Latest topics
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…by ayyasamy ram Today at 15:15
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 15:12
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 15:10
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 15:05
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:03
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 15:01
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 14:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 14:54
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:46
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 14:25
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:15
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 13:56
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:38
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 13:30
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:21
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:48
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 9:46
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:19
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:41
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 0:20
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:19
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:05
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 19:48
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 7:03
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 0:58
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 0:52
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:48
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:30
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06
» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33
நிகழ்நிலை நிர்வாகிகள்
நடுக் கடலில் திட்டு வாங்கிய நாகை மீனவர்கள்
4 posters
Page 1 of 1
நடுக் கடலில் திட்டு வாங்கிய நாகை மீனவர்கள்
காரைக்கால், நாகப்பட்டினம், கோட்டைப்பட்டினம் ஆகிய இடங்களில்
இருந்து மீனவர்களையும் படகுகளையும் கடத்திச் சென்று,
'இந்தியக் கடல் பகுதியும் தங்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது’ என்பதை
மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறது இலங்கை அரசு. சமீபத்தில் கடத்திச்
செல்லப்பட்ட தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் மீட்கப் பேச்சு
நடத்தி, இங்கே கொண்டுவந்திருக்கிறது இந்திய அரசு. இந்த முறை மீனவனின் உரிமை
பறிக்கப்பட்டதே தவிர, உயிர் பறிக்கப்படவில்லை என்பதுதான் ஆறுதல்!
கிட்டத்தட்ட நான்கு நாட்கள் சிங்களவர்
கட்டுப்பாட்டில் சிறைவைக்கப்பட்ட நாகை மீனவர்கள் சொந்த ஊருக்குக் கடந்த
19-ம் தேதி வந்து சேர்ந்தனர். ''இனிமேல் தொழிலுக்குப் போவதைவிட பட்டினி
கிடந்து சாகலாம்...'' என்று சலிப்போடு சொல்கிறார்கள் நமது மீனவர்கள்.
அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த மணியிடம் பேசினோம்... ''என்ன சொல்றதுங்க... இங்கதான், 'தமிழக
மீனவர்கள்’னு
நாம சொல்றோம். ஆனா, அவங்களுக்கு நாங்க 'இந்திய நாயிங்க’தான்!
வார்த்தைக்கு வார்த்தை இந்திய தே------- ( கெட்ட வார்த்தை)னுதான்
திட்டுறாங்க!'' என்று ஆக்ரோஷப்பட்டவர், அடியும் திட்டும் கிடைத்த அந்தக்
கொடிய நிமிடங்களைத் தொடர்ந்து விவரித்தார்.
''44-வது நாட்டிக்கல் அருகே நாங்க வலையை இறக்கிக்
காத்திருந்தப்ப... 'சோதனை’ன்னு சொல்லி திமுதிமுனு 100-க்கும் மேற்பட்ட
படகுகளில் வந்தாங்க இலங்கை ஆட்கள். அந்தக் கூட்டத்தில் சிங்களமீனவங்களும்,
கடற்படையும் இருந்தாங்களான்னு சரியாத் தெரியலை. எங்க படகுகிட்ட வந்ததுமே
கல், கட்டை, பாட்டில்னு வீசி அடிக்க ஆரம்பிச்சாங்க. பயந்துபோய் அப்படியே
படகுக்குள்ள படுத்துட்டோம். இன்ஜினையும் அணைச்சுட்டோம். அப்போ, இரண்டு பேர்
படகுக்குள் குதிச்சு, கத்தியால் ஜி.பி.எஸ்-ஸை அறுத்து கடலில் வீசினாங்க.
கூடவே, அடியும் திட்டும் கிடைச்சது. எல்லாத்தையும் தாங்கிட்டு அப்படியே
கிடந்தோம். எங்களைப்போல, பக்கத்தில் இருந்த மத்த படகுகளையும் பிடிச்சு
எல்லாரையும் ஒண்ணா சேர்த்து, அப்படியே அவங்க நாட்டுக் கரைக்குக்
கொண்டுபோனாங்க...'' என்றார் வெறுப்போடு.
அன்று மட்டும் மொத்தம் 18 படகுகளை சிறைப்பிடித்து
இருக்கின்றனர் இலங்கை மீனவர்கள். (இந்த நிலையில், மறுநாள்
கோட்டைப்பட்டினம் மீனவர்கள் 24 பேரையும் பிடித்துச் சென்றனர்!) அங்கே
மீனவர் தலைவர்கள், போலீஸ், சிங்களக் கடற்படை, ராணுவம் ஆகியோர் நமது
மீனவர்களை எதிர்கொண்டு பருத்தித்துறைக்கு அழைத்துச் சென்று ஒரு கல்லூரியில்
வைத்து இருக்கிறார்கள். அங்குதான் ஒருநாள் முழுவதும் விசாரணை என்ற பெயரில்
ஏச்சும் பேச்சும் தொடர்ந்திருக்கிறது. மறுநாள் நீதிமன்றத்தில்
ஆஜர்படுத்த... நீதிபதி ஸ்ரீநிதிகுலசேகரன் இவர்களை 28-ம் தேதி வரை சிறையில்
வைக்க உத்தரவிட்டார்.
![நடுக் கடலில் திட்டு வாங்கிய நாகை மீனவர்கள் P21a](https://2img.net/h/new.vikatan.com/jv/2011/02/27/images/p21a.jpg)
சிறையில் இருந்ததையும் அங்கு இருந்து
விடுதலையானதையும் விவரிக்கிறார் மீனவர் கந்தசாமி. ''கோர்ட்டுல, 'எங்க
நாட்டுக்குள் வந்து மீன் பிடிக்கிறது தப்பில்லையா?’ என்று நீதிபதி கேட்க...
'வேறு வழி இல்லைங்க, மீன் பிடிக்கணும்னு வந்துட்டு, சும்மா போக முடியாம
மீனைத் தேடி கூடுதல் தூரம் வந்துட்டோம்னு!’ சொன்னோம். ஆனாலும், அவர்
நீதிமன்றக் காவலில் அடைச்சுட்டார். யாழ்ப்பாணம் ஜெயிலில் எங்களைத் தனியா
அடைச்சாங்க. ஒரு கைலியும், பனியனும் மட்டும் கொடுத்தாங்க. ஜெயிலில்
சுகாதார வசதிகள் எதுவுமே இல்லை. ஆனா, மந்திரி டக்ளஸ் தேவானந்தா, இந்தியத்
தூதர் மகாலிங்கம்னு ஆள் மாத்தி ஆள் வந்து பார்த்துகிட்டே இருந்ததால்
எங்களுக்குக் கொஞ்சம் ஆறுதலா இருந்துச்சு. நீதிமன்றத்தில்
ஆஜர்படுத்தும்போதே, 'எங்க படகுகளைப் பார்த்துக்க எங்களில் ஒரு படகுக்கு
ஒருவர் வீதம் 18 பேரை மட்டும் விடுவிக்கணும்’னு கேட்டிருந்தோம். அதுக்கு
மட்டும் அனுமதி கொடுத்திருந்தாங்க. ஆனா படகுக்குப் போய் பார்த்தா... அதில்
இருந்த வலை, பெட்டி, டீசல், ஐஸ் பாக்ஸ், மீன் இருப்பதைக் காட்டும் கருவி,
எக்கோ கருவி, திசை காட்டும் ஜி.பி.எஸ்-னு எல்லாத்தையும் சூறையாடிட்டாங்க.
குறைஞ்சபட்சம் ஒரு போட்டுக்கு![நடுக் கடலில் திட்டு வாங்கிய நாகை மீனவர்கள் Rupee_symbol](https://2img.net/h/new.vikatan.com/images/rupee_symbol.png)
2 லட்சம் நஷ்டம். வலைகளையும் எடுத்துக்கிட்டு, சும்மா ஒரு வலையை மட்டும்
விட்டுவைச்சிருந்தாங்க. எதை வேணாலும் எடுத்துக்கிடட்டும். ஆனா, அசிங்கமாப்
பேசுறதையும், உயிரை எடுக்கிறதையும் ரொம்பக் கேவலம்னு அங்கே சந்தித்த
மீனவர்களிடமும் அதிகாரிகளிடமும் சொல்லிட்டுத்தான் வந்தோம்...'' என்றார்.
'எல்லை தாண்டி வந்தால் சுடுவதை எதிர்த்து,
தமிழ்நாட்டில் இப்போது கிளம்பி இருக்கும் கடும் எதிர்ப்பை சமாளிக்க ஒரே
நாளில் இவ்வளவு பேர் எங்கள் எல்லைக்குள் வருகிறார்கள்!’ என்று வெளி
உலகுக்குக் காட்டவே இப்படிச் செய்கிறதாம் சிங்கள ராணுவம்!
இந்திய அரசு இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறது?
- கரு.முத்துநன்றி விகடன்
'இந்தியக் கடல் பகுதியும் தங்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது’ என்பதை
மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறது இலங்கை அரசு. சமீபத்தில் கடத்திச்
செல்லப்பட்ட தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் மீட்கப் பேச்சு
நடத்தி, இங்கே கொண்டுவந்திருக்கிறது இந்திய அரசு. இந்த முறை மீனவனின் உரிமை
பறிக்கப்பட்டதே தவிர, உயிர் பறிக்கப்படவில்லை என்பதுதான் ஆறுதல்!
கிட்டத்தட்ட நான்கு நாட்கள் சிங்களவர்
கட்டுப்பாட்டில் சிறைவைக்கப்பட்ட நாகை மீனவர்கள் சொந்த ஊருக்குக் கடந்த
19-ம் தேதி வந்து சேர்ந்தனர். ''இனிமேல் தொழிலுக்குப் போவதைவிட பட்டினி
கிடந்து சாகலாம்...'' என்று சலிப்போடு சொல்கிறார்கள் நமது மீனவர்கள்.
![நடுக் கடலில் திட்டு வாங்கிய நாகை மீனவர்கள் P21b](https://2img.net/h/new.vikatan.com/jv/2011/02/27/images/p21b.jpg)
![நடுக் கடலில் திட்டு வாங்கிய நாகை மீனவர்கள் P21](https://2img.net/h/new.vikatan.com/jv/2011/02/27/images/p21.jpg)
நாம சொல்றோம். ஆனா, அவங்களுக்கு நாங்க 'இந்திய நாயிங்க’தான்!
வார்த்தைக்கு வார்த்தை இந்திய தே------- ( கெட்ட வார்த்தை)னுதான்
திட்டுறாங்க!'' என்று ஆக்ரோஷப்பட்டவர், அடியும் திட்டும் கிடைத்த அந்தக்
கொடிய நிமிடங்களைத் தொடர்ந்து விவரித்தார்.
''44-வது நாட்டிக்கல் அருகே நாங்க வலையை இறக்கிக்
காத்திருந்தப்ப... 'சோதனை’ன்னு சொல்லி திமுதிமுனு 100-க்கும் மேற்பட்ட
படகுகளில் வந்தாங்க இலங்கை ஆட்கள். அந்தக் கூட்டத்தில் சிங்களமீனவங்களும்,
கடற்படையும் இருந்தாங்களான்னு சரியாத் தெரியலை. எங்க படகுகிட்ட வந்ததுமே
கல், கட்டை, பாட்டில்னு வீசி அடிக்க ஆரம்பிச்சாங்க. பயந்துபோய் அப்படியே
படகுக்குள்ள படுத்துட்டோம். இன்ஜினையும் அணைச்சுட்டோம். அப்போ, இரண்டு பேர்
படகுக்குள் குதிச்சு, கத்தியால் ஜி.பி.எஸ்-ஸை அறுத்து கடலில் வீசினாங்க.
கூடவே, அடியும் திட்டும் கிடைச்சது. எல்லாத்தையும் தாங்கிட்டு அப்படியே
கிடந்தோம். எங்களைப்போல, பக்கத்தில் இருந்த மத்த படகுகளையும் பிடிச்சு
எல்லாரையும் ஒண்ணா சேர்த்து, அப்படியே அவங்க நாட்டுக் கரைக்குக்
கொண்டுபோனாங்க...'' என்றார் வெறுப்போடு.
அன்று மட்டும் மொத்தம் 18 படகுகளை சிறைப்பிடித்து
இருக்கின்றனர் இலங்கை மீனவர்கள். (இந்த நிலையில், மறுநாள்
கோட்டைப்பட்டினம் மீனவர்கள் 24 பேரையும் பிடித்துச் சென்றனர்!) அங்கே
மீனவர் தலைவர்கள், போலீஸ், சிங்களக் கடற்படை, ராணுவம் ஆகியோர் நமது
மீனவர்களை எதிர்கொண்டு பருத்தித்துறைக்கு அழைத்துச் சென்று ஒரு கல்லூரியில்
வைத்து இருக்கிறார்கள். அங்குதான் ஒருநாள் முழுவதும் விசாரணை என்ற பெயரில்
ஏச்சும் பேச்சும் தொடர்ந்திருக்கிறது. மறுநாள் நீதிமன்றத்தில்
ஆஜர்படுத்த... நீதிபதி ஸ்ரீநிதிகுலசேகரன் இவர்களை 28-ம் தேதி வரை சிறையில்
வைக்க உத்தரவிட்டார்.
![நடுக் கடலில் திட்டு வாங்கிய நாகை மீனவர்கள் P21a](https://2img.net/h/new.vikatan.com/jv/2011/02/27/images/p21a.jpg)
சிறையில் இருந்ததையும் அங்கு இருந்து
விடுதலையானதையும் விவரிக்கிறார் மீனவர் கந்தசாமி. ''கோர்ட்டுல, 'எங்க
நாட்டுக்குள் வந்து மீன் பிடிக்கிறது தப்பில்லையா?’ என்று நீதிபதி கேட்க...
'வேறு வழி இல்லைங்க, மீன் பிடிக்கணும்னு வந்துட்டு, சும்மா போக முடியாம
மீனைத் தேடி கூடுதல் தூரம் வந்துட்டோம்னு!’ சொன்னோம். ஆனாலும், அவர்
நீதிமன்றக் காவலில் அடைச்சுட்டார். யாழ்ப்பாணம் ஜெயிலில் எங்களைத் தனியா
அடைச்சாங்க. ஒரு கைலியும், பனியனும் மட்டும் கொடுத்தாங்க. ஜெயிலில்
சுகாதார வசதிகள் எதுவுமே இல்லை. ஆனா, மந்திரி டக்ளஸ் தேவானந்தா, இந்தியத்
தூதர் மகாலிங்கம்னு ஆள் மாத்தி ஆள் வந்து பார்த்துகிட்டே இருந்ததால்
எங்களுக்குக் கொஞ்சம் ஆறுதலா இருந்துச்சு. நீதிமன்றத்தில்
ஆஜர்படுத்தும்போதே, 'எங்க படகுகளைப் பார்த்துக்க எங்களில் ஒரு படகுக்கு
ஒருவர் வீதம் 18 பேரை மட்டும் விடுவிக்கணும்’னு கேட்டிருந்தோம். அதுக்கு
மட்டும் அனுமதி கொடுத்திருந்தாங்க. ஆனா படகுக்குப் போய் பார்த்தா... அதில்
இருந்த வலை, பெட்டி, டீசல், ஐஸ் பாக்ஸ், மீன் இருப்பதைக் காட்டும் கருவி,
எக்கோ கருவி, திசை காட்டும் ஜி.பி.எஸ்-னு எல்லாத்தையும் சூறையாடிட்டாங்க.
குறைஞ்சபட்சம் ஒரு போட்டுக்கு
![நடுக் கடலில் திட்டு வாங்கிய நாகை மீனவர்கள் Rupee_symbol](https://2img.net/h/new.vikatan.com/images/rupee_symbol.png)
2 லட்சம் நஷ்டம். வலைகளையும் எடுத்துக்கிட்டு, சும்மா ஒரு வலையை மட்டும்
விட்டுவைச்சிருந்தாங்க. எதை வேணாலும் எடுத்துக்கிடட்டும். ஆனா, அசிங்கமாப்
பேசுறதையும், உயிரை எடுக்கிறதையும் ரொம்பக் கேவலம்னு அங்கே சந்தித்த
மீனவர்களிடமும் அதிகாரிகளிடமும் சொல்லிட்டுத்தான் வந்தோம்...'' என்றார்.
'எல்லை தாண்டி வந்தால் சுடுவதை எதிர்த்து,
தமிழ்நாட்டில் இப்போது கிளம்பி இருக்கும் கடும் எதிர்ப்பை சமாளிக்க ஒரே
நாளில் இவ்வளவு பேர் எங்கள் எல்லைக்குள் வருகிறார்கள்!’ என்று வெளி
உலகுக்குக் காட்டவே இப்படிச் செய்கிறதாம் சிங்கள ராணுவம்!
இந்திய அரசு இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறது?
- கரு.முத்துநன்றி விகடன்
Re: நடுக் கடலில் திட்டு வாங்கிய நாகை மீனவர்கள்
இந்திய ரோந்து படையினர் இந்திய எல்லைக்குள் இந்திார் அல்லாத நாட்டு கப்பலோ அல்லது படகுகள வந்தால் பார்க்கவேண்டியவர்கள்...
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: நடுக் கடலில் திட்டு வாங்கிய நாகை மீனவர்கள்
இதெற்கெல்லாம் ஒரு முற்றுப் புள்ளிக் கிடையாது..அவ்வாரு முற்றுப்புள்ளி வைத்தால் இவர்களெல்லாம் அரசியல் பண்ண முடியாது..
thillalangadi- பண்பாளர்
- பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011
Re: நடுக் கடலில் திட்டு வாங்கிய நாகை மீனவர்கள்
இரு மடி வலைகள் நம் மீனவர்கள் பயன் படுதுவதால் இயர்க்கை வளம் அளிகிறது என்பது அவர்கள் வாதம். மீனவ நண்பர்கள் விளக்கவும்.
தமிழ் இன திரோகி ''ராஜபக்சே '' எவ்வித சந்தேகம் இல்லை.
தமிழ் இன திரோகி ''ராஜபக்சே '' எவ்வித சந்தேகம் இல்லை.
positivekarthick- தளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நாகை மீனவர்கள் 13 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்
» கச்சா எண்ணெயுடன் கவிழ்ந்தது பார்ஜர் நாகை கடலில் எண்ணெய் படலம்
» கடலில் 25 அதிராம்பட்டினம் மீனவர்கள் மாயம்: புயலில் சிக்கினர்?
» கடலில் தாக்குதலுக்கு இலக்காவதை கண்டித்து தமிழக மீனவர்கள் உண்ணாவிரதம்
» திட்டு - ஒரு பக்க கதை
» கச்சா எண்ணெயுடன் கவிழ்ந்தது பார்ஜர் நாகை கடலில் எண்ணெய் படலம்
» கடலில் 25 அதிராம்பட்டினம் மீனவர்கள் மாயம்: புயலில் சிக்கினர்?
» கடலில் தாக்குதலுக்கு இலக்காவதை கண்டித்து தமிழக மீனவர்கள் உண்ணாவிரதம்
» திட்டு - ஒரு பக்க கதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|