Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
*அதிக எச்சரிக்கை புள்ளி ஏன் வழங்கபட்டது?*
+15
கண்ணன்3536
nandhtiha
அசோகன்
bala23
ஸ்ரீஜா
ரிபாஸ்
சிவா
நிசாந்தன்
அருண்
தாமு
ரபீக்
உதயசுதா
மஞ்சுபாஷிணி
Tamilzhan
கலைவேந்தன்
19 posters
Page 5 of 5
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
*அதிக எச்சரிக்கை புள்ளி ஏன் வழங்கபட்டது?*
First topic message reminder :
எனக்கு *அதிக எச்சரிக்கை புள்ளி ஏன் வழங்கபட்டது?* என்பதை சொன்னால் நன்றாக இருக்கும் ...
பேசாமல் தடை செய்து விடுங்களேன்...
பகல் முழுவதும் ஈகரை ஓடு இணைந்து செயலாற்றி கொண்டு இருபது குறயும்...
2 மாதங்களாக ஈகரையே கதி என்று இருபது நின்று விடும் அல்லவே ...
வேகமா தடை செய்யுங்கள் நன்றி
எனக்கு *அதிக எச்சரிக்கை புள்ளி ஏன் வழங்கபட்டது?* என்பதை சொன்னால் நன்றாக இருக்கும் ...
பேசாமல் தடை செய்து விடுங்களேன்...
பகல் முழுவதும் ஈகரை ஓடு இணைந்து செயலாற்றி கொண்டு இருபது குறயும்...
2 மாதங்களாக ஈகரையே கதி என்று இருபது நின்று விடும் அல்லவே ...
வேகமா தடை செய்யுங்கள் நன்றி
Guest- Guest
Re: *அதிக எச்சரிக்கை புள்ளி ஏன் வழங்கபட்டது?*
காசிம் இதனை வாசியுங்கள்
இன ஐக்கியமும் மொழியின் தேவையும்
சுஜப் எம். காசிம்
நாம் மொழிமீது கொண்ட பற்றுக் காரணமாக மொழி எங்கள் விழி என்கின்றோம். மொழியும் விழியும் வாழ்வின் ஜீவாதார அம்சங்கள் தான். வாழ்விலே நமது உன்னத இலட்சியங்களை அடைய விழியும் மொழியும் துணை நிற்கின்றன. மொழிதல் என்பது பேசுதல் ஆகும். இறைவன் மனிதனுக்களித்த மாபெரும் அருட்கொடை பேசும் திறன்தான். பேச்சு விலங்கினங்களிலிருந்து மனித இனத்தை வேறுபடுத்திச் சிறப்புறச் செய்கிறது. இறையளித்த பகுத்தறிவைப் பயன்படுத்தி மனிதன் மொழியை ஆக்கிக் கொண்டான். உலகிலே பல மொழிகள் உள்ளன. நமது தாய்மொழி தமிழாக உள்ளது.
நாடு சுதந்திரம் அடைய முன் இருந்த பிரித்தானிய ஆட்சியிலே ஆங்கிலமே அரச நிர்வாக மொழி. ஆங்கிலம் நகர பாடசாலைகளில் கற்பிக்கப்பட்டது. ஆங்கிலம் கற்றவர்களுக்கு அரச பதவிகள் இலகுவாகக் கிடைத்தன. ஆங்கிலம் பேசுவோர் தொகை அதிகரித்தது. ஆங்கிலம் பேசுவது நாகரிகமாகவும் கருதப்பட்டது. இனங்களுக்கிடையிலான பொது மொழியாக ஆங்கிலம் அமைந்தது.
எனினும் நாடு சுதந்திரமடைந்த பின் சிங்களம், தமிழ் ஆகிய சுயமொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. கற்றல், கற்பித்தல் தொழிற்பாடுகள் சுயமொழிகளில் அமைந்தன. பாலர் கல்வி முதல் பல்கலைக்கழகக் கல்வி வரை சுயமொழிப் போதனா முறை நடைமுறையில் இருந்து வருகின்றது. சர்வதேச மொழியான ஆங்கிலத்தின் தேவை கருதி, சிங்கள, தமிழ்ப் பாடசாலைகளில் ஆங்கிலம் ஒரு பாடமாகக் கற்பிக்கப்படுகின்றது. சுயமொழி மூலமான கல்வியினால் இனங்களுக்கிடையில் ஏற்கனவே இருந்த கருத்தொருமைப்பாடும் கருத்துப்பரிமாற்றமும் நலிவடைந்தன.
நாடு சுதந்திரம் பெற சிங்கள, தமிழ், முஸ்லிம் தலைவர்களின் ஒற்றுமையான செயற்பாடுகள் உதவின. சுதந்திரம் பெற்ற கையேடு சிங்களமும் தமிழும் நாட்டின் தேசிய மொழிகளாகவும் அரசகரும மொழியாகவும் அமையும் என அரசியல் தலைவர்கள் கூறி வந்தனர்.
இன ஐக்கியமும் புரிந்துணர்வும் வலுப்பெற சிங்களம் பேசுவோர் தமிழும், தமிழ் பேசுவோர் சிங்களமும் கற்பது அவசியம் என உணரப்பட்டது.
அதற்கிணங்க 50, 55 காலப் பகுதியில் தமிழ் மொழி மூலம் கற்பிக்கப்பட்ட பாடசாலைகளுக்குச் சிங்கள ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். மாணவர்கள் விருப்பத்துடன் சிங்கள மொழியைக் கற்று வந்தனர்.
எனினும் 56 வரையான காலப் பகுதியில் மொழிக் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டது. சிங்கள கடும் போக்காளர்கள் சிங்களம் மட்டுமே அரச மொழியாக வேண்டுமென நாடெஙகும் பிரசாரங்களை மேற்கொண்டனர். பிரசாரம் நாட்டில் செல்வாக்குப் பெற்றது. அதனால் மொழிசார்ந்த அரசின் நிலைப்பாடிலும் தளம்பல் நிலை தோன்றியது.
1956 பெப்ரவரி 16ஆம் நாள் களனியில் நடைபெற்ற ஐ. தே. க.வின் சம்மேளன மாநாட்டில் சிங்களம் மட்டுமே நாட்டின் அரச கரும மொழியாக அமைய வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேறியது. இதனால் ஐ. தே. கவில் அங்கம் வகித்த தமிழ் பேசும் உறுப்பினர்கள் கட்சியை விட்டு விலகினர். தமிழ் மொழிக்காரரைச் சமாதானப்படுத்த பிரதமர் சேர் ஜோன் கொத்தலாவல சிங்களப் பிரதேசங்களில் மட்டுமே சிங்கள மொழி அரச மொழியாக அமையும். தமிழுக்கு உரிய இடம் அளிக்கப்படும் என்றார்.
1956 ஏப்ரலில் இடம்பெற்ற பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் ஐ. தே. க. 8 ஆசனங்களை மட்டுமே பெற்று ஆட்சியைப் பறிகொடுத்தது. மக்கள் ஐக்கிய முன்னணி ஆட்சிக்கு வந்தது. 1956 ஜூன் 6ம் நாள் சிங்களம் மட்டும் அரச மொழி என்ற மசோதா பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. கட்சித் தலைமைகள் தத்தம் கருத்துக்களை முன்வைத்தனர். தமிழ்க் காங்கிரஸ் தலைவர் அமரர் ஜீ. ஜி. பொன்னம்பலம் குறிப்பிட்ட சட்டத்தால் பிற்காலத்தில் ஏற்படப் போகும் இனக் குழப்பங்கள், தீமைகள் பற்றித் தொடர்ச்சியாக மூன்று தினங்கள் விரிவாக உரையாற்றினார்.
சி. சுந்தரலிங்கம் அவர்கள் தமிழுக்கும் தமிழினத்துக்கும் ஏற்படப் போகும் அவலங்களை விவரித்து உணர்ச்சிவசப்பட்டவராக அழுதழுது உரையாற்றினார். டாக்டர் என். எம். பெரேரா அவர்களும் நடுநிலை நின்று நிதானமாகவும் தெளிவாகவும் நாட்டுக்கு ஏற்படப்போகும் தீய விளைவுகளை எடுத்தியம்பினார். சட்டம் சமர்ப்பிக்கப்பட்ட போது சபையில் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது. எனினும் சட்டம் நிறைவேறியது.
இந்தச் சட்டமே நாட்டின் இனப்பிரச்சினைக்குப் பிள்ளையார் சுழிபோட்டது. தமிழ்பேசும் மக்கள் தமது மொழி புறக்கணிக்கப்பட்டதை எண்ணி வருந்தினர். தங்கள் விழி போன்ற மொழி பறிக்கப்படுவதை எண்ணி உணர்ச்சிவசப்பட்ட தமிழ் இளைஞர்கள் சிலர் சிங்கள சிaக்குத் தார் பூசினர்.
பதிலடியாகக் கொழும்புக் கடைகளில் உள்ள தமிழ்ப் பெயர்ப் பலகைகள் சிங்கள இளைஞர்கள் அகற்றினர். மொழிப் பிரச்சினையில் ஆரம்பித்த இனமுறுகல் நாளடைவில் இனப்பிரச்சினையாக மாறியது. மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசுகள் சிறுபான்மைப் புறக்கணிப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்ததால் இனப்பிரச்சினை பூதாகரமாகியது. இத¨னால் இரு மொழிபேசும் இனங்களுக்கிடையில் இருந்த இருக்க வேண்டிய புரிந்துணர்வு, பரஸ்பர கருத்தொருமைப்பாடு மறைந்தது. அச்சமும் பீதியும் சிறுபான்மை மக்களை ஆட்கொண்டன. சட்டம் சமர்ப்பிக்கப்பட்ட போது அமரர்களான ஜீ. ஜீ.யும் சுந்தரரும் என். எம். பெரேராவும் கூறிய கருத்துக்கள் தீர்க்கதரிசனமான உண்மைகளாயின. நாட்டின் இனப்பிரச்சினை பயங்கரவாதமாக விஸ்வரூபமெடுத்ததால் நாடு சீரழிந்தது.
இன ஐக்கியமும் மொழியின் தேவையும்
சுஜப் எம். காசிம்
நாம் மொழிமீது கொண்ட பற்றுக் காரணமாக மொழி எங்கள் விழி என்கின்றோம். மொழியும் விழியும் வாழ்வின் ஜீவாதார அம்சங்கள் தான். வாழ்விலே நமது உன்னத இலட்சியங்களை அடைய விழியும் மொழியும் துணை நிற்கின்றன. மொழிதல் என்பது பேசுதல் ஆகும். இறைவன் மனிதனுக்களித்த மாபெரும் அருட்கொடை பேசும் திறன்தான். பேச்சு விலங்கினங்களிலிருந்து மனித இனத்தை வேறுபடுத்திச் சிறப்புறச் செய்கிறது. இறையளித்த பகுத்தறிவைப் பயன்படுத்தி மனிதன் மொழியை ஆக்கிக் கொண்டான். உலகிலே பல மொழிகள் உள்ளன. நமது தாய்மொழி தமிழாக உள்ளது.
நாடு சுதந்திரம் அடைய முன் இருந்த பிரித்தானிய ஆட்சியிலே ஆங்கிலமே அரச நிர்வாக மொழி. ஆங்கிலம் நகர பாடசாலைகளில் கற்பிக்கப்பட்டது. ஆங்கிலம் கற்றவர்களுக்கு அரச பதவிகள் இலகுவாகக் கிடைத்தன. ஆங்கிலம் பேசுவோர் தொகை அதிகரித்தது. ஆங்கிலம் பேசுவது நாகரிகமாகவும் கருதப்பட்டது. இனங்களுக்கிடையிலான பொது மொழியாக ஆங்கிலம் அமைந்தது.
எனினும் நாடு சுதந்திரமடைந்த பின் சிங்களம், தமிழ் ஆகிய சுயமொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. கற்றல், கற்பித்தல் தொழிற்பாடுகள் சுயமொழிகளில் அமைந்தன. பாலர் கல்வி முதல் பல்கலைக்கழகக் கல்வி வரை சுயமொழிப் போதனா முறை நடைமுறையில் இருந்து வருகின்றது. சர்வதேச மொழியான ஆங்கிலத்தின் தேவை கருதி, சிங்கள, தமிழ்ப் பாடசாலைகளில் ஆங்கிலம் ஒரு பாடமாகக் கற்பிக்கப்படுகின்றது. சுயமொழி மூலமான கல்வியினால் இனங்களுக்கிடையில் ஏற்கனவே இருந்த கருத்தொருமைப்பாடும் கருத்துப்பரிமாற்றமும் நலிவடைந்தன.
நாடு சுதந்திரம் பெற சிங்கள, தமிழ், முஸ்லிம் தலைவர்களின் ஒற்றுமையான செயற்பாடுகள் உதவின. சுதந்திரம் பெற்ற கையேடு சிங்களமும் தமிழும் நாட்டின் தேசிய மொழிகளாகவும் அரசகரும மொழியாகவும் அமையும் என அரசியல் தலைவர்கள் கூறி வந்தனர்.
இன ஐக்கியமும் புரிந்துணர்வும் வலுப்பெற சிங்களம் பேசுவோர் தமிழும், தமிழ் பேசுவோர் சிங்களமும் கற்பது அவசியம் என உணரப்பட்டது.
அதற்கிணங்க 50, 55 காலப் பகுதியில் தமிழ் மொழி மூலம் கற்பிக்கப்பட்ட பாடசாலைகளுக்குச் சிங்கள ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். மாணவர்கள் விருப்பத்துடன் சிங்கள மொழியைக் கற்று வந்தனர்.
எனினும் 56 வரையான காலப் பகுதியில் மொழிக் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டது. சிங்கள கடும் போக்காளர்கள் சிங்களம் மட்டுமே அரச மொழியாக வேண்டுமென நாடெஙகும் பிரசாரங்களை மேற்கொண்டனர். பிரசாரம் நாட்டில் செல்வாக்குப் பெற்றது. அதனால் மொழிசார்ந்த அரசின் நிலைப்பாடிலும் தளம்பல் நிலை தோன்றியது.
1956 பெப்ரவரி 16ஆம் நாள் களனியில் நடைபெற்ற ஐ. தே. க.வின் சம்மேளன மாநாட்டில் சிங்களம் மட்டுமே நாட்டின் அரச கரும மொழியாக அமைய வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேறியது. இதனால் ஐ. தே. கவில் அங்கம் வகித்த தமிழ் பேசும் உறுப்பினர்கள் கட்சியை விட்டு விலகினர். தமிழ் மொழிக்காரரைச் சமாதானப்படுத்த பிரதமர் சேர் ஜோன் கொத்தலாவல சிங்களப் பிரதேசங்களில் மட்டுமே சிங்கள மொழி அரச மொழியாக அமையும். தமிழுக்கு உரிய இடம் அளிக்கப்படும் என்றார்.
1956 ஏப்ரலில் இடம்பெற்ற பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் ஐ. தே. க. 8 ஆசனங்களை மட்டுமே பெற்று ஆட்சியைப் பறிகொடுத்தது. மக்கள் ஐக்கிய முன்னணி ஆட்சிக்கு வந்தது. 1956 ஜூன் 6ம் நாள் சிங்களம் மட்டும் அரச மொழி என்ற மசோதா பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. கட்சித் தலைமைகள் தத்தம் கருத்துக்களை முன்வைத்தனர். தமிழ்க் காங்கிரஸ் தலைவர் அமரர் ஜீ. ஜி. பொன்னம்பலம் குறிப்பிட்ட சட்டத்தால் பிற்காலத்தில் ஏற்படப் போகும் இனக் குழப்பங்கள், தீமைகள் பற்றித் தொடர்ச்சியாக மூன்று தினங்கள் விரிவாக உரையாற்றினார்.
சி. சுந்தரலிங்கம் அவர்கள் தமிழுக்கும் தமிழினத்துக்கும் ஏற்படப் போகும் அவலங்களை விவரித்து உணர்ச்சிவசப்பட்டவராக அழுதழுது உரையாற்றினார். டாக்டர் என். எம். பெரேரா அவர்களும் நடுநிலை நின்று நிதானமாகவும் தெளிவாகவும் நாட்டுக்கு ஏற்படப்போகும் தீய விளைவுகளை எடுத்தியம்பினார். சட்டம் சமர்ப்பிக்கப்பட்ட போது சபையில் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது. எனினும் சட்டம் நிறைவேறியது.
இந்தச் சட்டமே நாட்டின் இனப்பிரச்சினைக்குப் பிள்ளையார் சுழிபோட்டது. தமிழ்பேசும் மக்கள் தமது மொழி புறக்கணிக்கப்பட்டதை எண்ணி வருந்தினர். தங்கள் விழி போன்ற மொழி பறிக்கப்படுவதை எண்ணி உணர்ச்சிவசப்பட்ட தமிழ் இளைஞர்கள் சிலர் சிங்கள சிaக்குத் தார் பூசினர்.
பதிலடியாகக் கொழும்புக் கடைகளில் உள்ள தமிழ்ப் பெயர்ப் பலகைகள் சிங்கள இளைஞர்கள் அகற்றினர். மொழிப் பிரச்சினையில் ஆரம்பித்த இனமுறுகல் நாளடைவில் இனப்பிரச்சினையாக மாறியது. மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசுகள் சிறுபான்மைப் புறக்கணிப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்ததால் இனப்பிரச்சினை பூதாகரமாகியது. இத¨னால் இரு மொழிபேசும் இனங்களுக்கிடையில் இருந்த இருக்க வேண்டிய புரிந்துணர்வு, பரஸ்பர கருத்தொருமைப்பாடு மறைந்தது. அச்சமும் பீதியும் சிறுபான்மை மக்களை ஆட்கொண்டன. சட்டம் சமர்ப்பிக்கப்பட்ட போது அமரர்களான ஜீ. ஜீ.யும் சுந்தரரும் என். எம். பெரேராவும் கூறிய கருத்துக்கள் தீர்க்கதரிசனமான உண்மைகளாயின. நாட்டின் இனப்பிரச்சினை பயங்கரவாதமாக விஸ்வரூபமெடுத்ததால் நாடு சீரழிந்தது.
Re: *அதிக எச்சரிக்கை புள்ளி ஏன் வழங்கபட்டது?*
சகோதரா யாவும் அறிவேன் பழைய சரித்திரங்களோடு பயணித்தோமானால் இருப்பதும் இழப்பதைத்தவிர அடைந்திட முடிகிறதா எம்மால் என்பதுதான் எனது கருத்து உருவான கலவரம் தீர்ந்ததாக கொள்ளவேண்டாமா?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நேசமுடன் ஹாசிம்
![*அதிக எச்சரிக்கை புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 5 Hasim4](https://2img.net/r/ihimizer/img52/3733/hasim4.png)
Re: *அதிக எச்சரிக்கை புள்ளி ஏன் வழங்கபட்டது?*
அன்பான திரு கண்ணன் அவர்களே... நான் இரு பக்கங்களுக்கு முன் கொடுத்துள்ள விளக்கமுடன் கூடிய வேண்டுகோளைப் படியுங்கள்..!
அரசியல் வாதிகள் இன்றிருப்பார்கள் நாளை போய் விடுவார்கள்... அவர்களது இன்றைய செயல்கள் எதிர்காலத்தால் விமர்சிக்கப் படும். இது வழக்கம் தான்..!
ஆயினும் தன் நாடு தாய் நாடு என்பது நம் பிறப்பு முதல் நம் குருதியில் ஊறி வருவது.. நம் தாய் வாயாடி அல்லது சண்டைக்காரி என்பதற்காக நம் தாயை பிறர் பழிப்பதையும் வசவு பாடுவதையும் நம்மால் ஏற்க முடியுமா..?
இங்கே நான் வலியுறுத்துவது அதைத் தான்... அரசியல் வாதிகளை அவர் தம் செய்லகளை ஊழல்களை விமரிசியுங்கள்... தவறில்லை.. ஆயினும் ஒட்டு மொத்தமாக இந்தியாவைக் கேவலமாக எடுத்துக் காட்டுவதும் காழ்ப்புணர்வுடன் கசந்த வார்த்தைகளால் காயப்படுத்துவதும் எம்மால் ஏற்க இயலாது.. இதை மனதில் நிறுத்துங்கள்..
உங்கள் பதிவுகளை பண்படுத்துங்கள் ... உங்கள் எச்சரிக்கை தானாகவே மறையும் ... பொறுமை தான் எந்த கொள்கையைவிடவும் வலிது என்பதை நீங்கள் உணராதவர் அல்ல...
மேலும் தலைமையும் சரி நிர்வாகமும் சரி எவருக்கும் எதிரியல்ல.. ஒட்டுமொத்த நோக்கம் ஈகரையின் மேம்பாடு என்பதைத் தவிர காழ்ப்புணர்வு யாருக்கும் இல்லை என்பதை அறியுங்கள்..
புரிதலுக்கு நன்றி...!
அரசியல் வாதிகள் இன்றிருப்பார்கள் நாளை போய் விடுவார்கள்... அவர்களது இன்றைய செயல்கள் எதிர்காலத்தால் விமர்சிக்கப் படும். இது வழக்கம் தான்..!
ஆயினும் தன் நாடு தாய் நாடு என்பது நம் பிறப்பு முதல் நம் குருதியில் ஊறி வருவது.. நம் தாய் வாயாடி அல்லது சண்டைக்காரி என்பதற்காக நம் தாயை பிறர் பழிப்பதையும் வசவு பாடுவதையும் நம்மால் ஏற்க முடியுமா..?
இங்கே நான் வலியுறுத்துவது அதைத் தான்... அரசியல் வாதிகளை அவர் தம் செய்லகளை ஊழல்களை விமரிசியுங்கள்... தவறில்லை.. ஆயினும் ஒட்டு மொத்தமாக இந்தியாவைக் கேவலமாக எடுத்துக் காட்டுவதும் காழ்ப்புணர்வுடன் கசந்த வார்த்தைகளால் காயப்படுத்துவதும் எம்மால் ஏற்க இயலாது.. இதை மனதில் நிறுத்துங்கள்..
உங்கள் பதிவுகளை பண்படுத்துங்கள் ... உங்கள் எச்சரிக்கை தானாகவே மறையும் ... பொறுமை தான் எந்த கொள்கையைவிடவும் வலிது என்பதை நீங்கள் உணராதவர் அல்ல...
மேலும் தலைமையும் சரி நிர்வாகமும் சரி எவருக்கும் எதிரியல்ல.. ஒட்டுமொத்த நோக்கம் ஈகரையின் மேம்பாடு என்பதைத் தவிர காழ்ப்புணர்வு யாருக்கும் இல்லை என்பதை அறியுங்கள்..
புரிதலுக்கு நன்றி...!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: *அதிக எச்சரிக்கை புள்ளி ஏன் வழங்கபட்டது?*
//மேலும் தலைமையும் சரி நிர்வாகமும் சரி எவருக்கும்
எதிரியல்ல.. ஒட்டுமொத்த நோக்கம் ஈகரையின் மேம்பாடு என்பதைத் தவிர
காழ்ப்புணர்வு யாருக்கும் இல்லை என்பதை அறியுங்கள்..//
![*அதிக எச்சரிக்கை புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 5 359383](https://2img.net/u/1813/71/41/02/smiles/359383.gif)
எதிரியல்ல.. ஒட்டுமொத்த நோக்கம் ஈகரையின் மேம்பாடு என்பதைத் தவிர
காழ்ப்புணர்வு யாருக்கும் இல்லை என்பதை அறியுங்கள்..//
![*அதிக எச்சரிக்கை புள்ளி ஏன் வழங்கபட்டது?* - Page 5 359383](https://2img.net/u/1813/71/41/02/smiles/359383.gif)
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» எச்சரிக்கை புள்ளி............
» எச்சரிக்கை புள்ளி எங்கே போச்சி ?
» எனக்கும் சொல்லுங்க அந்த எச்சரிக்கை புள்ளி பற்றி !
» எனது எச்சரிக்கை புள்ளி குறைந்ததன காரணம் தெரிய வேண்டும்
» அதிக நேரம் தூங்குவது ஆபத்து – எச்சரிக்கை ரிப்போர்ட்!
» எச்சரிக்கை புள்ளி எங்கே போச்சி ?
» எனக்கும் சொல்லுங்க அந்த எச்சரிக்கை புள்ளி பற்றி !
» எனது எச்சரிக்கை புள்ளி குறைந்ததன காரணம் தெரிய வேண்டும்
» அதிக நேரம் தூங்குவது ஆபத்து – எச்சரிக்கை ரிப்போர்ட்!
Page 5 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|