புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முக்கண்ணியைத் தொழுவார்க்கு தீங்கில்லையே!  I_vote_lcapமுக்கண்ணியைத் தொழுவார்க்கு தீங்கில்லையே!  I_voting_barமுக்கண்ணியைத் தொழுவார்க்கு தீங்கில்லையே!  I_vote_rcap 
61 Posts - 47%
heezulia
முக்கண்ணியைத் தொழுவார்க்கு தீங்கில்லையே!  I_vote_lcapமுக்கண்ணியைத் தொழுவார்க்கு தீங்கில்லையே!  I_voting_barமுக்கண்ணியைத் தொழுவார்க்கு தீங்கில்லையே!  I_vote_rcap 
38 Posts - 29%
mohamed nizamudeen
முக்கண்ணியைத் தொழுவார்க்கு தீங்கில்லையே!  I_vote_lcapமுக்கண்ணியைத் தொழுவார்க்கு தீங்கில்லையே!  I_voting_barமுக்கண்ணியைத் தொழுவார்க்கு தீங்கில்லையே!  I_vote_rcap 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
முக்கண்ணியைத் தொழுவார்க்கு தீங்கில்லையே!  I_vote_lcapமுக்கண்ணியைத் தொழுவார்க்கு தீங்கில்லையே!  I_voting_barமுக்கண்ணியைத் தொழுவார்க்கு தீங்கில்லையே!  I_vote_rcap 
6 Posts - 5%
T.N.Balasubramanian
முக்கண்ணியைத் தொழுவார்க்கு தீங்கில்லையே!  I_vote_lcapமுக்கண்ணியைத் தொழுவார்க்கு தீங்கில்லையே!  I_voting_barமுக்கண்ணியைத் தொழுவார்க்கு தீங்கில்லையே!  I_vote_rcap 
5 Posts - 4%
prajai
முக்கண்ணியைத் தொழுவார்க்கு தீங்கில்லையே!  I_vote_lcapமுக்கண்ணியைத் தொழுவார்க்கு தீங்கில்லையே!  I_voting_barமுக்கண்ணியைத் தொழுவார்க்கு தீங்கில்லையே!  I_vote_rcap 
3 Posts - 2%
Raji@123
முக்கண்ணியைத் தொழுவார்க்கு தீங்கில்லையே!  I_vote_lcapமுக்கண்ணியைத் தொழுவார்க்கு தீங்கில்லையே!  I_voting_barமுக்கண்ணியைத் தொழுவார்க்கு தீங்கில்லையே!  I_vote_rcap 
3 Posts - 2%
kavithasankar
முக்கண்ணியைத் தொழுவார்க்கு தீங்கில்லையே!  I_vote_lcapமுக்கண்ணியைத் தொழுவார்க்கு தீங்கில்லையே!  I_voting_barமுக்கண்ணியைத் தொழுவார்க்கு தீங்கில்லையே!  I_vote_rcap 
2 Posts - 2%
Barushree
முக்கண்ணியைத் தொழுவார்க்கு தீங்கில்லையே!  I_vote_lcapமுக்கண்ணியைத் தொழுவார்க்கு தீங்கில்லையே!  I_voting_barமுக்கண்ணியைத் தொழுவார்க்கு தீங்கில்லையே!  I_vote_rcap 
2 Posts - 2%
Saravananj
முக்கண்ணியைத் தொழுவார்க்கு தீங்கில்லையே!  I_vote_lcapமுக்கண்ணியைத் தொழுவார்க்கு தீங்கில்லையே!  I_voting_barமுக்கண்ணியைத் தொழுவார்க்கு தீங்கில்லையே!  I_vote_rcap 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முக்கண்ணியைத் தொழுவார்க்கு தீங்கில்லையே!  I_vote_lcapமுக்கண்ணியைத் தொழுவார்க்கு தீங்கில்லையே!  I_voting_barமுக்கண்ணியைத் தொழுவார்க்கு தீங்கில்லையே!  I_vote_rcap 
176 Posts - 41%
heezulia
முக்கண்ணியைத் தொழுவார்க்கு தீங்கில்லையே!  I_vote_lcapமுக்கண்ணியைத் தொழுவார்க்கு தீங்கில்லையே!  I_voting_barமுக்கண்ணியைத் தொழுவார்க்கு தீங்கில்லையே!  I_vote_rcap 
174 Posts - 40%
mohamed nizamudeen
முக்கண்ணியைத் தொழுவார்க்கு தீங்கில்லையே!  I_vote_lcapமுக்கண்ணியைத் தொழுவார்க்கு தீங்கில்லையே!  I_voting_barமுக்கண்ணியைத் தொழுவார்க்கு தீங்கில்லையே!  I_vote_rcap 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
முக்கண்ணியைத் தொழுவார்க்கு தீங்கில்லையே!  I_vote_lcapமுக்கண்ணியைத் தொழுவார்க்கு தீங்கில்லையே!  I_voting_barமுக்கண்ணியைத் தொழுவார்க்கு தீங்கில்லையே!  I_vote_rcap 
21 Posts - 5%
prajai
முக்கண்ணியைத் தொழுவார்க்கு தீங்கில்லையே!  I_vote_lcapமுக்கண்ணியைத் தொழுவார்க்கு தீங்கில்லையே!  I_voting_barமுக்கண்ணியைத் தொழுவார்க்கு தீங்கில்லையே!  I_vote_rcap 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
முக்கண்ணியைத் தொழுவார்க்கு தீங்கில்லையே!  I_vote_lcapமுக்கண்ணியைத் தொழுவார்க்கு தீங்கில்லையே!  I_voting_barமுக்கண்ணியைத் தொழுவார்க்கு தீங்கில்லையே!  I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
முக்கண்ணியைத் தொழுவார்க்கு தீங்கில்லையே!  I_vote_lcapமுக்கண்ணியைத் தொழுவார்க்கு தீங்கில்லையே!  I_voting_barமுக்கண்ணியைத் தொழுவார்க்கு தீங்கில்லையே!  I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
முக்கண்ணியைத் தொழுவார்க்கு தீங்கில்லையே!  I_vote_lcapமுக்கண்ணியைத் தொழுவார்க்கு தீங்கில்லையே!  I_voting_barமுக்கண்ணியைத் தொழுவார்க்கு தீங்கில்லையே!  I_vote_rcap 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
முக்கண்ணியைத் தொழுவார்க்கு தீங்கில்லையே!  I_vote_lcapமுக்கண்ணியைத் தொழுவார்க்கு தீங்கில்லையே!  I_voting_barமுக்கண்ணியைத் தொழுவார்க்கு தீங்கில்லையே!  I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
முக்கண்ணியைத் தொழுவார்க்கு தீங்கில்லையே!  I_vote_lcapமுக்கண்ணியைத் தொழுவார்க்கு தீங்கில்லையே!  I_voting_barமுக்கண்ணியைத் தொழுவார்க்கு தீங்கில்லையே!  I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முக்கண்ணியைத் தொழுவார்க்கு தீங்கில்லையே!


   
   
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Mar 05, 2011 7:57 pm

முக்கண்ணியைத் தொழுவார்க்கு தீங்கில்லையே!

விக்ருதி வருடம், தை மாதம் 24-ஆம் தேதி, திங்கட் கிழமை... மிக அற்புதமான நாள்! சோமவார சுக்ல சதுர்த்தி, உத்திரட்டாதி நட்சத்திரம், சித்த யோகம் கூடிய அந்த சுப தினத்துக்கு, மேலும் ஒரு மேன்மை சேர்ந்தது!

இந்தத் திருநாளில்தான்... சிவாச்சார்யர்களின் மந்திர கோஷமும், வங்கக் கடலெனத் திரண்டிருந்த பக்தர்களின் சரணகோஷமும் விண்ணதிர ஒலிக்க, தனது திருக்கோயிலின் (நூதன ராஜகோபுர) மகா கும்பாபிஷேகத்தைச் சிறப்புற நிகழ்த்திக்கொண்டாள் அருள்மிகு காளிகாம்பாள்!

உலகையும் உயிர்களையும் ரட்சிக்கும் அம்பிகை அவள்; வாழ்வைப் புரிந்துகொள்ளும் ஞானத்தை அருள்ப வள். அதுமட்டுமா? காலத்தை நிர்ணயிக்கும்- அதைக் கட்டுப்படுத்தும் சக்தியும் அவளே! எனவே, காளி எனும் பெயர் கொண்டாள். இந்தப் பெயருடன் அவள் கோயில் கொண்டிருக்கும் தலங்களில், சென்னை- ஸ்ரீகாளிகாம்பாள் ஆலயமும் ஒன்று.

சென்னை- பாரிமுனையில், தம்புச்செட்டித் தெருவில் அமைந்திருக்கிறது ஆலயம். ஆதியில் இந்த அம்பிகை கொலுவிருந்தது, சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை அமைந்துள்ள பகுதியில். இங்கு வசித்த மீனவர்கள், தினமும் செந்தூரம் அர்ப்பணித்துத் தாங்கள் வழிபடும் இந்த அம்மனை, ('செம்மேனி அம்மன்’ எனும் பொருள் பட), சென்னம்மா என்று அழைத்தனராம். 'சென்னா’ எனும் மீன் வகை ஒன்று உண்டு. அந்த மீன்களைப் போன்று அழகிய கண்களைக் கொண்டவள் என்பதால், சென்னம்மா என்று பெயர் வந்தது எனவும் கூறுவர்.

நாளடைவில், ஆலயம் இருந்த பகுதி பிரிட்டிஷாரின் வசப்பட, அங்கே கோட்டை- கொத்தளங்கள் உருவாயின. கெடுபிடிகள் அதிகரிக்க, அம்பிகையை எளிதில் வழிபட இயலாத நிலை. பக்தர்கள் வருந்தினர். அவர்களது வருத்தத்தை, ஆலய பொறுப் பாளர்கள் பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் தெரிவித் தனர். ''ஆலயத்தைக் கோட்டைக்கு வெளியே மாற்றலாம்; அதற்கு வேண்டிய உதவிகளை நாங்கள் செய்கிறோம்'' என்றனர் அதிகாரிகள். அதன்படியே தற்போதுள்ள இடத்தில் ஆலயம் அமைந்தது; சென்னம்மனும், ஸ்ரீகாளிகாம்பாள் எனும் பெயர்கொண்டாள்.

அன்றுதொட்டு இன்று வரை, குறைவில்லாமல் தொடர் கிறது ஸ்ரீகாளிகாம்பாளின் கருணைக் கடாட்சம்.

1999-ஆம் வருடம். அந்த அடியவரை மருத்துவ மனையில் சேர்த்திருந்தனர். மருத்துவர்களால் முடிவு சொல்ல முடியாத நிலை. அவரது சுய நினைவு பாதியாகக் குறைந்து விட்டிருந்தது.

ஆனால், கண்மூடிக் கிடந்த அந்த அடியவரின் வலக் கரம் மட்டும் மெள்ள அசைந்தது. ம்ருகு முத்திரை போல... சுட்டு விரலையும் சுண்டு விரலையும் நீக்கி, மீதி மூன்றையும் சேர்த்து, குங்குமத்தை அள்ளி அம்பாளின் பாதத்தில் சமர்ப்பித்து, திரிசதி அர்ச்சனை பண்ணுவதுபோல ஒரு பாவனை தொடர்ந்தது அவரிடம்.

'அம்மா..! இதுவரை உன்னிடம் எதுவும் கேட்டதில்லை. இப்போது கேட்கிறேன்... இன்னும் சில காலம் வாழ வரம் கொடு! உன் கோயிலுக்குக் கும்பாபிஷேகம் நடக்கட்டும். அதைக் கண்குளிர தரிசித்துவிடுகிறேன். அதன் பிறகு, நீ எப்போது அழைத்தாலும், உன் திருவடியைத் தேடி ஓடி வந்துவிடுவேன்!’ என்று, அன்னையிடம் வேண்டிக் கொண்டாரோ?!

ஸ்ரீசக்ர மந்திராதிபதியாக, கலைமகளையும் அலைமகளையுமே தனது இரண்டு கண்களாகக் கொண்டு திகழும் அம்பிகை அல்லவா காளிகாம்பாள்! எனில், அவள் குடியிருக்கும் கோயிலில் எவ்வளவு சாந்நித்தியம் நிறைந்திருக்கும்! அந்தத் திருவருள், இன்னும் பன்மடங்கு பெருகி, இந்த ஊருக்கும் உலகுக்கும் பயன்பட வேண்டுமல்லவா? அதற்கு, குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை கோயிலில் கும்பாபிஷேகம் நிகழ வேண்டுமே!

83-வது வருஷம்... கிழக்குக் கோபுர திருப்பணிகளுடன் கும்பாபி ஷேகம் நடந்தது. வருடங்கள் ஓடிவிட்டன. அடுத்து ஒரு கும்பாபிஷேகம் நிகழ வேண்டாமா? அனுதினமும் அவர் அம்பாளை வேண்டிக் கொண்டது இதற்காகத் தானே? அப்படியிருக்க... கும்பாபிஷேகத்தைக் காணாமல் போக மனம் வருமா?



அடிக்கடி அவர் திரிசதி அர்ச்சனை செய்து அம்பாளை வழிபடுவது உண்டு. சந்தோஷமான தருணங்களில் நன்றியைத் தெரிவிக்க, தன்னிடம் துயரங்களைப் பகிர்ந்துகொள்ளும் பக்தர்களின் பிரச்னை தீர... என அம்பாளுக்கு திரிசதி அர்ச்சனை செய்து வழிபடுவார்.

இப்போதும், 'எனது பிரார்த்தனையை நிறைவேற்று தாயே’ என்று மானசீகமாக திரிசதி அர்ச்சனை செய்கிறாரோ?! அவருடைய வலக் கரத்தின் அர்ச்சனை பாவனை தொடர்ந்தது.

மெள்ள மெள்ள, அவர் உடல்நிலையில் முன்னேற்றம். பத்துப் பன்னிரண்டு நாட்களில் பூரணமாய் குணம்பெற்று எழுந்துவிட்டார். ஆமாம், அம்பிகை அவரது வேண்டுதலை நிறைவேற்றி விட்டாள் என்றே சொல்ல வேண்டும்.

பிறகென்ன... அவர் ஆசைப்பட்டது போலவே, கும்பாபிஷேகப் பணிகளை உற்சாகமாகத் தொடர்ந்தார். நாட்கள் நகர்ந்தன. 2001-ஆம் ஆண்டு மகாகும்பாபிஷேகம் நடைபெற, அதற்கும் பிறகு வெகு நாட்கள் கழித்தே அன்னையின் திருவடியைச் சேர்ந்தார் அந்த அடியவர்.

ஸ்ரீகாளிகாம்பாளின் கருணைக்குப் பாத்திரமான அந்த அடியவர் வேறு யாருமல்ல; பல்லாண்டு காலம் ஸ்ரீகாளிகாம்பாளுக்குப் பணிவிடை செய்து அருள்பெற்ற சாம்பமூர்த்தி சிவாச்சார்யர்தான்.

மேற்கு நோக்கி அமைந்திருக்கிறது ஆலயம். உள்ளே 16 கால் மண்டபத்துடன் கூடிய கருவறை யில்... கலைமகளும் அலைமகளும் சாமரம் வீச, மேலிரு கரங்களில் பாச- அங்குசம் திகழ, வலது கீழ்க் கரத்தில் நீலோத்பல மலர் கொண்டு, இடது கீழ்க் கரத்தால் வரத முத்திரை காட்டி, பத்மாசனக் கோலத்தில் அருளாட்சி செய்கிறாள் அம்பிகை. அவள் திருமுன் ஸ்ரீசக்ரமேரு!

பக்தர்கள், சந்நிதி மண்டபத்தில் அமர்ந்து அம்பாளைத் தரிசிக்கலாம்! பக்தர்களுக்கு, செவ்வாய்க்கிழமைகளில் மாலை வேளையில், பூஜிக்கப்பட்ட 'ரட்சை’ தருகின்றனர். உடல்நலம் குன்றியோர், மகப்பேறு வேண்டுவோர், உத்தியோகம் கிடைக்க விரும்புவோர் பயபக்தியுடன் வாங்கிச் செல்கிறார்கள். இந்த ஆலயத்தில் வழங்கப்படும் அபிஷேக மஞ்சள் பிரசாதமும் விசேஷம்! ஸ்ரீகாளிகாம்பாளின் இந்த மங்கலப் பிரசாதம், குழந்தை வரம் தரும் வல்லமை கொண்டது.

இந்தக் கோயிலில் அருளும் ஸ்ரீஸித்திகணபதி, பிரம்ம சாஸ்தா அம்சத்துடன் திகழும் ஸ்ரீவட கதிர்காம முருகன், ஸ்ரீகமடேஸ்வரர், ஸ்ரீவீரபத்திரர், ஸ்ரீபிரத்தியங்கரா தேவி, ஸ்ரீவிஸ்வபரபிரம்மம் (விஸ்வ கர்மா) ஆகிய தெய்வங்களும் வரப்ரசாதியர்!

விஸ்வகர்ம சமூகத்தைச் சார்ந்த- தேர்ந்தெடுக் கப்பட்ட அறங்காவலர் குழுவால் நிர்வகிக்கப்படும் இந்த ஆலயத்தில், நவராத்திரி, வசந்த நவராத்திரி, ஆடிப்பெருவிழா, வைகாசி பிரம்மோற்ஸவம் போன்ற விழாக்கள் சிறப்புற நடைபெறுகின்றன. பிரம்மோற்ஸவத்தின் 9-ஆம் நாள்... கிண்ணித் தேரில் அம்மன் பவனி வரும் அழகே அழகு!

கோயிலில் மேற்கு கோபுரம் அமைக்கும் முயற்சி யாக, 2004-ல் பூமி பூஜையுடன், திருப்பணிகள் ஆரம்பமாயின. 2008-ல் கடைக்கால் பூஜையுடன் கட்டட வேலைகள் துவங்கின. இந்து சமய அற நிலையத் துறையின் ஆதரவுடனும், ஆலய அறங் காவலர் குழு, சிவாசார்யர்அறக்கட்டளையின் தீவிர முயற்சியிலும், ஆன்மிக அன்பர்களது உதவியு டனும் திருப்பணிகள் நிறைவடைந்து, அன்னதானக் கூடம், பிராகாரத்தில் பளிங்கு கல் பதித்தல் போன்ற வேலைகள் பூர்த்தியாகி, கடந்த பிப்ரவரி 7-ஆம் நாள் சிறப்பாக நடந்தது கும்பாபிஷேகம்.

கும்பாபிஷேகம் நிகழ்ந்து, ஒரு மண்டலகாலம் அந்தக் கோயிலைத் தரிசிப்பது விசேஷம். நீங்களும் அன்னையின் ஆலயத்துக்குச் சென்று தரிசியுங்கள். உங்களது துயரங்களை நீக்கி, அருளும் பொருளும் அள்ளித்தர கற்பக விருட்சமாய் காத்திருக்கிறாள் ஸ்ரீகாளிகாம்பாள்.

நன்றி விகடன்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

முக்கண்ணியைத் தொழுவார்க்கு தீங்கில்லையே!  47

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக