Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
உருத்திராட்சம் - முகமும் பலனும்
+6
bala23
மஞ்சுபாஷிணி
அமுத வர்ஷிணி
உதயசுதா
சிவா
பிளேடு பக்கிரி
10 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
உருத்திராட்சம் - முகமும் பலனும்
First topic message reminder :
![உருத்திராட்சம் - முகமும் பலனும் - Page 2 Ganesha](https://2img.net/h/www.rudraksha.co.in/images/Rudra_big/Ganesha.jpg)
38 வகையான உருத்திராக்கத்தில், 21 வகை மிக பிரசித்தம். முகத்தைப் பொறுத்தே
ஒரு முகம், இரு முகம் என்று வரிசைப் படுத்தப்படுகிறது. ஒவ்வொரு
முகத்திற்கும் ஒவ்வொரு பலன் உண்டு.
ஒரு முகம்.
மந்திரம் - ஓம் நமச்சிவாய, ஓம் ஹரீம் நமஹ
ஒரு முகமுடைய உருத்திராக்கம் சூரியனால் ஆளப்படுகிறது. இந்த உருத்திராக்கம்
ஏனைய எல்லா முகங்களையுடைய உருத்திராக்கங்களுக்கும் அரசனாகையால்,இது தூய
உணர்வைக் (Pure consciousness) குறிக்கிறது. அணிபவருக்குப் போகமும்
மோட்சமும் கிட்டும். இவர் ராஜா ஜனகர் போன்று வாழ்வர். இவர் வேண்டும் போது
எல்லா சுகங்களையும் அனுபவிப்பர். எனினும் பற்றற்றவராய் இருப்பர்.
ஒரு முகத்து உருத்திராக்கம், நோய்களைச் சரியாகக் கண்டறிவதற்கும், அறுவை
சிகிச்சையில் வெற்றி பெறுவதற்கும் உதவுவதால் மருத்துவர்களுக்கு இது மிகவும்
உகந்ததாகும்.
இரண்டு முகம்.
மந்திரம் - ஸ்ரீ கௌரி சங்கராய நமஹ, ஓம் நமஹ
இரு முகமுடைய உருத்திராக்கத்தை ஆளும் கோள் சந்திரன். இது பகவான் சிவனும், தேவி
பார்வதியும் (சக்தி) இணைந்த உருவமான அர்த்த நாரீஸ்வரரைக் குறிக்கிறது.
(மாதொரு பாகன்) இந்த உருத்திராக்கம் அணிவோருக்கு 'ஒற்றுமை' (unity) உணர்வை
அளிக்கும். இந்த ஒற்றுமை குரு-சிஷ்யன், பெற்றோர்-குழந்தைகள், கணவன்-மனைவி,
நண்பர்களிடையே உள்ள தொடர்பைக் குறிக்கலாம். ஒருமைத் தன்மையை நிலை பெறச்
செய்வது இதன் தனித்தன்மையாகும்.
மூன்று முகம்.
மந்திரம் - ஓம் கிளீம் நமஹ
இந்த மும்முகமுள்ள உருத்திராக்கதை ஆளும் கோள் செவ்வாய்.இது தீக்கடவுளை
குறிக்கிறது. எல்லாப் பொருட்களையும் உண்ட பின்னரும் தீ தூய்மையாக இருப்பது
போல் மூன்று முகமுள்ள உருத்திராக்கத்தை அணியவரும் அருள் கிட்டிய போது, தனது
வாழ்க்கையில் பாவங்களில், தவறுகளிலிருந்து விடுபட்டுத் தூய நிலையை
அடைகின்றார். இந்த மூன்று முக உருத்திரக்கம் தாழ்வு மனப்பான்மை
(Inferiority Complex) உள்ளார்ந்த பயம் (Subjective fear) குற்ற உணர்வு
(Guilt) மனச்சோர்வு போன்றவற்றால் துன்பப்படுபவர்களுக்கும் உகந்ததாகும்.
நான்கு முகம்
மந்திரம - ஓம் ஹரீம் நமஹ
இந்த நான்கு முகமுள்ள உருத்திராக்கத்தை ஆளும் கோள் புதன். இது பிரம்மனைக்
குறிக்கிறது. அணிவோருக்கு அருள் கிடைத்த போது ஆக்க சக்தி கிட்டுகிறது.
மாணவர்கள், அறிவியலாளர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோருக்கு
நற்பயன் அளிக்க வல்லது. ஞாபகசக்தி, கூர்ந்த மதி புத்தி சாதுர்யம் ஆகியவற்றை
மேம்படுத்துகிறது. நான்முக உருத்திராக்கங்கள் மூன்றினை வலது கையில்
கட்டினால் அவர் முன் யாரும் எதிர்த்து நிற்க முடியாது.
ஐந்து முகம்.
மந்திரம் - ஓம் ஹரீம் நமஹ
ஐந்து முகங்களுடைய உருத்திராக்கத்தின் ஆளும் கோள் வியாழன். இது மங்களகரத்தின்
குறியீடான சிவனை குறிக்கும். இந்த ஐந்து முகமுடைய உருத்திராக்க மாலை
அணிதோருக்கு உடல் நலம், அமைதி ஆகியன கிட்டும். இது ஒருவரின் இரத்த
அழுத்தம், இதய நோய்கள் ஆகியவற்றைக் கண்காணிக்கிறது. இந்த உருத்திராக்க
மாலையை ஜபம் செய்வதற்கும் பயன்படுத்துவர். இந்த மாலையை அணிவோருடைய மனம் அமைதியாக இருக்கும். அத்துடன் இதை அணிபவர்களுக்கு அகால மரணம் ஏற்படாது
என்பதில் சந்தேகம் ஏதுவுமில்லை.
ஆறு முகம்
மந்திரம் -ஸ்வாமி கார்த்திகேயாய நமஹ
இந்த ஆறு முக உருத்திராக்கத்தை ஆளும் கோள் வெள்ளி. இந்த உருத்திராக்கம் சிவனின்
இரண்டாவது மகனான கார்த்திகேயக் கடவுளைக் குறிக்கும். இதை அணிந்து
வேண்டியோருக்கு அறிவு, மேம்படுத்தப்பட்ட புத்தி, மனத்திட்பம், திடமான மனம்
ஆகியவை அருளப்படும். இந்த ஆறு முக உருத்திராக்கம், மேலாளர்கள், வணிகர்கள்,
நிர்வாகிகள், பத்திரிகையாளர்கள், ஆகியோருக்கு உகந்தது. இது ஒருவரின்
பிறப்புறுப்புகளை ஆள்கிறது.
ஏழு முகம்
மந்திரம் - ஓம் மஹா லட்சிம்யை நமஹ ஓஅம் ஹீம் நமக
இந்த ஏழு முக உருத்திராக்கத்தை ஆளும் கோள் சனி. இது தேவி திருமகளைக்
குறிக்கும். இதை அணிவோருக்கு நல்ல உடல் நலம் அருள் பாலிக்கப்படும். உடல்
தொடர்பான துன்பங்கள், நிதித் தொல்லைகள், மனத் துன்பங்கள் ஆகியவற்றால்
வருத்த முற்றிருப்போர் இந்த உருத்திராக்கத்தை அணிதல் வேண்டும். இந்த ஏழு
முக உருத்திராக்கத்தை ஒருவர் அணிவதால் அவருக்கு வணிகம், பணி ஆகியவற்றில்
முன்னேற்றம் ஏற்படுத்துவதுடன் அவர் மகிழ்வாகக் கழிக்க முடிகிறது.
எட்டு முகம்
மந்திரம் - ஒம் ஹீம் நமஹ, ஓம் கணேஷாய நமஹ
இந்த எட்டு முகமுடைய உருத்திராக்கத்தின் ஆளும் கோள் இராகு. இது பகவான் கணேசரைக்
குறிக்கிறது. இது முயற்சிகளிலும் தடைகளை நீக்கி வெற்றியைத் தருகிறது.
அணிவோருக்கு ரித்திகள் (Riddhis), சித்திகள் (Siddhies) ஆகிய எல்லாப்
பேறுகளையும் அளிக்கும். இதை அணிவோரின் எதிரிகள் அழிந்து போவார்கள். அதாவது
இவர்கள் எதிரிகளின் மனத்தையும், நோக்கங்களையும் இந்த உருத்திராக்கம் மாற்றி
விடும்.
ஒன்பது முகம்
மந்திரம் - நவ துர்க்காயை நமஹ, ஓம் ஹரீம் ஹும் நமஹ
இந்த ஒன்பது முக உருத்திராக்கத்தை ஆளும் கோள் கேது. இது தேவி துர்க்கையைக்
(சக்தி) குறிக்கிறது. இதை அணிந்து வணங்குபவர்களுக்கு அன்னைக் கடவுள்
வெற்றிகரமான வாழ்க்கையை வாழ்வதற்கு அதிக சக்தி, ஆற்றல், செயல் திறம்,
அச்சமின்மை ஆகியவற்றை அளிப்பாள்.
பத்து முகம்
மந்திரம் - ஸ்ரீ நாராணாய நமஹ, ஸ்ரீ வைஷ்ணவை நமஹ, ஓம் ஹ்ரீம் நமஹ
இந்த பத்து முகமுள்ள உருத்திராக்கத்திற்கு ஆளும் கோள் என்று ஒன்றுமில்லை.
கோள்களினால் ஏற்படும் தீய பலன்களையும் இது சாந்தப்படுத்தும். பத்துத்
திசைகளினதும், பத்து அவதாரங்களிலும் செல்வாக்கு இந்தப் பத்துமுக
உருத்திராக்கத்தில் உண்டு. ஒருவரின் உடலுக்கு இது கேடயம் போல் செயல்பட்டு,
எல்லாத் தீய சக்திகளையும் விரட்டுகிறது. இதை அணிந்து வணங்குவோர்களுடைய
குடும்பம் பரம்பரை பரம்பரையாகச் செழிப்புற்று வாழும்.
பதினோரு முகம்
மந்திரம் - ஒம் ஸ்ரீ ருத்திர நமஹ, ஒம் ஹரீம் நும் நமஹ
இது பகவான் அனுமானைக் குறிக்கும். இது வணங்கி வேண்டியோருக்கு அறிவு, நேர்மையான நீதி ஆற்றல் மிக்க சொல்லாட்சி, துணிவுள்ள வாழ்க்கை, வெற்றி ஆகியனவற்றை
அருளும். எல்லாவற்றிற்கும் மேலாக, விபத்தினால் மரணம் ஏற்படுவதை இது
தடுக்கும். இதை அணிவோர் அச்சமற்றவராக ஆவார். தியானத்திற்கும் இது உதவும்.
பன்னிரண்டு முகம்
மந்திரம் - சூர்யாய நமஹ ஓம் க்ரோன் க்ஷோண் ரவுண் நமஹ
இது சூரியக் கடவுளைக் குறிக்கும். இதை அணிவோர் அளவற்ற நிர்வாகத் திறனைப்
பெறுவர். அத்துடன் சூரியனின் குணங்களையும் பெறுவர். இக்குணங்களால் ஒருவர்
என்றும் பிரகாசிக்கும் ஒளியுடனும், பலத்துடன், பிறரை ஆட்சி செய்து வருவர்.
இந்தப் பன்னிரண்டு முக உருத்திராக்கம் மந்திரிகள், அரசியல்வாதிகள்,
ஆட்சியாளர்கள், வணிகர்கள், நிர்வாகிகள் போன்றோருக்கு உகந்தது. இது
வியக்கத்தக்க வகையில் பயனளிக்க வல்லது.
பதின்மூன்று முகம்
மந்திரம் - ஓம் ஹரீம் நமஹ
இது இந்திரனைக் குறிக்கும். தொழுது வேண்டியவர்களுக்கு மனிதன் விரும்பத்தக்க
எல்லா சுகங்களையும் இது அளிக்கும். செல்வம், மாட்சிமை ஆகியவற்றை
அளிப்பதுடன் உலகத்து ஆசைகள் அனைத்தும் இது நிறைவேற்றும். அத்துடன் அஷ்டமா
சித்திகளையும் இது அளிக்க வல்லது. இதை அணிவோரை காமக்கடவுள் விரும்புவர்.
மகிழ்ச்சி அடைந்த காமக்கடவுள், அணிவோருக்கு உலகத்து ஆசைகள் எல்லாவற்றையும்
நிறைவேற்றுவார்.
பதினான்கு முகம்
மந்திரம் - ஓம் நமஹ சிவாய
இந்தப் பதினான்கு முகமுடைய உருத்திராக்கமே அதி உயர்ந்த விலை மதிப்பற்ற தெய்வீக
மணியாகும். அதுவே தேவ மணியுமாகும். இந்த உருத்திராக்கம் அணிவோருடைய ஆறாவது புலனை விழிக்கச் செய்கிறது. அதனால் அவர் எதிர்கால நிகழ்வுகளை முன் கூட்டியே
அறிகின்றார். இதை அணிவோர் தாம் எடுத்த முடிவுகளில் ஒரு போதும்
தோல்வியடைவதில்லை. இதை அணிவோர் இடர்கள், துன்பங்கள், கவலைகள்
எல்லாவற்றையும் கடந்து விட முடிகிறது.மேலும், அணிவோருக்குப் பாதுகாப்பையும்
எல்லாச் செல்வங்களையும் இது கொடுக்கிறது.
பதினைந்து முதல் இருபத்தொன்று வரை உள்ள முகங்கள்.
பண்டையக் கால முனிவர்கள் இந்த உருத்திராக்க மணிகளை பூஜை மேடையில் வைக்கும்படியும் அதன் வழி முழுக் குடும்பத்திற்கும் செழிப்பைக் கொடுக்கின்றன. பகவான்
உருத்திரனின் அருளைப் பெறும்படியும் அறிவுரை கூறியுள்ளனர்.
இப்படி ஒவ்வொரு முகத்திற்கும் ஒவ்வொரு பலன் உண்டு.
![உருத்திராட்சம் - முகமும் பலனும் - Page 2 Ganesha](https://2img.net/h/www.rudraksha.co.in/images/Rudra_big/Ganesha.jpg)
38 வகையான உருத்திராக்கத்தில், 21 வகை மிக பிரசித்தம். முகத்தைப் பொறுத்தே
ஒரு முகம், இரு முகம் என்று வரிசைப் படுத்தப்படுகிறது. ஒவ்வொரு
முகத்திற்கும் ஒவ்வொரு பலன் உண்டு.
ஒரு முகம்.
மந்திரம் - ஓம் நமச்சிவாய, ஓம் ஹரீம் நமஹ
ஒரு முகமுடைய உருத்திராக்கம் சூரியனால் ஆளப்படுகிறது. இந்த உருத்திராக்கம்
ஏனைய எல்லா முகங்களையுடைய உருத்திராக்கங்களுக்கும் அரசனாகையால்,இது தூய
உணர்வைக் (Pure consciousness) குறிக்கிறது. அணிபவருக்குப் போகமும்
மோட்சமும் கிட்டும். இவர் ராஜா ஜனகர் போன்று வாழ்வர். இவர் வேண்டும் போது
எல்லா சுகங்களையும் அனுபவிப்பர். எனினும் பற்றற்றவராய் இருப்பர்.
ஒரு முகத்து உருத்திராக்கம், நோய்களைச் சரியாகக் கண்டறிவதற்கும், அறுவை
சிகிச்சையில் வெற்றி பெறுவதற்கும் உதவுவதால் மருத்துவர்களுக்கு இது மிகவும்
உகந்ததாகும்.
இரண்டு முகம்.
மந்திரம் - ஸ்ரீ கௌரி சங்கராய நமஹ, ஓம் நமஹ
இரு முகமுடைய உருத்திராக்கத்தை ஆளும் கோள் சந்திரன். இது பகவான் சிவனும், தேவி
பார்வதியும் (சக்தி) இணைந்த உருவமான அர்த்த நாரீஸ்வரரைக் குறிக்கிறது.
(மாதொரு பாகன்) இந்த உருத்திராக்கம் அணிவோருக்கு 'ஒற்றுமை' (unity) உணர்வை
அளிக்கும். இந்த ஒற்றுமை குரு-சிஷ்யன், பெற்றோர்-குழந்தைகள், கணவன்-மனைவி,
நண்பர்களிடையே உள்ள தொடர்பைக் குறிக்கலாம். ஒருமைத் தன்மையை நிலை பெறச்
செய்வது இதன் தனித்தன்மையாகும்.
மூன்று முகம்.
மந்திரம் - ஓம் கிளீம் நமஹ
இந்த மும்முகமுள்ள உருத்திராக்கதை ஆளும் கோள் செவ்வாய்.இது தீக்கடவுளை
குறிக்கிறது. எல்லாப் பொருட்களையும் உண்ட பின்னரும் தீ தூய்மையாக இருப்பது
போல் மூன்று முகமுள்ள உருத்திராக்கத்தை அணியவரும் அருள் கிட்டிய போது, தனது
வாழ்க்கையில் பாவங்களில், தவறுகளிலிருந்து விடுபட்டுத் தூய நிலையை
அடைகின்றார். இந்த மூன்று முக உருத்திரக்கம் தாழ்வு மனப்பான்மை
(Inferiority Complex) உள்ளார்ந்த பயம் (Subjective fear) குற்ற உணர்வு
(Guilt) மனச்சோர்வு போன்றவற்றால் துன்பப்படுபவர்களுக்கும் உகந்ததாகும்.
நான்கு முகம்
மந்திரம - ஓம் ஹரீம் நமஹ
இந்த நான்கு முகமுள்ள உருத்திராக்கத்தை ஆளும் கோள் புதன். இது பிரம்மனைக்
குறிக்கிறது. அணிவோருக்கு அருள் கிடைத்த போது ஆக்க சக்தி கிட்டுகிறது.
மாணவர்கள், அறிவியலாளர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோருக்கு
நற்பயன் அளிக்க வல்லது. ஞாபகசக்தி, கூர்ந்த மதி புத்தி சாதுர்யம் ஆகியவற்றை
மேம்படுத்துகிறது. நான்முக உருத்திராக்கங்கள் மூன்றினை வலது கையில்
கட்டினால் அவர் முன் யாரும் எதிர்த்து நிற்க முடியாது.
ஐந்து முகம்.
மந்திரம் - ஓம் ஹரீம் நமஹ
ஐந்து முகங்களுடைய உருத்திராக்கத்தின் ஆளும் கோள் வியாழன். இது மங்களகரத்தின்
குறியீடான சிவனை குறிக்கும். இந்த ஐந்து முகமுடைய உருத்திராக்க மாலை
அணிதோருக்கு உடல் நலம், அமைதி ஆகியன கிட்டும். இது ஒருவரின் இரத்த
அழுத்தம், இதய நோய்கள் ஆகியவற்றைக் கண்காணிக்கிறது. இந்த உருத்திராக்க
மாலையை ஜபம் செய்வதற்கும் பயன்படுத்துவர். இந்த மாலையை அணிவோருடைய மனம் அமைதியாக இருக்கும். அத்துடன் இதை அணிபவர்களுக்கு அகால மரணம் ஏற்படாது
என்பதில் சந்தேகம் ஏதுவுமில்லை.
ஆறு முகம்
மந்திரம் -ஸ்வாமி கார்த்திகேயாய நமஹ
இந்த ஆறு முக உருத்திராக்கத்தை ஆளும் கோள் வெள்ளி. இந்த உருத்திராக்கம் சிவனின்
இரண்டாவது மகனான கார்த்திகேயக் கடவுளைக் குறிக்கும். இதை அணிந்து
வேண்டியோருக்கு அறிவு, மேம்படுத்தப்பட்ட புத்தி, மனத்திட்பம், திடமான மனம்
ஆகியவை அருளப்படும். இந்த ஆறு முக உருத்திராக்கம், மேலாளர்கள், வணிகர்கள்,
நிர்வாகிகள், பத்திரிகையாளர்கள், ஆகியோருக்கு உகந்தது. இது ஒருவரின்
பிறப்புறுப்புகளை ஆள்கிறது.
ஏழு முகம்
மந்திரம் - ஓம் மஹா லட்சிம்யை நமஹ ஓஅம் ஹீம் நமக
இந்த ஏழு முக உருத்திராக்கத்தை ஆளும் கோள் சனி. இது தேவி திருமகளைக்
குறிக்கும். இதை அணிவோருக்கு நல்ல உடல் நலம் அருள் பாலிக்கப்படும். உடல்
தொடர்பான துன்பங்கள், நிதித் தொல்லைகள், மனத் துன்பங்கள் ஆகியவற்றால்
வருத்த முற்றிருப்போர் இந்த உருத்திராக்கத்தை அணிதல் வேண்டும். இந்த ஏழு
முக உருத்திராக்கத்தை ஒருவர் அணிவதால் அவருக்கு வணிகம், பணி ஆகியவற்றில்
முன்னேற்றம் ஏற்படுத்துவதுடன் அவர் மகிழ்வாகக் கழிக்க முடிகிறது.
எட்டு முகம்
மந்திரம் - ஒம் ஹீம் நமஹ, ஓம் கணேஷாய நமஹ
இந்த எட்டு முகமுடைய உருத்திராக்கத்தின் ஆளும் கோள் இராகு. இது பகவான் கணேசரைக்
குறிக்கிறது. இது முயற்சிகளிலும் தடைகளை நீக்கி வெற்றியைத் தருகிறது.
அணிவோருக்கு ரித்திகள் (Riddhis), சித்திகள் (Siddhies) ஆகிய எல்லாப்
பேறுகளையும் அளிக்கும். இதை அணிவோரின் எதிரிகள் அழிந்து போவார்கள். அதாவது
இவர்கள் எதிரிகளின் மனத்தையும், நோக்கங்களையும் இந்த உருத்திராக்கம் மாற்றி
விடும்.
ஒன்பது முகம்
மந்திரம் - நவ துர்க்காயை நமஹ, ஓம் ஹரீம் ஹும் நமஹ
இந்த ஒன்பது முக உருத்திராக்கத்தை ஆளும் கோள் கேது. இது தேவி துர்க்கையைக்
(சக்தி) குறிக்கிறது. இதை அணிந்து வணங்குபவர்களுக்கு அன்னைக் கடவுள்
வெற்றிகரமான வாழ்க்கையை வாழ்வதற்கு அதிக சக்தி, ஆற்றல், செயல் திறம்,
அச்சமின்மை ஆகியவற்றை அளிப்பாள்.
பத்து முகம்
மந்திரம் - ஸ்ரீ நாராணாய நமஹ, ஸ்ரீ வைஷ்ணவை நமஹ, ஓம் ஹ்ரீம் நமஹ
இந்த பத்து முகமுள்ள உருத்திராக்கத்திற்கு ஆளும் கோள் என்று ஒன்றுமில்லை.
கோள்களினால் ஏற்படும் தீய பலன்களையும் இது சாந்தப்படுத்தும். பத்துத்
திசைகளினதும், பத்து அவதாரங்களிலும் செல்வாக்கு இந்தப் பத்துமுக
உருத்திராக்கத்தில் உண்டு. ஒருவரின் உடலுக்கு இது கேடயம் போல் செயல்பட்டு,
எல்லாத் தீய சக்திகளையும் விரட்டுகிறது. இதை அணிந்து வணங்குவோர்களுடைய
குடும்பம் பரம்பரை பரம்பரையாகச் செழிப்புற்று வாழும்.
பதினோரு முகம்
மந்திரம் - ஒம் ஸ்ரீ ருத்திர நமஹ, ஒம் ஹரீம் நும் நமஹ
இது பகவான் அனுமானைக் குறிக்கும். இது வணங்கி வேண்டியோருக்கு அறிவு, நேர்மையான நீதி ஆற்றல் மிக்க சொல்லாட்சி, துணிவுள்ள வாழ்க்கை, வெற்றி ஆகியனவற்றை
அருளும். எல்லாவற்றிற்கும் மேலாக, விபத்தினால் மரணம் ஏற்படுவதை இது
தடுக்கும். இதை அணிவோர் அச்சமற்றவராக ஆவார். தியானத்திற்கும் இது உதவும்.
பன்னிரண்டு முகம்
மந்திரம் - சூர்யாய நமஹ ஓம் க்ரோன் க்ஷோண் ரவுண் நமஹ
இது சூரியக் கடவுளைக் குறிக்கும். இதை அணிவோர் அளவற்ற நிர்வாகத் திறனைப்
பெறுவர். அத்துடன் சூரியனின் குணங்களையும் பெறுவர். இக்குணங்களால் ஒருவர்
என்றும் பிரகாசிக்கும் ஒளியுடனும், பலத்துடன், பிறரை ஆட்சி செய்து வருவர்.
இந்தப் பன்னிரண்டு முக உருத்திராக்கம் மந்திரிகள், அரசியல்வாதிகள்,
ஆட்சியாளர்கள், வணிகர்கள், நிர்வாகிகள் போன்றோருக்கு உகந்தது. இது
வியக்கத்தக்க வகையில் பயனளிக்க வல்லது.
பதின்மூன்று முகம்
மந்திரம் - ஓம் ஹரீம் நமஹ
இது இந்திரனைக் குறிக்கும். தொழுது வேண்டியவர்களுக்கு மனிதன் விரும்பத்தக்க
எல்லா சுகங்களையும் இது அளிக்கும். செல்வம், மாட்சிமை ஆகியவற்றை
அளிப்பதுடன் உலகத்து ஆசைகள் அனைத்தும் இது நிறைவேற்றும். அத்துடன் அஷ்டமா
சித்திகளையும் இது அளிக்க வல்லது. இதை அணிவோரை காமக்கடவுள் விரும்புவர்.
மகிழ்ச்சி அடைந்த காமக்கடவுள், அணிவோருக்கு உலகத்து ஆசைகள் எல்லாவற்றையும்
நிறைவேற்றுவார்.
பதினான்கு முகம்
மந்திரம் - ஓம் நமஹ சிவாய
இந்தப் பதினான்கு முகமுடைய உருத்திராக்கமே அதி உயர்ந்த விலை மதிப்பற்ற தெய்வீக
மணியாகும். அதுவே தேவ மணியுமாகும். இந்த உருத்திராக்கம் அணிவோருடைய ஆறாவது புலனை விழிக்கச் செய்கிறது. அதனால் அவர் எதிர்கால நிகழ்வுகளை முன் கூட்டியே
அறிகின்றார். இதை அணிவோர் தாம் எடுத்த முடிவுகளில் ஒரு போதும்
தோல்வியடைவதில்லை. இதை அணிவோர் இடர்கள், துன்பங்கள், கவலைகள்
எல்லாவற்றையும் கடந்து விட முடிகிறது.மேலும், அணிவோருக்குப் பாதுகாப்பையும்
எல்லாச் செல்வங்களையும் இது கொடுக்கிறது.
பதினைந்து முதல் இருபத்தொன்று வரை உள்ள முகங்கள்.
பண்டையக் கால முனிவர்கள் இந்த உருத்திராக்க மணிகளை பூஜை மேடையில் வைக்கும்படியும் அதன் வழி முழுக் குடும்பத்திற்கும் செழிப்பைக் கொடுக்கின்றன. பகவான்
உருத்திரனின் அருளைப் பெறும்படியும் அறிவுரை கூறியுள்ளனர்.
இப்படி ஒவ்வொரு முகத்திற்கும் ஒவ்வொரு பலன் உண்டு.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: உருத்திராட்சம் - முகமும் பலனும்
ஒரிஜினல் உருத்திராட்சம் பார்த்து வாங்குவது எப்படி?
என்று விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும்.
நன்றி
என்று விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும்.
நன்றி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
![உருத்திராட்சம் - முகமும் பலனும் - Page 2 812496](https://2img.net/u/1813/71/41/02/smiles/812496.gif)
பிரகாசம்- இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
Re: உருத்திராட்சம் - முகமும் பலனும்
பிரகாசம் wrote:ஒரிஜினல் உருத்திராட்சம் பார்த்து வாங்குவது எப்படி?
என்று விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும்.
நன்றி
![உருத்திராட்சம் - முகமும் பலனும் - Page 2 359383](https://2img.net/u/1813/71/41/02/smiles/359383.gif)
![உருத்திராட்சம் - முகமும் பலனும் - Page 2 359383](https://2img.net/u/1813/71/41/02/smiles/359383.gif)
![உருத்திராட்சம் - முகமும் பலனும் - Page 2 359383](https://2img.net/u/1813/71/41/02/smiles/359383.gif)
![உருத்திராட்சம் - முகமும் பலனும் - Page 2 359383](https://2img.net/u/1813/71/41/02/smiles/359383.gif)
![உருத்திராட்சம் - முகமும் பலனும் - Page 2 359383](https://2img.net/u/1813/71/41/02/smiles/359383.gif)
![உருத்திராட்சம் - முகமும் பலனும் - Page 2 359383](https://2img.net/u/1813/71/41/02/smiles/359383.gif)
![உருத்திராட்சம் - முகமும் பலனும் - Page 2 359383](https://2img.net/u/1813/71/41/02/smiles/359383.gif)
![உருத்திராட்சம் - முகமும் பலனும் - Page 2 359383](https://2img.net/u/1813/71/41/02/smiles/359383.gif)
![உருத்திராட்சம் - முகமும் பலனும் - Page 2 359383](https://2img.net/u/1813/71/41/02/smiles/359383.gif)
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: உருத்திராட்சம் - முகமும் பலனும்
சிவா wrote:உதயசுதா wrote:சரிப்பா உருத்திராட்சம் எல்லாம் பிரம்மச்சாரியம் கடைபிடிக்கிறவங்க மட்டும்தான் அணியனுமா? இல்ல யார் வேணும்னாலும் போட்டுக்கலாமா?
யார் வேண்டுமானாலும் அணியலாம் சுதா!
உருத்திராக்கம் தரித்துக் கொண்டு மதுபானம் மாமிச போசனம் முதலியவை செய்ய கூடாது
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: உருத்திராட்சம் - முகமும் பலனும்
ஒரு முக ருத்ராட்சத்ற்கு ஏக முகம் என்று மற்றொரு பெயர்
JUJU- பண்பாளர்
- பதிவுகள் : 185
இணைந்தது : 27/02/2011
Re: உருத்திராட்சம் - முகமும் பலனும்
உருத்திராக்கம் பற்றிய அறிவியல் முடிவுகள்:
ஒருவரின் ஆளுமையை மாற்றவும், அவருக்கு நேரான நன்நோக்கு உண்டாக்கவும் வல்ல பல்வேறு ஆற்றல் மிக்க பண்புகள் உத்திராக்க மணிகளுக்கு உண்டு. உருத்திராக்கத்தின்
ஆற்றல் மிக்க பண்புகள் உருத்திராக்க மணிகளுக்கு உண்டு. உருத்திராக்கத்தின்
ஆற்றல் பல காலமாக மக்களுக்குத் தெரிந்திருந்த போதும், எண்பதுகளின்
பிற்பகுதியில் தான் இது மேலும் பிரபல்யம் அடைந்தது. குறிப்பாக,
இந்தியாவிலுள்ள வாரணாசிப் பல்கலைக் கழகத்திலுள்ள தொழில்நுட்ப நிறுவனத்தில்
டாக்டர். கஹாஸ் ராய் தலைமையிலான அறிவியலாளர்களின் ஆய்விற்குப் பின்னரே
உருத்திராக்கம் புகழ்பெற்றது. இவர்கள் உயிர் வேதியியல் துறை
(Bio-chemistry) மின் தொழில் நுட்பத்தின் மனநோய் மருத்துவத் துறை
(Psychiatry) பொது மருத்துவத் துறை, உளவியல் துறை ஆகிய துறைகளுடன் இணைந்து
உத்திராக்கம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள். இவர்கள் உருத்திராக்கத்தின்
ஆற்றலை அறிவியல் நோக்கில் நிறுவியதுடன், தாம் கண்ட முடிவுகளை மீண்டும்
செய்து காட்ட இவர்களுக்கு முடிந்தது.
உருத்திராக்கத்திற்கு, சக்தி மிக்க மின்காந்தப் பண்புகள் (Electromagnetic) காந்த முனைகளால்
ஈர்க்கப்படும் தன்மை (Pargmagnetic) அணுக்க நிலை மின்பாய்வுள்ள தன்மை
(Inductive) ஆகியன உள்ளன என்பதை இவர்கள் நிலை நிறுவினர். மேற்கூறிய
ஆற்றல்கள் உருத்திராக்கத்தின் முகப்புகள் அல்லது முகங்கள் மேற்பரப்பிலுள்ள
பகுப்புகளின் எண்ணிக்கை பொறுத்து அமையும். ஒரு குறிப்பிட்ட முகத்தையுடைய
உருத்திராக்கத்தையோ அன்றேல் ஒரு தொகுதி முகங்கள் கொண்ட உருத்திராக்க
மணிகளையோ அணிவோருக்கு, ஒரு குறிப்பிட்ட வகை மின் துடிப்புகள்
(Transformation in the personality) வாழ்க்கையை நோக்கும் தன்மை, தன்
ஆர்வம், மனத்திட்பம் ஆகியன மாற்றம் பெறுகின்றன. மேலும் இந்த ஆய்வாளர்கள்,
உருத்திராக்க மணிகளை அணிவதால் இதயத்துடிப்புக் கட்டுப்படுத்தப்பட்டு, அதன்
வழியாக மூளைக்குச் செல்லும் இரத்த அளவு சம சீராக்கப்படுகிறது என்பதையும்
நிறுவினர்.
உயர்ந்த மன அழுத்தம் கூர்ந்த மனக்குவிவு ஆகியவை ஒருவருக்கு ஏற்படும் போது, மூளைக்கும் மூளையிலிருந்து இரத்த ஓட்டம் பீறிட்டும் செல்வது நோக்கத் தக்கது. இந்த மணிகளின் துணையுடன் ஒருவகைச் சாந்தம் ஒரு முகக்குவிவு, கூர்ந்த குவிவு ஆகியவற்றை எளிதில் பெறமுடிகிறது.
அத்துடன் உருத்திராக்கம் அணிவோருக்கு குறிப்பிடத்தக்க அளவு மனத்திடத்தையும்,
உள்ளார்ந்த பலத்தையும் அளிப்பதாகக் கண்டு கொள்ளப்பட்டுள்ளது. பொதுப்
பயன்பாட்டிற்கான உருத்திராக்க மணிகளைவிட, ஒன்றிலிருந்து இருபத்தொரு
முகங்கள் வரை உள்ள அதிக ஆற்றலுள்ள உருத்திராக்க மணிகளுமுண்டு. இவை
ஒவ்வொன்றும் நமது மனதையும், நம்மைச் சுற்றியுள்ள ஆக்கபூர்வமான சக்திகளையும்
ஒரு நிலைப்படுத்தி, செழிப்பு, ஆக்கம், உள்ளுணர்வுத் திறன், எதிர்கால
நிகழ்வுகள் குறித்து ஆய்தல், பாலின ஒத்திசைவு போன்ற சிறப்புப் பண்புகளை
அளிக்கின்றன. உறுதியாக, உருத்திராக்கங்கள் நாம் இன்னும் திறம்படச்
செயலாற்றவும், இன்னும் வெற்றி காணும் வாழ்க்கையை வாழவும் உதவுகின்ற
வியத்தகு மணிகளாகும்.
உருத்திராக்க மணிகள் அணிபவர்களுக்கு மன அழுத்தம் குறைந்துள்ளதையும் அவர்கள் கண்டனர். இவ்வாறு மன அழுத்த நிலை குறைவது, தொடர்ச்சியாகச் சாந்தப்படுத்தும் மருந்துகளை அதிக அளவில் உட்கொள்வதால் மட்டுமே செய்ய முடிந்துள்ளது. உருத்திராக்க மணிகள் ஆக்கப்பூர்வமான அதிர்வலைகளை வெளிக் கொணர்ந்து ஒருவருக்கு உடலிலும்
மனதிலுமுள்ள எதிர்மறை உணர்வுகளை வெளியேற்றுகின்றன.
இந்த ஆய்வாளர்களால் நரம்பு மாற்றிகள் (Neuro Transmiters) டொபமைன் (Dopamine),
செறொரின் (Serotinin), போன்ற செயல்பாடுகளில் உருத்திராக்க மணிகளை அணிவதால்
ஏற்படும் தாக்கங்களையும் நிலைநாட்ட முடிந்தது. இத்தகைய தாக்கங்களினால்
ஒருவரது ஆளுமையிலும் மனப்பாங்கிலும் ஆக்கபூர்வமான மாற்றங்கள் நிகழ்கின்றன.
உருத்திராக்கத்தை அணிவோர், தமக்கு ஏற்படும் ஏனைய நன்மைகளுடன், அவர்களுடைய
மன அழுத்த நிலை எதிர்பாராத அளவு குறைந்திருப்பதையும் கண்டனர். இத்தகைய மன
அழுத்த நிலைகுறைவு, இதுவரை சாந்தப்படுத்தும் மருந்துகளை அதிக அளவில்
தொடர்ந்து உட்கொள்வதால் பெறப்பட்டுள்ளது மட்டுமே உருத்திராக்க மணிகள்,
ஆக்கபூர்வமான அதிர்வலைகளை வெளிக்கொணர்ந்து ஒருவருக்கு உடலிலும்,
மனதிலுமுள்ள எதிர்மறை உணர்வுகளை வெளியேற்றுகின்றன. உருத்திராக்க மணிகள்
ஒருவரை 'அல்பா மன நிலைக்கு' (Alpha state of mind) இட்டுச் செல்கின்றன.
யோகிகள் வியத்தகு வகையில், மனதைக் கட்டுப்படுத்தக் கூடியவர்களாக
இருந்திருக்கின்றனர். அதாவது உடலில் தன்முனைப்புடன் கூடிய செயல்கள்,
தன்முனைப்பற்றுச் செய்யும் செயல்கள் இரண்டையும், குறிப்பாக உருத்திராக்க
மணிகளைப் பயன்படுத்தி கட்டுப்படுத்தக் கூடியவர்களாக இருந்தனர். இவர்கள்,
உடலின் பாதுகாப்பிற்கு எந்த விதத் துணிகளும் அணியாமலேயே இமாலய மலையின்
கடுங்குளிரைத் தாங்கினார்கள். இவர்கள் தமது உடலிலுள்ள வெப்பத்தை வெளிக்
கொணரும் போது அதைக் கட்டுப்படுத்தி அதன் வழி குளிரைத் தாங்கினார்கள். இது
சாதாரணமாக செய்யத்தக்க செயல் அல்ல.
உருத்திராக்க மணிகளுக்குச் சில விளக்க முடியாத, ஆனால் வியக்கத்தக்க மின்காந்தப் பண்புகளும், ஊசி அடுத்த முறைப் பண்புகளும் [Acupressure] உண்டு என்பதைப் ஆய்வாளர்கள் எடுத்துக் காட்டியுள்ளார்கள். கழுத்தைச் சுற்றி உருத்திராக்கத்தை அணிவதால், அது இரத்தச் சுற்றோட்டத்தைக் கட்டுப்படுவதுடன் நமக்கு உகந்ததாகவும் ஆகிறது. நமது இதயத் துடிப்புகளை கட்டுப்படுத்துவதால் சாத்தியமாகிறது.
உடலில் அல்லது மனதில் அசாதாரண நிலையோ அன்றேல் ஏதாவது நோயோ இருந்தால் அவற்றைச் சுட்டிக் காட்டும் இரத்தச் சுற்றோட்டம் விளங்குகிறது. எடுத்தக்காட்டாக
ஒருவர் உயர்ந்த மன அழுத்த நிலையையோ அன்றேல் உறுப்பு உறுப்புகளில்
சீர்கேட்டையோ உணரும் நேரத்தில் அவருடைய இரத்தச் சுற்றோட்ட வீதம்
அதிகமாகிறது.இதற்கு மாறாக இரத்தச் சுற்றோட்டத்தைக் கட்டுப்படுத்துவதால்
அவருடைய மன அழுத்த நிலை குறைகிறது. சோமடைசேசன் (Somatisation) அதாவது
சீரற்ற சுவாசமும் இரத்தச் சுற்றோட்டமும் கட்டுப்படுத்தப்பட்டவுடன் அதற்கான
காரணி அதன் முக்கியத்துவத்தை இழந்து விடுகிறது. இந்த அடிபப்டை விதிமுறையைக்
கொண்டே எல்லா சைகோ பார்மகோலொஜின் (Psycho pharmacological) மருந்துகளும்
செயல்படுகின்றன். இரத்தச் சுற்றோட்டம் சாதாரண நிலைக்கு வந்ததும்,
ஒருவருக்கு மனத்தெளிவு ஏற்படுத்துவதுடன், உடல் மனம் ஆகிய இரண்டின்
செயல்பாடுகளிலும் கூர்ந்த நோக்கு உண்டாகின்றது.
உருத்திராக்கம் நமக்கு, உடலில் இலேசாக இருக்கும் உணர்வையும் சாந்தத்தை அளிக்கிறது.
அத்துடன் அது நமது ஒட்டு மொத்த நலத்தையும் திறனையும் மேம்படுத்துகிறது.
உருத்திராக்க மணிகளை அணிவதால் மட்டும் ஏற்படும் வியத்தகு விளைவுகளைக் கண்ட
பலர், இம்மணிகள் தெய்வீகமானவை இறைவனால் அனுப்பப்பட்டவை எனக் கருதி அவற்றை வணங்கினர்.
உண்மையான உருத்திராக்க மணிகளை அணிந்த ஆயிரக்கணக்கான்
மக்கள், அவை தமக்கு இரத்த அழுத்தம், மனச்சோர்வு, மற்றும் நரம்புக் கோளாறு
உட்பட்ட மனத்துடன் தொடர்பான தொல்லைகள் ஆகியவற்றிலிருந்து குறிப்பிடத்தக்க
நிவாரனம் கிடைத்ததாக அறிகிறார்கள். அதை அணிவோருக்குத் தன்னம்பிக்கை,
உள்ளார்ந்த பலம் (Inner Strength) இரண்டையும் குறிப்பிடத்தக்க அளவில்
மேலோங்கச் செய்வதாகக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
சாதாரண பயன்பாட்டிலுள்ள உருத்திராக்க மணிகளை விட, மிகச் சக்தி வாய்ந்த ஒன்று முதல் இருபத்தொரு உருத்திராக்க மணிகளும் உண்டு. இவை ஒவ்வொன்றும் நமது மனதையும், நம்மைச் சுற்றியுள்ள ஆக்கப்பூர்வமான சக்திகளையும் நேர்ப்படுத்தி, அவற்றைச் செழிப்பு (Prosperity) படைக்கும் ஆற்றல் (Creativity) உள்ளுணர்வுத் திறன்
(Inductivity) எதிர்காலத்தில் வரக்கூடிய நன்மை, தீமை பற்றி ஆய்ந்து
நோக்கும் திறன், பாலின ஒத்திசைவு போன்றவை செயல்படவும், மேலும் வெற்றியுள்ள
வாழ்க்கையை நாம் வாழவும் உதவுகின்றன.
ஒருவரின் ஆளுமையை மாற்றவும், அவருக்கு நேரான நன்நோக்கு உண்டாக்கவும் வல்ல பல்வேறு ஆற்றல் மிக்க பண்புகள் உத்திராக்க மணிகளுக்கு உண்டு. உருத்திராக்கத்தின்
ஆற்றல் மிக்க பண்புகள் உருத்திராக்க மணிகளுக்கு உண்டு. உருத்திராக்கத்தின்
ஆற்றல் பல காலமாக மக்களுக்குத் தெரிந்திருந்த போதும், எண்பதுகளின்
பிற்பகுதியில் தான் இது மேலும் பிரபல்யம் அடைந்தது. குறிப்பாக,
இந்தியாவிலுள்ள வாரணாசிப் பல்கலைக் கழகத்திலுள்ள தொழில்நுட்ப நிறுவனத்தில்
டாக்டர். கஹாஸ் ராய் தலைமையிலான அறிவியலாளர்களின் ஆய்விற்குப் பின்னரே
உருத்திராக்கம் புகழ்பெற்றது. இவர்கள் உயிர் வேதியியல் துறை
(Bio-chemistry) மின் தொழில் நுட்பத்தின் மனநோய் மருத்துவத் துறை
(Psychiatry) பொது மருத்துவத் துறை, உளவியல் துறை ஆகிய துறைகளுடன் இணைந்து
உத்திராக்கம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள். இவர்கள் உருத்திராக்கத்தின்
ஆற்றலை அறிவியல் நோக்கில் நிறுவியதுடன், தாம் கண்ட முடிவுகளை மீண்டும்
செய்து காட்ட இவர்களுக்கு முடிந்தது.
உருத்திராக்கத்திற்கு, சக்தி மிக்க மின்காந்தப் பண்புகள் (Electromagnetic) காந்த முனைகளால்
ஈர்க்கப்படும் தன்மை (Pargmagnetic) அணுக்க நிலை மின்பாய்வுள்ள தன்மை
(Inductive) ஆகியன உள்ளன என்பதை இவர்கள் நிலை நிறுவினர். மேற்கூறிய
ஆற்றல்கள் உருத்திராக்கத்தின் முகப்புகள் அல்லது முகங்கள் மேற்பரப்பிலுள்ள
பகுப்புகளின் எண்ணிக்கை பொறுத்து அமையும். ஒரு குறிப்பிட்ட முகத்தையுடைய
உருத்திராக்கத்தையோ அன்றேல் ஒரு தொகுதி முகங்கள் கொண்ட உருத்திராக்க
மணிகளையோ அணிவோருக்கு, ஒரு குறிப்பிட்ட வகை மின் துடிப்புகள்
(Transformation in the personality) வாழ்க்கையை நோக்கும் தன்மை, தன்
ஆர்வம், மனத்திட்பம் ஆகியன மாற்றம் பெறுகின்றன. மேலும் இந்த ஆய்வாளர்கள்,
உருத்திராக்க மணிகளை அணிவதால் இதயத்துடிப்புக் கட்டுப்படுத்தப்பட்டு, அதன்
வழியாக மூளைக்குச் செல்லும் இரத்த அளவு சம சீராக்கப்படுகிறது என்பதையும்
நிறுவினர்.
உயர்ந்த மன அழுத்தம் கூர்ந்த மனக்குவிவு ஆகியவை ஒருவருக்கு ஏற்படும் போது, மூளைக்கும் மூளையிலிருந்து இரத்த ஓட்டம் பீறிட்டும் செல்வது நோக்கத் தக்கது. இந்த மணிகளின் துணையுடன் ஒருவகைச் சாந்தம் ஒரு முகக்குவிவு, கூர்ந்த குவிவு ஆகியவற்றை எளிதில் பெறமுடிகிறது.
அத்துடன் உருத்திராக்கம் அணிவோருக்கு குறிப்பிடத்தக்க அளவு மனத்திடத்தையும்,
உள்ளார்ந்த பலத்தையும் அளிப்பதாகக் கண்டு கொள்ளப்பட்டுள்ளது. பொதுப்
பயன்பாட்டிற்கான உருத்திராக்க மணிகளைவிட, ஒன்றிலிருந்து இருபத்தொரு
முகங்கள் வரை உள்ள அதிக ஆற்றலுள்ள உருத்திராக்க மணிகளுமுண்டு. இவை
ஒவ்வொன்றும் நமது மனதையும், நம்மைச் சுற்றியுள்ள ஆக்கபூர்வமான சக்திகளையும்
ஒரு நிலைப்படுத்தி, செழிப்பு, ஆக்கம், உள்ளுணர்வுத் திறன், எதிர்கால
நிகழ்வுகள் குறித்து ஆய்தல், பாலின ஒத்திசைவு போன்ற சிறப்புப் பண்புகளை
அளிக்கின்றன. உறுதியாக, உருத்திராக்கங்கள் நாம் இன்னும் திறம்படச்
செயலாற்றவும், இன்னும் வெற்றி காணும் வாழ்க்கையை வாழவும் உதவுகின்ற
வியத்தகு மணிகளாகும்.
உருத்திராக்க மணிகள் அணிபவர்களுக்கு மன அழுத்தம் குறைந்துள்ளதையும் அவர்கள் கண்டனர். இவ்வாறு மன அழுத்த நிலை குறைவது, தொடர்ச்சியாகச் சாந்தப்படுத்தும் மருந்துகளை அதிக அளவில் உட்கொள்வதால் மட்டுமே செய்ய முடிந்துள்ளது. உருத்திராக்க மணிகள் ஆக்கப்பூர்வமான அதிர்வலைகளை வெளிக் கொணர்ந்து ஒருவருக்கு உடலிலும்
மனதிலுமுள்ள எதிர்மறை உணர்வுகளை வெளியேற்றுகின்றன.
இந்த ஆய்வாளர்களால் நரம்பு மாற்றிகள் (Neuro Transmiters) டொபமைன் (Dopamine),
செறொரின் (Serotinin), போன்ற செயல்பாடுகளில் உருத்திராக்க மணிகளை அணிவதால்
ஏற்படும் தாக்கங்களையும் நிலைநாட்ட முடிந்தது. இத்தகைய தாக்கங்களினால்
ஒருவரது ஆளுமையிலும் மனப்பாங்கிலும் ஆக்கபூர்வமான மாற்றங்கள் நிகழ்கின்றன.
உருத்திராக்கத்தை அணிவோர், தமக்கு ஏற்படும் ஏனைய நன்மைகளுடன், அவர்களுடைய
மன அழுத்த நிலை எதிர்பாராத அளவு குறைந்திருப்பதையும் கண்டனர். இத்தகைய மன
அழுத்த நிலைகுறைவு, இதுவரை சாந்தப்படுத்தும் மருந்துகளை அதிக அளவில்
தொடர்ந்து உட்கொள்வதால் பெறப்பட்டுள்ளது மட்டுமே உருத்திராக்க மணிகள்,
ஆக்கபூர்வமான அதிர்வலைகளை வெளிக்கொணர்ந்து ஒருவருக்கு உடலிலும்,
மனதிலுமுள்ள எதிர்மறை உணர்வுகளை வெளியேற்றுகின்றன. உருத்திராக்க மணிகள்
ஒருவரை 'அல்பா மன நிலைக்கு' (Alpha state of mind) இட்டுச் செல்கின்றன.
யோகிகள் வியத்தகு வகையில், மனதைக் கட்டுப்படுத்தக் கூடியவர்களாக
இருந்திருக்கின்றனர். அதாவது உடலில் தன்முனைப்புடன் கூடிய செயல்கள்,
தன்முனைப்பற்றுச் செய்யும் செயல்கள் இரண்டையும், குறிப்பாக உருத்திராக்க
மணிகளைப் பயன்படுத்தி கட்டுப்படுத்தக் கூடியவர்களாக இருந்தனர். இவர்கள்,
உடலின் பாதுகாப்பிற்கு எந்த விதத் துணிகளும் அணியாமலேயே இமாலய மலையின்
கடுங்குளிரைத் தாங்கினார்கள். இவர்கள் தமது உடலிலுள்ள வெப்பத்தை வெளிக்
கொணரும் போது அதைக் கட்டுப்படுத்தி அதன் வழி குளிரைத் தாங்கினார்கள். இது
சாதாரணமாக செய்யத்தக்க செயல் அல்ல.
உருத்திராக்க மணிகளுக்குச் சில விளக்க முடியாத, ஆனால் வியக்கத்தக்க மின்காந்தப் பண்புகளும், ஊசி அடுத்த முறைப் பண்புகளும் [Acupressure] உண்டு என்பதைப் ஆய்வாளர்கள் எடுத்துக் காட்டியுள்ளார்கள். கழுத்தைச் சுற்றி உருத்திராக்கத்தை அணிவதால், அது இரத்தச் சுற்றோட்டத்தைக் கட்டுப்படுவதுடன் நமக்கு உகந்ததாகவும் ஆகிறது. நமது இதயத் துடிப்புகளை கட்டுப்படுத்துவதால் சாத்தியமாகிறது.
உடலில் அல்லது மனதில் அசாதாரண நிலையோ அன்றேல் ஏதாவது நோயோ இருந்தால் அவற்றைச் சுட்டிக் காட்டும் இரத்தச் சுற்றோட்டம் விளங்குகிறது. எடுத்தக்காட்டாக
ஒருவர் உயர்ந்த மன அழுத்த நிலையையோ அன்றேல் உறுப்பு உறுப்புகளில்
சீர்கேட்டையோ உணரும் நேரத்தில் அவருடைய இரத்தச் சுற்றோட்ட வீதம்
அதிகமாகிறது.இதற்கு மாறாக இரத்தச் சுற்றோட்டத்தைக் கட்டுப்படுத்துவதால்
அவருடைய மன அழுத்த நிலை குறைகிறது. சோமடைசேசன் (Somatisation) அதாவது
சீரற்ற சுவாசமும் இரத்தச் சுற்றோட்டமும் கட்டுப்படுத்தப்பட்டவுடன் அதற்கான
காரணி அதன் முக்கியத்துவத்தை இழந்து விடுகிறது. இந்த அடிபப்டை விதிமுறையைக்
கொண்டே எல்லா சைகோ பார்மகோலொஜின் (Psycho pharmacological) மருந்துகளும்
செயல்படுகின்றன். இரத்தச் சுற்றோட்டம் சாதாரண நிலைக்கு வந்ததும்,
ஒருவருக்கு மனத்தெளிவு ஏற்படுத்துவதுடன், உடல் மனம் ஆகிய இரண்டின்
செயல்பாடுகளிலும் கூர்ந்த நோக்கு உண்டாகின்றது.
உருத்திராக்கம் நமக்கு, உடலில் இலேசாக இருக்கும் உணர்வையும் சாந்தத்தை அளிக்கிறது.
அத்துடன் அது நமது ஒட்டு மொத்த நலத்தையும் திறனையும் மேம்படுத்துகிறது.
உருத்திராக்க மணிகளை அணிவதால் மட்டும் ஏற்படும் வியத்தகு விளைவுகளைக் கண்ட
பலர், இம்மணிகள் தெய்வீகமானவை இறைவனால் அனுப்பப்பட்டவை எனக் கருதி அவற்றை வணங்கினர்.
உண்மையான உருத்திராக்க மணிகளை அணிந்த ஆயிரக்கணக்கான்
மக்கள், அவை தமக்கு இரத்த அழுத்தம், மனச்சோர்வு, மற்றும் நரம்புக் கோளாறு
உட்பட்ட மனத்துடன் தொடர்பான தொல்லைகள் ஆகியவற்றிலிருந்து குறிப்பிடத்தக்க
நிவாரனம் கிடைத்ததாக அறிகிறார்கள். அதை அணிவோருக்குத் தன்னம்பிக்கை,
உள்ளார்ந்த பலம் (Inner Strength) இரண்டையும் குறிப்பிடத்தக்க அளவில்
மேலோங்கச் செய்வதாகக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
சாதாரண பயன்பாட்டிலுள்ள உருத்திராக்க மணிகளை விட, மிகச் சக்தி வாய்ந்த ஒன்று முதல் இருபத்தொரு உருத்திராக்க மணிகளும் உண்டு. இவை ஒவ்வொன்றும் நமது மனதையும், நம்மைச் சுற்றியுள்ள ஆக்கப்பூர்வமான சக்திகளையும் நேர்ப்படுத்தி, அவற்றைச் செழிப்பு (Prosperity) படைக்கும் ஆற்றல் (Creativity) உள்ளுணர்வுத் திறன்
(Inductivity) எதிர்காலத்தில் வரக்கூடிய நன்மை, தீமை பற்றி ஆய்ந்து
நோக்கும் திறன், பாலின ஒத்திசைவு போன்றவை செயல்படவும், மேலும் வெற்றியுள்ள
வாழ்க்கையை நாம் வாழவும் உதவுகின்றன.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: உருத்திராட்சம் - முகமும் பலனும்
அருமையான தகவலுக்கு நன்றிகள்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: உருத்திராட்சம் - முகமும் பலனும்
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: உருத்திராட்சம் - முகமும் பலனும்
உருத்திராக்க மணிகள் குறித்த சில கேள்விகளும் பதில்களும்:
உருத்திராக்க மணிகளின் சிறப்புத்தன்மை என்ன?
ஆசியர்கள் மரபு வழியாக உருத்திராக்கத்தைப் பயன்படுத்தி வந்துள்ளனர். ஆசியாவின்
யோகிகளும் துறவிகளும் உருத்திராக்கத்தை வெறுமனே அணிவதால் மட்டும்,
அவர்களுக்கு வியத்தகு முறையில் அதிக அளவு சாந்தியும், குறிப்பிடத்தக்க மன
அடக்கத்துடன் நீண்ட நேரம் தியானம் செய்யும் ஒரு முகக்குவியும் ஏற்பட்டதைக்
கண்டனர்.
உருத்திராக்கம் அணிய விதிமுறைகள் / நியமம் ஏதும் உள்ளதா?
உருத்திராக்கம் அணிவோர் சில நியமங்களை மேற்கொள்ள வேண்டும்.
இந்த உருத்திராக்கத்தினை ஒரு குரு மூலம் அல்லது சான்றோர்கள் மூலமும் பெறுவது
சிறப்பாகும். நல்ல உருத்திராக்க மணிகளை இவர்கள் மூலம் பூஜை செய்து
அணிவதனால், ஒருவருக்கு சாந்தி, மன அமைதி, கூர்ந்த நோக்கு, ஒருமுகக் குவிவு
ஆகியன கிட்டுகின்றன. இத்தகைய மனோநிலை தியானம் செய்வதற்கும், இன்றைய உலகில்
மனம் தொடர்பான செயல்பாடுகளுடன் கூடிய தொழில் புரிபவர்களுக்கும் உகந்ததாக
அமைகிறது. ஒரு முகக் குவியும், கூர்ந்த நோக்குமே எந்தத் துறையிலும்
வெற்றியீட்டுவதற்கு மிக இன்றியமையாத பண்புகளாகும்.
ஒன்று முதல் முப்பத்தெட்டு முகப்புள்ள மணிகளும் கிடைக்கின்றன. இருபத்திரண்டு முகப்புகள் முதல் முப்பத்தெட்டு முகப்புள்ள வரை உருத்திராக்க மணிகள் மிக அரிதாகவே
கிடைக்கின்றன. இந்த உருத்திராக்க மணிகள் மிகவும் ஆற்றல் வாய்ந்தவை.
அத்துடன் அவற்றிகு சில சிறப்புப் பயன்பாடுகளும் உண்டு. இந்தப் பல்வேறு
முகப்புடைய மணிகள் மனிதனுடைய ஆளுமையையும், மனநிலையும் ஆக்கபூர்வமான வழியில் மாற்றுகின்றன.
உருத்திராக்க மணிகள் அனைத்தும் மனித குலத்தின் பயன்பாட்டிற்காகவே உள்ளன. இந்த உருத்திராக்க மணிகள் நமது மனம், உடல், ஆத்மா அனைத்தையும் மீண்டும் இளமை பெறச் செய்யும். இம்மணிகள் இயற்கைக்குகந்த ஆற்றலுடன், தெய்வீகமானவையும் கூட. இதனால் உணவில் ஊனைத் தவிர்த்திட வேண்டும். மதுவை ஒழித்தல் வேண்டும். உரையாடுவதில், பேச்சில் இனிமை வேண்டும்.
வேறுப்பட்ட முகங்களையுடைய மணிகளை ஒன்றாகச் சேர்த்து அணியலாமா?
பல்வேறு முகங்களையுடைய மணிகளை ஒன்றாகச் சேர்ந்து அணியலாம். இவ்வாறு சேர்த்து அணிபவருக்கு வேறுபட்ட மணிகளின் தனிப்பட்ட ஆற்றலை ஒரே நேரத்தில் உணர
முடியும். ஒருவர், குறிப்பிட்ட எண்ணுள்ள முகப்புகளையுடைய மணிகளினால்
செய்யப்பட்டதை கூட அணியலாம்.
எல்லோரும் உருத்திராக்கத்தை அணியலாமா?
அணியலாம். பால், வயது, பண்பாடு, இனம், நிலம், சமயப் பின்னணி குறித்த எந்தவிதப்பாகு பாடுமின்றி எல்லோரும் இதை அணியலாம். எட்டு வயதுக்குட்பட்டவர்களால் எல்லா மணிகளையும் அணிய முடியாது.
உருத்திராக்கத்தின் தாக்கத்தை ஒருவர் உணர்ந்து கொள்ள எத்தனை நாட்கள் ஆகும்?
ஒருவர் தனது உள்ளங்கையில் உருத்திராக்கத்தைப் பிடித்த மாத்திரத்திலேயே அதனுடைய
குறிப்பிடத்தக்க தாக்கத்தை உணர முடியும் என்பது வெளிப்படை. இது ஆற்றலோடு
இலேசாக அதிரும் சக்தியுடையது. இது அவரவர் உடல் மின்சக்தி ஆற்றலைப்
பொறுத்தது.
இந்த உருத்திராக்க மணிகளுடைய உண்மைத் தன்மையை எவ்வாறு சோதிக்கலாம்?
நீரில் மூழ்கும் மணிகள் உண்மையானவை. நீரில் மிதக்கும் மணிகள் போலியானவை என்ற
அடிப்படையில் நிகழ்த்தும் சோதனைகள் சரியானவை அல்ல. மரத்தினால் செய்யப்பட்டு
உள்ளே ஈயத்தை அடைத்துள்ள மணிகள் கூட நீரில் எளிதாக மூழ்கிவிடும். இவற்றை
நம்பகமான இடத்தில் நம்பிக்கையான நண்பர் மூலம் பெறுவது சிறந்த வழியாகும்.
ஒரு நல்ல உருத்திராக்கத்தினை நாம் எவ்வாறு தேர்தெடுக்கலாம்?
உருத்திராக்கத்தின் உருவம், அளவு பற்றி பலருக்கு குழப்பம் ஏற்படுகின்றது. இவை குறித்து அதிகம்
கவலைப்பட வேண்டாம். நன்கு வரையறுக்கப்பட்ட முகங்கள், சிறு மணி போன்ற
அமைப்புகள், மேடுபள்ளக் கோடுகள் இவையெல்லாம் இயல்பானதாக அமைந்துள்ளனவா
என்று பார்க்க வேண்டும். அத்துடன் நடுவிலுள்ள துளைக்கு அருகில் வெடிப்புகள்
இல்லாது இருக்கின்றனவா என்றும் பார்க்க வேண்டும். சிறிய அளவிலுள்ள மணிகள்
கூட மங்களகரமானவைகள்.
உருத்திராக்கத்தை அணிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?
உருத்திராக்க அணிந்திருக்கும் போது செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை என்று
எதுவுமில்லை. நமது புனித நூல்களின்படி உருத்திராக்கத்தை எப்போதும்
அணியலாம். அவற்றை நம்பிக்கை, மரியாதை, அன்பு ஆகிய பண்புகளுடன் அணிய
வேண்டும். இந்துக்கள் மட்டும்தான் இதை அணிய வேண்டும் என்றில்லை. எல்லோரும்
உருத்திராக்கத்தை அணியலாம்.
உருத்திராக்க மணிகள் எவ்வளவு காலத்திற்கு இருக்கும்?
எத்தனை ஆண்டுகளுக்கும் இவை இருக்கலாம். இவற்றை நன்கு பாதுகாத்து வைத்துக் கொண்டால் தலைமுறை தலைமுறையாகக் கூட வைத்துக் கொள்ளலாம்.
ஒரு குடும்பத்தில் வாழ்பவர்கள் கழுத்து மாலைகள், ஜபமாலைகள் உருத்திராக்க மணிகள் ஆகியவற்றை மாற்றிக் கொள்ளலாமா?
இல்லை. உருத்திராக்கத்திற்கு அதை அணிபவருக்கும் இடையே ஒருவகை உறவுண்டு. இது மிக அந்தரங்கமானது. இதை வேறோருவருடனும் பகிர்ந்து கொள்ளக் கூடாது. ஆனால்,
இவற்றை ஒருவரின் வாழ்விறுதிக்குப் பின்பு மற்றவர் பயன்படுத்தலாம்.
உருத்திராக்க மணிகளின் சிறப்புத்தன்மை என்ன?
ஆசியர்கள் மரபு வழியாக உருத்திராக்கத்தைப் பயன்படுத்தி வந்துள்ளனர். ஆசியாவின்
யோகிகளும் துறவிகளும் உருத்திராக்கத்தை வெறுமனே அணிவதால் மட்டும்,
அவர்களுக்கு வியத்தகு முறையில் அதிக அளவு சாந்தியும், குறிப்பிடத்தக்க மன
அடக்கத்துடன் நீண்ட நேரம் தியானம் செய்யும் ஒரு முகக்குவியும் ஏற்பட்டதைக்
கண்டனர்.
உருத்திராக்கம் அணிய விதிமுறைகள் / நியமம் ஏதும் உள்ளதா?
உருத்திராக்கம் அணிவோர் சில நியமங்களை மேற்கொள்ள வேண்டும்.
இந்த உருத்திராக்கத்தினை ஒரு குரு மூலம் அல்லது சான்றோர்கள் மூலமும் பெறுவது
சிறப்பாகும். நல்ல உருத்திராக்க மணிகளை இவர்கள் மூலம் பூஜை செய்து
அணிவதனால், ஒருவருக்கு சாந்தி, மன அமைதி, கூர்ந்த நோக்கு, ஒருமுகக் குவிவு
ஆகியன கிட்டுகின்றன. இத்தகைய மனோநிலை தியானம் செய்வதற்கும், இன்றைய உலகில்
மனம் தொடர்பான செயல்பாடுகளுடன் கூடிய தொழில் புரிபவர்களுக்கும் உகந்ததாக
அமைகிறது. ஒரு முகக் குவியும், கூர்ந்த நோக்குமே எந்தத் துறையிலும்
வெற்றியீட்டுவதற்கு மிக இன்றியமையாத பண்புகளாகும்.
ஒன்று முதல் முப்பத்தெட்டு முகப்புள்ள மணிகளும் கிடைக்கின்றன. இருபத்திரண்டு முகப்புகள் முதல் முப்பத்தெட்டு முகப்புள்ள வரை உருத்திராக்க மணிகள் மிக அரிதாகவே
கிடைக்கின்றன. இந்த உருத்திராக்க மணிகள் மிகவும் ஆற்றல் வாய்ந்தவை.
அத்துடன் அவற்றிகு சில சிறப்புப் பயன்பாடுகளும் உண்டு. இந்தப் பல்வேறு
முகப்புடைய மணிகள் மனிதனுடைய ஆளுமையையும், மனநிலையும் ஆக்கபூர்வமான வழியில் மாற்றுகின்றன.
உருத்திராக்க மணிகள் அனைத்தும் மனித குலத்தின் பயன்பாட்டிற்காகவே உள்ளன. இந்த உருத்திராக்க மணிகள் நமது மனம், உடல், ஆத்மா அனைத்தையும் மீண்டும் இளமை பெறச் செய்யும். இம்மணிகள் இயற்கைக்குகந்த ஆற்றலுடன், தெய்வீகமானவையும் கூட. இதனால் உணவில் ஊனைத் தவிர்த்திட வேண்டும். மதுவை ஒழித்தல் வேண்டும். உரையாடுவதில், பேச்சில் இனிமை வேண்டும்.
வேறுப்பட்ட முகங்களையுடைய மணிகளை ஒன்றாகச் சேர்த்து அணியலாமா?
பல்வேறு முகங்களையுடைய மணிகளை ஒன்றாகச் சேர்ந்து அணியலாம். இவ்வாறு சேர்த்து அணிபவருக்கு வேறுபட்ட மணிகளின் தனிப்பட்ட ஆற்றலை ஒரே நேரத்தில் உணர
முடியும். ஒருவர், குறிப்பிட்ட எண்ணுள்ள முகப்புகளையுடைய மணிகளினால்
செய்யப்பட்டதை கூட அணியலாம்.
எல்லோரும் உருத்திராக்கத்தை அணியலாமா?
அணியலாம். பால், வயது, பண்பாடு, இனம், நிலம், சமயப் பின்னணி குறித்த எந்தவிதப்பாகு பாடுமின்றி எல்லோரும் இதை அணியலாம். எட்டு வயதுக்குட்பட்டவர்களால் எல்லா மணிகளையும் அணிய முடியாது.
உருத்திராக்கத்தின் தாக்கத்தை ஒருவர் உணர்ந்து கொள்ள எத்தனை நாட்கள் ஆகும்?
ஒருவர் தனது உள்ளங்கையில் உருத்திராக்கத்தைப் பிடித்த மாத்திரத்திலேயே அதனுடைய
குறிப்பிடத்தக்க தாக்கத்தை உணர முடியும் என்பது வெளிப்படை. இது ஆற்றலோடு
இலேசாக அதிரும் சக்தியுடையது. இது அவரவர் உடல் மின்சக்தி ஆற்றலைப்
பொறுத்தது.
இந்த உருத்திராக்க மணிகளுடைய உண்மைத் தன்மையை எவ்வாறு சோதிக்கலாம்?
நீரில் மூழ்கும் மணிகள் உண்மையானவை. நீரில் மிதக்கும் மணிகள் போலியானவை என்ற
அடிப்படையில் நிகழ்த்தும் சோதனைகள் சரியானவை அல்ல. மரத்தினால் செய்யப்பட்டு
உள்ளே ஈயத்தை அடைத்துள்ள மணிகள் கூட நீரில் எளிதாக மூழ்கிவிடும். இவற்றை
நம்பகமான இடத்தில் நம்பிக்கையான நண்பர் மூலம் பெறுவது சிறந்த வழியாகும்.
ஒரு நல்ல உருத்திராக்கத்தினை நாம் எவ்வாறு தேர்தெடுக்கலாம்?
உருத்திராக்கத்தின் உருவம், அளவு பற்றி பலருக்கு குழப்பம் ஏற்படுகின்றது. இவை குறித்து அதிகம்
கவலைப்பட வேண்டாம். நன்கு வரையறுக்கப்பட்ட முகங்கள், சிறு மணி போன்ற
அமைப்புகள், மேடுபள்ளக் கோடுகள் இவையெல்லாம் இயல்பானதாக அமைந்துள்ளனவா
என்று பார்க்க வேண்டும். அத்துடன் நடுவிலுள்ள துளைக்கு அருகில் வெடிப்புகள்
இல்லாது இருக்கின்றனவா என்றும் பார்க்க வேண்டும். சிறிய அளவிலுள்ள மணிகள்
கூட மங்களகரமானவைகள்.
உருத்திராக்கத்தை அணிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?
உருத்திராக்க அணிந்திருக்கும் போது செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை என்று
எதுவுமில்லை. நமது புனித நூல்களின்படி உருத்திராக்கத்தை எப்போதும்
அணியலாம். அவற்றை நம்பிக்கை, மரியாதை, அன்பு ஆகிய பண்புகளுடன் அணிய
வேண்டும். இந்துக்கள் மட்டும்தான் இதை அணிய வேண்டும் என்றில்லை. எல்லோரும்
உருத்திராக்கத்தை அணியலாம்.
உருத்திராக்க மணிகள் எவ்வளவு காலத்திற்கு இருக்கும்?
எத்தனை ஆண்டுகளுக்கும் இவை இருக்கலாம். இவற்றை நன்கு பாதுகாத்து வைத்துக் கொண்டால் தலைமுறை தலைமுறையாகக் கூட வைத்துக் கொள்ளலாம்.
ஒரு குடும்பத்தில் வாழ்பவர்கள் கழுத்து மாலைகள், ஜபமாலைகள் உருத்திராக்க மணிகள் ஆகியவற்றை மாற்றிக் கொள்ளலாமா?
இல்லை. உருத்திராக்கத்திற்கு அதை அணிபவருக்கும் இடையே ஒருவகை உறவுண்டு. இது மிக அந்தரங்கமானது. இதை வேறோருவருடனும் பகிர்ந்து கொள்ளக் கூடாது. ஆனால்,
இவற்றை ஒருவரின் வாழ்விறுதிக்குப் பின்பு மற்றவர் பயன்படுத்தலாம்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: உருத்திராட்சம் - முகமும் பலனும்
அரிய தகவல்கள் லக்ஷ்மணா.... அன்பு நன்றிகள் பகிர்வுக்கு...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![உருத்திராட்சம் - முகமும் பலனும் - Page 2 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
Page 2 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» உருத்திராட்சம் அணிவது ஏன்?
» உருத்திராட்சம் எனும் உருத்திராக்கம்
» மந்த்ர ஜபம் - முறையும் பலனும்
» மூளையும் முகமும்
» பிள்ளையார் பிடிக்க….பொருளும் – பலனும்
» உருத்திராட்சம் எனும் உருத்திராக்கம்
» மந்த்ர ஜபம் - முறையும் பலனும்
» மூளையும் முகமும்
» பிள்ளையார் பிடிக்க….பொருளும் – பலனும்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|