புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுபாஷ் சந்திர போஸ் Poll_c10சுபாஷ் சந்திர போஸ் Poll_m10சுபாஷ் சந்திர போஸ் Poll_c10 
65 Posts - 63%
heezulia
சுபாஷ் சந்திர போஸ் Poll_c10சுபாஷ் சந்திர போஸ் Poll_m10சுபாஷ் சந்திர போஸ் Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
சுபாஷ் சந்திர போஸ் Poll_c10சுபாஷ் சந்திர போஸ் Poll_m10சுபாஷ் சந்திர போஸ் Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
சுபாஷ் சந்திர போஸ் Poll_c10சுபாஷ் சந்திர போஸ் Poll_m10சுபாஷ் சந்திர போஸ் Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
சுபாஷ் சந்திர போஸ் Poll_c10சுபாஷ் சந்திர போஸ் Poll_m10சுபாஷ் சந்திர போஸ் Poll_c10 
1 Post - 1%
viyasan
சுபாஷ் சந்திர போஸ் Poll_c10சுபாஷ் சந்திர போஸ் Poll_m10சுபாஷ் சந்திர போஸ் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுபாஷ் சந்திர போஸ் Poll_c10சுபாஷ் சந்திர போஸ் Poll_m10சுபாஷ் சந்திர போஸ் Poll_c10 
257 Posts - 44%
heezulia
சுபாஷ் சந்திர போஸ் Poll_c10சுபாஷ் சந்திர போஸ் Poll_m10சுபாஷ் சந்திர போஸ் Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
சுபாஷ் சந்திர போஸ் Poll_c10சுபாஷ் சந்திர போஸ் Poll_m10சுபாஷ் சந்திர போஸ் Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
சுபாஷ் சந்திர போஸ் Poll_c10சுபாஷ் சந்திர போஸ் Poll_m10சுபாஷ் சந்திர போஸ் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
சுபாஷ் சந்திர போஸ் Poll_c10சுபாஷ் சந்திர போஸ் Poll_m10சுபாஷ் சந்திர போஸ் Poll_c10 
17 Posts - 3%
prajai
சுபாஷ் சந்திர போஸ் Poll_c10சுபாஷ் சந்திர போஸ் Poll_m10சுபாஷ் சந்திர போஸ் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சுபாஷ் சந்திர போஸ் Poll_c10சுபாஷ் சந்திர போஸ் Poll_m10சுபாஷ் சந்திர போஸ் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சுபாஷ் சந்திர போஸ் Poll_c10சுபாஷ் சந்திர போஸ் Poll_m10சுபாஷ் சந்திர போஸ் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சுபாஷ் சந்திர போஸ் Poll_c10சுபாஷ் சந்திர போஸ் Poll_m10சுபாஷ் சந்திர போஸ் Poll_c10 
7 Posts - 1%
mruthun
சுபாஷ் சந்திர போஸ் Poll_c10சுபாஷ் சந்திர போஸ் Poll_m10சுபாஷ் சந்திர போஸ் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுபாஷ் சந்திர போஸ்


   
   
avatar
subash
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 17/04/2009

Postsubash Wed Feb 23, 2011 2:30 pm

ரத மணித் திருநாட்டில் திரு அவதாரம் செய்த எத்தனையோ
தலைவர்கள் இருக்கிறார்கள். அதிலே நமக்குத் தெரிந்த பிரபலமான தலைவர்கள் பலர்
இருந்தாலும் சுதந்திரப் போராட்டத்தில் குறிப்பிட்டுச் சொல்லும்படி பணி
ஆற்றிய எத்தனையோ தலைவர்களில் நம் அனைவராலும் "நேதாஜி" என்று அன்புடன்
அழைக்கப் படும் திரு சுபாஷ் சந்திர போஸ் அவர்களில் முக்கியமானவர்.
சமீபத்தில் நம் இந்தியாவில் தகவல்கள் பெறும் சட்டம் ஏற்படுத்தப் பட்டதும்
ஒருவர் திரு நேதாஜி பற்றிய தகவல்கள் அவருக்கு மிக அவசரமாய்த் தேவைப்
பட்டதால் இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தை நாட அமைச்சகம் கையை விரித்து
விட்டது. "நேதாஜியா? யார் அவர்? எங்கே இருந்தார்? சுதந்திரப் போராட்ட
வீரரா? அப்படி ஒண்ணும் எங்க கிட்டே தகவல் இல்லையே?"னு சொல்லி விட்டது.
சொன்னவர் யாரோ படிக்காதவர் இல்லை. இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தில்
பொறுப்பான பதவி வகிப்பவர். ஒரு வருடம் முன்னால் இதைத் தின்சரிப்
பத்திரிகைகளில் படிச்சதில் இருந்தே மனம் கொதிப்படைந்தது. இன்றைய நாட்களில்
விளம்பரம் எதுக்கும் தேவைப் படுகிறது. ஆனால் திரு நேதாஜி நாட்டின்
நலத்தையும், அதன் விடுதலையையும், மக்களின் சுதந்திரத்தையும் மட்டுமே
முதன்மையாக நினைத்தவர். அதற்காகப் பதவியைத் துறக்கவும் சித்தமாய்
இருந்ததோடு துறந்தும் காட்டியவர். மக்கள் தலைவர். அவரைப் பின்பற்றிய
அநேகரில் தமிழ்நாட்டவர் தான் அதிகம். ஆனால் இன்றய தலைமுறை அதிகம் அவரை
அறிந்திருக்கவில்லை.

ஒரிஸா மாநிலம் கட்டாக் ஜில்லாவில் 1897-ம் ஆண்டு ஜனவரி மாதம் 23-ம் தேதி
திரு ஜானகிநாத் போஸுக்கும், பிரபாவதி போஸுக்கும் 6வது மகனாய்ப் பிறந்தார்
திரு சுபாஷ் சந்திர போஸ் அவர்கள். அவருக்குப் பின் 2 குழந்தைகள் பிறந்தன
அவர் பெற்றோருக்கு. 8 குழந்தைகளில் ஒருவரான போஸுக்கு வீட்டில் அவ்வளவாய்க்
கவனிப்பு இல்லை என்றாலும் தந்தை படிக்க அனுப்பியது கல்கத்தாவில் உள்ள
பிரசித்தியான ஆங்கிலேயப் பள்ளிக்கு. எல்லாக் குழந்தைகளையும் அங்கே
அனுப்பிப் படிக்க வைத்த அவர் தந்தை போஸையும் அங்கே அனுப்பி வைத்தார்.
மிகவும் நன்றாய்ப் படித்து வந்த போஸ் அவர்கள் இந்தியர்களின் குழந்தைகள்
அந்தப் பள்ளியில் நடத்தப் பட்ட விதத்தில் மேலும் மனம் வருந்தினார். படிப்பு
முடிந்ததும் அவர் தந்தை அவரை மேல் படிப்புக்காகவும் அந்தக் கால கட்டத்தில்
மிகவும் உயர் படிப்பெனக் கருதப் பட்ட ஐ.சி.எஸ். தேர்வு எழுதவும் போஸ்
அவர்களை 1920-ல் இங்கிலாந்துக்கு அனுப்பினார். மனமே இல்லாமல் சென்ற போஸ்
அவர்கள் 8 மாதங்களிலேயே ஐ.சி.எஸ்.ஸில் முதல் இடத்தில் தேர்ச்சி பெற்றதோடு
அல்லாமல் அங்கேயே நல்ல வேலையிலும் அமர்ந்தார். மேலதிகாரியின் நடத்தையில்
மனம் வெறுத்துப் போய் போஸ் வேலையை ராஜினாமா செய்து விட்டு இந்தியா
திரும்பினார்.

சுதந்திரப் போராட்டம் காந்தியைத் தலைவராகக் கொண்டு வேகம் பிடித்திருந்த
அந்தக் கால கட்டத்தில் தாய்நாடு திரும்பிய போஸ் அவர்கள் முதலில் இளைஞர்
காங்கிரஸ் காரியதரிசியாக இருந்தார். அப்போது அவருக்குத் "தேசபந்து
சித்தரஞ்சன் தாஸ்" அவர்களுடன் நல்லுறவு ஏற்படவே இருவரும் கல்கத்தா
முனிசிபல் தேர்தல்களில் தங்கள் உழைப்பினால் வெற்றி பெற்றனர். மேயராய்த்
தேர்ந்தெடுக்கப் பட்ட சி.ஆர். தாஸ் சில நாட்களில் இறந்து விட்டார்.
காந்தியின் தலைமையில் இயங்கி வந்த காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியக்
காரியக் கமிட்டியின் காரியதரிசியாக 1927-ல் தேர்ந்தெடுக்கப் பட்ட போஸுக்கு
காந்தியைத் தரிசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. வேகம் நிறைந்த போஸ்
அவர்களுக்கு காந்தியின் மென்மையான அணுகுமுறையும், நிதானமான போக்கும்
பிடிக்கவில்லை. ஏமாற்றம் அடைந்தார் என்றே சொல்ல வேண்டும். இந்தப்
போரட்டங்களில் பல முறை சிறைக்குச் சென்றார் போஸ். என்றாலும் அவர் மனம்
உறுதிப் பட்டது. சற்றும் மனம் சலிக்கவில்லை.

1931-ம் ஆண்டு முதன் முறையாக அகில இந்தியக் காங்கிரஸ் தலைவராய்த்
தேர்ந்தெடுக்கப் பட்ட போஸ் அவர்கள் தவிர்க்க முடியாமல் 2 ஆண்டுகளில்
ஐரோப்பா சென்றார். ஐரோப்பாவில் இருந்து திரும்பியதும் மீண்டும் காங்கிரஸில்
சேர்ந்து உழைத்தார். 1938-ல் இரண்டாம் முறையாக அகில இந்தியக் காங்கிரஸ்
தலைவராய்த் தேர்ந்தெடுக்கப் பட்ட போஸுக்கு ஆதரவு நிறையவே இருந்தது. அவரின்
அணுகுமுறையும் அனைவரையும் கவர்ந்தது. அவரின் சொற்பொழிவோ என்றால் கேட்கவே
வேண்டாம். அனைவரையும் சுண்டி இழுத்தது. கவியரசர் ரவீந்திர நாத் தாகூர் போஸ்
காங்கிரஸ் தலைவர் ஆனதைத் தன்னுடைய சாந்தி நிகேதனில் மிகவும்
மகிழ்ச்சியுடன் கொண்டாடினார் என்றால் மற்ற சாதாரண மக்களைப் பற்றிச் சொல்லவா
வேண்டும்?

2-வது முறையாக போஸ் தேர்ந்தெடுக்கப் பட்டார் என்று நேற்று எழுதி இருந்தேன்.
முதலில் 1938-ல் திரிபுராவில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் மகாநாட்டில்
காந்தியே போஸின் பெயரை முன்மொழிந்து, வழி மொழிந்து அவர் காங்கிரஸின்
தலைவராக வர ஏற்பாடு செய்தார். ஒரே வருஷத்தில் மனம் மாறிய காந்தி 1939-ல்
திரிபுரா காங்கிரஸில் நேருவையும், பட்டேலையும் புதிய தேர்தலில் நிற்கச்
சொன்னார். ஆனால் இருவரும் மறுக்கவே பட்டாபி சீதாராமையாவை தன்னுடைய
வேட்பாளராக நிறுத்தினார். ஒரு வேளை இளம் புயல் ஆன போஸ் காங்கிரஸில்
துடிப்புடன் செயல்பட்டு வந்த காரணத்தால் அவரைத் தன் பால் ஈர்த்துக் கொள்வது
சுலபம் என்று நினைத்தாரோ என்னவோ காந்தி அவர்கள், தெரியாது. ஏனெனில்
ஏற்கெனவ போஸ் தேச ப்ந்து சி.ஆர். தாஸைத் தன் குருவாக ஏற்றுக்
கொண்டிருந்ததையும் அவருடன் சேர்ந்து பல முறை சிறை சென்று ஒரு முறை நாடும்
கடத்தப் பட்டதில் போஸின் பெயரும் சரி, அவரின் உழைப்பும் சரி, மிக உயர்ந்த
இடத்துக்கு வந்திருந்தது. அதுவும் ஐரோப்பாவிற்கு அவர் சென்ற சமயம் உயர்
பதவிகள் வகிக்கும் முக்கியத் தலைவர்களுடன் சந்திப்பு ஏற்பட்டு அவர்களுடன்
நட்புறவும் கொண்டார். இதுவும் அவரின் சாமர்த்தியமான் அணுகு முறை என்பதால்
போஸ் பெயர் நாடு முழுதும் பிரபலமாய் இருந்தது. காந்தி அதை விரும்பவில்லை.
அதைத் தனக்குச் சாதகமாய் உபயோகிக்க முயன்ற காந்தியால் போஸைத் தன்
இஷ்டத்துக்கு வளைக்க முயன்று தோற்றுப் போனார் என்றே சொல்ல வேண்டும்.
(காந்தி ஆதரவாளர்கள் மன்னிக்க வேண்டும். காந்தியின் பேரைக் கெடுக்கும்
எண்ணம் ஏதும் இல்லை. இத்தனை நாள் கழிச்சு என் ஒருத்தியால் அது முடியவும்
முடியாது.)செய்வதறியாது திகைத்த காந்தி அடிகளிடம் ஏற்கெனவே மன வருத்தத்தில்
இருந்து வந்தார். 1931-ல் அப்போது தூக்கில் இடப்பட்ட பகத்சிங், ராஜ்குரு,
சக்தேவ் போன்றவர்களை காந்தி ஆதரித்து ஆங்கிலேய அரசிடம் பேசுவார் என போஸ்
எதிர்பார்த்தார்.

ஆனால் காந்தி அந்தச் சம்பவத்தைப் பற்றி வாயே திறக்கவில்லை. போஸுக்கு அதில்
ஏமாற்றம் தான் என்றாலும் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. அவரளவில் அவர்
தான் தலைவராக இருந்தார். இன்னும் சொல்லப் போனால் முதன் முதல் காந்தியை,
"மகாத்மா" என்றதும் போஸ் தான். 1939-ல் திரிபுராவில் கூடிய காங்கிரஸ்
கூட்டத்தில் காங்கிரஸின் மூத்த தலைவர்களால் போஸின் செயல்பாடுகள் சரியில்லை
எனவும் அவரை நீக்க வேண்டும் என்றும் முடிவு எடுக்கப் பட்டது. அந்தக்
கூட்டத்துக்கு காந்தி போகவில்லை. போகாமல் நிராகரித்தார். ஆனால் அந்தக்
கூட்டத்தில் எடுக்கப் பட்ட முடிவுகளை நிராகரிக்கவில்லை. போஸ் இடைவிடாமல்
காந்தியை அணுகி மூத்தவர்களின் இந்தக் கசப்பான அணுகுமுறையை மாற்ற
வேண்டினார். ஆனால் காந்தி செவி கொடுக்கவில்லை. மெளனம் சாதித்தார். மூத்த
தலைவர்களுக்கோ என்றால் போஸின் இந்தப் பெயர், புகழை மங்கச் செய்து அவரின்
அரசியல் வாழ்வே முடிந்து விடும் இத்தோடு என்ற எண்ணம். காந்திக்கும் உள்ளூர
அந்த எண்ணம் இருந்திருக்குமோ என்னவோ? அவரும் பேசாமலே இருந்தார். ஏற்கெனவே
பட்டாபி சீதாராமையாவின் தோல்வியால் தனக்கு ஏற்பட்ட சொந்தத் தோல்வி என
நினைத்த காந்தி போஸ் காங்கிரஸை விட்டு வெளியே செல்வதையே விரும்பினார்.
அதற்காக காந்தி எல்லாவிதமான தந்திரங்களும் செய்தார் என்றே சொல்ல வேண்டும்.

காந்தி செய்தது சரியா? தப்பா? தெரியாது. போஸைக் கண்டு பயந்தாரா என்றும்
தெரியாது. காந்தி ஆதரவாளர்களுக்கு இதை ஒத்துக் கொள்ள முடியாது. காந்தியை
விட போஸ் அப்படி ஒண்ணும் பிரபலம் இல்லை. அவர் சிறிய அளவில் தான்
தெரிந்தவர், காந்தி அப்படி இல்லை எனச் சொல்வார்கள். அப்படி என்றால் காந்தி
ஏன் போஸ் தலைமை வகிப்பதில் அசெளகரியம் அடைய வேண்டும்? அவருக்கு என்ன
தொந்திரவு போஸால் ஏற்பட்டது? போஸ் தலைமை வகிப்பதை ஏன் காந்தி
விரும்பவில்லை? காந்தியை ஆலோசிக்காமல் எதுவும் போஸ் தன்னிச்சையாகச் செய்தது
இல்லை. வேகம் தேவை அவருக்கு. அதற்குக் காந்தியுடன் வாதாடுவார். காந்தியின்
அஹிம்சைக் கொள்கையினால் சுதந்திரம் தாமதப் படும் என்பது அவர் கருத்து.
ஆனால் காந்தியோ என்றால் ஆங்கிலேய அரசை விட போஸின் தலைமையையும் அவர்
புகழையும் கண்டு அதிகம் பயந்தாரோ என்று சொல்லும்படி அவர் நடவடிக்கை
இருந்தது அந்தச் சமயத்தில். இன்றளவும் வங்காளியர் எவரும் காந்தி திரிபுரா
காங்கிரஸில் போஸுக்குச் செய்த அநியாயத்தை மறக்கவில்லை. அவர்களைப்
பொறுத்தவரை போஸுக்குப் பின் தான் மகாத்மா.

பல புத்தகங்களைப் படித்துவிட்டும், என்னோட அப்பா, தாத்தா, ஆசிரியர்கள்
இன்னும் பலர் கூறியதையும் வைத்தே இவற்றை எழுதி உள்ளேன். இவை நூற்றுக்கு
நூறு உண்மையான செய்திகளே[img][/img]


அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Feb 23, 2011 2:39 pm

உண்மைதான் சுதந்திர இந்தியாவின் கதாநாயகன் போஸ் ஆனால் இந்தியா அரசு சொல்வது போல் அவர் விமான விபத்தில் இறக்கவில்லை ஏனெனில் இறுதிவரை போஸ் போர்க்குற்றவாளியாகவே காங்கிரஸ் அரசால் கருதப்பட்டார் பசும்பொன் தேவர் இரண்டு ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கைக்கு பின் மதுரயில் நடந்த பொதுக்கூட்டத்தில் நான் நேதாஜியை சந்தித்தேன் நலமுடன் உள்ளார் யென முழங்கியது குறிப்பிடதக்கது பின் அவரும் காங்கிரஸ் அரசின் காழ்ப்புணர்ச்சிக்கு ஆட்பட்டு குறிவைத்து மரணத்தை நோக்கி தள்ளபட்டார் இல்லை கொன்றனர்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Feb 23, 2011 9:19 pm

நல்ல பதிவு




சுபாஷ் சந்திர போஸ் Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக