புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்பிகை சொன்ன வேத மந்திரம்! I_vote_lcapஅம்பிகை சொன்ன வேத மந்திரம்! I_voting_barஅம்பிகை சொன்ன வேத மந்திரம்! I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
அம்பிகை சொன்ன வேத மந்திரம்! I_vote_lcapஅம்பிகை சொன்ன வேத மந்திரம்! I_voting_barஅம்பிகை சொன்ன வேத மந்திரம்! I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
அம்பிகை சொன்ன வேத மந்திரம்! I_vote_lcapஅம்பிகை சொன்ன வேத மந்திரம்! I_voting_barஅம்பிகை சொன்ன வேத மந்திரம்! I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
அம்பிகை சொன்ன வேத மந்திரம்! I_vote_lcapஅம்பிகை சொன்ன வேத மந்திரம்! I_voting_barஅம்பிகை சொன்ன வேத மந்திரம்! I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அம்பிகை சொன்ன வேத மந்திரம்! I_vote_lcapஅம்பிகை சொன்ன வேத மந்திரம்! I_voting_barஅம்பிகை சொன்ன வேத மந்திரம்! I_vote_rcap 
19 Posts - 3%
prajai
அம்பிகை சொன்ன வேத மந்திரம்! I_vote_lcapஅம்பிகை சொன்ன வேத மந்திரம்! I_voting_barஅம்பிகை சொன்ன வேத மந்திரம்! I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
அம்பிகை சொன்ன வேத மந்திரம்! I_vote_lcapஅம்பிகை சொன்ன வேத மந்திரம்! I_voting_barஅம்பிகை சொன்ன வேத மந்திரம்! I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
அம்பிகை சொன்ன வேத மந்திரம்! I_vote_lcapஅம்பிகை சொன்ன வேத மந்திரம்! I_voting_barஅம்பிகை சொன்ன வேத மந்திரம்! I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அம்பிகை சொன்ன வேத மந்திரம்! I_vote_lcapஅம்பிகை சொன்ன வேத மந்திரம்! I_voting_barஅம்பிகை சொன்ன வேத மந்திரம்! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
அம்பிகை சொன்ன வேத மந்திரம்! I_vote_lcapஅம்பிகை சொன்ன வேத மந்திரம்! I_voting_barஅம்பிகை சொன்ன வேத மந்திரம்! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்பிகை சொன்ன வேத மந்திரம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 15, 2011 9:21 pm

"உன்னோடு ஐவர் ஆனோம்!' என்று ராமபிரானால் சகோதரனாக ஏற்கப்பட்ட பெருமைக்கு உரியவன், குகன்.

எளிமையான இறைபக்தியுடன் திகழ்ந்த குகன், பரசுராமர், ஸ்ரீராமர் போன்ற அவதார மூர்த்திகளுக்கு நேரடியாகவே திருவடி பூஜைகளைச் செய்யும் பாக்கியம் பெற்றவர்.

குகன் காவிரிக் கரையில் கங்கை தீர்த்தம் கொண்டு ராமச்சந்திரனின் திருப்பாதம் கழுவி, சந்தனத்தினால் ஆன திருக்காப்பை அவரது திருவடிகளில் தனது கரத்தால் நேரடியாக இட்டு பாத பூஜை செய்வித்தான். ஸ்ரீராமர் குகனைக் கட்டித் தழுவினார்.

அப்போது ராமரின் பரவுரிகளுள் ஒன்று ஆற்றில் நழுவியது. அதனை எடுத்து வர குகன் சட்டென்று விரைந்தபோது ஸ்ரீராமர், "அடியேனுடைய சத்தியப் பிரமாணப் பீதாம்பரமாகவே இந்த குகச் செல்வம் இருக்கையில் இன்னோரு ஆடை எதற்கு?' எனக் கூறிச் சிரித்தாராம் ராமபிரான். ராமாயணத்தில் எத்தனையோ புனைக்கதைகள் இடைசெருகலாக இருப்பதுபோல் இத்தலத்தின் புராணமும் புதுமையாக இருக்கிறது.

குகனை ஸ்ரீராமர் ஆலிங்கனம் செய்தபோது, ஸ்ரீராமனின் திருமார்பில் செறிந்த சந்தனம், குகனின் நெற்றியில் ஒட்டிக்கொண்டது.

ஸ்ரீராமரின் திருவடிகளுக்கு குகன் சந்தன அபிஷேகம் செய்த திருநாள் சதய நட்சத்திர தினமாகும். ஸ்ரீராமருக்கு பாதபூஜைகளை ஆற்றியதால், குகன் ஈஸ்வரனது அருளும் பெறுவதற்குரிய தெய்வாதார சக்திகள் நிறைந்தவரானார் என்கின்றனர்.

குகனுக்கு அருளாசி புரிந்த இறைவன், குஹேஸ்வரர். அவர் அருள்பாலிக்கும் தலம், கொள்ளிடக்கரையில் அமைந்துள்ள கூகூர்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்த ஆலயம், மேற்கு திசை நோக்கி அமைந்துள்ளது.

தென் திசையில் உள்ள முகப்பைத் தாண்டியதும் விசாலமான பிராகாரமும், நந்தியம் பெருமானும், பலிபீடமும் உள்ளன.

இங்கு அருள்பாலிக்கும் நந்தியம் பெருமானின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. அவ்வளவு அழகான நந்தியம் பெருமானை வேறு எங்கும் பார்ப்பது அரிது!

அடுத்துள்ள மகா மண்டபத்தின் இடது புறம், அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள கருவறையில் அன்னை கல்யாண சுந்தரி நின்ற கோலத்தில் இளநகை தவழும் முகத்துடன் அருள்பாலிக்கிறாள்.

அன்னைக்கு நான்கு கரங்கள், தன் மேல் இரு கரங்களில் தாமரை மலரைத் தாங்கியும்; கீழ் இரு கரங்களில் அபய, வரத, முத்திரைகளுடனும் விளங்குகிறாள்.

அன்னை கல்யாண சுந்தரிக்கு ஒரு தனிக் கதை உண்டு.

என்ன கதை அது?

மகா பிரளயத்திற்கு முன் சர்வேஸ்வரன் ஞான யோகத்தில் ஆழ்ந்திருந்தார். சிருஷ்டிக்காக அவர் விழித்தெழ வேண்டிய தருணம் நெருங்கிக் கொண்டிருந்தது

ஆனால் சர்வேஸ்வரனோ ஞான யோகத்தில் இருந்ததால் அவரது யோக நிலையை எப்படிக் கலைப்பது என யோசித்தார்கள் தேவர்கள்.

யாவரும் திருமாலை வேண்டினர். உடனே, மத்ஸ்ய அவதார மூர்த்தியாக சாந்த குணங்களுடன் தங்கக் கவசம் போல் ஒளி விடும் பெருமாள் தோன்றினார். அவர் அருகே காமதேனு தன் நான்கு புதல்வியருடன் வந்த நின்றது. அடுத்து சகல விதமான அலங்காரங்களுடன் கல்யாண சுந்தரியாய் அம்பிகை தோன்றினாள். பின் அம்பிகை தனது மெல்லிய குரலில் "கூ...கூ...' என வேத நாதங்களை ஓதிட, இறைவன் ஞான யோகத்திலிருந்து மீண்டார். சிருஷ்டி பரிபாலனத்திற்கு பிரம்மாவுக்குத் துணை புரிந்தார்.

கல்யாண சுந்தரியான அம்பிகை "கூ...கூ...' என வேத நாதங்களை ஓதியதால். இத்தலம் கூகூர் எனப் பெயர் பெற்றது.

மகா மண்டபத்தின் எதிரே கருவறையில் இறைவன் குஹேஸ்வரர் லிங்கத் திருமேனியராக மேற்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார்.

ஆலயத்தின் திருச்சுற்றில் பிள்ளையார், முருகன், வள்ளி-தெய்வானை மற்றும் சண்டீஸ்வரர் சன்னதி உள்ளன. வடகிழக்கு மூலையில் நவகிரக நாயகர்களின் சன்னதி உள்ளது. கிழக்கில் பைரவரும், தெற்கில் தட்சிணாமூர்த்தியும் அருள்பாலிக்கின்றனர்.

தினமும் இரண்டு கால பூஜை நடைபெறும் இந்த ஆலயத்தில் திருப்பணி வேலைகள் தற்போது நடந்து வருகின்றன.

நவராத்திரி, கார்த்திகை தீபம், மார்கழி 30 நாட்கள், சிவராத்திரி, ஆண்டுப் பிறப்பு, பொங்கல் ஆகிய நாட்களில் இங்கு இறைவனுக்கும் இறைவிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. ஐப்பசி பௌர்ணமியில் இறைவனுக்கு அன்னாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. விஜயதசமி அன்றும் மாசி மகத்தன்றும் இறைவன்-இறைவி வீதியுலா வருவதுண்டு. அன்று தீர்த்த வாரியும் நடைபெறுகிறது.

சஷ்டி மற்றும் பூசம் போன்ற நாட்களில் முருகனுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவதுடன் வள்ளி-தெய்வானையுடன் அவர் வீதியுலா வருவதுண்டு. அன்று தீர்த்த வாரியும் நடைபெறுகிறது.

குகனுக்கு ஈஸ்வரன் அருளிய தினம் சதய நட்சத்திர நாளாகக் கருதப்படுவதால், இறைவனுக்கு ஒவ்வொரு மாதமும் சதய நட்சத்திர நாளில் சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. இந்த நாளில் இங்குள்ள இறைவன், இறைவியை வழிபடுவதால் பல நற்பலன்கள் கிடைக்கும் எனக் கூறுகின்றனர் பக்தர்கள்.

சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தவறாது வழிபட வேண்டிய கோயில். ராமாயண காலத்தில் இருந்தே சிறப்புடன் திகழும் இத்தலம் மாத சிவராத்திரி நாட்களில் மகரிஷிகளால் வழிபடப்பெற்ற பெருமைக்கும் உரியது.

யுகம் ஒன்றில் பிரளய சிருஷ்டிக்காக மூல சக்திகளை அளித்த தலம் இது. எனவே மூல ஆற்றல் சிறைந்த தர்டையால் இறைவனை பூஜிப்பது சிறப்பானது எனக் கூறுகிறது ஆலய தல வரலாறு.

அமாவாசை சித்தர் எனும் மகான் ஒருவர் வழிபட்ட தலங்களுள் இதுவும் ஒன்று. இவர் ஏறி அமர்ந்து தவம் புரிந்து சில மரங்கள் இப்பகுதியில் இன்றும் இருக்கின்றனவாம்.

பிரிந்த நட்பையும் உறவையும் மீண்டும் மலரச் செய்திட இத்தலத்து இறைவன் அருள்புரியக் கூடியவர் என்பதும்; கன்னிப் பெண்களுக்கு விரும்பிய கணவன் அமைய இங்குள்ள இறைவி கல்யாண சுந்தரி அருள்பாலிக்கிறாள் என்பதும் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. அது நிஜமானதே என்பதை இங்கு வந்த பலரும் உணர்ந்திருப்பதே இத்தலத்தின் பெருமைக்கு சான்று.

திருச்சி-அன்பில் சாலையில் உள்ள லால்குடியிலிருந்து 7 கி.மீ. தொலைவில் கொள்ளிட நதிக் கரையில் அமைந்துள்ளது. கூகூர் என்ற இந்தத்தலம்.

-ஜெயவண்ணன்.



அம்பிகை சொன்ன வேத மந்திரம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Mar 15, 2011 9:48 pm

மிக அருமையான ஸ்தல புராணம்... குகனைப்பற்றி ஒரு வரி மாத்திரமே அறிந்தது..... ஆனால் இதில் இன்னும் சற்று விரிவாக அறிய முடிந்தது. அது மட்டுமில்லாது அம்பாளை குறித்த புராணமும் அறிய முடிந்தது..... அமாவாசை சித்தரும் வழிப்பட்டதால் இன்னும் பெருமை அடைகிறது.

அருமையான பகிர்வுக்கு அன்பு நன்றிகள் சிவா..



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அம்பிகை சொன்ன வேத மந்திரம்! 47
varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Wed Mar 16, 2011 2:18 am

அம்பிகை சொன்ன வேத மந்திரம்! 678642 அம்பிகை சொன்ன வேத மந்திரம்! 678642

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக