ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறை ஒன்றும் இல்லை

2 posters

Go down

குறை ஒன்றும் இல்லை Empty குறை ஒன்றும் இல்லை

Post by அன்பு தளபதி Wed Mar 09, 2011 10:02 pm

”இந்தியாவின் மிக நீண்ட பரப்பளவின் குறுக்கும் நெடுக்குமாக நான்
பயணித்துவிட்டேன். என்ன வளம்? என்ன ஒரு கலாச்சாரம்? ஒரு பிச்சைக்காரன்
இல்லை. ஒரு திருடன் இல்லை. என்ன ஒரு உயர்ந்த பண்பும் ஆன்ம பலமும் நிறைந்த
தேசமிது. இவர்களின் முதுகெலும்பான பாரம்பரியமிக்க கலாச்சாரத்தையும் ஆன்மீக
பலத்தையும் உடைத்தாலன்றி இவர்களை நாம் வெல்ல முடியாது.

பழம்பெருமையும்
ஆழமும் மிக்க இவர்களின் கல்வியை விட வெளிநாட்டுக் கல்வி குறிப்பாக
ஆங்கிலம்தான் உயர்ந்தது என்ற மனோபாவத்தை உண்டாக்கி அவர்கள் தேசத்தின்
மீதும் கலாச்சாரத்தின் மீதும் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி விடுவோமானால்
நாம் வெற்றி பெற்றுவிடுவோம். ஆங்கிலமே பெரிது என்கிற எண்ணத்தை விதைத்து நம்
கலாச்சாரத்தை நேசிக்கச் செய்து விட்டால் நம் விருப்பம் போல் அவர்களை
வளைத்துவிடலாம்”.

இப்படி மிகச் சரியாக இந்தியர்கள் மீதான தன்
கணிப்பை பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் 1835ல் பெப்ருவரி 2ம் தேதி
உரையாற்றுகையில் தெரிவித்த தாமஸ் பாபிங்டன் மெக்காலேயின் கருத்துக்களை
175வருடங்கள் கழித்து எண்ணிப்பார்க்கையில் மலைப்பாக இருக்கிறது. நம்மைப்
பற்றி ஒரு வேற்றான் கணித்து நாம் இப்படி அடிமைகளாகிப் போனோமே என்கிற
கழிவிரக்கம் ஆன்மாவை உலுக்குகிறது.

உண்மையாகவே ஒரு திட்டத்தைச்
செயல்வடிவாக்க எத்தனை கூர்மையாக அவதானித்து ஒரு ஆக்டோபஸ் போல உடும்புப்
பிடிக்குள் ஒரு நாட்டை வளைக்க முடிந்திருக்கிறது.

தனக்குத்
தொடர்பே இல்லாத தொலைவிலிருந்து உள்நுழைந்து ஊடுருவி அவர்களின்
மொழி-கலாச்சாரம்-எண்ணம்-உடை-உணவு வரை தலைகீழாய் மாற்ற எத்தனை
மெனக்கெட்டிருக்கிறார்கள்? ஒரு நாட்டையே வெளியிலிருந்து வந்த ஒரு
கூட்டத்தால் ஊடுருவ முடிந்திருக்கிறது என்றால் எத்தனை தைரியம் அதற்கு
இருந்திருக்க வேண்டும்?

ஒரு வீட்டுக்குள் கன்னம் வைத்து நுழைந்து
அவ்வீட்டிலுள்ளவர்களின் உறக்கத்தைத் தனக்குச் சாதகமாக்கி அங்கிருக்கும்
அத்தனை செல்வத்தையும் சுருட்டிக்கொண்டு செல்லும் ஒரு கள்வனின் செயல் இது.

அந்தக்
கள்வனின் செயல் இன்னும் தொடர்கிறது உள்ளூர்க் கள்வர்களினால்.
மொழி-கலாச்சாரம்-என்பதை ஜாதி வரையிலும் கொண்டுவந்து நிறுத்தி நாட்டைக் கூறு
போட்டுப் பிளவு படுத்திக் குளிர்காய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

உறுதியான
சிந்தனையும் நேர்கொண்ட பார்வையும் இல்லாத தலைவர்களால் இம்மாதிரியான
பிரச்சினைகளைச் சமாளிக்கும் விதம் தெரியாமல் அழுது சாதிக்கிற எல்லாக்
குழந்தைக்கும் பால் கொடுத்து ஊக்குவித்து மகிழ்கிறார்கள்.

நம் உழைப்பை நம் சிந்தனையை நம் நாட்டின் வளத்தைக் கொஞ்சம் திரும்பிப் பார்ப்போமா?

தஞ்சாவூர்-ராமநாதபுரம் ஆகிய இடங்களில் கிடைத்த கல்வெட்டுக்களில்
(கி.பி.900ல்
இருந்து கி.பி.1325வரையுள்ள காலம்) உள்ள சான்றுகளின் படி ஒரு ஹெக்டேருக்கு
15ல் இருந்து 20டன் வரை நெல் உற்பத்தி இருந்திருக்கிறது. இப்போது அதிகபட்ச
உற்பத்தி லூதியானாவில் 6டன் வரை மட்டுமே.

பழமையான பிரிட்டிஷ்
ஆவணங்களில் அவர்களையும் விட நம் விஞ்ஞானத் தொழில் நுட்பம் மீதும் கல்வி
முறையின் ஆழம் குறித்தும் சான்றுகளும் பொறாமையும் தெறிக்கின்றன. இரும்பின்
தரமும் அதன் உற்பத்தியும் மற்றெல்லா நாடுகளையும் விட நம்முடையது சிறந்ததாக
இருந்திருக்கிறது. தில்லியின் மெஹ்ரௌலியிலுள்ள இரும்பு ஸ்தூபி
ஆயிரக்கணக்கான ஆண்டுகளைக் கடந்தும் துருப்பிடிக்காமல் அதே பொலிவோடு நிற்பது
உலகத்தின் அனைத்து வல்லுனர்களுக்கும் இன்றைக்கும் ஆச்சர்யமானதாக
இருக்கிறது.


கி.பி.1600ல் உலகத்தின் GDP யில்
22சதத்துக்கும் மேல் இந்தியாவின் பங்கு இருந்திருக்கிறது. ஆங்கிலேயனுக்கு
அடிமைப்பட்ட 1870களில் அது 12சதமாக பாதாளத்தில் வீழ்ந்தது. அதே
காலகட்டத்தில் 2சதத்துக்கும் கீழே கிடந்த அவர்களின் ஜிடிபி 9சதத்துக்கும்
மேல் உயர்ந்தது. நமது ஜிடிபி இப்போது ஒற்றை இலக்கத்தில் முக்கிக்
கொண்டிருக்கிறது. சுதந்திரம் பெற்று 64ஆண்டுகளுக்குப் பின்னும் உலகச்
சந்தையில் நமது பங்கு ஒரு சதத்துக்கும் குறைவாக இருப்பது எத்தனை பெருமை?18ம்
நூற்றாண்டின் பின்பகுதி வரையிலும் துணி உற்பத்தியிலும் ஜவுளி
ஏற்றுமதியிலும் உலகத்தின் முதலிடம் நமக்குத்தான். சீனாவுக்கு இரண்டாமிடம்.
கப்பல் கட்டுவதில் பேப்பர் தயாரிப்பதில் நாம்தான் முன்னோடி.நம் வானசாஸ்திர
அறிவு- மருத்துவத்தில் யாரோடும் ஒப்பீடற்ற தன்மை-கல்வியின் மேன்மைக்குச்
சான்றாக வெளிநாடுகளிலிருந்து வந்து நாலந்தா பல்கலைக் கழகத்தில் தங்கி கல்வி
கற்றுச் சென்ற தொன்மையான வரலாறு-அரசியலுக்குத் தடம் போட்டுத் தந்த
சாணக்யனின் ராஜதந்திரம்-நமக்கென்ற தனியான தத்துவ அறிவு-முதுமையான மொழி
வளம்-யாரிடமும் இல்லாத இசை நாட்டிய மரபு- சிற்பப் பாரம்பரியம்-பெரும்
பெரும் கோவில்கள்-ஜோதிட அறிவு-மாயாஜாலக் கலை-மிக ஆழ்ந்த கணித அறிவு-எல்லா
வளங்களும் மிக்க நாட்டின் அமைப்பு-அளவுக்கதிகமாக சூரிய ஒளி-கடல்
போக்குவரத்துக்கும் வணிகத்துக்கும் மீன்வளத்துக்கும் முத்துக்கும்
மூன்றுபுறமும் சூழப்பட்ட கடல்-மலை வளம்-ஏராளமான நதிகளுடன் நீர்வளம்-எல்லாக்
கனிமங்களும் கிட்டும் நிலவளம்-மழையை வரவேற்க அடர்ந்த பசும்
காடுகள்-யாரிடமும் இல்லாத எத்தனை அபூர்வ மூலிகைகள்-எத்தனை
விலங்கினங்கள்-பறவைகள்-மரங்கள்-பூக்கள்-கனிகள்- என ஒரு இயற்கை தேவதையின்
முழுக் கொடை நம் தேசம் தான்.
ஒரு நிமிடம் கண்களில் கசியும் நீரைத் துடைத்துக் கொண்டு படபடக்கும் நெஞ்சில் கைவைத்துச் சொல்லுங்கள் தோழர்களே!இவற்றில் எதை எல்லாம் அழித்துவிட்டோம்? என்னவெல்லாம் கெடாமல் மீதமிருக்கிறது? இனி எதையெல்லாம் விட்டுச் செல்லப் போகிறோம்? யாரிடம் விட்டுச் செல்ல இருக்கிறோம்?
-சுந்தர் ஜி பிரகாஷ்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

குறை ஒன்றும் இல்லை Empty Re: குறை ஒன்றும் இல்லை

Post by sugumaran Wed Mar 09, 2011 10:12 pm

உண்மையில் மிகச் சிறந்த சிந்ததனைகளைத் தாங்கிய கட்டுரை .
பாரத பூமி பழம் பெரும் பூமி !
பலரையும் கவர்ந்த பூமி !
முக்தி என்பது இந்த பூமியை அடைந்த பிறகே யாருக்கும் கிடைக்கும் .
கிடைக்கும் வைரச் சுரங்கத்தின் மேல் நின்று ஏக்கப் பெருமூச்சி இட்டுக்கொண்டிருக்கிறோம் .
கட்டுரையை பகிர்ந்து கொண்டதற்க்கு நன்றி
அன்புடன்
சுகுமாரன்
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Back to top Go down

குறை ஒன்றும் இல்லை Empty Re: குறை ஒன்றும் இல்லை

Post by அன்பு தளபதி Wed Mar 09, 2011 10:19 pm

வாழ்க்கை மானுவல் அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன் அய்யா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

குறை ஒன்றும் இல்லை Empty Re: குறை ஒன்றும் இல்லை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum