புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பைபிள் மலாய் பதிப்பை விடுவியுங்கள், சரவாக் பாதிரியார் கூட்டமைப்பு கோரிக்கை  Poll_c10பைபிள் மலாய் பதிப்பை விடுவியுங்கள், சரவாக் பாதிரியார் கூட்டமைப்பு கோரிக்கை  Poll_m10பைபிள் மலாய் பதிப்பை விடுவியுங்கள், சரவாக் பாதிரியார் கூட்டமைப்பு கோரிக்கை  Poll_c10 
11 Posts - 50%
ayyasamy ram
பைபிள் மலாய் பதிப்பை விடுவியுங்கள், சரவாக் பாதிரியார் கூட்டமைப்பு கோரிக்கை  Poll_c10பைபிள் மலாய் பதிப்பை விடுவியுங்கள், சரவாக் பாதிரியார் கூட்டமைப்பு கோரிக்கை  Poll_m10பைபிள் மலாய் பதிப்பை விடுவியுங்கள், சரவாக் பாதிரியார் கூட்டமைப்பு கோரிக்கை  Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பைபிள் மலாய் பதிப்பை விடுவியுங்கள், சரவாக் பாதிரியார் கூட்டமைப்பு கோரிக்கை  Poll_c10பைபிள் மலாய் பதிப்பை விடுவியுங்கள், சரவாக் பாதிரியார் கூட்டமைப்பு கோரிக்கை  Poll_m10பைபிள் மலாய் பதிப்பை விடுவியுங்கள், சரவாக் பாதிரியார் கூட்டமைப்பு கோரிக்கை  Poll_c10 
53 Posts - 60%
heezulia
பைபிள் மலாய் பதிப்பை விடுவியுங்கள், சரவாக் பாதிரியார் கூட்டமைப்பு கோரிக்கை  Poll_c10பைபிள் மலாய் பதிப்பை விடுவியுங்கள், சரவாக் பாதிரியார் கூட்டமைப்பு கோரிக்கை  Poll_m10பைபிள் மலாய் பதிப்பை விடுவியுங்கள், சரவாக் பாதிரியார் கூட்டமைப்பு கோரிக்கை  Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
பைபிள் மலாய் பதிப்பை விடுவியுங்கள், சரவாக் பாதிரியார் கூட்டமைப்பு கோரிக்கை  Poll_c10பைபிள் மலாய் பதிப்பை விடுவியுங்கள், சரவாக் பாதிரியார் கூட்டமைப்பு கோரிக்கை  Poll_m10பைபிள் மலாய் பதிப்பை விடுவியுங்கள், சரவாக் பாதிரியார் கூட்டமைப்பு கோரிக்கை  Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
பைபிள் மலாய் பதிப்பை விடுவியுங்கள், சரவாக் பாதிரியார் கூட்டமைப்பு கோரிக்கை  Poll_c10பைபிள் மலாய் பதிப்பை விடுவியுங்கள், சரவாக் பாதிரியார் கூட்டமைப்பு கோரிக்கை  Poll_m10பைபிள் மலாய் பதிப்பை விடுவியுங்கள், சரவாக் பாதிரியார் கூட்டமைப்பு கோரிக்கை  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பைபிள் மலாய் பதிப்பை விடுவியுங்கள், சரவாக் பாதிரியார் கூட்டமைப்பு கோரிக்கை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 15, 2011 6:32 pm

கூச்சிங்கில் உள்துறை அமைச்சு தடுத்து வைத்துள்ள 30,000 பைபிள் பாஹாசா மலேசியா பிரதிகளை உடனடியாக விடுவிக்குமாறு சரவாக் பாதிரியார் கூட்டமைப்பு ஒன்று கோரிக்கை விடுத்துள்ளது.

“அந்த நூல்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளது, சரவாக்கில் உள்ள கிறிஸ்துவர்களின் சமயச் சுந்ததிரத்துக்கு ஏற்பட்டுள்ள அரசியலமைப்புக்கு முரணான தடை, அப்பட்டமான அத்துமீறல்,” என அந்த கூட்டமைப்பின் தலைவர் டாரோன் தான் கூறினார்.

அந்தப் பிரதிகள் இப்போது ஜாலான் சாத்தோக் கூச்சிங்கிலுள்ள உள்துறை அமைச்சு அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன. அந்த பிரதிகளில் ‘அல்லாஹ்’ என்னும் சொல் இடம் பெற்றிருப்பதால் அவற்றை அதன் பெறுநர் வெளியில் எடுப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

கூச்சிங், மிரி, சிபு, பிந்துலு ஆகியவற்றின் பாதிரியார் அமைப்புக்களும் இபான் தேவாலாயங்களின் ஒருங்கிணைப்பு அமைப்பு ஒன்றும் அந்த கூட்டமைப்பில் அங்கம் பெற்றுள்ளன.

பைபிள் தடுத்து வைக்கப்பட்டிருப்பது மட்டும் தேவாலயங்கள் எதிர்நோக்கும் ஒரே ஒரு பிரச்னை அல்ல என்றும் தான் சொன்னார். அரசியலமைப்பு உத்தரவாதத்திற்கு பல கட்டுப்பாடுகளையும் அவை எதிர்நோக்கி வருகின்றன.

“சட்டத்திற்கு முன்பு எல்லா நபர்களும் சமம் என்றும் சமமான பாதுகாப்பைப் பெறுவதற்கு உரிமை உண்டு என்றும் சமயம், இன, வம்சாவளி, பிறந்த இடம், ஆண்-பெண் அடிப்படையில் எந்தச் சட்டத்திலும் வேறுபாடு காட்டப்படக் கூடாது என்றும் கூட்டரசு அரசியலமைப்பின் 8 வது விதி கூறுகிறது என தான் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு நபரும் தான் தேர்வு செய்யும் சமயத்தை பின்பற்றுவதற்கான உரிமையையும் 11வது விதி வழங்குவதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

“அத்துடன் மலேசியா உதயமானது தொடர்பில் சரவாக் கையெழுத்திட்ட 18 அம்ச ஒப்பந்தத்தில் சரவாக்கில் அதிகாரத்துவ சமயம் ஏதும் இல்லை எனத் தெளிவாகக் குறிக்கப்பட்டுள்ளது,” என்றார் அவர்.

“ஆகவே பைபிளைத் தடுத்து வைத்திருப்பது அரசியலமைப்புக்கு முரணானது மட்டுமல்ல. சரவாக்கிற்கான மலேசியா ஒப்பந்தத்தையும் மீறுகிறது.”

தேவாலயங்கள் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளன. தங்களது சமயத்தைக் கிறிஸ்துவர்கள் பின்பற்றுவதில் ஏற்படும் பிரச்னைகள் குறித்து அவர்கள் கடும் ஆட்சேபத்தைப் பதிவு செய்கின்றனர் என்றும் தான் கூறினார்.

அரசியலமைப்பில் குறிக்கப்பட்டுள்ளவாறு சரவாக்கில் உள்ள கிறிஸ்துவ சமூகத்தின் உரிமைகளை விவேகத்துடன் நிலை நிறுத்துமாறு அவர் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டார்.

‘சம உரிமை கொண்ட பங்காளி’

பைபிளைத் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருப்பதின் மூலம் இந்த நாட்டில் சமயப் பதற்ற நிலை ஏதும் உருவானால் அதற்கு உள்துறை அமைச்சே பதில் சொல்ல வேண்டும் என தான் நினைவுபடுத்தினார்.

“எவ்வளவு விரைவில் அந்த வேத நூல்கள் விடுவிக்கப்படுகிறதோ அந்த அளவு நாட்டுக்கு நல்லது,” எனக் கூறிய அவர், ‘அல்லாஹ்’ என்னும் சொல்லைப் பயன்படுத்துவதற்கான தடை சரவாக்கிற்கு பொருந்தாது என்ற தமது கருத்தில் அவர் உறுதியாக இருந்தார்.

“சரவாக் என்பது ஒரு வட்டாரமாகும். அது மலேசிய மாநிலங்களில் ஒன்று அல்ல. நாங்கள் மலேசியாவை ஒரு மாநிலம் என்னும் முறையில் தோற்றுவிக்கவில்லை. மலேசியாவில் இணைந்த மலாயா, சிங்கப்பூர், சபா உட்பட நான்கு வட்டாரங்களில் ஒன்று சரவாக் ஆகும் என்பதை அமைச்சு நினைவில் கொள்ள வேண்டும்.”

“ஆகவே சரவாக் மலாயாவுக்கு அடிமை அல்ல. கூட்டரசில் சம உரிமை பெற்ற வட்டாரமாகும்.”

சரவாக் 2.6 மில்லியன் மக்கள் தொகையில் கிறிஸ்துவர்கள் 43 விழுக்காட்டினர் என்பதைச் சுட்டிக் காட்டிய தான், சரவாக்கிற்குள் கொண்டு வரப்படும் பாஹாசா மலேசியா பைபிள்கள் பறிமுதல் செய்யப்படுவதற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்றும் தான் விரும்புகிறார்.

சமயம் சம்பந்தமாக கூட்டரசு அரசாங்கத்துடன் நடத்தப்படும் எந்தக் கலந்துரையாடலிலும் சரவாக் பாதிரியார் கூட்டமைப்புக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இது நாள் வரை அரசாங்கம் நடத்தும் எந்தக் கலந்துரையாடலுக்கும் அந்த கூட்டமைப்பு அழைக்கப்படவில்லை.



பைபிள் மலாய் பதிப்பை விடுவியுங்கள், சரவாக் பாதிரியார் கூட்டமைப்பு கோரிக்கை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 15, 2011 6:34 pm

மலாய்மொழி பைபிள்: இவ்வார அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்

மலாய் மொழி பைபிள் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை குறித்து அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று துணைப் பிரதமர் முகைதின் யாசின் கூறுகிறார்.

இழுபறியாகவுள்ள இப்பிரச்னைக்குத் தீர்வுகாணும் முயற்சியாக “இவ்வார அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிப்போம்”, என்றாரவர்.

நாடாளுமன்றக் கூட்டம் நடைபெறும்போது அமைச்சரவை வெள்ளிக்கிழமைகளில் கூடுகிறது.

2009-இலிருந்து, கிள்ளான் துறைமுகத்தில் ஐயாயிரம்‘அல்-கித்தாப்’பிரதிகளும் கூச்சிங் துறைமுகத்தில் 30,000 பிரதிகளும் பிடித்து வைக்கப்பட்டுள்ளன.

இந்தோனேசியாவில் அச்சடிக்கப்பட்ட அந்த பைபிள்கள் சாபா, சரவாக்கில் உள்ள கிறிஸ்துவர்கள் பயன்படுத்துவதற்காக தருவிக்கப்பட்டவை.

மலேசியா இன்று!



பைபிள் மலாய் பதிப்பை விடுவியுங்கள், சரவாக் பாதிரியார் கூட்டமைப்பு கோரிக்கை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவசங்கர்
சிவசங்கர்
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010

Postசிவசங்கர் Tue Mar 15, 2011 8:47 pm

"மலாய் பைபிள்களை விடுவிக்குமாறு அரசாங்கம் ஆணை"

தற்போது கிள்ளான் துறைமுகத்திலும் கூச்சிங் துறைமுகத்திலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாஹாசா மலேசியா பைபிள்களை விடுவிப்பதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

பிரதமர் துறை அமைச்சர் இட்ரிச் ஜாலா அந்தத் தகவலை இன்று வெளியிட்டார்.

“பாஹாசா மலேசியா பைபிள்களை வரம்புக்குட்பட்டு கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இறக்குமதி செய்யப்படுவதற்கு அனுமதிக்கும் இசாவின் கீழ் வெளியிடப்பட்ட 1882ம் ஆண்டு அரசாங்கத் தகவல் ஏட்டில் அறிவிக்கப்பட்டுள்ளபடி அந்த நூல்கள் விடுவிக்கப்படுகிறது,” என அவர் இன்றிரவு வெளியிட்ட அறிக்கை கூறியது.

1982ம் ஆண்டு தொடக்கம் அமலில் இருந்து வரும் அந்தச் சட்டத்தின் கீழ் அந்த வேத நூல்கள் “கிறிஸ்துவர்களுக்கு மட்டும்” என்னும் முத்திரையைக் கொண்டிருக்க வேண்டும்.

“அந்தத் தகவல் ஏட்டைத் தொடர்ந்து 1982ம் ஆண்டு முதல் அதன் அமலாக்கத்தில் எந்தப் பிரச்னையும் இருந்தது இல்லை.”

“ஆகவே அரசாங்கம் அந்த அம்சத்தைக் கருத்தில் கொண்டு 1982ம் ஆண்டு அரசாங்கத் தகவல் ஏட்டை பயன்படுத்தி அந்த பைபிள்களை விடுவிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது,” என இட்ரிஸ் சொன்னார்.

“மிகவும் கவனமான முழுமையான ஆய்வுக்குப் பின்னர், பாஹாசா மலேசியா பைபிள்களை விடுவிப்பது தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் கலீமா அல்லாஹ் வழக்குக்கு குந்தகத்தை ஏற்படுத்தாது என சட்டத்துறைத் தலைவர் உறுதி செய்துள்ளார்.”

“அதன் அடிப்படையில் அந்த பைபிள்களை அரசாங்கம் விடுவிக்க முடிந்துள்ளது,” என்றும் இட்ரிஸ் குறிப்பிட்டார்.

இவ்விவகாரத்தில் தாம் அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கியதாக தொடர்பு கொண்டபோது சட்டத்துறை தலைவர் அப்துல் கனி பட்டேயில் கூறினார்.

“பைபிள்களுக்கும் நடப்பில் இருக்கும் வழக்கிற்கும் ( ‘அல்லாஹ்’ என்ற சொல்லை ஹெரால்ட் பாவிப்பது பற்றியது) எவ்விதத் தொடர்பும் இல்லை என்று நான் அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கினேன்.

“அது தனிப்பட்ட வழக்கு. பைபிள் திருக்கோயில் பிராத்னைக்குப் பயன்படுவதாகும். எனக்கு அது ஒரு விவகாரமல்ல”, என்று அப்துல் கனி மேலும் கூறினார்.

'மலேசியா இன்று'

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Mar 15, 2011 8:51 pm

தகவலுக்கு அன்பு நன்றிகள் சிவசங்கர்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பைபிள் மலாய் பதிப்பை விடுவியுங்கள், சரவாக் பாதிரியார் கூட்டமைப்பு கோரிக்கை  47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக