ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜயகாந்த் இனியாவது உண்மையை உணர்ந்து கொள்வாரா?

3 posters

Go down

விஜயகாந்த் இனியாவது உண்மையை உணர்ந்து கொள்வாரா? Empty விஜயகாந்த் இனியாவது உண்மையை உணர்ந்து கொள்வாரா?

Post by சிவா Fri Feb 18, 2011 3:06 pm

2006 சட்டமன்றத் தேர்தலுக்கு ஏறத்தாழ ஒரு வருட காலத்திற்கு முன்பு நடிகர் விஜய காந்த், தே.மு.தி.க. என்ற பெயரில் ஓர் அரசியல் கட்சியைத் தொடங்கினார். அவர் அந்தக் கட்சியைத் தொடங்கியபோது பல்வேறு மாவட்டங்களிலும் இளைஞர்கள், அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க. போன்ற பல்வேறு கட்சி களிலும் இருந்து அதிருப்தியாளர்கள் சிலரும் அதிலே சேர்வதில் அக்கறை காட்டினார்கள். அவர் எடுத்த எடுப்பிலேயே திராவிட முன்னேற்றக் கழகத்தை கடுமையாகத் தாக்கிப் பேச ஆரம்பித் ததையொட்டி தமிழ கத்தில் உள்ள பல்வேறு பார்ப்பன ஏடுகளும் அவரை போட்டி போட்டுக் கொண்டு ஆதரித்தன.

2006 சட்டமன்றத் தேர்தலில் அவர் எந்தக் கட்சியுடனும் கூட்டுச் சேராமல் தனியாகவே போட்டியிட்டார்.

அதிலே என்ன விசேஷம் என்றால், தமிழகச் சட்டமன்றத்தின் மொத்தத் தொகுதிகள் 234-லும் அவரது கட்சி போட்டியிட்டது.

அப்படிப் போட்டியிட்டதன் காரணமாக, அது 234 தொகுதிகளிலும் 5 ஆயிரம், 10 ஆயிரம், 15 ஆயிரம் என்று ஓட்டு வாங்கியது.

நூற்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் அது தனது டெப்பாசிட்டையே பறிகொடுத்தது என்றாலும், மொத்தத்தில் 8 சதவிகித ஓட்டுகளை அது 234 தொகுதிகளுக்குமாகச் சேர்த்து எடுத்து விட்டது.

விருத்தாசலம் தொகுதியில் மட்டுமே ஒரே ஒரு வேட்பாளர் தே.மு.தி.க. சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் வேறு யாருமல்ல, விஜயகாந்தே தான்!

2006 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு 11 சட்டமன்றத் தொகுதிகளில் இடைத் தேர்தல்கள் நடந்தன. எல்லாத் தொகுதிகளிலும் விஜயகாந்த் கட்சி போட்டியிட்டது. அத்தனை தொகுதிகளிலும் தோல்வி, தோல்வி, படுதோல்விதான்.

2006லிருந்து இன்று வரையிலான கால கட்டங்களில் அவர் நிறைய சினிமாப் படங்களில் நடித்துக் கொண்டே இருந்தார். வெளிவந்த எல்லாப் படங்களுமே ஓடாமல் பெட்டிக்குள் சுருண்டு கொண்டன. எனினும் அவர் பெரும்பாலான நேரத்தை சினிமா படப்பிடிப்பிலேயே கழித்து வந்தார். கடைசியாக 2010ஆம் ஆண்டில் கூட தமது மைத்துனரின் தயாரிப்பில் உருவான ‘விருதகிரி’ என்ற சினிமாவின் படப்பிடிப்பிற்காக அவர் மலேசியா, ஹாங்காங் போன்ற வெளிநாடு களிலேயே ஆறு, ஏழு மாதங்கள் தங்கி அந்தப் படத்தில் நடித்ததோடு படத்தையே அவர்தான் இயக்கினார்.

விக்கிரமாதித்தன் கதையில் விக்கிரமாதித்த மகாராஜா நாடாறு மாதம், காடாறு மாதம் போனதாக கதையிருக்கிறது. அதாவது விக்கிர மாதித்த மகாராஜா ஓர் ஆண்டில் ஆறு மாதம் நாட்டில் இருந்து ஆட்சி நடத்துவார். அடுத்த ஆறுமாதம் காட்டுக்குப் போய்விடு வார் என்பதே அந்தக் கதை.

விஜயகாந்தைப் பொறுத்தவரையில் அரசியலில் ஆறு மாதம், சினிமாவில் ஆறு மாதம் என்றுகூட அல்ல, பெரும்பாலான மாதங்கள் சினிமாவிலும், சில மாதங்களே அரசியலிலு மாக காலத்தைக் கழித்து வந்தார்.

இந்தக் கால கட்டத்திற்குள்ளாக அவரது கட்சியில் எல்லா மாவட்டங்களிலும் கோஷ்டிச் சண்டைகள் தலைவிரித்து ஆடின. பல்வேறு முக்கிய நிர்வாகிகளும் தே.மு.தி.க.வை விட்டு விலகி வேறு கட்சிகளில் சேர்ந்தார்கள்.

எனினும் விஜயகாந்த் எந்த நாட்டில் இருந்தாலும் அவர் பெயரில் சென்னையிலிருந்து ஒரு அறிக்கை நாள்தவறாமல் வந்து கொண்டிருக்கும். அந்த அறிக்கைகள் முழுவதிலும் தி.மு.க. மீதும், தி.மு.கழக ஆட்சி மீதும், முதல்வர் கலைஞர் மீதும் புழுதிவாரித் தூற்றப் பட்டிருக்கும்.

அதனாலே பார்ப்பன ஏடுகள் அனைத்தும் அவரது அறிக்கைகளை, தங்களது தி.மு.க. துவேஷம் காரணமாக பெரிதுபடுத்தி பிரசுரித்து வந்தன. அந்த அறிக்கைகளைத் தவிர தமிழக அரசியலில் அவர் நேரடியாகப் பங்கு பெற்றது என்பது மிகமிக மிக மிகக் குறைந்த அளவு காலமே ஆகும்.

தமிழகத்தில் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் தப்பித் தவறி அவர் பங்கு கொண்டாலும் தி.மு.க.வைத் தாக்குவது தவிர வேறு எதுவும் அவரது பேச்சில் இருக்கவே இருக்காது. ஒவ்வொரு வாய்ப்பின் போதும் பத்திரிகையாளர்கள் விஜயகாந்திடம், ‘‘தேர்தலில் நீங்கள் எந்தக் கட்சியுடன் கூட்டணி சேர்வீர்கள்’’ என்று அரைத்த மாவையே அரைப்பது போல திருப்பித் திருப்பிக் கேட்பார்கள்.

விஜயகாந்தும் சளைக்காமல், "நான் எந்தக் கட்சியுடனும் கூட்டுச் சேரமாட்டேன். மக்க ளோடும், தெய்வத்தோடும்தான் எனது கூட்டணி அமையும்" - என்று கீறல் விழுந்த கிராமபோன் ரிக்கார்டு போல திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டேயிருப்பார்.

எனினும் பார்ப்பன ஏடுகள், அவரது பேட்டிகளை, பேச்சுகளை பக்கம் பக்கமாக வெளி யிடும். என்ன காரணம்? அவர் தி.மு.க.வை எதிர்க்கிறார், அவரது தி.மு.க. எதிர்ப்பு அ.தி.மு.க.வுக்கே சாதகமாக அமையும் என்பதாக நினைத்து அந்தப் பார்ப்பன ஏடுகள் விஜயகாந்த் தும்பினாலும் இருமினாலும் உளறினாலும் ஓஹோ, ஓஹோ என்று புகழ்ந்தே எழுதும்.

இப்படி அந்த ஏடுகள் எல்லாம் தன்னை புகழ்ந்து எழுதுவதைக் கண்டு விஜயகாந்துக்கும் தலை நாளுக்கு நாள் கணத்துக் கொண்டே யிருந்தது.

அவர்கள் உண்மையாகவே தன்மீது மதிப்பும், மரியாதையும் வைத்துத்தான் தன்னைப் புகழ்கிறார்கள் என்று அவர் தவறாக நினைத்துக் கொண்டார்.

அடுத்து வரும் தேர்தலில் எப்படியாவது விஜயகாந்தை ஜெயலலிதாவின் கூட்டணியில் சேர்த்து விட வேண்டும். அப்படிச் சேர்த்தால் ஜெயலலிதா வெற்றி உறுதியாகிவிடும். அவர் மீண்டும் பதவிக்கு வந்து பார்ப்பன ஆட்சியை ஸ்தாபித்து விடுவார் என்கிற பார்ப்பன ஜாதி அபிமானத்தினாலேயே அந்த ஏடுகள் தன்னை ஆதரிக்கின்றன என்பதை விஜய காந்த் புரிந்து கொள்ளவில்லை.

2010 டிசம்பர் மாதம் வரையில் பார்ப்பன ஏடுகள் விஜயகாந்தைத் தொடர்ந்து புகழ்ந்துதான் எழுதி வந்தன.

அந்தக் கால கட்டத்தில் விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவும் மைத்துனர் சத்தீசும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர ரகசிய பேரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்ற செய்திகள் கிசுகிசு பாணியில் கசிந்து கொண்டு இருந்தன.

ஆகவே விஜயகாந்த் ஜெயலலிதாவை ஆதரிக்கப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பிலும், மகிழ்ச்சியிலும் அவை முன்னைவிட அதிகமாக விஜயகாந்தைப் புகழ ஆரம்பித்தன.

தமிழகத்தில் ஆட்சியை நிர்ணயிக்கப் போகும் மகத்தான சக்தியாக விஜயகாந்த் தான் விளங்குகிறார். தி.மு.க. ஆட்சியை அகற்றும் வல்லமை அவருக்கே உண்டு என்றெல்லாம் எழுதி வந்தன.

ஆனால், சமீபத்தில் சேலத்தில் நடந்த தே.மு.தி.க. மாநாட்டில்,

1. எதிர்பார்த்த அளவு கூட்டமில்லை,

2. பார்ப்பன ஏடுகள் எதிர்பார்த்ததுபோல ஜெய லலிதாவுடன்தான் கூட்டணி என்று விஜய காந்த் அறிவிக்கவுமில்லை.

ஆகவே பார்ப்பன ஏடுகளுக்கு அதனால் வரை விஜயகாந்த் கட்சிமீது இருந்த நம்பிக்கை தகர்ந்து விட்டது. விஜயகாந்த் பார்ப்பன ஆட்சி மலரும் விதத்தில் ஜெயலலிதாவை ஆதரிக்க மாட்டாரோ என்ற சந்தேகம் அவைகளிடம் வலுத்துவிட்டது.

இப்போது சில ஏடுகள் விஜயகாந்தை குறை கூறியும், குற்றம் சாட்டியும் எழுத ஆரம்பித் துள்ளன.

ஒரு ஏடு,

"கடந்த 5 ஆண்டு கால சட்டமன்றத்தில் விஜயகாந்தின் சட்டமன்றப் பணி என்று குறிப் பிட எதுவுமில்லை. எப்போதாவது ஓரிரு தடவைகள் தான் அவர் சட்டமன்றக் கூட்டங் களிலேயே கலந்து கொண்டார். அப்போதும் கூட அவர் தமது தொகுதியின் மேன்மைக் காகவோ அல்லது மக்கள் முன்னேற்றம் தொடர்பான பிரச்சினைகள் குறித்தோ பேசியது இல்லை. அவரது சட்டமன்றப் பணி என்பது குறிப்பிட்டுச் சொல்ல எதுவுமற்றதாகவே அமைந்து விட்டது."

- என்று விஜயகாந்தை முதன் முறையாக குற்றம்சாட்டி குறைகூறி எழுதியிருக்கிறது.

அதுவும் தவிர,

கடந்த 5 ஆண்டு காலத்தில் நடந்த சட்ட மன்றக் கூட்டங்களில் விஜயகாந்த் கலந்து கொண்டு பேசிய மொத்த நேரமே ஒன்றரை மணி நேரம்தான் என்ற குற்றச்சாட்டும் கூடவே எழுந்துள்ளது.

இதைத்தான் நாம் கடந்த 5 ஆண்டு காலமாக விஜயகாந்துக்கு சுட்டிக்காட்டிய வண்ணமே இருந்தோம்.

பார்ப்பன ஏடுகள் உங்களைப் பாராட்டுவதை யெல்லாம் நம்பி விடாதீர்கள். பார்ப்பனத்தி ஜெயலலிதா, தி.மு.க.வை தோற்கடித்து மீண்டும் ஆட்சியில் அமர நீங்கள் உதவியாக இருப்பீர்கள் என்ற ஜாதி அபிமானத்துடன்தான் அவர்கள் உங்களை விழுந்து விழுந்து ஆதரிக்கிறார்கள். ஜெயலலிதா வுடன் கூட்டணியில்லை என்று நீங்கள் எப்போது அறிவித்தாலும் அந்த வினாடி முதலே பார்ப்பன ஏடுகள் உங்களை, கடுமை யாகத் தாக்கி உங்கள் மதிப்பைக் குறைத்து, இகழ்ந்து விமர்சனம் செய்ய ஆரம்பித்து விடும்.

- என்று எச்சரித்தபடியே இருந்தோம்.

இப்போதுதான், அந்த எச்சரிக்கை மெய்ப்பட ஆரம்பித்திருக்கிறது. விஜயகாந்த் அ.தி.மு. க.வுடன் கூட்டணியில்லை என்று உருவானால், அந்த வினாடி முதலே விஜயகாந்தின் கட்சியை நார் நாராகக் கிழித்து காற்றில் பறக்க விட்டு விடும், அந்தப் பார்ப்பன ஏடுகள்.

அது இப்போதுதான் ஆரம்பமாகி இருக்கிறது. இனியாவது விஜயகாந்த் அந்த ஏடுகள் தன்னைப் புகழ்ந்து எழுதியது அல்லது எழுதுவது எதற்காக என்பதைப் புரிந்து கொள்வார் என்று நம்பலாமா?

முரசொலி


விஜயகாந்த் இனியாவது உண்மையை உணர்ந்து கொள்வாரா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விஜயகாந்த் இனியாவது உண்மையை உணர்ந்து கொள்வாரா? Empty Re: விஜயகாந்த் இனியாவது உண்மையை உணர்ந்து கொள்வாரா?

Post by SK Fri Feb 18, 2011 3:13 pm

தோல்வி பயத்தில் எழுதிய கட்டுரை ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

விஜயகாந்த் இனியாவது உண்மையை உணர்ந்து கொள்வாரா? Empty Re: விஜயகாந்த் இனியாவது உண்மையை உணர்ந்து கொள்வாரா?

Post by கோவை ராம் Fri Feb 18, 2011 3:15 pm

இவரால் எத்தனை பேர் பணம் இழந்து இருக்கிறார்கள் .கோவை மேற்கு தொகுதியில் ஒரு மருத்துவர் இவர் சார்பில் நின்று இன்று கிட்ட தட்ட நாடு தெருவுக்கே வந்து விட்டார் .ஆனாலும் விஜையகாந்து கொள்கை என்றெல்லாம் பாற்காமல் எப்போதும் பெரிய பண முதலைகளை மட்டுமே வேட்பாளர்களாக நிறுத்துவார் .அதனால்தான் கட்சி ஓரளவாவது நிற்கிறது .காரணம் எம்.ஜி.ஆர் ருக்கே சொல்லி கொடுத்த பண்ருட்டியார்தான் .ஒரு வாய்ப்பு கிடைத்தால் மேலே வந்துவிடுவார்

ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

விஜயகாந்த் இனியாவது உண்மையை உணர்ந்து கொள்வாரா? Empty Re: விஜயகாந்த் இனியாவது உண்மையை உணர்ந்து கொள்வாரா?

Post by Guest Fri Feb 18, 2011 3:58 pm

போங்க முரசொலி ஒரே சிரிப்பொலி .... விஜயகாந்த் இனியாவது உண்மையை உணர்ந்து கொள்வாரா? 403484 விஜயகாந்த் இனியாவது உண்மையை உணர்ந்து கொள்வாரா? 403484
avatar
Guest
Guest


Back to top Go down

விஜயகாந்த் இனியாவது உண்மையை உணர்ந்து கொள்வாரா? Empty Re: விஜயகாந்த் இனியாவது உண்மையை உணர்ந்து கொள்வாரா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum