ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

Top posting users this week
heezulia
 எமனைப் பார்த்தும் சிரிக்கலாம்!!! Poll_c10 எமனைப் பார்த்தும் சிரிக்கலாம்!!! Poll_m10 எமனைப் பார்த்தும் சிரிக்கலாம்!!! Poll_c10 
mohamed nizamudeen
 எமனைப் பார்த்தும் சிரிக்கலாம்!!! Poll_c10 எமனைப் பார்த்தும் சிரிக்கலாம்!!! Poll_m10 எமனைப் பார்த்தும் சிரிக்கலாம்!!! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

எமனைப் பார்த்தும் சிரிக்கலாம்!!!

5 posters

Go down

 எமனைப் பார்த்தும் சிரிக்கலாம்!!! Empty எமனைப் பார்த்தும் சிரிக்கலாம்!!!

Post by Aathira Tue Mar 15, 2011 6:45 pm

எமனைப் பார்த்துச் சிரிச்சிக்கலாம்!!!

யானை இருந்தாலும் ஆயிரம் பொன். இறந்தாலும் ஆயிரம் பொன் என்று சொல்லுவார்கள். அது மனிதனுக்கும் பொருந்தும் காலம் வந்து விட்டது. உச்சியில் இருக்கிற மூளை முதல் உள்ளங்காலில் உள்ள மென்மையான தோல் வரை இறந்தாலும் பிறருக்குப் பயன் படுகிறது என்பது எத்துனை மகிழ்ச்சியான செய்தியாக இருக்கிறது. அதனால் தான் இன்று இருக்கும் போது நம்மால் என்ன தானம் செய்ய முடிகிறதோ இல்லையோ இறந்த பின்னாவது மண்ணும் தீயும் தின்னும் இந்த உடலைத் தானமாக கொடுத்து மற்றவரை வாழ வைத்து நாமும் வாழலாம் என்கின்றனர் மருத்துவர்கள். இந்த விழிப்புணர்வு இன்று பெரும்பாலும் எல்லாராலும் பரப்பப் பட்டு வருகிறது. உடல் உறுப்பு தானமும் பெருவாரியாக நடக்கத் தொடங்கி விட்டது எனலாம்.

வளத்திடை முற்றத்தோர் மாநில முற்றுங்
குளத்து மண் கொண்டு குயவன் வனைந்தான்
குடமுடைந் தாலவை ஓடென்று வைப்பர்
உடலுடைந் தால்இறைப் போதும்வை யாரே

என்னடா பாடல் இது என்று குழம்ப வேண்டாம். இதன் பொருள், பிரம்மன் என்ற குயவன் மாயையாகிய மண்ணெடுத்து தாயின் வயிற்றில் வனைந்த குடமே
மனிதன். மட்குடம் உடைந்தால் அந்த ஓட்டுச் சில்லுகளை எதற்காவது உதவுமே என்று பாதுகாத்து வைப்பர். ஆனால் மனிதக்குடம் உடைந்தால் கணப்பொழுதும் பாதுகாக்க மாட்டார் என்று திருமூலர் திருமந்திரம் உரைக்கும்.

ஆனால் அந்தக் காலம் இப்போது இல்லை என்றே கூறலாம். மனித உடலை நீண்ட நாட்கள் பாதுகாத்து பயன் பெறுவது முடியாது என்பது உண்மைதான். ஆனால் உடல் பயனற்றது என்று ஒரு போதும் கூற முடியாது. கணப்பொழுதில் அதனை உரிய முறையில் பயன் படுத்த அறிந்தால் இறந்தவரின் உடலின் ஒவ்வொரு உறுப்பும் பயன் படுகிறது பிறருக்கு.

சென்ற இதழில் சாவாமை பற்றி கொஞ்சம் பார்த்தோம். சாவு என்று சொல்லும் போது இப்போது இரண்டு வகையாகப் பிரிக்க வேண்டியுள்ளது. ஒன்று இதயச்
சாவு. இதை இப்படியும் சொல்லாம். துடிப்பு அடங்குவது அல்லது மூச்சு அடங்குவது. மற்றொன்று மூளைச் சாவு.

இவ்விரண்டில் உயிர்ப்பான சாவு மூளைச்சாவு. இதயம் நின்று விட்டால்
மொத்தமும் முடிந்து விடுகிறது. ஆனால் சுமார் 1.5 கி.கி எடையும் 1260 கண் செண்டிமீட்டர் நீளமும் கொண்ட சாம்பல் நிறத்தில் இருக்கும் இந்த மூளையின் இயக்கம் நின்று விட்டால், அதாவது மூளை இறந்துவிட்டால் உடலின் மற்ற உறுப்புகள் வேறு உடலில் இருந்து இயங்கலாம். ஆதலால் அது பிற
உறுப்புகளுக்கு உயிர் கொடுக்கிறது. அப்போது அதை உயிர்ப்பான சாவு என்று கூறலாம் அல்லவா? இதை மெய்ப்பிக்கும் சான்றுகள் பாருங்கள்.

இது வரை இதுவரை 86 பேருக்கு மூளைச் சாவு ஏற்பட்டு, அவர்களிடமிருந்து 18
இதயம், 2 நுரையீரல்கள், 74 கல்லீரல்கள், 166 சிறுநீரகங்கள், 99 இதய வால்வுகள், 126 விழி வெண் படலங்கள் (கார்னியா) ஆகியவை தானமாக பெறப்பட்டுத் தேவைப்படும் நோயாளிகளுக்குப் பொருத்தப்பட்டுள்ளன. இந்த மூளைச் சாவினால் இதுவரை 479 பேர் பலன் அடைந்துள்ளனர். ஒருவர் சாவும் பலர் வாழ்வும் இம்மூளைச்சாவில் மட்டும் சாத்தியம். மூளைச் சாவில் இறந்தவர்களின் கைகளை தேவையானவர்களுக்குப் பொறுத்துவது சற்று
கடினம்தான் என்று மருத்துவர்கள் கூறினாலும், முயன்று கைகளையும் எடுத்து கைகள் இல்லாதவர்களுக்குப் பொருத்தலாம் என்று திட்டமிடப்பட்டுள்ளது. கைகள் பொருத்தப்படும் போது கால்கள் மட்டும் என்ன பொருந்தாமலா போய்விடும். நம்புவோமாக.

.இதிலிருந்து மூளை இறந்தால் உடல் உறுப்புகள் பயன் அடைகின்றன என்பதை அறிகிறோம்.. இதயம் இறந்தாலும் உறுப்புகள் பயன்படுகின்றன என்றாலும் அவை மருத்துவ மாணவர்களுக்குப் பாடம் படிக்க மட்டுமே. முந்தையதைப் போல பிற உயிருக்கு உடல் உறுப்புகளாக இயங்க முடிவதில்லை.

இந்த உயிர்ப்புச் சாவுக்கு என்று அரசு மருத்துவமனையில் (ஸ்டான்லி) “மூளை இறப்பு உறுப்பு தானப் பிரிவு “என்று ஒரு தனிப்பிரிவே தொடங்கப்பட்டு விட்டது. என்சான் உடலுக்கு சிரசே பிரதானம் என்று பழமொழி எழுந்தது தலைக்குள் இருக்கும் மூளையின் பாதுகாப்பு கருதியே. இவ்வளவு உயிருக்கு உத்திரவாதம் தரும் உருப்பு என்பதாலேயே மூளையைக் கடினமான மண்டை ஓட்டுக்குள் ஒளித்து வைத்தான் இறைவன். வெளியில் செல்லும் போது அதையும் நாம் வேறு ஒரு கபாலம் போட்டு மூடிக்கொண்டு அலைகிறோம் என்பது இன்னும்
பாதுகாப்பு கருதியே. இல்லாவிட்டால் கபால மோட்சம் கிடைத்து விடுமே இன்றைய அதிவேக போக்குவரத்தில்.

சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தியாகம் செய்த புனித மகன் ஏசு மூன்றாம நாள் உயிர்த்து எழுந்தார் என்கிறது விவிலியம். பாம்பு கடித்து உயிர் இழந்த சிறுவன் திருநாவுக்கரசு உயிர்த்து எழுந்ததையும், அழகி பூம்பாவை உயிர் பெற்று எழுந்ததையும், சீராளா என்று தாய் தந்தையர் அழைத்தவுடன் வெட்டிச் சமைக்கப்பட்ட சீராளன் உயிபெற்று ஓடி வந்ததையும் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன என்றாலும் இவை எல்லாம் அறிவியல் ஆராய்ச்சிக்கு உடபடுத்தப் படாமல் பக்தி என்ற அளவிலேயே நின்று விட்டுள்ளன.

சாவாமை பற்றி பேசியவர்கள் அக்காலத்தில் இருந்து இக்காலம் வரை இருந்து கொண்டே இருக்கிறார்கள். சித்தர்கள் சாவாது வாழ்ந்தார்கள் என்றும் இன்னும் சித்தர்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்றும் நாம் கேள்விப்படுகிறோம். திருமூலர் மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தார். ஓராண்டுக்கு ஒரு முறை ஒரு மந்திரத்தைப் பாடியருளினார் என்று திருமூலர் வரலாறு கூறுகிறது.
கமபரும் அக்காலத்திலேயே,
”மாண்டாரை உய்விக்கும் மருந்து ஒன்றும்
மெய்வேறு வரிகளாக கீண்டாலும் பொருந்துவிக்கும்
ஒருமருந்தும் படைக்களங்கள் கிளர்ப்பது ஒன்றும்
மீண்டேயும் தம்உருவை அருளுவது ஓர்மெய்ம்மருந்தும்
உளநீவீர ஆண்டு ஏகி, கொணர்கஎன
அடையாளத்துடனும் உரைத்தான் அறிவின் மிக்கான்”

என்ற கம்பன் கூற்றால் மாண்டாரை உயிருடன் எழுப்ப வல்லதும், உடலை இரு கூறாக வெட்டினாலும் சேர்த்து உயிர் கொடுக்கும் மருந்தும் படைக்களங்களைக் கிளர்ந்து எழச்செய்யும் மருந்தும், இழந்த உருவத்தை மீண்டும் உருவாக்கவும் கூடிய மருந்தும் இருந்திருக்கிறது என்பதை அறிய முடிகிறது.

வள்ளலார் வாழும் காலத்தில் பெரிதளவு விமர்சனத்துக்கு உள்ளானது., அவர் செத்தாரை மீட்டளித்தார் என்ற கருத்தினாலே. இன்றளவும் வள்ளலார் என்று கூறும் போது நம் மனக்கண்முன் வந்து போவது அவர் போற்றிய மரணமில்லா பெருவாழ்வு கொள்கையே. அவர் செத்தாரை மீட்டளித்தாரா இல்லையா என்பது
அவர் வாழ்ந்த காலத்திலேயே பெரிய கேள்வியாக இருந்து வந்துள்ளது. இன்னும் அது விளங்காத புதிராகவும் இருந்து வருகிறது. ஆனால் அவர் வார்த்தைகளில் மரணமில்லா பெருவாழ்வு நடமாடிக்கொண்டிருந்தது என்பதை பல பாடல்கள் சான்றுரைக்கின்றன.

என் மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கந்தானே,
என்று சாவாமைக்கு வழியைக் கூறுகிறார் ஒரு பாடலில்.

“மரணமில்லா பெருவாழ்வில் வாழ வம்மின் இங்கே

என்று அழைப்பு விடுக்கிறார் மற்றொரு பாடலில்.. இதோ பின்வரும் இந்தப் பாடலில் தூக்கம் கலைந்து எழுபவர் போல சாவில் இருந்து மீளலாம் என்று
கூறுகிறார்.


துயின்றுணர்ந்தே எழுந்தவர்போல் இறந்தவர்கள்
எல்லாம்
தோன்றஎழு கின்றதிது தொடங்கிநிகழ்ந் திடும்நீர்
பயின்றறிய விரைந்துவம்மின், படியாத படிப்பைப்

படித்திடலாம் உணர்ந்திடலாம் பற்றிடலாம் சுகமே!


இதையெல்லாம் விட சிறப்பு என்னவென்றால் ஒரு பாடலில் ஊன்
நிறைந்த இந்த உடலும் அழியா நிலை வரும் என்று அவர் கூறுகிறார். உயிர் என்றும் அழியாது என்பது மூத்தோர் கருத்து. அது அவ்வப்போது சட்டையை மாற்றிக்கொள்வது போல பிறவியாகிய சட்டையை மாற்றிக்கொள்வது அனைவரும் ஏற்றுக்கொண்டது. ஆனால் உடல் அழிவது கண்கூடாகக் கண்டது. இன்னும் கண்டு கொண்டு இருப்பது. ஆனால் வள்ளலார் உடலும் அழியாது இருக்கும் நிலையான ஒரு காலம் கைகூடும் என்று கூறியிருக்கிறார். இது சத்தியமாக நடக்கும் என்றும் கூறுகிறார். எதிர்காலத்தில் நடக்க இருப்பதை அதாவது இக்காலத்தில் நடந்து கொண்டிருப்பதை இந்த மகான் அக்காலத்தே கண்டு உரைத்த ஆறுடமாக இதனைக் கொள்ள வேண்டியுள்ளது. வள்ளல் பெருமானின் எதிர்காலப் புலனை நினைத்தால் வியப்பாக உள்ளது. பாடலைப் நீங்களும் படித்துப் பாருங்கள்.

“ஊனேயும் உடலழியாது ஊழிதோறும் ஓங்கும்
உத்தம சித்தியைப் பெறுவீர் சத்தியம் சொன்னேனே

இந்த மரணமில்லா பெருவாழ்வுக்கு உரிய மந்திரமாக சிவ சிவா என்றால் மரணமில்லா பெருவாழ்வை அடையலாம் என்று சைவ சிந்தாந்திகள் கூறுகிறார்கள். அது எப்படி சாத்தியம். கண்டிப்பாகச் சாத்தியமே.. எப்படி யென்றால் சிவா சிவா என்று தொடர்ந்து சொல்லிப் பாருங்கள். அது வாசி வாசி. என்றே ஒலிக்கும். வாசி என்றால் யோகப்பயிற்சி.

“மரண வாடை வீசா திருக்கமெய்ச்
சுரணை ஊட்டும் தென்றல்

என்கிறது ஒரு புதுக்குறள். நெடுநாள் வாழும் வழி கூறும் யோகப்பயிற்சியானது தச வாயுக்களில் ஒன்றான "பிராணன்" என்ற வாயுவை (உயிர் காற்றை) வெளியில் விடாதவாறு கட்டுபடுத்துவதே இதனையே பிராணாயாமம் என்று
கூறுவர். இதனையே


"ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றைப் பிடிக்கும்
கணக்கறி வாரில்லை
காற்றை
ப் பிடிக்கும் கணக்கறி வார்க்கு
கூற்றை தைக்கும் குறியது வாமே"

என்று பாடினார் திருமூலர். ஆம் காற்றைப் பிடித்து நிறுத்தி வைக்கும் கலையை அல்லது கணக்கை அறிந்து கொண்டால் சாவு வெகு தூரத்தில். நாமும் பாரதியைப் போல காலனைக் காலால் உதைத்திடலாம். சாவு அருகில் வந்தாலும் பிடித்துத் தள்ளி விட்டு, எம்.ஜி.ஆரைப்போல நான் செத்துப் பிழைத்தவண்டா! எமனைப் பார்த்துச் சிரித்தவண்டா என்று சிரித்துக் கொண்டே பாடலாம். இந்த வாசியோகம் பற்றி விரிவாகப் பிரிதொரு பதிவில் பார்க்கலாம்.








ஆதிரா.


நன்றி குமுதம் ஹெல்த் ஸ்பெஷல்.


Last edited by Aathira on Wed Mar 23, 2011 12:27 am; edited 1 time in total


 எமனைப் பார்த்தும் சிரிக்கலாம்!!! A எமனைப் பார்த்தும் சிரிக்கலாம்!!! A எமனைப் பார்த்தும் சிரிக்கலாம்!!! T எமனைப் பார்த்தும் சிரிக்கலாம்!!! H எமனைப் பார்த்தும் சிரிக்கலாம்!!! I எமனைப் பார்த்தும் சிரிக்கலாம்!!! R எமனைப் பார்த்தும் சிரிக்கலாம்!!! A எமனைப் பார்த்தும் சிரிக்கலாம்!!! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

 எமனைப் பார்த்தும் சிரிக்கலாம்!!! Empty Re: எமனைப் பார்த்தும் சிரிக்கலாம்!!!

Post by மஞ்சுபாஷிணி Tue Mar 15, 2011 8:13 pm

மிக அருமையான பயனுள்ள பகிர்வு பானு....

திருமூலரின் பாடல்கள் உவமையாக கொண்டு சொல்ல வந்த நல்ல செய்தியை மிக அழகாக எல்லோரும் ரசிக்கும்படியாக தருவதும் ஒரு கலை தான்.... பானு என்ற தகவல் களஞ்சியம் மிக அற்புதமாக இங்கே சொல்லப்பட்ட விஷயம் என்னவென்றால் மண் தின்று தீ தின்று மிச்சத்தை எருவாக மண்ணுக்கு இடாது எத்தனையோ உயிருள்ள மனிதருக்கு தரலாமே மனிதனும் இறந்தால் அது வெறும் கூடில்லை....

மீன் செத்தா கருவாடுக்கு உதவும்..
மனிதன் செத்தால் எதுக்கும் விளங்காது போகும்னு இனி சொல்ல முடியாது தான்.... உச்சந்தலையில் இருந்து தோல் வரை கண்களில் இருந்து கிட்னி வரை இப்படி எத்தனையோ நம் உடல் பாகங்கள் இறந்து பயனில்லாது போவதை விட உயிரிருந்து அதை பெற வழி இல்லாது இருக்கும் எத்தனையோ பேருக்கு கண்டிப்பாக உதவும் வகையில் நம் செயல்கள் இருப்பது நலம் என்று மிக அழகான வரிகளில் தனக்கே உரிய சொல்நயத்துடன் சொன்ன பானுவுக்கு என் அன்பு நன்றிகள்.....

அருமையான விழிப்புணர்வு கட்டுரையாக இதை எடுத்துக்கலாம் கண்டிப்பாக.... அன்பு மலர்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

 எமனைப் பார்த்தும் சிரிக்கலாம்!!! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

 எமனைப் பார்த்தும் சிரிக்கலாம்!!! Empty Re: எமனைப் பார்த்தும் சிரிக்கலாம்!!!

Post by varsha Wed Mar 16, 2011 2:38 am

 எமனைப் பார்த்தும் சிரிக்கலாம்!!! 677196  எமனைப் பார்த்தும் சிரிக்கலாம்!!! 677196  எமனைப் பார்த்தும் சிரிக்கலாம்!!! 678642  எமனைப் பார்த்தும் சிரிக்கலாம்!!! 678642
varsha
varsha
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

 எமனைப் பார்த்தும் சிரிக்கலாம்!!! Empty Re: எமனைப் பார்த்தும் சிரிக்கலாம்!!!

Post by Aathira Mon Mar 28, 2011 6:39 pm

மஞ்சுபாஷிணி wrote:மிக அருமையான பயனுள்ள பகிர்வு பானு....

திருமூலரின் பாடல்கள் உவமையாக கொண்டு சொல்ல வந்த நல்ல செய்தியை மிக அழகாக எல்லோரும் ரசிக்கும்படியாக தருவதும் ஒரு கலை தான்.... பானு என்ற தகவல் களஞ்சியம் மிக அற்புதமாக இங்கே சொல்லப்பட்ட விஷயம் என்னவென்றால் மண் தின்று தீ தின்று மிச்சத்தை எருவாக மண்ணுக்கு இடாது எத்தனையோ உயிருள்ள மனிதருக்கு தரலாமே மனிதனும் இறந்தால் அது வெறும் கூடில்லை....

மீன் செத்தா கருவாடுக்கு உதவும்..
மனிதன் செத்தால் எதுக்கும் விளங்காது போகும்னு இனி சொல்ல முடியாது தான்.... உச்சந்தலையில் இருந்து தோல் வரை கண்களில் இருந்து கிட்னி வரை இப்படி எத்தனையோ நம் உடல் பாகங்கள் இறந்து பயனில்லாது போவதை விட உயிரிருந்து அதை பெற வழி இல்லாது இருக்கும் எத்தனையோ பேருக்கு கண்டிப்பாக உதவும் வகையில் நம் செயல்கள் இருப்பது நலம் என்று மிக அழகான வரிகளில் தனக்கே உரிய சொல்நயத்துடன் சொன்ன பானுவுக்கு என் அன்பு நன்றிகள்.....

அருமையான விழிப்புணர்வு கட்டுரையாக இதை எடுத்துக்கலாம் கண்டிப்பாக....  எமனைப் பார்த்தும் சிரிக்கலாம்!!! 154550
கருத்துக்கண்ணம்மாவுக்கு மிக்க நன்றி.. அழகான் கருத்து...  எமனைப் பார்த்தும் சிரிக்கலாம்!!! 154550


 எமனைப் பார்த்தும் சிரிக்கலாம்!!! A எமனைப் பார்த்தும் சிரிக்கலாம்!!! A எமனைப் பார்த்தும் சிரிக்கலாம்!!! T எமனைப் பார்த்தும் சிரிக்கலாம்!!! H எமனைப் பார்த்தும் சிரிக்கலாம்!!! I எமனைப் பார்த்தும் சிரிக்கலாம்!!! R எமனைப் பார்த்தும் சிரிக்கலாம்!!! A எமனைப் பார்த்தும் சிரிக்கலாம்!!! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

 எமனைப் பார்த்தும் சிரிக்கலாம்!!! Empty Re: எமனைப் பார்த்தும் சிரிக்கலாம்!!!

Post by மஞ்சுபாஷிணி Mon Mar 28, 2011 6:42 pm

பானு இந்தாங்க பிடிங்க நூறாயுசு உங்களுக்கு அங்க உங்க கவிதையில் இதை பற்றி போட்டுட்டு இங்கே வரேன் சமர்த்து குட்டி இங்க போட்டிருப்பதை பாரேன் முத்தம்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

 எமனைப் பார்த்தும் சிரிக்கலாம்!!! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

 எமனைப் பார்த்தும் சிரிக்கலாம்!!! Empty Re: எமனைப் பார்த்தும் சிரிக்கலாம்!!!

Post by Aathira Mon Mar 28, 2011 7:20 pm

மஞ்சுபாஷிணி wrote:பானு இந்தாங்க பிடிங்க நூறாயுசு உங்களுக்கு அங்க உங்க கவிதையில் இதை பற்றி போட்டுட்டு இங்கே வரேன் சமர்த்து குட்டி இங்க போட்டிருப்பதை பாரேன்  எமனைப் பார்த்தும் சிரிக்கலாம்!!! 942
இது கொஞ்சம் கூட நல்லா இல்லை. எனக்கு நூறு எல்லாம் வேண்டாம்..


 எமனைப் பார்த்தும் சிரிக்கலாம்!!! A எமனைப் பார்த்தும் சிரிக்கலாம்!!! A எமனைப் பார்த்தும் சிரிக்கலாம்!!! T எமனைப் பார்த்தும் சிரிக்கலாம்!!! H எமனைப் பார்த்தும் சிரிக்கலாம்!!! I எமனைப் பார்த்தும் சிரிக்கலாம்!!! R எமனைப் பார்த்தும் சிரிக்கலாம்!!! A எமனைப் பார்த்தும் சிரிக்கலாம்!!! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

 எமனைப் பார்த்தும் சிரிக்கலாம்!!! Empty Re: எமனைப் பார்த்தும் சிரிக்கலாம்!!!

Post by மஞ்சுபாஷிணி Mon Mar 28, 2011 9:13 pm

சரி ஆரோக்கியமா சந்தோஷமா இருக்கும் காலம் வரை தெய்வானுக்ரஹத்துடன் இருங்கப்பா.... இது ஓக்கேவா பானூ?


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

 எமனைப் பார்த்தும் சிரிக்கலாம்!!! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

 எமனைப் பார்த்தும் சிரிக்கலாம்!!! Empty Re: எமனைப் பார்த்தும் சிரிக்கலாம்!!!

Post by பிளேடு பக்கிரி Mon Mar 28, 2011 9:18 pm

நல்ல பதிவு... மண்ணில் புதைந்து போகும் உடலால் மற்றவர்களுக்கு உதவலாம்



 எமனைப் பார்த்தும் சிரிக்கலாம்!!! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

 எமனைப் பார்த்தும் சிரிக்கலாம்!!! Empty Re: எமனைப் பார்த்தும் சிரிக்கலாம்!!!

Post by கலைவேந்தன் Mon Mar 28, 2011 11:37 pm

மஞ்சுபாஷிணி wrote:மிக அருமையான பயனுள்ள பகிர்வு பானு....

திருமூலரின் பாடல்கள் உவமையாக கொண்டு சொல்ல வந்த நல்ல செய்தியை மிக அழகாக எல்லோரும் ரசிக்கும்படியாக தருவதும் ஒரு கலை தான்.... பானு என்ற தகவல் களஞ்சியம் மிக அற்புதமாக இங்கே சொல்லப்பட்ட விஷயம் என்னவென்றால் மண் தின்று தீ தின்று மிச்சத்தை எருவாக மண்ணுக்கு இடாது எத்தனையோ உயிருள்ள மனிதருக்கு தரலாமே மனிதனும் இறந்தால் அது வெறும் கூடில்லை....

மீன் செத்தா கருவாடுக்கு உதவும்..
மனிதன் செத்தால் எதுக்கும் விளங்காது போகும்னு இனி சொல்ல முடியாது தான்.... உச்சந்தலையில் இருந்து தோல் வரை கண்களில் இருந்து கிட்னி வரை இப்படி எத்தனையோ நம் உடல் பாகங்கள் இறந்து பயனில்லாது போவதை விட உயிரிருந்து அதை பெற வழி இல்லாது இருக்கும் எத்தனையோ பேருக்கு கண்டிப்பாக உதவும் வகையில் நம் செயல்கள் இருப்பது நலம் என்று மிக அழகான வரிகளில் தனக்கே உரிய சொல்நயத்துடன் சொன்ன பானுவுக்கு என் அன்பு நன்றிகள்.....

அருமையான விழிப்புணர்வு கட்டுரையாக இதை எடுத்துக்கலாம் கண்டிப்பாக.... அன்பு மலர்

நான் சொல்ல நினைத்ததை எல்லாம் சொல்லிவிட்ட மஞ்சுவின் கருத்தை இரவல் கேட்டுப் பாராட்டுகிறேன் ஆதிரா.. சூப்பருங்க



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

 எமனைப் பார்த்தும் சிரிக்கலாம்!!! Empty Re: எமனைப் பார்த்தும் சிரிக்கலாம்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum