Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியா திணறல் வெற்றி! காலிறுதிக்குள் நுழைந்தது
+2
உதயசுதா
சிவா
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
இந்தியா திணறல் வெற்றி! காலிறுதிக்குள் நுழைந்தது
புதுடில்லி: உலக கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி, நெதர்லாந்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, காலிறுதிக்கு முன்னேறியது. "கத்துக்குட்டியாக கருதப்படும் நெதர்லாந்துக்கு எதிராக நம்மவர்கள் திணறியது, ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது.
இந்திய துணைக் கண்டத்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. நேற்று டில்லி, பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடந்த "பி பிரிவு லீக் போட்டியில் இந்தியா, நெதர்லாந்து அணிகள் மோதின.
நெஹ்ரா வாய்ப்பு:
நெதர்லாந்து அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. இந்திய அணியில் முனாப் படேலுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, ஆஷிஸ் நெஹ்ரா வாய்ப்பு பெற்றார். "டாஸ் வென்ற நெதர்லாந்து கேப்டன் பீட்டர் போரன் "பேட்டிங் தேர்வு செய்தார்.
டசாட்டே ஏமாற்றம்:
நெதர்லாந்து அணிக்கு சுவார்சின்ஸ்கி, வெஸ்லி பாரசி இணைந்து நிதான துவக்கம் தந்தனர். இவர்கள் ஒன்று, இரண்டு ரன்களாக சேர்க்க, ஸ்கோர் மெதுவாக நகர்ந்தது. முதல் விக்கெட்டுக்கு 56 ரன்கள் சேர்த்த நிலையில், பியுஸ் சாவ்லா சுழலில் சுவார்சின்ஸ்கி(28) போல்டானார். யுவராஜ் வலையில் பாரசி(26) சிக்கினார். இங்கிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில் சதம் அடித்த டசாட்டே இம்முறை சோபிக்கவில்லை. இவரை 11 ரன்களுக்கு வெளியேற்றி திருப்புமுனை ஏற்படுத்தினார் யுவராஜ்.
போரன் அதிரடி:
நெஹ்ரா வேகத்தில் கூப்பர்(29) காலியானார். ஜுடிரன்ட்(0), குரூத்(5), கெர்வசி(11) விரைவில் வெளியேறினர். கடைசி கட்டத்தில் கேப்டன் போரன், புக்காரி அதிரடியாக ஆடினர். யுவராஜ் ஓவரில் இரண்டு பவுண்டரி விளாசினார் போரன். பின் பியுஸ் சாவ்லா ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்சர் அடித்து மிரட்டினார். மறுபக்கம் வாணவேடிக்கை காட்டிய புக்காரி, நெஹ்ரா ஓவரில் ஒரு சிக்சர், பவுண்டரி அடித்தார். தொடர்ந்து ஹர்பஜன் பந்தையும் சிக்சருக்கு பறக்க விட்டு, ஸ்கோரை உயர்த்தினார். பின் ஜாகிர் கான் தனது ஒரே ஓவரில் இரட்டை "அடி கொடுத்தார். முதலில் போரனை(38) வெளியேற்றினார். அடுத்து புக்காரி(21) விக்கெட்டையும் கைப்பற்றினார். இறுதியில் நெதர்லாந்து அணி 46.4 ஓவரில் 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்திய சார்பில் ஜாகிர் 3, சாவ்லா 2, யுவராஜ் 2 விக்கெட் வீழ்த்தினர்.
அதிரடி துவக்கம்:
போகிற போக்கில் எட்டக் கூடிய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு சச்சின், சேவக் அதிரடி துவக்கம் தந்தனர். புக்காரி வீசிய முதல் பந்தையே பவுண்டரிக்கு அனுப்பினார் சேவக். டசாட்டே வீசிய அடுத்த ஓவரில் சச்சின் இரண்டு பவுண்டரி அடித்தார். போட்டியில் 5வது ஓவரை புக்காரி வீச... சேவக் வரிசையாக 3 பவுண்டரிகள் அடிக்க, இந்திய ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். பின் சீலார் ஓவரில் ஒரு சிக்சர், பவுண்டரி அடித்த சேவக்(39) அடுத்த பந்தில் அவுட்டானார். அடுத்த வந்த யூசுப் பதான் போரன் பந்தில் ஒரு இமாலய சிக்சர் அடித்தார்.
விக்கெட் சரிவு:
சீலார் வீசிய போட்டியின் 10வது ஓவரில் அதிர்ச்சி காத்திருந்தது. முதல் பந்தில் சச்சின்(27) வெளியேறினார். 5வது பந்தில் யூசுப் பதான்(11) அவுட்டானார். விராத் கோஹ்லி(12) ஏமாற்றினார். காம்பிரும்(28) அதிக நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. இப்படி "டாப்-ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஏனோ தானோ என விளையாட, ரசிகர்கள் வெறுப்படைந்தனர்.
யுவராஜ் அபாரம்:
பின் யுவராஜ், தோனி இணைந்து பொறுப்பாக ஆடினர். இருவரும் பதட்டப்படாமல் பேட் செய்தனர். கிருகர் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய யுவராஜ் அரைசதம் அடித்ததோடு, அணியின் வெற்றியையும் உறுதி செய்தார். இந்திய அணி 36.3 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 191 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் "பி பிரிவில் 7 புள்ளிகளுடன் முதலிடம் பெற்ற இந்தியா, காலிறுதிக்கு ஜோராக முன்னேறியது. யுவராஜ் (51), தோனி (19) அவுட்டாகாமல் இருந்தனர்.
ஆட்ட நாயகன் விருதை யுவராஜ் வென்றார்.
யுவராஜ் "100 விக்.,
நேற்று நெதர்லாந்து வீரர் பாரசியை அவுட்டாக்கி யுவராஜ் சிங், ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் தனது 100வது விக்கெட்டை பதிவு செய்தார். சுழலில் அசத்திய இவர் 2 விக்கெட் வீழ்த்தினார். இதுவரை 269 போட்டியில் பங்கேற்று 101 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் ஒருநாள் அரங்கில் 100 அல்லது அதற்கு மேல் விக்கெட் வீழ்த்திய 14வது இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார்.
---
டேவிஸ் "100
இந்தியா-நெதர்லாந்து போட்டியில், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் டேவிஸ் அம்பயராக செயல்பட்டார். இதன்மூலம் சர்வதேச ஒருநாள் அரங்கில் 100 அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகளுக்கு அம்பயராக பணியாற்றிய 14வது அம்பயர் என்ற பெருமை பெற்றார்.
---
சச்சின் 2,000 ரன் சாதனை
உலக கோப்பை அரங்கில் 2000 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தார் இந்தியாவின் "மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின். நேற்று 18வது ரன்னை எடுத்த போது, இந்த மைல்கல்லை எட்டினார். இதுவரை 40 உலக கோப்பை போட்டிகளில் பங்கேற்று 5 சதம், 13 அரைசதம் உட்பட 2009 ரன்கள் எடுத்துள்ளார்.
இவ்வரிசையில் "டாப்-5 பேட்ஸ்மேன்கள்:
வீரர் போட்டி ரன்கள் சதம்/அரைசதம்
சச்சின் (இந்தியா) 40 2009 5/13
பாண்டிங் (ஆஸி.,) 42 1577 4/6
லாரா (வெ.இ.,) 34 1225 2/7
ஜெயசூர்யா (இலங்கை) 38 1165 3/6
கில்கிறிஸ்ட் (ஆஸி.,) 31 1085 1/8
* இம்முறை இங்கிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில் சதம் அடித்த இவர், உலக கோப்பை அரங்கில் அதிக சதம் (5) கடந்த வீரர்கள் வரிசையில் முதலிடத்தை பிடித்தார். நேற்று நெதர்லாந்துக்கு எதிராக களமிறங்கியதன் மூலம், உலக கோப்பை அரங்கில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர்கள் வரிசையில் 2வது இடத்துக்கு முன்னேறினார். இதுவரை இவர், 40 போட்டியில் பங்கேற்றுள்ளார். இதன்மூலம் ஆஸ்திரேலியாவின் மெக்ராத் (39 போட்டி), 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார். முதலிடத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் (42 போட்டி) உள்ளார்.
ஒவ்வொரு உலக கோப்பை தொடரில், சச்சின் எடுத்த ரன்கள்:
ஆண்டு போட்டி ரன்கள்
1992 8 283
1996 7 523
1999 7 253
2003 11 673
2007 3 64
2011 4 213
1992-2011 40 2009
---
ஸ்கோர்போர்டு
நெதர்லாந்து
சுவார்சின்ஸ்கி(ப)சாவ்லா 28(42)
பாரசி-எல்.பி.டபிள்யு.,(ப)யுவராஜ் 26(58)
கூப்பர்(கே)தோனி(ப)நெஹ்ரா 29(47)
டசாட்டே(கே)ஜாகிர்(ப)யுவராஜ் 11(28)
கெர்வெசி(கே)ஹர்பஜன்(ப)சாவ்லா 11(23)
ஜூடிரன்ட்-எல்.பி.டபிள்யு.,(ப)ஜாகிர் 0(6)
குரூத்--ரன்அவுட்-(சாவ்லா/தோனி) 5(11)
போரன்(கே)நெஹ்ரா(ப)ஜாகிர் 38(36)
குருகர்-ரன்அவுட்-(கோஹ்லி/தோனி) 8(12)
புக்காரி(ப)ஜாகிர் 21(18)
சீலார்-அவுட் இல்லை- 0(0)
உதிரிகள் 12
மொத்தம் (46.4 ஓவரில், "ஆல்-அவுட்) 189
விக்கெட் வீழ்ச்சி: 1-56(சுவார்சின்ஸ்கி), 2-64(பாரசி), 3-99(டசாட்டே), 4-100(கூப்பர்), 5-101(ஜூடிரன்ட்), 6-108(குரூத்), 7-127(கெர்வெசி), 8-151(குருகர்), 9-189(போரன்), 10-189(புக்காரி).
பந்துவீச்சு: ஜாகிர்கான் 6.4-0-20-3, நெஹ்ரா 5-1-22-1, யூசுப் 6-1-17-0, ஹர்பஜன் 10-0-31-0, சாவ்லா 10-0-47-2, யுவராஜ் 9-1-43-2.
இந்தியா
சேவக்(கே)கெர்வெசி(ப)சீலார் 39(26)
சச்சின்(கே)குருகர்(ப)சீலார் 27(22)
யூசுப்(கே)+(ப)சீலார் 11(10)
காம்பிர்(ப)புக்காரி 28(28)
கோஹ்லி(ப)போரன் 12(20)
யுவராஜ்-அவுட் இல்லை- 51(73)
தோனி--அவுட் இல்லை- 19(40)
உதிரிகள் 4
மொத்தம் (36.3 ஓவரில், 5விக்.,) 191
விக்கெட் வீழ்ச்சி: 1-69(சேவக்), 2-80(சச்சின்), 3-82(யூசுப்பதான்), 4-99(கோஹ்லி), 5-139(காம்பிர்).
பந்துவீச்சு: புக்காரி 6-1-33-1, டசாட்டே 7-0-38-0, சீலார் 10-1-53-3, போரன் 8-0-33-1, கூப்பர் 2-0-11-0, குர்கர் 3.3-0-23-0.
தினமலர்
இந்திய துணைக் கண்டத்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. நேற்று டில்லி, பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடந்த "பி பிரிவு லீக் போட்டியில் இந்தியா, நெதர்லாந்து அணிகள் மோதின.
நெஹ்ரா வாய்ப்பு:
நெதர்லாந்து அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. இந்திய அணியில் முனாப் படேலுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, ஆஷிஸ் நெஹ்ரா வாய்ப்பு பெற்றார். "டாஸ் வென்ற நெதர்லாந்து கேப்டன் பீட்டர் போரன் "பேட்டிங் தேர்வு செய்தார்.
டசாட்டே ஏமாற்றம்:
நெதர்லாந்து அணிக்கு சுவார்சின்ஸ்கி, வெஸ்லி பாரசி இணைந்து நிதான துவக்கம் தந்தனர். இவர்கள் ஒன்று, இரண்டு ரன்களாக சேர்க்க, ஸ்கோர் மெதுவாக நகர்ந்தது. முதல் விக்கெட்டுக்கு 56 ரன்கள் சேர்த்த நிலையில், பியுஸ் சாவ்லா சுழலில் சுவார்சின்ஸ்கி(28) போல்டானார். யுவராஜ் வலையில் பாரசி(26) சிக்கினார். இங்கிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில் சதம் அடித்த டசாட்டே இம்முறை சோபிக்கவில்லை. இவரை 11 ரன்களுக்கு வெளியேற்றி திருப்புமுனை ஏற்படுத்தினார் யுவராஜ்.
போரன் அதிரடி:
நெஹ்ரா வேகத்தில் கூப்பர்(29) காலியானார். ஜுடிரன்ட்(0), குரூத்(5), கெர்வசி(11) விரைவில் வெளியேறினர். கடைசி கட்டத்தில் கேப்டன் போரன், புக்காரி அதிரடியாக ஆடினர். யுவராஜ் ஓவரில் இரண்டு பவுண்டரி விளாசினார் போரன். பின் பியுஸ் சாவ்லா ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்சர் அடித்து மிரட்டினார். மறுபக்கம் வாணவேடிக்கை காட்டிய புக்காரி, நெஹ்ரா ஓவரில் ஒரு சிக்சர், பவுண்டரி அடித்தார். தொடர்ந்து ஹர்பஜன் பந்தையும் சிக்சருக்கு பறக்க விட்டு, ஸ்கோரை உயர்த்தினார். பின் ஜாகிர் கான் தனது ஒரே ஓவரில் இரட்டை "அடி கொடுத்தார். முதலில் போரனை(38) வெளியேற்றினார். அடுத்து புக்காரி(21) விக்கெட்டையும் கைப்பற்றினார். இறுதியில் நெதர்லாந்து அணி 46.4 ஓவரில் 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்திய சார்பில் ஜாகிர் 3, சாவ்லா 2, யுவராஜ் 2 விக்கெட் வீழ்த்தினர்.
அதிரடி துவக்கம்:
போகிற போக்கில் எட்டக் கூடிய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு சச்சின், சேவக் அதிரடி துவக்கம் தந்தனர். புக்காரி வீசிய முதல் பந்தையே பவுண்டரிக்கு அனுப்பினார் சேவக். டசாட்டே வீசிய அடுத்த ஓவரில் சச்சின் இரண்டு பவுண்டரி அடித்தார். போட்டியில் 5வது ஓவரை புக்காரி வீச... சேவக் வரிசையாக 3 பவுண்டரிகள் அடிக்க, இந்திய ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். பின் சீலார் ஓவரில் ஒரு சிக்சர், பவுண்டரி அடித்த சேவக்(39) அடுத்த பந்தில் அவுட்டானார். அடுத்த வந்த யூசுப் பதான் போரன் பந்தில் ஒரு இமாலய சிக்சர் அடித்தார்.
விக்கெட் சரிவு:
சீலார் வீசிய போட்டியின் 10வது ஓவரில் அதிர்ச்சி காத்திருந்தது. முதல் பந்தில் சச்சின்(27) வெளியேறினார். 5வது பந்தில் யூசுப் பதான்(11) அவுட்டானார். விராத் கோஹ்லி(12) ஏமாற்றினார். காம்பிரும்(28) அதிக நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. இப்படி "டாப்-ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஏனோ தானோ என விளையாட, ரசிகர்கள் வெறுப்படைந்தனர்.
யுவராஜ் அபாரம்:
பின் யுவராஜ், தோனி இணைந்து பொறுப்பாக ஆடினர். இருவரும் பதட்டப்படாமல் பேட் செய்தனர். கிருகர் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய யுவராஜ் அரைசதம் அடித்ததோடு, அணியின் வெற்றியையும் உறுதி செய்தார். இந்திய அணி 36.3 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 191 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் "பி பிரிவில் 7 புள்ளிகளுடன் முதலிடம் பெற்ற இந்தியா, காலிறுதிக்கு ஜோராக முன்னேறியது. யுவராஜ் (51), தோனி (19) அவுட்டாகாமல் இருந்தனர்.
ஆட்ட நாயகன் விருதை யுவராஜ் வென்றார்.
யுவராஜ் "100 விக்.,
நேற்று நெதர்லாந்து வீரர் பாரசியை அவுட்டாக்கி யுவராஜ் சிங், ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் தனது 100வது விக்கெட்டை பதிவு செய்தார். சுழலில் அசத்திய இவர் 2 விக்கெட் வீழ்த்தினார். இதுவரை 269 போட்டியில் பங்கேற்று 101 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் ஒருநாள் அரங்கில் 100 அல்லது அதற்கு மேல் விக்கெட் வீழ்த்திய 14வது இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார்.
---
டேவிஸ் "100
இந்தியா-நெதர்லாந்து போட்டியில், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் டேவிஸ் அம்பயராக செயல்பட்டார். இதன்மூலம் சர்வதேச ஒருநாள் அரங்கில் 100 அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகளுக்கு அம்பயராக பணியாற்றிய 14வது அம்பயர் என்ற பெருமை பெற்றார்.
---
சச்சின் 2,000 ரன் சாதனை
உலக கோப்பை அரங்கில் 2000 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தார் இந்தியாவின் "மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின். நேற்று 18வது ரன்னை எடுத்த போது, இந்த மைல்கல்லை எட்டினார். இதுவரை 40 உலக கோப்பை போட்டிகளில் பங்கேற்று 5 சதம், 13 அரைசதம் உட்பட 2009 ரன்கள் எடுத்துள்ளார்.
இவ்வரிசையில் "டாப்-5 பேட்ஸ்மேன்கள்:
வீரர் போட்டி ரன்கள் சதம்/அரைசதம்
சச்சின் (இந்தியா) 40 2009 5/13
பாண்டிங் (ஆஸி.,) 42 1577 4/6
லாரா (வெ.இ.,) 34 1225 2/7
ஜெயசூர்யா (இலங்கை) 38 1165 3/6
கில்கிறிஸ்ட் (ஆஸி.,) 31 1085 1/8
* இம்முறை இங்கிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில் சதம் அடித்த இவர், உலக கோப்பை அரங்கில் அதிக சதம் (5) கடந்த வீரர்கள் வரிசையில் முதலிடத்தை பிடித்தார். நேற்று நெதர்லாந்துக்கு எதிராக களமிறங்கியதன் மூலம், உலக கோப்பை அரங்கில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர்கள் வரிசையில் 2வது இடத்துக்கு முன்னேறினார். இதுவரை இவர், 40 போட்டியில் பங்கேற்றுள்ளார். இதன்மூலம் ஆஸ்திரேலியாவின் மெக்ராத் (39 போட்டி), 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார். முதலிடத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் (42 போட்டி) உள்ளார்.
ஒவ்வொரு உலக கோப்பை தொடரில், சச்சின் எடுத்த ரன்கள்:
ஆண்டு போட்டி ரன்கள்
1992 8 283
1996 7 523
1999 7 253
2003 11 673
2007 3 64
2011 4 213
1992-2011 40 2009
---
ஸ்கோர்போர்டு
நெதர்லாந்து
சுவார்சின்ஸ்கி(ப)சாவ்லா 28(42)
பாரசி-எல்.பி.டபிள்யு.,(ப)யுவராஜ் 26(58)
கூப்பர்(கே)தோனி(ப)நெஹ்ரா 29(47)
டசாட்டே(கே)ஜாகிர்(ப)யுவராஜ் 11(28)
கெர்வெசி(கே)ஹர்பஜன்(ப)சாவ்லா 11(23)
ஜூடிரன்ட்-எல்.பி.டபிள்யு.,(ப)ஜாகிர் 0(6)
குரூத்--ரன்அவுட்-(சாவ்லா/தோனி) 5(11)
போரன்(கே)நெஹ்ரா(ப)ஜாகிர் 38(36)
குருகர்-ரன்அவுட்-(கோஹ்லி/தோனி) 8(12)
புக்காரி(ப)ஜாகிர் 21(18)
சீலார்-அவுட் இல்லை- 0(0)
உதிரிகள் 12
மொத்தம் (46.4 ஓவரில், "ஆல்-அவுட்) 189
விக்கெட் வீழ்ச்சி: 1-56(சுவார்சின்ஸ்கி), 2-64(பாரசி), 3-99(டசாட்டே), 4-100(கூப்பர்), 5-101(ஜூடிரன்ட்), 6-108(குரூத்), 7-127(கெர்வெசி), 8-151(குருகர்), 9-189(போரன்), 10-189(புக்காரி).
பந்துவீச்சு: ஜாகிர்கான் 6.4-0-20-3, நெஹ்ரா 5-1-22-1, யூசுப் 6-1-17-0, ஹர்பஜன் 10-0-31-0, சாவ்லா 10-0-47-2, யுவராஜ் 9-1-43-2.
இந்தியா
சேவக்(கே)கெர்வெசி(ப)சீலார் 39(26)
சச்சின்(கே)குருகர்(ப)சீலார் 27(22)
யூசுப்(கே)+(ப)சீலார் 11(10)
காம்பிர்(ப)புக்காரி 28(28)
கோஹ்லி(ப)போரன் 12(20)
யுவராஜ்-அவுட் இல்லை- 51(73)
தோனி--அவுட் இல்லை- 19(40)
உதிரிகள் 4
மொத்தம் (36.3 ஓவரில், 5விக்.,) 191
விக்கெட் வீழ்ச்சி: 1-69(சேவக்), 2-80(சச்சின்), 3-82(யூசுப்பதான்), 4-99(கோஹ்லி), 5-139(காம்பிர்).
பந்துவீச்சு: புக்காரி 6-1-33-1, டசாட்டே 7-0-38-0, சீலார் 10-1-53-3, போரன் 8-0-33-1, கூப்பர் 2-0-11-0, குர்கர் 3.3-0-23-0.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இந்தியா திணறல் வெற்றி! காலிறுதிக்குள் நுழைந்தது
இதெல்லாம் வெற்றியே இல்லை.கத்துக்குட்டி அணிகிட்ட மோதிட்டு ஜெயிச்சுட்டோம் ஜெய்ச்சுட்டோம்ன்னு பெரிசா பீத்திக்கிராணுக ஆக்கம் கேட்ட கூவைகள்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: இந்தியா திணறல் வெற்றி! காலிறுதிக்குள் நுழைந்தது
ஏன் ஆத்தா இம்புட்டு கோவத்துல இருக்கே?உதயசுதா wrote:இதெல்லாம் வெற்றியே இல்லை.கத்துக்குட்டி அணிகிட்ட மோதிட்டு ஜெயிச்சுட்டோம் ஜெய்ச்சுட்டோம்ன்னு பெரிசா பீத்திக்கிராணுக ஆக்கம் கேட்ட கூவைகள்
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: இந்தியா திணறல் வெற்றி! காலிறுதிக்குள் நுழைந்தது
மஞ்சுபாஷிணி wrote:ஏன் ஆத்தா இம்புட்டு கோவத்துல இருக்கே?உதயசுதா wrote:இதெல்லாம் வெற்றியே இல்லை.கத்துக்குட்டி அணிகிட்ட மோதிட்டு ஜெயிச்சுட்டோம் ஜெய்ச்சுட்டோம்ன்னு பெரிசா பீத்திக்கிராணுக ஆக்கம் கேட்ட கூவைகள்
நேற்று போட்டியை நீங்கள் பார்த்திருந்தால் இதைவிட மோசமாகத் திட்டியிருப்பீர்கள் அக்கா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இந்தியா திணறல் வெற்றி! காலிறுதிக்குள் நுழைந்தது
மஞ்சுபாஷிணி wrote:ஏன் ஆத்தா இம்புட்டு கோவத்துல இருக்கே?உதயசுதா wrote:இதெல்லாம் வெற்றியே இல்லை.கத்துக்குட்டி அணிகிட்ட மோதிட்டு ஜெயிச்சுட்டோம் ஜெய்ச்சுட்டோம்ன்னு பெரிசா பீத்திக்கிராணுக ஆக்கம் கேட்ட கூவைகள்
அது கோபக்கார ஆத்தா !! அப்படித்தான் இருக்கும் அக்கா
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: இந்தியா திணறல் வெற்றி! காலிறுதிக்குள் நுழைந்தது
ஏன் மஞ்சு நேத்து நீ மாட்ச் பார்க்கலையா? எப்பவுமே கிரிக்கெட் பார்க்காத நான் நேத்து பார்த்தேன்.இந்த மாதிரி மோசமா விளையாடும்போது சவுதி பாலைவன வெயிலில் கொண்டு வந்து போட்டு முட்டி கால் போட சொல்லணும்.இவனுகளுக்கு தண்ணி கூட கொடுக்க கூடாதுமஞ்சுபாஷிணி wrote:ஏன் ஆத்தா இம்புட்டு கோவத்துல இருக்கே?உதயசுதா wrote:இதெல்லாம் வெற்றியே இல்லை.கத்துக்குட்டி அணிகிட்ட மோதிட்டு ஜெயிச்சுட்டோம் ஜெய்ச்சுட்டோம்ன்னு பெரிசா பீத்திக்கிராணுக ஆக்கம் கேட்ட கூவைகள்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: இந்தியா திணறல் வெற்றி! காலிறுதிக்குள் நுழைந்தது
உதயசுதா wrote:ஏன் மஞ்சு நேத்து நீ மாட்ச் பார்க்கலையா? எப்பவுமே கிரிக்கெட் பார்க்காத நான் நேத்து பார்த்தேன்.இந்த மாதிரி மோசமா விளையாடும்போது சவுதி பாலைவன வெயிலில் கொண்டு வந்து போட்டு முட்டி கால் போட சொல்லணும்.இவனுகளுக்கு தண்ணி கூட கொடுக்க கூடாதுமஞ்சுபாஷிணி wrote:ஏன் ஆத்தா இம்புட்டு கோவத்துல இருக்கே?உதயசுதா wrote:இதெல்லாம் வெற்றியே இல்லை.கத்துக்குட்டி அணிகிட்ட மோதிட்டு ஜெயிச்சுட்டோம் ஜெய்ச்சுட்டோம்ன்னு பெரிசா பீத்திக்கிராணுக ஆக்கம் கேட்ட கூவைகள்
நேத்து நடந்த டெல்லி மைதானம் இரண்டாவது பேட்டிங் பிடிக்கும் அணிக்கு சற்று கடுமையாக இருக்கும் என அனைத்து வர்ணனையாளர்களும் கருத்து தெரிவித்து உங்களுக்கு தெரியாத ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: இந்தியா திணறல் வெற்றி! காலிறுதிக்குள் நுழைந்தது
உதயசுதா wrote:ஏன் மஞ்சு நேத்து நீ மாட்ச் பார்க்கலையா? எப்பவுமே கிரிக்கெட் பார்க்காத நான் நேத்து பார்த்தேன்.இந்த மாதிரி மோசமா விளையாடும்போது சவுதி பாலைவன வெயிலில் கொண்டு வந்து போட்டு முட்டி கால் போட சொல்லணும்.இவனுகளுக்கு தண்ணி கூட கொடுக்க கூடாதுமஞ்சுபாஷிணி wrote:ஏன் ஆத்தா இம்புட்டு கோவத்துல இருக்கே?உதயசுதா wrote:இதெல்லாம் வெற்றியே இல்லை.கத்துக்குட்டி அணிகிட்ட மோதிட்டு ஜெயிச்சுட்டோம் ஜெய்ச்சுட்டோம்ன்னு பெரிசா பீத்திக்கிராணுக ஆக்கம் கேட்ட கூவைகள்
கோபக்கார தங்கச்சி.....உனக்கு ரோஷம் அதிகம்,, விடு விடு தங்கச்சி , இந்தியாவிற்குதான் இந்தவாட்டி கோப்பை....
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: இந்தியா திணறல் வெற்றி! காலிறுதிக்குள் நுழைந்தது
கிரிக்கெட்டிலும் காதலிலும் எது எப்ப நடக்கும்னு யாரும் சொல்ல முடியாது...!
- கலையானந்தா
- கலையானந்தா
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: இந்தியா திணறல் வெற்றி! காலிறுதிக்குள் நுழைந்தது
கலை wrote:கிரிக்கெட்டிலும் காதலிலும் எது எப்ப நடக்கும்னு யாரும் சொல்ல முடியாது...!
- கலையானந்தா
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ஆக்ரோஷமான ஆட்டத்தில் இந்தியா வெற்றி; இறுதிக்குள் நுழைந்தது
» இங்கிலாந்தை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது வங்கதேசம்
» இந்தியா திணறல் வெற்றி! * கோஹ்லி, யுவராஜ் அபாரம் * ஆப்கன் போராட்டம் வீண்
» இறுதிப் போட்டியில் நுழைந்தது இந்தியா
» இந்தியா திரில் வெற்றி; ஒரு ரன் வித்தியாசத்தில் போராடி வெற்றி பெற்றது
» இங்கிலாந்தை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது வங்கதேசம்
» இந்தியா திணறல் வெற்றி! * கோஹ்லி, யுவராஜ் அபாரம் * ஆப்கன் போராட்டம் வீண்
» இறுதிப் போட்டியில் நுழைந்தது இந்தியா
» இந்தியா திரில் வெற்றி; ஒரு ரன் வித்தியாசத்தில் போராடி வெற்றி பெற்றது
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|