புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சும்மா ஒரு ஆராய்ச்சி Poll_c10சும்மா ஒரு ஆராய்ச்சி Poll_m10சும்மா ஒரு ஆராய்ச்சி Poll_c10 
52 Posts - 47%
ayyasamy ram
சும்மா ஒரு ஆராய்ச்சி Poll_c10சும்மா ஒரு ஆராய்ச்சி Poll_m10சும்மா ஒரு ஆராய்ச்சி Poll_c10 
48 Posts - 43%
mohamed nizamudeen
சும்மா ஒரு ஆராய்ச்சி Poll_c10சும்மா ஒரு ஆராய்ச்சி Poll_m10சும்மா ஒரு ஆராய்ச்சி Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
சும்மா ஒரு ஆராய்ச்சி Poll_c10சும்மா ஒரு ஆராய்ச்சி Poll_m10சும்மா ஒரு ஆராய்ச்சி Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
சும்மா ஒரு ஆராய்ச்சி Poll_c10சும்மா ஒரு ஆராய்ச்சி Poll_m10சும்மா ஒரு ஆராய்ச்சி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சும்மா ஒரு ஆராய்ச்சி Poll_c10சும்மா ஒரு ஆராய்ச்சி Poll_m10சும்மா ஒரு ஆராய்ச்சி Poll_c10 
52 Posts - 47%
ayyasamy ram
சும்மா ஒரு ஆராய்ச்சி Poll_c10சும்மா ஒரு ஆராய்ச்சி Poll_m10சும்மா ஒரு ஆராய்ச்சி Poll_c10 
48 Posts - 43%
mohamed nizamudeen
சும்மா ஒரு ஆராய்ச்சி Poll_c10சும்மா ஒரு ஆராய்ச்சி Poll_m10சும்மா ஒரு ஆராய்ச்சி Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
சும்மா ஒரு ஆராய்ச்சி Poll_c10சும்மா ஒரு ஆராய்ச்சி Poll_m10சும்மா ஒரு ஆராய்ச்சி Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
சும்மா ஒரு ஆராய்ச்சி Poll_c10சும்மா ஒரு ஆராய்ச்சி Poll_m10சும்மா ஒரு ஆராய்ச்சி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சும்மா ஒரு ஆராய்ச்சி


   
   

Page 1 of 2 1, 2  Next

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Mar 02, 2011 1:59 pm

நாம் வாழ்க்கையில் அடிக்கடி, பயன்படுத்தும் ஒரு சொல் ‘சும்மா’ என்பதாகும். இது பற்றி ஒரு சிறு விளக்கம்!

‘’ சும்மா இருப்பதே சுகம்!’’ இச்சொல் ‘திருமந்திரம்’ என்ற நூலில், திருமூலரால் எடுத்தாளப்படுகிறது. ‘சும்மா’ என்பதற்கு ‘அமைதியாய் இருப்பதே சுகம்’’ என்று பொருள். ஞானிகள், முனிவர்கள்,தவசிகள் தங்கள் வாழ்வைத் துறந்து அமைதியாய் ஓரிடத்தில் தவம் செய்வதையே இச்சொல் குறிப்பதாக அமைந்தது.

வீட்டில் வேலை எதுவும் செய்யாமல் இருக்கும் குழந்தையிடம், அம்மா, ‘’சும்மா நிற்காதே; எனக்கு உதவிசெய்!’’ என்பாள். இதில் வரும் ‘சும்மா’ என்ற சொல்லுக்கு ‘’வேலை ஒன்றும் செய்யாமல், நிற்காதே’’ என்று பொருள்.

சில இடங்களில் நல்ல மாமரமோ, தென்னைமரமோ வளர்ந்திருப்பதைக் காணலாம். அப்பொழுது ஒருவர் ‘’ யாரும் தண்ணீர் ஊற்றாமல் இம்மரம் சும்மா வளர்ந்திருக்கிறதே!’’ என்று கூறுவார். இவ்விடத்தில் ‘சும்மா’ என்பதற்கு, எவ்வித உதவியும் இன்றித் தன்னந்தானே இயற்கையாக வளர்கிறது’’ என்று பொருள்.

‘’என் அன்னையின் நினைவு ‘சும்மா சும்மா’ வந்து என்னை வாட்டியது’ என்கிறார் ஒருவர். இதில் வரும் ‘சும்மா சும்மா’ என்பதற்கு ‘அடிக்கடி’ என்று பொருள்.

‘’சும்மா கிடந்த நிலத்தைக் கொத்தி’’ என்ற பாடல். கவிஞர் பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம் எழுதியதாகும். இதில் வரும் ‘சும்மா’ என்பதற்குத் ‘தரிசாக விளைச்சல்’ இல்லாமல் என்று பொருள்.

‘’ புவியரசன் சோற்றைச் சும்மா சாப்பிட்டான்’’. சோறு உண்ணும் பொழுது நமக்கு வேண்டிய காய்கறிகள். கறிவகைகளை வைத்துக் கொண்டு உண்போம். இவனுக்கு மிகுந்த பசியாக இருந்ததனால் மற்ற கறிகளைச் சேர்த்துக் கொள்ளாமல் வெறுஞ்சோற்றை மட்டும் உண்டான். ஆதலால் இங்கு வரும் ‘சும்மா’ என்ற சொல் வெறும் சோற்றை மட்டும் உண்டான் ன்பதைக் குறித்து நின்றது.

வீட்டில் சிறு பிள்ளைகள் குளித்து விட்டு, ஆடையின்றிக் காட்சியளிப்பார்கள். அதை நாம், குழந்தை ‘சும்மா நிற்கிறது’ என்று சொல்வோம். இங்குக் குறிக்கப்படும் ‘சும்மா’ என்பதற்கு ஆடையணி எதுவுமில்லாமல் நிர்வாணமாக நிற்கிறது என்பதே பொருளாகும்.

‘’ நான் உன்னைக் கொன்று விடுவேன்’’ என முல்லையிடம் ‘சும்மா’ சொன்னதை அவள் தவறாக நினைத்து விட்டாள்!’’ இதில் வரும் ‘சும்மா’ என்பதற்கு ‘’ விளையாட்டாக ஒரு பேச்சுக்குச் சொன்னதை’’ என்று பொருள் கொள்ள வேண்டும்.

சிலர், விலையுயர்ந்த ஆடைகளையும், அழகான ஆடைகளையும் அணிவது அணிவது இயற்கை. அப்படி அணியும் ஒருவனைப் பார்த்து ‘’உன் ஆடை அழகாக இருக்கிறதே! எப்போது தைத்தாய்?’’ என்று கேட்டால் ‘’சும்மா இருக்கும் போது’’ என்று விடை வரும். இங்கே ‘’சும்மா என்பதற்கு ஓய்வாக இருக்கும் போது’’ என்று பொருளாகும்.

அன்பரசன், ‘’தன் குடும்பத்தைச் சீரழித்தவரைச் சும்மா விடப் போவதில்லை’’ என்று கூறினான் இதில் வரும் ‘’சும்மா விடப்போவதில்லை’’ என்பதற்குப் “பழிவாங்காமல் விடுவதில்லை’’ என்பதே பொருளாகும்.

சிங்கப்பூரில் அனைத்து வீடுகளிலும் தொலைபேசி உள்ளது. சிலர் எப்பொழுதும் தொலைபேசியைப் பயன்படுத்திக் கொண்டே இருப்பர். இதனால் வெளியிலிருந்து வரும் செய்திகள் தடைப்படும். இதனால் அன்னை ஆத்திரமுற்று இவ்வாறு கூறுவார்: ‘’சும்மா வெட்டிப் பேச்சுப் பேசியது போதும் தொலைபேசியைக் கீழேவை. ‘’இதில் வரும் ‘சும்மா’ என்பதற்கு ‘அனாவசியமாக’ என்று பொருள்.

நம் வீட்டிற்கு விருந்தினராக வருபவர்கள் வெட்கப்பட்டுக் கொண்டு அருந்துவார்கள், அப்போது நாம், சும்மா அருந்துங்கள் இது நம்ம வீடு மாதிரி’’ என்று சொல்வோம், இங்கு வரும் ‘சும்மா’ என்பதற்கு ‘வெட்கப்படாமல் உண்ணுங்கள்’ என்று பொருளாகும்.

---- டாக்டர் மா.தியாகராசன்



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Mar 02, 2011 2:10 pm

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா.எங்கதான் ரூம் போட்டு யோசிப்பாங்களா



சும்மா ஒரு ஆராய்ச்சி Uசும்மா ஒரு ஆராய்ச்சி Dசும்மா ஒரு ஆராய்ச்சி Aசும்மா ஒரு ஆராய்ச்சி Yசும்மா ஒரு ஆராய்ச்சி Aசும்மா ஒரு ஆராய்ச்சி Sசும்மா ஒரு ஆராய்ச்சி Uசும்மா ஒரு ஆராய்ச்சி Dசும்மா ஒரு ஆராய்ச்சி Hசும்மா ஒரு ஆராய்ச்சி A
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Mar 02, 2011 2:18 pm

நீங்க சும்மா இத மாதிரி பதிவிட்டா
நான் சும்மா சும்மா வந்து இத மாதிரி பதில் தருவேன்.
ஏன்னு நீங்க சும்மா என்ன கேட்டிங்கன்னா. நான் வேலையில்லாம
சும்மாத்தான் இருக்கேன்னு சொல்வேன்.
நான் இப்ப சொன்னது எல்லாம் சும்மா,
இதுக்காக என்ன சும்மா நீங்க கோபிச்சுக்காமாட்டிங்கன்னு எனக்கு தெரியும்.
உங்க பதிவு சும்மா சூப்பரா இருக்குங்க.

JUJU
JUJU
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 27/02/2011

PostJUJU Wed Mar 02, 2011 2:27 pm

சும்மா ஒரு நன்றி

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Mar 02, 2011 2:32 pm

சும்மா விடுங்க பாஸ்



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Mar 02, 2011 5:33 pm

சும்மா தூள் கிளப்புதுல்ல.... ! மகிழ்ச்சி மகிழ்ச்சி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Mar 02, 2011 5:50 pm

சும்மா ஒரு ஆராய்ச்சி 755837 சும்மா ஒரு ஆராய்ச்சி 755837 அருமை சும்மா ஒரு ஆராய்ச்சி 755837




சும்மா ஒரு ஆராய்ச்சி Power-Star-Srinivasan
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Mar 02, 2011 9:59 pm

சும்மா என்பதற்குள் எத்தனை அர்த்தம் பொதிந்திருக்கிறதே...

அங்கே சும்மா நிக்காதே
படிக்காமல் சும்மா வேடிக்கை பார்க்காதே

அருமையான பகிர்வு சுதானந்தா... அன்பு நன்றிகள்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சும்மா ஒரு ஆராய்ச்சி 47
RAJESH KANNAN.R
RAJESH KANNAN.R
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 33
இணைந்தது : 14/02/2011

PostRAJESH KANNAN.R Wed Mar 02, 2011 10:24 pm

ஓடும் மனதை நிறுத்தினால் திருமூலரின் "சும்மா" விற்கு அர்த்தம் விளங்கும் .
ஒரு மனம் இங்கேயே சும்மா இருக்கின்றது. இன்னொரு மனமோ எங்கேயோ அலைந்து கொண்டிருக்கின்றது. அந்த அலையும் மனத்தை சும்மா நிறுத்தினால் அவனே சித்தன்.
அடியேன் கருத்து தவறு எனில் மனதில் இருந்த்து அகற்றி விடவும்.
என்றும் அன்புடன்
ஆர்.கண்ணன்
சென்னை.


dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Mar 03, 2011 8:28 am

சும்மா ரிப்ளை அளித்த அனைவர்க்கும் நன்றி



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக