ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மீக சிந்தனைகள்

4 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

ஆன்மீக சிந்தனைகள் - Page 4 Empty ஆன்மீக சிந்தனைகள்

Post by Admin Fri Oct 31, 2008 2:28 am

First topic message reminder :

சத்ய சாய் பாபா

* நாம் நம் கடமையைச் செய்கிறோம் என்பதை மட்டுமே எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். அதில் வெற்றி கிடைக்குமா அல்லது தோல்வியில் முடியுமா என்று சிந்தித்துக் கொண்டே கடமையைத் தள்ளிப் போடக் கூடாது. அப்பொறுப்பினை ஆண்டவனிடம் ஒப்படைத்து விட வேண்டும். இந்த மனப்பான்மையை வளர்த்துக் கொண்டால் வெற்றி தோல்விகள் எவ்விதமான பாதிப்புகளையும் ஏற்படுத்துவதில்லை.


* இருண்ட அறையில் அசுத்தமும், தூசியும் நிறைந்து இருக்கும். நாளடைவில் தேள், பாம்பு போன்ற விஷஜந்துக்களும் ஒளிந்து கொள்ள ஏதுவாகும். அதே அறையை சுத்தமாக்கி, கதவு ஜன்னல்களைத் திறந்து வைத்தால் வெளிச்சமும், நல்லகாற்றும் வர வழியுண்டாகும். அதுபோல, மனம் என்னும் வீட்டில் காமம், கர்வம், பொறாமை போன்ற விஷஜந்துக்களை நுழைய விடாமல் அன்பு என்னும் ஒளியை பரப்புங்கள். தூய்மை என்னும் காற்றையும் நிரப்புங்கள்.


* கண்ணிமையில் பூசிய கருநிற மை கண்ணுக்குள் படிவதில்லை. நீரில் இருக்கும் தாமரை மலர் சேற்றினைத் தீண்டுவதில்லை. கடவுளை முற்றிலுமாக உணர்ந்த மனிதர்கள் உலகவாழ்வில் ஈடுபட்டாலும், அவர்கள் மனம் அதில் ஈடுபடுவதில்லை. எப்போதும் இறைவனையே எண்ணிக் கொண்டு இருப்பர்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down


ஆன்மீக சிந்தனைகள் - Page 4 Empty Re: ஆன்மீக சிந்தனைகள்

Post by Admin Fri Oct 31, 2008 3:02 am

நித்யானந்தர்

கோபம் உண்டாகும் போது அதை அடக்க முயற்சிப்பது வேண்டாத வேலையாகும். கோபம் ஏதாவது ஒரு காரணம் பற்றியே வருகிறது. அக்காரணத்தை ஆராய முற்படுவது நல்லது. தவறு நம் மீது இருக்கும்போது, நாம் அடுத்தவர் மீது கோபப்படலாமா என்ற கோணத்தில் யோசித்துப் பாருங்கள். கோபம் இருந்த இடம் தெரியாமல் மறைவதை உணர்வீர்கள்.நீங்கள் கள்ளம் கபடம் இல்லாதவர். தவறே செய்யாதவர் என்றாலும் கூட, யார் மீதாவது கோபப்படலாமா என்றால் அப்போதும் கோபம் கூடாது தான். ஏனென்றால், மனம் தூய்மையான நிலையில் கோபமே உண்டாகாது. அளவுக்கு அதிகமாக நாம் கோபத்தை வெளிக் காட்டும் போது நம் சக்தி அநியாயமாக வீணாகிறது. இதனால், மனமகிழ்ச்சியை இழந்து விடுகிறோம். கோபப்படும் சமயத்தில் மனச்சிதறல் ஏற்படுவதால், நம் செயல்களில் முழுமையாக ஈடுபட முடியாது.மனிதன் மனதிற்கு எஜமானனாக இருக்க வேண்டும். நம் தேவைகளையும், விருப்பங்களையும் பூர்த்தி செய்து கொள்ள உதவும் ஒரு வேலையாளாக மனதை வைத்துக் கொள்ள வேண்டும். ஆனால், பலநேரங் களில் மனிதன் மனம்போன போக்கில் சென்று பல சிக்கல்களில் மாட்டிக் கொள்கிறான்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

ஆன்மீக சிந்தனைகள் - Page 4 Empty Re: ஆன்மீக சிந்தனைகள்

Post by Admin Fri Oct 31, 2008 3:03 am

சிருங்கேரி சங்கராச்சாரியார்


உயிர் தங்குவதற்காக இறைவனால் உடல் தரப்பட்டுள்ளது. உயிர்களிலேயே மனிதஉயிரே மகத்தானது. உயர்ந்தது. மற்ற உயிர்கள் எல்லாம் பிறப்பது வெறும் கர்மவினைகளை மட்டும் அனுபவிப்பதற்கே. மனிதர்களுக்கு மட்டுமே புதிய வினைப்பயன்களைத் தேடிக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. இவ்வாய்ப்பினால் நல்வினைகளையும் தேடலாம். தீவினைப்பயன்களையும் தேடலாம். இதுதான் மனிதனுக்கும், மற்ற உயிர்களுக்கும் உள்ள முக்கிய வேறுபாடாகும். மனித உடல் ஓடத்தைப் போன்றது. ஏராளமான புண்ணியம் செய்தவர்களால் மட்டுமே மனிதப்பிறவி எடுக்கமுடியும். பிறவி எனும் பெருங்கடலைக் கடப்பதற்காகவே இப்பிறவியைப் பயன்படுத்த வேண்டும். ஆனால், இந்த உடலாகிய ஓடம் நிலையானதல்ல. சீக்கிரமே உடைந்து விடும். பிறவிக்கடலைக் கடப்பது அவ்வளவு எளிதல்ல. இதற்கு முன்பு எத்தனை முறை உடல் எனும் ஓடத்தைப் பெற்றும் நம்மால் பிறவிக்கடலைக் கடக்க முடியாமல் தோற்றுப் போயிருக்கிறோம் என்பது நமக்குத் தெரியாது. நாம் இப் பிறவியிலேயே இறைவனை முயன்று சேராது விட்டால் அடுத்து என்ன பிறவி வாய்க்குமோ தெரியாது. மீண்டும் புழு, பூச்சி, பறவை, விலங்கு என்று பல பிறவிகளை எடுக்க வேண்டி வரலாம். எனவே, இப்பிறவியிலேயே இறைவனை சரணாகதியாகப் பற்றுங்கள். பிறப்பில்லா நிலையை அடைவதே தம் தலையாய கடமையாகும்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

ஆன்மீக சிந்தனைகள் - Page 4 Empty Re: ஆன்மீக சிந்தனைகள்

Post by Admin Fri Oct 31, 2008 3:03 am

அகோபில மடம் ஜீயர்


* சிரத்தை இல்லாமல் தானம் செய்து வீணான செயலாகும். தானம் பெறுபவரை அவமதிப்பாக எண்ணக் கூடாது. தன்னைப் பிறர் புகழ வேண்டும் என்ற எண்ணத்திலும் தானம் செய்யக் கூடாது.

* தானம் பெறுபவனும், தானம் கொடுப்பவனும் பக்தி உடையவர் களாக இருக்க வேண்டும். கடவுள் சிந்தனை இருந்தால் மட்டுமே தானம் முழுமையானதாகும்.

* பொய் சொல்பவன், பிறர் பொருளை அபகரித்தவன், சாஸ்திரங்களை மதிக்காதவன், கோபம் கொண்டவன் நன்றி மறந்தவன், நம்பிக்கை துரோகம் செய்தவன், பெற்றோரை மதிக்காதவன், ஒழுக்கமில்லாதவன் இவர்கள் அனைவரும் தானம் பெறுவதற்கு தகுதியற்றவர்கள் ஆவர்.

* அநியாயமாக பிறரிடம் ஏமாற்றிப் பெற்ற பொருளில் ஒருபகுதியை தானம் செய்தால் பாவம் தொலையும் என்று எண்ணிச் செய்யும் தானம் பாவச் செயலாகும். தானம் செய்த பிறகு இப்படி பெரும் பணத்தை வீணாக பிறருக்கு கொடுத்து விட்டோமே என்று வருந்துவதும் பாவத்திலேயே அடங்கும். தானம் பற்றிய இந்த அறிவுரைகளை மகாபாரதத்தில் அசுவமேதயாகம் செய்ய முற்படும் தர்மபுத்திரரிடம் பகவான் கிருஷ்ணர் விளக்கமாக எடுத்துச் சொல்கிறார்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

ஆன்மீக சிந்தனைகள் - Page 4 Empty Re: ஆன்மீக சிந்தனைகள்

Post by Admin Fri Oct 31, 2008 3:04 am

ராதாகிருஷ்ணன்


உலகியல் வாழ்க்கையில் உடலுக்குரிய வசதிகளைத் தேடிக்கொண்டிருப்பவன் அவற் றை அடைவதிலேயே தன் ஆற்றல் முழுவதையும் செலவழிக்கிறான். அந்த அனுபவத்திலேயே தங்கி விடுகிறான். அவனால் ஆன்மிக முன் னேற்றம் பெற இயலாது. அதனால்தான், உணவு, உடை, ஓய்வு போன்ற சுகபோகங்களிலும் எளிமையைக் கடைபிடிக்க வேண்டுமென ஆன்மிக நூல்கள் கூறுகின்றன. தியாக உணர்வை வற்புறுத்துகின்றன. ஒரு மனிதனின் மனநிறைவு உடற்சுகத்தில் இல்லை. அது மனப்பக்குவத்தில் தான் இருக்கிறது என்பது வேதாந்தக் கோட்பாடு. எவ்வளவுக்கு எவ்வளவு நாம் இயந்திரங்களால் ஏற்படும் வசதிகளைக் குறைத்துக் கொள்கிறோமோ, அந்தளவுக்கு மனம் பக்குவமடையும். தெய்வங்களுக்கு மிருகங்களைப் பலி கொடுப்பதால் ஒருபோதும் இறையருளைப் பெற முடியாது. இப்படிப்பட்டவர்களை இறைவன் ஒருநாளும் தன்னிடம் நெருங்க விடமாட்டான். நம்மிடம் உள்ள வசதிகளை தியாகம் செய்து, உடல் இன்பத்தை பலி கொடுப்பதன் மூலமே இறைவனின் பூரணமான அருளைப் பெற இயலும்.இதற்கான சூழ்நிலையைத் தேடித்தான் மகான்கள் காடுகள், மலைகள் என்று ஜனநடமாட்டம் இல்லாத இடங்களைத் தேடிச் செல்கிறார்கள் அல்லது ஒதுக்குப்புறமான இடங்களில் ஆஸ்ரமங்களை அமைத்து இறைசிந்தனையில் தம்மை அர்ப்பணிக்கிறார்கள்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

ஆன்மீக சிந்தனைகள் - Page 4 Empty Re: ஆன்மீக சிந்தனைகள்

Post by Admin Fri Oct 31, 2008 3:05 am

தயானந்த சரஸ்வதி

ஒருவன் தனது நலனுக்காக வாழ்வில் மாற்றங்கள் செய்து கொள்கிறான். அவன் விரும்பும் நிம்மதியும், தேவையான பொருட்களும் அவனுக்கு தடையின்றி கிடைத்துக் கொண்டிருக்கும் பட்சத்தில் அவனது வாழ்வில் மாற்றங்கள் எதுவும் தேவைப்படுவதில்லை. அந்த நேரத்தில் அவன் பரிபூரணத்துவம் பெற்றவனாகிறான். தன்னைச் சுற்றி நடக்கும் தீய செயல்களைக்கூட நன்மை தரும் செயலாக பார்க்கிறான். இதனால் அவனுக்கு துன்பம் நேருவதே இல்லை. இவ்வாறு பரிபூரணம் பெற்றவர்களாக வாழ முயற்சி செய்யுங்கள்.


வாழ்க்கையில் பல சூழ்நிலைகளில் இன்பம் அனுபவிக்கிறோம். இன்பம் தரும் பொருள், அனுபவிக்கும் கருவி மற்றும் அதற்கேற்ற மனநிலை ஆகிய மூன்றும் இருந்தால்தான் இன்பத்தை முழுமையாக அடையமுடியும். ஆனால், இம்மூன்றும் எப்போதும் ஒரே நிலையில் இருப்பதில்லை. காலத்திற்கு தகுந்தாற்போல மாற்றமடைந்து கொண்டிருக்கும். மனநிலையும் எல்லா நேரத்திலும் நிலையாக இருப்பதில்லை. எனவே, இந்த மூன்றையும் நம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டியது அவசியம். இதற்கு மனதை ஒருமுகப்படுத்த வேண்டும்.


பலர் தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக் கொள்கின்றனர். இந்த மனப்பான்மையைப் போக்குவதற்கு, ஒவ்வொருவரும் தம்மைத்தாமே முழுவதுமாக அறிந்து கொள்ள வேண்டும். தன்னை அறிந்து கொண்டவர்களுக்கு இதுபோன்ற சிந்தனைகள் வருவதில்லை. எனவே, முதலில் உங்களை அறிந்து கொள்ளுங்கள்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

ஆன்மீக சிந்தனைகள் - Page 4 Empty Re: ஆன்மீக சிந்தனைகள்

Post by சிவா Tue Mar 27, 2012 9:37 am

எதைத் தேர்ந்தெடுப்பது என்று
உங்களுக்குத் தெரியாதபோது, உங்கள் வசமுள்ள ஒவ்வொன்றிலுமே முழு ஈடுபாட்டுடன்
இருங்கள். பின்பு உங்கள் வாழ்க்கையே உங்களுக்குத் தேவையானதை சரியாகத்
தேர்ந்தெடுக்கும், அது எப்போதும் தவறு செய்யாது.


ஆன்மீக சிந்தனைகள் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆன்மீக சிந்தனைகள் - Page 4 Empty Re: ஆன்மீக சிந்தனைகள்

Post by ராஜா Tue Mar 27, 2012 11:01 am

புதையலை தொண்டி எடுப்பது போல , எடுது கொடுதுள்ளீர்கள் நன்றி தல
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆன்மீக சிந்தனைகள் - Page 4 Empty Re: ஆன்மீக சிந்தனைகள்

Post by கே. பாலா Tue Mar 27, 2012 11:09 am

சூப்பருங்க அருமை மகிழ்ச்சி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

ஆன்மீக சிந்தனைகள் - Page 4 Empty Re: ஆன்மீக சிந்தனைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum