Latest topics
» கருத்துப்படம் 05/07/2024by mohamed nizamudeen Today at 7:24 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Guna.D |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Guna.D |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் மதிப்புக்குரிய ஆண்கள் !
Page 1 of 1
என் மதிப்புக்குரிய ஆண்கள் !
என் மதிப்புக்குரிய ஆண்கள் !
'நடன மேதை’ பத்மா சுப்ரமணியம்
நடன மேதை, பத்மஸ்ரீ, டாக்டர் பத்மா சுப்ரமணியத்தின் அலுவலகம்... வாங்கிக் குவித்த பட்டங்களும் பரிசுகளும் அழகான அபிநயத்துடன் வீற்றிருக்க... ''என் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய ஆண்களா...'' என்று சொல்லிக் கொண்டே இமை மூடிய பத்மா சுப்ரமணியம், பரதத்தில் ஆயிரம் உணர்வுகளை அரை நொடியில் காட்டும் அந்த அழகிய கண்களைத் திறக்காமல் முதலில் சொன்னது...
''என் அபரிமிதமான பக்திக்கும் பெரும் மதிப்புக்கும் உரியவர், ஜெகத்குரு காஞ்சி மகாபெரியவர். அவருடைய கண்களைப் பார்க்கும்போது, காஞ்சி காமாட்சியையே நேரில் பார்த்த உணர்வு வரும். காஞ்சிக்குப் போன பல சமயங்களில் பெரியவாளை மட்டும் பார்த்துவிட்டு, அம்பாளைப் பார்க்காமலே திரும்பியிருக்கிறேன். அவரின் பேரன்பாலும் அவரிடம் எனக்கிருக்கும் பெரும் பக்தியாலும் அவரை என் குருவாகவும் வழிகாட்டியாகவும் ஏற்றுள்ளேன்'' என்றவர், தொடர்ந்தார்...
''என்னுடைய அத்தனை உயர்வுக்கும், புகழுக்கும், நாட்டியத்தில் நான் சென்றிருக்கும் எல்லைக்கும் காரணமான பிதாமகன்... என் அப்பா மறைந்த இயக்குநர் கே.சுப்ரமணியம். வீட்டில் நான் கடைசிக் குழந்தை என்பதால், என் மீது அவருக்கு ஏக பாசம். எப்போதும் என் மேல் அன்பை மட்டும் மழையாகப் பொழிந்தவர். எந்தச் சூழ்நிலையிலும் எதற்கும் என்னைக் கடிந்து கொண்டதுஇல்லை. இந்த உலகத்தையும் அதில் இருக்கும் கலைகளையும் உண்மையாக, மனமார நேசிக்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொடுத்த குரு. எதையும் விசாலமான தொலைநோக்குப் பார்வையால் அணுக வேண்டும் என்பதை தன்னுடைய நடவடிக்கைகளால் செயல்படுத்திக் காண்பித்த தேசாபிமானி. அதுவே அவரிடத்தில் எனக்கு அப்பா என்கிற பாசத்தை மீறிய மரியாதையையும் பக்தியையும் வளர்த்து, இன்று வரை அவற்றை பத்திரமாக, பாசமாக பூட்டி வைத்திருக்கிறது!
தாயுமாகி, தந்தையுமாகி ஒரு கட்டத்தில் எனக்கு சகலமாகவும் இருந்தவர் என் மூத்த அண்ணன் பாலகிருஷ்ணன். தங்கையை, தான் மட்டும் நேசிக்காது... தன் மனைவிக்கும், 'உன் நேசமும் பாசமும்தான் இவளுக்கு உரம்’ என்பதைச் சொல்லிக்கொடுத்த பொக்கிஷம். என்னிடம் கண்டிப்பாக இருக்க வேண்டிய இடத்தில் ஓர் ஆசிரியருக்கு உரிய கண்டிப்புடனும், கருணை யுடன் இருக்க வேண்டிய நேரத்தில் ஒரு தாயாகவும் இருந்தவர். அவரிடம் கேட்காமல் எந்தக் காரியத்தையும் நான் செய்ததே இல்லை. அது பயத்தினால் அல்ல; நான் அவர் மீதும், அவர் என் மீதும் கொண்ட பாசத்தால்!
ஒரு பச்சிளம் குழந்தைக்கு பால் புகட்டுவதைப் போல் ஆன்மிகத்தை எனக்குள் புகட்டிய சுவாமி தயானந்த சரஸ்வதி, என் அதீத மரியாதைக்கு உரியவர். முப்பது ஆண்டுகளுக்கும் மேல் இவரின் சொற்பொழிவைக் கேட்கிறேன். அவருடைய எளிமையான வேதாந்த கருத்துகள் எனக்கு ஆன்மிகத்தைப் பற்றிய சரியான புரிதலை ஏற்படுத்தியது. புகழ் என்னை உச்சத்தில் கொண்டு வைக்கும்போதும், விமர்சனம் என்னை கீறும்போதும் நிலை தடுமாறாமல் இருக்கும் கலையை இவருடைய போதனைகள்தான் எனக்கு கற்றுக் கொடுத்தன!
17 வயதிலேயே 72 ராகத்திலும் பாடல்களை சிருஷ்டித்த சரஸ்வதி புத்திரன் டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா என் பெரும் மரியாதைக்கு உரியவர். இத்தனை வயதுக்குப் பிறகும் இன்னும் இசைக் காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட அவரின் ஈடுபாடுதான் அவர் மேல் நான் கொண்ட பெரு மரியாதைக்குக் காரணம்!
ருக்மணியம்மாவின் முதல் சீடர், 70 வயதுகளிலும் அசாத்தியமாக நடனமாடக் கூடிய நடன மேதை புரொஃபசர் சி.வி.சந்திரசேகரின் பாதங்கள் ஏற்படுத்தும் அதிர்வுகளை என் உள்ளத்தில் வாங்கிஇருக்கிறேன் நான். இந்தக் கலைக்கான அவரின் அர்ப்பணிப்பும் நடனத்தின் மேல் அவர் வைத்திருக்கும் தீரா காதலும் அவருக்கான மரியாதை சிம்மாசனத்தை என மனதில் ஏந்த வைத்துள்ளன!
பிற உயிர்களின் பிணி போக்குதலை தன் வாழ்வின் பெரும் பயனாக ஏற்றிருப்பவர் ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் கிருஷ்ணகுமார் வாரியார். கோவையில் இருக்கும் அவருடைய மருத்துவமனையில் மருத்துவராக மட்டுமில்லாமல், மிகச் சிறந்த நிர்வாகியாகவும் அவரை அறிய நேர்ந்தபோது, வியந்திருக்கிறேன். ஆயுர்வேத மருத்துவத்தில் இவருடைய அளப்பரிய ஞானமும், அதை மக்களுக்கு கொண்டு சேர்க்க முனையும் இவரின் சேவையும் பெரிது!
இவர்கள் மட்டுமல்ல... பெண்மையை மதிக்கும் எல்லா ஆண்களுக்கும் என் நமஸ்காரங்கள்!'' என்று கூப்பியவரின் கைகளின் விரல் நகங்களில்கூட, அத்தனை நளினம்! அதுதான் பத்மா சுப்ரமணியம்!
நன்றி விகடன்...
'நடன மேதை’ பத்மா சுப்ரமணியம்
நடன மேதை, பத்மஸ்ரீ, டாக்டர் பத்மா சுப்ரமணியத்தின் அலுவலகம்... வாங்கிக் குவித்த பட்டங்களும் பரிசுகளும் அழகான அபிநயத்துடன் வீற்றிருக்க... ''என் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய ஆண்களா...'' என்று சொல்லிக் கொண்டே இமை மூடிய பத்மா சுப்ரமணியம், பரதத்தில் ஆயிரம் உணர்வுகளை அரை நொடியில் காட்டும் அந்த அழகிய கண்களைத் திறக்காமல் முதலில் சொன்னது...
''என் அபரிமிதமான பக்திக்கும் பெரும் மதிப்புக்கும் உரியவர், ஜெகத்குரு காஞ்சி மகாபெரியவர். அவருடைய கண்களைப் பார்க்கும்போது, காஞ்சி காமாட்சியையே நேரில் பார்த்த உணர்வு வரும். காஞ்சிக்குப் போன பல சமயங்களில் பெரியவாளை மட்டும் பார்த்துவிட்டு, அம்பாளைப் பார்க்காமலே திரும்பியிருக்கிறேன். அவரின் பேரன்பாலும் அவரிடம் எனக்கிருக்கும் பெரும் பக்தியாலும் அவரை என் குருவாகவும் வழிகாட்டியாகவும் ஏற்றுள்ளேன்'' என்றவர், தொடர்ந்தார்...
''என்னுடைய அத்தனை உயர்வுக்கும், புகழுக்கும், நாட்டியத்தில் நான் சென்றிருக்கும் எல்லைக்கும் காரணமான பிதாமகன்... என் அப்பா மறைந்த இயக்குநர் கே.சுப்ரமணியம். வீட்டில் நான் கடைசிக் குழந்தை என்பதால், என் மீது அவருக்கு ஏக பாசம். எப்போதும் என் மேல் அன்பை மட்டும் மழையாகப் பொழிந்தவர். எந்தச் சூழ்நிலையிலும் எதற்கும் என்னைக் கடிந்து கொண்டதுஇல்லை. இந்த உலகத்தையும் அதில் இருக்கும் கலைகளையும் உண்மையாக, மனமார நேசிக்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொடுத்த குரு. எதையும் விசாலமான தொலைநோக்குப் பார்வையால் அணுக வேண்டும் என்பதை தன்னுடைய நடவடிக்கைகளால் செயல்படுத்திக் காண்பித்த தேசாபிமானி. அதுவே அவரிடத்தில் எனக்கு அப்பா என்கிற பாசத்தை மீறிய மரியாதையையும் பக்தியையும் வளர்த்து, இன்று வரை அவற்றை பத்திரமாக, பாசமாக பூட்டி வைத்திருக்கிறது!
தாயுமாகி, தந்தையுமாகி ஒரு கட்டத்தில் எனக்கு சகலமாகவும் இருந்தவர் என் மூத்த அண்ணன் பாலகிருஷ்ணன். தங்கையை, தான் மட்டும் நேசிக்காது... தன் மனைவிக்கும், 'உன் நேசமும் பாசமும்தான் இவளுக்கு உரம்’ என்பதைச் சொல்லிக்கொடுத்த பொக்கிஷம். என்னிடம் கண்டிப்பாக இருக்க வேண்டிய இடத்தில் ஓர் ஆசிரியருக்கு உரிய கண்டிப்புடனும், கருணை யுடன் இருக்க வேண்டிய நேரத்தில் ஒரு தாயாகவும் இருந்தவர். அவரிடம் கேட்காமல் எந்தக் காரியத்தையும் நான் செய்ததே இல்லை. அது பயத்தினால் அல்ல; நான் அவர் மீதும், அவர் என் மீதும் கொண்ட பாசத்தால்!
ஒரு பச்சிளம் குழந்தைக்கு பால் புகட்டுவதைப் போல் ஆன்மிகத்தை எனக்குள் புகட்டிய சுவாமி தயானந்த சரஸ்வதி, என் அதீத மரியாதைக்கு உரியவர். முப்பது ஆண்டுகளுக்கும் மேல் இவரின் சொற்பொழிவைக் கேட்கிறேன். அவருடைய எளிமையான வேதாந்த கருத்துகள் எனக்கு ஆன்மிகத்தைப் பற்றிய சரியான புரிதலை ஏற்படுத்தியது. புகழ் என்னை உச்சத்தில் கொண்டு வைக்கும்போதும், விமர்சனம் என்னை கீறும்போதும் நிலை தடுமாறாமல் இருக்கும் கலையை இவருடைய போதனைகள்தான் எனக்கு கற்றுக் கொடுத்தன!
17 வயதிலேயே 72 ராகத்திலும் பாடல்களை சிருஷ்டித்த சரஸ்வதி புத்திரன் டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா என் பெரும் மரியாதைக்கு உரியவர். இத்தனை வயதுக்குப் பிறகும் இன்னும் இசைக் காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட அவரின் ஈடுபாடுதான் அவர் மேல் நான் கொண்ட பெரு மரியாதைக்குக் காரணம்!
ருக்மணியம்மாவின் முதல் சீடர், 70 வயதுகளிலும் அசாத்தியமாக நடனமாடக் கூடிய நடன மேதை புரொஃபசர் சி.வி.சந்திரசேகரின் பாதங்கள் ஏற்படுத்தும் அதிர்வுகளை என் உள்ளத்தில் வாங்கிஇருக்கிறேன் நான். இந்தக் கலைக்கான அவரின் அர்ப்பணிப்பும் நடனத்தின் மேல் அவர் வைத்திருக்கும் தீரா காதலும் அவருக்கான மரியாதை சிம்மாசனத்தை என மனதில் ஏந்த வைத்துள்ளன!
பிற உயிர்களின் பிணி போக்குதலை தன் வாழ்வின் பெரும் பயனாக ஏற்றிருப்பவர் ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் கிருஷ்ணகுமார் வாரியார். கோவையில் இருக்கும் அவருடைய மருத்துவமனையில் மருத்துவராக மட்டுமில்லாமல், மிகச் சிறந்த நிர்வாகியாகவும் அவரை அறிய நேர்ந்தபோது, வியந்திருக்கிறேன். ஆயுர்வேத மருத்துவத்தில் இவருடைய அளப்பரிய ஞானமும், அதை மக்களுக்கு கொண்டு சேர்க்க முனையும் இவரின் சேவையும் பெரிது!
இவர்கள் மட்டுமல்ல... பெண்மையை மதிக்கும் எல்லா ஆண்களுக்கும் என் நமஸ்காரங்கள்!'' என்று கூப்பியவரின் கைகளின் விரல் நகங்களில்கூட, அத்தனை நளினம்! அதுதான் பத்மா சுப்ரமணியம்!
நன்றி விகடன்...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![என் மதிப்புக்குரிய ஆண்கள் ! 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பெரும் மதிப்புக்குரிய
» முதல் பார்வை: ஒரு நாள் கூத்து – மதிப்புக்குரிய முயற்சி!
» ஆண்கள்
» மூன்று வகை ஆண்கள்
» ஆண்கள் நல்லவர்களா?
» முதல் பார்வை: ஒரு நாள் கூத்து – மதிப்புக்குரிய முயற்சி!
» ஆண்கள்
» மூன்று வகை ஆண்கள்
» ஆண்கள் நல்லவர்களா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|