ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மீக சிந்தனைகள்

4 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

ஆன்மீக சிந்தனைகள் - Page 2 Empty ஆன்மீக சிந்தனைகள்

Post by Admin Fri Oct 31, 2008 2:28 am

First topic message reminder :

சத்ய சாய் பாபா

* நாம் நம் கடமையைச் செய்கிறோம் என்பதை மட்டுமே எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். அதில் வெற்றி கிடைக்குமா அல்லது தோல்வியில் முடியுமா என்று சிந்தித்துக் கொண்டே கடமையைத் தள்ளிப் போடக் கூடாது. அப்பொறுப்பினை ஆண்டவனிடம் ஒப்படைத்து விட வேண்டும். இந்த மனப்பான்மையை வளர்த்துக் கொண்டால் வெற்றி தோல்விகள் எவ்விதமான பாதிப்புகளையும் ஏற்படுத்துவதில்லை.


* இருண்ட அறையில் அசுத்தமும், தூசியும் நிறைந்து இருக்கும். நாளடைவில் தேள், பாம்பு போன்ற விஷஜந்துக்களும் ஒளிந்து கொள்ள ஏதுவாகும். அதே அறையை சுத்தமாக்கி, கதவு ஜன்னல்களைத் திறந்து வைத்தால் வெளிச்சமும், நல்லகாற்றும் வர வழியுண்டாகும். அதுபோல, மனம் என்னும் வீட்டில் காமம், கர்வம், பொறாமை போன்ற விஷஜந்துக்களை நுழைய விடாமல் அன்பு என்னும் ஒளியை பரப்புங்கள். தூய்மை என்னும் காற்றையும் நிரப்புங்கள்.


* கண்ணிமையில் பூசிய கருநிற மை கண்ணுக்குள் படிவதில்லை. நீரில் இருக்கும் தாமரை மலர் சேற்றினைத் தீண்டுவதில்லை. கடவுளை முற்றிலுமாக உணர்ந்த மனிதர்கள் உலகவாழ்வில் ஈடுபட்டாலும், அவர்கள் மனம் அதில் ஈடுபடுவதில்லை. எப்போதும் இறைவனையே எண்ணிக் கொண்டு இருப்பர்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down


ஆன்மீக சிந்தனைகள் - Page 2 Empty Re: ஆன்மீக சிந்தனைகள்

Post by Admin Fri Oct 31, 2008 2:48 am

தேஜோமயானந்தர்


தியானத்தில் ஈடுபடுவோரின் மனநிலையைப் பொறுத்தே நம் மனம் ஒருநிலைப்படும். கூடிய வரை நன்கு ஓய்வு எடுத்த நிலையில் மனம் தெளிவாக இருக்கும். அந்நிலையில் தியானத்தில் அமர்வது நல்லது. அதனாலேயே தியானம் செய்ய அதிகாலைப் பொழுதே நல்லது என்று கருதுகிறார்கள். யோகப்பயிற்சியில் நல்ல அனுபவம் வாய்ந்த நிபுணரிடம் கற்றுக் கொண்டு, மூச்சைக் கட்டுப்படுத்தும் பயிற்சிகளைப் பழகியவர்கள் தியானம் செய்யத் தொடங்கும் போது மிக விரைவில் மனதைக் கட்டுப்படுத்தலாம். ஒருமுகப்பட்ட மனம் தியானத்தில் லயிக்க ஆரம்பிக்கும். நம்முடைய சிந்தனையில் இருக்கும் அனுபவங்கள் யாவும் தியானத்தின் போது உருவெடுத்து எண்ணத்தில் தோன்ற ஆரம்பிக்கும். தொடர்ந்து தியானத்தை விடாது பழகும் போது தான் இந்த எண்ணங்கள் மறையத் தொடங்கும். பின்னர் தியானம் செய்ய அமர்ந்த சிறிது நேரத்திலே நம் மனம் ஒருமுகப்படுவதை உணரலாம்.தியானத்தில் நாம் சாட்சியாக மட்டுமே இருந்து நம் எண்ணங்களை கவனிக்க வேண்டும். அப்படி கவனிக்கப் பழகும் போது நாம் அந்த எண்ணங்களில் ஆழ்ந்து விடாமல் படிப்படியாக விலகி நிற்க முடியும். நாளும் கடமையாக தியானம் பயில்பவனால் எண்ணங்களைக் கடந்து மனதைக் கட்டுப்படுத்த முடியும்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

ஆன்மீக சிந்தனைகள் - Page 2 Empty Re: ஆன்மீக சிந்தனைகள்

Post by Admin Fri Oct 31, 2008 2:49 am

வினோபாஜி


* கடவுளை நிச்சயமாகக் காணமுடியும். அதற்கு தேவை நம்பிக்கை.


* பணத்தை மட்டுமே குறிக் கோளாகக் கொண்டு வேலை செய்யக்கூடாது. பிறர் நன்மைக் காகவே உழைக்கும் தன்மை நம்மிடையே பரவ வேண்டும்.



* மனிதர்களுக்குள் சமத்துவம் மிக அவசியம். ஆனால், அன்பில்லாத சமத்துவத்தால் பகைதான் மிஞ்சும்



* இவ்வுலகில் ஆசையில்லாதவன் இறைவன் மட்டுமே. எனவே, அவனை நீங்கள் பின்தொடருங்கள். உள்ளத்திலுள்ள ஆசைகளைக் களைவதற்கு அவன் ஒருவனால் மட்டுமே முடியும்.



* அராஜகச் செயல்கள் பெருகுவதற்கு காரணமே மன உறுதியின்மைதான். அஹிம்சை நெறியுடைய நாட்டிற்கு காவல்துறை தேவையில்லை. தொண்டர் படையே போதுமானது.



* கொடுப்பதால் தான் செல்வம் பெருகுகிறது. ஈவதில் தான் மனிதனுக்கு இன்பம் பிறக்கிறது. தன்னுடையது என்ற உரிமையும் எண்ணமும் இதற்கு பாதகம் செய்கிறது.



* சூரியன் எத்தகைய வேற்றுமையுமின்றி எல்லோருக்கும் ஒரே மாதிரியான ஒளி தருகிறது. அதுபோல் நாமும் யாரிடமும் வித்தியாசம் இல்லாமல் பழக வேண்டும்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

ஆன்மீக சிந்தனைகள் - Page 2 Empty Re: ஆன்மீக சிந்தனைகள்

Post by Admin Fri Oct 31, 2008 2:50 am

பாரதியார்


தனக்குத் தானே தலைவனாயிருக்கும் அளவிற்கு தன்னை தகுதிப்படுத்திக் கொள்பவனே சிறந்த மனிதன் ஆவான். இப்படிப்பட்டவன் ஆண்டவனுக்கு நிகராக மதிக்கத் தக்கவன். தரும சிந்தனை என்பது உயர்ந்தவர்களுக்கு மட்டுமே உள்ள குணம் என்று நினைக்கிறோம். அது ஒவ்வொருவரும் தங்களைச் சுற்றியுள்ள மனிதர்களுக்குச் செய்ய வேண்டிய அடிப்படை கடமையாகும். தியானத்தை ஒருபோதும் கைவிடாதீர்கள். அதனால் உண்டாகும் சக்தியை எளிதாக எடை போடாதீர்கள். மனிதன் தான் நினைத்தபடியே வாழும் தகுதியை தியானம் தரவல்லதாகும். கலியுகம் எதுவரை நீடிக்கும் என்றால், மனிதன் எதுவரை அநியாயம் செய்கிறானோ அதுவரை நீடிக்கும். அநியாயம் நீங்கினால் உலகில் கலியின் ஆட்சி முடிவுக்கு வந்து விடும்.

இந்த உலகத்திலுள்ள எல்லாத் துன்பங்களைக் காட்டிலும் வறுமைத்துன்பம் மிகவும் கொடியது. வறுமையே எல்லாச் சிறுமைகளிலும் மோசமான சிறுமையாகும். மற்ற உயிர்களிடம் கருணையும் அன்பும் கொண்டால் உயிர் வளரும். அன்பிருக்கும் இடத்தில் ஜீவசக்தி குடிகொண்டிருக்கும். அவனிடத்தில் உலகவுயிர்கள் அனைத்தும் நட்போடு உறவாடும்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

ஆன்மீக சிந்தனைகள் - Page 2 Empty Re: ஆன்மீக சிந்தனைகள்

Post by Admin Fri Oct 31, 2008 2:50 am

காந்தீஜி


சத்தியம் என்பது மயிரிழையினை விட மென்மையானதும், நுட்பமானதும் ஆகும். அதே நேரம் கற்பாறையை விடவும் கடினமும் உறுதியும் கொண்டது. அதனால் சத்தியம் தான் பின்பற்ற மிக எளிதானது. அதே சமயத்தில் மிக கடினமானதும் அதுவே. சமுதாயத்தில் நலிந்த மக்களுக்குச் சேவை செய்து வருவதன் மூலமே சத்தியமாகிய கடவுளை ஆராதிக்க முடியும். மக்கள் சேவையையே கடவுள் மிகவும் விரும்புபவராய் இருக்கிறார்.ண கோடி சூரியன்களைப் போன்ற பிரகாசம் கொண்ட சத்தியம் எனும் ஜோதியை தரிசனம் செய்ய வேண்டுமானால், அகிம்சை எனும் தர்மவழியைத் தவிர வேறு மார்க்கம் எதுவும் இல்லை. சத்திய தரிசனம் செய்ய விரும்புபவன் துரும்பையும் விட தன்னை தாழ்த்தி பணிவோடு இருக்க வேண்டும். வாழ்வில் பணிவுடன் தன் கடமையைச் செய்பவர்களுக்கு உறுதியாக சத்திய தரிசனம் கிடைக்கும். உள்ளத்தின் உண்மை ஒளியே சத்தியம். எத்தனை குழப்பங்கள் நம்மைச் சூழ்ந்தாலும் சத்தியவழியில் நடப்பவனுக்கு உள்ளத்தின் உண்மை ஒளி மங்காது.

சத்தியம் ஒருவனுக்கு கவசம் போன்றது. அதுவே ஒரு மனிதனை எப்போதும் எதிலிருந்தும் காப்பாற்ற வல்லது.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

ஆன்மீக சிந்தனைகள் - Page 2 Empty Re: ஆன்மீக சிந்தனைகள்

Post by Admin Fri Oct 31, 2008 2:51 am

மாதாஅமிர்தனந்தமயி


துன்பமயமான உலகைப் படைத்தவர் கொடியவர் என்று சிலர் நினைக்கிறார்கள். பணக்காரர்கள் சொகுசாக வாழும்போது மற்றவர்கள் வறுமையில் வாடுவது நியாயமா என்று பலர் வருந்துகிறார்கள். இதுவா கடவுளின் கருணை? என்று பலரும் மனம் நொந்து கொள்கின்றனர்.உண்மையில் கடவுள் சோதனைகளை மட்டுமே கொடுக்கும் கொடியவர் அல்ல. அவர் கருணை வடிவானவர். நியாயமான ஆசைகளைக் கொண்டு ஒழுக்கத்துடன் வாழ்பவர்களுக்கு கடவுளின் கருணை என்றைக்கும் உண்டு. பேராசை கொண்டு அலையாதீர்கள். தர்மநெறிமுறைகளை பின்பற்றி சத்திய வழியில் நடப்பவர்களை கடவுள் நிச்சயம் கரைசேர்க்க தவறுவதில்லை. வேகத்துடன் எதையும் அணுகாதீர்கள். விவேகத்தை வளர்த்துக் கொள்வது பலவழிகளில் நமக்குத் துணை செய்யும். "அம்மா' என்று ஆண்டவனின் திருப்பாதங்களை சரண்புகுந்து நீயே எனக்குத் துணை என்று கூக்குரல் எழுப்புங்கள். உன்னையன்றி எனக்கு யார் துணை என்று மன்றாடுங்கள். ஜகன்மாதாவின் மனம் உருகி நிச்சயம் உங்களை தனதாக்கிக் கொள்வாள். எது நமக்கு வாழும் வகை என்பதை பல ரிஷிகள் நமக்கு போதித்துச் சென்றிருக்கிறார்கள். அவ்வழிகளை பின்பற்றினால் வாழ்க்கை மேன்மை பெறும்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

ஆன்மீக சிந்தனைகள் - Page 2 Empty Re: ஆன்மீக சிந்தனைகள்

Post by Admin Fri Oct 31, 2008 2:52 am

சத்குரு ஜக்கி வாசுதேவ்


* அனைவரிடமும் அன்பாக இருக்க வேண்டும், நேசம் செலுத்தி அவர்களால் விரும்பப்படுபவராக இருக்க வேண்டும் என்று தான் நினைக்கிறோம். ஆனாலும், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களால் அவ்வாறு இருக்க முடிவதில்லை. இந்த அன்பு நிலையை அடைவதற்கு, மற்றொருவரின் உதவி தேவையில்லை. ஆனால், அன்பு என்பது மற்றொரு நபரின் தூண்டுகோல் இருந்தால் மட்டுமே வெளிப்படும் என்ற மாயையான நிலைக்கு பலர் தள்ளப்பட்டுள்ளார்கள். அன்பு என்பதை தனிமையில் இருக்கும்போது நமக்கு நாமே கூட செலுத்திக் கொள்ளலாம். பிறர் மீது, அன்பு செலுத்த விரும்புபவர்கள், அதற்கான சூழலை உருவாக்கிக் கொண்டாலே போதும்.


* தற்போது மற்றவர்களை எப்படி பயன்படுத்துவது என்பதின் இலக்கணமாகத்தான் அன்பு கருதப்படுகிறது. ஒருவர் யார் மீது அன்பு செலுத்துகிறாரோ, அவர் இவரது விருப்பத்திற்கேற்ப நடந்து கொள்பவராக இருக்க வேண்டும் என்ற வரைமுறையும் வகுக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் தங்களுக்கு பிடிக்காத கொள்கை உடையவர்களை விரும்புவதில்லை. இத்தகைய செயல் வியாபாரமாக கருதப்படுமே தவிர நிச்சயமாக அன்பாக இருக்காது.


* ஒருவருக்கு பொருளோ, இன்பமோ தேவைப்படும் நேரத்தில் அதனை அடைவதற்காக சம்மந்தப்பட்ட நபரிடம் அன்பு செலுத்தக்கூடாது. உண்மையான அன்புடன் இருந்தால் விரும்பும் அனைத்தும் எளிதாக கிடைக்கும் என்ற மனப்பக்குவம் மக்களிடம் வர வேண்டும்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

ஆன்மீக சிந்தனைகள் - Page 2 Empty Re: ஆன்மீக சிந்தனைகள்

Post by Admin Fri Oct 31, 2008 2:52 am

யோகானந்தர்


* மனிதன் அனுபவிக்கும் ஒவ்வொரு உணர்வும் அவனது மனதை பொறுத்துதான் அமைகிறது. பணம் நிறைந்த ஒருவனது மனம், தான் ஏழையாக இருப்பதாகவும், இப்போது இருப்பதில் திருப்தி இல்லை என்றும் எண்ணினால், இல்லாதவனைப் போலவே தான் தன்னை உணர்வான். ஆகவே, மனதை எப்போதும் திருப்தி உணர்வு கொண்டதாக வைத்திருங்கள்.


* ஒருவன், மற்றொருவனால் ஏமாற்றப்படும்போது மனம் உடைகிறான். அப்போது ஆறுதல் சொல்ல யாரும் இல்லாவிட்டால், தனக்கு உதவிக்கு யாரும் இல்லையே என்று எண்ணி வருந்துகிறான். இது சரியான எண்ணமல்ல. ஏனெனில், உலகில் ஆதரவற்றவர்கள் என்று யாருமே இல்லை. ஒவ்வொருவருக்கும் இறைவன் ஆதரவு தருபவனாகவே இருக்கிறான். உங்களை யார் கைவிட்டாலும் அவன் நிச்சயமாக கைவிடமாட்டான்.


* மனிதர்கள் இறைவனின் வடிவங்களே. அவர்கள் யாராலும் வெற்றி கொள்ள முடியாத அளவிற்கு திறமையுடையவர்களாக இருக்கின்றனர். எனவே, பெரிய தோல்வி வந்தால்கூட அதற்காக கலங்காதீர்கள். ஏனெனில், நீங்கள் வெற்றி பெற வேண்டுமென்பதில், உங்களைவிட இறைவன்தான் அதிக ஆர்வமுள்ளவனாக இருக்கிறான்.


* பணம் இருந்தால் மகிழ்ச்சியுடன் இருக்கலாம் என்றும் எண்ணாதீர்கள். பணக்காரர்கள் வெளியில் மகிழ்ச்சியுடன் இருப்பதாக தோன்றினாலும், அவர்களுக்குள்ளும் பல துன்பங்கள் இருக்கத்தான் செய்யும். ஆகவே, உங்களுக்கு நிகழ்பவற்றை இன்பமாகவே எடுத்துக்கொள்ளுங்கள்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

ஆன்மீக சிந்தனைகள் - Page 2 Empty Re: ஆன்மீக சிந்தனைகள்

Post by Admin Fri Oct 31, 2008 2:53 am

சாரதாதேவியார்


* ஒவ்வொருவரும் குருவை சார்ந்து வாழுங்கள். அவரது சொல்கேட்டு அப்படியே நடந்து கொள்ளுங்கள். அவர் உங்களுக்கு செய்யும் துன்பத்தை கூட நன்மையாக கருதி ஏற்றுக் கொள்ளுங்கள். குரு, தீமையான ஒருவிஷயத்தை உங்களுக்கு சொல்கிறார் என்றால் அதனால் மிகப்பெரும் நன்மை ஒன்று காத்திருக்கிறது என்பது உண்மை.


* ஒருவருக்கு ஏற்படும் இன்பமும், துன்பமும் அவர்களது கர்மபலன்களுக்கு ஏற்பவே நிகழ்கிறது. ஆனால், இறைவனின் நாமத்தை சொல்லிக்கொண்டிருப்பதால் அதனை முழுமையாக நம்மிடமிருந்து விலக்க முடியாவிட்டாலும், அதன் வலிமையையாவது குறைத்து விடலாம். கர்மபலன்படி, உங்களுக்கு பெரிய காயம் ஒன்று ஏற்படுவதாக இருந்தால், இறைநாமத்தை சொல்லி அவரை வழிபட்டதன் பலனால் மிகச்சிறிய காயம் மட்டும் ஏற்படும்படி அமைந்துவிடும்.




* நீங்கள் இங்கு இருப்பதும், இல்லாததும், ஒரு செயலை செய்வதும், செய்யாமல் இருப்பதும் உங்களது விருப்பப்படி நிகழ்வது இல்லை. அது இறைவனின் விருப்பப்படி நடக்கிறது. அவர் நீங்கள் இப்படித்தான் செயல்பட வேண்டும் என்று தீர்மானித்திருந்தால் நீங்கள் அதன்படிதான் நடப்பீர்களே தவிர, வேறு வழியில் நிச்சயமாக செல்ல முடியாது. எனவே, உங்களை இறைவனிடம் அர்ப்பணித்து விடுங்கள்.


* லாபம் கிடைக்கிறது என்பதற்காக பொய் பேசாதீர்கள். உண்மை பேசுபவன் இறைவனுக்கு பிடித்தமானவன் ஆகிறான். விரைவாகவே அவரை அடைந்து விடுகிறான்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

ஆன்மீக சிந்தனைகள் - Page 2 Empty Re: ஆன்மீக சிந்தனைகள்

Post by Admin Fri Oct 31, 2008 2:54 am

திருவள்ளுவர்


* உள்ளத்தில் இருக்கும் குற்றங்கள் நீங்கவும், அறவழியில் நடக்கவும் வாய்மையை வலியுறுத்தும் அறநூல்களை தேர்ந்தெடுத்து கற்க வேண்டும். படிப்பதோடு நின்றுவிடாமல் அதன்படி நடக்கவும் வேண்டும். அறவழியில் நடப்பவர்களின் மனம் தூய்மையாக இருக்கும். தூயவர்களுக்கு அனைத்துமே சொந்தமானதாகும்.




* மனிதர்கள் அனைவருக்கும் கண்கள் இருக்கிறது. அதனைக் கொண்டு புறப்பொருளை பார்க்கிறார்கள். இதற்காக கண் உள்ளவர்கள் அனைவரும் பார்வையுடையவர்கள் என்று கருதக்கூடாது. கல்வியை சரியான முறையில் கற்று, அதற்கேற்ப தன் வாழ்க்கையை அமைத்துக்கொள்பவரே உண்மையில் கண் உள்ளவர் ஆவார். கல்லாதவர்களுக்கு இருக்கும் கண்கள், புண்களாகவே கருதப்படும். அந்த புண்களுக்கு வலியை மட்டும்தான் உணரமுடியுமே தவிர எதனையும் படித்தறியும் திறன் இருக்காது.


* நிலத்தில் எவ்வளவு ஆழம் தோண்டுகிறீர்களோ அந்த அளவிற்கு நீர் சுரக்கும். மக்களுக்கு கற்பிக்கப்படும் கல்வியும் இதைப்போலவே அறிவை பெருக்கித்தருமே தவிர, சற்றேனும் குறைவாக கொடுக்காது. எனவே, அனைவரும் கற்றுத்தேர வேண்டும்.


* கற்றவர்கள் நற்குணங்கள் உடையவர்களாக இருப்பார்கள். தம்மைவிட மூத்தோருக்கும், குருவிற்கும் பணிந்து நடப்பார்கள். தம்முடன் நீண்டநாள் பழகிய நல்ல நண்பர்கள் சந்தர்ப்ப சூழ்நிலையால் விலகி செல்லும்போது வருத்தம் கொள்வார்கள். இவர்களே, அனைவரிலும் உயர்ந்தவராக கருதப்படுவார்கள்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

ஆன்மீக சிந்தனைகள் - Page 2 Empty Re: ஆன்மீக சிந்தனைகள்

Post by Admin Fri Oct 31, 2008 2:54 am

கபீர்தாசர்

* நதியானது கடலில் சங்கமமாவது போல் என் மனம் இறைவனாகிய உன்னிடம் சங்கமமாகிறது.

* ஞானத்தின் யானை மேல் ஏறித் தியானம் என்ற ஆசனம் போட்டு அமர்ந்துகொள். நாய் போன்றது உலகம். நன்றாகக் குரைக்கட்டும். வேறு ஒன்றும் செய்ய முடியாது.

* இறைவா! உன்னிடம் நான் போகம், முக்தி ஒன்றையும் கேட்கமாட்டேன். எனக்கு பக்தியை தானமாக அருள்வாயாக. வேறு ஒருவரிடமும் இரத்தல் செய்ய மாட்டேன். உன்னைத்தான் இரப்பேன்.

* நீ ஜபமாலை உருட்டலாம், நெற்றியில் திருநீறு பூசலாம், நீண்ட ஜடை தரிக்கலாம். ஆனால், உள்ளத்தில் கொடிய விஷமிருந்தால் எப்படி கடவுளைக் காண முடியும்?

* பூஜை, சேவை, நியமம், விரதம் எல்லாம் வெறும் விளையாட்டுக்களே. ஆண்டவனை உள்ளத்தால் தொட வேண்டும். கடவுள் திருநாமத்தை நெஞ்சில் ஒரு வினாடி மனம் கசிந்து நினைத்தாலும் போதும்.

* மீனுக்கு நீரிலும், உலோபிக்குக் காசிலும், தாய்க்கு மகளிடமும், பக்தனுக்கு ஆண்டவனிடமும் பற்று அதிகம்.

* உடலளவில் தங்களை யோகியாக எல்லோரும் செய்து கொள்வார்கள். ஒருவரும் மனதை அவ்விதம் செய்து கொள்வதில்லை.

* கடவுள் ஒருவரே; எல்லா ஜீவராசிகளும் அவருடைய சொரூபமே. எங்கும் அவர் நிறைந்திருக்கிறார். அப்படி இருக்கும்போது ''அவர் என் கடவுள், இவர் அவன் கடவுள், உன் கடவுள் வேறு,'' என்ற பிரிவினை எல்லாம் ஏன்?

* காலம் தவறாது நீராடுவதும், காய்கறி வகைகளை உண்பதுமே முக்தியளிக்கும் என்று நினைத்தால் மீன்களுக்கும், விவசாயக் கருவிகளுக்குமே முதலில் முக்தி கிடைக்கும்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

ஆன்மீக சிந்தனைகள் - Page 2 Empty Re: ஆன்மீக சிந்தனைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum