புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 22:13

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 22:11

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசியல் தூய்மைக்கு பரதன் (சிந்தனை செய் மனமே) Poll_c10அரசியல் தூய்மைக்கு பரதன் (சிந்தனை செய் மனமே) Poll_m10அரசியல் தூய்மைக்கு பரதன் (சிந்தனை செய் மனமே) Poll_c10 
59 Posts - 58%
heezulia
அரசியல் தூய்மைக்கு பரதன் (சிந்தனை செய் மனமே) Poll_c10அரசியல் தூய்மைக்கு பரதன் (சிந்தனை செய் மனமே) Poll_m10அரசியல் தூய்மைக்கு பரதன் (சிந்தனை செய் மனமே) Poll_c10 
26 Posts - 25%
mohamed nizamudeen
அரசியல் தூய்மைக்கு பரதன் (சிந்தனை செய் மனமே) Poll_c10அரசியல் தூய்மைக்கு பரதன் (சிந்தனை செய் மனமே) Poll_m10அரசியல் தூய்மைக்கு பரதன் (சிந்தனை செய் மனமே) Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
அரசியல் தூய்மைக்கு பரதன் (சிந்தனை செய் மனமே) Poll_c10அரசியல் தூய்மைக்கு பரதன் (சிந்தனை செய் மனமே) Poll_m10அரசியல் தூய்மைக்கு பரதன் (சிந்தனை செய் மனமே) Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
அரசியல் தூய்மைக்கு பரதன் (சிந்தனை செய் மனமே) Poll_c10அரசியல் தூய்மைக்கு பரதன் (சிந்தனை செய் மனமே) Poll_m10அரசியல் தூய்மைக்கு பரதன் (சிந்தனை செய் மனமே) Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
அரசியல் தூய்மைக்கு பரதன் (சிந்தனை செய் மனமே) Poll_c10அரசியல் தூய்மைக்கு பரதன் (சிந்தனை செய் மனமே) Poll_m10அரசியல் தூய்மைக்கு பரதன் (சிந்தனை செய் மனமே) Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
அரசியல் தூய்மைக்கு பரதன் (சிந்தனை செய் மனமே) Poll_c10அரசியல் தூய்மைக்கு பரதன் (சிந்தனை செய் மனமே) Poll_m10அரசியல் தூய்மைக்கு பரதன் (சிந்தனை செய் மனமே) Poll_c10 
1 Post - 1%
Guna.D
அரசியல் தூய்மைக்கு பரதன் (சிந்தனை செய் மனமே) Poll_c10அரசியல் தூய்மைக்கு பரதன் (சிந்தனை செய் மனமே) Poll_m10அரசியல் தூய்மைக்கு பரதன் (சிந்தனை செய் மனமே) Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
அரசியல் தூய்மைக்கு பரதன் (சிந்தனை செய் மனமே) Poll_c10அரசியல் தூய்மைக்கு பரதன் (சிந்தனை செய் மனமே) Poll_m10அரசியல் தூய்மைக்கு பரதன் (சிந்தனை செய் மனமே) Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அரசியல் தூய்மைக்கு பரதன் (சிந்தனை செய் மனமே) Poll_c10அரசியல் தூய்மைக்கு பரதன் (சிந்தனை செய் மனமே) Poll_m10அரசியல் தூய்மைக்கு பரதன் (சிந்தனை செய் மனமே) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசியல் தூய்மைக்கு பரதன் (சிந்தனை செய் மனமே) Poll_c10அரசியல் தூய்மைக்கு பரதன் (சிந்தனை செய் மனமே) Poll_m10அரசியல் தூய்மைக்கு பரதன் (சிந்தனை செய் மனமே) Poll_c10 
58 Posts - 60%
heezulia
அரசியல் தூய்மைக்கு பரதன் (சிந்தனை செய் மனமே) Poll_c10அரசியல் தூய்மைக்கு பரதன் (சிந்தனை செய் மனமே) Poll_m10அரசியல் தூய்மைக்கு பரதன் (சிந்தனை செய் மனமே) Poll_c10 
23 Posts - 24%
mohamed nizamudeen
அரசியல் தூய்மைக்கு பரதன் (சிந்தனை செய் மனமே) Poll_c10அரசியல் தூய்மைக்கு பரதன் (சிந்தனை செய் மனமே) Poll_m10அரசியல் தூய்மைக்கு பரதன் (சிந்தனை செய் மனமே) Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
அரசியல் தூய்மைக்கு பரதன் (சிந்தனை செய் மனமே) Poll_c10அரசியல் தூய்மைக்கு பரதன் (சிந்தனை செய் மனமே) Poll_m10அரசியல் தூய்மைக்கு பரதன் (சிந்தனை செய் மனமே) Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
அரசியல் தூய்மைக்கு பரதன் (சிந்தனை செய் மனமே) Poll_c10அரசியல் தூய்மைக்கு பரதன் (சிந்தனை செய் மனமே) Poll_m10அரசியல் தூய்மைக்கு பரதன் (சிந்தனை செய் மனமே) Poll_c10 
2 Posts - 2%
Sathiyarajan
அரசியல் தூய்மைக்கு பரதன் (சிந்தனை செய் மனமே) Poll_c10அரசியல் தூய்மைக்கு பரதன் (சிந்தனை செய் மனமே) Poll_m10அரசியல் தூய்மைக்கு பரதன் (சிந்தனை செய் மனமே) Poll_c10 
1 Post - 1%
Guna.D
அரசியல் தூய்மைக்கு பரதன் (சிந்தனை செய் மனமே) Poll_c10அரசியல் தூய்மைக்கு பரதன் (சிந்தனை செய் மனமே) Poll_m10அரசியல் தூய்மைக்கு பரதன் (சிந்தனை செய் மனமே) Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அரசியல் தூய்மைக்கு பரதன் (சிந்தனை செய் மனமே) Poll_c10அரசியல் தூய்மைக்கு பரதன் (சிந்தனை செய் மனமே) Poll_m10அரசியல் தூய்மைக்கு பரதன் (சிந்தனை செய் மனமே) Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
அரசியல் தூய்மைக்கு பரதன் (சிந்தனை செய் மனமே) Poll_c10அரசியல் தூய்மைக்கு பரதன் (சிந்தனை செய் மனமே) Poll_m10அரசியல் தூய்மைக்கு பரதன் (சிந்தனை செய் மனமே) Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அரசியல் தூய்மைக்கு பரதன் (சிந்தனை செய் மனமே) Poll_c10அரசியல் தூய்மைக்கு பரதன் (சிந்தனை செய் மனமே) Poll_m10அரசியல் தூய்மைக்கு பரதன் (சிந்தனை செய் மனமே) Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசியல் தூய்மைக்கு பரதன் (சிந்தனை செய் மனமே)


   
   
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat 19 Mar 2011 - 1:31

ஸ்ரீராமருக்குப் பிறகு தோன்றியவன் பரதன். ஆனால், அன்னையின் ஆசையில் விளைந்த ஆணைக்குத் தலைவணங்காமல், நேர்மையின் உறைவிடமான ஸ்ரீராமரின் விருப்பத்தைத் தனது விருப்பமாக ஏற்றவன். ராமாயணத்தின் தரத்தை உயர்த்தி யவன்; அண்ணனை ஆண்டவனாகவே பார்த்தவன்; அண்ணன் தந்தைக்குச் சமம் என்பதால், ஸ்ரீராமரின் பாதுகையை ஏற்று, அரசுக்குப் பாதுகாவலனாக மாறி, பக்தனாகத் தோற்றமளித்தவன்.

கைகேயியின் விருப்பப்படி அரசை ஏற்கவில்லை, பரதன். ஸ்ரீராமனின் சேவகனாக இருந்து அவரது அரசைப் பாதுகாக்கும் பணியில் தன்னை இணைத்துக்கொண்டான். உள்ளத்தளவில் ராமருடன் நெருக்கமாகவே இருந்தான்.

ஜட பரதன், துஷ்யந்தனின் மகன் பரதன் என பரதர்கள் பலர் தோன்றியுள்ளனர். ஆனாலும், ஸ்ரீராமனின் தம்பியாகப் பிறந்து, பண்புடனும் நேர்மையுடனும் வாழ்ந்த பரதனின் வாழ்க்கை, பாரதத்துக்கே பெருமை சேர்த்தது.

கைகேயிக்குத் தசரதர் அளித்த வரம், பொய்யாகி விடக்கூடாது என்பதால், ஸ்ரீராமர் வனவாசம் சென்றார். பட்டாபிஷேகத்துக்கு தேதி பார்த்து, அரசுரிமையைத் தர விரும்பிய தசரதரின் எண்ணத்தை ஈடேற்றும் வகையில், ஸ்ரீராமரின் பாதுகையை ஏற்று, அரசுக்குப் பாதுகாவலனாக மட்டுமே இருந்தான் பரதன். பித்ரு வாக்கியப் பரிபாலனம் என்பது அவனது சிறப்பம்சம். ஸ்ரீராமரைப் போலவே அவனும் சிந்தித்தான். பாதுகை மூலம் அவனுக்கு அரசுரிமையைத் தந்தார், ஸ்ரீராமர். அதேபோல், வாலியை விலக்கி சுக்ரீவனுக்கு அரசுரிமை அளித்தார்; ராவணனை விலக்கி விபீஷணனுக்கு அரசுரிமையைத் தந்தார். ஆக, காட்டில் இருந்தாலும், அரசனாகவே இருந்தார் ஸ்ரீராமர்.

வரத்தால் வந்த அரசு முறையற்றது; நீதி நெறியுடன் வந்த அரசு நிலையானது. ராமரின் அவதார நோக்கத்தை அறிந்த பரதன், அண்ணனுக்கு உதவ அரசைக் காப்பாற்றும் பொறுப்பை ஏற்றான். வனவாசம் முடிந்ததும், அவரிடம் அரசை ஒப்படைக்கத் தயாரான அவனது செயல் வியக்க வைக்கிறது. அந்தக் காலங்களில், தீர்த்தாடனம் மேற்கொள் பவர்கள், செல்வத்தை ஒப்படைத்துவிட்டு, 'காசிக்குச் சென்று வருகிறேன்; அதுவரை இதனைப் பாதுகாக்கவும்; திரும்பி வந்ததும் பெற்றுக் கொள்கிறேன்’ என்று கூறிச் செல்வார்கள். அந்தப் பொருள் 'ந்யாசம்’ எனப்படும். அதேபோல், ஸ்ரீராமர் தனது உரிமையை, ந்யாசமாக பரதனிடம் ஒப்படைத்தார். பிறகு திரும்பி வந்து பெற்றுக் கொண்டார்; பட்டாபிஷேகமும் நடந்தேறியது.

வனவாசம் மேற்கொண்ட பாண்டு, அரசுரிமையை ந்யாசமாக திருதராஷ்டிரரிடம் ஒப்படைத்துச் சென்றான். ஆனால் அவர், ந்யாசத்தை உரிமையாக்கிக் கொண்டதால், உருவானதுதான் மகாபாரதம். அறத்தை மீறிய செயலானது, அனர்த்தத்தில்தான் முற்றுப்பெறும். ஸ்ரீராமர், அறத்தின் வடிவம் என்கிறான் மாரீசன். ராமரை வழிபடும் பரதன், அறத்தின் மறு உருவம். ''தவறு செய்த கைகேயியை அழித்திருப்பேன். 'தாயைக் கொன்றவன்’ என அண்ணன் என்னைப் பழிப்பார் என்பதால் செய்யவில்லை'' எனும் பரதனின் உரை, அறத்தில் அவருக்கு இருக்கிற பிடிப்பை உணர்த்துகிறது (ஹன்யாமஹமிமாம்...).

அரசைத் துறந்து, வாக்குறுதியை நிறைவேற்ற வனவாசம் சென்றார் ஸ்ரீராமர். அரசைத் துறந்து, நாட்டில் இருந்தபடி, தாமரை இலைத் தண்ணீரென உலக சுகத்தில் பற்றின்றி, ராமரின் பாதுகைக்குப் பணிவிடை செய்தான் பரதன். இன்பத்தைச் சுவைக்கும் சூழல் இருந்தும், அதிலிருந்து விலகி இருப்பவனே தீரன் என்பான் காளிதாசன். பற்றற்ற நிலையில் பணியை ஏற்ற பரதனின் பக்குவம், முனிவர்களுக்கான இலக்கணத் தையும் கடந்து நிற்கிறது. ஆக, அறமானது நேரடியாக அரசாட்சி செய்தது; பரதன் சாட்சி யாக உடனிருந்தான்; மக்களின் பார்வையில், அரசின் பிரதிநிதியாக இருந்தான்.

பொய்யும் புனைச்சுருட்டும் ஒன்றுசேர்ந்து உண்மையைக் காட்டுக்கு விரட்டியது. கசாப்புக் கடைக்காரனிடம் சிக்கிக் கொண்ட மானைப் போல், பரதனிடம் சிக்கிக்கொண் டோம் என மக்கள் கணிப்பதை அறிந்த பரதன் கோபப்படவில்லை. மாறாக, மகிழ்ச்சியுற்றான் (மித்யாப்ரவ்ரஜி தோராமபுன்னகை. 'ராமர் வனவாசம் ஏற்றாலும், மக்களின் மனதில் அவர்தானே வாசம் செய்கிறார்! அவர்கள், ஸ்ரீராமரையே மன்னராக நினைக்கின்றனர்’ என அறிந்து பூரித்தான்.

மக்களை மகிழ்விப்பதே அரசனின் பணி என்கிறான் காளிதாசன். வனத்தில் உள்ள ஸ்ரீராமர்தான், தேசத்தை ஆள்கிறார் என்கிற பரதனின் ராம பக்திக்குக் கிடைத்த வெகுமதி, மக்கள் மகிழ்ச்சியாக இருந்தனர் என்பதுதான். வசிஷ்டரின் அழைப்புக்கு இணங்க, மாமன் வீட்டிலிருந்து அயோத்திக்கு வந்தான் பரதன். கைகேயியின் களியாட்டமறிந்து வெகுண்டான்; விக்கித்துப் போனவன், செய்வதறியாது தவித்தான். ''நீ கேட்ட இரண்டு வரமும் உனக்குப் பலனளிக்கவில்லை.

ஸ்ரீராமரைக் காட்டுக்கு அனுப்பினாய்; அது, உனது வாழ்வை அவலமாக்கியது. தசரதனை இழந்து நீ மட்டுமா விதவையானாய்?! உனது சக்களத்தி களையும் அல்லவா விதவை ஆக்கி விட்டாய்! தசரதனின் இழப்பு, தேசத் துக்கு ஏற்பட்ட இழப்பு. அது, வீட்டுக்கும் இழப்பை ஏற்படுத்தியது. நாட்டையும் வீட்டையும் ஆள வேண்டியவன், காட்டுக்கு விரட்டப்பட்டால், நாடும் வீடும் காடாகிவிடுமே! ஜடாயு, ஸம்பாதி, சுக்ரீவன், அனுமன், விபீஷ ணன், வானரப் படையினர், முனிவர்கள் அனைவரும் ராமருடன் இணைந்து காட்டை நாடாக மாற்றினர் என்றால் மிகையாகாது. ஆக, வனவாசம் சென்ற வனுக்கா துயரம்?! அதனை அளித்த உனக்குத்தானே துயரம்?! உனது இரண்டாவது வரமும் பலனளிக்க வில்லை. அரியாசனத்தில் நான் அமரவும் இல்லை; அரசை ஏற்கவும் இல்லை'' என்றான் பரதன்.

அதுமட்டுமா? ''தசரதனுக்கு உன்னிடம் நெருக்கம் அதிகம். அதுவே அவரின் அழிவுக்குக் காரணமாயிற்று. அளவு கடந்த நெருக்கம், வெறுப்புக்குக் காரணமாவதும் உண்டு (அதிஸ்னேஹ:பாபசங்கீ). பாதகச் செயலில் ஈடுபட்டவனுடன் இணைந்தவனும் தண்டனையை ஏற்க நேரிடும் என்கிறது சாஸ்திரம். கைகேயியுடன் இணைந்த மற்ற இரண்டுபேரும் துயரத் தையே சந்தித்தனர். அவ்வளவு ஏன்... உன்னால், அயோத்தி நகரமே துயரத்தில் ஆழ்ந்தது'' எனும் பரதனின் கணிப்பை பிரதிமா நாடகம் பிரதிபலிக்கிறது.

அயோத்திக்கு வந்த பரதனுக்கு இருப்புக்கொள்ள வில்லை. ஸ்ரீராமர் இல்லாமல் அயோத்தியா எனச் சிந்தித்தவன், அவரைக் காண காட்டுக்கு ஓடினான். கூடவே, படைகளும் பின்தொடர்ந்தன. புடைசூழ வந்த பரதனைக் கண்ட லட்சுமணர் ராமரிடம், ''அண்ணா, அன்னை கைகேயி, தங்களைக் காட்டுக்கு விரட்டினாள். அவளின் மைந்தன், அதுபோதாது என்று படைகளுடன் போர் தொடுக்க வருகிறான்'' என்றான். வனத்தில், ஸ்ரீராம ருக்குப் பாதுகாவலனாக விளங்குபவன் லட்சுமணன். என்றைக்கும் இணைபிரியாதவன், அவன். காவலன், எதைக் கண்டாலும், எவரைச் சந்தித்தாலும் அவனது மனம், இதில் ஏதும் பிழை இருக்குமோ என்றே நினைக்கும். லட்சுமணனின் கணிப்பும் அவ்விதமே! அவனிடம் ஸ்ரீராமர், ''பரதனுக்கு என்னிடம் உள்ள பற்று, சொல்லில் அடங்காதது. அவனின் மனதை நான் அறிவேன். என்னை அணைத்து மகிழவே அவன் வருகிறான்'' என விளக்கினார். ஸ்ரீராமர் சொன்னபடியே நடந்ததும், உண்மை உணர்ந்து தெளிந்தான் லட்சுமணன்.

ராமருடன் வனத்துக்குச் செல்ல, லட்சுமணனுக்குச் சுமித்ரையின் அறிவுரை தேவைப்பட்டது. ஆனால், பரதனின் மனமானது, காந்தம் போல் ஈர்க்கப்பட்டு, ஸ்ரீராமரை வந்தடைந்தது. பரதனின் மனமானது, எதிர்பார்ப்பற்ற அன்புடன் ஸ்ரீராமரைப் பற்றிக்கொண்டு இருப்பதையே இது உணர்த்துகிறது. ''14 வருடங்கள் மரவுரி தரித்து, காய்-கனிகளைச் சாப்பிட்டுக் காலம் தள்ளு வேன். நீயில்லாத அயோத்தியில் நுழைய மாட்டேன். பட்டணத்துக்கு வெளியே வந்து, உனது வருகையை எதிர்நோக்கிக் காத்திருப்பேன். அரசுரிமையை, உனது பாதுகைக்கு அளிப்பேன்; அரசைக் கண்காணிப்பேன். வனவாசம் முடிந்ததும், நீ வராவிட்டால் நெருப்பில் இறங்கிவிடுவேன்'' என்றான் பரதன். அவனது உறுதியை உணர்ந்த ஸ்ரீராமர், நெகிழ்ந்து போனார்; அவனை வாரி அணைத்துக் கொண்டார்!

ஸ்ரீராமர் பாதுகையுடன் வந்த பரதன், அயோத்தி மக்களிடம் உரையாற்றினான். ''ராமபிரான், இந்த அரசின் பாதுகாவல னாக என்னைப் பணித்திருக்கிறார். எனவே, அவரின் பாதுகை, அரசனா கிறது. அரச மரியாதைகள் யாவும் பாதுகைக்கே நடைபெறும். வனவாசம் முடிந்ததும், அயோத்தியை அவரிடம் ஒப்படைத்துவிட்டுத் தூய்மையாவதே என் விருப்பம்'' என்றான் பரதன்.

பக்தன், பணியாள், குறிப்பறிந்து செயல்படுபவன், அறநெறி பிறழாதவன் மற்றும் தம்பிக்கு இலக்கணம் எனத் திகழ்ந்தவன், பரதன். அரசியல் தூய்மை மட்டுமின்றி உடன் பிறப்புகளுடனான உறவுப் பெருமையையும் உணர்த்துகிறது, அவனது சரிதம்.

நன்றி விகடன்..



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அரசியல் தூய்மைக்கு பரதன் (சிந்தனை செய் மனமே) 47

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக