Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Today at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. முதல்கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது
Page 1 of 1
அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. முதல்கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது
தமிழக சட்டசபை தேர்தலுக்கு அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. முதல்கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது
சென்னை, பிப்.25- தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.- தே.மு.தி.க. கட்சிகளுக்கிடையே தொகுதி பங்கீடு குறித்து முதல்கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது.
அ.தி.மு.க. கூட்டணி
தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி அமைப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சிக்கு 3 இடங்களும், புதிய தமிழகம் கட்சிக்கு 2 இடங்களும், மூவேந்தர் முன்னணி கழகம் மற்றும் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி, அகில இந்திய குடியரசு கட்சிகளுக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது. விருத்தாசலம் தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. மற்ற தொகுதிகளில் தே.மு.தி.க.வுக்கு சராசரியாக 10 ஆயிரம் ஓட்டுகள் வரை கிடைத்திருந்தது.
கடந்த சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்ட தே.மு.தி.க. வருகிற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுமா? அல்லது தனித்து போட்டியிடுமா? என்பது கேள்விக்குறியாக இருந்து வந்தது.
தே.மு.தி.க. பேச்சு
இந்த நிலையில் நேற்று மாலை தே.மு.தி.க. அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், இளைஞர் அணி மாநில செயலாளர் சுதீஷ், பொருளாளர் சுந்தரராஜன் ஆகியோர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு வந்தனர்.
இவர்களை அ.தி.மு.க. தேர்தல் குழு தலைவர் ஓ.பன்னீர்செல்வம், தலைமை நிலைய செயலாளர் செங்கோட்டையன், தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் வரவேற்று அழைத்து சென்றனர்.
இதைத்தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு பேச்சுவார்த்தை தொடங்கியது. இரவு 7 மணி வரை பேச்சுவார்த்தை நீடித்தது. பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த தே.மு.தி.க. அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க. கூட்டணியில்...
இருதரப்பிலும் வருகிற சட்டசபை தேர்தலில் எவ்வாறு தொகுதிகளை பங்கிட்டு போட்டியிடுவது என்பது குறித்து ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்த பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது. மீண்டும் சந்தித்து பேச இருக்கிறோம். வருகிற தேர்தலில் தமிழ்நாடு அரசியலில் ஒரு மாற்றத்தை தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள். மக்களின் எதிர்பார்ப்பினை நிறைவேற்றுகிற வகையில் அரசியலில் உள்ள எதிர்க்கட்சியினர் ஓர் அணியாக திரண்டு மக்களின் உணர்வுகளுக்கு வடிவம் கொடுக்கிற வகையில் இந்த கூட்டணி உருவாக வேண்டும். அதனால்தான் இன்று தேசிய முற்போக்கு திராவிட கழகம், அ.தி.மு.க. தலைமையில் இயங்குகிற கூட்டணியில் பங்கு பெறுவதற்கு பேச்சுவார்த்தையை ஆரம்பித்திருக்கிறது. இந்த கூட்டணி மக்கள் விரும்புகிற கூட்டணி. ஆகவே, வெற்றி கூட்டணியாக மலரும் என்ற முழு நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.
இவ்வாறு பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.
ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தை
இதன்பின்பு, அவரிடம், நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- அ.தி.மு.க. கூட்டணியில் எத்தனை தொகுதிகளை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?
பதில்:- இவைகளெல்லாம் ஆரம்பக்கட்டத்தில் இருக்கின்றன. எத்தனை தொகுதி என்பதை பேசி விரைவில் முடிவு எடுப்போம். எத்தனை தொகுதி என்பது முக்கியமல்ல. இப்போது உள்ள ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதுதான் முக்கியம்.
கேள்வி:- அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், அந்த ஆட்சியில் இடம் பெறுவீர்களா?
பதில்:- நாங்கள் இதுபற்றி ஏற்கனவே தெளிவுபடுத்தியிருக்கிறோம். அமைச்சரவையில் இடம் பெறவேண்டும் என்ற ஆசை எங்களுக்கு கிடையாது.
இவ்வாறு பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.
ஜெயலலிதா
பேச்சுவார்த்தை முடிவடைந்ததும், தொகுதி பங்கீட்டு குழுவில் இடம்பெற்றுள்ள ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் ஜெயலலிதாவை போயஸ்கார்டனில் சந்தித்து பேசினார்கள். அப்போது பேச்சுவார்த்தையில் நடைபெற்ற விவரங்களை ஜெயலலிதாவிடம் விரிவாக எடுத்து கூறினார்கள்.
பின்னர் இதுதொடர்பாக அ.தி.மு.க தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "அ.தி.மு.க.-தே.மு.தி.க. தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது'' என்று கூறப்பட்டுள்ளது.
தினதந்தி
சென்னை, பிப்.25- தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.- தே.மு.தி.க. கட்சிகளுக்கிடையே தொகுதி பங்கீடு குறித்து முதல்கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது.
அ.தி.மு.க. கூட்டணி
தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி அமைப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சிக்கு 3 இடங்களும், புதிய தமிழகம் கட்சிக்கு 2 இடங்களும், மூவேந்தர் முன்னணி கழகம் மற்றும் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி, அகில இந்திய குடியரசு கட்சிகளுக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது. விருத்தாசலம் தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. மற்ற தொகுதிகளில் தே.மு.தி.க.வுக்கு சராசரியாக 10 ஆயிரம் ஓட்டுகள் வரை கிடைத்திருந்தது.
கடந்த சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்ட தே.மு.தி.க. வருகிற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுமா? அல்லது தனித்து போட்டியிடுமா? என்பது கேள்விக்குறியாக இருந்து வந்தது.
தே.மு.தி.க. பேச்சு
இந்த நிலையில் நேற்று மாலை தே.மு.தி.க. அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், இளைஞர் அணி மாநில செயலாளர் சுதீஷ், பொருளாளர் சுந்தரராஜன் ஆகியோர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு வந்தனர்.
இவர்களை அ.தி.மு.க. தேர்தல் குழு தலைவர் ஓ.பன்னீர்செல்வம், தலைமை நிலைய செயலாளர் செங்கோட்டையன், தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் வரவேற்று அழைத்து சென்றனர்.
இதைத்தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு பேச்சுவார்த்தை தொடங்கியது. இரவு 7 மணி வரை பேச்சுவார்த்தை நீடித்தது. பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த தே.மு.தி.க. அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க. கூட்டணியில்...
இருதரப்பிலும் வருகிற சட்டசபை தேர்தலில் எவ்வாறு தொகுதிகளை பங்கிட்டு போட்டியிடுவது என்பது குறித்து ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்த பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது. மீண்டும் சந்தித்து பேச இருக்கிறோம். வருகிற தேர்தலில் தமிழ்நாடு அரசியலில் ஒரு மாற்றத்தை தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள். மக்களின் எதிர்பார்ப்பினை நிறைவேற்றுகிற வகையில் அரசியலில் உள்ள எதிர்க்கட்சியினர் ஓர் அணியாக திரண்டு மக்களின் உணர்வுகளுக்கு வடிவம் கொடுக்கிற வகையில் இந்த கூட்டணி உருவாக வேண்டும். அதனால்தான் இன்று தேசிய முற்போக்கு திராவிட கழகம், அ.தி.மு.க. தலைமையில் இயங்குகிற கூட்டணியில் பங்கு பெறுவதற்கு பேச்சுவார்த்தையை ஆரம்பித்திருக்கிறது. இந்த கூட்டணி மக்கள் விரும்புகிற கூட்டணி. ஆகவே, வெற்றி கூட்டணியாக மலரும் என்ற முழு நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.
இவ்வாறு பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.
ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தை
இதன்பின்பு, அவரிடம், நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- அ.தி.மு.க. கூட்டணியில் எத்தனை தொகுதிகளை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?
பதில்:- இவைகளெல்லாம் ஆரம்பக்கட்டத்தில் இருக்கின்றன. எத்தனை தொகுதி என்பதை பேசி விரைவில் முடிவு எடுப்போம். எத்தனை தொகுதி என்பது முக்கியமல்ல. இப்போது உள்ள ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதுதான் முக்கியம்.
கேள்வி:- அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், அந்த ஆட்சியில் இடம் பெறுவீர்களா?
பதில்:- நாங்கள் இதுபற்றி ஏற்கனவே தெளிவுபடுத்தியிருக்கிறோம். அமைச்சரவையில் இடம் பெறவேண்டும் என்ற ஆசை எங்களுக்கு கிடையாது.
இவ்வாறு பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.
ஜெயலலிதா
பேச்சுவார்த்தை முடிவடைந்ததும், தொகுதி பங்கீட்டு குழுவில் இடம்பெற்றுள்ள ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் ஜெயலலிதாவை போயஸ்கார்டனில் சந்தித்து பேசினார்கள். அப்போது பேச்சுவார்த்தையில் நடைபெற்ற விவரங்களை ஜெயலலிதாவிடம் விரிவாக எடுத்து கூறினார்கள்.
பின்னர் இதுதொடர்பாக அ.தி.மு.க தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "அ.தி.மு.க.-தே.மு.தி.க. தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது'' என்று கூறப்பட்டுள்ளது.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» அமெரிக்கா-தலீபான் இடையே புதிய பேச்சுவார்த்தை: பாகிஸ்தானில் தொடங்கியது
» தியானம் செய்வது எப்படி?- முதற்கட்ட பயிற்சி
» முடிந்தது முதல்கட்ட மக்களவைத் தேர்தல்: திரிபுராவில் 81%, மணிப்பூரில் 78% வாக்குப்பதிவு
» கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறது: கமல்
» அ.தி.மு.க., தே.மு.தி.க., பேச்சுவார்த்தை
» தியானம் செய்வது எப்படி?- முதற்கட்ட பயிற்சி
» முடிந்தது முதல்கட்ட மக்களவைத் தேர்தல்: திரிபுராவில் 81%, மணிப்பூரில் 78% வாக்குப்பதிவு
» கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறது: கமல்
» அ.தி.மு.க., தே.மு.தி.க., பேச்சுவார்த்தை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|