புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் விவசாயம்..!!! Poll_c10வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் விவசாயம்..!!! Poll_m10வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் விவசாயம்..!!! Poll_c10 
44 Posts - 45%
heezulia
வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் விவசாயம்..!!! Poll_c10வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் விவசாயம்..!!! Poll_m10வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் விவசாயம்..!!! Poll_c10 
28 Posts - 29%
mohamed nizamudeen
வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் விவசாயம்..!!! Poll_c10வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் விவசாயம்..!!! Poll_m10வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் விவசாயம்..!!! Poll_c10 
6 Posts - 6%
வேல்முருகன் காசி
வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் விவசாயம்..!!! Poll_c10வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் விவசாயம்..!!! Poll_m10வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் விவசாயம்..!!! Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் விவசாயம்..!!! Poll_c10வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் விவசாயம்..!!! Poll_m10வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் விவசாயம்..!!! Poll_c10 
5 Posts - 5%
Raji@123
வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் விவசாயம்..!!! Poll_c10வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் விவசாயம்..!!! Poll_m10வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் விவசாயம்..!!! Poll_c10 
3 Posts - 3%
prajai
வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் விவசாயம்..!!! Poll_c10வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் விவசாயம்..!!! Poll_m10வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் விவசாயம்..!!! Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் விவசாயம்..!!! Poll_c10வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் விவசாயம்..!!! Poll_m10வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் விவசாயம்..!!! Poll_c10 
2 Posts - 2%
Barushree
வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் விவசாயம்..!!! Poll_c10வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் விவசாயம்..!!! Poll_m10வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் விவசாயம்..!!! Poll_c10 
2 Posts - 2%
Srinivasan23
வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் விவசாயம்..!!! Poll_c10வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் விவசாயம்..!!! Poll_m10வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் விவசாயம்..!!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் விவசாயம்..!!! Poll_c10வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் விவசாயம்..!!! Poll_m10வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் விவசாயம்..!!! Poll_c10 
164 Posts - 41%
ayyasamy ram
வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் விவசாயம்..!!! Poll_c10வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் விவசாயம்..!!! Poll_m10வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் விவசாயம்..!!! Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் விவசாயம்..!!! Poll_c10வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் விவசாயம்..!!! Poll_m10வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் விவசாயம்..!!! Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் விவசாயம்..!!! Poll_c10வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் விவசாயம்..!!! Poll_m10வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் விவசாயம்..!!! Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் விவசாயம்..!!! Poll_c10வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் விவசாயம்..!!! Poll_m10வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் விவசாயம்..!!! Poll_c10 
8 Posts - 2%
prajai
வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் விவசாயம்..!!! Poll_c10வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் விவசாயம்..!!! Poll_m10வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் விவசாயம்..!!! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் விவசாயம்..!!! Poll_c10வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் விவசாயம்..!!! Poll_m10வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் விவசாயம்..!!! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் விவசாயம்..!!! Poll_c10வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் விவசாயம்..!!! Poll_m10வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் விவசாயம்..!!! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் விவசாயம்..!!! Poll_c10வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் விவசாயம்..!!! Poll_m10வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் விவசாயம்..!!! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் விவசாயம்..!!! Poll_c10வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் விவசாயம்..!!! Poll_m10வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் விவசாயம்..!!! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் விவசாயம்..!!!


   
   
avatar
சரண்.தி.வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 261
இணைந்தது : 07/08/2009

Postசரண்.தி.வீ Wed Sep 02, 2009 9:15 am

வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் விவசாயம்..!!! Tblfpnnews_35323297978


விவசாயத்திற்காக பல ஆயிரம் கோடி திட்டங்கள் இருந்தாலும், அரிசியை என்னவோ அண்டை மாநிலங்களில் வாங்கிச் சாப்பிட வேண்டிய நிலையில் தான் உள்ளோம். குறிப்பாக, தமிழகத்தின் வடமாவட்டங்களைச் சேர்ந்த மக்களின் சாப்பாட்டுக்காக ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் இருந்து தான் பெற வேண்டிய நிலை.


தமிழகத்தில் விவசாயம் செய்வதற்காக 60 லட்சம் எக்டேராக இருந்த நிலப்பரப்பு, 2006ம் ஆண்டின் கணக்கின் படி, 51 லட்சம் எக்டேராக குறைந்துள்ளது. நகர்ப்புற
விஸ்தரிப்பு, தொழிற்சாலைகள், கல்வி நிலையங்கள் என வளர்ச்சிப் பாதையில்
செல்வதாக கூறிக்கொண்டு, விளைநிலங்களை அழித்து, விவசாயத் தொழில்
நிலப்பரப்பை குறுக்குப்பாதையாக மாற்றிவிட்டோம்.விவசாயம் செய்யப்படும்
நிலப்பரப்பு மட்டுமல்ல; விவசாயத்துக்கான கூலி வேலைக்கு ஆட்களும்
குறைந்துவிட்டனர். அப்படியே ஆள் கிடைத்தாலும், அவர்கள் கேட்கும் சம்பளத்தைக் கொடுக்க இயலவில்லை. வேலைக்காக, கிராமப்புற மக்கள் நகர்ப்புறங்களில் குடியேறுகின்றனர். இதனால், காவிரி டெல்டா பகுதிகளில் கூட, விவசாயம் நமது தொழில் என்பது, இன்றைய தலைமுறைக்கு அன்னியமாகவே இருக்கிறது.


விவசாயம் செய்வதில் அப்படி என்ன பிரச்னை? அரசின் விவசாய உற்பத்திக்கான திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளனவா? என்பது குறித்து, காவிரி டெல்டா பகுதி விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலர் ஆறுபாதி கல்யாணம் கூறியதாவது: தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின் மூலம், நாடு முழுவதும் 5,000 கோடி ரூபாய் மதிப்பில் திட்டக்காலம் வரை அமலாக்கப்படுகிறது. இருப்பினும்,
இத்திட்டம் விவசாயிகளை முழுவதும் சென்றடையவில்லை.காவிரி டெல்டா பகுதி
விவசாயிகளுக்கு சரியான நேரத்தில், தண்ணீர் கிடைப்பதில்லை. இதனால்,
நிலத்தடி நீரை மட்டுமே நம்பி விவசாயம் செய்ய வேண்டிய சூழ்நிலை. நான்கு
லட்சம் ஏக்கரில், குறுவை சாகுபடி செய்ய வேண்டிய இடத்தில், 1.5 லட்சம்
ஏக்கரில் மட்டுமே பயிர் செய்தோம். தேவையான நேரத்தில் தண்ணீர் கிடைக்காததால், மீதமுள்ள 2.5 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில், விவசாயம் செய்ய
முடியாத நிலை ஏற்பட்டதால், 500 கோடி ரூபாய் மதிப்பிலான உற்பத்தி இழப்பு
ஏற்பட்டது.உற்பத்தி செய்யும் நெல்லை கொள்முதல் செய்வதிலும் சிக்கல் உள்ளது.


தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதி உட்பட ஒரு சில இடங்களைத் தவிர, பல மாவட்டங்களில், கொள்முதல் அங்காடிகள் கிடையாது. 60 லட்சம் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டாலும், அரசின் மூலமாக 10 லட்சம் டன் வரையே கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால், இடைத்தரகர்களிடம், அவர்கள் நிர்ணயிக்கும் விலைக்கு, நெல்லை விவசாயிகள் கொடுக்கின்றனர்.அரசியல்வாதிகள் பினாமிகளாக செயல்படும் இந்த இடைத்தரகர்களால், இன்று விவசாயிகள் விவசாயத்திற்காக, வாங்கிய கடனைக் கூட திருப்பிச் செலுத்த முடியவில்லை. இருக்கும் ஒரு சில கொள்முதல் நிலையங்களிலும் அரசு, நெல்லுக்கு முறையான விலை நிர்ணயிப்பதில்லை.

ஒரு குவின்டால் நெல்லுக்கு 1,500 ரூபாய் கொடுக்க வேண்டிய இடத்தில், 1,000
ரூபாய்க்கு தான் எடுத்துக் கொள்கின்றனர். 1,000 ரூபாய்க்கு ஒரு குவின்டால்
நெல் கொள்முதல் செய்யப் பட்டால், வெளிச்சந்தையில் ஒரு கிலோ அரிசியின் விலை 18 ரூபாய்க்கு கிடைக்க வேண்டும். இன்று 30 ரூபாய்க்கு குறைந்து அரிசியே
கிடையாது.இவ்வாறு கல்யாணம் கூறினார்.

"விவசாயம் தழைக்க மீண்டும் இயற்கை விவசாயம் ஒன்றே தீர்வாக இருக்க முடியும்' என்கிறார் வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்.

அவர் கூறியதாவது:"செம்மை நெல் சாகுபடி' என்று அரசு சொல்கிற, "ஒத்தை நாத்து சாகுபடி' முறையைப் பயன்படுத்தி, இயற்கை விவசாயத்தை மீண்டும் செய்தால் மட்டுமே, நிலத்தடி நீரையும், நில வளத்தையும் காப்பாற்ற முடியும். இந்த விவசாய முறைக்கு அதிகமான தண்ணீரும் தேவைப்படாது. ஆனால் இதற்கு, அரசு ஊழியர்களுக்கு சரியான பயிற்சி இல்லை.குறிப்பாக, நெல்லுக்கு அதிகமான தண்ணீர் உதவாது. இந்த இயற்கை உரங்களைக் கொண்டு ஒத்தை நாற்று சாகுபடியை செய்தோமானால், பெரிய அளவில் விவசாயத்தில் முன்னேற்றம் அடையலாம். இவ்வகை விவசாயத்தின் மூலம், தண்ணீர் குறைந்த அளவே போதுமானது. கடன் தொல்லை அதிகமாக இருக்காது. இதன் மூலம் விளையும் அரிசியால், உணவும் நஞ்சாகாது.இவ்வாறு நம்மாழ்வார் கூறினார்.


விவசாயிகளுக்கு, அரசின் மூலம் எத்தனை சலுகைகள் கிடைத்தாலும் விவசாயத் தொழிலை மீண்டும் மீட்க முடியாத அளவுக்கு நிலைமை சென்று கொண்டிருக்கிறது. இன்றைக்கு விவசாயம் செய்பவர்களில் அனைவருமே பம்புசெட் கொண்டு நிலத்தடி நீரை எடுத்து விவசாயம் செய்வதில்லை. குறிப்பாக, ஐந்து ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள ஏழை விவசாயிகள் அனைவரும் ஏரி, கால்வாய் மற்றும் ஆற்றுப்
பாசனங்களையே நம்பி உள்ளனர். விவசாயத் தொழிலில், அதிகளவில் உள்ள
இவர்களுக்கு உதவும் விதமாக, அடிப்படைத் தேவையான நீர் வளத்தைக் காக்க
வேண்டும்.

avatar
சரண்.தி.வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 261
இணைந்தது : 07/08/2009

Postசரண்.தி.வீ Wed Sep 02, 2009 9:16 am

இது குறித்து, தமிழ்நாடு அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:
மேட்டூர், முக்கொம்பு உட்பட காவிரிப் படுகைப் பகுதிகளில் உள்ள, அனைத்து
குளம், ஆறு, ஏரி எனக் காவிரிப் படுகைகளில் ஒட்டியிருக்கும் நீர்நிலைகளில்,
நமக்கு கிடைக்கும் தண்ணீரில், 168 டி.எம்.சி., தண்ணீரை மட்டுமே சேமித்து
வைக்க முடிகிறது. காவிரியில் இருந்து கிடைக்கும் மீதமுள்ள 200க்கும்
மேற்பட்ட டி.எம்.சி., தண்ணீர் வீணாகப் போகிறது.இந்தத் தண்ணீரைச் சேமிக்க,
தமிழக அரசு அனைத்து குளம், ஏரி, ஆறுகளை முறையாகத் தூர்வாரி சீரமைக்க
வேண்டும். காவிரி டெல்டா பகுதி, சமவெளியாக இருப்பதால், குறைந்தது 30 முதல்
40 டி.எம்.சி., தண்ணீரை அங்கு சேமிக்க அரசு முயற்சி மேற்கொள்ள
வேண்டும்.தமிழகத்தில் மொத்தம் 38 ஆயிரம் ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகள்
முறையாகத் தூர்வாரப்பட வேண்டும். வீராணம் ஏரியில் மூன்றில் ஒரு பங்கு
மட்டுமே தண்ணீரை சேமிக்க முடிகிறது. கடந்த 45 ஆண்டுகளுக்கு மேலாக
பம்புசெட் விவசாயம் செய்து வருவதால், நிலத்தடி நீர்மட்டம் பெரிய அளவில்
குறைந்துள்ளது. கோவை, சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பல மாவட்டங்களில்
பல நூறு அடிக்குக் கீழே தான் தண்ணீரே கிடைக்கிறது.பாசனத்திற்கு
உத்தரவாதம், நீர்வளத்தைப் பெருக்குவது போன்றவற்றை அரசு
முறைப்படுத்தும்போது விவசாயி, கடனை எதிர்பார்த்துக் கொண்டு இருக்க
மாட்டான். இவ்வாறு பாலகிருஷ்ணன் கூறினார்.


ரியல் எஸ்டேட் :
தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டு
உள்ளதால், இதைத் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் ரியல் எஸ்டேட்
தொழில் அதிபர்கள், பல ஏக்கரில் விளைநிலங்களை வாங்கி, அங்கு எல்லைக் கற்கள்
அமைத்து, கம்பி கட்டி, தரிசாக போட்டு வைக்கின்றனர்.கடந்த 10 ஆண்டுகளில்
மட்டும் 20 சதவீதம் விளைநிலம் விவசாயிகளின் கையைவிட்டு போய்விட்ட
நிலையில், மேலும் பல லட்சம் ஏக்கர்களை தரிசு நிலமாக்கும் இந்த புதிய
கலாசாரத்திற்கு முடிவு இல்லாமல் உள்ளது. தரிசு நில மேம்பாட்டுத் திட்டம்
என்பதெல்லாம், வெறும் பேச்சாக உள்ள நிலையில், சிறப்பு பொருளாதார
மண்டலங்கள் அமைக்கிறோம் என்று, "சிப்காட்'டும் விளைநிலங்களை
விரட்டிக்கொண்டிருக்கிறது.


கழிவுநீரால் பாதிப்பு :தமிழகம்
முழுவதும் தண்ணீர் பிரச்னை இருக்கிற நிலையில், நீலகிரி, மேற்குத்
தொடர்ச்சி
மலையில் தொடங்கும் பவானி ஆறு கோவை, ஈரோடு மாவட்டம் வழியாக பவானி
கூடுதுறையில் உள்ள காவிரியில் கலக்கிறது. பவானி ஆற்றுப் பகுதியில் உள்ள
ஆலைகளில் இருந்து கழிவுநீர் கலப்பதால், விவசாயம் பாதிக்கப்பட்டு,
இப்பகுதியில் உற்பத்தி கேள்விக்குறியாகியுள்ளது.


இதுகுறித்து பவானி பாசன விவசாய சங்கத் தலைவர் நல்லசாமி கூறியதாவது: பவானி
ஆற்றின் கரையோரங்களில் சாய ஆலைகள், சலவை ஆலைகள், காகிதத் தொழிற்சாலைகள் என
200க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. பவானி ஆற்றிலிருந்து
தண்ணீரை எடுத்து தங்களது தேவையைப் பூர்த்தி செய்துகொள்ளும்
இந்நிறுவனங்கள், பயன்படுத்திய பின் மாறும் கழிவு நீரை, மீண்டும் பவானி
ஆற்றிலே விட்டுவிடுகின்றன. இதனால் பவானி மாசுபட்டு, இந்த ஆற்றையே
நம்பியுள்ள
எங்கள் பகுதி விவசாயிகள், மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
ஆறு மாசுபட்டதால், குடிநீருக்கும் பிரச்னை உருவாகியுள்ளது. பவானி ஆற்றில்
கலக்கும் இந்த அசுத்தத்தால், இது காவிரி
நதி, வீராணம் ஏரி எனப் பரவி சென்னை மக்களின் குடிநீர் வரைக்கும் பிரச்னையை
உருவாக்கியுள்ளது. மேட்டுப்பாளையம் முதல் பில்லூர் அணை வரை அனைத்து
இடங்களும் மாசுபட்டு, விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது. இது
மட்டுமில்லாது, நீலகிரி மாவட்டம், கேரளாவின் அமைதி பள்ளத்தாக்கு பகுதியில்
மரங்கள் வெட்டப்பட்டு குடியேற்றம் நடப்பதாலும், அங்கு டீ மற்றும் காபி
எஸ்டேட்டுகள் உருவாகியிருப்பதாலும் விவசாயிகளுக்கு புதுவித சிக்கல் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு நல்லசாமி கூறினார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக