Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தூள், தூளான வீடுகள் - சிதறிக்கிடக்கும் வாகனங்கள்: மின்சார இணைப்பு, போன்கள் துண்டிப்பு: சுனாமியால் உருக்குலைந்த ஜப்பான்!
+7
சாந்தன்
மோகன்
Manik
அருண்
அன்பு தளபதி
ரபீக்
சிவா
11 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
தூள், தூளான வீடுகள் - சிதறிக்கிடக்கும் வாகனங்கள்: மின்சார இணைப்பு, போன்கள் துண்டிப்பு: சுனாமியால் உருக்குலைந்த ஜப்பான்!
பூமி அதிர்ச்சி மற்றும் சுனாமியால் சூறையாடப்பட்ட ஜப்பானின் செண்டாய் நகரில் வீடுகள் தூள், தூளாக நொறுங்கிக் கிடக்கின்றன. வாகனங்கள் பொம்மைகள் போல் வீதிகளில் சிதறிக் கிடக்கின்றன
8.9 ரிக்டர் அளவில் பதிவான பயங்கர பூமி அதிர்ச்சி மற்றும் அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட சுனாமி பேரலை தாக்குதலால், ஜப்பான் நாடு பேரழிவை சந்தித்து உள்ளது.
லட்சக்கணக்கான வீடுகள்
அடிக்கடி பூமி அதிர்ச்சி தாக்குதலுக்கு உள்ளாகும் ஜப்பானில், நேற்று முன்தினம் ஏற்பட்ட பூமி அதிர்ச்சிதான் மிகப் பெரிய அளவிலானது என்பது குறிப்பிடத்தக்கது. 30 அடிக்கு மேல் எழுந்த சுனாமி பேரலைகள் லட்சக்கணக்கான வீடுகளை சுருட்டி வீசியதுடன், கப்பல், படகுகள் மற்றும் கார்களை பொம்மைகள் போல் வீதிக்கு உருட்டிச்சென்றன.
பூமி அதிர்ச்சியின் மையப்பகுதியின் அருகில் உள்ள சென்டாய் நகரம்தான் மிகப்பெரிய சேதத்தை சந்தித்து உள்ளது. மரத்தால் ஆன வீடுகள் நொறுங்கி கிடக்கின்றன. கட்டிடங்களில் தூண்கள் மற்றும் இரும்பு கம்பிகள் மட்டுமே எஞ்சியுள்ளன. மேலும் 5 கடற்கரை நகரங்களும் பல கிராமங்களும் சுனாமியால் சூறையாடப்பட்டு உள்ளன. சென்டாயில் இருந்து 200 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலைகளில் வெடிப்புகளும், பாலங்கள் உடைந்தும் காணப்படுகின்றன.
1500 பேர் பலி
சென்டாய் நகரில் சாலைகளில் சிதறிக்கிடக்கும் இடிபாடுகளால், மீட்பு குழுவினரால் விரைந்து செயல்படவில்லை. பூகம்பம், சுனாமி தாக்குதலால் பலியானவர்களின் எண்ணிக்கை மதிப்பிடப்படவில்லை. 1500 பேர் வரை பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
பாதிக்கப்பட்ட வடக்குப்பகுதியில் இருந்து தெற்கு நோக்கி ஏராளமான கார்கள் அணிவகுத்து சென்றவண்ணம் உள்ளன. மின் இணைப்பு, தொலைபேசி இணைப்புகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டு உள்ளன. ஜப்பானின் தொழில் நுட்ப வளர்ச்சியை பிரதிபலிக்கும் மணிக்கு 200 கிலோ மீட்டருக்கு அதிகமாக செல்லும் புல்லட் ரெயில்கள் முடக்கப்பட்டு உள்ளன.
வீதிகளில் சிதறிக்கிடந்த உடல்கள்
சுனாமி சீற்றத்தால், சென்டாய் நகருக்குள் 10 கிலோமீட்டர் தூரம் வரை கடல் நீர் உட்புகுந்தது. இதனால் வீதியெங்கும் சேறு சகதியுடன், உருக்குலைந்த கட்டிட பொருட்கள், மற்றும் வாகனங்களின் உதிரி பாகங்கள் கிடந்தன. ஒரு இடத்தில் 300 பேரின் உடல்கள் சிதறிக்கிடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
கடலோர பகுதியில் சென்று கொண்டு இருந்த 4 ரெயில்களின் கதி என்ன என்ற விவரம் இன்னும் தெரியவில்லை. அதில் எத்தனை பேர் பயணம் செய்தனர் என்ற விவரமும் தெரியவில்லை என்று கிழக்கு ஜப்பான் ரெயில்வே அறிவித்து உள்ளது.
பின் அதிர்வுகளால் பீதி
வீடுகள் அனைத்தும் சேதம் அடைந்ததால் சென்டாய் நகரில் வசித்த பெரும்பாலான மக்கள் நடுங்கும் குளிரில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் கண்விழித்து இருந்தனர். அலைகளின் கோரப்பிடியில் இருந்து தப்பியது பற்றி அவர்கள் அச்சத்துடன் விவரித்தனர்.
பூகம்பத்தை சேர்ந்த தொடர் பின் அதிர்வுகளால் மக்களிடம் இன்னும் பீதி நீங்கவில்லை. திறந்து இருந்த ஒரு சில கடைகள் மற்றும் வாகனங்களுக்கு கியாஸ் நிரப்பும் கடைகளில் மக்கள் கிïவரிசையில் நின்று இருந்ததையும் பார்க்க முடிந்தது.
ஹெலிகாப்டரில் மீட்பு
சில அணுமின் நிலையங்களில் கதிர்வீச்சு அபாயம் காரணமாக, சுற்றுப்புறங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். பூகம்பத்தினால் பல இடங்களில் தீப்பற்றி எரிந்தன.
சென்டாய் நகரில் அடுக்குமாடி குடியிருப்புகளில், இரண்டாவது மாடியில் இருந்து பலர் மீட்பு குழுவினரின் கவனத்தை ஈர்ப்பதற்காக வெள்ளைத்துணிகளை அசைத்ததை பார்க்க முடிந்தது. அப்படி சிக்கி இருந்த பலரை ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பு படையினர் பத்திரமாக மீட்டு வருகிறார்கள்.
மகன் கதி என்ன?
தலைநகர் டோக்கியோவில் பத்திரிகையாளராக பணிபுரிந்துவரும் லூசிகிராப்ட் என்பவருடைய மகன் சென்டாய் அருகில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் படித்து வந்தான். சுனாமி தாக்குதலுக்குப்பின் 18 மணி நேரம் சென்றபின்னும், அவனுடைய நிலை என்ன என்பதை லூசியால் அறிந்து கொள்ள முடியாமல் தவித்து வந்தார்.
சென்டாய் போலீசாருடன் அவர் தொடர்பு கொண்டு கேட்டபோது கடலுக்கு அருகே அந்த பள்ளி இல்லாததால், அவனுக்கு எந்த ஆபத்தும் நேர்ந்து இருக்காது என்றும், பள்ளிக்கூடத்திலேயே அவன் தஞ்சம் அடைந்து இருக்கலாம் என்றும் லூசியிடம் போலீசார் தெரிவித்தனர்.
டோக்கியோவில்...
பூகம்பத்தின் மையப்பகுதியில் இருந்து ஏறத்தாழ 370 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தலைநகர் டோக்கியோவில் பூகம்பத்தினால் அதிக பாதிப்பு எதுவும் இல்லை. ஆனால் மின்சாரம் துண்டிப்பு காரணமாகவும் நெடுஞ்சாலை மூடப்பட்டு சாலை மற்றும் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதாலும், 1 கோடியே 30 லட்சம் மக்கள் தொகை கொண்ட நகரின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்தது.
டோக்கியோவில் இருந்து வெளியே செல்லும் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் காரணமாக ஒரே இடத்தில் 6 மணி நேரம் வரை வாகனங்கள் காத்து இருக்க வேண்டியது இருந்தது.
8.9 ரிக்டர் அளவில் பதிவான பயங்கர பூமி அதிர்ச்சி மற்றும் அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட சுனாமி பேரலை தாக்குதலால், ஜப்பான் நாடு பேரழிவை சந்தித்து உள்ளது.
லட்சக்கணக்கான வீடுகள்
அடிக்கடி பூமி அதிர்ச்சி தாக்குதலுக்கு உள்ளாகும் ஜப்பானில், நேற்று முன்தினம் ஏற்பட்ட பூமி அதிர்ச்சிதான் மிகப் பெரிய அளவிலானது என்பது குறிப்பிடத்தக்கது. 30 அடிக்கு மேல் எழுந்த சுனாமி பேரலைகள் லட்சக்கணக்கான வீடுகளை சுருட்டி வீசியதுடன், கப்பல், படகுகள் மற்றும் கார்களை பொம்மைகள் போல் வீதிக்கு உருட்டிச்சென்றன.
பூமி அதிர்ச்சியின் மையப்பகுதியின் அருகில் உள்ள சென்டாய் நகரம்தான் மிகப்பெரிய சேதத்தை சந்தித்து உள்ளது. மரத்தால் ஆன வீடுகள் நொறுங்கி கிடக்கின்றன. கட்டிடங்களில் தூண்கள் மற்றும் இரும்பு கம்பிகள் மட்டுமே எஞ்சியுள்ளன. மேலும் 5 கடற்கரை நகரங்களும் பல கிராமங்களும் சுனாமியால் சூறையாடப்பட்டு உள்ளன. சென்டாயில் இருந்து 200 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலைகளில் வெடிப்புகளும், பாலங்கள் உடைந்தும் காணப்படுகின்றன.
1500 பேர் பலி
சென்டாய் நகரில் சாலைகளில் சிதறிக்கிடக்கும் இடிபாடுகளால், மீட்பு குழுவினரால் விரைந்து செயல்படவில்லை. பூகம்பம், சுனாமி தாக்குதலால் பலியானவர்களின் எண்ணிக்கை மதிப்பிடப்படவில்லை. 1500 பேர் வரை பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
பாதிக்கப்பட்ட வடக்குப்பகுதியில் இருந்து தெற்கு நோக்கி ஏராளமான கார்கள் அணிவகுத்து சென்றவண்ணம் உள்ளன. மின் இணைப்பு, தொலைபேசி இணைப்புகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டு உள்ளன. ஜப்பானின் தொழில் நுட்ப வளர்ச்சியை பிரதிபலிக்கும் மணிக்கு 200 கிலோ மீட்டருக்கு அதிகமாக செல்லும் புல்லட் ரெயில்கள் முடக்கப்பட்டு உள்ளன.
வீதிகளில் சிதறிக்கிடந்த உடல்கள்
சுனாமி சீற்றத்தால், சென்டாய் நகருக்குள் 10 கிலோமீட்டர் தூரம் வரை கடல் நீர் உட்புகுந்தது. இதனால் வீதியெங்கும் சேறு சகதியுடன், உருக்குலைந்த கட்டிட பொருட்கள், மற்றும் வாகனங்களின் உதிரி பாகங்கள் கிடந்தன. ஒரு இடத்தில் 300 பேரின் உடல்கள் சிதறிக்கிடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
கடலோர பகுதியில் சென்று கொண்டு இருந்த 4 ரெயில்களின் கதி என்ன என்ற விவரம் இன்னும் தெரியவில்லை. அதில் எத்தனை பேர் பயணம் செய்தனர் என்ற விவரமும் தெரியவில்லை என்று கிழக்கு ஜப்பான் ரெயில்வே அறிவித்து உள்ளது.
பின் அதிர்வுகளால் பீதி
வீடுகள் அனைத்தும் சேதம் அடைந்ததால் சென்டாய் நகரில் வசித்த பெரும்பாலான மக்கள் நடுங்கும் குளிரில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் கண்விழித்து இருந்தனர். அலைகளின் கோரப்பிடியில் இருந்து தப்பியது பற்றி அவர்கள் அச்சத்துடன் விவரித்தனர்.
பூகம்பத்தை சேர்ந்த தொடர் பின் அதிர்வுகளால் மக்களிடம் இன்னும் பீதி நீங்கவில்லை. திறந்து இருந்த ஒரு சில கடைகள் மற்றும் வாகனங்களுக்கு கியாஸ் நிரப்பும் கடைகளில் மக்கள் கிïவரிசையில் நின்று இருந்ததையும் பார்க்க முடிந்தது.
ஹெலிகாப்டரில் மீட்பு
சில அணுமின் நிலையங்களில் கதிர்வீச்சு அபாயம் காரணமாக, சுற்றுப்புறங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். பூகம்பத்தினால் பல இடங்களில் தீப்பற்றி எரிந்தன.
சென்டாய் நகரில் அடுக்குமாடி குடியிருப்புகளில், இரண்டாவது மாடியில் இருந்து பலர் மீட்பு குழுவினரின் கவனத்தை ஈர்ப்பதற்காக வெள்ளைத்துணிகளை அசைத்ததை பார்க்க முடிந்தது. அப்படி சிக்கி இருந்த பலரை ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பு படையினர் பத்திரமாக மீட்டு வருகிறார்கள்.
மகன் கதி என்ன?
தலைநகர் டோக்கியோவில் பத்திரிகையாளராக பணிபுரிந்துவரும் லூசிகிராப்ட் என்பவருடைய மகன் சென்டாய் அருகில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் படித்து வந்தான். சுனாமி தாக்குதலுக்குப்பின் 18 மணி நேரம் சென்றபின்னும், அவனுடைய நிலை என்ன என்பதை லூசியால் அறிந்து கொள்ள முடியாமல் தவித்து வந்தார்.
சென்டாய் போலீசாருடன் அவர் தொடர்பு கொண்டு கேட்டபோது கடலுக்கு அருகே அந்த பள்ளி இல்லாததால், அவனுக்கு எந்த ஆபத்தும் நேர்ந்து இருக்காது என்றும், பள்ளிக்கூடத்திலேயே அவன் தஞ்சம் அடைந்து இருக்கலாம் என்றும் லூசியிடம் போலீசார் தெரிவித்தனர்.
டோக்கியோவில்...
பூகம்பத்தின் மையப்பகுதியில் இருந்து ஏறத்தாழ 370 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தலைநகர் டோக்கியோவில் பூகம்பத்தினால் அதிக பாதிப்பு எதுவும் இல்லை. ஆனால் மின்சாரம் துண்டிப்பு காரணமாகவும் நெடுஞ்சாலை மூடப்பட்டு சாலை மற்றும் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதாலும், 1 கோடியே 30 லட்சம் மக்கள் தொகை கொண்ட நகரின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்தது.
டோக்கியோவில் இருந்து வெளியே செல்லும் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் காரணமாக ஒரே இடத்தில் 6 மணி நேரம் வரை வாகனங்கள் காத்து இருக்க வேண்டியது இருந்தது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தூள், தூளான வீடுகள் - சிதறிக்கிடக்கும் வாகனங்கள்: மின்சார இணைப்பு, போன்கள் துண்டிப்பு: சுனாமியால் உருக்குலைந்த ஜப்பான்!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: தூள், தூளான வீடுகள் - சிதறிக்கிடக்கும் வாகனங்கள்: மின்சார இணைப்பு, போன்கள் துண்டிப்பு: சுனாமியால் உருக்குலைந்த ஜப்பான்!
ஜப்பான் மிக விரைவில் மீண்டு ஜப்பான் மீள வேண்டும்
Re: தூள், தூளான வீடுகள் - சிதறிக்கிடக்கும் வாகனங்கள்: மின்சார இணைப்பு, போன்கள் துண்டிப்பு: சுனாமியால் உருக்குலைந்த ஜப்பான்!
ஜப்பானின் நிலவரம் மிகவும் கவலை கிடமாக உள்ளது மீண்டும் பழய நிலைமைக்கு திரும்பட்டும்.
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: தூள், தூளான வீடுகள் - சிதறிக்கிடக்கும் வாகனங்கள்: மின்சார இணைப்பு, போன்கள் துண்டிப்பு: சுனாமியால் உருக்குலைந்த ஜப்பான்!
மிகவும் வருத்தம் அளிக்கிறது
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: தூள், தூளான வீடுகள் - சிதறிக்கிடக்கும் வாகனங்கள்: மின்சார இணைப்பு, போன்கள் துண்டிப்பு: சுனாமியால் உருக்குலைந்த ஜப்பான்!
மிகவும் வருத்தம் அளிக்கிறது, நல்ல சுறுசுறுப்பான மக்கள் மிக விரைவில் மீண்டு ஜப்பான் மீண்டும் பழய நிலைமைக்கு திரும்பட்டும்
Re: தூள், தூளான வீடுகள் - சிதறிக்கிடக்கும் வாகனங்கள்: மின்சார இணைப்பு, போன்கள் துண்டிப்பு: சுனாமியால் உருக்குலைந்த ஜப்பான்!
கண்டிப்பாக ஜப்பானிய மக்கள் மிக விரைவில் மீண்டு வந்து விடுவார்கள் ...
சுறுசுறுப்பின் சின்னம் அல்லவா அவர்கள் ....
சுறுசுறுப்பின் சின்னம் அல்லவா அவர்கள் ....
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: தூள், தூளான வீடுகள் - சிதறிக்கிடக்கும் வாகனங்கள்: மின்சார இணைப்பு, போன்கள் துண்டிப்பு: சுனாமியால் உருக்குலைந்த ஜப்பான்!
இயற்கை பகைத்தால்...என்ன செய்ய முடியும்n ? 2004 ம ஆண்டு சுனாமி யால் எதனை உயிரிழப்பு ..இப்போது ஜப்பானுக்கும் அதே நிலை.
இந்தோனேசியா பூகம்பத்தின் பின்னர் சுனாமி அலைகள் கடுமையாக தாகபோவது தெரிந்தும் ஜப்பான் அந்த நாடுகளை எச்சரிக்கவில்லை ..
ஜப்பான் தனக்கு முன்கூட்டியே தெரிந்த விடயத்தை என்ன காரணம் கருதியோ ?? மறைத்துவிட்டதுநல்ல அரசு இல்லாவிட்டால் பாவம் மக்கள் தான் ...அவர்கள் என்ன செய்ய முடியும் ..ஆத்மா சாந்தி அடையட்டும்.
...
இந்தோனேசியா பூகம்பத்தின் பின்னர் சுனாமி அலைகள் கடுமையாக தாகபோவது தெரிந்தும் ஜப்பான் அந்த நாடுகளை எச்சரிக்கவில்லை ..
ஜப்பான் தனக்கு முன்கூட்டியே தெரிந்த விடயத்தை என்ன காரணம் கருதியோ ?? மறைத்துவிட்டதுநல்ல அரசு இல்லாவிட்டால் பாவம் மக்கள் தான் ...அவர்கள் என்ன செய்ய முடியும் ..ஆத்மா சாந்தி அடையட்டும்.
...
varsha- இளையநிலா
- பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» நாகையில் பாஜக அலுவலகத்தில் மின் இணைப்பு துண்டிப்பு: கட்சியினர் முற்றுகை
» மெக்சிக்கோவில் 3 கோடி செல்போன் இணைப்பு துண்டிப்பு! _
» 30 முன்னாள் எம்.பி.க்களின் அரசு இல்லங்களில் மின் இணைப்பு துண்டிப்பு
» செல்போன் இணைப்பு துண்டிப்பு ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
» அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
» மெக்சிக்கோவில் 3 கோடி செல்போன் இணைப்பு துண்டிப்பு! _
» 30 முன்னாள் எம்.பி.க்களின் அரசு இல்லங்களில் மின் இணைப்பு துண்டிப்பு
» செல்போன் இணைப்பு துண்டிப்பு ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
» அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|