ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்களும் பட்டயக் கணக்காளர் ஆகலாம்!

Go down

நீங்களும் பட்டயக் கணக்காளர் ஆகலாம்!   Empty நீங்களும் பட்டயக் கணக்காளர் ஆகலாம்!

Post by சிவா Wed Mar 16, 2011 9:29 am

பட்டயக் கணக்காளர் (சார்ட்டட் அக்கவுண்டன்ட்) படிப்பானது ஏனைய எல்லா நிதித் துறை சார்ந்த படிப்புகளையும் விட தனித்துவம் வாய்ந்தது, மரியாதைக்கு உரியது. இந்தப் படிப்புக்கு இந்தியாவில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பும், சம்பளமும் காத்துக்கொண்டிருக்கிறது. பிற மேல்படிப்புகளை ஒப்பிடும்போது இந்தப் படிப்புக்கான செலவு மிக மிகக் குறைவு. ஆனால் கிடைக்கும் மதிப்பு மிக அதிகம். சம்பளத்தைப் பொறுத்தவரை மாதம் ரூ. 50 ஆயிரம் முதல் திறமைக்கு ஏற்றவாறு பெறலாம்.

சி.ஏ. தேர்வில் வெற்றி பெறுவது எளிதல்ல என்று பரவலாக ஒரு தவறான கருத்து நிலவி வருகிறது. சரியான முயற்சியும், பயிற்சியும் இருந்தால் வெற்றி நிச்சயம் உங்கள் காலடியில். பொதுவாக நமது மாணவர்கள் சி.ஏ. படிப்பில் அதிக ஆர்வம் காட்டாத நிலை உள்ளது. பெற்றோர்களும் தமது பிள்ளைகளை சி.ஏ. படிக்கத் தூண்டுவதில்லை. `சி.ஏ. படித்து முடிக்க முடியாது. மிகவும் கடினம்' என்பது பெற்றோர் மத்தியில் நிலைபெற்றுள்ள கருத்து. நமது திறமையை நாமே உணராமல் இருப்பதால் எழுவது இக்கருத்து.

`உரசிப் பார்த்தால்தான் தங்கமா, பித்தளையா என்று தெரியும்' என்று ஒரு பழமொழி கூறுவார்கள். துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் கப்பல் பாதுகாப்பாகத்தான் இருக்கும். ஆனால் கப்பல் அதற்காகக் கட்டப்படவில்லை. கடலில் பயணிக்கும்போதுதான் புதிய தேசங்களை எட்ட முடியும். அதுபோல படிப்புக் கடலில் இறங்கினால்தான் சாதனைப் பிரதேசங்களை அடைய முடியும்.

பட்டயக் கணக்காளர் படிப்புப் படிக்க விரும்பும் மாணவர்கள், புரிந்து படிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஆனால் மனப்பாடம் செய்யப் பழக்கப்பட்ட நமது மாணவர்கள் இதைக் கடினமாகக் கருதுகிறார்கள்.

சரி, பட்டயக் கணக்காளர் (சி.ஏ.) படிப்புக்கான படி நிலைகளைப் பார்க்கலாமா...

1. பத்தாம் வகுப்பு அல்லது அதற்குச் சமமான தேர்ச்சி பெற்றவர்கள் ’காமன் புரொபசியன்சி டெஸ்ட்' (CPT)-ல் தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

2. பிளஸ் 2 அல்லது அதற்குச் சமமான தேர்வு எழுதிய பின்பும், CPT -க்கு பதிவு செய்து 60 நாட்களுக்குப் பிறகும் CPT எழுதலாம். வருடத்துக்கு இரண்டு முறை CPT நடத்தப்படுகிறது.

3. CPT மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற பிறகு தேர்வாளர்கள் தங்கள் பெயரை `இன்டக்ரேட்டட் புரொபஷனல் கம்பீட்டன்ஸ் கோர்ஸ்'ல் (IPCC) பதிவு செய்துகொள்ள வேண்டும்.

4. சிறிஜி பதிவு செய்தபிறகு 9 மாதங்களுக்குப் பின் தேர்வாளர்கள் 35 மணி நேர `ஓரியண்டேஷன் கோர்ஸை' முடிக்க வேண்டும்.

5. பணிப் பயிற்சிக்கு (Articled Training) முன், 100 மணி நேர, தகவல் தொழில்நுட்பப் பயிற்சியை பெற வேண்டும்.

6. தேர்வாளர்கள் `குரூப்-1' (நான்கு தாள்கள்) மற்றும் `குரூப்-2' (மூன்று தாள்கள்) `இன்டக்ரேட்டட் புரொபஷனல் கம்பீட்டன்ஸ் எக்ஸாமை' (IPCE) எழுதலாம்.

7. ஏதேனும் ஒரு `குரூப்'பில் தேர்ச்சி பெற்றபின், மூன்றாண்டு `பிராக்டிக்கல் டிரெய்னிங்' (Articled training)-ல் சேர வேண்டும்.

8. ஐ.பி.சி.யின் இரண்டு `குரூப்'பிலும் சேர்ந்து தேர்ச்சி பெற்றபின், சி.ஏ. பைனல் கோர்ஸில் சேர வேண்டும்.

9. பிராக்டிக்கல் டிரெய்னிங்கின் கடைசி 12 மாதங்களில் `ஜெனரல் மானேஜ்மெண்ட் அண்ட் கம்ïனிகேஷன் ஸ்கில்ஸ்' (GMCS) (15 நாட்கள்) தேர்ச்சி பெற வேண்டும்.

10. மூன்று வருட `ஆர்ட்டிக்கிள்டு டிரெய்னிங்'கை சரிவர முடிக்க வேண்டும்.

11. `ஆர்ட்டிக்கிள்டு டிரெய்னிங்'கின் கடைசி 6 மாதங்களில் சி.ஏ. பைனல் தேர்வை எழுதலாம்.

12. சி.ஏ. பைனல், ஜி.எம்.சி.எஸ். தேர்ச்சிக்குப் பிறகு உறுப்பினராகப் பதிவு செய்துகொள்ள வேண்டும். அதன்பிறகு ஒருவர், சார்ட்டட் அக்கவுண்டன்ட்தான்.

நமது மாணவர்கள் சி.ஏ. படிப்பில் தடுமாறுவதற்கு முக்கியக் காரணம், சரிவரப் பயிற்சியின்றித் தேர்வை எதிர்கொள்ளும் நிலையே.

இந்தத் தேர்வை பள்ளி, கல்லூரித் தேர்வுகள் போல எதிர்கொள்ளக் கூடாது. ஏனென்றால் இது முழுவதும் நடைமுறைச் செயல்பாடுகள், நிதி சார்ந்த நடைமுறையில் உள்ள பல்வேறு சட்டங்கள், அது சார்ந்த நுணுக்கங்கள் பற்றியதே. பணிப் பயிற்சி படிநிலையில் இவை அனைத்தையும் மாணவர்கள் கற்றுக்கொள்வதற்கு ஏதுவாக இந்தப் படிப்பு அமைக்கப்பட்டிருக்கிறது.

பட்டயக் கணக்காளர் படிப்பை மேற்கொள்ளும் மாணவர்கள் கவனத்தில்கொள்ள வேண்டியவை

1. முதலில், இந்தப் படிப்பு கடினமானது அல்ல என்பதை உணர வேண்டும். சிலை வடிக்க நாம் பயன்படுத்துவது சிற்றுளியைத்தானே?

2. சரியான, தேவையான, போதுமான புத்தகங்களை மட்டுமே மட்டும் பயன்படுத்த வேண்டும்.

3. மனப்பாடம் செய்து தேர்வு எழுதுவதை 100 சதவீதம் கைவிட வேண்டும்.

4. ஒவ்வொரு பாடத்தையும் நடைமுறை நிகழ்வுகளுடன் ஒப்பிட்டு முடிவெடுக்கும் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

5. இந்தப் படிப்பை முடித்தவுடன், நீங்கள் பிறருக்கு ஆலோசனை வழங்கப் போகிறீர்கள். எனவே ஒவ்வொரு சவாலையும் அதன் அடிவேர் வரை சென்று பார்த்து
விடுங்கள். என்ன, ஏன், எதற்கு என்பன போன்ற கேள்விகளுக்கான பதில்களை அறிந்துகொள்ளுங்கள்.

6. தேர்வை நீங்கள் ஆங்கிலம் அல்லது இந்தியில் மட்டுமே எழுத முடியும். தமிழ் மட்டும் அறிந்த மாணவர்கள் கவலைப்பட வேண்டாம். மூன்று மாத ஆங்கிலப் பயிற்சி இதற்குப் போதுமானது. ஆனால் உங்களை நீங்கள் நன்றாகத் தயார் செய்துகொள்ள வேண்டும்.

சி.ஏ. படிப்பு, ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே கூற வேண்டும். காரணம் இந்தப் படிப்புக்கு இத்தனை இடங்கள்தான் உண்டு, இடஒதுக்கீடு போன்ற சட்டதிட்டங்களும் இல்லை. நன்கொடை, பரிந்துரை எதுவும் இல்லை. உழைப்பே மந்திரம். முயற்சி வெற்றி தரும்.

இந்தப் படிப்பில் நான்கு முதல் ஐந்தாண்டு காலத்துக்குத் திட்டமிட்டுப் பயிற்சியைத் தொடங்கினால் கடைசியில் வெற்றி கை மேல் வரும்.

நூறு கோடியைத் தாண்டும் நம் நாட்டில் சி.ஏ. படித்தவர்கள் எண்ணிக்கை வெறும் 0.01 சதவீதம்தான். இவர்களில் பாதிப் பேர் வெளிநாடுகளில் பணிபுரிபவர்கள். இப்படிப்புப் படித்தவர்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனவே சி.ஏ. படிப்பைத் தேர்வு செய்யுங்கள். வாழ்வில் நிச்சயமாக வளம் பெறுங்கள்.

www.icai.org இணையதளத்தில் பட்டயக் கணக்காளர் படிப்பைப் பற்றிய அனைத்துத் தகவல்களும் உங்களுக்குக் கிடைக்கும்.

கட்டுரை: சார்ட்டட் அக்கவுண்டன்ட்
எஸ். செல்வக்குமார்


நீங்களும் பட்டயக் கணக்காளர் ஆகலாம்!   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum