ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏரிகருப்பண்ண சாமி (யூத்புல் விகடனில் வந்த எனது சிறுகதை)

+5
தாமு
சிவா
கலைவேந்தன்
Aathira
priyamudanprabu
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஏரிகருப்பண்ண சாமி (யூத்புல் விகடனில் வந்த எனது சிறுகதை) - Page 2 Empty ஏரிகருப்பண்ண சாமி (யூத்புல் விகடனில் வந்த எனது சிறுகதை)

Post by priyamudanprabu Mon Feb 21, 2011 8:07 pm

First topic message reminder :

ஏரிகருப்பண்ண சாமி (யூத்புல் விகடனில் வந்த எனது சிறுகதை)
ஏரிகருப்பண்ண சாமி


வீட்டின் முன்கதவு மூடியிருந்தது. “அம்மா எங்க போயிருக்கும்” என்று யோசித்தபோது,”யார்ய்யா அது.. சரசு மவனா?”- என குரல் கேட்டது. அது நடராசு மாமா வீட்டு பெரியசாமி தாத்தாவுடையது. “ஆமா தாத்தா” என்றபடியே அவர் இருக்கும் எதிர்வீட்டு திண்ணைக்கு போனான்.படுத்துஇருந்த அவர் மெல்ல எழுந்தார். பலமாக இருமினார் ..

“அம்மா கோயிலுக்கு போயிருக்கு, செத்த நேரத்துல வந்துடும்,இங்கன வந்து உக்காரு” என்றார். தன் புத்தகப் பையை திண்ணை மேல் வைத்துவிட்டு, பக்கத்தில் இருந்த மணல் மூட்டையின் மேல் கால் வைத்து ஏறி திண்ணையில் உட்காந்தான்.

“ எங்க போய்ட்டு வார?”

“டியுசனுக்கு”

“ஆரு தமிழ் அய்யாகிட்டயா?”

“ம்ம்ம்..”

பின் அவர் ஏதேதோ பேச இவன் ஆர்வம் இல்லதவனாய் இருந்தான்.

“தாத்தா ராத்திரிக்கு இங்கேயேவா படுத்துகுவிங்க??” என கேட்டான்.

“ஆமா ராசா , ஏ கேக்குற””

“பேய் வராத தாத்தா?”

“பேயா ? அதெல்லம் வராது”

“இல்ல…. அன்னிக்கு ஒரு நா , நான் திண்ணையில படுத்து தூங்கிட்டேன்,அப்ப ராசா சித்தப்பா வந்து , இங்க படுத்தா ராத்திரி பேய் வரும் உள்ள போயி படுன்னு சொன்னரு அதா(ன்) கேட்டேன்”-என்றான்

“பேயெல்லாம் வராது , சாமிதான் வரும்”
“சாமியா ?? எந்த சாமி ?”
“ஏரிகருப்பண்ண சாமி “
“ ம்ம் எனக்கு தெரியும் , பாண்டமங்கலம் காவேரி அக்கா வூட்டுக்கு போறப்ப பார்த்தேன், பெரிய மீச, பெரிய்ய்ய அருவா வச்சுகிட்டு வான ஒசரம் இருந்துச்சு , ஒரு வெள்ள குதிரையும்,ஒரு கருப்பு நாயும் கூட இருந்துச்சு”
“ஆமய்யா அதுதான் நம்ம ஊர காவகாக்குற சாமி, ராத்திரி ஆச்சுனா குதிரையில ஊருக்குள்ள வந்து போகும்”
“ நீ பாத்திருக்கியா தாத்தா”
“ம்ம்ம் , ஒரு நா நான் நல்ல தூங்கிட்டு இருந்தப்ப , டொக்டொக் டொக்டொக்-ன்னு சத்தம் கேட்டுச்சு , நானும் போர்வைய வெளக்கி பாத்தேன். நல்லா கண்ண பறிக்கிற மாதிரி வெள்ள வெளேருன்னு குதிர , அது மேல தங்க நிறதுல சாமி உட்காந்திருந்துச்சு..” என்று அவர் சொன்ன போது இவன் அவரை நெருங்கி அமர்ந்துகொண்டான். அப்படியே அந்த சிந்தனையில் இருந்த தாத்தாவிடம் “ ம்ம் அப்புறம் என்ன ஆச்சு..” என்று கேட்டான்

“ம்ம் சாமி வாரப்ப நாம தொந்தரவு செய்யா கூடாது,அதனால போர்வைய இழுத்து போத்தி துங்கிட்டேன்.இப்பவும் தென(ம்) டொக்டொக்-ன்னு சத்தம் கேக்கும், நான் எந்திரிக்க மாட்டேன்” என்றவர் மீண்டும் பலமாக இருமினார்.
கோவிலுக்கு போன அவன் அம்மா திரும்பி வருவது தெரிந்தது. “நாளைக்கு எளஞ்செழியன் டாக்டர்கிட்ட ஊசி போட்டுக்குங்க ,உடம்பு சரியாகிடும் “ என்று தாத்தாவிடம் சொல்லிவிட்டு தன் அம்மாவிடம் ஓடினான்

வீட்டில் சாப்பிட்டுவிட்டு துங்கியவன் மனசெல்லாம் வெள்ளை குதிரையும் கருப்புசாமியும் இருந்தது . அவன்
தூக்கத்திலும் “டொக்டொக் டொக்டொக்” சத்தம் கேட்டது. வெகுதூரத்தில் கேட்ட சத்தம் மெல்ல மெல்ல நெருங்கி அவன் தெருவில் நுழைந்து அவன் வீட்டு வாசலில்
வந்து நின்றது, அதே வெள்ளை குதிரையில் கருப்பண்ண சாமி .
“ஏ பெரியசாமி… வா நேரமாச்சு போகலாம்” என்று சாமி திண்ணையில் படுத்திருந்த தாத்தாவை கூப்பிட்டவுடன் தாத்தா எழுந்து வந்தார். அருகில் வந்த அவரை சாமி தன் குதிரைமேல் தூக்கி வைத்துக்கொண்டு புறப்பட்டது. மீண்டும் “டொக்டொக் டொக்டொக்” சத்தம் .

காலையில் கண்விழித்த போது , நன்கு விடிந்து இருந்தது . முன்வாசலில் வழக்கத்துக்கு மாறாக மரபென்ச் போட்டு அதில் ஆட்கள் அமர்ந்திருந்தார்கள் . கண்ணை கசக்கியபடியே வெளியே வந்தான். “எப்ப எழுப்பிவிட்டேன்,இப்பதான் எழுதிருச்சியா..நேரமாச்சு பள்ளிகோடத்துக்கு பொறப்படு..” என்று சொல்லிகொண்டே சென்றாள் அவன் அம்மா மிகவும் பரபரப்பாக.
வழக்கமான தன் காலைகடன்களை முடித்துகொண்டு பள்ளிக்கு புறப்பட்டான்.அப்போது வந்த அவன் சித்தப்பா அவனிடம் கொஞ்சம் காசு கொடுத்து “பலக்காரன் கடையில பரோட்டா சாப்பிட்டு பள்ளிகோடம் போ” – என்றார் . “ஏ அம்ம சோறு ஆக்கலயா” என்று கேட்டான்,இல்லை என்று பதில் வந்தது . ஏன் என்று கேட்க எண்ணியவன் பரோட்டாவை நினைத்துகொண்டு கேட்கவில்லை
புத்தகப்பையை எடுத்துகொண்டு வெளியே வந்தான். எதிர்வீட்டுக் கூரைக்கும் இவன் வீட்டுக் கூரைக்கும் இடையே பந்தல் போடும் வேலை நடந்துகொண்டிருந்தது , சற்று தூரத்துல் பறை அடிப்பவர்கள் நெருப்பு மூட்டி பறையை அதில் காட்டிக்கொண்டிருந்தார்கள் , நேற்று கண்ட கனவை தாத்தாவிடம் சொல்லலாம் என எண்ணி திண்ணையில் தாத்தாவை தேடினான் .அவர் இல்லை . தாத்தா என்கே என அம்மவிடம் கேட்டன் “இன்னுமா பள்ளிகோடம் போகல, சீக்கிரம் போ..” என விரட்டினாள்
தாத்தாவை சாமி எங்க கூட்டிகிட்டு போயிருக்கும் ?? என எண்ணியபடி பள்ளிக்கூடம் நோக்கி நடந்தான் .

***
http://priyamudan-prabu.blogspot.com/2011/02/blog-post_21.html

.


அன்பே கடவுள் ....
" கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன் " - "அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..." - பிரபு(ஆனந்த) சுவாமிகள்
http://priyamudan-prabu.blogspot.com/
avatar
priyamudanprabu
பண்பாளர்


பதிவுகள் : 160
இணைந்தது : 08/10/2010

http://priyamudan-prabu.blogspot.com/

Back to top Go down


ஏரிகருப்பண்ண சாமி (யூத்புல் விகடனில் வந்த எனது சிறுகதை) - Page 2 Empty Re: ஏரிகருப்பண்ண சாமி (யூத்புல் விகடனில் வந்த எனது சிறுகதை)

Post by பாலாஜி Tue Feb 22, 2011 1:19 pm

வாழ்த்துகள் பிரபு! கதை சிறப்பாக உள்ளது.

கதையின் தொடக்கமும் , முடிவும் குதிரை ஒட்ட பந்தயத்தை போல சிறப்பாக அமைந்துள்ளது.

எழுத்து உலகில் புகழ் பெற வாழ்த்துக்கள்.....


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஏரிகருப்பண்ண சாமி (யூத்புல் விகடனில் வந்த எனது சிறுகதை) - Page 2 Empty Re: ஏரிகருப்பண்ண சாமி (யூத்புல் விகடனில் வந்த எனது சிறுகதை)

Post by மஞ்சுபாஷிணி Tue Feb 22, 2011 4:09 pm

சிந்தனை அருமை பிரபு....
தாத்தாவின் இறப்பை அந்த குழந்தை கனவாய் அறிந்திருக்கிறது....
இது கதை போன்று நினைத்து படிக்க முடியவில்லை...
நிஜம்மாவே பார்த்திருக்கீங்களா ஏரிக்கருப்பண்ணனை காவல்தெய்வம் என்று கேட்கவைக்கிறது கதை...
அருமையான கதையை யூத்ஃபுல் விகடன் தேர்ந்தெடுத்தமைக்கு என் அன்பு பாராட்டுக்கள்.... அங்கு கொடுத்த கதையை எங்களுக்கு வாசிக்க இங்கே தந்தமைக்கு அன்பு நன்றிகள் பிரபு....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஏரிகருப்பண்ண சாமி (யூத்புல் விகடனில் வந்த எனது சிறுகதை) - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஏரிகருப்பண்ண சாமி (யூத்புல் விகடனில் வந்த எனது சிறுகதை) - Page 2 Empty Re: ஏரிகருப்பண்ண சாமி (யூத்புல் விகடனில் வந்த எனது சிறுகதை)

Post by உதயசுதா Tue Feb 22, 2011 4:11 pm

கலை சொன்ன மாதிரி இது அட அப்டின்னு சொல்ல வச்ச கதைதான்


ஏரிகருப்பண்ண சாமி (யூத்புல் விகடனில் வந்த எனது சிறுகதை) - Page 2 Uஏரிகருப்பண்ண சாமி (யூத்புல் விகடனில் வந்த எனது சிறுகதை) - Page 2 Dஏரிகருப்பண்ண சாமி (யூத்புல் விகடனில் வந்த எனது சிறுகதை) - Page 2 Aஏரிகருப்பண்ண சாமி (யூத்புல் விகடனில் வந்த எனது சிறுகதை) - Page 2 Yஏரிகருப்பண்ண சாமி (யூத்புல் விகடனில் வந்த எனது சிறுகதை) - Page 2 Aஏரிகருப்பண்ண சாமி (யூத்புல் விகடனில் வந்த எனது சிறுகதை) - Page 2 Sஏரிகருப்பண்ண சாமி (யூத்புல் விகடனில் வந்த எனது சிறுகதை) - Page 2 Uஏரிகருப்பண்ண சாமி (யூத்புல் விகடனில் வந்த எனது சிறுகதை) - Page 2 Dஏரிகருப்பண்ண சாமி (யூத்புல் விகடனில் வந்த எனது சிறுகதை) - Page 2 Hஏரிகருப்பண்ண சாமி (யூத்புல் விகடனில் வந்த எனது சிறுகதை) - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஏரிகருப்பண்ண சாமி (யூத்புல் விகடனில் வந்த எனது சிறுகதை) - Page 2 Empty Re: ஏரிகருப்பண்ண சாமி (யூத்புல் விகடனில் வந்த எனது சிறுகதை)

Post by priyamudanprabu Tue Feb 22, 2011 4:32 pm

வை.பாலாஜி wrote:வாழ்த்துகள் பிரபு! கதை சிறப்பாக உள்ளது.

கதையின் தொடக்கமும் , முடிவும் குதிரை ஒட்ட பந்தயத்தை போல சிறப்பாக அமைந்துள்ளது.

எழுத்து உலகில் புகழ் பெற வாழ்த்துக்கள்.....

அந்த கதையும் முழு கற்பனை அல்ல . சிறுவனின் அம்மா திரும்பி வரும் வரை அவன் தாத்தாவுடன் பேசிகொண்டிருப்பவை எல்லாம் என் வாழ்வில் நடந்தவை , அந்த சிறுவன் நான்தான் ,அதில் வரும் ராஜா சித்தப்பா,நடராஜ் மாமா ,தமிழ் அய்யா, தாத்தா எல்லாம் நிஜம் (சாமியை தவிர)ஹ ஹ
தாத்தா இப்போ உயிரோடு இல்லை , அவர் அன்று என்னோடு பேசியதை சமிபத்தில் நினைத்து பார்த்த போது இப்படி கதையை எழுதினேன்

நன்றி




அன்பே கடவுள் ....
" கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன் " - "அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..." - பிரபு(ஆனந்த) சுவாமிகள்
http://priyamudan-prabu.blogspot.com/
avatar
priyamudanprabu
பண்பாளர்


பதிவுகள் : 160
இணைந்தது : 08/10/2010

http://priyamudan-prabu.blogspot.com/

Back to top Go down

ஏரிகருப்பண்ண சாமி (யூத்புல் விகடனில் வந்த எனது சிறுகதை) - Page 2 Empty Re: ஏரிகருப்பண்ண சாமி (யூத்புல் விகடனில் வந்த எனது சிறுகதை)

Post by priyamudanprabu Tue Feb 22, 2011 4:33 pm

மஞ்சுபாஷிணி wrote:சிந்தனை அருமை பிரபு....
தாத்தாவின் இறப்பை அந்த குழந்தை கனவாய் அறிந்திருக்கிறது....
இது கதை போன்று நினைத்து படிக்க முடியவில்லை...
நிஜம்மாவே பார்த்திருக்கீங்களா ஏரிக்கருப்பண்ணனை காவல்தெய்வம் என்று கேட்கவைக்கிறது கதை...
அருமையான கதையை யூத்ஃபுல் விகடன் தேர்ந்தெடுத்தமைக்கு என் அன்பு பாராட்டுக்கள்.... அங்கு கொடுத்த கதையை எங்களுக்கு வாசிக்க இங்கே தந்தமைக்கு அன்பு நன்றிகள் பிரபு....

அந்த கதையும் முழு கற்பனை அல்ல . சிறுவனின் அம்மா திரும்பி வரும் வரை அவன் தாத்தாவுடன் பேசிகொண்டிருப்பவை எல்லாம் என் வாழ்வில் நடந்தவை , அந்த சிறுவன் நான்தான் ,அதில் வரும் ராஜா சித்தப்பா,நடராஜ் மாமா ,தமிழ் அய்யா, தாத்தா எல்லாம் நிஜம் (சாமியை தவிர)ஹ ஹ
தாத்தா இப்போ உயிரோடு இல்லை , அவர் அன்று என்னோடு பேசியதை சமிபத்தில் நினைத்து பார்த்த போது இப்படி கதையை எழுதினேன்

நன்றி



அன்பே கடவுள் ....
" கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன் " - "அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..." - பிரபு(ஆனந்த) சுவாமிகள்
http://priyamudan-prabu.blogspot.com/
avatar
priyamudanprabu
பண்பாளர்


பதிவுகள் : 160
இணைந்தது : 08/10/2010

http://priyamudan-prabu.blogspot.com/

Back to top Go down

ஏரிகருப்பண்ண சாமி (யூத்புல் விகடனில் வந்த எனது சிறுகதை) - Page 2 Empty Re: ஏரிகருப்பண்ண சாமி (யூத்புல் விகடனில் வந்த எனது சிறுகதை)

Post by மஞ்சுபாஷிணி Tue Feb 22, 2011 4:53 pm

அட அருமையா இருக்குப்பா... இன்னும் இது போன்று நிறைய கதைகளை இங்கே தாங்க.. நாங்களும் ரசித்து படிப்போம்ல...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஏரிகருப்பண்ண சாமி (யூத்புல் விகடனில் வந்த எனது சிறுகதை) - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஏரிகருப்பண்ண சாமி (யூத்புல் விகடனில் வந்த எனது சிறுகதை) - Page 2 Empty Re: ஏரிகருப்பண்ண சாமி (யூத்புல் விகடனில் வந்த எனது சிறுகதை)

Post by priyamudanprabu Sat Feb 26, 2011 8:49 am

பிரகாசம் wrote:ஏரிகருப்பண்ண சாமி (யூத்புல் விகடனில் வந்த எனது சிறுகதை) - Page 2 677196 ஏரிகருப்பண்ண சாமி (யூத்புல் விகடனில் வந்த எனது சிறுகதை) - Page 2 677196 ஏரிகருப்பண்ண சாமி (யூத்புல் விகடனில் வந்த எனது சிறுகதை) - Page 2 677196 அருமை

நன்றி


அன்பே கடவுள் ....
" கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன் " - "அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..." - பிரபு(ஆனந்த) சுவாமிகள்
http://priyamudan-prabu.blogspot.com/
avatar
priyamudanprabu
பண்பாளர்


பதிவுகள் : 160
இணைந்தது : 08/10/2010

http://priyamudan-prabu.blogspot.com/

Back to top Go down

ஏரிகருப்பண்ண சாமி (யூத்புல் விகடனில் வந்த எனது சிறுகதை) - Page 2 Empty Re: ஏரிகருப்பண்ண சாமி (யூத்புல் விகடனில் வந்த எனது சிறுகதை)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum