், பிணைப்பால் தொடரும் உறவுகளே உன்னதமானவை என்பது இந்துமத்த்தத்துவம்

பிறப்பின் உறவுகளே பேதலிக்கின்றன.

பெற தந்தையைப் பிச்சைகு அலையவிடும் மகன் இருக்கின்றான்.
கட்டிய தாரத்தையும் பட்டின் போடும் கணவன் இருக்கின்றான்.

தாயைத் தவிக்கவிட்டுத் தாரத்தின் பிடியில் லயித்துக் கடக்கும் பிள்ளை இருக்கிறான்.

கூடப் பிறந்தவனே கோர்ட்டுப் படிக்கட்டுகளில் ஏறி எதிராக நிற்கிறான்.

சமூக மரபுகள் இவற்றை ஒழுக்க் கேடாக்க் கருதவில்லை.

முதலில் நமது சமூகங்களுக்கு, ‘இவையும் ஒழுக்க் கேடுகள்’ என்று போதித்தது இந்து மதம்.

கணிகை ஒருத்தியைக் கட்டிலில் போட்டு இரவு முழுவதும் விளையாடுகிறோம். இச்சை தீர்ந்ததும், அவளைத் தள்ளில் படு என்றுதான் சொல்லத் தோன்றுகிறதே தவிர, அங்கு நீக்கமுடியாத பிணைப்பு ஏற்படுவதில்லை.

அந்த உறவு இரவுக்கு மட்டுமே!
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down


அர்த்தமுள்ள இந்துமதம் - Page 9 Empty Re: அர்த்தமுள்ள இந்துமதம்

Post by Admin Sun Nov 02, 2008 1:46 pm

இரண்டாவது, பட்டுப்புடவை என்று வாங்குகிறார்களே தவிர அதனால் பாவம்நிறைய வருகிறது. பட்டுப்புடவனை, படு வேஷ்டி இவற்றால் எதனை ஜீவன்களுக்கு ஹிம்சை ஏற்படுகிறது? செலவு அதில் அபாரமாக ஆகிறது. அஹிம்சை அஹிம்சை என்று சொல்லிக்கொண்டு மாமிசமே சாப்பிடுவது இல்லை என்று நாம் சொல்லிக்கொள்கிறோம். ஆனால் கொஞ்சம் யோசித்துப் பார்த்தல், நமக்கு இந்தப் பட்டுப்புடவை, பட்டு வேஷ்டி இவற்றினால் வருகிற பாவம் மாமிசம் சாப்பிடுகிறவர்களுக்குக் கூட வராது. ஓர் ஆடோ இரண்டு ஆடோ அங்கே உயிரை இழக்கின்றன என்றால், இங்கே கணக்கு வழக்கு இல்லாத ஜீவன்களுக்கு ஹிம்சை ஏற்பட்டு வருகிறது. கூடிய வரைக்கும் நாம் உடுத்திக்கொள்கிற வஸ்திரம் ஹிம்சை இல்லாத வஸ்திரமாக இருக்க வேண்டும். கெட்டியான வஸ்திரமாகவும், சாதாரண ஜனங்கள் எல்லாம் உடுத்திக்கொள்ளும்படியானதாகவும் இருக்க வேண்டும்.

மக்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும் என்பதற்காக, அரசாங்கத்தார் அயேக திட்டங்களைப் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். நாட்டிலும் தரித்திரம் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டிருக்கிறது. வாழ்க்கைத்தரம் உயர்வது என்றால் ஒருவன் இரண்டு வேளை காப்பி சாப்பிடுவது, நான்கு வேளையாக வேண்டும்; இரண்டு வேஷ்டி வைத்துக்கொண்டிருப்பவன் இருபது வேஷ்டி வேஷ்டி வைத்துக் கொண்டிருப்பவன் இருபது வேஷ்டி வைத்துக்கொள்ளவ ஏண்டும் என்கிற அபிப்ராயம் வளர்ந்தால், அதுபெரிநய தப்பு. வாழ்க்கைத் தரம் உயர்வது என்று சொல்லிக்கொண்டு வாழ்க்கைத் தேவைகள் நாளுக்குநாள் மனுஷர்களுக்கு அதிகமாகிக் கொண்டே போனால், நாட்டில்தரித்திரந்தான் மிஞ்சும்.

மனுஷ்யர்களுக்கு மானம், உயிர் இரண்டையும் காப்பாற்றிக்கொள்ள மிகமிக அத்தியாவசியமானவை எவையோ அவை நாட்டில் உள்ள அத்தனை ஜனங்களுக்கும் கினைக்க வேணுட்ம். அதற்குத்தான் திட்ட ஒழுங்கு எல்லாம் வேண்டும். அப்படி வாழவேண்டுமானால், வசதி உள்ளவர்களை கூட, நாட்டில் இருக்கும்படியான பரம ஏழை எப்படி வசிக்கிறோனோ அப்படி வசிக்கப் பிரய்த்தனம் பண்ண வேண்டும். சௌகர்யம் இருக்கிறவர்களும்கூடத் தங்களிடம் பணம் இருக்கிறது என்று தேவைக்குமேல் அதிகமான வசதிகளைப்பெருக்கிக் கொள்ள முடியாமல் இருக்கவேண்டும்.

வசதி இருக்கிறது என்று இவர்கள் பண்ணுகிற காரியங்கள் எல்லாம், அபரிக்ரகம் என்பதற்கு விரோதம்தான். இந்த் தோஷம் வந்துவிட்டால் ஈசுவரானுக்ரகம் கிடையாது. மனுஷ்ய ஜன்ம்ம், பிரயோஊன் உள்ளதாக ஆக வேண்டுமானால், நமக்கு எவ்வளவு தேவையோ அதற்கு மேல் ஓர் இம்மிகூட விரும்பக்கூடாது. வசதி இருக்கிறது என்றல் அதைக்கொண்டு கஷ்டப்படுகிற இதர குடும்பங்களுக்கு - அந்தக் குறைச்சலான வசதியைக்கூடப் பெற முடியாதவர்களுக்கு - உதவி செய்வதுதான் புண்ணியம். இதுதான் அவனுக்கு மோஷத்தை அளிக்கும்.

இது தெரியாம், வசதி இருக்கிறவர்கள், தேவைக்குமேல் பட்டுப்புடவை, பட்டு வேஷ்டி என்கிற தோஷத்தை அதிகமாக இப்போது பண்ணிக்கொண்டிருக்கிறது, ஒரு பக்கம்; அந்தச்சமயம் இவர்களைப் பார்த்து வசதி இல்லாதவர்களும் கூட கடன் வாங்கியாவது அவற்றை வாங்க வேண்டும் என்று கடனாளியாகி அநேக உபத்திரவங்களுக்கு உள்ளாகி வருகிறார்கள்.

பட்டுப்புடவையைப் போலத்தான் வைர ஆபரணங்களி உள்ள ஆசை. இதில் போடுகிற பணம் வீண். ‘கந்யாம் கநக ஸம்பந்தாம்’ என்று பெண்ணைக் கொடுக்கும்போது ஸ்வர்ணம் கொடுப்பது என்கிற வழக்கம் இருந்திருக்கிறது. தங்கத்தில் போடுகிற பணமாது பிரயோஜனப்படுகிறது. வைரத்தில் பிரயோஜனம் இல்லை. உபத்திரவம் இருக்கிறது.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

அர்த்தமுள்ள இந்துமதம் - Page 9 Empty Re: அர்த்தமுள்ள இந்துமதம்

Post by Admin Sun Nov 02, 2008 1:47 pm

ஐம்பது வருஷங்களுக்கு முன்னால் எல்லாம் யர்ரும் காப்பி சாப்பிட்டது இல்லை. குடிசையில்தான் இருந்தார்கள். காதில் பனை ஓலை போட்டுக்கொண்டிருந்தார்கள். கேழ்வரகுக் கூழோ கஞ்சியோதான் சாப்பிட்டார்கள். ஏழைகளோ, பணக்கார்ர்களோ எல்லோரும் ஒரே மாதிரியாகத்தான் இருந்தார்கள். நாம் பட்டுத்துணி உடுப்பது இல்லை. காப்பி குடிப்பது இலை என்று சங்கல்பம் செய்துகொண்டு விட்டால் இப்போது ஒரு குடும்பத்துக்குச் செலவாகிறதைக் கொண்டு விட்டால் இப்போது ஒரு குடும்பத்துக்குச் செலவாகிறதைக்கொண்டு, ஐந்து குடும்பங்கக் வாழ முடியும். தேவையை எவ்வளவுக்கு எவ்வளவு அதிகப்படுத்திக் கொள்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு சாந்தி ஏற்படாது. சௌக்கியம் ஏற்படாது. தரித்திரம், துக்கம் எல்லாந்தான் உண்டாகும்.

பட்டுப் புடவையில் காசு போடவில்லை என்றால், எல்லாக் குடும்பங்ககளும் முன்னுக்கு வந்துவிடும். குடும்ப சௌகரியத்திற்காக மட்டும் சொல்லவில்லை. பட்டுப் புடவையினால் வருகிற பாவங்கள் நமக்கு இல்லை என்றால், மோக்ஷத்திற்குச் சிரமங்களே இல்லாமல் போகும். அஷ்தாங்க யோகத்தன்மதல் அங்கமே அஹிம்சை,அபரிக்ரகம் -இவை எல்லாம்தான். ஒருபிராணிக்குக் கூட நம்மால் ஹிம்சை உண்டாக்க் கூடாது. நம்முடைய தேவைக்கு மேல் ஒரு துரும்பைக்கூட, வசதி இருக்கிறது. பணம் இருக்கிறது. என்பதற்காக வாங்கிக்கொள்ளக்கூடாது. பணம் இருக்கிறது என்றால், இன்னும் சில குடும்பங்களுக்கு உதவி செய்யலாம். இப்படிச் செய்தால்தான் செய்வதற்குப் பிரயத்தனமவது செய்தால்தான் சீக்கிரத்திலே ப்ரம்ம சாட்சாத் காரத்தைப் பெற முடியும். அஷ்டாங்க யோகத்தின் முதல் படியே இதுதான். முதல் படியை மிதிக்காமல் மேல்படிக்குப் போக முடியாது. என்பதற்காக இதைச் சொன்னேன்.


20. குட்டித் தேவதைகள்



இந்து மத்த்தின் பேரால் தமிழகத்தின் பட்டிதொட்டிகளிலெல்லாம் ஏராளமான சிறு தேவதைக்கோயில்கள் இருக்கின்றன.

இந்தியாவின் பிற மாநிலங்களிலும் இத்தகைய கோவில்கள் இருந்தாலும், தமிழகத்தில் உள்ளதுபோல் எலாக் கிராமங்களிலும் இருக்கவில்லை.

ரோமானிய நாகரிகத்திலும் ஒரு காலத்தில் இத்தகைய சிறு தேவதை நம்பிக்கை இருந்தது.

மழைத்தேவதை, காதல் தேவதை என்று பல தேவதைகள் வணங்கப்படன.

அந்தக் காலத்தில் கிறிஸ்தவர்களிடையேயும் இந்த நம்பிக்கை இருந்ததாகத் தெரிகிறது.

கிரேக்க நாகரிகத்தில் இத்தகையதேவதைகள் வணக்கம் பெருமளவில் இருந்தது.

ஆனால், அவையனைத்த்மு மூல தெய்வத்தின் கிளைகளாகவும், தூதுவர்களாகவுமே வருணிக்கப்பட்டிருந்தன.

‘ஊருக்கொரு தேவதை’ என்ற நிலையில், இந்து சமயத்தைத் தவிர , வேற் எந்தச் சமயமும் சிறுதேவதை நம்பிக்கை கொண்டதில்லை.

இந்தச்சிறு தேவதைகள் எப்படித்தோன்றின?
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

அர்த்தமுள்ள இந்துமதம் - Page 9 Empty Re: அர்த்தமுள்ள இந்துமதம்

Post by Admin Sun Nov 02, 2008 1:48 pm

இவையொன்றும் மூட நம்பிக்கையில் எழுந்தவை அல்ல.

“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்”

என்றபடி ஆங்காங்கு வாழ்வாங்கு வாழ்ந்த பலர், தேவதைகளாக்க் கருதப்பட்டனர்.
முத்தன், முனியப்பன், காடன், மதுரை வீரன் என்பன போன்ற ஆண் தெய்வங்களும்;

ஆலையம்மன், எல்லையம்மன், படவேட்டம்மன் போன்ற பெண் தேவதைகளும், ஏதோ ஒரு காலத்தில் வாழ்ந்து மடிந்தவர்களாக இருக்க வேண்டும்.

‘கற்பரசி கண்ணகிக்குச் சேரன் செங்குட்டுவன் கோவில் கட்டினான்’ என்ற செய்தியிலிருந்தே, கற்புடைய பெண்களுக்கு அந்தக் கற்பினால் ஊராரிடையேயும், தன் சுற்றத்திடையேயும் பெருமை பெற்ற பெண்களுக்குக் கோவில் எழுப்புவது, இந்துக்களின் வழக்கமாய் இருந்திருக்கிறது என்பதை அறிய முடியும்.

கற்பு, ‘அறம், மறம்’ என் இருவகையாகப் பிரிக்கப்படும்.
கணவன் கொல்லப்பட்டான் என்ற செய்தி அறிந்து பொங்கி எழுந்து, மதுரையை எரித்த கண்ணகியின் கற்பு- மறக்கற்பு.

கணவன் இறந்தான் என்ற சஞெய்தியை அறிந்தவடுனேயே தானும் இறந்த கோப்பெருந்தேவியின் கற்பு - அறக்கற்பு.

இந்த அறம்- மறம் இரண்டையுமே தெய்வமாக்க் கருதி இருக்கிறார்கள்.

மறக் கற்புடைய பெண்களே, ருத்ர தேவதைகளாக்க் காட்சியளிக்கிறார்கள்!

காளி, மாரி போன்ற ருத்ர தேவதைகள் இவ்வழி நம்பிக்கையில் எழுந்தவையே!

அமைதியான அம்மன்கள் அறவழிக் கற்பில் எழுந்தவையே! அதுபோல் ஆண் தெய்வங்களிலும் கோபத் தெய்வங்களாக்க் காட்சியளிப்போர், வீர்ர்களாக வாழ்ந்திருக்க வேண்டும்.

ஒருவேளை, பயங்கரமான குணம் படைத்தவர் களாகவும் வாழ்ந்திருக்கலாம்.

அவர்களது ஆவியை அமைதிப்படுத்துவதற்கே பலி கொடுக்கும் பழக்கமும் வந்திருக்கலாம்.

பெண் தேவதைகளிலம் சில ருத்ர தேவதைகள் பயங்கரமான குணம் படைத்தவர்களாக இருந்டது வாழ்ந்து, சாந்தி இல்லாமல் இறந்து போனவர்களாக இருக்கலாம்.

அவர்களையும் அமைதிப்படுத்தவே பலி கொடுக்கும் பழக்கம் வந்திருக்கலாம்.

கையிலோ இடையிலோ வாளுடன் கூடிய பயங்கரமான உருவம் படைத்த ஒரு வீரனின் சிலை, சுற்றிலும் இருபது முப்பது மண் குதிரைகள்!

ஒவ்வோர் இடத்திலும் ஒவ்வொரு சிலைக்கும் வேறு வேறு பெயரிருக்கிறது.

ஒரே பெயரைக் கொண்ட பல சிலைகளும் உண்டு.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

அர்த்தமுள்ள இந்துமதம் - Page 9 Empty Re: அர்த்தமுள்ள இந்துமதம்

Post by Admin Sun Nov 02, 2008 1:48 pm

அவரவர்களுடைய சுற்றத்தினர், ங்கள் குலத்தில் வாழ்ந்த ஒருவனுக்கோ ஒருத்திக்கோ எழுப்பிய இந்தச் சிறு ஆலயங்கள், நாளடைவில் ஊராரின் நம்பிக்கைக்கு உரியனவாகி, தெய்வங்களாகி இருக்க வேண்டும்.

இந்தக் குட்டித் தேவதைகளை வணங்கும் எண்ணம் ஏன் வந்தது?

‘மரணத்திற்குப் பிறகு ஆலவி உலாவுகிறது’ என்ற நம்பிக்கையிலேயே இது எழுந்தது.

அந்த ஆவியைச்சாந்தப்படுத்தினால், தங்கள் குடும்பத்திற்கு அது உதவும் என்று இந்துக்கள் நம்பினார்கள்.

இன்றைக்கும், இறந்து போனவருக்கு அனுதாபம் தெரிவிக்கும்போது, ‘அவர் ஆத்மா சாந்தி அடைக!’ என்று குறிப்பிடுகிறோம் அல்லவா!

இறந்துபோன தங்கள் மூதாதையுரக்குப் படையலிடும் பழக்கம், இன்னும் இந்துக்களிடையே இருப்பதை நாம் பார்க்கிறோம்.

எங்கள் குடும்பங்களில், ஒவ்வொரு திருமணத்திலும் மாப்பிள்ளை அழைப்பிற்குப் பிறகு, முதல்நாள், மூதாதையர்படைப்பு நடைபெறுகிறது.

அவர்கள் கட்டியிருந்த வேட்டிகளும், சேலைகளும் பத்திரமாகப்பாதுகாக்கப்பட்டு , ஓர் ஓலைப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்தன.

ஒவ்வொரு திருமணத்திற்கு முன்பும், அவற்றைத் துவைத்துக் காயப்போட்டு மடித்து, பழையபடியும் ஓலைப் பெட்டியில் வைத்து, பக்கத்தில் இரண்டு குத்து விளக்குகளை ஏற்றிவைத்து, படைப்பு நடத்துகிறார்கள்.

சில வீடுகளில், கோடி ஆடைகளை வைத்து நடத்துவதும் உண்டு.

படைப்பு, பெரும்பாலும் கோழி இறைச்சியும் முட்டையும் கலந்ததாக இருக்கும்.

ஏதாவது பலி கொடுத்துச் சாந்தி செய்ய வேண்டும் என்ற நம்பிக்கையில் எழுந்ததே அது.

கிராமங்களில் தேவதைக் கோவில்கள் பலவற்றில், சிலை உருவம் ஏதுமில்லாமல் ஒரு சாமாதி மேடு மட்டுமே இருப்பதை நான் பார்த்திருக்கிறேன்.

அது ந்தத் தேவதை வாழ்ந்து மடிந்த ஒரு பெண் என்பதை வலுப்படுத்துகிறது.

இராமநாதபுரம் ஜில்லா திருப்பத்துஊர் தாலுக்காவில் நான் பிறந்த ஊர் சிறுகூடற்பட்டி என்ற கிராம்மாகும்.

அங்கே ‘மலைஅரசி’ ‘அழகியதேவி நாச்சியார்’ என்று இரண்டு தேவதைகள் உண்டு.

மலையரசியின் கோவில் ஒருசிறய குடியை; அவ்வளவுதான்.

உள்ளே சிலை கிடையாது. ஒரு சமாதி மேடு மட்டுமே உண்டு.

அழகிய தேவியின் கோவில் சுண்ணாம்புச் சுவரால் ஆனதுதான் என்றாலும், ஒரு தேவதைக் கோவில் என்ற அளவில், சிறியதாகவே இருக்கின்றது.

இந்த தேவதைகளை ‘நாச்சியார்’ என்ற பட்டப் பெயரோடு அழைக்கிறார்கள்.

‘நாச்சியார்’ என்ற பட்டம் முக்குலத்து ராணி களுக்குரிய பட்டமாகும்.

‘தேவி’ய என்ற பொருள் தருவது அந்தப் பட்டன்.

பெரும்பாலும், பாண்டிய நாட்டில் ராமநாதபுரம் ஜில்லாவில் மட்டுமே, இந்தப் பட்டப்பெயர் அதிகம்.

முக்குலத்துத் தாய்மார்கள், மற்ற ஜாதிப் பெண்களை வாழ்த்தும்போது, “நாச்சியார் நல்லா இருக்கணும்!”- என்று வாழ்த்துவார்கள்.

பல இடங்களில் ‘நாச்சியார் கோவில்கள்’ என்ற கோவில்கள் உண்டு. .’நாச்சியம்மை’ ன்ற பெயர்லள் அதனடியகத் தோன்றியவையே.

ஆகவே, இராமநாதபுரம் ஜில்லாவிலுள்ள அம்மன்களில் பல , முக்குலத்து வீரப் பெண்மணிகளாக இருந்திருக்க வேண்டும்.

‘எங்களூர் மலையரசி நாச்சியாரோடும், அழகிய தேவி நாச்சியாரோடும் கூடப்பிறந்த பெண்கள் ஐந்து பேரென்றுத், அவர்க் எழுவரும் தேவதைகள்ய என்றும் கூறுகிறார்கள்.

பக்கத்துப் பக்கத்து ஊர்களில் ஒவ்வொரு தேவதைக்கும் கோவில் இருக்கிறது.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

அர்த்தமுள்ள இந்துமதம் - Page 9 Empty Re: அர்த்தமுள்ள இந்துமதம்

Post by Admin Sun Nov 02, 2008 1:49 pm

எல்லாத் தேவதைகளின் பெயர்களும் அழகான தமிழ்ப் பெயர்கள்.

ஆகவே, ‘சிறு தேவதை வணக்கம். ஆவி, நம்பிக்கையில் எழுந்ததே’ என்று திட்டமாக்க் கொள்ளலாம்.

நான் ‘சிவகங்ககைச்சீமை’ படம் எடுத்துக்கொண்டிருந்தபோது அது பறிய விவரங்களைச்சேகரிப்பதற்காக சிவகங்களைப் பகுதிக்கும் போயிருந்தேன்.

அங்கே ‘நரிக்குடி’ என்ற ஊர்!

இருபது வீடுகளே இருக்கும் அந்த ஊரில் ஒரு பழங்ககாலக் கல் சத்திரம்.

‘யாத்ரீகர்களுக்கு இரவு பகலாக உணவு பரிமாறிய இடம் அது’ என்று சொல்லுவார்கள்.

மருதுபாண்டியர் ஆட்சிக்காலத்தில், அந்தச் சத்திரத்தில் ஓர் இளம் பெண்ணும் அவள் கணவனும் வந்து தங்கியிருந்தார்களாம்.

இரவு நேரத்தல், அவள் கணவனைச் சில பேர் கூட்டிக்கொண்டு போய்க் கொலை செய்து பக்கத்தில் இருக்கும் கண்மாய்க்குள் போட்டுக் கல்லை வைத்துவிட்டார்கள்.

அவன் வளர்த்த நாய்க்குட்டி ரத்தக்கறையோடு ஓடிப்போய், அவன் தலைவியின் சேலையைக் கவ்விக் கூட்டி வந்து சடலத்தைக் காட்டிற்றாம்.

அவள் அழுது புலம்ப, ஊரெல்லாம் கூடி மருது பாண்டியனுக்கு செய்தி அனுப்பினார்களாம்.

மருதுபாண்டியர் வருகிற நேரத்தில், அந்தப் பெண் கணவனோடு உடன்கட்டை ஏறுவதற்குத் தயாராக இருந்தானாம்.

மருதுபாண்டியர் எவ்வளவோ தடுத்தும் கேளாமல், தான் கட்டியிருந்த சேலை, கழுத்தில்போட்டிருந்த கருமணி, கைகளில் போட்டிருந்த வளையல்கள் அனைத்தையும் கழற்றி வைத்துவிட்டு, வெள்ளைச் சேலையைக் கட்டிக்கொண்டு, உடன்கட்டை ஏறிவிட்டாளாம்.

அவள் அணிந்திருந்த ஆடைமணிகளை ஓர் ஓலைப்பெட்டியில் வைத்து, மருதுபாண்டியர் வம்சா வழியில் ஒருகுடும்பத்தினர், பல தலைமுறையாகப் பூஜித்து வருகிறார்கள்.

மருதுபாண்டியானது ஆண் வாரிசுகள் அனைவரையும் வெள்ளைக்கார்ர்கள் கொன்று விட்டதால், பெண் வாரிசுகளே பாதுகாத்து வருகிறார்கள்.

175 ஆண்டுகளாக ஒரே பரண்மீது போடப்பட்ட காய்ந்த மாலைகளைப் பார்த்தோம்.

அவர்களைக் கெஞ்சிக் கேட்டு முதன்முறையாக அந்தப் பெட்டியைக் கீழே இறக்கிக் காட்டச் சொன்னோம்.

அது பழங்காலத்து ஓலைப்பெட்டி. ஆதலால் தொட்ட இடம் மட்டும் கையோடு வந்து கொண்டிருந்தது.

பிறகு, அப்புறமாகப் பலகைக் கொடுது இறக்கிய பார்த்தோம்.

அந்தச் சேலையையும், கருகமணியையும் பார்த்தபோது நான் கண்ணீர்விட்டு அழுதுவிட்டேன்.

அதைப்பார்த்துக் கொண்டிருந்த முக்குலத்து மூதாட்டி, பாட்டில் மூலமே அவ்வளவு விஷயங்களையும் சொன்னாள்.

(பாண்டிய நாட்டுப் பெண்களுக்கப் பாடல் என்பது உடப்போடு பிறந்தது)

இன்றைக்கும் குட்டித் தேவதைகள் மிக அதிகமாக உள்ள நாடு பாண்டிய நாடுதான்.

ஆகவே இந்துக்களின் ஆவி நம்பிக்கை அழிக முடியாத நம்பிக்கை என்பது புலனாகிறது.

இன்றும், ஆவிகள் பற்றிய பல்வேறு செய்திகளை நாம் பத்திரிகைகளில் பார்க்கிறோம்.

அதில் எனக்கு ஒரே ஆசை.

தமிழகம் முழுவதிலும் உள்ள குட்டித் தேவதைகள் பற்றிய விவரங்களை யாராவது சேகரிக்க வேண்டும்.

அந்தத் தேவதைகள், பறிய கர்ண பரம்பரைச் செய்திகளையும் விசாரித்து எழுத வேண்டும்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

அர்த்தமுள்ள இந்துமதம் - Page 9 Empty Re: அர்த்தமுள்ள இந்துமதம்

Post by Admin Sun Nov 02, 2008 1:50 pm

அப்படி முழுமையான விபரங்களுடன் கூடிய ஒரு நூலை யாராவது முயன்று ஊர் ஊராகப் போய் அதையே வேலையாக வைத்துக்கொண்டு எழுதுவாரானால், அந்த நூலுக்கு ஒரு நல்ல சன்மானம் தரவும், அதை என் நண்பர்கள் மூலம் வெளியிடவும் நான்தயாராக இருக்கிறேன்.


21. உலவும் ஆவிகள்



இறந்து போனவர்ளுடைய ஆவிகள் தங்கள் குடும்பத்தினரைக் கண்காணிக்கின்றன என்பதற்கு, மறுக்க முடியாத ஆதாரங்கள் கிடைக்கின்றன.

ஆவி உலகில் உலவுகிற சிலர், தங்களுக்குப் பிரயமானவர்களின் உடலில் புகுந்து கொண்டு, அவர்களையே மீடியமாக வைத்து, மறவர்களோடு பேசுகிறார்கள் என்பதும் உண்மை.

அண்மையில் தினமணி கதிர் பத்திரிகையில் காங்கிரஸ் பிரமுகர் திரு. பி.ஜி. கருத்திமன் அவர்கள், இதுபற்றி இரண்டொரு கட்டுரைகள் எழுதியிருந்தார்கள்.

இறந்து போனவர்களுடைய ஆவி தங்களுக்குப் பிரியமானவர்கள் உடலில் புகந்து பேசுவதும் உண்டு. வேறு உடல்களை மீடியமாக்க்கொண்டு பேசுவதும் உண்டு.

எனக்கே இதில் அனுபவம் உண்டு.

1941 - ஆம் ஆண்டு என் உடன் பிறந்த நாலாவது சகோதரி இறந்து போனார்.

அவருக்கு இரண்டு பெண்களும், ஒரு பையனும் உண்டு.

அந்தப் பெண்களில் மூத்த பெண்மீது, என் சகோதரியின் ஆவி வந்து பேசுவது உண்டு.

ஏதாவது முக்கியமான பிரச்சினைகளைப் பற்றியப் பேசிக்கொண்டிருக்கும்போது என் சகோதரியின் ஆவி தன் மகள் உடம்பில் வந்து பேசும்.

அந்தப் பெண்ணுக்கு நான் மாமன்!

சாதாரண நேரங்களில் ‘மாமா’ என்றழைக்கின்ற அந்தப் பெண், ஆவி வந்து அழைக்கும்போது, ‘தம்பி’ என்றழைக்கும்.

மற்ற உறவினரையும், என் சகோதரி எப்படி அழைப்பாரோ, அப்படியே அழைக்கும்.

மேலும், குரலும் என் சகோதரியின் குரலாகவே இருக்கும்.

இதைநான் பலமுறை கண்டிருக்கிறேன்.

ஆவி வந்து சொன்ன விஷயங்களெல்லாம் நடந்திருக்கின்றன.

இறந்து போனவர்களுக்குப் பிரியமானபதார்த்தங்களை செய்து நாம் படையல் நடத்துகிறோம் அல்லவா? அந்தப் பதார்த்தங்களை ஆவிகள் உண்ணுகின்றன என்பது ஐதீகம்!

தர்க்கத்திற்கு இது நிற்க முடியாது. என்று வாதிடுவோரும் உண்டு.

ஆனால் இறந்து போனவர்களுடைய ஆவி பற்றிய பல சம்பங்களைத் தம் வாழ்யாளிலேயே கண்டிருக்கிறார் மதுரை ஆதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞான சம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள்.

அவர் கூறியுள்ள சில அனுபவங்களை அப்படியே இங்கு எடுத்துக்கொடுப்பது வாசகர்களைச் சிந்திக்க வைக்கும்.

அவர் சொல்லியுள்ள பல விஷயங்களில் சிலவற்றை மட்டுமே நான் இங்கே தருகிறேன்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

அர்த்தமுள்ள இந்துமதம் - Page 9 Empty Re: அர்த்தமுள்ள இந்துமதம்

Post by Admin Sun Nov 02, 2008 1:55 pm

1


இறந்தவர்கள் மீடியமாக இருப்பவர்களுக்குத் தெரியாத பாஷையில் அறிவித்தல்:

தூத்துக்குடியில் வருமான வரி ஆபீசராக இருந்த ஓர் இஸ்லாமியர்,இறந்தவர்களோடு பேசுவதன் உண்மையை அறிய வேண்டும் என்று, எமது தம்பியார் வீட்டிற்கு வந்து இருந்தார். அவர் தாமும் பேசிப் பாக்க வேண்டும்ந ஆனால் தமிழைத் தாய் பாஷையாக்க் கொண்ட மூடியம் மூலம், அந்த மீடியத்திற்குக் கொஞ்சமும் பழக்கமில்லாத பாஷையாகவும் தமது தாய் பாஷயாகவும் இருக்கும் உருது பாஷையில் கேள்விக்கேட்டு பதிலும் உருது பாஷையில் வந்தால்தான், அது மீடியத்தில் ஏற்பட்ட பதில் அல, இறந்தவருடைய வாக்கே ன்று உறுதியாக் கூற முடியுமென்று சொன்னார். “தம்பியார் யாரும் இவ்வாறு இதுவரை யோசித்துப் பார்க்கவில்லை; ஆபிஸர் சொல்வது சரியான சோதனையோ சோதித்துப் பார்ப்போமே” என்றுபார்த்தார். ‘உருது’ ஒரு வார்த்தையும் தெரிஆத பிராமணச் சிறுவன் மீடியாமாக இருக்க, அவன் மூலம் உருது பாஷையில்பதில் வரவே ஆபிஞரும் மற்றவர்களும் திகைத்துப் போனார்கள்.மேற்கொண்டு பேசவேண்டும் என்று ஆபிசரும் விரும்பவே ஆவி உலகத்திலிருந்து அவருடைய கொழுந்தியாள், ‘இப்பொழுது மேற்கொண்டு பேசவேண்டாம்; இங்கு பேசுகின்ற முறையிலேயே வீட்டில் வைத்துப் பேசுங்கள்; வீட்டில் இருக்கும் மகள் மீடியமாக இருக்கிறாள்’ என்உ அறிவித்து விட்டாள். அதன்படி அவர்க வீட்டில் வைத்துப் பேசவும், அதன் உதவியைப் பிறருக்கு எடுத்துச் சொல்லவும் ஆரம்பித்துவிட்டார் ஆனதால் நல்ல சக்தி வாய்ந்த மீடியமாக இருந்தால், மீடியத்திற்கு தெரியாத பாஷைகளிலும் பேச்சு நிகழ்த்தலாமென்பதும், அதில் மீடியத்தினுடைய அறிவின் விளக்கமோ மீடியம் கள்ளத்தனமாக வேண்டுமென்ற தன்னுடைய கருத்தை போலித்தனமோ, ஓர் அணுவளவும் கல்ல முடியாதென்பதும் பெறப்படுகின்றதல்லவா?
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

அர்த்தமுள்ள இந்துமதம் - Page 9 Empty Re: அர்த்தமுள்ள இந்துமதம்

Post by Admin Sun Nov 02, 2008 1:55 pm

2


மறதியாகப் பணம் வைக்கப்பட்ட இடத்தை இறந்தவர் அறிவித்தல்:

ஆவி உலகத்திலிருந்து அறிவித்தபடியே அந்த வருமானவரி அதிகாரி தன்னுடைய வீட்டில் உருது பாஷையில் தன்னுடைய சொந்த மகளை மீடியமாக வைத்துப் பேசியதில், அவருடைய மனைவியின் தங்கை ஆவியுலகத்திலிருந்து பல அரிய விஷயங்களை அறிவித்ததாகத் தெரிவித்தார். அவற்றுள் ஒன்று மட்டும் இங்கு குறிப்பிடுகின்றோம். ஒரு நாள் அவருடைய சட்டைப்பையில் போட்டு வைத்திருந்த ஒரு ரூபாயைக் காணாத காரணத்தால், அவர் தம்முடைய வேலைக்காரன் திருடியிருக்கலாம் என்று கருதி அவனைக் கடுமையாக்க்கோபித்து அடித்துவிட்டார். மறுமுறை ஆவி உலகத்திலிருந்ததன்னுடைய கொழுந்தியாளோடுபேசியது காணாமற் போன ரூபாயைக் குறித்து அவர் ஒன்றும் பேசியதாகவும், அந்த ரூபாய் மேல் பையில் இருப்பதாகவும், அவரே ஞாபக்க்குறைவாக அதில் போட்டிருக்க, கீழ்ப்பையில் போட்டதாக எண்ணிக்கொண்டதாகவும், அந்த வேலைக்காரனைப் பேசியதும் அடித்ததும் பாவமான காரியமென்றும், அந்தப் பாவத்தைப்போக்குவதற்கு அவனிடம் உணைமையைச் சொல்லி, அவனுக்கு ஒரு ரூபாய் வெகுமதி கொடுக்க வேண்டும் என்று அறிவித்ததாகவும், அவர் அந்தப்படியே நடந்து கொண்டதாகவும், அதிலிருந்து ஆவி உலகத்தில் புண்ணியப் பகுதியிலுள்ள சுற்றத்தார் தாங்கள் இருந்த வீட்டில் ஏதாவது விபரீதமான காரியங்கள் நடந்தால், அதை எவ்வளவு கருத்தோடு கவனித்து வருகிறார்கள் என்பதையும் அவர் உணர்ந்த கொள்ள முடிந்ததாகவும் அறிவித்தார்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

அர்த்தமுள்ள இந்துமதம் - Page 9 Empty Re: அர்த்தமுள்ள இந்துமதம்

Post by Admin Sun Nov 02, 2008 1:56 pm

3


இறந்த இஸ்லாமியர் தானாகவே வலிய வந்து தன் மகனது வியாகூலத்தைநீக்கல்:


ஈரோடு மார்க்கத்தில் கரூருக்குச் சமீபமாயுள புகழூரிலே ஒரு நாள் இரவு 1 மணிக்கு இறந்துபோன சுற்றத்தாருடன் பேசிக்கொண்டிருக்கையில் ஆவி உலகத்திலிருந்த ஓர் இஸ்லாமியர் வந்து தாம் அவ்வூரிலுள்ள (போஸ்ட் மாஸ்டர்0 தபால் அதிகாரியினுடைய தகப்பனார் என்றும், தம்முடைய மகன்தூக்கம் வராமல் விழித்துக் கொண்டு படுக்கையில் உட்கார்ந்து கொண்டு இருப்பதாகவும், அவன் அவனுடையமனைவியின் உடல் நிலை விஈயமாகவும் அவளூடைய பிள்ளைப் பேறு விஷயமாகவும் நினைத்துக் கொண்டே இருப்பதாகவும், அவனைத்தயவு செய்து கூட்டிக் கொண்டு வந்து தம்மோடு பேச வைக்க வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டாராம்.இரவில் 1 மணிக்கு அவரை அவ்விதம் கூப்பிடுவது சரியல்லவே என்று கேட்டபொழுது, “அவன் தூங்கிக்கொண்டிருப்பானானால் எழுப்பக்கூடாதுதான். ஆனால் விழித்துக்கொண்டிருக்கும்பொழுது தெருவாயில் கதவை லேசாகத் தட்டினாலே அவன் வந்து திறந்து விடுவான்; அதைப்பற்றி யாதும் யோசிக்க வேண்டாம். அந்த உதவியைச் செய்து தரவேண்டும்” என்று வேண்டிக்கொண்டார். அதன்படி ஒரு வேலைக்காரனை அனுப்பி, ‘அவருடைய வீட்டுக் கதவைத் தட்டிப் பார்; விழித்திருந்து உடனே கதவண்டை யாரென்று கேட்டால், விவரம் சொல்லிக் கூட்டி வா; அல்லவிடில் வந்துவிடு’ என்று அறிவித்திருந்தோம். அவனும் (போஸ்ட் மாஸ்டர்) தபால் அதிகாரி வீட்டிற்கு சன்று லேசாக்க் கதவைத் தட்ட, அவர் எழுந்து வந்து யாரென்று கேட்டு வ்வரம் அறிந்து, தகப்பனாரிடம் பேச வந்து விட்டார். நாங்கள் இறந்தவர்களோடு பேசும் வழக்கமுள்ளவர்கள் என்பது மாத்திரம் அவருக்கு முன்னமேயே தெரியும். ஆவி உலகத்திலுள்ள தந்தையார் தமது மகனிடம், ‘கவலைப்பட வேண்டாம், மனைவிக்குச் சுகமான பிரசவம் நடைபெறும் ; பிறக்கப்போவது ஆண்குழந்தை’என்று சொல்லி, குடும்ப சம்பந்தமாக எலா நலங்களும் உண்டாவதற்கு மேலுலகத்தில் தாமும் ஆண்டவனிடம் பிரார்த்தித்து வருவதாகவும், வேறு சில இடையூறுகளை வரவொட்டாமல் தாம் தடுத்து விட்டதாகவும் சொல்லி, மகனை உற்சாகப்படுத்திஅனுப்பிவிட்டார்.

பின்னர், அதன்படியே மனைவிக்குச் சுக பிரசவன் நடந்து ஆண் மகவு பெற்றெடுத்தாள் என்பதை அறிவோம்.

இதிலிருந்து ஆவி உலகத்திலுள்ளவர்கள், நாம் நினைத்த மாத்திரத்தில் அந்த இடத்திற்கு வந்து நம்முடைய நிலைகளை நன்றாக அறிய முடிகிறதென்பதை உணருகிறோம். இதனை உபமானமாக்க் கொண்டுவிட்டால் சர்வ வல்லமையுள்ள ஆண்டவன், நாம் நினைப்பதையும் பேசுவதையும் சொல்வதையும் அறிந்து கொண்டும் கேட்டுக்கொண்டும் பார்த்துக்கொண்டும் இருக்க முடியும் என்பதை யாவரும் உய்த்து உணர்ந்து கொள்ள முடியும் அல்லவா?
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

அர்த்தமுள்ள இந்துமதம் - Page 9 Empty Re: அர்த்தமுள்ள இந்துமதம்

Post by Admin Sun Nov 02, 2008 1:57 pm

4


இறந்தவர் தம் தம்பியிடம் தனது மகனுடைய அந்தரங்கச் செயல்களை அறிவித்து மணம்முடிக்கச் செய்தல்:

ஒருநாள் மதுரைக்கு வந்திருந்த நாட்டுக்கோட்டைச் செட்டியார் ஒருவர், அம்மைய நாயக்கனூருக்குத்தம்முடைய சொந்த மோட்டார் காரில் வந்து, காலம் சென்ற தம்தந்தையாருடன் பேசிப் பார்க்க வேண்டுமென்று விரும்பினார். அதன்படியே அவர் தம் தந்தையாருடன் பேசிக் கொண்டிருக்கும்பொழுது தந்தையார் தம்முடன் ஆவி உலகத்தில் இருந்த மூத்த மகன் (மதுரையிலிருந்து வந்திருந்த செட்டியாருடைய காலஞ்சென்ற தமையன்) தம்பியுடன் வந்திருப்பதாக அறிவித்தார்.அந்த அண்ணாவைப்பேச்ச் சொன்னபொழுது அவர், தம்முடைய மகன் காட்டுப் புத்தூரில் படித்துக் கொண்டிருப்பது போதுமென்றும், அவனைப் பற்றி அவ்வூரில் சில புகார்கள் வருகின்றனவென்றும், அவனும் இன்னொரு வயது வந்த பெண்ணும் காதல் கடிதங்கள் வரைந்து கொண்டிருக்கிறார்களென்றும், காரியம் முற்றிவிடுவதன் முன், அவனை ஊருக்குக் கூட்டிக்கொண்டு போய், வேற் பெண் பார்த்துக் கல்யாணம் செய்து வைத்துவிட வேண்டுமென்றும், அம்மைய நாயக்கனூருக்குக் கொண்டு வந்திருக்கிற காரிலேயே, நேராக்க் காட்டுப்புத்தூருக்குப் போய் அங்குள்ள தம் மகனைக்கூட்டிக் கொண்டு வந்துவிட வேண்டுமென்றும் தெரிவித்தார்.

பேச வந்த செட்டியாருக்கு ஒன்றும் புலப்பட வில்லை. தாம் மதுரையில் அநேகரைக் காக்க வைத்து விட்டு, இரவு திரும்பி வந்துவிடுவதாக அம்மையநாயக்கனூருக்கு வந்ததாகவும், ஆனதால் நேரே மதுரைக்குத் திரும்பிப் போய் அங்குள்ள காரியங்களைப் பார்த்துவிட்டு, மறுநாள் காட்டுப்புத்தூர போவதாகவும் பதில் அறிவித்தார்.

ஆவி உலகத்திலிருந்து பேசிய தமையனும், மதுரைக் காரியத்தைப் பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்றும், காட்டுப்புத்தூர் காரியம் மிகவும் அவசரமானது என்றும், மதுரைக்குத் தந்தியைக் கொடுத்துவிட்டு, நேரே காட்டுப் புத்ததூருகுச் சென்று, தன்னுடைய மகன் விஷயத்தைக் கொஞ்சமும் தாமதியாமல் கவனித்து ஆவன செய்துவிட்டுத்தான் மறுவேலை பார்க்க வேண்டுமென்றும் திரும்பத் திரும்பச் சொன்னார். அதைப்பற்றித்தன் தந்தையாரிடம் செட்டியார் கேட்டபொழுது அவரும் அது மிகவும் அவசரமான காரியம்தான் என்று சொல்லவே மதுரைக்குத் திரும்பிவிட வேண்டுமென்று எண்ணியிருந்த செட்டியார், அந்த எண்ணத்தை மாற்றி, தந்தியில் தான் காட்டுப்புத்தூருக்குச் சென்று வருவதாக அறிவித்துவிட்டு, அம்மையநாயக்கனூரிலிருந்தே காரில் காட்டுப்புத்தூருக்குப் போய்விட்டார்.

அங்கு சென்று காரியங்களைப் பரிசீலனை செய்து பார்க்க, தம் தமையனார் சொன்னது முற்றிலும் உண்மை என்று புலனாயிற்று. ஆனதால், தன் தமையனார் தனக்கு அறிவித்தது போல், படித்துக்கொண்டிருந்த பையனுடைய படிப்புக்கு அன்றோடு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு அவனைத் தன்னுடைய ஊருக்கு அழைத்துச் சென்று, கால தாமதமில்லாமல் கல்யாணமும் செய்துவிட்டார். நாங்களும் அக் கல்யாணத்திற்குச் சென்று சிறப்பித்தோம்.

ஆகவே, ஆவி உலகத்திலிருக்கிற தந்தை தம்முடைய மகனுடைய நடத்தைகளைக் கண்காணித்து வருகிறார்ர் என்பதும், அதற்கு இன்னது செய்ய வேண்டுமென்று அறிவிக ஆர்வத்துடன் சந்தர்ப்பத்தை எதிர் நோக்கியிருக்கிறார் என்பதும் இதிலிருந்து புலப்படுகிற தல்லாவா? அல்லாமலும் அம்மையும் அப்பனும் ஆகிய சர்வ வல்லமையுள்ள ஆண்டவனும், நாம் செய்கின் காரியங்களை எல்லாம் நமக்குத் தெரியாமல் கண்காணித்து வருகிறார் என்பதை ஊகித்து உணர்ந்து கொள்ளவும், நாம் நம்முடைய நடத்தைகளைத் திருத்தி அமைத்துக்கொள்ளவும், இச்சம்பவன் உள்ளத்தைத்தூண்டுகிற அளவுக்கு, எத்தனை புத்தகப் படிப்பும் மக்களைத்தூண்ட முடியாதன்றோ!
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

அர்த்தமுள்ள இந்துமதம் - Page 9 Empty Re: அர்த்தமுள்ள இந்துமதம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 9 of 15 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 15  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum