Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விஜய் கொடுக்கு விடாது கலைஞரை...
+2
சிவா
மஞ்சுபாஷிணி
6 posters
Page 1 of 1
விஜய் கொடுக்கு விடாது கலைஞரை...
காங்கிரஸ் கட்சிக்கான தொகுதிப் பட்டியலும் வேட் பாளர் விவரமும் எப்போது வெளியாகும் என தொடை தட்டிக் காத்திருக்கிறார் சீமான். ''ஒரு நாளைக்கு முன்று தொகுதிகள்... ஐந்து மணி நேரம் தொண்டை கிழியப் பேச்சு... 20 நாட்களில் 63 தொகுதிகளில் வலம்... காங்கிரஸுக்கு எதிராக இப்போதே களம் இறங்கிவிட்டேன். காங்கிரஸோடு கூட்டுவைத்தால், கருவறுக்கப் படுவோம் என்கிற அச்சம் இங்கே இருக்கும் அத்தனை கட்சிகளுக்கும் பிறக்க வேண்டும். அத்தகைய மரண அடியை இந்த முறை காங்கிரஸுக்குக் கொடுப்பேன். இந்த அடிபட்ட புலியின் உறுமலில் காங்கிரஸ் என்ன கதியாகப்போகிறது பாருங்கள்!'' - சபதம் போடும் சீமான் கட்சியின் உயர் மட்டக் குழு, ஆன்றோர் பேரவைகளைக் கூட்டி தேர்தல் வியூகங்களில் தீவிரமாக இருக்கிறார்.
''தி.மு.க-வின் ராஜினாமா நாடகம் காங்கிரஸிடம் எடுபடாமல் போய்விட்டதே..?''
''தமிழகத்தின் மிச்சம் மீதித் தன்மானத்தையும் காங்கிரஸின் காலடியில் அர்ப்பணம் செய்துவிட்டு வந்திருக்கிறது தி.மு.க. '63 தொகுதிகள் கேட்பது நியாயமா..? அதுவும் தங்களுக்கான தொகுதிகளை அவர்களே தேர்ந்தெடுக்கலாமா..?’ என்றெல்லாம் உரிமைக் குரல் எழுப்பி, முறுக்கிக் கிளம்பினார் முதல்வர். அதை வரவேற்று தி.மு.க-வினரே பட்டாசு வெடித்தார்கள். 'உலகத் தமிழர்களின் உளமார்ந்த எண்ணம் ஈடேறிவிட்டதாக’ப் பாராட்டி பொன்னாடை போர்த்திப் பூரித்தார்கள் பலரும். இறுதியில் என்ன நடந்தது? அதே 63 தொகுதிகளில் ஒன்றுகூடக் குறையாமல் நிர்பந்தித்து வாங்கி இருக்கிறது காங்கிரஸ். மீசை முறுக்கி ராஜினாமா கடிதங்களோடு கிளம்பியவர்கள், காங்கிரஸின் ஆசையை நிறைவேற்றிவிட்டு, 'கூட்டணி தொடரும்’ என வெட்கமே இல்லாமல் வெளியே வருகிறார்களே... இந்தக் கேவலமான சரணாகதி தேவைதானா? மலை மலையாக சொந்த இன மக்கள் கொன்று குவிக்கப்பட்டபோதுகூட கருணையையும் சுரணையையும் கணக்கில்கொள்ளாதவர்கள், தேர்தலுக்காகத் திடீர் தன்மானம் காட்டினால் காங்கிரஸே சிரிக்காதா? சீட்டுக்காகப் பதவியைத் துறப்பதாகச் சொன்னவர்கள், ஈழ நாட்டுக்காகத் துறக்க முன்வந்தார்களா? விசாரணை வளையம் தன் குடும்பத்தைச் சுற்றிவிடக் கூடாது என்பதற்காக கலைஞர் வீசிய மிரட்டல் அஸ்திரம் முனை மழுங்கி விழுந்திருக்கிறது. காங்கிரஸை வீழ்த்துவதற்காகவே தொடங்கப்பட்ட இயக்கத்தை, காங்கிரஸின் காலடியில் விழவைத்த பெருமை கலைஞர் பெருமகனாரையே சேரும்!''
''காங்கிரஸின் சாதிப்பை முதல்வரின் ராஜ தந்திரத்துக்கு விழுந்த அடியாகக் கருதுகிறீர்களா?''
''கிச்சுக்கிச்சு மூட்டாதீங்க... யார் ராஜ தந்திரி? எம்.ஜி.ஆர். உயிரோடு இருந்த வரை ஆட்சிக் கட்டிலில் அமர முடியாமல் அல்லாடித் தவித்தாரே, இவரா ராஜ தந்திரி? ஜெயலலிதாவிடம்கூட அரசியல் நடத்த முடியாமல் அவர் ஆட்சிக் கட்டிலில் அமர அடிகோலினாரே... இவரா ராஜ தந்திரி? வருகிற, போகிற கட்சிகளுக்கு எல்லாம் ஏழு சீட்டு, இருபது சீட்டு என அள்ளி வழங்கி, எப்படியாவது மறுபடியும் ஆட்சியைப் பிடிக்க மாட்டோமா என அஞ்சிக் கிடப்பவரை அரசியல் ராஜ தந்திரி என்றால், சிரிப்புத்தான் வருகிறது!''
''தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து கனிமொழி உள்ளிட்டவர்களும் களம் இறங்கிக் கைதாகி இருக்கிறார்களே?''
''கனிமொழி மட்டுமா களம் இறங்கினார்... காங்கிரஸ்காரர்களே களம் இறங்கினார்கள். 'தமிழ் மீனவர்கள் தாக்கப்படக் கூடாது’ என ராஜபக்ஷே மட்டும்தான் கொடி பிடிக்கவில்லை. இவர்கள் நாடகப் போராட்டம் நடத்திய அடுத்த நாளே நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடத்தப்பட்டார்கள். இவர்களின் போராட்டத்தாலேயே அவர்கள் விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. திரைக்கதைகளில்கூட இயற்ற முடியாத கற்பனையை இங்கே கடை விரிக்கிறார் கள். இதே மீனவப் பிரச்னைக்காகத் தானே நானும் போராடினேன். நான் பேசினால் ஐந்து மாதம் சிறைவாசம்... கனிமொழி பேசினால் ஐந்து மணி நேர சிறைவாசமா? அப்பாவின் கையில் இருக்கும் காவல் துறை, மகளைக் கைது செய்து விடுவித்த கூத்தைப் போராட்டம் எனச் சொல்லாதீர்கள். நாடகத்தாலேயே நாட்டை ஆண்டுவிட முடியும் என நினைக்கிற நயவஞ்சகம் அது!''
''இந்தத் தேர்தல் களத்தில் நடிகர் விஜய்யின் நிலைப்பாடு எப்படி இருக்கும்?''
''விஜய் மட்டும் அல்ல... களத்துக்கு வராத பலருக்கும் இந்த ஆட்சியை அகற்றவேண்டிய ஆவேசம் இருக்கிறது. என்னுடைய நோக்கம் வேறு... விஜய் யின் நோக்கம் வேறு. ஆனால், இருவருமே ஆட்சி மாற்றத்தை விரும்புகிறோம். தேளும் ஒரு புழு இனத்தைச் சேர்ந்ததுதான். ஆனால், அதற்கு கொடுக்கு வந்தது எப்படி? பலரும் நசுக்க நசுக்க, தன்னைத் தற்காத்துக்கொள்ள தானாகவே அதற்கு கொடுக்கு முளைத்துவிட்டது. அப்படி கொடுக்கு முளைத்த தேள்தான் விஜய். அவர் என்ன ஆற்று மணலை அள்ளி விற்றாரா? மதுபானத் தொழிற்சாலை தொடங்கி மலை மலையாக பணம் குவித்தாரா? அப்படி இருக்க, அவருக்கு ஏன் இத்தனை பிரச்னைகள்? 'இளைஞன்’ படம்தான் ஓட வேண்டும்; 'காவலன்’ ஓடக் கூடாது என ஏன் கட்டுப்பாடு? தன்மானத்துக்காக மூன்று கோடி ரூபாயைத் தூக்கிக் கொடுக்கவேண்டிய இக்கட்டை விஜய்க்கு ஏற்படுத்தியது ஏன்? விநியோகஸ்தரையே தூக்கிக்கொண்டு போன விசித்திரங்களை எல்லாம் விஜய்யால் எப்படிப் பொறுக்க முடியும்? ஒரு புழுவின் மனதோடு அத்தனையையும் பொறுத்துக்கொண்டவருக்கு அடுத்தடுத்த அவமானங்களும் அடக்குமுறைகளுமே கொடுக்கைக் கொடுத்துவிட்டன. அந்தக் கொடுக்கு, அவர்களைக் கொத்தாமல் விடாது. அதற்காக, விஜய் களத்துக்கு வந்து பிரசாரம் செய்யவேண்டியது இல்லை. அவர் வீட்டுக்குள் இருந்தாலே போதும். அவர் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார் என்பது கடைக்கோடி ரசிகனுக்கும் தெரியும்!''
''ஜெயலலிதா - விஜயகாந்த் கூட்டணியை வலுவானதாகப் பார்க்கிறீர்களா?''
''ஆட்சி மாற்றத்தை அனைத்துத் தரப்பு மக்களும் விரும்புகிறார்கள் என்பதற்கு இங்கே ஆயிரத்தெட்டு பிரச்னைகள் இருக்கின்றன. தமிழகத்தில் இருக்கும் பெரிய கட்சியான அ.தி.மு.க-வுடன் விஜயகாந்த் இணைந்திருப்பது நிச்சயமான ஆட்சி மாற்றத்துக்கு வழிவகுக்கும். இத்தனை வருடங்களாகத் தொடர் போராட்டங்களைச் சந்திக்கும் தே.மு.தி.க. இன்றைக்கு அ.தி.மு.க. கூட்டணியில் 41 இடங்களைப் பெற்று இருப்பது அந்தக் கட்சித் தொண்டர்களை நம்பிக்கையோடு நிமிரவைத்து இருக்கிறது. அவர்களின் உழைப்புக்கான அறுவடைக் காலம்தான் இந்தத் தேர்தல்.
இவர்களோடு அண்ணன் வைகோவும் இடதுசாரித் தலைவர்களும் இணைந்திருப்பது மக்களின் கூட்டணியாக அந்த அணியை மாற்றி இருக்கிறது. இதைச் சொல்வதாலேயே, இரட்டை இலை சின்னத்துக்கு சீமான் ஆதரவு கேட்கிறார் என சொல்லத் தொடங்கிவிடுவார்கள். காங்கிரஸை எதிர்த்து நிற்பது இலையாக இருந்தாலும் பம்பரமாக இருந்தாலும் அதைத்தான் ஆதரிப்பேன். இங்கே சின்னம் முக்கியம் இல்லை. எண்ணம்தான் முக்கியம். கலைஞரையும் காங்கிரஸையும் எதிர்ப்பது ஜெயலலிதாவை ஆதரிப்பதற்குச் சமமாகிவிடுமே எனப் பதறுகிறார்கள் சிலர்... அதைப்பற்றி கவலை இல்லை. அ.தி.மு.க. பார்ப்பன தலைமையிலான கட்சி என்பதற்காக கலைஞரின் அத்தனை கொடுமை களையும் சகித்துக்கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை!''
நன்றி விகடன்...
''தி.மு.க-வின் ராஜினாமா நாடகம் காங்கிரஸிடம் எடுபடாமல் போய்விட்டதே..?''
''தமிழகத்தின் மிச்சம் மீதித் தன்மானத்தையும் காங்கிரஸின் காலடியில் அர்ப்பணம் செய்துவிட்டு வந்திருக்கிறது தி.மு.க. '63 தொகுதிகள் கேட்பது நியாயமா..? அதுவும் தங்களுக்கான தொகுதிகளை அவர்களே தேர்ந்தெடுக்கலாமா..?’ என்றெல்லாம் உரிமைக் குரல் எழுப்பி, முறுக்கிக் கிளம்பினார் முதல்வர். அதை வரவேற்று தி.மு.க-வினரே பட்டாசு வெடித்தார்கள். 'உலகத் தமிழர்களின் உளமார்ந்த எண்ணம் ஈடேறிவிட்டதாக’ப் பாராட்டி பொன்னாடை போர்த்திப் பூரித்தார்கள் பலரும். இறுதியில் என்ன நடந்தது? அதே 63 தொகுதிகளில் ஒன்றுகூடக் குறையாமல் நிர்பந்தித்து வாங்கி இருக்கிறது காங்கிரஸ். மீசை முறுக்கி ராஜினாமா கடிதங்களோடு கிளம்பியவர்கள், காங்கிரஸின் ஆசையை நிறைவேற்றிவிட்டு, 'கூட்டணி தொடரும்’ என வெட்கமே இல்லாமல் வெளியே வருகிறார்களே... இந்தக் கேவலமான சரணாகதி தேவைதானா? மலை மலையாக சொந்த இன மக்கள் கொன்று குவிக்கப்பட்டபோதுகூட கருணையையும் சுரணையையும் கணக்கில்கொள்ளாதவர்கள், தேர்தலுக்காகத் திடீர் தன்மானம் காட்டினால் காங்கிரஸே சிரிக்காதா? சீட்டுக்காகப் பதவியைத் துறப்பதாகச் சொன்னவர்கள், ஈழ நாட்டுக்காகத் துறக்க முன்வந்தார்களா? விசாரணை வளையம் தன் குடும்பத்தைச் சுற்றிவிடக் கூடாது என்பதற்காக கலைஞர் வீசிய மிரட்டல் அஸ்திரம் முனை மழுங்கி விழுந்திருக்கிறது. காங்கிரஸை வீழ்த்துவதற்காகவே தொடங்கப்பட்ட இயக்கத்தை, காங்கிரஸின் காலடியில் விழவைத்த பெருமை கலைஞர் பெருமகனாரையே சேரும்!''
''காங்கிரஸின் சாதிப்பை முதல்வரின் ராஜ தந்திரத்துக்கு விழுந்த அடியாகக் கருதுகிறீர்களா?''
''கிச்சுக்கிச்சு மூட்டாதீங்க... யார் ராஜ தந்திரி? எம்.ஜி.ஆர். உயிரோடு இருந்த வரை ஆட்சிக் கட்டிலில் அமர முடியாமல் அல்லாடித் தவித்தாரே, இவரா ராஜ தந்திரி? ஜெயலலிதாவிடம்கூட அரசியல் நடத்த முடியாமல் அவர் ஆட்சிக் கட்டிலில் அமர அடிகோலினாரே... இவரா ராஜ தந்திரி? வருகிற, போகிற கட்சிகளுக்கு எல்லாம் ஏழு சீட்டு, இருபது சீட்டு என அள்ளி வழங்கி, எப்படியாவது மறுபடியும் ஆட்சியைப் பிடிக்க மாட்டோமா என அஞ்சிக் கிடப்பவரை அரசியல் ராஜ தந்திரி என்றால், சிரிப்புத்தான் வருகிறது!''
''தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து கனிமொழி உள்ளிட்டவர்களும் களம் இறங்கிக் கைதாகி இருக்கிறார்களே?''
''கனிமொழி மட்டுமா களம் இறங்கினார்... காங்கிரஸ்காரர்களே களம் இறங்கினார்கள். 'தமிழ் மீனவர்கள் தாக்கப்படக் கூடாது’ என ராஜபக்ஷே மட்டும்தான் கொடி பிடிக்கவில்லை. இவர்கள் நாடகப் போராட்டம் நடத்திய அடுத்த நாளே நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடத்தப்பட்டார்கள். இவர்களின் போராட்டத்தாலேயே அவர்கள் விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. திரைக்கதைகளில்கூட இயற்ற முடியாத கற்பனையை இங்கே கடை விரிக்கிறார் கள். இதே மீனவப் பிரச்னைக்காகத் தானே நானும் போராடினேன். நான் பேசினால் ஐந்து மாதம் சிறைவாசம்... கனிமொழி பேசினால் ஐந்து மணி நேர சிறைவாசமா? அப்பாவின் கையில் இருக்கும் காவல் துறை, மகளைக் கைது செய்து விடுவித்த கூத்தைப் போராட்டம் எனச் சொல்லாதீர்கள். நாடகத்தாலேயே நாட்டை ஆண்டுவிட முடியும் என நினைக்கிற நயவஞ்சகம் அது!''
''இந்தத் தேர்தல் களத்தில் நடிகர் விஜய்யின் நிலைப்பாடு எப்படி இருக்கும்?''
''விஜய் மட்டும் அல்ல... களத்துக்கு வராத பலருக்கும் இந்த ஆட்சியை அகற்றவேண்டிய ஆவேசம் இருக்கிறது. என்னுடைய நோக்கம் வேறு... விஜய் யின் நோக்கம் வேறு. ஆனால், இருவருமே ஆட்சி மாற்றத்தை விரும்புகிறோம். தேளும் ஒரு புழு இனத்தைச் சேர்ந்ததுதான். ஆனால், அதற்கு கொடுக்கு வந்தது எப்படி? பலரும் நசுக்க நசுக்க, தன்னைத் தற்காத்துக்கொள்ள தானாகவே அதற்கு கொடுக்கு முளைத்துவிட்டது. அப்படி கொடுக்கு முளைத்த தேள்தான் விஜய். அவர் என்ன ஆற்று மணலை அள்ளி விற்றாரா? மதுபானத் தொழிற்சாலை தொடங்கி மலை மலையாக பணம் குவித்தாரா? அப்படி இருக்க, அவருக்கு ஏன் இத்தனை பிரச்னைகள்? 'இளைஞன்’ படம்தான் ஓட வேண்டும்; 'காவலன்’ ஓடக் கூடாது என ஏன் கட்டுப்பாடு? தன்மானத்துக்காக மூன்று கோடி ரூபாயைத் தூக்கிக் கொடுக்கவேண்டிய இக்கட்டை விஜய்க்கு ஏற்படுத்தியது ஏன்? விநியோகஸ்தரையே தூக்கிக்கொண்டு போன விசித்திரங்களை எல்லாம் விஜய்யால் எப்படிப் பொறுக்க முடியும்? ஒரு புழுவின் மனதோடு அத்தனையையும் பொறுத்துக்கொண்டவருக்கு அடுத்தடுத்த அவமானங்களும் அடக்குமுறைகளுமே கொடுக்கைக் கொடுத்துவிட்டன. அந்தக் கொடுக்கு, அவர்களைக் கொத்தாமல் விடாது. அதற்காக, விஜய் களத்துக்கு வந்து பிரசாரம் செய்யவேண்டியது இல்லை. அவர் வீட்டுக்குள் இருந்தாலே போதும். அவர் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார் என்பது கடைக்கோடி ரசிகனுக்கும் தெரியும்!''
''ஜெயலலிதா - விஜயகாந்த் கூட்டணியை வலுவானதாகப் பார்க்கிறீர்களா?''
''ஆட்சி மாற்றத்தை அனைத்துத் தரப்பு மக்களும் விரும்புகிறார்கள் என்பதற்கு இங்கே ஆயிரத்தெட்டு பிரச்னைகள் இருக்கின்றன. தமிழகத்தில் இருக்கும் பெரிய கட்சியான அ.தி.மு.க-வுடன் விஜயகாந்த் இணைந்திருப்பது நிச்சயமான ஆட்சி மாற்றத்துக்கு வழிவகுக்கும். இத்தனை வருடங்களாகத் தொடர் போராட்டங்களைச் சந்திக்கும் தே.மு.தி.க. இன்றைக்கு அ.தி.மு.க. கூட்டணியில் 41 இடங்களைப் பெற்று இருப்பது அந்தக் கட்சித் தொண்டர்களை நம்பிக்கையோடு நிமிரவைத்து இருக்கிறது. அவர்களின் உழைப்புக்கான அறுவடைக் காலம்தான் இந்தத் தேர்தல்.
இவர்களோடு அண்ணன் வைகோவும் இடதுசாரித் தலைவர்களும் இணைந்திருப்பது மக்களின் கூட்டணியாக அந்த அணியை மாற்றி இருக்கிறது. இதைச் சொல்வதாலேயே, இரட்டை இலை சின்னத்துக்கு சீமான் ஆதரவு கேட்கிறார் என சொல்லத் தொடங்கிவிடுவார்கள். காங்கிரஸை எதிர்த்து நிற்பது இலையாக இருந்தாலும் பம்பரமாக இருந்தாலும் அதைத்தான் ஆதரிப்பேன். இங்கே சின்னம் முக்கியம் இல்லை. எண்ணம்தான் முக்கியம். கலைஞரையும் காங்கிரஸையும் எதிர்ப்பது ஜெயலலிதாவை ஆதரிப்பதற்குச் சமமாகிவிடுமே எனப் பதறுகிறார்கள் சிலர்... அதைப்பற்றி கவலை இல்லை. அ.தி.மு.க. பார்ப்பன தலைமையிலான கட்சி என்பதற்காக கலைஞரின் அத்தனை கொடுமை களையும் சகித்துக்கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை!''
நன்றி விகடன்...
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: விஜய் கொடுக்கு விடாது கலைஞரை...
சீமானின் இதுபோன்ற பேச்சுக்கள் என்றுமே தனித்துவம் வாய்ந்தது. யாருமே கூறத் தயங்கும் உண்மைகளை தைரியத்துடன் வெளிக் கொண்டுவருகிறார்.
கேட்கப்பட்ட ஒவ்வொரு கேள்விகளுக்கும் எப்படி நெத்தியடியாகப் பதில் தந்துள்ளார் பாருங்கள்!
வாழ்த்துகள் சீமான்! உங்களின் முயற்சி வெற்றி பெறட்டும்!
கேட்கப்பட்ட ஒவ்வொரு கேள்விகளுக்கும் எப்படி நெத்தியடியாகப் பதில் தந்துள்ளார் பாருங்கள்!
வாழ்த்துகள் சீமான்! உங்களின் முயற்சி வெற்றி பெறட்டும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: விஜய் கொடுக்கு விடாது கலைஞரை...
இப்படியாவது ஒருசிலர் தைரியமாக வருகிறார்களே முன்பு.... அதற்கே சல்யூட் சீமானுக்கு....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: விஜய் கொடுக்கு விடாது கலைஞரை...
சீமான் அதிகம் மக்கள் பிரச்சினைகளை கையிலெடுக்கவேண்டும் .எப்போபார்தாலும் ஈழம் பற்றி மட்டுமே பேசினால் கதைக்கு என்பதை அவ்ர் புரிந்து கொள்ள வேண்டும் .இல்லன்னா இன்னொரு வைகோ வாக ஆகிவிடும் சூழல் ஏற்படும் .அப்புறம் ஒரே அழுக்காச்சிதான்
ராம்
ராம்
கோவை ராம்- இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
Re: விஜய் கொடுக்கு விடாது கலைஞரை...
சீமான் ரொம்ப கோவக்காரர் மனித உரிமைகளை மதிக்கக் கூடியவர்
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Similar topics
» கொடுக்கு – ஒரு பக்க கதை
» கலைஞரை காப்பியடிக்கும் ஒபாமா-
» கலைஞரை எதிர்ப்பது சரியானதுதான்!
» கலைஞரை வறுத்தெடுத்த கேப்டன் டி.வி!
» தேள் கொடுக்கு - Heliotropium indicum மருத்துவப் பயன்கள்
» கலைஞரை காப்பியடிக்கும் ஒபாமா-
» கலைஞரை எதிர்ப்பது சரியானதுதான்!
» கலைஞரை வறுத்தெடுத்த கேப்டன் டி.வி!
» தேள் கொடுக்கு - Heliotropium indicum மருத்துவப் பயன்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|