ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:19 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» கருத்துப்படம் 27/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:31 pm

» 63 வயது ஹீரோவை காதலிக்கும் மீனாட்சி சௌத்ரி
by ayyasamy ram Yesterday at 9:40 pm

» அந்தரங்கம் பேசும் ரேஷ்மா
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» எம்.ஜி.ஆரே கேட்ட பிறகும் அரசியலுக்கு வர மறுத்து விட்ட மோகன்
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» வடு நீங்கா பழைய புல்லாங்குழல்…
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» சொல்லாதே யாரும் கேட்டால்…
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» கல்யாணத் தரகர்கள்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by ayyasamy ram Yesterday at 3:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:46 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:31 am

» எறும்பை ஏமாத்தத்தான்!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Aug 26, 2024 9:32 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 4:03 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Sun Aug 25, 2024 1:01 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

Top posting users this week
heezulia
வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_c10வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_m10வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_c10 
ayyasamy ram
வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_c10வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_m10வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_c10 
mohamed nizamudeen
வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_c10வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_m10வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்)

2 posters

Go down

வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Empty வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்)

Post by kirikasan Sun Feb 20, 2011 5:48 pm

பூகம்பம் ஒன்றினைப் பெற்றவளோ இன்று
புன்னகை விட்டுக் கிடந்தனள்
வேகப் புயலொன்றைப் பெற்றவளோ இன்று
விண்ணி லெழுந்து கலந்தனள்
தாகத்தின் ஊற்றினை தந்தவளாம் இன்று
வானதிலேறிக் கரைந்தனள்
யாகத்தின் தீயும் அணைந்ததோ- இன்றது
‘ யாத்திரையோடு முடியுதோ?!

வீரத்தின் சின்னம் விரைந்ததோ- ஒரு
வெள்ளியென விண்ணில் நின்றதோ
சேரத் தலைவனைத் தந்தவள் -பெரும்
சேனை படைகளை கண்டவள்
நேர்மை தன்மானத்தை சொன்னவள் -இன்று
நித்திரைகொண்டனள் நெஞ்சிலே
பாரத்தை தந்துமே சென்றதேன் --இந்தப்
பாவ உலகம் வெறுத்ததோ

பேரை உலககெங்கும் சொன்னவன் -பெரும்
போரில் பகைதனை வென்றவன்
நாரைஉரித்தது போலவே -இந்த
நாட்டின் கொடுமை உரித்தவன்
ஊரையே வெட்டிப் பிரித்திடும் -அந்த
உண்மையில் பூமி பயந்தது
வேரை அழித்திட வந்துமே -புவி
வஞ்சகம செய்தினம் கொன்றது

வீரத்தாயும் இதைக் கண்டனள் -உளம்
விம்மி வெடித்துக் கிடந்தனள்
நேர்மைத் திறமையைப் பெற்றவள் -இந்த
நீசச் செயல்களும் கண்டனள்
தீரத்தைபெற்ற வயிற்றிலே -ஒரு
தீயைக் கட்டிவருந்தினள்
கோரத்தை எப்படிநெஞ்சிலே -ஐயோ
கொண்டு நடந்தனள் தெய்வமே

தேகம் அழிந்திடப் போயிடும் -அந்த
தெய்வமெமை விட்டுப் போகுமோ
ஏகும்வழியிலே நின்றுமே -எங்கள்
ஈர்கரம் கொண்டு வணங்கினோம்
தாயே தலைவனின் அன்னையே- நீயும்
தந்ததுவோ பொற்கலசமே
நாமோ நந்திவன ஆண்டியாய் -என்ன
நாடகமாடி உடைத்தமோ

போனதுதான் திரும்புமோ -அந்த
பொன்னெழில் காலமும் மீளுமோ
நானும் பிழைத்து இருப்பானோ- இந்த
நாடும் நமதென ஆகுமோ
தேனைத் திருநாட்டைக் காப்பமோ -நல்ல
தோள்வலி கொண்டு சுமப்பமோ
ஏனோ கலங்குது நெஞ்சமே -இந்த
ஏழைகளு கினியாரம்மா


Last edited by kirikasan on Mon Feb 21, 2011 10:27 am; edited 1 time in total
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Empty Re: வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்)

Post by அகீல் Mon Feb 21, 2011 9:12 am

வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) 440806 வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) 677196 வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) 677196 வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) 677196


அகீல் வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) 154550
அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Back to top Go down

வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Empty Re: வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்)

Post by kirikasan Mon Feb 21, 2011 10:27 am

மன்னனின் அன்னை மறைந்தனள்

மாமலையை தோள்களிலே சுமந்தவரும் -ஈழ
மன்னவனைத் தன் மடியில் கண்டவரும்
தேமதுர குரலெடுத்து தாலாட்டி -அந்தத்
தெய்வமகன் கையணைத்து சீராட்டி
போமகனே பள்ளிஎன்று விட்டவரும் -பின்பு
போர்முடிக்க செல்லவிடை தந்தவரும்
பூமியிலே சோர்ந்து துயில் கொள்ளுவதேன் -ஒரு
பூமரத்தைபோல் ஒடிந்து வீழ்ந்ததுமேன்

நானிலத்தை நடுநடுங்க வைத்தவனாம் -பல
நாடுகளைப் பீதியுறச் செய்தவனாம்
தான் நிலத்தை காத்து மண்ணை ஆண்டவனும்- ஒரு
தலைவனெனில் என்னவென்று காட்டியவன்
மாநிலத்து மன்னனுக்கு தாயுமிவள் -ஒரு
மணிமுடிக்கு அருகில்நிற்கும் அன்னையவள்
ஆ..!நிலத்தில் வீழ்ந்திருக்க அழுகிறதே- மனம்
ஆற்றவழி யின்றி நெஞ்சு துடிக்கிறதே

ஐந்துவிரல் அமுது ஊட்ட வளர்த்தவனாம்- இந்த
அகிலமெங்கும் கிடுகிடுக்க வைத்தவனாம்
செந்தமிழை பூமியிலே கேட்டவர்கள் -இது
சீறி வரும் வேங்கையென்று அஞ்சிடவே
சொந்தபடை நாடு மக்கள் கொண்டவராம் -ஒரு
சொல்லினிலே மக்கள் மனம் வென்றவராம்
விந்தைதனைப் பெற்றவரே வீரமகள் -இன்று
விழிகள் மூடித்துங்குகிறார் வேதனையே

பட்டதுயர் எத்தனைதான் பாருமம்மா -உன்
பக்குவமோ எங்களுக்கு இல்லையம்மா
சுட்டழிக்கும் சிங்களதின் பார்வையிலே- பெரும்
சொல்லரிய துன்பமுற்றும் ஈழததிலே
விட்டுவிடு இந்தமண்ணில் விதையாவேன் -நான்
வீழ்ந்திடினும் எம்மண்ணில் தலைசாய்ப்பேன்
சொட்டு நீரை விட்டுமுயிர் போகையிலே -என்
சொந்த மண்ணின் நீர் குடித்து செல்லவென

கட்டிலிலே நீபடுத்துக் கலங்கியதும்- ஒரு
கன்றிழந்த தாயெனவே கதறியதும்
விட்டு மறந்தெங்கள் வாழ்வு இல்லையம்மா -நின்
வீரமகன் காட்டும்வழி நாம்நடப்போம்
தட்டியினி நீதிகேட்கும் காலமிது -இனி
தலையெடுத்து நாம்நடந்து ஈழமதை
கட்டியொரு நாளமைத்து காத்திடுவோம் -அன்று
கையெடுத்து உனைவணங்கி தொடர்ந்திடுவோம்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Empty Re: வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum