Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladiesby VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம்
Page 1 of 1
மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம்
மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம்
மக்கள் மீதான போரும்!
கருத்துரிமை மீதான தாக்குதலும்!!
இடம் : தமிழரசி திருமண மண்டபம், மணிமண்டபம் அருகில் – தஞ்சாவூர்.
நாள் : 21.02.2011 திங்கள் மாலை 5 மணி.
அன்பார்ந்த தமிழ் மக்களே!
ஈழத் தமிழினத்தை அழித்தொழிக்க இராசபக்ச கும்பலைக் கொண்டு எல்லை தாண்டிய பயங்கரவாதப் போர் நடத்திய இந்திய அரசு இந்த நாட்டின் எல்லைகளுக்குள்ளேயும் மக்கள் மீது நெடுங்காலமாகக் கொடும்போர் புரிந்து வருகிறது. எப்படிக் காசுமீரத்திலும், வடகிழக்கிலும் தேசிய இனங்களை அடக்கி ஒடுக்கப் போர் நடத்துகிறதோ அப்படியே இந்தியாவின் நடுப்பகுதியில் தண்டகாருண்யப் பழங்குடி மக்கள் மீது போர் நடத்தி வருகிறது. பன்னாட்டுப் பெருகுழுமங்களுக்காக இயற்கை வளத்தைச் சூறையாடவும், பழங்குடி மக்களை விரட்டியடிக்கவும், ஆயுதப்படைகளையும், கூலிப்படைகளையும் கொண்டு இந்திய அரசு தொடுத்துள்ள தாக்குதலை எதிர்த்துப் பழங்குடி மக்கள் தங்கள் வாழ்வுரிமையைப் பாதுகாத்துக் கொள்வதற்காக வீரஞ்செறிந்த முறையில் போராடி வருகிறார்கள். இந்தப் போராட்டத்தைக் குறுதி சேற்றில் அமிழ்த்தி அழிப்பதற்காக இந்திய அரசு வழக்கம் போல் மாவோயிட்டு பயங்கரவாத பூச்சாண்டி காட்டி மக்களை ஏமாற்றி வருகிறது. இந்திய அரசு மக்கள் மீது தொடுத்துள்ள போருக்கு எதிராக நாடெங்கிலும் சனநாயக இயக்கங்களும், ஆர்வலர்களும் குரல் எழுப்பி வருகின்றனர். அருந்ததிராய் போன்ற எழுத்தாளர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் இந்திய அரசின் அடக்குமுறைக்கு உறுதியாக எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள்.
இக்காலகட்டத்தில் பழங்குடி மக்கள் மீதான பச்சை வேட்டைப் போரைத் தோலுரித்துக் காட்டியதைப் போலவே எழுத்தாளர் அருந்ததிராய் காசுமீர் மக்களுக்கு எதிரான இந்திய அரசின் அடக்குமுறையையும் கூர்மையாக அம்பலப்படுத்தினார். தில்லியில் நடைப்பெற்ற மாநாட்டில் உரையாற்றுகையில், காசுமீர் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி என்பது ஒரு வரலாற்றுப் பொய்யெனக் காட்டினார். இவ்வாறு அவர் உண்மை பேசியது இந்துத்துவ பாசிசுடுகளுக்கும் ஊடகப் பிற்போக்காளர்களுக்கும் ஆத்திரமூட்டுவதாய் அமைந்தது. அருந்ததிராயைச் சிறை செய்க! என்று அவர்கள் கூக்குரலிட்டார்கள். காசுமீர் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதியாக இருந்தது இல்லை என்ற பேச்சுக்காக என்னைத் தண்டிப்பதாக இருந்தால், மறைந்த பண்டித நேருவையும், இதே குற்றத்திற்காக தண்டிக்க வேண்டியிருக்கும் என்று அருந்ததிராய் முழங்கினார்.
அருந்ததிராய் மீதும், பேராசிரியர் கிலானி மீதும், எசு.ஏ.ஆர்.கிலானி, சபீர் அகமது சா போன்றோர் மீதும் இந்துத்துவப் பாசிசுடுகளும் பிற்போக்குக் காடையர்களும் நடத்திய தாக்குதலைக் கண்டித்து நாடெங்கும் சனநாயகச் சக்திகள் குரல் கொடுத்தன. தமிழகத்திலும் உள்நாட்டு அடக்குமுறை எதிர்ப்புக் கூட்டமைப்புச் சார்பில் கண்டனக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது.
ஒருபுறம் மக்கள் மீது இந்திய அரசு கொடும்போர் தொடுத்து வருகிறது. மறுபுறம் இந்தப் போரை எதிர்த்து மக்கள் பக்கம் நின்று பேசுபவர்களைக் கொடிய முறையில் ஒடுக்கி வருகிறது. இதன் அண்மைய வெளிப்பாடுதான் சத்தீசுகரில் உலகப் புகழ் பெற்ற மக்கள் நல மருத்துவர் பினாயக் சென்னுக்கு அரசதுரோகக் குற்றச்சாட்டின் பேரில் ஆயுள்சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாகும். கணிமவளங்களைக் கொளையடிக்க சத்தீசுகர் பழங்குடி மக்களை மலைக் கிராமங்களிலிருந்து விரட்டியடிப்பதற்காக அரசால் சட்ட விரோதமாக உருவாக்கப்பட்ட சல்வாயுதும் கூலிப்படையின் கொலைவெறியாட்டத்தை உலகிற்கு அம்பலப்படுத்திய குற்றத்திற்காகவே? பினாயக் சென்னுக்கு இக்கொடுந்தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசின் அதே அடக்குமுறைக் கொள்கையைத்தான் தமிழக அரசும் நடைமுறைப்படுத்தி வருகிறது. ஈழத் தமிழர்களுக்காகவும், தமிழக மீனவர்களுக்காகவும் குரல் கொடுத்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் சிறைப்படுத்தப்பட்டது. திருப்பூர் மாவட்டம் ஊத்தக்குழியில் தொடர்வண்டியைக் கவிழ்க்க முயன்றார்கள் என்ற பொய்க் குற்றச்சாட்டின் பேரில் புரட்சி புலிகள் மற்றும் அருந்ததியர் விடுதலை இயக்கத் தோழர்கள் சிறைப்படுத்தப்பட்டிருப்பதும் தமிழகமெங்கும் போராட்ட சக்திகள் மீது பொய் வழக்குகள் படையெடுத்துக் கொண்டிருப்பதும் தமிழக அரசின் கொடிய அடக்குமுறைப் போக்கிற்குச் சான்றுகளாகும். பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், பட்டினிப் போராட்டம் போன்ற இயல்பான எளிய வடிவங்களில் போராடுவதற்குக் கூட தடை விதிக்கும் காவல் துறையின் போக்கு நம் கருத்துரிமையின் கழுத்தை நெரிப்பதாக உள்ளது.
உலகமயம், தனியார்மயம், தாராளமயம், ஊழல்மயம் ஒன்றுகூடி உழைக்கும் மக்களின் வாழ்வுரிமையை ஒவ்வொரு நாளும் கேள்விக்குறியாக்கிக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில் இருப்பதைக் காக்கவும், இனியொரு விடியல் காணவும் போராடுவது தவிர நமக்கு வேறு வழியில்லை! கருத்துரிமைப் பறிப்பு என்பது நம் களத்தைப் பறிப்பதாகும்.
அணி திரள்வோம்! மாற்றம் ஏற்படுத்துவோம்!
இவண்,
இந்திய கம்யூனிட்டு கட்சி,
தமிழர் தேசிய இயக்கம்,
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம்,
தமிழ் தேசப் பொதுவுடமைக் கட்சி,
நாம் தமிழர் கட்சி,
ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம்,
தமிழர் தேசிய பேரவை,
இந்திய தேசிய மனித உரிமைகள் இயக்கம்,
இந்திய கம்யூனிட்டு கட்சி(மா-லெ) மகள் விடுதலை.
நிகழ்ச்சி நிரல்
தலைமை: தோழர் அய்யனாபுரம் சி.முருகேசன்.(பொதுச்செயலாளர், தமிழர் தேசிய இயக்கம்)
வரவேற்புரை: தோழர்.வி.விடுதலைவேந்தன் (ம.தி.மு.க.)
முன்னிலை : தோழர்கள்
இரா.திருஞானம்(இந்திய கம்யூனிட்டு கட்சி)
பழ.இராசேந்திரன்(த.தே.பொ.க.)
வழக்கறிஞர் அ.நல்லதுரை(நாம் தமிழர் கட்சி)
துரை.குபேந்திரன்(தமிழர் தேசியப் பேரவை)
இரா.அருணாசலம்(சி.பி.ஐ.[மா.லெ.] மக்கள் விடுதலை)
எசு.அப்துல்சப்பார்(தமிழ்நாடு முசுலீம் முன்னேற்றக் கழகம்)
பசு,கௌதமன்(திராவிட பெரியார் கழகம்)
பேரா.அரங்கசுப்பையா
வழக்கறிஞர்.மு.கரிகாலன்(இ.தே.ம.உரிமை இயக்கம்)
என்.குணசேகரன்(த.ச.வி.தொ.சங்கம்)
சிறப்புரை: தோழர்கள்
பேராசிரியர்.கிலானி(தில்லி பல்கலைக்கழக செயல்தலைவர். அரசியல் கைதிகளுக்கான விடுதலைக் குழு)
செ.ஐதர் அலி(பொதுச்செயலாளர், த.மு.மு.க.)
துரை.பாலகிருட்டிணன்(துணைப் பொதுச்செயலாளர், ம.தி.மு.க.)
மீ.த.பாண்டியன்(மாநிலச்செயலாளர்,இ.க.க.(மா.லே)மக்கள் விடுதலை
தியாகு(பொதுச்செயலாளர், தமிழ் தேசிய விடுதலை இயக்கம்)
வழக்கறிஞர். இரசினிகாந்த்(அமைப்பாளர், சாதி ஒழிப்பு விடுதலை முன்னனி)
கி.வெங்கட்ராமன்(தலைவர், செயற்குழு த.தே.பொ.க.)
வேலுச்சாமி(பொதுச்செயலாளர், ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம்)
நன்றியுரை : தோழர்.துரை மதிவாணன் ஒருங்கிணைப்பாளர்.
தொடர்புக்கு: 9003668024, 7598440607.
தஞ்சாவூருக்கு இன்று வர இயலும் அனைவரும் வருமாறு அன்புடன் வரவேற்கிறேன்.
மக்கள் மீதான போரும்!
கருத்துரிமை மீதான தாக்குதலும்!!
இடம் : தமிழரசி திருமண மண்டபம், மணிமண்டபம் அருகில் – தஞ்சாவூர்.
நாள் : 21.02.2011 திங்கள் மாலை 5 மணி.
அன்பார்ந்த தமிழ் மக்களே!
ஈழத் தமிழினத்தை அழித்தொழிக்க இராசபக்ச கும்பலைக் கொண்டு எல்லை தாண்டிய பயங்கரவாதப் போர் நடத்திய இந்திய அரசு இந்த நாட்டின் எல்லைகளுக்குள்ளேயும் மக்கள் மீது நெடுங்காலமாகக் கொடும்போர் புரிந்து வருகிறது. எப்படிக் காசுமீரத்திலும், வடகிழக்கிலும் தேசிய இனங்களை அடக்கி ஒடுக்கப் போர் நடத்துகிறதோ அப்படியே இந்தியாவின் நடுப்பகுதியில் தண்டகாருண்யப் பழங்குடி மக்கள் மீது போர் நடத்தி வருகிறது. பன்னாட்டுப் பெருகுழுமங்களுக்காக இயற்கை வளத்தைச் சூறையாடவும், பழங்குடி மக்களை விரட்டியடிக்கவும், ஆயுதப்படைகளையும், கூலிப்படைகளையும் கொண்டு இந்திய அரசு தொடுத்துள்ள தாக்குதலை எதிர்த்துப் பழங்குடி மக்கள் தங்கள் வாழ்வுரிமையைப் பாதுகாத்துக் கொள்வதற்காக வீரஞ்செறிந்த முறையில் போராடி வருகிறார்கள். இந்தப் போராட்டத்தைக் குறுதி சேற்றில் அமிழ்த்தி அழிப்பதற்காக இந்திய அரசு வழக்கம் போல் மாவோயிட்டு பயங்கரவாத பூச்சாண்டி காட்டி மக்களை ஏமாற்றி வருகிறது. இந்திய அரசு மக்கள் மீது தொடுத்துள்ள போருக்கு எதிராக நாடெங்கிலும் சனநாயக இயக்கங்களும், ஆர்வலர்களும் குரல் எழுப்பி வருகின்றனர். அருந்ததிராய் போன்ற எழுத்தாளர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் இந்திய அரசின் அடக்குமுறைக்கு உறுதியாக எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள்.
இக்காலகட்டத்தில் பழங்குடி மக்கள் மீதான பச்சை வேட்டைப் போரைத் தோலுரித்துக் காட்டியதைப் போலவே எழுத்தாளர் அருந்ததிராய் காசுமீர் மக்களுக்கு எதிரான இந்திய அரசின் அடக்குமுறையையும் கூர்மையாக அம்பலப்படுத்தினார். தில்லியில் நடைப்பெற்ற மாநாட்டில் உரையாற்றுகையில், காசுமீர் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி என்பது ஒரு வரலாற்றுப் பொய்யெனக் காட்டினார். இவ்வாறு அவர் உண்மை பேசியது இந்துத்துவ பாசிசுடுகளுக்கும் ஊடகப் பிற்போக்காளர்களுக்கும் ஆத்திரமூட்டுவதாய் அமைந்தது. அருந்ததிராயைச் சிறை செய்க! என்று அவர்கள் கூக்குரலிட்டார்கள். காசுமீர் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதியாக இருந்தது இல்லை என்ற பேச்சுக்காக என்னைத் தண்டிப்பதாக இருந்தால், மறைந்த பண்டித நேருவையும், இதே குற்றத்திற்காக தண்டிக்க வேண்டியிருக்கும் என்று அருந்ததிராய் முழங்கினார்.
அருந்ததிராய் மீதும், பேராசிரியர் கிலானி மீதும், எசு.ஏ.ஆர்.கிலானி, சபீர் அகமது சா போன்றோர் மீதும் இந்துத்துவப் பாசிசுடுகளும் பிற்போக்குக் காடையர்களும் நடத்திய தாக்குதலைக் கண்டித்து நாடெங்கும் சனநாயகச் சக்திகள் குரல் கொடுத்தன. தமிழகத்திலும் உள்நாட்டு அடக்குமுறை எதிர்ப்புக் கூட்டமைப்புச் சார்பில் கண்டனக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது.
ஒருபுறம் மக்கள் மீது இந்திய அரசு கொடும்போர் தொடுத்து வருகிறது. மறுபுறம் இந்தப் போரை எதிர்த்து மக்கள் பக்கம் நின்று பேசுபவர்களைக் கொடிய முறையில் ஒடுக்கி வருகிறது. இதன் அண்மைய வெளிப்பாடுதான் சத்தீசுகரில் உலகப் புகழ் பெற்ற மக்கள் நல மருத்துவர் பினாயக் சென்னுக்கு அரசதுரோகக் குற்றச்சாட்டின் பேரில் ஆயுள்சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாகும். கணிமவளங்களைக் கொளையடிக்க சத்தீசுகர் பழங்குடி மக்களை மலைக் கிராமங்களிலிருந்து விரட்டியடிப்பதற்காக அரசால் சட்ட விரோதமாக உருவாக்கப்பட்ட சல்வாயுதும் கூலிப்படையின் கொலைவெறியாட்டத்தை உலகிற்கு அம்பலப்படுத்திய குற்றத்திற்காகவே? பினாயக் சென்னுக்கு இக்கொடுந்தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசின் அதே அடக்குமுறைக் கொள்கையைத்தான் தமிழக அரசும் நடைமுறைப்படுத்தி வருகிறது. ஈழத் தமிழர்களுக்காகவும், தமிழக மீனவர்களுக்காகவும் குரல் கொடுத்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் சிறைப்படுத்தப்பட்டது. திருப்பூர் மாவட்டம் ஊத்தக்குழியில் தொடர்வண்டியைக் கவிழ்க்க முயன்றார்கள் என்ற பொய்க் குற்றச்சாட்டின் பேரில் புரட்சி புலிகள் மற்றும் அருந்ததியர் விடுதலை இயக்கத் தோழர்கள் சிறைப்படுத்தப்பட்டிருப்பதும் தமிழகமெங்கும் போராட்ட சக்திகள் மீது பொய் வழக்குகள் படையெடுத்துக் கொண்டிருப்பதும் தமிழக அரசின் கொடிய அடக்குமுறைப் போக்கிற்குச் சான்றுகளாகும். பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், பட்டினிப் போராட்டம் போன்ற இயல்பான எளிய வடிவங்களில் போராடுவதற்குக் கூட தடை விதிக்கும் காவல் துறையின் போக்கு நம் கருத்துரிமையின் கழுத்தை நெரிப்பதாக உள்ளது.
உலகமயம், தனியார்மயம், தாராளமயம், ஊழல்மயம் ஒன்றுகூடி உழைக்கும் மக்களின் வாழ்வுரிமையை ஒவ்வொரு நாளும் கேள்விக்குறியாக்கிக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில் இருப்பதைக் காக்கவும், இனியொரு விடியல் காணவும் போராடுவது தவிர நமக்கு வேறு வழியில்லை! கருத்துரிமைப் பறிப்பு என்பது நம் களத்தைப் பறிப்பதாகும்.
அணி திரள்வோம்! மாற்றம் ஏற்படுத்துவோம்!
இவண்,
இந்திய கம்யூனிட்டு கட்சி,
தமிழர் தேசிய இயக்கம்,
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம்,
தமிழ் தேசப் பொதுவுடமைக் கட்சி,
நாம் தமிழர் கட்சி,
ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம்,
தமிழர் தேசிய பேரவை,
இந்திய தேசிய மனித உரிமைகள் இயக்கம்,
இந்திய கம்யூனிட்டு கட்சி(மா-லெ) மகள் விடுதலை.
நிகழ்ச்சி நிரல்
தலைமை: தோழர் அய்யனாபுரம் சி.முருகேசன்.(பொதுச்செயலாளர், தமிழர் தேசிய இயக்கம்)
வரவேற்புரை: தோழர்.வி.விடுதலைவேந்தன் (ம.தி.மு.க.)
முன்னிலை : தோழர்கள்
இரா.திருஞானம்(இந்திய கம்யூனிட்டு கட்சி)
பழ.இராசேந்திரன்(த.தே.பொ.க.)
வழக்கறிஞர் அ.நல்லதுரை(நாம் தமிழர் கட்சி)
துரை.குபேந்திரன்(தமிழர் தேசியப் பேரவை)
இரா.அருணாசலம்(சி.பி.ஐ.[மா.லெ.] மக்கள் விடுதலை)
எசு.அப்துல்சப்பார்(தமிழ்நாடு முசுலீம் முன்னேற்றக் கழகம்)
பசு,கௌதமன்(திராவிட பெரியார் கழகம்)
பேரா.அரங்கசுப்பையா
வழக்கறிஞர்.மு.கரிகாலன்(இ.தே.ம.உரிமை இயக்கம்)
என்.குணசேகரன்(த.ச.வி.தொ.சங்கம்)
சிறப்புரை: தோழர்கள்
பேராசிரியர்.கிலானி(தில்லி பல்கலைக்கழக செயல்தலைவர். அரசியல் கைதிகளுக்கான விடுதலைக் குழு)
செ.ஐதர் அலி(பொதுச்செயலாளர், த.மு.மு.க.)
துரை.பாலகிருட்டிணன்(துணைப் பொதுச்செயலாளர், ம.தி.மு.க.)
மீ.த.பாண்டியன்(மாநிலச்செயலாளர்,இ.க.க.(மா.லே)மக்கள் விடுதலை
தியாகு(பொதுச்செயலாளர், தமிழ் தேசிய விடுதலை இயக்கம்)
வழக்கறிஞர். இரசினிகாந்த்(அமைப்பாளர், சாதி ஒழிப்பு விடுதலை முன்னனி)
கி.வெங்கட்ராமன்(தலைவர், செயற்குழு த.தே.பொ.க.)
வேலுச்சாமி(பொதுச்செயலாளர், ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம்)
நன்றியுரை : தோழர்.துரை மதிவாணன் ஒருங்கிணைப்பாளர்.
தொடர்புக்கு: 9003668024, 7598440607.
தஞ்சாவூருக்கு இன்று வர இயலும் அனைவரும் வருமாறு அன்புடன் வரவேற்கிறேன்.
நிசாந்தன்- இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
Similar topics
» இலங்கை அரசுக்கு எதிராகக் கண்டனப் பேரணி
» மார்ச் 8 ல் சென்னையில் கமல் பொதுக்கூட்டம்
» உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த பா.ஜ. பொதுக்கூட்டம்
» 'அயோத்தி': தமிழகத்தில் ஊர்வலம், பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டத்துக்கு தடை
» சேலத்தில் நாளை திமுக பொதுக்கூட்டம்: கலைஞர் சிறப்புரையாற்றுகிறார்
» மார்ச் 8 ல் சென்னையில் கமல் பொதுக்கூட்டம்
» உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த பா.ஜ. பொதுக்கூட்டம்
» 'அயோத்தி': தமிழகத்தில் ஊர்வலம், பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டத்துக்கு தடை
» சேலத்தில் நாளை திமுக பொதுக்கூட்டம்: கலைஞர் சிறப்புரையாற்றுகிறார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|