புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 23/08/2024
by mohamed nizamudeen Yesterday at 11:19 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Yesterday at 10:28 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Yesterday at 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Yesterday at 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Yesterday at 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:23 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:00 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 4:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:37 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Yesterday at 4:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:05 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:41 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Yesterday at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:36 am

» நாவல்கள் வேண்டும்
by vista Yesterday at 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக அமைதிக்காக உலகம் சுற்றும் தமிழர்! Poll_c10உலக அமைதிக்காக உலகம் சுற்றும் தமிழர்! Poll_m10உலக அமைதிக்காக உலகம் சுற்றும் தமிழர்! Poll_c10 
79 Posts - 51%
heezulia
உலக அமைதிக்காக உலகம் சுற்றும் தமிழர்! Poll_c10உலக அமைதிக்காக உலகம் சுற்றும் தமிழர்! Poll_m10உலக அமைதிக்காக உலகம் சுற்றும் தமிழர்! Poll_c10 
61 Posts - 39%
mohamed nizamudeen
உலக அமைதிக்காக உலகம் சுற்றும் தமிழர்! Poll_c10உலக அமைதிக்காக உலகம் சுற்றும் தமிழர்! Poll_m10உலக அமைதிக்காக உலகம் சுற்றும் தமிழர்! Poll_c10 
4 Posts - 3%
vista
உலக அமைதிக்காக உலகம் சுற்றும் தமிழர்! Poll_c10உலக அமைதிக்காக உலகம் சுற்றும் தமிழர்! Poll_m10உலக அமைதிக்காக உலகம் சுற்றும் தமிழர்! Poll_c10 
3 Posts - 2%
Abiraj_26
உலக அமைதிக்காக உலகம் சுற்றும் தமிழர்! Poll_c10உலக அமைதிக்காக உலகம் சுற்றும் தமிழர்! Poll_m10உலக அமைதிக்காக உலகம் சுற்றும் தமிழர்! Poll_c10 
2 Posts - 1%
prajai
உலக அமைதிக்காக உலகம் சுற்றும் தமிழர்! Poll_c10உலக அமைதிக்காக உலகம் சுற்றும் தமிழர்! Poll_m10உலக அமைதிக்காக உலகம் சுற்றும் தமிழர்! Poll_c10 
2 Posts - 1%
Rathinavelu
உலக அமைதிக்காக உலகம் சுற்றும் தமிழர்! Poll_c10உலக அமைதிக்காக உலகம் சுற்றும் தமிழர்! Poll_m10உலக அமைதிக்காக உலகம் சுற்றும் தமிழர்! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
உலக அமைதிக்காக உலகம் சுற்றும் தமிழர்! Poll_c10உலக அமைதிக்காக உலகம் சுற்றும் தமிழர்! Poll_m10உலக அமைதிக்காக உலகம் சுற்றும் தமிழர்! Poll_c10 
1 Post - 1%
mini
உலக அமைதிக்காக உலகம் சுற்றும் தமிழர்! Poll_c10உலக அமைதிக்காக உலகம் சுற்றும் தமிழர்! Poll_m10உலக அமைதிக்காக உலகம் சுற்றும் தமிழர்! Poll_c10 
1 Post - 1%
Anthony raj
உலக அமைதிக்காக உலகம் சுற்றும் தமிழர்! Poll_c10உலக அமைதிக்காக உலகம் சுற்றும் தமிழர்! Poll_m10உலக அமைதிக்காக உலகம் சுற்றும் தமிழர்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக அமைதிக்காக உலகம் சுற்றும் தமிழர்! Poll_c10உலக அமைதிக்காக உலகம் சுற்றும் தமிழர்! Poll_m10உலக அமைதிக்காக உலகம் சுற்றும் தமிழர்! Poll_c10 
436 Posts - 58%
heezulia
உலக அமைதிக்காக உலகம் சுற்றும் தமிழர்! Poll_c10உலக அமைதிக்காக உலகம் சுற்றும் தமிழர்! Poll_m10உலக அமைதிக்காக உலகம் சுற்றும் தமிழர்! Poll_c10 
259 Posts - 34%
mohamed nizamudeen
உலக அமைதிக்காக உலகம் சுற்றும் தமிழர்! Poll_c10உலக அமைதிக்காக உலகம் சுற்றும் தமிழர்! Poll_m10உலக அமைதிக்காக உலகம் சுற்றும் தமிழர்! Poll_c10 
23 Posts - 3%
prajai
உலக அமைதிக்காக உலகம் சுற்றும் தமிழர்! Poll_c10உலக அமைதிக்காக உலகம் சுற்றும் தமிழர்! Poll_m10உலக அமைதிக்காக உலகம் சுற்றும் தமிழர்! Poll_c10 
10 Posts - 1%
Abiraj_26
உலக அமைதிக்காக உலகம் சுற்றும் தமிழர்! Poll_c10உலக அமைதிக்காக உலகம் சுற்றும் தமிழர்! Poll_m10உலக அமைதிக்காக உலகம் சுற்றும் தமிழர்! Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
உலக அமைதிக்காக உலகம் சுற்றும் தமிழர்! Poll_c10உலக அமைதிக்காக உலகம் சுற்றும் தமிழர்! Poll_m10உலக அமைதிக்காக உலகம் சுற்றும் தமிழர்! Poll_c10 
5 Posts - 1%
mini
உலக அமைதிக்காக உலகம் சுற்றும் தமிழர்! Poll_c10உலக அமைதிக்காக உலகம் சுற்றும் தமிழர்! Poll_m10உலக அமைதிக்காக உலகம் சுற்றும் தமிழர்! Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
உலக அமைதிக்காக உலகம் சுற்றும் தமிழர்! Poll_c10உலக அமைதிக்காக உலகம் சுற்றும் தமிழர்! Poll_m10உலக அமைதிக்காக உலகம் சுற்றும் தமிழர்! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உலக அமைதிக்காக உலகம் சுற்றும் தமிழர்! Poll_c10உலக அமைதிக்காக உலகம் சுற்றும் தமிழர்! Poll_m10உலக அமைதிக்காக உலகம் சுற்றும் தமிழர்! Poll_c10 
3 Posts - 0%
vista
உலக அமைதிக்காக உலகம் சுற்றும் தமிழர்! Poll_c10உலக அமைதிக்காக உலகம் சுற்றும் தமிழர்! Poll_m10உலக அமைதிக்காக உலகம் சுற்றும் தமிழர்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக அமைதிக்காக உலகம் சுற்றும் தமிழர்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 05, 2011 10:26 pm

உலக அமைதிக்காக உலகம் சுற்றும் தமிழர்! Cathrin1

உலக அமைதிக்காக தனது 16 வயதில் பயணத்தை சைக்கிளில் துவக்கிய ரவி, 42 வயதிலும் தனது பயணத்தை தற்போது மோட்டார் சைக்கிளில் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

இதுவரை சைக்கிளில் ஒரு லட்சம் கிலோமீட்டர் தூரத்திற்கும் அதிகமாக... பைக்கில் 4 லட்சம் கிலோமீட்டர் தூரத்திற்கும் அதிகமாக பயணம் செய்து கொண்டே இருக்கும் ரவி, சென்னையை சேர்ந்தவர் என்பது தமிழகத்திற்கு பெருமை.

ஜப்பான், ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து, பெல்ஜியம், ஹாலந்து, இத்தாலி ஆகிய வெளிநாடுகளில் பயணம் மேற்கொண்ட ரவி, இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் பைக் மூலம் சுற்றிவந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரவியை சந்தித்தோம்,

``நான் புகழுக்காகவோ அல்லது சாதனைக்காகவோ இந்த பயணத்தை மேற்கொள்ளவில்லை. உலக அமைதிக்காக இதற்கு முன்பு பல தலைவர்கள் போராடியுள்ளனர். அதேபோல் என்னால் முடிந்த ஒரு செயலை செய்கிறேன்.

இதன் மூலம் பல கிராமங்களில் மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளேன். உலக அமைதிக்கு அடிப்படை காரணமாக... அனைவரையும் படிக்க சொல்லி வலியுறுத்துகிறேன். குழந்தை தொழிலாளர்கள் இல்லாத உலகம் இருந்தால் போதும்... உலகம் அமைதி பெறும் என்பது எனது கருத்து. இதை வலியுறுத்தி பிரச்சாரம் செய்கிறேன். அதேபோல் பிளாஸ்டிக் குறித்து விழிப்புணர்வை உருவாக்கி வருகிறேன்.

என்னுடைய பைக்கின் பின்புறம் உலக அமைதிக்கான வாசகமும், சமாதானத்தை குறிக்கும் வகையில் வெள்ளைக் கொடியும் எப்போதும் பறந்து கொண்டிருக்கும். இப்படி நான் பல ஊர்களைக் கடக்கும்போது அங்குள்ள மக்கள் என்னவென்று விசாரிப்பார்கள். உலக அமைதிக்காக ஒருவர் நீண்ட தூரம் பயணம் செல்கிறார் என்ற செய்தி அவர்களையும் சிந்திக்க வைக்கும் என்பதுதான் எனது நோக்கம்! உலக அமைதிக்காக மட்டுமின்றி, கார்கில் போர் குறித்தும் பயணம் செய்துள்ளேன்'' என்று தனது பயணத்தின் நோக்கத்தை விளக்குகிறார்.

மேலும் கூறுகையில், ``பள்ளிக் குழந்தைகளிடம் உலகப் போர், அணு ஆயுதம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, அவர்களை கட்டுரை எழுதச் சொல்ல வேண்டும். உலகம் அமைதியாக இருப்பதற்கான விதையை அவர்களின் மனதில் விதைக்க வேண்டும்'' என்கிறார் அமைதியாக...

இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆகிவிட்டது. ஆனாலும் தனது முன்னாள் மனைவி ஹெலி-ஐ பற்றி நல்லவிதமாகவே பேசுகிறார். ``அதுவொரு காதல் கல்யாணம். நன்றாகத் தான் போய்க் கொண்டிருந்தது. ஒரே ஒரு மகள் கிருத்திகா(13). ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருகிறாள். மற்றொரு திருமணம் செய்யுமாறு உறவினர்கள் வற்புறுத்துகின்றனர். தற்போது என்னுடன் பயணம் செய்யும் இத்தாலி பெண்ணான காத்ரீனை திருமணம் செய்யலாம் என்று எண்ணுகிறேன்'' - கொஞ்சம் வெட்கத்துடன் கூறுகிறார் ரவி.

இவர் உடல்தானம், கண்தானம், ரத்ததானம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது இளமைக் காலம் குறித்து பேசும் ரவி, ``சென்னை, திருவல்லிக்கேணியில் பிறந்து, வளர்ந்தேன். அங்குள்ள இந்து உயர்நிலைப் பள்ளியில் படித்தேன். பனிரெண்டாம் வகுப்பில் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, அப்பா நிர்வகித்துக் கொண்டிருந்த வீடியோ லைப்ரரியில் பணிபுரிந்தேன். அப்போது தனியாக தொலைதூரக் கல்வியில் பி.ஏ.வரலாறு படித்து முடித்தேன். அப்புறம் ஹார்ட்வேர் படித்தேன். யோகா கற்றுக் கொண்டேன். தற்போது கூந்தல் முடியை ஏற்றுமதி செய்து வருகிறேன்'' என்கிறார்.

அவரிடம், முதன் முதலில் எங்கே, எப்போது, எதற்காக பயணம் செய்தீர்கள்? என்று கேட்டோம்,

``எனக்கு சத்தியநாராயணா என்ற ராஜஸ்தான் நண்பர் ஒருவர் இருந்தார். அவர் ஆந்திராவில் விஜயவாடாவில் வியாபாரம் செய்து வந்தார். அவரை பார்ப்பதற்காக செல்ல நினைத்தேன். கையில் ரெயில் டிக்கெட் எடுக்க பணம் போதவில்லை. உடனே என்னிடமிருந்த சைக்கிளில் கிளம்பிவிட்டேன்.

சென்னையிலிருந்து 433 கி.மீ.தூரம் சைக்கிளில் சென்றேன்.

வழியில் கிராமங்கள், காடுகள் என மனதுக்கு ரம்மியமாக இருந்தது. வித்தியாசமான மனிதர்கள், பழக்க வழக்கங்கள் மற்றும் அவர்களின் குணங்கள் எல்லாம் என்னை கவர்ந்தன என்றாலும், அவர்களிடம் படிப்பு மற்றும் உலகார்ந்த விஷயங்கள் இல்லை. இதனால் அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் எண்ணம் உருவானது. அந்த பயணம்தான் எனது வாழ்க்கையை புரட்டி போட்டது.

இனி எனது வாழ்வு முழுவதும் உலகம் முழுக்க பயணம் செல்ல திட்டமிட்டேன். அடுத்து அப்போதைய போலீஸ் கமிஷனர் தேவாரத்தின் அறிவுரையின்படி, சென்னையிலிருந்து பெங்களூருக்கு சைக்கிளில் பயணம் சென்றேன். 87-ம் ஆண்டில் சென்னையிலிருந்து மதுரைக்கு சைக்கிளில் சென்று வந்தேன்.

92-ம் ஆண்டில் சென்னையிலிருந்து டெல்லிக்கு(4620 கி.மீ) சைக்கிளிலேயே பயணம் சென்று வந்தேன். அப்போது நாக்பூரில் நடந்த விபத்தில் இடது முழங்கை முறிந்து போனது. ஆனாலும் ஒரு கையால் சைக்கிள் ஓட்டி, மீதியிருந்த நூறு கிலோமீட்டர் தூர பயணத்தை முடித்தேன்.

அந்த பயணத்தை அனைவரும் பாராட்டியதை மறக்க முடியாது. அடுத்து சென்னையிலிருந்து லண்டனுக்கு பயணம் செல்ல திட்டமிட்டுள்ளேன்'' என்று பெருமிதப்படும் ரவிக்கு, இந்தி, உருது மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகள் பேசத் தெரியும். அதுமட்டுமின்றி டென்னிஸ், யோகா, சமையல் ஆகியவையும் தெரியும்.

தன்னுடைய பயணத்தின்போது ஏற்பட்ட மறக்க முடியாத சம்பவங்கள் குறித்து பேசுகையில், ``கார்கில் போர் அமைதியை வலியுறுத்தி பைக்கில் பயணம் மேற்கொண்டேன். அப்போது என்னுடன் ஜப்பானை சேர்ந்த தோழியும் வந்தார். இருவரும் மத்திய பிரதேசத்தில் காட்டில் பயணம் செய்து கொண்டிருந்தோம்.

எனக்கு சிறுநீர் கழிக்கவேண்டும் என்பதால் வண்டியை ரோட்டின் ஓரம் நிறுத்தி விட்டு, சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தேன்.

எதார்த்தமாக நிமிர்ந்து பார்த்தபோது, கருப்பு நிறத்தில் ஒரு பெரிய வால் ஆடிக் கொண்டிருந்தது. அதிர்ச்சியான நான் அப்படியே கொஞ்சம் நிமிர்ந்து, கூர்ந்து பார்த்தால் கருஞ்சிறுத்தை மரத்தில் படுத்தபடி என்னை பார்த்துக் கொண்டிருந்தது. பயத்தில், அதிர்ச்சியில் எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.

திரும்பினால் சிறுத்தை என்னை தாக்கி விடும் என்ற எச்சரிக்கையில் அதை பார்த்தபடி அப்படியே மெதுவாக பின்னாடி நகர்ந்து, வண்டியை ஸ்டார்ட் செய்தபடி, தோழியிடம் நடந்த விவரத்தை கூறினேன். விரைவாக அவர் வண்டியில் ஏறி உட்கார வேகமாக வண்டியை கிளப்பினேன். அந்த சம்பவத்தை இப்போது நினைத்தாலும் உடல் முழுவதும் சிலிர்த்துவிடும்.

அதேபோல் வழியில் கிராமங்களில் படிக்காத குழந்தைகள், தொழிலாளர்களாக செங்கல் சூளை மற்றும் கடைகளில் வேலை செய்வதை பார்ப்பதற்கு, மனதுக்கு கஷ்டமாக இருக்கும். அவர்களிடம் படிப்பு குறித்த விழிப்புணர்வை வெளிப்படுத்தி, குழந்தைகளை படிக்க வைக்குமாறு அவர்களது பெற்றோரிடம் வலியுறுத்துவேன்.

வட இந்தியாவில் அவ்வப்போது ரவுடிகள் வழிப்பறிக்காக என்னை மறிப்பார்கள். அவர்களிடம் எனது நோக்கத்தை கூறியவுடன் ஒன்றும் செய்யாமல் விட்டுவிடுவார்கள்.

ஒரே ஒரு முறை மட்டும் மும்பை, ஜுகு பீச்சில் நாலு ரவுடிகள் என்னை யார் என்று தெரியாமல், கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, என்னிடமிருந்த பணத்தை பிடுங்கிக் கொண்டார்கள். மற்றபடி எந்த பிரச்சினையும் இதுவரை ஏற்படவில்லை'' என்கிறார்.

பெற்றோர்: அப்பா ஆறுமுகம் வியாபாரம் செய்தவர். அம்மா அமிர்தவள்ளி. ஒரு அண்ணன் சேகர் என்னுடன் ஏற்றுமதி பிசினஸில் உதவியாக இருக்கிறார்.

பிடித்த நிறம்: மஞ்சள்

பிடித்த நாடு: இந்தியா

ரோல்மாடல்: ஆப்ரகாம் லிங்கன், மார்ட்டின் லூதர் கிங், மகாத்மா காந்தி.

சந்திக்க விரும்பும் நபர்: முதல்வர் கலைஞர்.

பயம்: ஏதாவது தவறு செய்துவிட்டால் வருவது.

பலம்: தன்னம்பிக்கை

பலவீனம்: புகைபிடிப்பது.

எதிர்கால லட்சியம்: உலகம் முழுவதும் நடந்தே பயணம் செய்ய வேண்டும். புதிய தொழில்நுட்பத்தில் மருத்துவமனை தொடங்கி, மக்களுக்கு மருத்துவ சேவை செய்ய வேண்டும். அனைத்து நாட்டு தலைவர்களையும் சந்தித்து, `அணு ஆயுதம் கூடாது' என்பதை வலியுறுத்த வேண்டும்.

தினதந்தி



உலக அமைதிக்காக உலகம் சுற்றும் தமிழர்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Mar 05, 2011 10:37 pm

சந்தோஷமா இருக்கு, நாடு எனக்கு என்ன செய்ததுன்னு கேட்காம என்னால முடிந்தது இதுன்னு சொல்லி தொடர்ந்த இந்த பயணம் வெற்றிகரமாக தொடர்ந்துக்கொண்டே இருக்கட்டும்.

சிறுத்தைக்கிட்ட இருந்து தப்பினது நிஜமாவே சிலிர்க்கவைக்கும் அனுபவம் தான்...

இத்தனை ஓட்டத்திலும் யோகா சமையல் கற்றது பெருமைப்படும் விஷயம்....

பாம்பே ஜுஹு பீச்சுல நல்லவேளை இவரை உயிருடன் விட்டார்கள் வழிப்பறி கொள்ளையர்...

அன்பு நன்றிகள் சிவா அருமையான பகிர்வுக்கு....
மஞ்சுபாஷிணி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மஞ்சுபாஷிணி



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உலக அமைதிக்காக உலகம் சுற்றும் தமிழர்! 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Mar 06, 2011 12:41 am

அட இப்படியும் ஒரு மனிதர் அதுவும் தமிழர் என்னும் போது பெருமிதமாக உள்ளது..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Sun Mar 06, 2011 12:45 am

உலக அமைதிக்காக உலகம் சுற்றும் தமிழர்! 677196 உலக அமைதிக்காக உலகம் சுற்றும் தமிழர்! 677196



ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


உலக அமைதிக்காக உலகம் சுற்றும் தமிழர்! Aஉலக அமைதிக்காக உலகம் சுற்றும் தமிழர்! Sஉலக அமைதிக்காக உலகம் சுற்றும் தமிழர்! Hஉலக அமைதிக்காக உலகம் சுற்றும் தமிழர்! Rஉலக அமைதிக்காக உலகம் சுற்றும் தமிழர்! Aஉலக அமைதிக்காக உலகம் சுற்றும் தமிழர்! Fஉலக அமைதிக்காக உலகம் சுற்றும் தமிழர்! Blank
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக