புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm
» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm
» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
by heezulia Today at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm
» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm
» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ayyamperumal | ||||
manikavi | ||||
Anitha Anbarasan | ||||
Guna.D | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
ayyamperumal | ||||
manikavi | ||||
JGNANASEHAR |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அற்புதங்கள் நடத்தும் அரசு மருத்துவமனை
Page 1 of 1 •
அற்புதங்கள் நடத்தும் அரசு மருத்துவமனை
ஸ்டான்லி மருத்துவமனை
கல்லீரல் அறுவைச் சிகிச்சைப் பிரிவின்
அமைதியான மக்கள் சேவை.
“மூளைச்சாவு ஏற்பட்ட ஆந்திர வாலிபர் காடி தமோதியின் கல்லீரல் அகற்றப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை எடுத்து செல்லப்பட்டது. அங்கு உயிருக்கு போராடிய, சென்னை மாதவரத்தை சேர்ந்த விஜயராகவன் (50) என்ற கார்பென்டருக்கு பொருத்தப்பட்டது. ஸ்டான்லி மருத்துவமனை கல்லீரல், குடல் சார்ந்த அறுவை சிகிச்சை பிரிவு தலைவர் டாக்டர் சுரேந்திரன் தலைமையிலான டாக்டர்கள் குழுவினர் இந்த ஆபரேஷனை 10 மணி நேரம் மேற்கொண்டனர்.”
இது போன்ற செய்திகள் அவ்வப்போது தினசரிகளில் இடம்பெறுகிறன. ஸ்டான்லி மருத்துவ மனை அரசு மருத்துவ மனை. இங்கு இது போன்ற அறுவை சிகிச்சைகள் நடைபெறுகிறதா என்று பலர் புருவம் உயர்த்துவதைப் பார்க்க முடிகிறது. ஆம் ஸ்டான்லி மருத்துவமனையில் தான் இது போன்ற அறுவைச் சிகிச்சைகள் மட்டுமல்ல அரசு மருத்துவமனை வரலாற்றில் கண்டறியாத பல அற்புதங்களும் நடைபெறுகின்றன. அதுவும் எப்போதாவது அல்ல அவ்வப்போது நடைபெறுகிறன. கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைப் பிரிவு (GASTRO SURGICAL WARD) என்றால் ஸ்டான்லிதான் என்ற அளவுக்கு அதன் பணி சிறப்பாக இருக்கிறது. இது எப்படி ஒரு அரசு மருத்துவ மனையில் சாத்தியமானது? நிச்சயமாக இது அங்கு பணி புரிபவர்களால் மட்டுமே என்றால் மிகையாகாது.
பொதுவாக நடுத்தர வர்க்கத்தினரும் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்கின்ற மக்களுமே குடல் பாதிப்பு நோயால் அல்லல் படுகின்றனர். பசி பட்டினி இது ஒரு புறம் குடி மறுபுறம் என்று இரு முக்கியமான காரணிகள் செயல்படுகின்றன. இவ்விரு வகையிலும் குடல் நோய் பெரும்பாலும் ஏழை எளிய மக்களுக்கே வருகிறது என்பதில் ஐயமே இல்லை. ஈரல் அழற்சி (hepatitis) ஈரல் புற்றுநோய் (liver cancer) ஈரல் கரணைநோய் (liver cirrhosis) அல்லது ஈரல் முழுதும் பழுதடைதல் (acute liver failure) ஆகிய நோய்கள் குடல் சம்பந்தமானவை. இவை முற்றிய நிலைக்கு மாற்று அறுவை சிகிச்சை பலனளிக்கிறது (liver transplant). குடலை ஒருவர் உடலில் இருந்து மற்றவர் உடலுக்கு மாற்றினால் கொடுத்தவர் என்ன செய்வார். இதுவும் கிட்னி போல இரண்டு உள்ளதா என்று கேள்விகள் நம்மில் பலருக்கு எழுகிறது. இது வளரும் தன்மை உடையது. கல்லீரலைக் கொடையாகக் கொடுத்தவருக்கு இரண்டு அல்லது மூன்று வாரங்களில் மீண்டும் இயல்பான நிலைக்கு வளர்ச்சி அடைந்து விடுகிறது.
கண்மாற்று, சிறுநீரக மாற்று, இதயமாற்று, தோல்மாற்று, போல குடல் மாற்று அறுவை சிகிச்சையும் இக்காலத்தில் பெருகி வருகிறது. பசித்தோர்க்கு தம் உணவினைப் பகுத்துக் கொடுத்த மக்களினம் அவ்வுணவை செரிக்க வைக்கும் உடலுறுப்பான கல்லீரலையும் தானமாகக் கொடுக்கத் தொடங்கியுள்ளது. கொடுப்போர் கொடுத்தாலும் வாங்குவோர் வாங்க நினைத்தாலும் மனித உடல் என்ன ஆட்டோவா? ஸ்பேர் பார்ட்ஸை அங்கே வாங்கி இங்கே பொருத்தி வண்டியை ஓட விட. தானே வாங்கி பொருத்திக்கொள்ள இயலாது.
தேர்ந்த மருத்துவர்கள், சிறந்த மருத்துவ மனை, தரமான மருத்துவ உபகரணங்கள், அன்பான செவிலியர், அற்பணிப்பான பிற ஊழியர்கள், அறுவைக்கு முன்னும் பின்னும் நோயாளிக்குத் தேவையான சுகாதார வளையம் இவ்வனைத்தும் நிறைந்திருந்தால் மட்டுமே குடல் மாற்றும் பணியின் முழுமையான பயனை ஒரு நோயாளி அடைய முடியும்.
இத்தகு பலவகை வளையங்களை ஸ்டான்லி மருத்துவ மனையின் கல்லீரல் அறுவைச் சிகிச்சைப் பிரிவில் காணமுடிகிறது. மருத்துவர் முதல் கடைநிலை ஊழியர்களான ஹவுஸ் கீப்பிங் ஊழியர்கள் வரை தங்களுக்கே உரித்தான அற்பணிப்புடன் பணியாற்றுவதைப் பார்க்கும் போது இவர்கள் எல்லாரும் அரசு ஊழியர்கள்தானா என்று நம்மை வியக்க வைக்கிறது. இது ஒரு புறம் இருக்க...
அரசு மருத்துவமனை என்றால் பொந்தும் பிளவும் உடைந்தும் உடயாத கட்டிடங்கள், சாயம் போன சுவர்கள், வெற்றிலைப்பாக்குக் கறைகள், பொட்டலங்களாகச் சிதறிய இட்லி. தோசை, சட்னி, சாம்பார், தரையிலும் படுக்கையிலுமாக பிதுங்கி வழிந்து கொண்டிருக்கும் நோயாளிகள் என்று ஒரு மண்ணுலக நரகமே நம் கண் முன் வருவது. ஆனால் ஸ்டான்லி மருத்துவ மனையின் குடல் மாற்று அறுவை சிகிச்சைப் பிரிவு இந்தக் காட்சிக்கு நேர்மாறாக விண்ணுலக சொர்க்கமே தரையிறங்கி வந்தாற் போல காட்சி அளிக்கின்றது. தனியார் மருத்துவ மனையை மிஞ்சும் சுகாதாரம் இங்கு கடைபிடிக்கப்படுகிறது.
அதனால்தான் இந்தியாவிலேயே முதன் முதலில் ISO தரச்சான்றிதழ் பெற்ற சிகிச்சைப் பிரிவு என்ற பெருமையை ஸ்டான்லி மருத்துவமனை கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சைப் பிரிவான இது பெற்றுள்ளது.
இதை ஏன் கூறவேண்டும் என்றால் இம்மருத்துவ மனையின் இப்பிரிவுக்கு மட்டும் அதாவது கல்லீரல் நோய் சிகிச்சைப் பிரிவுக்கு மட்டும், சிகிச்சை பெற நாளொன்றுக்கு புற நோயாளிகளாக குறைந்தது 450 (நானூற்று ஐம்பது) பேர் வந்து சிகிச்சை பெற்று திரும்புகின்றனர். இதில் 6%(ஆறு சதவீதம்) பேர் D C L D (decomposed liver disease) என்றழைக்கப்படும் கல்லீரல் முற்றிலும் அழுகிய அல்லது சிதைந்த நிலையில் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தகு நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பது சுலபமல்ல என்பது அனைவரும் அறிந்ததே. ஏனெனில் ஒரு நோயாளி அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்புவதற்குள் அவருக்கு இரத்தப் பரிசோதனை மட்டுமே 1800 (ஆயிரத்து எண்ணூறு) முறை செய்ய வேண்டியுள்ளது.
இந்த அறுவை சிகிச்சை ஏன் இவ்வளவு முக்கியமாகப் பேச வேண்டியுள்ளது. ஆம் பிற அறுவைச் சிகிச்சைகளைச் சற்றேறக்குறைய குறித்த காலத்தில் முடித்து விடலாம். ஆனால் குடல் மாற்று எவ்வளவு நேரம் எடுக்கும் என்பது மருத்துவர்களுக்கே தெரியாது. மேலே குறிப்பிட்டது போல குறைந்தது பத்து மணி நேரம் முதல் இருபத்து நான்கு மணி நேரம் கூட ஆகலாம். பலமணிநேரம் மருத்துவர்கள் குழு பணியாற்ற வேண்டியுள்ளது.
மருத்துவர்கள் உள்ள நேரம் மட்டுமன்றி செவிலியர்கள் இரவு பகல் பாராது உடன் இருந்து கண்காணிக்க வேண்டியுள்ளது. ஏனெனில் அங்கு வரும் நோயாளிகள் டிரிப்ஸ் தீர்ந்து இரத்தம் பாட்டிலுக்குச் செல்வதைக் கூட சொல்லத் தெரியாதவர்களாக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு பணி புரியும் செவிலியர்களில் 40% சதவீதமே அரசால் பணியில் அமர்த்தப்பட்ட செவிலியர்கள். ஏனைய 60% வெளியில் இருந்து ஊதியத்திற்குப் பணி புரிபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அன்பும் அரவணைப்புமான இவர்களின் பணியே நோயாளிக்கு அறுவைக்கு முன்னும் பின்னும் அதிக அளவில் தேவையாகிறது.
அறுவைச் சிகிச்சைக் உபகரணங்கள் முழுமையான தர உத்தரவாதத்துடன் இருப்பது மற்றொரு சிறப்பு.
கண்களுக்கும் தெரியாத பாக்டீரியாக்களில் இருந்து இந்நோயாளிகளைக் காத்தல் என்பது மிகவும் கடினம். மருத்துவ மனையின் சுகாதாரம் எனும் போது அதன் பெரும் பானமையான பொறுப்பும் கடை நிலை ஊழியர்களைச் சார்ந்து விடுகிறது. இங்கு இவர்களின் பணி தனியார் மருத்துவ மனைகளிலும் காணக் கிடைக்காத அளவில் மாசு இல்லாது எங்கும் பளீர்தான். இவர்கள் அனைவரும் அரசு ஊழியர்களே. இருந்தாலும் அற்பணிப்பு ஊழியர்களாக இருக்கின்றனர் என்பது இத்துறையின் சிறப்பு என்று கூறலாம். இப்படி இன்னும் கூறிக்கொண்டே போகலாம்... ஆக மருத்துவர்கள், அரசு, அரசு சாராத மருத்துவமனை ஊழியர்களால் ஸ்டான்லி மருத்துவ மனையின் இப்பிரிவு சாதனை படைத்து வருகிறது என்று ஆணித்தரமாகக் கூறலாம்.
இவர்கள் இம்மாபெரும் சாதனையை எப்படி ஆற்றி வருகின்றனர்? சாதாரனமாக இந்த அறுவை சிகிச்சைக்கு பிற மருத்துவ மனைகளில் 50,000 செலவாகக் கூடிய மாற்று அறுவை சிகிச்சையை இவர்கள் செலவே இன்றி ஏழை எளிய மக்களுக்குக் கொடுக்கின்றனர். சிகிச்சைக்கு வேண்டிய வசதிகளை எவ்வாறு எதிர் கொள்கின்றனர் என்பது ஒரு பெரிய அதிசயமாக உள்ளது.
இப்பிரிவு 1999 ல் தொடங்கியது. 2009 ல் முதல் முதலில் ஃபாத்திமா என்ற பெண்மணிக்கு மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டு வெற்றிகரமாக முடித்தது. சிகிச்சைக்குத் தேவையான ஆயத்தங்களை மேற்கொள்ள இவ்வளவு காலம் தேவைப்பட்டுள்ளது. இது வரை 29 மாற்று அறுவைச் சிகிச்சைகளை மேற்கொண்டு அதில் 75% வெற்றிகரமாக முடிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இப்பிரிவில் பொது இலவசப் படுக்கைகள் 80 உள்ளன. 20 படுக்கைகள் பகிர்வு அடிப்படையில் உள்ளன. இதற்கு ரூபாய் 5000/- மருத்துவ மனைக்குக் கொடுத்தால் போதுமானது. இது படுக்கைக்கு மட்டும் அல்ல. ரூபாய் 50,000 செலவு ஆகும் மருத்துவம் முழுமைக்கும். சற்று வசதியான நோயாளிகளுக்கென பதினைந்து தனிப் படுக்கை அறைகள் உள்ளன. இவர்கள் ரூபாய் 5000/- த்துடன் முடிந்த சிறு தொகையைக் கூடுதலாகக் கட்டி இவ்வசதியை அனுபவிக்கலாம். இவர்களிடம் வாங்கும் இத்தொகையைக் கொண்டு அடிப்படை வசதியே இல்லாத ஏழைகளுக்கு இலவசமாக உயர்தர சிகிச்சை அளிக்கின்றனர். இத்தொகையும் இவர்கள் மருத்துவ மனையிலோ அல்லது மருத்துவர்களிடமோ செலுத்துவது இல்லை. மக்கள் மனதில் ஐயம் எழாமல் இருக்கும் வகையில் வங்கியில் செலுத்தி பற்றுச்சீட்டுப் பெற்றுக் கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பெற்றுள்ளது.
இந்த பகிர்வு அடிப்படை 20 படுக்கைகள் மூலமாக இப்பிரிவுக்குக் கிடைக்கும் இலாபம் ரூபாய். 1,28,000/- இதனைப் பரிவுடன் ஏழைகளுக்குப் பயன் படுத்துகிறது இப்பிரிவு. இந்த அறுவைச் சிகிச்சைக்கான தொகை (சர்ஜரி பேக்கேஜ்) என்பது பிற மருத்து மனைகளில் ரூ. 6,000/- இங்கு ஏழைகளிடம் இவர்கள் வசூலிப்பது ரூ. 350/-. இத்தொகைக்குள் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை முடித்துக்கொண்டு வீடு திரும்பலாம்.
இத்தகு சாதனையின் அடித்தளத்தில் அனைத்திற்கும் காரணமாக அமைதியாகப் பணியாற்றி வருபவர் இத்துறையின் தலைவர் டாக்டர் சுரேந்திரன். பல அரிய திட்டங்களைக் கண்ணும் கருத்துமாக வகுத்தது மட்டுமல்லாமல் எப்போதும் இன்னும் என்ன என்ன முன்னேற்றம் எவ்வகையில் செய்யலாம் என்று மருத்துவர்களிடமும் சமுதாயத்தில் உயர்மட்ட மக்களிடமும் ஆலோசனை நடத்துவது, அவர்களின் கொடையையும் பெற்று மருத்துவ மனைச் செல்வினங்களுக்குப் பயன் படுத்துவது ஆகியவையே இப்பிரிவின் தலைவர் டாக்டர். ஆர், சுரேந்திரன் அவர்களின் அன்றாட பணியாக உள்ளது. தற்போது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளே மாற்று அறுவைக்கு கல்லீரல் கிடைக்காத நிலையில் ஸ்டெம் செல்களின் மூலம் கல்லிரல் உற்பத்தி செய்யும் ஆராய்ச்சியும் டாக்டர் ஆர். சுரேந்திரன் அவர்களால் மேற்கொள்ளப்பெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
2005ல் முதல்வர் செல்வி. ஜெ. ஜெயலலிதா ஆட்சியின் போது இத்துறை மேம்பாட்டுக்காக ரூபாய் 5 கோடி ஒதுக்கி இத்துறையை மேலும் வளர்ச்சி அடைய வழி வகுத்தார். இன்னும் அரசின் உதவி கிடைக்கப்பெற்றால் இத்துறை உலக அளவில் முதன்மையானதாக விளங்கும் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை எனலாம்.
நன்றி குமுதம் ஹெல்த் ஸ்பெஷல்.
ஸ்டான்லி மருத்துவமனை
கல்லீரல் அறுவைச் சிகிச்சைப் பிரிவின்
அமைதியான மக்கள் சேவை.
“மூளைச்சாவு ஏற்பட்ட ஆந்திர வாலிபர் காடி தமோதியின் கல்லீரல் அகற்றப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை எடுத்து செல்லப்பட்டது. அங்கு உயிருக்கு போராடிய, சென்னை மாதவரத்தை சேர்ந்த விஜயராகவன் (50) என்ற கார்பென்டருக்கு பொருத்தப்பட்டது. ஸ்டான்லி மருத்துவமனை கல்லீரல், குடல் சார்ந்த அறுவை சிகிச்சை பிரிவு தலைவர் டாக்டர் சுரேந்திரன் தலைமையிலான டாக்டர்கள் குழுவினர் இந்த ஆபரேஷனை 10 மணி நேரம் மேற்கொண்டனர்.”
இது போன்ற செய்திகள் அவ்வப்போது தினசரிகளில் இடம்பெறுகிறன. ஸ்டான்லி மருத்துவ மனை அரசு மருத்துவ மனை. இங்கு இது போன்ற அறுவை சிகிச்சைகள் நடைபெறுகிறதா என்று பலர் புருவம் உயர்த்துவதைப் பார்க்க முடிகிறது. ஆம் ஸ்டான்லி மருத்துவமனையில் தான் இது போன்ற அறுவைச் சிகிச்சைகள் மட்டுமல்ல அரசு மருத்துவமனை வரலாற்றில் கண்டறியாத பல அற்புதங்களும் நடைபெறுகின்றன. அதுவும் எப்போதாவது அல்ல அவ்வப்போது நடைபெறுகிறன. கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைப் பிரிவு (GASTRO SURGICAL WARD) என்றால் ஸ்டான்லிதான் என்ற அளவுக்கு அதன் பணி சிறப்பாக இருக்கிறது. இது எப்படி ஒரு அரசு மருத்துவ மனையில் சாத்தியமானது? நிச்சயமாக இது அங்கு பணி புரிபவர்களால் மட்டுமே என்றால் மிகையாகாது.
பொதுவாக நடுத்தர வர்க்கத்தினரும் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்கின்ற மக்களுமே குடல் பாதிப்பு நோயால் அல்லல் படுகின்றனர். பசி பட்டினி இது ஒரு புறம் குடி மறுபுறம் என்று இரு முக்கியமான காரணிகள் செயல்படுகின்றன. இவ்விரு வகையிலும் குடல் நோய் பெரும்பாலும் ஏழை எளிய மக்களுக்கே வருகிறது என்பதில் ஐயமே இல்லை. ஈரல் அழற்சி (hepatitis) ஈரல் புற்றுநோய் (liver cancer) ஈரல் கரணைநோய் (liver cirrhosis) அல்லது ஈரல் முழுதும் பழுதடைதல் (acute liver failure) ஆகிய நோய்கள் குடல் சம்பந்தமானவை. இவை முற்றிய நிலைக்கு மாற்று அறுவை சிகிச்சை பலனளிக்கிறது (liver transplant). குடலை ஒருவர் உடலில் இருந்து மற்றவர் உடலுக்கு மாற்றினால் கொடுத்தவர் என்ன செய்வார். இதுவும் கிட்னி போல இரண்டு உள்ளதா என்று கேள்விகள் நம்மில் பலருக்கு எழுகிறது. இது வளரும் தன்மை உடையது. கல்லீரலைக் கொடையாகக் கொடுத்தவருக்கு இரண்டு அல்லது மூன்று வாரங்களில் மீண்டும் இயல்பான நிலைக்கு வளர்ச்சி அடைந்து விடுகிறது.
கண்மாற்று, சிறுநீரக மாற்று, இதயமாற்று, தோல்மாற்று, போல குடல் மாற்று அறுவை சிகிச்சையும் இக்காலத்தில் பெருகி வருகிறது. பசித்தோர்க்கு தம் உணவினைப் பகுத்துக் கொடுத்த மக்களினம் அவ்வுணவை செரிக்க வைக்கும் உடலுறுப்பான கல்லீரலையும் தானமாகக் கொடுக்கத் தொடங்கியுள்ளது. கொடுப்போர் கொடுத்தாலும் வாங்குவோர் வாங்க நினைத்தாலும் மனித உடல் என்ன ஆட்டோவா? ஸ்பேர் பார்ட்ஸை அங்கே வாங்கி இங்கே பொருத்தி வண்டியை ஓட விட. தானே வாங்கி பொருத்திக்கொள்ள இயலாது.
தேர்ந்த மருத்துவர்கள், சிறந்த மருத்துவ மனை, தரமான மருத்துவ உபகரணங்கள், அன்பான செவிலியர், அற்பணிப்பான பிற ஊழியர்கள், அறுவைக்கு முன்னும் பின்னும் நோயாளிக்குத் தேவையான சுகாதார வளையம் இவ்வனைத்தும் நிறைந்திருந்தால் மட்டுமே குடல் மாற்றும் பணியின் முழுமையான பயனை ஒரு நோயாளி அடைய முடியும்.
இத்தகு பலவகை வளையங்களை ஸ்டான்லி மருத்துவ மனையின் கல்லீரல் அறுவைச் சிகிச்சைப் பிரிவில் காணமுடிகிறது. மருத்துவர் முதல் கடைநிலை ஊழியர்களான ஹவுஸ் கீப்பிங் ஊழியர்கள் வரை தங்களுக்கே உரித்தான அற்பணிப்புடன் பணியாற்றுவதைப் பார்க்கும் போது இவர்கள் எல்லாரும் அரசு ஊழியர்கள்தானா என்று நம்மை வியக்க வைக்கிறது. இது ஒரு புறம் இருக்க...
அரசு மருத்துவமனை என்றால் பொந்தும் பிளவும் உடைந்தும் உடயாத கட்டிடங்கள், சாயம் போன சுவர்கள், வெற்றிலைப்பாக்குக் கறைகள், பொட்டலங்களாகச் சிதறிய இட்லி. தோசை, சட்னி, சாம்பார், தரையிலும் படுக்கையிலுமாக பிதுங்கி வழிந்து கொண்டிருக்கும் நோயாளிகள் என்று ஒரு மண்ணுலக நரகமே நம் கண் முன் வருவது. ஆனால் ஸ்டான்லி மருத்துவ மனையின் குடல் மாற்று அறுவை சிகிச்சைப் பிரிவு இந்தக் காட்சிக்கு நேர்மாறாக விண்ணுலக சொர்க்கமே தரையிறங்கி வந்தாற் போல காட்சி அளிக்கின்றது. தனியார் மருத்துவ மனையை மிஞ்சும் சுகாதாரம் இங்கு கடைபிடிக்கப்படுகிறது.
அதனால்தான் இந்தியாவிலேயே முதன் முதலில் ISO தரச்சான்றிதழ் பெற்ற சிகிச்சைப் பிரிவு என்ற பெருமையை ஸ்டான்லி மருத்துவமனை கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சைப் பிரிவான இது பெற்றுள்ளது.
இதை ஏன் கூறவேண்டும் என்றால் இம்மருத்துவ மனையின் இப்பிரிவுக்கு மட்டும் அதாவது கல்லீரல் நோய் சிகிச்சைப் பிரிவுக்கு மட்டும், சிகிச்சை பெற நாளொன்றுக்கு புற நோயாளிகளாக குறைந்தது 450 (நானூற்று ஐம்பது) பேர் வந்து சிகிச்சை பெற்று திரும்புகின்றனர். இதில் 6%(ஆறு சதவீதம்) பேர் D C L D (decomposed liver disease) என்றழைக்கப்படும் கல்லீரல் முற்றிலும் அழுகிய அல்லது சிதைந்த நிலையில் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தகு நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பது சுலபமல்ல என்பது அனைவரும் அறிந்ததே. ஏனெனில் ஒரு நோயாளி அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்புவதற்குள் அவருக்கு இரத்தப் பரிசோதனை மட்டுமே 1800 (ஆயிரத்து எண்ணூறு) முறை செய்ய வேண்டியுள்ளது.
இந்த அறுவை சிகிச்சை ஏன் இவ்வளவு முக்கியமாகப் பேச வேண்டியுள்ளது. ஆம் பிற அறுவைச் சிகிச்சைகளைச் சற்றேறக்குறைய குறித்த காலத்தில் முடித்து விடலாம். ஆனால் குடல் மாற்று எவ்வளவு நேரம் எடுக்கும் என்பது மருத்துவர்களுக்கே தெரியாது. மேலே குறிப்பிட்டது போல குறைந்தது பத்து மணி நேரம் முதல் இருபத்து நான்கு மணி நேரம் கூட ஆகலாம். பலமணிநேரம் மருத்துவர்கள் குழு பணியாற்ற வேண்டியுள்ளது.
மருத்துவர்கள் உள்ள நேரம் மட்டுமன்றி செவிலியர்கள் இரவு பகல் பாராது உடன் இருந்து கண்காணிக்க வேண்டியுள்ளது. ஏனெனில் அங்கு வரும் நோயாளிகள் டிரிப்ஸ் தீர்ந்து இரத்தம் பாட்டிலுக்குச் செல்வதைக் கூட சொல்லத் தெரியாதவர்களாக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு பணி புரியும் செவிலியர்களில் 40% சதவீதமே அரசால் பணியில் அமர்த்தப்பட்ட செவிலியர்கள். ஏனைய 60% வெளியில் இருந்து ஊதியத்திற்குப் பணி புரிபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அன்பும் அரவணைப்புமான இவர்களின் பணியே நோயாளிக்கு அறுவைக்கு முன்னும் பின்னும் அதிக அளவில் தேவையாகிறது.
அறுவைச் சிகிச்சைக் உபகரணங்கள் முழுமையான தர உத்தரவாதத்துடன் இருப்பது மற்றொரு சிறப்பு.
கண்களுக்கும் தெரியாத பாக்டீரியாக்களில் இருந்து இந்நோயாளிகளைக் காத்தல் என்பது மிகவும் கடினம். மருத்துவ மனையின் சுகாதாரம் எனும் போது அதன் பெரும் பானமையான பொறுப்பும் கடை நிலை ஊழியர்களைச் சார்ந்து விடுகிறது. இங்கு இவர்களின் பணி தனியார் மருத்துவ மனைகளிலும் காணக் கிடைக்காத அளவில் மாசு இல்லாது எங்கும் பளீர்தான். இவர்கள் அனைவரும் அரசு ஊழியர்களே. இருந்தாலும் அற்பணிப்பு ஊழியர்களாக இருக்கின்றனர் என்பது இத்துறையின் சிறப்பு என்று கூறலாம். இப்படி இன்னும் கூறிக்கொண்டே போகலாம்... ஆக மருத்துவர்கள், அரசு, அரசு சாராத மருத்துவமனை ஊழியர்களால் ஸ்டான்லி மருத்துவ மனையின் இப்பிரிவு சாதனை படைத்து வருகிறது என்று ஆணித்தரமாகக் கூறலாம்.
இவர்கள் இம்மாபெரும் சாதனையை எப்படி ஆற்றி வருகின்றனர்? சாதாரனமாக இந்த அறுவை சிகிச்சைக்கு பிற மருத்துவ மனைகளில் 50,000 செலவாகக் கூடிய மாற்று அறுவை சிகிச்சையை இவர்கள் செலவே இன்றி ஏழை எளிய மக்களுக்குக் கொடுக்கின்றனர். சிகிச்சைக்கு வேண்டிய வசதிகளை எவ்வாறு எதிர் கொள்கின்றனர் என்பது ஒரு பெரிய அதிசயமாக உள்ளது.
இப்பிரிவு 1999 ல் தொடங்கியது. 2009 ல் முதல் முதலில் ஃபாத்திமா என்ற பெண்மணிக்கு மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டு வெற்றிகரமாக முடித்தது. சிகிச்சைக்குத் தேவையான ஆயத்தங்களை மேற்கொள்ள இவ்வளவு காலம் தேவைப்பட்டுள்ளது. இது வரை 29 மாற்று அறுவைச் சிகிச்சைகளை மேற்கொண்டு அதில் 75% வெற்றிகரமாக முடிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இப்பிரிவில் பொது இலவசப் படுக்கைகள் 80 உள்ளன. 20 படுக்கைகள் பகிர்வு அடிப்படையில் உள்ளன. இதற்கு ரூபாய் 5000/- மருத்துவ மனைக்குக் கொடுத்தால் போதுமானது. இது படுக்கைக்கு மட்டும் அல்ல. ரூபாய் 50,000 செலவு ஆகும் மருத்துவம் முழுமைக்கும். சற்று வசதியான நோயாளிகளுக்கென பதினைந்து தனிப் படுக்கை அறைகள் உள்ளன. இவர்கள் ரூபாய் 5000/- த்துடன் முடிந்த சிறு தொகையைக் கூடுதலாகக் கட்டி இவ்வசதியை அனுபவிக்கலாம். இவர்களிடம் வாங்கும் இத்தொகையைக் கொண்டு அடிப்படை வசதியே இல்லாத ஏழைகளுக்கு இலவசமாக உயர்தர சிகிச்சை அளிக்கின்றனர். இத்தொகையும் இவர்கள் மருத்துவ மனையிலோ அல்லது மருத்துவர்களிடமோ செலுத்துவது இல்லை. மக்கள் மனதில் ஐயம் எழாமல் இருக்கும் வகையில் வங்கியில் செலுத்தி பற்றுச்சீட்டுப் பெற்றுக் கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பெற்றுள்ளது.
இந்த பகிர்வு அடிப்படை 20 படுக்கைகள் மூலமாக இப்பிரிவுக்குக் கிடைக்கும் இலாபம் ரூபாய். 1,28,000/- இதனைப் பரிவுடன் ஏழைகளுக்குப் பயன் படுத்துகிறது இப்பிரிவு. இந்த அறுவைச் சிகிச்சைக்கான தொகை (சர்ஜரி பேக்கேஜ்) என்பது பிற மருத்து மனைகளில் ரூ. 6,000/- இங்கு ஏழைகளிடம் இவர்கள் வசூலிப்பது ரூ. 350/-. இத்தொகைக்குள் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை முடித்துக்கொண்டு வீடு திரும்பலாம்.
இத்தகு சாதனையின் அடித்தளத்தில் அனைத்திற்கும் காரணமாக அமைதியாகப் பணியாற்றி வருபவர் இத்துறையின் தலைவர் டாக்டர் சுரேந்திரன். பல அரிய திட்டங்களைக் கண்ணும் கருத்துமாக வகுத்தது மட்டுமல்லாமல் எப்போதும் இன்னும் என்ன என்ன முன்னேற்றம் எவ்வகையில் செய்யலாம் என்று மருத்துவர்களிடமும் சமுதாயத்தில் உயர்மட்ட மக்களிடமும் ஆலோசனை நடத்துவது, அவர்களின் கொடையையும் பெற்று மருத்துவ மனைச் செல்வினங்களுக்குப் பயன் படுத்துவது ஆகியவையே இப்பிரிவின் தலைவர் டாக்டர். ஆர், சுரேந்திரன் அவர்களின் அன்றாட பணியாக உள்ளது. தற்போது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளே மாற்று அறுவைக்கு கல்லீரல் கிடைக்காத நிலையில் ஸ்டெம் செல்களின் மூலம் கல்லிரல் உற்பத்தி செய்யும் ஆராய்ச்சியும் டாக்டர் ஆர். சுரேந்திரன் அவர்களால் மேற்கொள்ளப்பெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
2005ல் முதல்வர் செல்வி. ஜெ. ஜெயலலிதா ஆட்சியின் போது இத்துறை மேம்பாட்டுக்காக ரூபாய் 5 கோடி ஒதுக்கி இத்துறையை மேலும் வளர்ச்சி அடைய வழி வகுத்தார். இன்னும் அரசின் உதவி கிடைக்கப்பெற்றால் இத்துறை உலக அளவில் முதன்மையானதாக விளங்கும் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை எனலாம்.
நன்றி குமுதம் ஹெல்த் ஸ்பெஷல்.
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
ஒரு அரசு மருத்துவமனை இவ்வளவு சிறப்பாக தனியாரை மிஞ்சும் அளவு செயல்படுகிறது என்பதைப் படிக்கும் போது உண்மையில் சந்தோசமாகத் தான் இருக்கிறது.
இதற்கு காரணமாக உள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துகள், இது மேலு தொடர அரசாங்கம் தொடர்ந்து அவர்களுக்குத் தேவையான உதவிகள் புரிந்தால் இந்தியாவில் மட்டும் இல்லை உலக அளவில் பெயர் வாங்கலாம்
பகிர்விற்கு ரொம்ப நன்றி
இதற்கு காரணமாக உள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துகள், இது மேலு தொடர அரசாங்கம் தொடர்ந்து அவர்களுக்குத் தேவையான உதவிகள் புரிந்தால் இந்தியாவில் மட்டும் இல்லை உலக அளவில் பெயர் வாங்கலாம்
பகிர்விற்கு ரொம்ப நன்றி
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha wrote:ஒரு அரசு மருத்துவமனை இவ்வளவு சிறப்பாக தனியாரை மிஞ்சும் அளவு செயல்படுகிறது என்பதைப் படிக்கும் போது உண்மையில் சந்தோசமாகத் தான் இருக்கிறது.
இதற்கு காரணமாக உள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துகள், இது மேலு தொடர அரசாங்கம் தொடர்ந்து அவர்களுக்குத் தேவையான உதவிகள் புரிந்தால் இந்தியாவில் மட்டும் இல்லை உலக அளவில் பெயர் வாங்கலாம்
பகிர்விற்கு ரொம்ப நன்றி
படித்து, வியந்து, மகிழ்ந்து, பாராட்டியமைக்கு மிக மிக நன்றி கிச்சா.
kitcha wrote:ஒரு அரசு மருத்துவமனை இவ்வளவு சிறப்பாக தனியாரை மிஞ்சும் அளவு செயல்படுகிறது என்பதைப் படிக்கும் போது உண்மையில் சந்தோசமாகத் தான் இருக்கிறது.
இதற்கு காரணமாக உள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துகள், இது மேலு தொடர அரசாங்கம் தொடர்ந்து அவர்களுக்குத் தேவையான உதவிகள் புரிந்தால் இந்தியாவில் மட்டும் இல்லை உலக அளவில் பெயர் வாங்கலாம்
பகிர்விற்கு ரொம்ப நன்றி
அன்புள்ள கிச்சா,
உங்களது இந்த பின்னூட்டம் அப்படியே குமுதம் ஹெல்த் இதழில் வாசகர் கடிதம் பகுதியில் வெளியாகியுள்ளது. நன்றி கிச்சா.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010
சேவை மனப்பான்மை, ஒன்றே குறிக்கோளாய் கொண்டால், யாவரும் போற்றும் நாள் அதிக தூரத்தில் இல்லை . Nursing என்றால் மனதில் தோன்றும் உருவம் FLORENCE NIGHTINGALE -Lady with a candle என்று அழைக்கப்பட்டு சரித்திரம் படைத்தவர். செய்திக்கு நன்றி, ஆதிரா.
ரமணியன்.
ரமணியன்.
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
அரசு வேலை, அரசு கல்லூரிகள வரிசையில் இப்போது அரசு மருத்துவமணையும் இடம் பிடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|