Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
*உடலுறவுக்காக ‘உயிரையும் கொடுக்கும்’ ஆண்கள், உளவியல் ஆய்வு!*[18+]
2 posters
Page 1 of 1
*உடலுறவுக்காக ‘உயிரையும் கொடுக்கும்’ ஆண்கள், உளவியல் ஆய்வு!*[18+]
*உடலுறவுக்காக ‘உயிரையும் கொடுக்கும்’ ஆண்கள், உளவியல் ஆய்வு!*
உடலுறவுக்காக உயிரை துச்சமாக மதிக்கும் ஆண்கள்!
இனப்பெருக்க ரீதியில பார்த்தோம்னா, எதிர்பாலினத்தை கவர்வதற்க்காக செய்யும் சில வீரமான/ஆபத்து நிறைந்த செயல்களில் பெண்களை விட ஆண்கள்தான் அதிகம் ஈடுபடுகிறார்கள். பலனாக அவர்களுக்கு லாபமே அதிகம் நஷ்டமில்லை என்கிறது இதுவரையிலான ஆய்வுகள்! ஏன்னா, எடுத்துக்கிட்ட அந்த செயலில் வெற்றிடைந்து, விரும்பிய பெண்ணை அடைவதன்மூலம், குறைந்தபட்சம் அவன் சந்ததி தொடரும்/வளரும் வாய்ப்பையாவது உருவாக்கிவிடுகிறான் ஆண். அதன்பின் அவன் இறந்தாலும் அது ஒரு பொருட்டல்ல இனப்பெருக்கத்தைப் பொறுத்தவரை, காரணம் அவன் சந்ததி உருவாகிவிட்டது!
“பரிணாமத்தில் ஒரு விளையாட்டு உண்டு. அது உன் மரபனுக்களை அடுத்த சந்ததிக்கு லாவகமாகக் கடத்திச் செல்வதே” என்கிறார் இந்த ஆய்வை மேற்கொண்ட அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழக உளவியல் ஆய்வாளர் டேனியல் க்ரூகர் (Daniel Kruger of the University of Michigan)
ஒரு தந்தை இல்லாத குழந்தையின் கல்வியும், சமுதாயத்தில் வெற்றியும் கேள்விக்குறியாகலாம். ஆனால், ஒரு தாயில்லாக் குழந்தையின் நிலை பரிதாபத்துக்குரியது. அது தாயால் பிறந்த சில வருடங்கள் கழித்து தனித்து விடப்பட்டுவிட்ட குழந்தையானாலும்! இதற்க்கு, வளரும் நாடுகளின் ஆதரவற்றோர்/ஆனாதைக் குழந்தைக் காப்பகங்களின் எண்ணிக்கையே சரியான சான்று! ஆக, பெண்கள் ஆண்களைப்போல, காதலுக்காக உடல் ரீதியிலான, ஆபத்தான வீர தீரச் செயலகளிலெல்லாம் ஈடுபடுவதை தவிர்த்துவிடுகிறார்கள் பரிணாம வளர்ச்சியின்படி என்று யூகிக்கிறார் இங்கிலாந்தின் டர்ஹாம் பல்கலைக்கழக ஆய்வாளர் ஆன்னீ கேம்பெல் ( Anne Campbell of Durham University in England)
ஆனால், இதற்க்கு நேர் எதிராக இருக்கும் ஆண்கள், தனக்குப் பிடித்தப் பெண்ணை/அழகான பெண்களை எப்படியாவது கவர்ந்து/ஈர்த்துவிட வேண்டி எதாவது ஒரு ஆபத்தான செயலில் மும்முரமாக ஈடுபடுகிறார்கள்!
குழந்தைப் பெறுதல் மற்றும் குழந்தை வளர்ப்பு என்னும் இரு உடல்வருத்தும்/உடலுழைப்பு சார்ந்த பொறுப்பை ஏற்கவேண்டிய பெண்கள், பொறுப்பான அல்லது திறமைமிக்க ஆண்களையே தேர்ந்தெடுப்பார்கள் என்பது ஆண்களுக்கு நன்றாகத் தெரியும் (அடிமனதிலாவது இருக்கும்!). இங்கே திறமை/பொறுப்பு என்பது சமுதாயத்தில் அந்தஸ்து மற்றும் பொருட்செல்வம் என்னும் இரு அளவுகோள்களால் கணிக்கப்படுகிறது என்பதை கவனத்தில் கொள்க என்கிறார் க்ரூகர்!
பரிணாமப்படி பார்த்தால், தன் புகழை/திறமையை நிலைநாட்டவும், பின்பு அதை விளம்பரம்படுத்தவும் , பெரும்பாலும் வன்முறை, வீர தீரச் செயல்கள் மற்றும் பல்வேறு வகையான ஆபத்து நிறைந்த செயல்களையே தொன்றுதொட்ட காலத்திலிருந்து ஆயுதமாக பயன்படுத்தியிருக்கிறார்கள் ஆண்கள் என்பது புலப்படும்! இம்மாதிரியான யுக்திகள், இன்றுவரையிலும் தொடர்கின்றன என்பதற்க்கு தன் க்ரெடிட் கார்டுகள் மற்றும் வங்கிக்கணக்கில் கொட்டிக்கிடக்கும் பனமதிப்பையும் காட்டி பெண்களை கவரும்/கவர முயற்ச்சிக்கும் சில/பல இன்றைய ஆண்களே சரியான சான்று!
தொடர்புடைய ஒரு காணொளி
தொடரும் ...
உடலுறவுக்காக உயிரை துச்சமாக மதிக்கும் ஆண்கள்!
இனப்பெருக்க ரீதியில பார்த்தோம்னா, எதிர்பாலினத்தை கவர்வதற்க்காக செய்யும் சில வீரமான/ஆபத்து நிறைந்த செயல்களில் பெண்களை விட ஆண்கள்தான் அதிகம் ஈடுபடுகிறார்கள். பலனாக அவர்களுக்கு லாபமே அதிகம் நஷ்டமில்லை என்கிறது இதுவரையிலான ஆய்வுகள்! ஏன்னா, எடுத்துக்கிட்ட அந்த செயலில் வெற்றிடைந்து, விரும்பிய பெண்ணை அடைவதன்மூலம், குறைந்தபட்சம் அவன் சந்ததி தொடரும்/வளரும் வாய்ப்பையாவது உருவாக்கிவிடுகிறான் ஆண். அதன்பின் அவன் இறந்தாலும் அது ஒரு பொருட்டல்ல இனப்பெருக்கத்தைப் பொறுத்தவரை, காரணம் அவன் சந்ததி உருவாகிவிட்டது!
“பரிணாமத்தில் ஒரு விளையாட்டு உண்டு. அது உன் மரபனுக்களை அடுத்த சந்ததிக்கு லாவகமாகக் கடத்திச் செல்வதே” என்கிறார் இந்த ஆய்வை மேற்கொண்ட அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழக உளவியல் ஆய்வாளர் டேனியல் க்ரூகர் (Daniel Kruger of the University of Michigan)
ஒரு தந்தை இல்லாத குழந்தையின் கல்வியும், சமுதாயத்தில் வெற்றியும் கேள்விக்குறியாகலாம். ஆனால், ஒரு தாயில்லாக் குழந்தையின் நிலை பரிதாபத்துக்குரியது. அது தாயால் பிறந்த சில வருடங்கள் கழித்து தனித்து விடப்பட்டுவிட்ட குழந்தையானாலும்! இதற்க்கு, வளரும் நாடுகளின் ஆதரவற்றோர்/ஆனாதைக் குழந்தைக் காப்பகங்களின் எண்ணிக்கையே சரியான சான்று! ஆக, பெண்கள் ஆண்களைப்போல, காதலுக்காக உடல் ரீதியிலான, ஆபத்தான வீர தீரச் செயலகளிலெல்லாம் ஈடுபடுவதை தவிர்த்துவிடுகிறார்கள் பரிணாம வளர்ச்சியின்படி என்று யூகிக்கிறார் இங்கிலாந்தின் டர்ஹாம் பல்கலைக்கழக ஆய்வாளர் ஆன்னீ கேம்பெல் ( Anne Campbell of Durham University in England)
ஆனால், இதற்க்கு நேர் எதிராக இருக்கும் ஆண்கள், தனக்குப் பிடித்தப் பெண்ணை/அழகான பெண்களை எப்படியாவது கவர்ந்து/ஈர்த்துவிட வேண்டி எதாவது ஒரு ஆபத்தான செயலில் மும்முரமாக ஈடுபடுகிறார்கள்!
குழந்தைப் பெறுதல் மற்றும் குழந்தை வளர்ப்பு என்னும் இரு உடல்வருத்தும்/உடலுழைப்பு சார்ந்த பொறுப்பை ஏற்கவேண்டிய பெண்கள், பொறுப்பான அல்லது திறமைமிக்க ஆண்களையே தேர்ந்தெடுப்பார்கள் என்பது ஆண்களுக்கு நன்றாகத் தெரியும் (அடிமனதிலாவது இருக்கும்!). இங்கே திறமை/பொறுப்பு என்பது சமுதாயத்தில் அந்தஸ்து மற்றும் பொருட்செல்வம் என்னும் இரு அளவுகோள்களால் கணிக்கப்படுகிறது என்பதை கவனத்தில் கொள்க என்கிறார் க்ரூகர்!
பரிணாமப்படி பார்த்தால், தன் புகழை/திறமையை நிலைநாட்டவும், பின்பு அதை விளம்பரம்படுத்தவும் , பெரும்பாலும் வன்முறை, வீர தீரச் செயல்கள் மற்றும் பல்வேறு வகையான ஆபத்து நிறைந்த செயல்களையே தொன்றுதொட்ட காலத்திலிருந்து ஆயுதமாக பயன்படுத்தியிருக்கிறார்கள் ஆண்கள் என்பது புலப்படும்! இம்மாதிரியான யுக்திகள், இன்றுவரையிலும் தொடர்கின்றன என்பதற்க்கு தன் க்ரெடிட் கார்டுகள் மற்றும் வங்கிக்கணக்கில் கொட்டிக்கிடக்கும் பனமதிப்பையும் காட்டி பெண்களை கவரும்/கவர முயற்ச்சிக்கும் சில/பல இன்றைய ஆண்களே சரியான சான்று!
தொடர்புடைய ஒரு காணொளி
தொடரும் ...
Last edited by மதன்கார்த்திக் on Mon Mar 07, 2011 8:26 pm; edited 1 time in total
Guest- Guest
Re: *உடலுறவுக்காக ‘உயிரையும் கொடுக்கும்’ ஆண்கள், உளவியல் ஆய்வு!*[18+]
ஆண்களுக்கு மத்தியிலான போட்டியின் வெற்றி-தோல்வியும், இழப்புகளும்!
பெண்களைக் கவர்ந்து வாழ்க்கையில் ஜெயித்துவிட ஆண்கள் ஈடுபடும் வீர தீரச் செயல்களும், அதன்விளைவாக அவர்களின் வாழ்நாளும்/ஆயுட்காலமும் பொருளாதாரச் சூழ்நிலைகளால் பாதிக்கப்படுகிறது என்று கண்டறிந்துள்ளார் க்ரூகர்! அதாவது, சுமார் 70 நாடுகளின், ஆண்களின் துணையைத் தேர்ந்தெடுக்கும் போட்டியை ஊக்குவிக்கும்/பாதிக்கும் கலாச்சார மற்றும் பண்பாட்டு காரணிகளை ஆராய்ந்ததில், “பொருளாதார ஏற்றத்தாழ்வு மற்றும் ஒருவரின் செக்ஸ் உறவு வெற்றி இரண்டும் ஒரு மனிதனின் ஆயுட்காலத்தை வெவ்வேறு விதமாக பாதிக்கின்றன, மாறாக பெண்களோ இவ்விரண்டினால் பாதிக்கப்படுவதில்லை என்று தெரியவந்துள்ளது! (பார்ரா…..இது வேறயா?)
ஆனால், பொருளாதார சமநிலை மற்றும் சமுதாய ஏற்றத்தாழ்வுகளற்ற/குறைந்த நாடான நார்வே போன்றவற்றில் ஆண்கள் மற்றும் பெண்களின் இறப்பு விகிதம் கிட்டத்தட்ட ஒரே அளவில் ஆனால் சராசரியாக ஆண்களைவிட பெண்கள் 4.5 வருடம் அதிகம் வாழ்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது! ஆனால், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த, பணக்கார மற்றும் ஏழை மக்கள் வாழும் கொலம்பியா போன்ற நாடுகள், ஒரு குறிப்பிட்ட அளவுக்கு அமெரிக்கா போன்ற நாடுகளில் ஆண்கள் பெண்களை விட விரைவில் இறந்தவிடுகிறார்கள்! காரணம், அந்த ஆண்கள் அந்தஸ்த்து, பணம் இறுதியில் செக்ஸ்/காதலுக்காக வன்முறை, மன உளைச்சல் நிறைந்த செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்கிறார் க்ரூகர்! விளைவு, ஆண்-பெண் இறப்பி விகித வித்தியாசம், கொலம்பியாவில் 7.8 வருடங்கள், அமெரிக்காவில் 5.2 வருடங்களால். அதாவது, பெண்களைக்காட்டிலும் ஆண்கள் சீக்கிரம் இறந்துவிடுகிறார்கள்! என்ன கொடுமை சார் இது?!
இதையெல்லாம் விட பெரிய கொடுமை என்னன்னா, கற்பனையான பொருளாதார ஏற்றத்தாழ்வு கூட ஆண்களின் ஆயுட்காலத்தை பாதிக்கிறதாம்?! உதாரணமா, அந்தஸ்த்து சார்ந்த தொலைக்காட்சி அலைவரிசைகளான எம்.டிவி (MTV) போன்றவை பணக்காரத்தனத்தை வெளிச்சம் போட்டு காட்டுகின்றனவாம்?! விளைவு, அம்மாதிரியான தொலைக்காட்சி அலவரிசைகளைப் பார்க்கும் ஆண்கள், “ம்ம்ம்….நானும்கூட இது மாதிரியான விலை உயர்ந்த பொருட்கள்/பணம் எல்லாம் சம்பாதிக்கனும்” அப்படீன்னு அவங்களோட எதிர்பார்ப்புகளும் பல மடங்கு கூடிவிடுகிறது என்கிறார் க்ரூகர். அப்புறம் என்ன சும்மாவா இருப்பாங்க, பார்த்ததையெல்லாம் சம்பாதிக்க இரவு பகலா உழைக்கிறது, அது வாங்கனும் இது வாங்கனும்னு மன உளைச்சலை அதிகப்படுத்திக்கிறதுன்னு “ஒரே ரணகளாமாயிடும் வாழ்க்கை”!
ஒருவனுக்கு ஒருத்தியும், ஒருவனுக்கு பல பெண்களும்!
“ரெண்டு பெண்டாட்டிக்காரன் திண்டாட்டக்காரன்” அப்படீன்னு நம்ம ஊருல சொல்லிக்கேட்டதுண்டு! இப்போதான் தெரியுது அது விஞ்ஞானப்பூர்வமாவும் உண்மைன்னு! ஆமாங்க, பாலிகைனி (polygyny) அப்படீங்கிற ஒருத்தர் பல பெண்களுடன் செக்ஸ் உறவு வைத்துக்கொள்ளும் வழக்கத்துக்கும் ஆண்கள் இறப்பு விகிதத்துக்கும் தொடர்பிருக்குதாம். அதாவது, பாலிகைனி வழக்கத்துல ஒரே ஆண் (அந்தஸ்த்தில் உயர்ந்தவன்) பல பெண்களை மணந்து குழந்தைபெறுவதால், அந்தஸ்த்து ஏணியில் கீழே இருக்கும் மீதமுள்ள ஆண்களுக்கு தன் பெண்களை மணந்து தன் சந்ததியை உருவாக்கும் வாய்ப்பு வெகுவாக குறைந்துவிடுகிறதாம்?!
இதுமாதிரியான பாலிகைனி வழக்கத்துனால ஒருத்தருக்கு சமுதாய அந்தஸ்த்து ஏணியில விரைவாக மேலே போகிற வாய்ப்பும், லாபங்கள்/பலன்கள் இருந்தாலும், அதெல்லாம் சும்மா வர்றதில்ல, பல ஆபத்துகள் அப்புறம் சமயத்துல இறப்பு இப்படியான விஷயங்களோடதான் வருதூங்கிறாரு ஆய்வாளர் க்ரூகர்! அது சரி…?!
ஆனா, இது மாதிரியான பாலிகைனி/செக்ஸ் போட்டிகள்ல ஆர்வமில்லாத ஆண்கள் (காரணம் பெரும்பாலும் நல்ல குடும்பத்தோட சந்தோஷமா இருக்கிறது அல்லது வாழ்க்கையில வேறு லட்சியங்களை அடைய முனைவது) பெண்களைக் கவர ஆபத்து நிறைந்த செயல்கள்ல ஈடுபடுறது இல்லைன்னு இன்னபிற ஆய்வுகள் சொல்கின்றனவாம்!
ஆக மொத்தத்துல, இந்த ஆய்வு என்ன சொல்லுதுன்னா, “ஒருவனுக்கு ஒருத்தியா (monogamous) சமுதாய/பொருளாதார ஏற்றத்தாழ்வுகளற்ற நாடுகள்/சமூகத்தில் வாழும் ஒரு ஆணின் வாழ்நாள் செழிப்பாக/மகிழ்ச்சி நிறைந்த இருக்கும்” என்கிறது!
அதனால, “ரதிகளைத் தேடி, அடைந்துவிடவேண்டி ஆபத்துகள்/மன உளைச்சல் நிறைந்த செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்த்து, நமக்கு பொருத்தமா ஒரு சங்கீதாவை, சாதனாவை கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா வாழ்க்கையை வாழ எத்தனிக்கிறது எல்லா ஆண்களுக்கும் சாலச்சிறந்தது” அப்படீங்கிறாரு க்ரூகர்!
“காதல்/கல்யாணம் பண்ணா தமன்னா/அசின்/நயன்தாரா மாதிரி ஒரு வெயிட்டான ஃபிகரைத்தான் காதலிக்கனும்/கல்யாணம் பண்ணனும் அப்படீன்னு நினைக்கிறது உள்ளுணர்வு சார்ந்த ஒரு உந்துதல் என்றாலும் அந்த மாதிரியான உள்ளுணர்வுகள் ஒரு மனிதனோட வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் அப்படீங்கிறதுக்கு எந்தவொரு உத்திரவாதமுமில்லை” என்பதுதான் இந்த ஆய்வு முன்வைக்கும் கருத்து!
ஆக, “ஆண்கள் செக்ஸுக்காக உயிரை கொடுக்கத் தயாராயிருக்காங்க அப்படீங்கிறது அவங்க பரிணாம வளர்ச்சியோட ஒரு அங்கமாவே இருந்துவருகிறது. உலகின் பெரும்பாலான நாடுகளில் பெண்களை விட ஏன் ஆண்கள் விரைவில் இறந்து போறாங்க” அப்படீங்கிறத ஓரளவுக்கு இந்த ஆய்வு விளக்க முயற்ச்சி பண்ணுது அப்படீங்கிறாரு க்ரூகர்!
இதப் படிச்சதுக்கப்புறம் எனக்கு என்ன தோனுது/புரியுதுன்னா, “மணந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி” அப்படீன்னு ஒத்தக் கால்ல நிக்காம, நமக்கு ஏத்தமாதிரி இருக்குற ஒரு தமன்னாவையோ இல்ல அசினையோ , காதலிச்சோ இல்ல பெற்றோர் பார்த்து வச்சோ கல்யாணம் பண்ணிக்கிட்டு, கடைசி வரைக்கும் ஒருவனுக்கு ஒருத்தியா சந்தோஷமா, இல்லறம் அப்படீங்கிற நல்லறத்தைக் கடைப்பிடிச்சி வாழ முயற்ச்சிக்கிறது புத்திசாலித்தனம்னு தோனுது!
உங்களுக்கும் இப்படியேதான் தோனனும்னு எந்தக் கட்டாயமுமில்லை. அதனால, கண்டிப்பா சில/பல பேருக்கு வேற மாதிரிக்கூட தோனலாம். அப்படித்தோனுறவங்க, முடிஞ்சா ஒரு மறுமொழிய எழுதிட்டுப்போங்க. சரி நான் கெளம்புறேன்!
நன்றி : பத்மஹரி
பெண்களைக் கவர்ந்து வாழ்க்கையில் ஜெயித்துவிட ஆண்கள் ஈடுபடும் வீர தீரச் செயல்களும், அதன்விளைவாக அவர்களின் வாழ்நாளும்/ஆயுட்காலமும் பொருளாதாரச் சூழ்நிலைகளால் பாதிக்கப்படுகிறது என்று கண்டறிந்துள்ளார் க்ரூகர்! அதாவது, சுமார் 70 நாடுகளின், ஆண்களின் துணையைத் தேர்ந்தெடுக்கும் போட்டியை ஊக்குவிக்கும்/பாதிக்கும் கலாச்சார மற்றும் பண்பாட்டு காரணிகளை ஆராய்ந்ததில், “பொருளாதார ஏற்றத்தாழ்வு மற்றும் ஒருவரின் செக்ஸ் உறவு வெற்றி இரண்டும் ஒரு மனிதனின் ஆயுட்காலத்தை வெவ்வேறு விதமாக பாதிக்கின்றன, மாறாக பெண்களோ இவ்விரண்டினால் பாதிக்கப்படுவதில்லை என்று தெரியவந்துள்ளது! (பார்ரா…..இது வேறயா?)
ஆனால், பொருளாதார சமநிலை மற்றும் சமுதாய ஏற்றத்தாழ்வுகளற்ற/குறைந்த நாடான நார்வே போன்றவற்றில் ஆண்கள் மற்றும் பெண்களின் இறப்பு விகிதம் கிட்டத்தட்ட ஒரே அளவில் ஆனால் சராசரியாக ஆண்களைவிட பெண்கள் 4.5 வருடம் அதிகம் வாழ்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது! ஆனால், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த, பணக்கார மற்றும் ஏழை மக்கள் வாழும் கொலம்பியா போன்ற நாடுகள், ஒரு குறிப்பிட்ட அளவுக்கு அமெரிக்கா போன்ற நாடுகளில் ஆண்கள் பெண்களை விட விரைவில் இறந்தவிடுகிறார்கள்! காரணம், அந்த ஆண்கள் அந்தஸ்த்து, பணம் இறுதியில் செக்ஸ்/காதலுக்காக வன்முறை, மன உளைச்சல் நிறைந்த செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்கிறார் க்ரூகர்! விளைவு, ஆண்-பெண் இறப்பி விகித வித்தியாசம், கொலம்பியாவில் 7.8 வருடங்கள், அமெரிக்காவில் 5.2 வருடங்களால். அதாவது, பெண்களைக்காட்டிலும் ஆண்கள் சீக்கிரம் இறந்துவிடுகிறார்கள்! என்ன கொடுமை சார் இது?!
இதையெல்லாம் விட பெரிய கொடுமை என்னன்னா, கற்பனையான பொருளாதார ஏற்றத்தாழ்வு கூட ஆண்களின் ஆயுட்காலத்தை பாதிக்கிறதாம்?! உதாரணமா, அந்தஸ்த்து சார்ந்த தொலைக்காட்சி அலைவரிசைகளான எம்.டிவி (MTV) போன்றவை பணக்காரத்தனத்தை வெளிச்சம் போட்டு காட்டுகின்றனவாம்?! விளைவு, அம்மாதிரியான தொலைக்காட்சி அலவரிசைகளைப் பார்க்கும் ஆண்கள், “ம்ம்ம்….நானும்கூட இது மாதிரியான விலை உயர்ந்த பொருட்கள்/பணம் எல்லாம் சம்பாதிக்கனும்” அப்படீன்னு அவங்களோட எதிர்பார்ப்புகளும் பல மடங்கு கூடிவிடுகிறது என்கிறார் க்ரூகர். அப்புறம் என்ன சும்மாவா இருப்பாங்க, பார்த்ததையெல்லாம் சம்பாதிக்க இரவு பகலா உழைக்கிறது, அது வாங்கனும் இது வாங்கனும்னு மன உளைச்சலை அதிகப்படுத்திக்கிறதுன்னு “ஒரே ரணகளாமாயிடும் வாழ்க்கை”!
ஒருவனுக்கு ஒருத்தியும், ஒருவனுக்கு பல பெண்களும்!
“ரெண்டு பெண்டாட்டிக்காரன் திண்டாட்டக்காரன்” அப்படீன்னு நம்ம ஊருல சொல்லிக்கேட்டதுண்டு! இப்போதான் தெரியுது அது விஞ்ஞானப்பூர்வமாவும் உண்மைன்னு! ஆமாங்க, பாலிகைனி (polygyny) அப்படீங்கிற ஒருத்தர் பல பெண்களுடன் செக்ஸ் உறவு வைத்துக்கொள்ளும் வழக்கத்துக்கும் ஆண்கள் இறப்பு விகிதத்துக்கும் தொடர்பிருக்குதாம். அதாவது, பாலிகைனி வழக்கத்துல ஒரே ஆண் (அந்தஸ்த்தில் உயர்ந்தவன்) பல பெண்களை மணந்து குழந்தைபெறுவதால், அந்தஸ்த்து ஏணியில் கீழே இருக்கும் மீதமுள்ள ஆண்களுக்கு தன் பெண்களை மணந்து தன் சந்ததியை உருவாக்கும் வாய்ப்பு வெகுவாக குறைந்துவிடுகிறதாம்?!
இதுமாதிரியான பாலிகைனி வழக்கத்துனால ஒருத்தருக்கு சமுதாய அந்தஸ்த்து ஏணியில விரைவாக மேலே போகிற வாய்ப்பும், லாபங்கள்/பலன்கள் இருந்தாலும், அதெல்லாம் சும்மா வர்றதில்ல, பல ஆபத்துகள் அப்புறம் சமயத்துல இறப்பு இப்படியான விஷயங்களோடதான் வருதூங்கிறாரு ஆய்வாளர் க்ரூகர்! அது சரி…?!
ஆனா, இது மாதிரியான பாலிகைனி/செக்ஸ் போட்டிகள்ல ஆர்வமில்லாத ஆண்கள் (காரணம் பெரும்பாலும் நல்ல குடும்பத்தோட சந்தோஷமா இருக்கிறது அல்லது வாழ்க்கையில வேறு லட்சியங்களை அடைய முனைவது) பெண்களைக் கவர ஆபத்து நிறைந்த செயல்கள்ல ஈடுபடுறது இல்லைன்னு இன்னபிற ஆய்வுகள் சொல்கின்றனவாம்!
ஆக மொத்தத்துல, இந்த ஆய்வு என்ன சொல்லுதுன்னா, “ஒருவனுக்கு ஒருத்தியா (monogamous) சமுதாய/பொருளாதார ஏற்றத்தாழ்வுகளற்ற நாடுகள்/சமூகத்தில் வாழும் ஒரு ஆணின் வாழ்நாள் செழிப்பாக/மகிழ்ச்சி நிறைந்த இருக்கும்” என்கிறது!
அதனால, “ரதிகளைத் தேடி, அடைந்துவிடவேண்டி ஆபத்துகள்/மன உளைச்சல் நிறைந்த செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்த்து, நமக்கு பொருத்தமா ஒரு சங்கீதாவை, சாதனாவை கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா வாழ்க்கையை வாழ எத்தனிக்கிறது எல்லா ஆண்களுக்கும் சாலச்சிறந்தது” அப்படீங்கிறாரு க்ரூகர்!
“காதல்/கல்யாணம் பண்ணா தமன்னா/அசின்/நயன்தாரா மாதிரி ஒரு வெயிட்டான ஃபிகரைத்தான் காதலிக்கனும்/கல்யாணம் பண்ணனும் அப்படீன்னு நினைக்கிறது உள்ளுணர்வு சார்ந்த ஒரு உந்துதல் என்றாலும் அந்த மாதிரியான உள்ளுணர்வுகள் ஒரு மனிதனோட வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் அப்படீங்கிறதுக்கு எந்தவொரு உத்திரவாதமுமில்லை” என்பதுதான் இந்த ஆய்வு முன்வைக்கும் கருத்து!
ஆக, “ஆண்கள் செக்ஸுக்காக உயிரை கொடுக்கத் தயாராயிருக்காங்க அப்படீங்கிறது அவங்க பரிணாம வளர்ச்சியோட ஒரு அங்கமாவே இருந்துவருகிறது. உலகின் பெரும்பாலான நாடுகளில் பெண்களை விட ஏன் ஆண்கள் விரைவில் இறந்து போறாங்க” அப்படீங்கிறத ஓரளவுக்கு இந்த ஆய்வு விளக்க முயற்ச்சி பண்ணுது அப்படீங்கிறாரு க்ரூகர்!
இதப் படிச்சதுக்கப்புறம் எனக்கு என்ன தோனுது/புரியுதுன்னா, “மணந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி” அப்படீன்னு ஒத்தக் கால்ல நிக்காம, நமக்கு ஏத்தமாதிரி இருக்குற ஒரு தமன்னாவையோ இல்ல அசினையோ , காதலிச்சோ இல்ல பெற்றோர் பார்த்து வச்சோ கல்யாணம் பண்ணிக்கிட்டு, கடைசி வரைக்கும் ஒருவனுக்கு ஒருத்தியா சந்தோஷமா, இல்லறம் அப்படீங்கிற நல்லறத்தைக் கடைப்பிடிச்சி வாழ முயற்ச்சிக்கிறது புத்திசாலித்தனம்னு தோனுது!
உங்களுக்கும் இப்படியேதான் தோனனும்னு எந்தக் கட்டாயமுமில்லை. அதனால, கண்டிப்பா சில/பல பேருக்கு வேற மாதிரிக்கூட தோனலாம். அப்படித்தோனுறவங்க, முடிஞ்சா ஒரு மறுமொழிய எழுதிட்டுப்போங்க. சரி நான் கெளம்புறேன்!
நன்றி : பத்மஹரி
Last edited by மதன்கார்த்திக் on Mon Mar 07, 2011 8:28 pm; edited 1 time in total
Guest- Guest
Re: *உடலுறவுக்காக ‘உயிரையும் கொடுக்கும்’ ஆண்கள், உளவியல் ஆய்வு!*[18+]
விழுப்புணர்வு ஏற்படுத்தும் பதிவு தான்!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: *உடலுறவுக்காக ‘உயிரையும் கொடுக்கும்’ ஆண்கள், உளவியல் ஆய்வு!*[18+]
சில பல நல்ல ஆய்வு முடிவுகளுக்குப்பின் ஒருவனுக்கு ஒருத்தி என்னும் கொள்கையை இறுதியில் மொழிந்த இந்த வல்லுனர்களுக்கு பல ஆண்டுகள் முன்னதாகவே நம் தமிழர் குறிப்பிட்டுச் சென்று விட்டார்களே..
நம் வீட்டு அரிசியை வெளிநாட்டவன் வாங்கி அதில் ரைஸ் புட்டிங் செய்து நம்ம வீட்டு இட்லியை நமக்கே அல்வாவாக்கி தரும் போது அதை நாம் வெகுவாகப்பாராட்டி மகிழ்கிறோம் என்பதே கொடுமைதான்..
அருமையான அலசல் பதிவுக்கு மிக்க நன்றி மதன்..!
நம் வீட்டு அரிசியை வெளிநாட்டவன் வாங்கி அதில் ரைஸ் புட்டிங் செய்து நம்ம வீட்டு இட்லியை நமக்கே அல்வாவாக்கி தரும் போது அதை நாம் வெகுவாகப்பாராட்டி மகிழ்கிறோம் என்பதே கொடுமைதான்..
அருமையான அலசல் பதிவுக்கு மிக்க நன்றி மதன்..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Similar topics
» பெண்களை விட அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்கள்
» நினைவில் சிறந்தவர்கள் ஆண்கள் : ஆய்வு
» உடம்பையும் உயிரையும் ஆடி அதிரவைத்த கேள்வி
» பெண்கள் எந்த விசயத்தில் சிறப்பாக செயல்படுவார்கள்?ஆண்கள் எந்த விசயத்தில் சொதப்புவார்கள் ? ஒரு ஆய்வு
» பெண்கள் எந்த விசயத்தில் சிறப்பாக செயல்படுவார்கள்?ஆண்கள் எந்த விசயத்தில் சொதப்புவார்கள் ? ஒரு ஆய்வு
» நினைவில் சிறந்தவர்கள் ஆண்கள் : ஆய்வு
» உடம்பையும் உயிரையும் ஆடி அதிரவைத்த கேள்வி
» பெண்கள் எந்த விசயத்தில் சிறப்பாக செயல்படுவார்கள்?ஆண்கள் எந்த விசயத்தில் சொதப்புவார்கள் ? ஒரு ஆய்வு
» பெண்கள் எந்த விசயத்தில் சிறப்பாக செயல்படுவார்கள்?ஆண்கள் எந்த விசயத்தில் சொதப்புவார்கள் ? ஒரு ஆய்வு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|