ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்யாணமாம் கல்யாணம்!

Go down

கல்யாணமாம் கல்யாணம்! Empty கல்யாணமாம் கல்யாணம்!

Post by சிவா Wed Sep 02, 2009 12:54 am

- ஹரிசந்திர பிரசாத்

""பையன் வீட்ல என்ன பேசிக்கறாங்க...?''

கால்மேல் கால் போட்டு,தோரணையாக கேட்டார், கதிரேசன். காரியதரிசி, பணிவாய் பதில் சொன்னார்...

""நம்ம வீட்ல பெண் எடுக்க கசக்குமா? பையன்லருந்து, அந்த வீட்டு பாட்டி வரைக்கும் எல்லாரும் சந்தோஷத்திலும், ஆச்சரியத்திலும் திக்குமுக்காடிப் போ யிட்டாங்க...''


கதிரேசனின் தடித்த உதடுகளில் பெருமை ஒரு புன்னகைக் கோட்டை இழுத்தது.

""ம்ம்...'' என்று தொண்டையை செருமிக் கொண்டு, ""அது இருக்கட்டும். நிச்சயதார்த்தம், கல்யாணமெல்லாம் எப்ப வைக்கலாம்ன்னு சொன்னாங்களா...''

""அதெல்லாம் உங்க முடிவு. உங்களுக்கு எந்தெந்த தேதியில சவுகரியப்படுதோ, அப்படியே செய்துக்கலாம்ன்னுட்டாங்க.''

தெருவைப் பார்த்த பெரிய திண்ணையில் அமர்ந்து அவர் கேட்டுக் கொண்டிருக்க, நின்று பதில் சொல்லிக் கொண்டிருந்தார் காரியதரிசி...

அந்த நேரம், தெருவில் நீலவண்ணத்தில் புது கார் ஒன்று சோப்பு கட்டிபோல் நழுவி ஓடி மறைந்தது. அவர் புருவத்தை நெறித்து பார்த்தார்.

""பாண்டுரங்கன் மகளும், மருமகனும் போறாங்க...''

""கார் புதுசாயிருக்கு...''

""போன வாரம்தான் வாங்கி கொடுத்திருக்கார்...''

""அவனுக்கு இருக்கிற திமிர், அவன் வாரிசுக்கும் இருக்கு. மூக்கு ஒழுகிகிட்டு திரிஞ்ச பொண்ணுக்கு கார் வந்ததும் கண்ணு தெரியலையோ...''

""விடுங்க...சின்னஞ்சிறுசுங்க. நம்ம விஷயத்துக்கு வருவோம். பையன் வீட்ல என்னஎதிர்பார்க்கறாங்கன்னா... நகை இருபது பவுனுக்கு குறையாமலும், ரொக்கம் அம்பதும், கட்டில், பீரோ, பாத்திர வரிசைகளோடு, ஒரு டூ-வீலரும் கொடுத்தால் நல்லாயிருக்குமாம். கட்டாயம் ஒண்ணுமில்லையாம்...''

மேற்கொண்டு பேசவிடாமல் தடுத்து,""பாண்டுரங்கன் பொண்ணுக்கு எவ்வளவு செய்தான்?'' என்று கேட்டார்.

""அது எதுக்குங்க நமக்கு... அவர் கல்யாணமா பண்ணாரு... திருவிழால்ல நடத்தினாரு...''

""நாமும் அப்படியே செஞ்சிருவோம்...'' என்றார், கதிரேசன்.

தயங்கினார் காரியதரிசி.

""நாம யாருன்னு காட்டணும். பாண்டுரங்கன் இந்த ஊருக்கு பஞ்சம் பிழைக்க வந்தவன்; என்கிட்ட ஆதரவு கேட்டு நின்னவன். அவன், அரசியல்லயும், தொழில்லயும் மேலுக்கு வர காரணமானவனே நான். நேத்து வந்தவன் பொண்ணு கல்யாணத்தை, ஒரு ஊர் திருவிழாவாய் நடத்தினால், நான் பரம்பரை பணக்காரன் - ஏழு ஊர் திருவிழாவாய் நடத்திக் காட்ட வேண்டாமா...'' என்று பேசிய போது, அவர் குரலிலும், பார்வையிலும் ரோஷம் தளும்பியது.

"அவருக்கு பணம் வேற, வேற வழியில ஊத்தா பாயுது. வாரி இறைச்சார்... நமக்கு அப்படியா...' என்று, ஏதோ சொல்ல வந்த காரியதரிசி, கதிரேசனின் பார்வைக்கு வாய் மூடிக் கொண்டார்.

""கேட்டுக்க... பெண்ணுக்கு நூறு பவுன்; மாப்பிள்ளைக்கு பத்து பவுன், உறவுக்காரங்க அத்தனை பேருக்கும் பட்டு வேட்டி, சட்டை; மாப்பிள்ளைக்கு நாலு லட்சம் பெறுமான வீடு; வீட்டுச் சமான்கள்ள, பாதி வெள்ளி, மீதி வெண்கலம்; கட்டில் முதற்கொண்டு சாப்பாட்டு மேசை வரை எல்லாம் தேக்கு.

""முக்கியமா... கல்யாணப் பரிசாய் ஒரு கார் கொடுக்கறோம்...! என்ன செலவானாலும் சரி...'' என்றார்.
சற்று முன் இருந்த மனிதர் இல்லை இவர்; இப்போது எது சொன்னாலும் இவர் ஏற்க மாட்டார் என்று தெரிந்ததும், தலையாட்டி பின் வாங்கினார், காரியதரிசி.

""பாண்டுரங்கன் வீட்டு கல்யாணச் செலவு, கார் உட்பட 15 லட்சம். இந்த வானம் பார்த்த பூமியில... எனக்குத் தெரிஞ்சு நடந்த... ஏன், உங்களுக்கும் கூடத்தான் தெரியும்... பிரமாண்டமான கல்யாணம் அது. நம்மால் அதைவிட சிறப்பா பண்ணிட முடியும். அந்த அளவுக்கு வசதி இருக்கு. ஆனால், ஒரு கல்யாணத்தைதான் அப்படி பண்ண முடியும்...'' சொல்லி நிறுத்தினார், காரியதரிசி. கதிரேசன் மனைவி, தேவானையம்மாள், குழப்பமாக பார்த்தாள்.

""என்ன பார்க்கறீங்க.... பாண்டுரங்கனுக்கு ஒரே பொண்ணு; வேறு வாரிசே இல்லை. இந்த வீட்ல மூணும் பொண்ணுங்க... நான் என்ன சொல்ல வர்றேன்னு அம்மாவுக்கு புரியும்...''
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கல்யாணமாம் கல்யாணம்! Empty Re: கல்யாணமாம் கல்யாணம்!

Post by சிவா Wed Sep 02, 2009 12:55 am

""புரியாமலென்ன... ஒரு பொண்ணுக்கு பிரமாண்டமா செய்துட்டா போதுமா... மற்ற ரெண்டு குழந்தைகளுக்கும், அதற்கு இணையாக செய்ய வேணாமா... அப்படி செய்ய முடியாமல் போனால், ஊர் என்ன சொல்லும், இரண்டு பெண்களும்தான் என்ன நினைப்பாங்க...''

""அதுதான் என் கவலையும். அய்யாவுக்கும் இது தெரியும். அதனாலதான் காயத்ரியின் கல்யாண பேச்சு எடுத்தப்போ,

"கணேசா... எனக்கு மூணு பெண்களும் சமம். வயசைத் தவிர வேற எந்த விஷயத்திலும் அவங்களுக்குள் ஏற்றத்தாழ்வு இருக்கக் கூடாது; கல்யாண விஷயத்திலும் அப்படிதான். மூத்த பெண்ணுக்கு என்ன அந்தஸ்துல மாப்பிள்ளை பார்க்கறோமோ... அதே அந்தஸ்திலுள்ள மாப்பிள்ளைகளைதான் மத்த ரெண்டு பேருக்கும் பார்க்கணும்...'ன்னு சொல்லிகிட்டிருந்தாரு...''

""பிடிவாதக்காரராச்சே அவர்...'' என்று அந்த அம்மாள், கவலைப்பட்டாள். காரியதரிசி சொன்னார்,

""அவசரக் கூட்டம் ஒண்ணு நடத்தணும்மா... அய்யா இல்லாத நேரமா பார்த்து நீங்க, நான், காயத்ரி, சாரதா, அகிலான்னு மூணு பெண்களையும் வச்சு பேசுவோம். ஏதாவது யோசனை கிடைக்கும்.''

கதிரேசன், டவுனுக்கு போயிருந்த நேரம், வீட்டுக்குள் கூட்டம் கூடியது. காரியதரிசி, கணக்கு புத்தகத்தைக் கொண்டு வந்து வைத்தார். எல்லாரையும் ஒரு வட்டம் பார்த்தார். பிறகு,""இந்த நோட்டை இதுவரை நீங்கள் பார்த்திருக்க முடியாது; அய்யாவுக்கு அடுத்தபடியாக எனக்குதான் தெரியும்; அம்மாவுக்கு கூட இதுபத்தி முழுசா தெரியாது. இந்த நோட்டு, இந்த குடும்பத்தோட நாலு தலைமுறை ரகசியம்ன்னு கூட சொல்லலாம்.

""இதை அம்பலப்படுத்தறது, அய்யாவுக்கு நான் செய்ற துரோகம்; இருந்தாலும், அவரோட நன்மைக்காக இப்ப அதை நான் செய்ய வேண்டியிருக்கு. உங்கள் மேல உள்ள நம்பிக்கை, அக்கறையால இதை உங்களுக்கு காண்பிக்கறேன். பார்த்துட்டு, மனசோடு வச்சிக்கங்க...'' என்று அந்த கணக்கு நோட்டுகளையும், தஸ்தாவேஜுகளையும் கொடுத்தார். பேரமைதி விழுந்தது.

காயத்ரி கேட்டாள், ""இந்த கணக்கெல்லாம் எதற்கு! குடும்ப ரகசியம், ரகசியமாகவே இருக்கட்டும். எதையும் ஆதாரத்தோடுதான் சொல்லணும்ன்னு இல்லை. நீங்கள் வெறும் காரியதரிசி மட்டுமில்லை; அதற்கும் மேலே. எதுவானாலும் வார்த்தையாலயே சொல்லுங்க, போதும்.'' மற்ற பெண்களும் வழிமொழிந்தனர்.


""ஆமாம்பா. அவங்க சொல்றது சரி. ஏதோ பேசணும்னுட்டு, இதையெல்லாம் ஏன் கொண்டு வந்தே...''

நெகிழ்ந்தார் காரியதரிசி.

""நீங்கள் என் மேல் வச்சிருக்கிற நம்பிக்கைக்கு நன்றிம்மா. நான் இதையெல்லாம் காட்ட நினைச்சதுக்கு காரணம்... வீட்டு வரவு - செலவு, இருப்பு நிலவரமெல்லாம் எல்லாரும் தெரிஞ்சுக்கணும்ன்னுதான். இதுக்கு, இப்ப என்ன அவசியம் வந்ததென்றால்...'' என்று துவங்கி, ""காயத்ரி... உனக்கு அப்பா நடத்த நினைக்கிற விமரிசையான கல்யாணத்தை தடுக்கப் பார்க்கறேன்னு, என்னை தவறா நினைச்சுடாதே. நான் ஒட்டுமொத்த குடும்பத்தின் நலனை நினைச்சு சொல்றேன்.''
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கல்யாணமாம் கல்யாணம்! Empty Re: கல்யாணமாம் கல்யாணம்!

Post by சிவா Wed Sep 02, 2009 12:57 am

""தவறாய் நினைக்க ஒண்ணுமில்லை மாமா...! ஒரு வகையில் ரொம்ப நல்ல விஷயமிது. நாங்க பாட்டுக்கு ஆளுக்கொரு கற்பனைல இருந்துடக் கூடாது பாருங்க. வீண் பெருமைக்காக ஆடம்பரக் கல்யாணம் பண்ணிட்டு, பிறகு, இந்த வீடு கஷ்டத்தில் விழுந்துட்டால், வாழப் போகிற இடத்தில் நான் மட்டும் சந்தோஷமா இருக்க முடியாது. தவிர, அப்பா எப்பவும் வசதியில தாழக்கூடாது.


""இப்ப உள்ளது போல கவுரவமாய், யாருக்கும் தலைவணங்காமல், யாரையும் எதிர்பார்க்காமல், கடைசிவரை கம்பீரமாய் வாழணும். அம்மா, அப்பா ஒத்துமையாய் இருக்கணும். எங்கள் கல்யாணச் செலவுகளால இந்த குடும்பம் நொடிந்து போச்சுங்கற அவப்பெயர் வரக்கூடாது,'' என்றாள்; மற்ற பெண்களும் அதே போல கூறினர். மகள்களின் விசால மனதையும், அவர்களின் தெளிவான பேச்சுகளையும் கேட்டு, மனதை அழுத்திக் கொண்டிருந்த பாரம் நீங்கியது போல் நிம்மதியோடும், பாசத்தோடும் தேவானையம்மாள் பார்த்த நேரம்...


கதவு தட்டப்பட்டது. பூனையைக் கண்ட எலிகள் போல், ஆளுக்கொரு பக்கம் சிதறி ஓடினர். கதவு திறக்கப்பட்டு, உள்ளே வந்த கதிரேசன்,""என்ன நினைச்சுகிட்டிருக்கீங்க எல்லாரும். நானும் இந்த குடும்பத்தைச் சேர்ந்தவன்ற நினைப்பில்லாம, நீங்களே மாநாடு நடத்தறீங்க. கதவுல காதுவச்சு கேட்கப் போய், எனக்கும் உண்மை நிலைமைய புரிஞ்சுக்க ஒரு வாய்ப்பு கிடைச்சுது; இல்லைன்னா, கண்ணை மூடிகிட்டு, நிலைக்கு மீறி நடந்திருப்பேன். இதை முதல்லயே என்கிட்ட எடுத்து சொல்றதுக்கென்ன. எங்க செகரட்டரி...'' என்று சப்தம் போடார்.

""இங்க இருக்கணுங்கோ...'' என்று கதவுக்கு பின்னால் இருந்து வந்தார், கணேசன்.

எல்லாரும் கொல்லென்று சிரித்தனர்.

""என்னய்யா இது... கோமாளி மாதிரி. சரி, சரி... மாப்பிள்ளை வீட்ல கேட்டத குறைவில்லாம செய்துடலாம். அடுத்த வாரமே நிச்சயதார்த்தம் வச்சிக்கலாம்ன்னு சொல்லு. மீதி வேலைகளையெல்லாம் நீங்களே சேர்ந்து, எப்படி செய்தால் சரியாயிருக்குமோ, அப்படி செய்ங்க.

""மணமக்களை ஆசிர்வாதம் பண்றதை தவிர, வேற வேலை எனக்கு இருக்கப்படாது... சொல்லிட்டேன்,'' என்று திண்ணைக்கு போனார், கதிரேசன். மாப்பிள்ளை வீடு நோக்கி மகிழ்ச்சியுடன் கிளம்பினார், காரியதரிசி. காயத்ரி, கல்யாணம் சீரும், சிறப்புமாக நடந்தது. உறவு, நட்புக்கு குறைவில்லை. வந்தவர்களுக்கெல்லாம் தன் கையாலேயே வெற்றிலை, பழம் கொடுத்து வழியனுப்பினார், கதிரேசன்.

"நிறைகுடம் தளும்பாது; குறைகுடம் கூத்தாடும்ன்னு சொல்வாங்க. அது சரியாதான் இருக்கு. பரம்பரை பணக்காரங்க என்ன நிதானமா, அடக்கமா கல்யாணத்தை நடத்தறாங்க. புதுப் பணக்காரனும் நடத்தினானே... ஆரவாரமாய், எலக்ஷன் கூட்டம் மாதிரி...' என்று யாரோ சொல்லிக் கொண்டு போவது, அவர் காதுகளில் விழத்தான் செய்தது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கல்யாணமாம் கல்யாணம்! Empty Re: கல்யாணமாம் கல்யாணம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum