ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏகாந்த நிஜங்கள்... !!

5 posters

Go down

ஏகாந்த நிஜங்கள்... !! Empty ஏகாந்த நிஜங்கள்... !!

Post by நியாஸ் அஷ்ரஃப் Wed Mar 02, 2011 4:03 pm

தினமும்
சப்தம் உறங்கிப்போன
நிசப்தங்களில்
விழித்துக்கொள்ளும் என்
நினைவுகள்
கசியும் இந்த
நிஜங்கள்
ஏதோ செய்யும்
என்னை
ஏகாந்த வேளையில்

ஜாதி மத
தேசமென்னும்
எத்தனைக் கோடுகள்
என்னைச் சுற்றி
இத்தனைக் கூர்களின்
மத்தியில்
பிரித்து வைக்கப்பட்டவன்தான்
பிறந்தபோதிலிருந்தே

இங்கே
சமத்துவம் என்பது
கோடுகளின்
எல்லைக்குள் நின்று
கைகுலுக்கிக்கொள்வதாயிற்று

பிரிவினை
பல கோடுகளைக் கடந்து
சுருங்கி சுருங்கி
முடிவில்
வந்து முடிவைகிறது
நான் என்னும்
ஒரு சிறிய எல்லையில்

எப்படி முடிகிறது
நமக்கு மட்டும்
பார்க்கும்
அத்தனையிலும்
இப்படி
நல்லது தீயது காண

பலவந்தப்படுத்துபவன் பாவி
இரவில்
மனைவியின் இயலாமை
அறியாமல்
தன் பசிதீர்த்துக்கொள்ளும்
குடிகாரப் புருஷன்
ஆண்மகன்

ஆம்
சரியும் தவறும்
என்பதெல்லாம்
சமூக
அங்கீகரிப்புகளில்
அடைபட்டிருக்கிறது
அதனால்தான்
எதையும்
எடைபோடக்
கற்றுக்கொள்கிறார்கள்
பிரித்துவைத்து

அடிமைத்தனத்தின்
ஆழத்தில் இருக்கிறோம்
என்பதை
சற்றும் அறியாமல்
ஆணாதிக்கத்தை
ஆனந்தமாய்
அனுபவிக்கப்பழகிவிட்டு
இன்றும்
பல வீடுகளில்
பெண்கள்

மதிப்பெண்ணில்தான்
எதிர்காலமென்னும்
அறிவு முடமாக்கப்பட்ட
கல்வியமைப்பில்
எது கல்வியென்று
காரணமே அறியாமல்
வெறும்
மனப்பாட எந்திரங்களாய்
பொதி சுமக்கும்
எத்தனை குழந்தைகள்

கலாச்சாரம்
கற்றுக்கொடுக்கப்படுவது
பழக்க வழக்கங்களில் இல்லை
மாறாய்
மனிதம் மறைக்கும்
மதங்களென்னும்
மாசுக்களில் தான்..

கலாச்சாரமே
தவறாய்
கற்பிக்கப்படும்போது
கலாச்சார சீர்கேடுகளைப்
பற்றிப் பேச
நாம் யார்

என் தேசத்தின்
வெற்றியெனில்
நான்
கைதட்டத்தான்
வேண்டியிருக்கிறது
கூட்டத்தோடு சேர்ந்து
அங்கே எவனோ
ஒரு தேசத்துக்காரன்
தோற்றிருக்கிறான் என்பது
உரைப்பதே இல்லை எனக்கு

நாடகத்தனமான வாழ்க்கையில்
நம்மைத் தொலைத்துவிட்டு
எதார்த்தங்களைத்
தேடுவது
சாத்தியமில்லை
மூட நம்பிக்கைகளில்
மூழ்கிக்கொண்டு
நாட்டாமை செய்வது
நியாயமே இல்லை

இது என் தேசம்
இதுவே என் மதம்
என
மந்தை மந்தையாய்
என் அடையாளம்
காண்பிக்கப்படும்வரை
நிச்சயமாய்
என் சுயமே
கண்டறிய இயலாது
நான் என்னும் என்னை.. !
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

ஏகாந்த நிஜங்கள்... !! Empty Re: ஏகாந்த நிஜங்கள்... !!

Post by செய்தாலி Wed Mar 02, 2011 4:21 pm

என்ன ஒரு வார்த்தை பிரயோகம் மிக அருமையான வரிக்கோர்வைகள்
பொட்டி தெறித்து சிதறும் மனிதர்களின் எதார்த்தங்கள் அருமை அருமை

பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் தோழரே


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

ஏகாந்த நிஜங்கள்... !! Empty Re: ஏகாந்த நிஜங்கள்... !!

Post by நியாஸ் அஷ்ரஃப் Wed Mar 02, 2011 4:39 pm

syedali wrote:என்ன ஒரு வார்த்தை பிரயோகம் மிக அருமையான வரிக்கோர்வைகள்
பொட்டி தெறித்து சிதறும் மனிதர்களின் எதார்த்தங்கள் அருமை அருமை

பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் தோழரே

உங்கள் வாழ்த்து மழையில் நனைகிறேன்.. மிக்க நன்றி நண்பரே..
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

ஏகாந்த நிஜங்கள்... !! Empty Re: ஏகாந்த நிஜங்கள்... !!

Post by கலைவேந்தன் Wed Mar 02, 2011 8:41 pm

அழகான கவிதை அருமையான வார்த்தைப் பிரயோகம்... வாழ்த்துகள் நியாஷ்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஏகாந்த நிஜங்கள்... !! Empty Re: ஏகாந்த நிஜங்கள்... !!

Post by மஞ்சுபாஷிணி Wed Mar 02, 2011 10:10 pm

நிதர்சனங்களின் சப்தங்கள் இங்கே உயிர் தாங்கிய வரிகளாக மனம் தாக்கும் கவிதையாக சுயம் இழந்து நாம் வெறும் மந்தையாக இருப்பதை சாடும் வரிகள் மிக மிக அருமை நியாஸ்..... அன்பு வாழ்த்துக்கள்....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஏகாந்த நிஜங்கள்... !! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஏகாந்த நிஜங்கள்... !! Empty Re: ஏகாந்த நிஜங்கள்... !!

Post by இளமாறன் Thu Mar 03, 2011 1:25 am

சீரிய உணர்ச்சிகள் கொந்தளித்து கவிதையாய் மிக அழகாய் ஆழமாய் வாழ்த்துக்கள் ஏகாந்த நிஜங்கள்... !! 677196 ஏகாந்த நிஜங்கள்... !! 677196 ஏகாந்த நிஜங்கள்... !! 677196

ஆண்மையின் கீழ் பெண்மை கல்வி கலாசாரம் தகுதி என்ன எதனை பொலிவுடன் அழகான கவிதை ஏகாந்த நிஜங்கள்... !! 154550


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஏகாந்த நிஜங்கள்... !! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஏகாந்த நிஜங்கள்... !! Empty Re: ஏகாந்த நிஜங்கள்... !!

Post by நியாஸ் அஷ்ரஃப் Thu Mar 03, 2011 2:18 pm

கலை wrote:அழகான கவிதை அருமையான வார்த்தைப் பிரயோகம்... வாழ்த்துகள் நியாஷ்..!

நன்றி கலை அண்ணா..
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

ஏகாந்த நிஜங்கள்... !! Empty Re: ஏகாந்த நிஜங்கள்... !!

Post by நியாஸ் அஷ்ரஃப் Thu Mar 03, 2011 2:20 pm

மஞ்சுபாஷிணி wrote:நிதர்சனங்களின் சப்தங்கள் இங்கே உயிர் தாங்கிய வரிகளாக மனம் தாக்கும் கவிதையாக சுயம் இழந்து நாம் வெறும் மந்தையாக இருப்பதை சாடும் வரிகள் மிக மிக அருமை நியாஸ்..... அன்பு வாழ்த்துக்கள்....

மந்தையாக இருப்பதன் வெறுமையில் தான் இந்த வரிகள் அக்கா.. உங்கள் வாழ்துக்களுக்கு நன்றி..
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

ஏகாந்த நிஜங்கள்... !! Empty Re: ஏகாந்த நிஜங்கள்... !!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum