புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலைஞரை எதிர்ப்பது சரியானதுதான்! Poll_c10கலைஞரை எதிர்ப்பது சரியானதுதான்! Poll_m10கலைஞரை எதிர்ப்பது சரியானதுதான்! Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
கலைஞரை எதிர்ப்பது சரியானதுதான்! Poll_c10கலைஞரை எதிர்ப்பது சரியானதுதான்! Poll_m10கலைஞரை எதிர்ப்பது சரியானதுதான்! Poll_c10 
3 Posts - 7%
heezulia
கலைஞரை எதிர்ப்பது சரியானதுதான்! Poll_c10கலைஞரை எதிர்ப்பது சரியானதுதான்! Poll_m10கலைஞரை எதிர்ப்பது சரியானதுதான்! Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
கலைஞரை எதிர்ப்பது சரியானதுதான்! Poll_c10கலைஞரை எதிர்ப்பது சரியானதுதான்! Poll_m10கலைஞரை எதிர்ப்பது சரியானதுதான்! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
கலைஞரை எதிர்ப்பது சரியானதுதான்! Poll_c10கலைஞரை எதிர்ப்பது சரியானதுதான்! Poll_m10கலைஞரை எதிர்ப்பது சரியானதுதான்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கலைஞரை எதிர்ப்பது சரியானதுதான்!


   
   
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Wed Feb 09, 2011 5:05 pm

'அமைதிப்படை' முதலான அரசியல் நையாண்டிப் படங்களும் மார்க்சியம்,
பெரியாரியம், தமிழ்த் தேசியம், ஈழ ஆதரவு என வெளிப்படையான அரசியல் பேசுகிற
துணிச்சலும் இயக்குநர், நடிகர் மணிவண்ணனின் அடையாளம். விபத்தில் அடிபட்டு
கால் உந்தி நடக்கும் நிலையிலும், முத்துக்குமாரின் இரண்டாவது நினைவு
தினத்தில் பங்கேற்றுத் திரும்பிய மணிவண்ணனைச் சந்தித்தோம்.


நீங்கள் சினிமாவில் இருந்துகொண்டே, தொடர்ச்சியாக அரசியல் பேசி வருபவர்.
ஆனால், ஏன் தீவிர அரசியலில் இறங்கவில்லை? சீமானைப் போல ஓர் இயக்கம்
ஆரம்பிக்க வேண்டும், மக்களை அணி திரட்ட வேண்டும் என்று ஏன் உங்களுக்குத்
தோன்றவில்லை?


"அது சீமானுக்கே இப்போதுதானே தோன்றியது. என்னிடம் உதவி இயக்குநராக
இருந்தபோது, அவர் இயக்கம் ஆரம்பிக்கவில்லையே. எப்போதுமே வரலாறுதான்
இயக்கத்தையும், அதற்கான தலைவர்களையும் உருவாக்குகிறது.


இப்போதுள்ள வரலாற்றுத் தேவைதான் சீமானை உருவாக்கியது. ஆனால், சினிமா
துறையில் நீண்ட காலமாகவே நான் ஈழ ஆதரவு அரசியல் பேசி வருபவன். அதற்காக
மனப்பூர்வமான வேலைகளைச் செய்து வருபவன். ஆனால், நான் எப்போதும் என்னை
முன்னிலைப்படுத்தியது இல்லை. புதிதாக இளைஞர்கள் தலைமை தாங்க வேண்டும் என்று
விரும்புபவன். இப்போது இருக்கக்கூடிய இயக்கங்கள், கட்சிகள்,
தமிழினத்துக்குத் துரோகம் இழைத்து விட்டன என்று கருதுபவர்கள், அமைப்புகளின்
மீது நம்பிக்கை இழந்தவர்கள்தான் சீமான் பின்னால் திரள்கிறார்கள். அந்த
நம்பிக்கையை சீமான் காப்பாற்றுவார் என்று நம்புகிறேன்!"


ம.தி.மு.க தொடங்கப்பட்டபோது வைகோவுக்கு ஆதரவாக இருந்தவர் நீங்கள். ஆனால்,
இன்று ம.தி.மு.க-வில் இருந்து ஆர்.சுந்தர்ராஜன், கலைப்புலி தாணு தொடங்கி
பலர் வரிசையாக
வெளியேறுகிறார்களே, இது வைகோவுக்கு வீழ்ச்சியா?


"என்னங்க இது, சுந்தர்ராஜன் வெளியேறிட்டா... வைகோவுக்கு வீழ்ச்சியா? நான்
எப்போதும் ம.தி.மு.க-வில் உறுப்பினராக இருந்தது இல்லை. இன்றைக்கு சீமானை
எப்படி நம்பிக்கைக்குரிய தலைவராகப் பார்க்கிறேனோ, அதேபோல... அன்று வைகோவை
நம்பிக்கைக்கு உரியவராகப் பார்த்தேன். அவர் தி.மு.க-வைவிட்டு
வெளியேற்றப்பட்டபோது அவரை ஆதரித்தேன்.


ஆனால், ஆர்.சுந்தர்ராஜன், தாணு போன்றவர்கள் கட்சியைவிட்டு வெளியேறி,
விடுகிற அறிக்கைகள் நல்ல நகைச்சுவை. கட்சியைவிட்டு வெளியேறுவதுன்னு
முடிவெடுத்தவுடனே 10 வருஷமா நடந்ததைத் தொகுத்து குற்றப்பத்திரிகை
வாசிக்கிறாங்க. அப்ப 10 வருஷமா இவங்க என்ன செஞ்சாங்க, அந்த முறைகேடுகளுக்கு
எல்லாம் துணைபோனாங்கன்னுதானே அர்த்தம்?


ஒருவேளை, கட்சித் தலைமை தவறு செய்யுதுன்னா, 10 வருஷமா அந்தத் தவறுகளுக்குத்
துணை போனவங்களுக்கு என்ன தண்டனை? அவர்களுக்குச் சுயவிமர்சனம் இல்லையே!
எனக்கு இன்னமும் வைகோ மீது நம்பிக்கை இருக்கிறது!"


ஈழப் பிரச்சினையை முன்வைத்து கலைஞரை எதிர்ப்பது சரிதானா?


"சரியானதுதான். இந்திய அரசு ராணுவத்தைப் பயன்படுத்தி ஈழத் தமிழர்களை
அழித்தது என்று சர்வதேச அரசியல் பார்வையாளர்களே சொல்கிறார்கள்.
மணிவண்ணனுக்குத் தெரிந்த இந்த உண்மை, கலைஞருக்குத் தெரியாதா, என்ன? அவரைப்
பொறுத்தவரை, கூட்டணி முக்கியம், தேர்தல் முக்கியம், அதனால் காங்கிரஸ்
முக்கியம்.


அதனால்தான் இந்த மூன்றிலும் கலைஞரைத் தோற்கடிக்க வேண்டும். அட, ஈழத்
தமிழர்களை விடுங்கள். மீனவர் படுகொலை மாதாமாதம் நடக்கிறதே, அதற்கு என்ன
செய்தார்கள்?


நிருபமா ராவ் எப்போதும் ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்குப் போய், திங்கட்கிழமை
இந்தியா திரும்பிவிடுகிறார். ஹாலிடே டூர் மாதிரி ஆயிடுச்சு. கட்சி,
அரசியல், தமிழன், தெலுங்கன் இதையெல்லாம் விடுங்கள். மனித உயிர்களுக்கு
மதிப்பு வேண்டாமா? ஏதோ தேர்தல் நேரமாக இருப்பதால், செத்துப்போன மீனவர்
குடும்பத்துக்கு 5 லட்சம் கொடுக்கிறார்கள். இல்லையென்றால், அதுவும்
இருக்காது. செம்மொழி மாநாடு நடத்தினார்கள். இறந்துபோன ஈழத் தமிழர்களுக்காக
ஒரு இரங்கல் தீர்மானம் உண்டா?


நான், பிரபாகரனுக்கோ, நடேசனுக்கோ தீர்மானம் நிறைவேற்றச் சொல்லவில்லை.
ஆனால், தமிழ் மொழியைப் பேசத் தொடங்குவதற்கு முன்பே ஒரு தமிழ்ப் பெண்ணின்
வயிற்றில் பிறந்ததால், சிங்களப் பேரினவாத அரசால் கொல்லப்பட்ட
குழந்தைகளுக்காகவாவது இரங்கல் தீர்மானம் நிறைவேற்றி இருக்கலாமே? ஆனால்,
கலைஞர் ஈழத்தில் இருந்து சிவத்தம்பி என்ற அறிஞரை அழைத்து வந்து, 'ஈழம்
என்பது தமிழ்ச் சொல் அல்ல' என்று பேசவைத்தார்.


சிலர் என்னிடம் வந்து 'இது பிரைன் வாஷ்' என்றார்கள். 'இல்லை இல்லை, பிரைன்
டியூமர்' என்றேன் நான். சுய மரியாதை உள்ளவர்கள் காங்கிரஸையும்
காங்கிரஸூக்குத் துணை போகும் தி.மு.க-வையும் எதிர்ப்பது நியாயம்தான்.
ஆனால், எனக்கு நாடாளுமன்ற அரசியலில் நம்பிக்கை இல்லாததால், தேர்தல்
பிரசாரத்துக்குப் போக மாட்டேன். ஓட்டும் போட மாட்டேன்!"


"நீங்கள் சினிமாவிலும் வெளியிலும் என்னதான் பகுத்தறிவு பேசினாலும்,
சாமியார்களைத் தேடிச் செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகமாகத்தானே
செய்கிறது?"


"அட, நம்ம ரஞ்சிதாவே ஒரு சாமியார் கிட்ட போய் மாட்டிக்கிட்டாங்களே.
கார்ப்பரேட் செக்டார் அதிகரிக்க... அதிகரிக்க, கார்ப்பரேட் சாமியார்களும்
அதிகரிக்கிறார்கள். ஆன்மிகம், தியானம் என்று பேசக்கூடிய எல்லா
சாமியார்களுமே ஓஷோவிடம் இருந்து சிந்தனைகளைத் திருடியவர்கள்தான்.


நித்யானந்தாவிடம் இருந்த ராகசுதா, பல சினிமா நட்சத்திரங்களை அவரின்
ஆசிரமத்துக்கு அழைத்துச் சென்றார். என்னிடம்கூட ஒருமுறை, 'சாமியும் நீங்க
சொல்ற மாதிரி கடவுள் இல்லைன்னுதான் சொல்றார். அவரோடு டிஸ்கஸ் பண்ண வாங்க'னு
கூப்பிட்டாங்க.
'ரொம்பச் சந்தோஷங்க. அவருக்கும் எனக்கும் ஒரே கருத்தா? அப்புறம் அவர்கிட்ட
பேசி என்ன செய்யப்போறேன்?'னு மறுத்துட்டேன். உலகமயமாக்கல், அதனால் ஏற்படும்
மன அழுத்தம் இதுதான் நடுத்தர வர்க்கத்து மக்களைக் கார்ப்பரேட் சாமியார்களை
நோக்கித் தள்ளுது. இது புரியணும்னா... நமக்கு மார்க்சியமும் பெரியாரும்
தெரியணும்!"

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Wed Feb 09, 2011 5:18 pm

அப்பா மணிவண்ணன் என்ன தெளிவா இருக்கார் .பெரியாரின் சீடனுக்கு உரிய தெளிவு .அருமையான விளக்கங்கள் .

ராம்

திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Wed Feb 09, 2011 5:26 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



thiva
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Feb 09, 2011 5:56 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Wed Feb 09, 2011 6:55 pm

உரத்த குரலில் உரிமையுடன் கேள்

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Wed Feb 09, 2011 7:20 pm

respected all
there is no question of brain wash. we have now to wash the brains
ever loving
nandhitha

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Feb 09, 2011 10:06 pm

அருமையான கருத்துக்கள் கூறி இருக்கிறார் மணிவண்ணன்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Feb 09, 2011 10:26 pm

கலைஞரை எதிர்ப்பது சரியானதுதான்! 677196 புன்னகை புன்னகை புன்னகை




கலைஞரை எதிர்ப்பது சரியானதுதான்! Power-Star-Srinivasan
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Fri Feb 18, 2011 9:15 am

தெளிவான சிந்தனை நிதானமிக்க பேசு மணிவண்ணன் என்றுமே எனக்கு பிடித்த பகுதறிவாளி



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

கலைஞரை எதிர்ப்பது சரியானதுதான்! Boxrun3
with regards ரான்ஹாசன்



கலைஞரை எதிர்ப்பது சரியானதுதான்! Hகலைஞரை எதிர்ப்பது சரியானதுதான்! Aகலைஞரை எதிர்ப்பது சரியானதுதான்! Sகலைஞரை எதிர்ப்பது சரியானதுதான்! Aகலைஞரை எதிர்ப்பது சரியானதுதான்! N
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக