புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 I_vote_lcapகர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 I_voting_barகர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 I_vote_rcap 
53 Posts - 42%
heezulia
கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 I_vote_lcapகர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 I_voting_barகர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 I_vote_rcap 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 I_vote_lcapகர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 I_voting_barகர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 I_vote_rcap 
28 Posts - 22%
T.N.Balasubramanian
கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 I_vote_lcapகர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 I_voting_barகர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 I_vote_rcap 
6 Posts - 5%
ayyamperumal
கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 I_vote_lcapகர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 I_voting_barகர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 I_vote_rcap 
3 Posts - 2%
mohamed nizamudeen
கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 I_vote_lcapகர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 I_voting_barகர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 I_vote_rcap 
3 Posts - 2%
Anitha Anbarasan
கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 I_vote_lcapகர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 I_voting_barகர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 I_vote_rcap 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 I_vote_lcapகர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 I_voting_barகர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 I_vote_rcap 
304 Posts - 50%
heezulia
கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 I_vote_lcapகர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 I_voting_barகர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 I_vote_rcap 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 I_vote_lcapகர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 I_voting_barகர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 I_vote_rcap 
58 Posts - 10%
T.N.Balasubramanian
கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 I_vote_lcapகர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 I_voting_barகர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 I_vote_rcap 
26 Posts - 4%
mohamed nizamudeen
கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 I_vote_lcapகர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 I_voting_barகர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 I_vote_rcap 
21 Posts - 3%
prajai
கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 I_vote_lcapகர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 I_voting_barகர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 I_vote_rcap 
5 Posts - 1%
ayyamperumal
கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 I_vote_lcapகர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 I_voting_barகர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 I_vote_rcap 
3 Posts - 0%
JGNANASEHAR
கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 I_vote_lcapகர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 I_voting_barகர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 I_vote_rcap 
2 Posts - 0%
Anitha Anbarasan
கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 I_vote_lcapகர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 I_voting_barகர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 I_vote_rcap 
2 Posts - 0%
Srinivasan23
கர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 I_vote_lcapகர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 I_voting_barகர்ணன் என் காதலன் - வேணி மோகன் - Page 3 I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்ணன் என் காதலன் - வேணி மோகன்


   
   

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 18, 2011 10:44 am

First topic message reminder :

கர்ணன் என் காதலன் - முகவுரை

மகாபாரதத்தில் ஈடு இணை அற்ற வீரனாய் நாம் அறிந்த கர்ணனை பற்றிய என் பதிவு இது. ஒன்றா, இரண்டா அவன் சிறப்பு. ஈகைக்கும், நட்புக்கும் அவன் தந்த மதிப்பு.. செய்நன்றி மறவாத அவனது பண்பு, தன்னிலே தான் கொண்ட நம்பிக்கை, பிற உயிரையும் தன் உயிராய் நினைக்கும் பாங்கு.

வாக்கு மாறாமை, அத்துணைக்கும் மேலே, இணையற்ற வீரம், என்னிலைக்கு போயினும் தன்னிலை மறவாத நேர்மை என இன்னும் உண்டு ஆயிரம்.

சிறு வயது முதலே, என்னை கவர்ந்தவன், வீரம், ஈரம், கம்பீரம், கொடை, ஆண்மை எனும் சொற்களுக்கு நான் உருவேற்றி இருந்த உருவம் கர்ணன். அதிலும் நடிகர் திலகம் நடிப்பில் கர்ணன் படம் பார்த்த போது, கச்சிதமாய் கர்ணனுக்குள் அவர் பொருந்திப் போனார்.

அந்தப் படமும் ஒரு காரணம் தான் கர்ணன் மீதான என் காதலுக்கு.

பிறந்தது முதலே விதியால் வஞ்சிக்கப்பட்டு, பல அவமானங்களுக்கு இடையே வளர்ந்தாலும் தன் திறமையை பிறர் புகழ வளர்த்துக் கொண்டவன். என் வாழ்க்கையில் கர்ணனை ஒரு முன் உதாரணமாய் கொண்டு நான் வாழ இன்னும் இருக்கின்றன நிறைய விஷயங்கள்

நிகரற்ற அந்த தூய வீரனைப் பற்றி நான் அறிந்த தகவல்களை உங்களுடன் பகிர விருப்பம். படித்து உங்கள் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள். தவறு இருப்பின் சுட்டிக் காட்டுங்கள்.

ஏற்கனவே நிகழ்ந்தது என சொல்லப்பட்ட நிகழ்வுகளும், கூட ஆங்காங்கே என் கற்பனையும் கலந்து நான் சொல்லப் போகும் கர்ணனின் கதைக்கு, உங்களை அன்புடன் அழைக்கிறேன்.
__________________
நட்புடன்,
வேணி மோகன்




[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 18, 2011 11:10 am

பகுதி பத்தொன்பது : என் மன்னவன், என் காதலன்

தனது மாமனார் மற்றும் மனைவியால் அவமானப் படுத்தப்பட்டு... கடும் சினத்துடன் தன் அரண்மனைக்கு வந்து சேருகிறான் கர்ணன். இனி அங்கே நடப்பவை...

பணியாளர்கள் மற்றும் அந்த அரண்மனையில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியாய்.. பேசிக் கொண்டே தங்கள் வேலைகளை பார்த்துக் கொண்டு இருக்கின்றனர்... புயல் போல உள்ளே நுழைகிறான் கர்ணன்

ஒரு சேவகன் : மன்னா, மகாராணி அவர்கள்....

கர்ணன் : இடையிட்டு... போய்விடு அந்தப் பக்கம்.... (என்று எரிச்சலாய் மொழிந்து விட்டு, தன் அறைக்குச் செல்கிறான்)

நன்கு மலர்களால் அலங்கரிக்கப் பட்ட அறை... பாலும் பழமும் ஒரு பக்கம் இருக்க.. குளிர் நிலவோ வானிலே இருக்க... இவன் மட்டும் நெஞ்சம் நிறைய வேதனையில் இருக்க...

அப்போதும் தனை ஆற்றிலே விட்டு விட்ட அன்னையை நினைத்து கண்களில் நீர் வழிகிறது... அதை துடைக்கத் தோன்றாது அவன் துக்கத்தில் இருக்க, மலர் அரும்புகள் பல அவன் மீது விழுகின்றன... திரும்பிப் பார்க்க அங்கே... சுபாங்கி...

அவளைக் கண்டதும் உடனே மகிழ்ச்சி, நெகிழ்ச்சி... பின்னர் வருகிறது அடங்காத கோபம்...

கர்ணன் : நீயா?? எங்கே வந்தாய்...

சுபாங்கி : நானேதான் ... என் இடம் வந்தேன்...

கர்ணன் : அங்கே உன் தந்தையின் முன்னே என்னை அவமானப் படுத்தி விட்டு இங்கே எங்கு வந்தாய்???

சுபாங்கி : இந்தப் பாலை அருந்துங்கள்...

கர்ணன் : பயப்படாதே... ஒரு பெண்ணிடம் என் வீரத்தை காட்டும் அளவு நான் கோழை அல்ல... நான் அமைதியாகச் சொல்லும் போதே போய்விடு இங்கிருந்து...

சுபாங்கி : எங்கே போவேன் நான்.. என் மன்னவன், நீங்கள்... நான் இங்கேதான் இருப்பேன் (சென்று கர்ணனின் அருகில் அமர்ந்து கொள்கிறாள்)

கர்ணன் : இது நல்ல மனைவிக்கு அழகு.. ஆனாலும் அங்கே அத்துணை பேசிவிட்டு இப்போது எங்கே வந்தாய்... சென்று விடு... என அவளை கீழே தள்ளுகிறான்...

சுபாங்கி : (அழுகையுடன்) அங்கே நடந்தது ஒரு நாடகம்... அப்படி பேசியது கூட நான் இல்லை.. என் தோழி மங்களா...

கர்ணன் : மங்களாவா??? கோபம் குறைந்து முகம் சற்றே தெளிகிறது...

சுபாங்கி : ஆமாம். அவள் என்னைப் போலவே பேசும் திறம் கொண்டவள்... (இன்னும் அழுது கொண்டே இருக்க, கர்ணன் அவளிடம் செல்கிறான்..)

கர்ணன் : சுபா... சுபா... பெண்ணுக்குள்ள சிறப்பெல்லாம் உன்னகத்தே கொண்டவளே... கோபம் கொண்ட கணவனிடம் இருந்து, குணம் கெட்ட தந்தையைக் காத்தாய்

சுபாங்கி : காரிய வெற்றிக்காக அந்த வழியைக் கையாண்டேன்... வெற்றி எனதுதான்.. ஆனாலும் நான் கையாண்ட முறைக்காக என்னை மன்னியுங்கள் பிரபு...

கர்ணன் : மன்னிக்கிறேன்.. மன்னிக்கிறேன்... எப்படி மன்னிக்க வேண்டும் உன்னை??? (இருவருக்கும் சிரிப்பு வருகிறது... ) (அப்பாடா சமாதானம் ஆயட்டாங்க பா... )

அது சரி.. நீ எனக்கு முன்னே இங்கே எப்படி வந்தாய்...

சுபாங்கி : என்ன, அப்படி கேட்டு விட்டீர்கள்... நான் தேரோட்டி நீங்கள் பார்த்ததில்லையா??? (பெருமையாய் தலை உயர்த்திக் கேட்கிறாள்..)

கர்ணன் : பார்த்திருக்கிறேன்... பார்த்திருக்கிறேன்... அடங்காத தேரோட்டத்தை, வெள்ளோட்டம் பார்த்த பின் தானே நான் உன்னையே பார்த்தேன்... ஹ ஹ ஹ

அதை மறப்பேனா நான்???

சுபாங்கி : போதும் உங்கள் பரிகாசம்... நான் தேரோட்டுவதில் என்ன தவறு... நான் தான் இப்போது தேரோட்டியின் மனைவி ஆகிவிட்டேனே...

இதுவரை... மந்தகாசமாய் புன்னகை அளித்த கர்ணனின் முகம்... தீ பட்டார் போல சுருங்கி... களை இழந்து போனது...

சுபாங்கி : ஏன்... ஏதாவது தங்கள் மனதை வருந்தச் செய்துவிட்டேனா???

கர்ணன் : சுபா.. கணவனை தேரோட்டி என நீ பெருமையைச் சொல்லுகிறாய்... ஆனால் மற்றவர் என்னைக் காயப்படுத்துவதே அந்த வார்த்தையைக் கொண்டு தான்...

ஷத்ரியனுக்கு உரிய வீரம் இருந்தும், பிறப்பரியா காரணத்தால்.. இழிகுலத்தான் என எல்லோரும் ஏசுவதைத்தான் என்னால் தாள முடியவில்லை..

சுபாங்கி : சுயநலமிகள் அப்படி பேசிவிட்டுப் போகட்டும்... குலம் எதுவானால் என்ன, இல்லை என்று சொல்லாத உங்கள் குணமும், போரில் யாராலும் வெல்ல முடியாத திறனும் உங்களை விட யாருக்கு உண்டு... எட்டுத் திக்கும் புகழ் பரவும் ஒருவர் அல்லவா நீங்கள்..

கர்ணன் : என் குலம் எக்குலமாயினும் எனக்கு கவலை இல்லை... ஆனால்.. பெற்றவளே என்னை, பேழையில் வைத்து ஆற்றிலே விட்டாள் எனில், என் பிறப்பில் என்ன இழுக்கு இருக்குமோ எனும் எண்ணம், என்னை வாழ விடாது செய்கிறது சுபா.

சுபாங்கி : கருனைக்குத் தாய் உள்ளம் என்பார்கள்.. ஆனால் ஒரு தாய் செய்த அநீதி நம் தலை மீது வந்து விடிந்தது... அதற்காக நீங்கள் ஏன் வருந்த வேண்டும்?? பிறர் தயவால் வாழ வேண்டிய நிலை இல்லையே நமக்கு.. பின் என்ன பயம்??

கர்ணன் : பயம் வேறு... மான உணர்ச்சி வேறு...

சுபாங்கி : என்னால் புரிந்து கொள்ள முடிகிறது... ஆயிரம் தான் நான் ஆறுதல் சொன்னாலும், என் தந்தையே என் கணவரை தாழ்த்திப் பேசிய போது, என் உடலும், உள்ளமும் கொந்தளித்துக் கொண்டுதான் இருந்தது... என்ன செய்வது... (அழுகை)

கர்ணன் : அவள் அழக் கண்டு இவனுள்ளும் வேதனை... என்னால் உன் மனம்படும் வேதனையைக் கண்டாயா??

சுபாங்கி : உங்கள் வேதனைக் கண்டு நான் படும் வேதனை அல்ல இது.. உத்தமருக்கு இப்படி ஒரு சோதனையா??? சத்தியம் ஒரு நாள் உங்கள் நிலையை இந்த சமூகத்துக்கு உரைக்காதா எண்ணும் ஆதங்கம் இது... அதை விடுத்து வேறு வேதனை என்ன எனக்கு???

கர்ணன் : உண்மை... நானாகி விட்டவள் நீ...

சுபாங்கி : என் உயிர் நீங்கள்.. நான் அருந்தும் தேன் உங்கள் வாக்கு... நான் காணும் வான் உங்கள் பார்வை... நான் நாடும் கோவில் உங்கள் இதயம்...

கர்ணன் : ஆஹா... இனிக்க இனிக்கப் பேசி, கனியக் கனியக் காணும் என் கண்மணியை, குலம் எண்ணும் பெயரால் என்னிடம் இருந்து பிரிக்க இருந்தனரே.... (என வருந்துகிறான்)

சுபாங்கி : பிரபு... குலம் என்பதும் இனம் என்பதும் பிறப்பைக் கொண்டு அறியப்படுவது இல்லை... வானுக்குள் இல்லை பேதம், விளக்குக்கு இல்லை இருள்... வீரத்தில் இருதுதான் குலம் பிறக்கும், அதில் மேல் என்றும் கீழ் என்றும் எங்கே இருக்கும்???

கொடுக்கும் கரங்கள் மேல் இருக்கும், பெறுபவர் கரம் தான் கீழ் இருக்கும். கொடுப்பவர் என்பது நீங்கள் அல்லவா??? தருமத்தின் தாயே கலங்காதீர்...

கர்ணன் : ஆஹா... என்னவளே.. என் உயிரே... என் மனதை அமைதிக்கு ஆட்படுத்தி, எனை மகிழ்ச்சிக்கு உட்படுத்த, உயிர் பெற்று வந்தாயா???

நீ இல்லாத இத்துணை வருடமும்
ஒரு நிமிடமாய்த் தான் போனதே...
இனி நீ இன்றி ஒரு நிமிடமும் என்
வாழ்வு நகராதே..

நான் நாடும் சொர்க்கம் நீ, என்
வாழ்வு உன் பக்கம் இனி...

என் மகிழ்ச்சியின் அகராதி நீ
என் காதல் ரதி நீ...

என்னவளே, என் பொருட்டு உன்னை
பெற்று வளர்த்து ஆளாக்கிய உன்
தந்தையைக் கூட எதிர்த்து வந்தாயே

உள்ளம் உருக்கிய உன் இந்த அன்புக்காய்
மன்னித்தேன் உன் தந்தையை... உனக்காய்

என கர்ணனின் என்ன ஓட்டமும்....

என் உள்ளத்தின் இஷ்ட தெய்வமாய்
உம்மை நான் பிரதிஷ்டை செய்து ஆனது
காலங்கள் பல...

அன்றிலிருந்து இன்று வரை கூடும்
இந்த அன்புக்கு எது தடை???

எத்துனை துயரம் அடைந்தாயோ
என்னவனே... என் அன்பின் மன்னவனே

பெற்றவள் உன்னை ஆற்றில் விட்டால்
என்ன? உன் உற்றவள் நான் உன்னை
எதன் பொருட்டும் நீங்கேன்... உன் துயர்
போக்காது தூங்கேன்...

சத்தியம் ஒரு நாள் வெல்லும்... அன்று
உள்ளார்ந்து ஒளிரும் உன் முகத்தைக்
காண காத்திருக்கேன் நானும்...

அதுவரை, உன் மனம் நோகாது, உன்
மலர் முகம் சுருங்காது, மலர்ந்திருக்க
வைத்திருப்பேன் நானும்...



என அவன் வேதனையை நீக்கும் வடிகாலாய்... அவள் மனமும் இருக்க.... காலங்கள் போகிறது...



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 18, 2011 11:11 am

பகுதி இருபது : யார் பாக்கியசாலி



இந்தப் பகுதியில், கர்ணனும், சுபாங்கியும், தாங்கள் இருவரும், ஒருவரை ஒருவர் எவ்வளவு நேசிக்கின்றனர் என்பதை சொல்ல ஆசை... கற்பனைதான்...

கதிரவனிடம் இருந்து ஒளி பெற்று நிலவு ஒளிர்கிறது என நாம் படித்ததுண்டு... ஆனாலும் நிலவிடம் ஒளி பெற்று கதிரவன் ஒளிர்வதாய் நான் அறிவது இப்போதுதான் முதல் முறை..

கொதிக்கும் சூரியனாய், எரிக்கும் பார்வையுடன், மனதால், எளிதில் நெருங்க இயலாத தொலைவிலே அனைவரையும் நிறுத்தி வைத்தவன், தன் மனதை இரக்கத்துக்கும், ஈகைக்கும் மட்டும் திறந்து வைத்தவன்... இன்று இருந்த நிலை... அவனுக்கே புதிது...

அரண்மனையிலும் அவன் நேரம் தவறாமைக்கும், சொன்னதை, சொன்னது போல் செய்வதற்கும் பெயர் போனவன். நேரம் தவறி நடக்கும் எதையும், காணச் சகியாதவன்... தாமதமாய் வந்து, தயங்கிய பணியாளை... இல்லத்தில் சுகமில்லை எனும் காரணம் சொன்னவனுக்கு, விடுப்புடன் பொன் முடிப்பும் கொடுத்து இல்லாளை கவனிக்க அனுப்பினான்...

அனுப்பியவன் சிந்திக்கிறான்... இதற்க்கு முன்னும் இந்த காரணங்கள் நான் கேட்டிருக்கிறேன்... ஆனாலும் இது போல அவனுக்காய் யோசிக்க தோன்றவில்லையே... என ஆழ்ந்த சிந்தனையில்...

சுபாங்கி : என்ன சிந்தனை பிரபோ...

கர்ணன் : எல்லாம் நல்ல சிந்தனை தான்...

சுபாங்கி : புரியும்படி சொன்னால்தான் என்னவாம்???

கர்ணன் : என்னைப் புரிந்தவள், என்னுள் பல மாயம் புரிந்தவள், இது புரியவில்லையா???

சுபாங்கி : போதும் பரிகாசம்... சொல்லுங்களேன்...

கர்ணன் : நீ இப்படிச் சொல்லக் கேட்பதில் தான் எனக்கு மகிழ்ச்சி.. நான் சொல்வதில் இல்ல...

(அச்சோ... என்ன வெட்கம்??? கன்னம் ஆப்பிள் நிறத்துல ஆய்டிச்சே...) கண் நோக்கிய பெண்ணோ இப்போது மண் நோக்க...

மண் நோக்கிய அவளை மன்னன் நோக்க...

முகம் திருப்பி... அவள் நிற்க...

மறுபக்கமும் சென்று மன்னவன் அவள் முகம் நோக்க...

நாணமும், காதலும் போட்டி இட... அவள் மன்னன் முகம் காண...

படபடக்கும், இரு வண்ணத்துப் பூச்சி அவள் கண்களிலே... செங்காந்தள் நிறம் அவள் கன்னத்திலே... தறி கேட்டு ஓடும புரவி அவள் எண்ணத்திலே...

காற்றில் ஆடும் சருகாய் அவள் இதழ்கள்... அவள் மன்னவன் முகம் நோக்க...

வழிய வழிய காதலை விழி வழி இவள் இதயம் நுழைக்கும் முயற்சியில் கர்ணன் கண்கள்... உலகிலே தனக்கு மிகப் பிரியமான பொருளை நோக்கும் விதமாய் அவன் பார்வை... தொட்டால் வலிக்குமோ என மெலிதாய் வருடும் மயிலிறகாய்.. அவன் தீண்டல்...

தாங்க முடியா சுமையால் மூடின அவள் இமைகள்...

(ஓகே ஓகே... திட்டாதீங்க... வந்துட்டேன் பா... )

பக்கத்து நந்தவனத்தில் கேட்ட குயிலோசையில் கலைந்தன அவர்கள் சிந்தனை...

கர்ணன் : சுபா...

சுபாங்கி : ம்ம்ம்ம்

கர்ணன் : உறங்கி இருந்த என் உணர்வுகளுக்கு எல்லாம்.. உயிர் கொடுத்த என் உயிரே... நீ இன்றி இனி இருந்திடுமோ என் உயிரே???

சுபாங்கி : என்னுள்ளே பெண்மையை.. உயிர்பித்தவர் நீங்கள்... காதலை உயிர்வித்தவர் நீங்கள்... என் உயிரே உறைந்திருக்கும் என்னுயிர் நீங்கள்..

கர்ணன் : என் நிலவு நீ...

சுபாங்கி : என் வானம் நீங்கள்..

கர்ணன் : என் சுவாசம் நீ...

சுபாங்கி : என் மனதின் வாசம் நீங்கள்...

கர்ணன் : தாமரை மலர் நீ...

சுபாங்கி : எனை மலர்விக்கும் ஆதவன் நீங்கள்...

கர்ணன் : நிலவுக்கும், உனக்கும் வேறுபாடு தெரியவில்லை எனக்கு...

சுபாங்கி : உங்களிடம் ஒளி பெரும் நிலவு தானே நான்...

கர்ணன் : கண்ணே...

சுபாங்கி : மன்னா...

கர்ணன் : மென்மையான உணர்வுகள் மரத்துப் போன மரம் நான் என இருந்தேன்... நீ என் வாழ்வில் நான் அருந்தத் திகட்டாத தேன்...

சுபாங்கி : மரத்துப் போன உணர்வுகள் அல்ல அவை.. மறந்து போனவை... உம்மை விட்டு ஒதுங்கி இருந்தவை...

கர்ணன் : ஒதுங்கியனவா??? என்னிடம் இருந்தா???

சுபாங்கி : இல்லை.. இல்லை... பதுங்கியவை.... உங்கள் வீரம் கண்டு...

கர்ணன் : ஹ ஹ ஹ.... இப்போது மட்டும் வருவானேன்??? என் வீரம் மட்டுப் பட்டதா???

சுபாங்கி : மட்டற்ற வீரம் உம்முடையது... அது மட்டுப் பட வில்லை... அன்பினால் கட்டுப் பட்டது...

கர்ணன் : உண்மை... கட்டுண்டு கிடப்பதும்.. சுகம் தான் போலும்.....

சுபாங்கி : உங்கள் அன்பினால் நானும் கட்டுப் பட்டுப் போனேன்.... தேடி அலைந்து நான் கண்ட தேவாமிர்தம் நீங்கள்...

கர்ணன் : தேன்மதுரம் உன் பேச்சு...

சுபாங்கி : தீங்கிழைக்கும் உங்கள் பார்வை வீச்சு...

கர்ணன் : தீண்டக் கூடாதா???

சுபாங்கி : தடை தாண்டக் கூடாதா??

கர்ணன் : சம்மதம் தானா???

சுபாங்கி : சொல்லவும் வேண்டுமா???

கர்ணன் : மனதுக்கு இனியவளே, சுகம் தரும் என்னவளே... சுகித்திருப்பேன் உன் அருகினிலே..

சுபாங்கி : அன்பைப் பொழியும் அறுநிதியே, உங்கள் அன்பே என் கவசம்

கர்ணன் : சுபா... கனியக் கனியக் காதல் பேசும் என் கண்மணியே.... என் ஆருயிரே.... நான் இல்லை என் வசம்...

சுபாங்கி : எப்போதும் நான் உங்கள் வசம்..

கர்ணன் : என் வாக்கியம் நீ...

சுபாங்கி : நான் செய்த பாக்கியம் நீங்கள்..

கர்ணன் : குளிரும் நிலவே, குறிஞ்சி மலரே... குறை இன்றி வைத்திருப்பேன் உன்னை...

சுபாங்கி : ஒளிரும் கதிரே, ஓய்வில்லாப் பகலே... உம்மருகே நான் இருக்க குறை என்ன எனக்கு???

கர்ணன் : சுபா... சுபா... எனைக் குளிர்விக்கவே வந்த குங்குமமே... பாதம் பதிக்கும் பங்கையமே... நீ என் வாழ்வில் ஒரு நித்திய உதயம்

சுபாங்கி : நான் வாழ வேண்டுமே.. உங்கள் இதயம்...

கர்ணன் : தந்தேன் என் தாமரையே... நீ வாழத்தான் என் இதயம்...

சுபாங்கி : நீங்கள் என் இதய வானின் உதயம்...

கர்ணன் : இதைத்தான் நான் அப்போது சிந்தித்துக் கொண்டு இருந்தேன்.. என்னையே கொஞ்சம் நிந்தித்துக் கொண்டு இருந்தேன்...

சுபாங்கி : எதைப் பற்றியது உங்கள் சிந்தனை?? அதற்கு ஏன் நிந்தனை???

(கர்ணன் பணியாள் பற்றி சொல்கிறான்..)

சுபாங்கி : அதனால்???

கர்ணன் : இதுவரை நான், என் பணிகள் நேரம் தவறாது நடக்க வேண்டும் என எண்ணியதுண்டு... அதிலே அடுத்தவர் சிரமம் என்பது நான் அறிந்தேன் இல்லை... எனை அறிய வைத்தவள் நீ... என் அரிய பொக்கிஷம் நீ...

சுபாங்கி : என் அன்பின் அகராதி நீங்கள்... என் பொருட்டு உங்களுக்கு எத்துனை அன்பு........................ கண்ணா.....

கர்ணன் : அன்பே...

சுபாங்கி : உலகில் உள்ள அத்துணை உறவுகளும், சொல்லால், மொழியால், பொருளால்... எனை அன்பிலே குளிப்பாட்டியது போல, என் நெஞ்சம் நிறைந்து உள்ளது...

கர்ணன் : நெகிழ்ச்சியில் என் உள்ளம்... வேண்டுவன கேள்... நொடியில் தருகிறேன் உனக்கு...

சுபாங்கி : கேட்கும் முன்னே அனைத்தும் தர நீங்கள் இருக்கையில் வேறென்ன வேண்டும் எனக்கு???

கர்ணன் : ஏதாவது கேள்... நான் உனக்கு தந்தே ஆகவேண்டும்...

சுபாங்கி : என் இன்பம் நாடும் இதயம் அதில் நானே வசிக்க வேண்டும்
என் துன்பம் போக்கும் கரங்கள்... அதன் உள்ளே நான் உறங்க வேண்டும்...
எனை அன்பாய் நோக்கும் விழிகள்... அதன் இமையாய் நான் இருக்க வேண்டும்
என் உயிர் நீங்கள்... அதைக் காக்கும் மெய்யாய் நான் இருக்க வேண்டும்...
உங்கள் கடந்த காலம் அதை பொய்யாய் ஆகும் வலிமை எனக்கு வேண்டும்...
என நான் வேண்ட... வேண்டுவன நிறைய உண்டு...

கர்ணன் : சுபா... என் நலம் நாடும் என் நெஞ்சுக்கு இனியவளே...

சுபாங்கி : இன்னும் நான் வேண்டுவது ஒன்று உண்டு..

கர்ணன் : சொல் கண்ணே...

சுபாங்கி : நான் மேற்சொன்ன எதுவும் எனக்கு இல்லாது போயினும்...

கர்ணன் : ம்ம்ம்ம்

சுபாங்கி : என் மரணத்துக்கு முன்னே... நான் கண்ட கடைசி உயிர் நீங்களாக வேண்டும்.... இந்த வரம் மட்டும் தருவீரா பிரபோ...

கர்ணன் : (கலங்கிய விழிகள்.. கதறும் இதழ்கள்... பதறும் நெஞ்சம்...)

என்ன தவம் செய்தேன் நான் உன்னை என்னவளாய் அடைய.... அன்பே...

என் மரணம் உனக்கு முன் என்றாலும்... நீ எனைக் காணும் வரை என் உயிர் உடல் அருகே உனக்காய் காத்திருக்கும்..

சுபாங்கி : பிரபோ... உங்கள் மரணம் எனும் செய்தி எனைத் தீண்டும் போது.. அது உயிர் அற்ற என் உடலைத்தான் தீண்ட முடியும்...

கர்ணன் : என் உயிரே சுபா....

சுபாங்கி : என் தெய்வமே... பிரபோ...

(கர்ணனுக்கும், சுபாங்கிக்கும் இடையிலான பிரியத்தை சொல்ல இந்தப் பகுதியைத் தொடங்கினேன்... அதைத் தவிர வேறு எதுவும் சொல்ல இயலாமல் போய் விட்டது..)



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 18, 2011 11:12 am

பகுதி இருபத்தி ஒன்றில் ஒன்று : உண்மை நண்பன் :

பெயரளவிலும், அன்பிலும் மட்டும் அல்ல, ஒரு மன்னனாகவும் கர்ணன் தன் கடமைகளை இனிதே செய்து வந்தான்...

முன்னர் யுதிர்ஷ்டர் ராஜசூய யாகம் செய்திருந்தார். அது போல தானும் செய்ய ஆசை கொண்டான் துரியோதனன். இந்த யாகம் செய்ய ஒரு நிபந்தனை உண்டு. அந்த யாகத்தை தலைமை ஏற்று நடத்துபவருக்கு பல நாட்டு அரசர்கள் கட்டுப் பட்டு இருக்க வேண்டும்.

தனது ஆர்வத்தை துரியோதனன் கர்ணனிடம் சொல்ல, கர்ணன் பொறுப்பை ஏற்றுக் கொண்டான். சுற்றிலும் உள்ள பல நாடுகளுக்கு படை எடுத்துச் சென்று அனைவரையும் வெற்றி கண்டான். கால் வைத்த திக்கெல்லாம் வெற்றி.. வெற்றி... அவனுக்கு....

வெற்றியுடன் திரும்பிய அவனை, ஆரத் தழுவி வரவேற்றான் துரியோதனன்.

ஆனாலும் இந்த யாகத்தை செய்ய புரோகிதர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. அந்த யாகம் செய்த ஒருவர் இருக்கையில், வேறொருவர் அதை செய்யக் கூடாது... தர்மர் இருக்கிறார்.. அத்தோடு கூடவே, தந்தை இருக்கையில் தந்தை தான் முன்னின்று செய்ய வேண்டும், எனக் கூறி யாகம் செய்ய மறுத்தனர்.

வேண்டுமானால், அதற்கு ஒப்பான, வைஷ்ணவ வேள்வி செய்யலாம்... எனக் கூறி அதைச் செய்தனர்...

முறைப்படி அனைவருக்கும், அழைப்பு அனுப்பப்பட்டு, அனைவருக்கும் தகுந்த மரியாதை செய்யப்பட்டது....

பெரியவர்கள் அனைவரும் கலந்து கொள்ள, வெகு விமரிசையாய் நடந்தேறியது அந்த வேள்வி. வேள்வியின் வெற்றிக்கு கர்ணனே காரணம் என எண்ணினான் துரியோதன். அவனிடம் இன்னும் ஒரு வேண்டுகோள் வைத்தான்.

போரில் பாண்டவர்கள் அனைவரும் தோற்றதும், தருமரின் மறைவுக்குப் பின், ராஜசூயாகத்தை தனக்காக நடத்தித் தருமாறு கோரினான்.

அப்படி செய்தால், தன் புகழ் மேலும் உயரும் எனும் ஆவல் அவனுக்கு...

அப்போது கர்ணன ஒரு சபதம் செய்தான். “மன்னா, அர்ஜுனனை நான் போரில் கொல்லும் வரை மது மாமிசங்களைத் தீண்டேன். இல்லை என்று வந்தோருக்கு, இல்லை எனும் சொல் என்னிடம் இராது” என்பதே அது.

மகாரதர்களான பீஷ்மர், துரோணர் என
அனைவரும் இருக்க, என்னில், என்
வீரத்திலும், தீரத்திலும், நம்பிக்கை
கொண்ட என் நண்பனே, உனக்காய்
நான் எதையும் செய்வேன். என்
சக்திக்கு அப்பாற்பட்டதானாலும்
என் உயிர் கொடுத்தேனும் அதை
உன் பொருட்டு செய்வேன்...

என் கர்ணனும்

ஆயிரம் சுற்றங்கள் எனை சூழ்ந்து
இருந்தாலும், என் எண்ணங்களை
நான் சொல்லும் முன்னே அறிந்து
என் முன்னேற்றத்துக்காய் பறந்து
என் நாட்டின் எல்லைகள் விரிந்து
என் மகிழ்ச்சியின் விரிந்தது
உன்னாலே... என் உத்தம நண்பனே...

என துரியோதனனும்... மனத்தால்... ஒருவரை ஒருவர் மேலும் மேலும் நெருங்கிக் கொண்டு இருந்தனர்...



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 18, 2011 11:13 am

பகுதி இருபத்தி ஒன்றில் இரண்டு : நான் தந்தை

அமுதூறும் காதலிலே கர்ணனும், சுபாங்கியும் இருக்க... தேனூறும் செய்தி ஒன்று கர்ணனுக்கு....

சுபாங்கி கருவுற்று இருந்தாள்....

எல்லை இல்லாத மகிழ்ச்சியில் கர்ணன். பிறப்பரியா எனக்கு என் பெருமை சொல்ல ஒரு மகவு.... ஒரு சிறந்த கணவனாய் இதுவரை இருந்தேன். இனிமேல் ஒரு நல்ல தகப்பனாகவும் நான் இருக்க வேண்டும். எனும் எண்ணம் அவன் உள்ளே..

மனைவி அவளை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்கிறான். பானுமதியும், துரியோதனனும் அவ்வப்போது வந்து அவள் நலம் விசாரித்துக் கொள்கின்றனர்.

மாதங்கள் உருண்டு ஓடுகின்றன.

புளிப்பான மாங்காய்கள் தான் சுபாங்கியின் விருப்ப உணவு...

ஒரு நாள்.. அவளுக்கு மாங்காயை வெட்டிக் கொடுத்துக் கொண்டு இருந்த கர்ணன்

கர்ணன் : சுபா....

சுபாங்கி : ம்ம்ம்ம்

கர்ணன் : நான் ஒன்று கேட்கட்டுமா???

சுபாங்கி : புதிதாய் என்ன சுவாமி... கேளுங்களேன்...

கர்ணன் : நீ கூச்சபடாமல் பதில் சொல்வதானால் கேட்கிறேன்

சுபாங்கி : அப்படி எனில் எனை கூச்சப்படுத்தவே ஏதோ கேட்கப் போகிறீர்கள்... சரி கேளுங்கள்..

கர்ணன் : இப்படி குழந்தையை சுமந்து கொண்டே இருப்பது பாரமாக இல்லையா???

சுபாங்கி : அது, கடவுள் பெண்களுக்கு என்றே கொடுத்த வரம்..

கர்ணன் : அப்படியா???

சுபாங்கி : ஆமாம். அன்பான கணவனின், கருவை உள்வாங்கிய நிமிடம் தொட்டு, அவரையே சிறு குழந்தையாய் பாவித்து, எங்கள் வயிற்றிலே வைத்து, அனைத்து வேலைகளையும், உண்பது, உறங்குவது போன்ற அனைத்தையும், பார்த்து பார்த்து, அந்த சிசுவின் அசைவை உணரும் நொடி இருக்கிறதே... சொல்லில் வடிக்க இயலாத சுகம் அது... சொல்லத் தெவிட்டாத இன்பம் அது.

வேண்டிச் சுமக்கும் வரம் அது. சுமை அல்ல சுகம்...

கர்ணன் : போதும் போதும்... இந்த வரம் உங்களுக்கே இருக்கட்டும் தாயே... ஆளை விடு.. ஹ ஹ ஹ

சுபாங்கி : என்ன தெரியும் உமக்கு. சூல் கொண்ட என்னில் கருவாய் உருக்கொண்டது நீங்கள் தான்..

கர்ணன் : சுபா... என் அன்பே...

சுபாங்கி : நீங்கள் அது போல இல்லையே... என் நினைவே இன்றி நீங்கள் போர்.. போர் என சென்று விடுவது பெருமை தரும் விஷயமாய் இருந்தாலும், நான் வேண்டும் வேளையில், உங்களால் என், என்னருகே இருக்க இயலாதது எனக்கு கொஞ்சம் வேதனை தருகிறது சுவாமி...

கர்ணன் : நீ சுமக்கும் சூல் ஒரு பத்து திங்கள் தானே கண்ணே..
என் நெஞ்சில் உன்னை நான் சுமப்பது நீ அறியாததா பெண்ணே???

சுபாங்கி : பிரபோ...

கர்ணன் : ஆம் சுபா, எனக்காய் உன் தாய், தந்தையரை விடுத்து என்னுடன் வந்தவள் அல்லவா?? நானாய் ஆனவள் நீ. உன்னை நான் நொடியும் நீங்காது உன்னுடனே இருக்கவே விழைகிறேன்.

என்ன செய்ய கடமை இருக்கிறது அல்லவா???

சுபாங்கி : அதை நன்றாய் நான் அறிவேன் சுவாமி.. ஆனாலும் மதிக்கு தெரிவது.. இந்த மட மனதுக்கு தெரியவில்லையே... (கண்ணீர் விடுகிறாள்)

கர்ணன் : (அவள் கண்ணில் நீர் வழிய இவனுக்கோ, நெஞ்சில் குருதி... )

வேண்டாம் கண்ணே, கலங்காதே... இனி உன் பொருட்டு நீ விரும்பும் வரை நான் உன்னோடு இருக்கிறேன்...

சுபாங்கி : என் உயிரே... என் தெய்வமே... (அடடா.. என்ன சந்தோசம் இந்தப் பொண்ணுக்கு)

கர்ணன் : நீ சிரிக்கையில் என் உள்ளம்...

(கர்ணன் திரைப் படத்தில் வரும் காட்சிகள்... கொஞ்சம் வேறுபடலாம்...)


தூதுவன் : பிரபுவுக்கு வந்தனம்

கர்ணன் : ம்ம்ம்ம்ம்

தூதுவன் : மன்னா... சந்திர சைல நாட்டில் இருந்து வந்திருக்கும் தூதுவன் நான். உங்கள் மாமியார் உங்கள் மனைவியை வளைகாப்பு நடத்த அனுப்பி வைக்குமாறு தங்களை கேட்டு ஒரு ஓலை அனுப்பி இருக்கிறார்.

சுபாங்கி : யார் என் அம்மாவா??? ஆர்வமும், மகிழ்ச்சியும் போட்டி இட, தூதுவனைக் கேட்கிறாள்...

தூதுவன் : ஆம் தாயே...

கர்ணன் : சுபா.... என அவளை அடக்கி விட்டு... ஏனப்பா, உங்கள் மகாராணிக்கு, தனக்கு ஒரு மகள் இருந்தது இப்போதுதான் நினைவு வந்ததா???

சுபாங்கி : பாரப்பா... நீ சற்றே ஓய்வெடுத்துக் கொள்...

தூதுவன் : சரி தாயே... என் வெளி செல்கிறான்

சுபாங்கி : பாருங்கள் பிரபு... சற்றே அமைதியாகக் கேளுங்கள்... காப்பு சூட்டுதல் ஒரு பெண்ணுக்கு அவள் வாழ்வில் கிடைக்கும் பெரும் பேறு.. தாய் இருந்தும் எனக்கு அந்த நலம் கிடைக்கவில்லையே என நான் எண்ணி எண்ணி அழுதிருக்கிறேன். தெய்வமே எனக்கு அருள் செய்ய என் அன்னையின் அழைப்பை அனுப்பி இருக்கிறது.

தாங்கள் தயை கூர்ந்து தடை சொல்லாது எனை அனுப்பி வையுங்கள்.

கர்ணன் : தாயற்ற நான் படும் துன்பம், உன்னையும் தாயற்றவள் ஆக்கத் துணியுமா??? என் உயிரான நீ உலக வழக்கில் இருந்து விளக்கப் படுவதை நான் தான் விரும்புவேனா?? ஏதோ என் இதயம் உன்னை அங்கே அனுப்ப ஒப்பவில்லை..

என் மனதுக்கு இனியவள்.. மனம் வாட ஏதும் நடந்திடுமோ என்ற அச்சம் தான். அப்படி ஏதும் இருந்து விட்டால்... ஆ... நினைக்கும் போதே மான உணர்ச்சி கொந்தளிக்கிறது சுபா...

உத்தரவு தருவது எனக்கு நல்லதாகப் படவில்லை... எனைத் தவறாக நினைக்காதே... மன்னித்துவிடு...

சுபாங்கி : உங்கள் இஷ்டம். கொடுத்து வைக்காதவளுக்கு இந்த முடிவு இயற்கை... என் அழுது கொண்டே சென்று ஒரு பக்கம் அமர்கிறாள்...

அப்போது பானுமதி உள்ளே வருகிறார்...

பானுமதி : சுபா....

சுபாங்கி : மகாராணி... என தாயைத் தேடும் கன்றாய் ஓடிச் சென்று அவளை அடைகிறாள்...

பானுமதி, இவள் பொருட்டு கர்ணனிடம் பேசுகிறாள்..

பானுமதி : அண்ணா, வாயும் வயிருமாக உள்ள பெண்ணை, உயிரும் உள்ளமும் போல போற்ற வேண்டும். பூச்சூட வந்திருக்கும் தாயின் அழைப்பை ஏற்க மறுத்து விட்டீர்களா???

கர்ணன் : ஆமாம். அதனால் தான் இந்த சோகக் கண்ணீர்... ஏன் என்றால் பாசத்தின் மறு அவதாரம் அல்லவா என் மாமன், மாமியார்...

பானுமதி : அண்ணா, சற்று பொறுமையாக கேளுங்கள்... பெற்றோரின் கோபம் என்றுமே நிலைக்காது... அவர்களாக மனம் மாறி வரும்போது அதை தடை சொல்வது அழகும் அல்ல, மரியாதையும் அல்ல.. என் வேண்டுகோள்..

கர்ணன் : இஷ்டம் இல்லை என்பது போல முகம் திருப்ப...

பானுமதி : அல்லது என் உத்தரவு... சுபாவை நீங்கள் மனமார வாழ்த்தி, முகம் மலர போய் வா எனக் கூறுங்கள்...

கர்ணன் : ம்ம்ம்...ம்ம்ம்ம்... நடப்பது நடக்கட்டும்... எனக்கென்று இனி என்ன ஒரு புது அவமானமா வந்து விடப் போகிறது??? என சுபாங்கியின் பக்கம் திரும்பி.. போ..போ...

பானுமதி : ம்..ஹூம்... இதையே கொஞ்சம் இன்பமாக சொல்லி விட்டால் என்ன நஷ்டமாம்???

மகளே, ஒரு குறையும் இன்றி
மனதில் மகிழ்ச்சி நிறைய,
இதுவரை பட்ட வேதனை மறைய,
உன் வாழ்வில் இன்பம் நிறைய..

போய்... வா... மகளே... என ஒரு அன்னையாய் இருந்து அவளை கர்ணனின் ஒப்புதலின் பேரில் வழி அனுப்பி வைக்கிறாள்...



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 18, 2011 11:13 am

பகுதி இருபத்தி இரண்டில் ஒன்று : மீண்டும் அவமானம் :

பானுமதி வழி அனுப்புகையில் சுபாங்கிக்கு வரவேற்பு இப்படி எல்லாம் இருக்கும் என ஒரு பாடல் மூலம் சொல்லி அனுப்புகிறாள்..

இது போல...

காவலன் சேனை நின்றிருக்கும் - தந்தை
கண்களும் உன்னைக் கண்டிருக்கும்
பாவலர் தோழியர் இசை கேட்கும் அன்புப்
பார்வையெல்லாம் உன்னை வரவேற்கும்

(நன்றி சரோஜ், நீங்கள் தந்த இந்த பாடல் வரிகளுக்கு... )

தந்தையின் இல்லம் செல்லும் வழியில்... தனக்கு வரவேற்ப்பு இப்படி எல்லாம் இருக்கும் என ஒரு கற்பனையில் செல்கிறாள் சுபாங்கி...

ஊரெல்லாம் விழாக் கோலம் பூண்டு, விருந்தினர் வரவில் அரண்மனை நிறைய, மங்கல நாதங்கள் முழங்க, மலர்த் தோரணங்கள் வீதி எங்கும் தொங்க, அரண்மனை வாயிலில் இருந்து... தோழிகள் மலர் தூவி வரவேற்க, வழியும் அன்பும், அதை வார்த்தைகள் இன்றிச் சொல்லும், ஆனந்தக் கண்ணீருமாய், தாயும், தந்தையும் தன்னை வரவேற்கக் காத்திருப்பார் என ஒரு இனிய கற்பனையுடன் வருகிறாள்.

அரண்மனையும் வந்தது.. வாயிலில் யாரும் இல்லை. விழா நடக்க எந்த அறிகுறியும் இல்ல.

தோழியர் யாரும் இல்ல. உறவிறனர் ஒருவரும் இல்லை.

பணியாளர் மட்டும் இவளை வணங்கி இருக்க, குழப்பத்துடன் அரண்மனைக்குள் நுழைகிறாள்.

அன்பாய் வரவேற்க அன்னையும் இல்ல, பாசமாய் அரவனைக்க தந்தையும் இல்லை...

சுபாங்கி : அம்மா... அம்மா...

சு. தந்தை : நில். எங்கே வந்தாய்??

சுபாங்கி : காப்புச் சூட்ட. (வாக்கியத்தை முடிக்கும் முன்னே தந்தையின் இடையீடு..)

சு. தந்தை : என் முகத்தில் கரி பூசிச் சென்றவள் நீ. உனக்கு காப்பு சூடுவதா??? அதற்காய் என் வாயிலை மிதித்திதாயே... மானமில்லாதவளே...

சுபாங்கி : வார்த்தைகளை சிதற விடாதீர். சொல்லாய் வெளி வந்ததும் வாயு வெளியில் கலந்து காணாமல் போனாலும், அது விளைவிக்கும் பல விபரீதங்கள்..

சு. தந்தை : முறை இன்றி வந்தவளுக்கு, முகமன் வேறு சொல்ல வேண்டுமோ???

சுபாங்கி : முறை இன்றி வரவில்லை. அழைப்பு வந்ததால் தான் வந்தேன்.

சு. தந்தை : அழைப்பு... அரசாங்க வேலை விஷயமாய், அசலூர் போன கணவன் வீடு திரும்பும் முன் பூச்சூட்டி அனுப்பிடலாம் என கனவு கண்டாள் நான் கட்டிய மனைவி.. பாவம், வேலை விரைவில் முடிந்து நான் வந்துவிடுவேன் என அவளுக்கு தெரியவில்லை.

சுபாங்கி : அப்போது நீங்கள் என்னை அழைக்கவில்லையா???

சு. தந்தை : ஒரு தேரோட்டியின் மகனுக்காக, இந்த தேசத்தின் அரசனை தூக்கி எறிந்து சென்றவளுக்கு அழைப்பா???

சுபாங்கி : அப்பா... என் அருகே செல்ல விழைய...

சு. தந்தை : சீ... போ... எனத் தள்ளி விடுகிறார்..

சு. அன்னை : ஐயோ மகளே.. என ஓடி வருகிறார்... (இப்படித்தான் வரச் சொல்லிட்டு.. உள்ளே போய் இருக்கறதா???)

சு. தந்தை : இனி நீயும் சரி.. உன் சம்மந்தப்பட்ட எதுவும் இந்த நாட்டின் எல்லைக்குள் கூட வரக் கூடாது. போய் விடு இங்கிருந்து..

சு. அன்னை : நீங்கள் செய்வது கொஞ்சம் கூட முறை இல்லை.

சு. தந்தை : முறை தவறி காரியம் செய்தது உன் மகள். நான் அல்ல. ஒரு தேரோட்டியின்..

சுபாங்கி : அப்பா.. போதும் நிறுத்துங்கள். என் கணவர், ஒரு நாட்டின் அரசர். அவரைத் தரக் குறைவாக பேச உங்களுக்கு அதிகாரம் இல்லை.

சு. தந்தை : நீ இப்போது இருப்பது என் ஆட்சிக்கு உட்பட்ட பகுதி. இங்கே நின்று நீ இதை சொல்லக் கூடாது... போய் விடு இங்கிருந்து. கண் முன்னே நிற்காதே.

சுபாங்கி : என் கணவரின் சிறப்பை நீங்க ஓர் நாள் அறியத்தான் போகிறீர்கள். அப்போது நீங்கள் உங்கள் செயலுக்காய் வருந்தத்தான் போகிறீர்கள்.

சு. தந்தை : பார்கிறேன் அதையும் தான்.

சுபாங்கி : நான் வருகிறேன்.

சு. தந்தை : மீண்டுமா???

சுபாங்கி : நான் போகிறேன். இனி ஒரு முறை என் கால்கள் உங்கள் மண்ணில் பதியாது.

சு. அன்னை : மகளே...

சுபாங்கி : சென்று வருகிறேன் அம்மா..

நெஞ்சம் நிறைய கனவுகளுடன் வந்தவள், கண்கள் நிறைய கண்ணீரை சுமந்து திரும்பினாள்... கர்ணனின் இருப்பிடம்...



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 18, 2011 11:14 am

பகுதி இருபத்தி இரண்டில் இரண்டு : காப்பு விழா :

அவள் அவமானப்பட்டு திரும்பியதை அறிந்த கர்ணன், கொதித்தெழுந்தான். அவள் திருப்பி அனுப்பப் பட்டதை அறிந்த பானுமதியும் அவளை ஆறுதல் படுத்த வந்திருந்தாள்.

கர்ணன் : வேண்டாம் வேண்டாம் என நான் சொல்லச் சொல்ல.. சென்றாயே.. இப்போது வந்து அழு.... என் மனம் ஒப்பவில்லை, போகாதே என எத்துனை முறை சொன்னேன்?? கேட்டாயா என் பேச்சை?? இனி இப்போதும், எப்போதும் இந்தப் பேச்சை எண்ணி எண்ணி அழு... நானும் அழுது கொண்டே இருக்கிறேன்.

கருவுற்ற நாள் முதலாய், உன் கண்ணில் ஒரு நீர் மணி வர விட்டிருப்பேனா??? இப்படி உள்ளமும், நெஞ்சமும் பதறி, அழும் உனைக் கண்டு என் உள்ளம் கொதிப்பது உனக்கு புரிகிறதா சுபா???

சுபாங்கி : என்னை மன்னித்து விடுங்கள். தாயன்பை இழந்து துன்பப் படும் உங்களுக்கும், என்னுடைய அதே நிலைமை துன்பத்தை பெருக்கக் கூடாது என்றுதான் நான் அங்கே சென்றேன். ஆனால், அது நினைத்ததர்க்கு மாறாக, இடி மேல் இடி விழுந்தார் போல் ஆகும் என நான் எதிர் பார்க்கவில்லை.

என்னை மன்னித்து விடுங்கள், என்னை மன்னித்து விடுங்கள் எனக் கதறுகிறாள்.

கர்ணன் : அவள் நிலை காணச் சகியாது கலங்கி நிற்கிறான்.

பானுமதி : இருவரின் நிலை கண்டு, உள்ளம் உருகி, தாய்மை உணர்வு பெருக சொல்கிறாள்

அண்ணா, இதற்க்கு, இவ்வளவு கோபமும், ஆத்திரமும் தேவையே இல்லை. நமக்கு இதில் எந்தப் பழியும் வராது. உலகம் அவர்களைத்தான் பழிக்கும்.

சுபா, இந்த நிலையில் நீ அழக் கூடாது. உன்னைப் பெற்ற தாயைவிட உன்னிடம் அன்பு செலுத்த நான் ஒருத்தி இருக்கிறேன் அல்லவா?? அவரை விட பன்மடங்கு சிறப்பாக இந்த சடங்கை நான் உனக்கு செய்துவிட மாட்டேனா???

சுபாங்கி : நெகிழ்ச்சியில் அப்படியே பானுமதியைக் கட்டிக் கொள்கிறாள்.

கர்ணன் : கலங்கிய அவன் விழிகளும், பானுமதியின் வார்த்தைகளில் தெளிகிறது. அவள் அன்பு புரிகிறது. நட்பின் அருமை அதை விட சிறப்பாய் அவனில் நுழைகிறது.

என்ன தவம் செய்தேனோ நான்,
நண்பா உன்னையும், பானுமதி
போல ஒரு தங்கையும், நான்
அடைய...

என்னிலே பாதியான என்னவள் ,
அவள், துக்கம் மறைய,
அவளுள் இன்பம் நிறைய,
என் மனம் அதைக் கண்டு நிறைய

இலகுவாய் இருப்பது போல் காட்டி
அரிய பல செயல்களை அசாத்தியமாய்
நடத்தி, என்னை மகிழ்விக்கும் உங்கள்
அன்பு நான் காண்க கிடைக்காத வரம்

என் கர்ணன் எண்ணுகிறான்.

அன்னையும், தந்தையும், முன்னின்று
முறையாய் செய்திருக்க வேண்டிய
சடங்கு அது எனக்கு இல்லாது
போகாது, அதை விட அழகாய்
அதை விட சிறப்பாய் நடத்தும்
உங்கள் அன்புக்கு நான் என்ன
கைம்மாறு செய்வேனோ, என்
அனைத்துமான அன்னையே...

என சுபாங்கியும் எண்ணுகிறாள்.

முறையாய் செய்ய வேண்டியன செய்து, ஒரு குறையும் இன்றி, இனிதாய், இலகுவாய்... நடந்தேறுகிறது அந்த சடங்கு. பானுமதியின் நேரடி மேற்பார்வையில்.

அன்னையாய் இருந்து அனைத்தையும் அவளே செய்ய, தந்தையின் இடத்தில், துரியோதனன் இருந்து... ஊரே மெச்ச அனைவருக்கும் விருந்தளித்து, அவரது அகமும், முகமும் நிறைய, கர்பிணிப் பெண்ணை வாழ்த்த வைத்தாள்...

பாடல் வரிகள் கர்ணன் திரைப் படத்தின் வரிகள் :

மஞ்சள் முகம் நிறம் மாறி மங்கை உடல் உருமாறி
கொஞ்சும் கிளிபோல் பிள்ளை உருவானதே
மஞ்சள் முகம் நிறம் மாறி மங்கை உடல் உருமாறி
கொஞ்சும் கிளிபோல் பிள்ளை உருவானதே

அஞ்சி அஞ்சி நடந்தாள் அந்நாளிலே
இவள் அன்ன நடை தளர்ந்தாள் இந்நாளிலே
அஞ்சி அஞ்சி நடந்தாள் அந்நாளிலே
இவள் அன்ன நடை தளர்ந்தாள் இந்நாளிலே
துள்ளி வந்த மான் இன்று சேய் கொண்டதே
துள்ளி வந்த மான் இன்று சேய் கொண்டதே
துள்ளி வந்த மான் இன்று சேய் கொண்டதே

மஞ்சள் முகம் நிறம் மாறி மங்கை உடல் உருமாறி
கொஞ்சும் கிளிபோல் பிள்ளை உருவானதே

மலர்கள் சூடி மஞ்சள் கூட்டி வளையல் பூட்டி திலகம் தீட்டி
மாதின்று வாழ் என்று வாழ்த்துப் பாடுவோம்
மலர்கள் சூடி மஞ்சள் கூட்டி வளையல் பூட்டி திலகம் தீட்டி
மாதின்று வாழ் என்று வாழ்த்துப் பாடுவோம்

கர்ணன் தந்த பிள்ளை என்றால் கார்மேஹம் அல்லவா
கர்ணன் தந்த பிள்ளை என்றால் கார்மேஹம் அல்லவா
எதிர் காலத்தில் இந்த தேசத்தில் அவன் கருணை செய்வான் அல்லவா
அவன் கருணை செய்வான் அல்லவா

மஞ்சள் முகம் நிறம் மாறி மங்கை உடல் உருமாறி
கொஞ்சும் கிளிபோல் பிள்ளை உருவானதே

என அழகாய் விழா நடந்து முடிந்தது... மனதுக்கு நிறைவாக...



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 18, 2011 11:15 am

பகுதி இருபத்தி மூன்று : என்ன நேர்ந்தது??

இங்கே கர்ணனுக்கு அனைத்தும் நல்ல படி நடந்து கொண்டு இருக்கிறது. கூடவே அங்கே பாண்டவர்களும், கௌரவர்களும் என்ன செய்கிறார்கள்.. என்பதை இந்தப் பகுதியில் காண்போம்.

தருமர் செய்த ராஜசூய யாகம் தான் துரியோதனனின் பொறாமையும், வன்மமும், கொழுந்து விட்டு எரியக் காரணம். கூடவே திரௌபதியின் நகைப்பும் தான் எரிகின்ற அந்த கோபத்திற்கு எரியூட்டும் எண்ணெய்.

இந்த விவரங்கள் பலருக்கும் தெரிந்திருக்கும், ஆனாலும் கொஞ்சம் இதையும் பகிர்ந்து விட்டால் தொடர்ந்து படிக்க, ஏதுவாக இருக்கும் என்பதால், பாண்டவர், கௌரவர்களைப் பற்றிய ஒரு சிறு விளக்கம்.

ஆற அமர அவர்களைப் பற்றி சொன்னால், அத்தியாயங்கள் நீண்டு விடும். எனவே தூர இருந்து நோக்கும் ஒரு கழுகின் போக்கில் அங்கங்கே தொட்டுச் செல்கிறேன். ஆழமாய் விஷயம் தெரிந்தவர்கள் எனை மன்னிக்கவும். தவறு இருப்பின் சுட்டிக் காட்டவும். நன்றி.

மகாபாரதம் பல கிளைக் கதைகளைக் கொண்டது. சின்ன சின்னதாய் தன்னுள்ளே ஏராளமான விஷயங்களைக் கொண்டது. திரும்பிய பக்கம் எல்லாம் ஒவ்வொரு கதாபாத்திரங்கள். அத்துனைக்கும் ஒவ்வொரு சிறப்பு. படித்து தலை சுற்றிப் போவது அவ்வப்போது நடப்பதுதான்.

எங்கே துவங்க... எங்கே முடிக்க என்பதில் எனக்கு சிறு ஐயம் இருந்தாலும், முக்கியமான சில கதாப்பாத்திரங்கள், அவர்களைப் பற்றி நான் இங்கே விவரங்களைப் பகிர்கிறேன். அதற்காய் மீதம் இருப்பவர் முக்கியம் இல்லாதவர் அல்ல. கர்ணன் கதைக்கு தொடர்பு உடையவர்கள் பற்றி மட்டும் சொல்கிறேன்.

சாந்தனு என்பவரிடம், அதாவது அவரது முற்பிறவியில் இருந்து தான், கதை துவங்குகிறது.

இப்பிறவியில் சாந்தனுவின் மனைவி கங்கா. அவர்கள் புத்திரன் தேவவிரதன்.

ஒரு நிபந்தனையின் பேரில் கங்கையை திருமணம் செய்யும் சாந்தனு, தன் நிபந்தனையை மீற, அவரைப் பிரிகிறாள் கங்கை. சில வருடங்கள் கழித்து, பல கலைகளிலும் தேர்ச்சி பெற்ற வீரனாய் மகனை வளர்த்து சாந்தனுவிடம் ஒப்படைத்து மறைகிறாள்.

பின்னர் ஒரு செம்படவப் பெண்ணான, சத்தியவதியைக் கண்டு அவள் மீது மையல் கொள்கிறான் சாந்தனு. மூத்தவள் மகன் இருக்கையில், தன் மகளது மக்கள் அரசாள முடியாது எனக் காரணம் கட்டி மறுப்பு வர, அதை அறிந்த தேவவிரதன், பிரம்மச்சரியம் பூண்டு தன் தந்தைக்கு திருமணம் நடத்தி வைக்கிறார். அக்கணம் தான் தேவவிரதன் பீஷ்மர் ஆகிறார். பீஷ்மர் எனும் சொல்லுக்கு “செயற்கரிய செயலை செய்பவன்” என்று பொருளாம்.

மகன் தந்தைக்கு திருமணம் செய்து வைத்து, நடை முறையில் இல்லாத ஒரு விஷயத்தை நடத்திய மகனுக்காய், சாந்தனு ஒரு வரம் தாரார், பீஷ்மருக்கு... நீ எது வரை உயிர் வாழ விரும்புகிறாயோ அது வரை வாழ்வாய், என்று. பீஷ்மரை கொல்ல ஆள் கிடையாது. அவரா இறக்க நெனச்சாத்தான் முடியும்.

பின்னர், சத்தியவதிக்கு, இரு மக்கள். சித்திராங்கதன், விசித்திரவீரியன். சாந்தனு இறந்ததும், சித்திராங்கதனுக்கு பட்டம் சூடப்பட்டது. இவரை வலுவில் சண்டைக்கு இழுத்த ஒரு கந்தர்வனுடன் போரிட்டு இறந்து போறார். பின்னர் இளவலுக்கு பட்டம் சூடப்பட்டது. அவருக்கு கல்யாண வயசு வந்ததும், பீஷ்மர் அவருக்கு கல்யாணம் பண்ண எண்ணிக் கொண்டு இருந்த வேளையில், காசி நாட்டு மன்னர், தன் மகள்களுக்கு சுயம்வரம் நடத்த ஏற்பாடு செஞ்சு இருந்தார்.

இவர் அங்கே போய், முறையான விசாரிப்பு அப்புறம் கொஞ்சம் சண்டை போட்டு அந்த மூணு பெண்களையும் அழைச்சு வந்திட்றார். அவங்க, அம்பை, அம்பிகை, அம்பாலிகை. அம்பைக்கு, அங்கே சுயம்வரத்துக்கு வந்திருந்த சல்லியனை ரொம்ப பிடிச்சது. அதனால இங்கே வந்து கல்யாணம் செய்யும் போது சொல்றாங்க. சரி-ன்னு விசித்திர வீரியன் அவங்களை சல்லியன் கிட்டே அனுப்பறாங்க.

சல்லியன் மறுக்க, திரும்ப இங்கே வராங்க... இவங்களும் ஏத்துக்கல. மாறி மாறி அங்கயும் இங்கயும் இவங்க அலைஞ்சு, ஓஞ்சு போறாங்க. அப்போ இவங்களுக்கு பீஷ்மர் மேல கோவம் வருது. என்னைக்கா இருந்தாலும் அவர் அழிவு என் கைலதான்-ன்னு சூளுரைக்கறாங்க. இவங்கதான் அப்புறம் சிகண்டி ஆகி, குருஷேத்திரத்தில் பீஷ்மர் சாவுக்கு ஒரு காரணமா இருப்பாங்க.

அங்கே... அம்பிகை, அம்பாலிகை – க்கு புத்திர பாக்கியம் இல்லாமலே விசித்திரவீரியன் இறந்து போறாரு. அப்போ சத்தியவதி அம்மா, பீஷ்மரை கேக்கறாங்க. அவர் மறுக்க, அவங்களோட, முதல் மகனை அழைக்கறாங்க. அவர்தான் வேதவியாசர் என நாம் அனைவரும் அறிந்த, "த்தவைபாயணன்" (அவர் யோகத்தின் சக்தியால், "மகரிஷி" ஆனவர். கடல் போன்று இருந்த வேதங்களை முறைப் படுத்தி, நான்காய் வகுத்தவர். எனவே அவர் "வேதவியாசர்" எனவும் அழைக்கப்பட்டார்)

ஆனாலும் அவர் பார்க்க அருவருப்பான தோற்றம் கொண்டவர். அவர் அருகாமை விரும்பத் தகாததாக இருந்ததாம். தன்னோட அம்மா அழைப்புக்காய் வந்தவர், புத்திர பாக்கியம் தானம் தர ஒத்துக்கறார்.

அம்பிகை, அவரை பார்க்க பயந்து கண்களை மூடினதாலே – அவருக்கு பிறந்த குழந்தை கண் பார்வை இல்லாம இருந்தது. அவர் – திருதிராஷ்டிரர்

அம்பாலிகை – இவங்க, வியாசர் தோற்றம் கண்டு வெளிறிப் போறாங்க. எனவே அவருக்கு பிறந்த குழந்தை வெளிரின நிறத்துல, இருந்தது. அவர் – பாண்டு.

முதல் மகன் பார்வை இல்லாது இருந்ததால், திரும்பவும் சத்தியவதி அம்பையை வியாசர் கிட்டே அனுப்ப, அவங்களோ, தன் தாதியை அனுப்ப, அவங்க, வியாசருக்கு நல்ல பணிவிடை செய்தாங்க. எனவே, வியாசரின் புத்தியும், அவர் போலவே நீதி அறிந்தவரா, ஒரு மகன் பிறந்தார். அவர் – விதுரர்.

திருதராட்டிரன், பாண்டு, விதுரர் மூவரையும்.. பீஷ்மர் தந்தை போல் இருந்து கவனித்துக் கொண்டார். போர் பயிற்சிகளையும், சாத்திரக் கல்வியையும் அளித்தார். அரசு காரியங்களை பீஷ்மரே கவனித்துக் கொண்டதால், நாட்டில் நல்லாட்சியும், அமைதியும் நிலவியது.
------
மைந்தர்கள் மூவரும் மணப்பருவம் அடைய, பீஷ்மர் திருதராட்டினனுக்கு காந்தார நாட்டு மன்னன் சுபவனுடைய மகளான காந்தாரியை மணமுடித்தார். கணவன் குருடனாக இருந்ததால், காந்தாரியும், வாழ்நாள் முழுவதும்..கண்களை துணியால் கட்டிக்கொண்டு தானும் குருடு போலவே இருந்தாள்.

கௌரவ வம்ச அழிவுக்குக் காரணமான சகுனி.. காந்தாரியின் சகோதரன் ஆவான்.
-------
கண்பார்வை இல்லாததால், திருதராட்டிரன்..அரசாளும் தகுதியை இழந்தான். வயது வந்ததும் பீஷ்மர் பாண்டுவை அரியணையில் அமர்த்தி, அவனுக்கு முடி சூட்னார். திருதிராட்டிரன் பெயரளவில் மன்னனாய் இருந்தான்.
-------
பாண்டுவிற்கு...மணம் முடிக்க நினைத்தார் பீஷ்மர். குந்தியின் சுயம்வரத்தில், குந்தி பாண்டுவிற்கு மாலை சூட்டினாள்.

சில காலத்திற்குப் பிறகு..மந்திர நாட்டு மன்னன் மகளும், சல்லியனின் தங்கையுமான மாத்ரி என்பவள் பாண்டுவிற்கு இரண்டாம் மனைவி ஆனாள்.
--------
விதுரர்...தேவகன் என்னும் மன்னனின் மகளை மணம் புரிந்தார்.

இவ்வாறு, மூன்று சகோதரர்களுக்கும் திருமணம் நிறைவேறியது.

--------

அரியணை ஏறிய பாண்டு அஸ்தினாபுரத்திற்கு அடங்கா மன்னர்களை அடக்கி..அவர்களை கப்பம் கட்ட வைத்தான்.நாட்டில் நல்லாட்சி செய்தான்.பாண்டுவின் செயல்களை மக்கள் பாராட்ட, பீஷ்மரும் மகிழ்ந்தார்.

ஒருநாள் வேட்டையாட..பாண்டு தன் பரிவாரங்களுடன் காட்டிற்கு சென்றான். அங்கு புணர்ச்சியில் ஈடுபட்டிருந்த இரு மான்கள் மீது, யோசனையின்றி அம்பு செலுத்தினான். ஆண்மானாக இருந்த கிந்தமர் என்னும் முனிவர். அவரது மறைவில் வேதனை உற்ற அவர் மனைவி, பாண்டுவிற்கு 'இல்லற இன்பத்தை விரும்பிப் பாண்டு மனைவியுடன் கூடும் போது இறப்பான்" என சாபமிட்டார். இதனால், புத்திர பாக்கியம் இல்லாமல் போகுமே என பாண்டு கவலையுற்றான்.

மன்னனின் கலக்கம் கண்ட குந்தி, தனது இளமைப்பருவத்தில், துர்வாசர் அருளிய மந்திரத்தைப் பற்றிக் குறிப்பிட்டாள். மகிழ்ந்தான் பாண்டு.

பின்னர் குந்தி :

தர்மதேவதையை எண்ணி மந்திரத்தை ஓத, யுதிஷ்டிரனை பெற்றாள்.
வாயு பகவான் அருளால் பீமன் பிறந்தான்..
தேவேந்திரன் அருளால் அர்ச்சுனன் பிறந்தான்.

இதில் இரண்டாம் மனைவிக்கு வாரிசு இல்லாமல் போகுமே என பாண்டு கூற, பாண்டுவின் விருப்பப்படி, மாத்ரிக்கு மந்திரத்தை உபதேசிக்க, மாத்ரியும் அம்மந்திரத்தை பிரயோகித்து இரட்டையர்களான அசுவனி தேவர்களை எண்ணி ஜபித்தாள். அதனால்..நகுலன், சகாதேவன் பிறந்தனர்.

ஐந்து அருமைப் புதல்வரை பாண்டு அடைந்தான்.

அஸ்தினாபுரத்தில், திருதிராட்டினன், பாண்டு அடைந்த சாபத்தை எண்ணி, அவனுக்கு மகப்பேறு இல்லை என மகிழ்ந்து இருந்தான். நாடாளும் உரிமை தன் சந்ததிக்கே என்றிருந்தான். அப்போது பாண்டு மகப்பேறு அடைந்த விஷயத்தை அறிந்தான். அப்போது காந்தாரியும் கருத்தரித்திருந்தாள்.

குந்திக்கு குழந்தைகள் பெற்ற செய்தி அறிந்து, ஆத்திரத்தில் தன் வயிற்றில் அடித்துக் கொண்டாள். அதன் விளைவாக ஒரு மாமிச பிண்டம் வெளிப்பட்டது. வியாசர் அருளால், அதிலிருந்து நாளொன்றுக்கு ஒருவர் வீதம், நூறு ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. இந்த நூற்றொருவரைப் பெற, நூற்றொரு நாட்கள் ஆயிற்று. காட்டில் பீமன் பிறந்த அன்று அஸ்தினாபுரத்தில் துரியோதனன் பிறந்தான்.

துரியோதனன், பேராசையும், பிடிவாதமும் உடையவனாக வளர்ந்தான். அவனை அடுத்து பிறந்த துச்சாதனன், தீமையில் அண்னனை மிஞ்சினான். கடைசி தம்பியான விகர்ணன் தவிர அனைவரும் கொடியவர்களே.

காட்டில் வாழ்ந்து வந்த பாண்டவர் ஐவரும், ரிஷிகளிடம் கல்வி கற்று, அறிவுத்திறனை வளர்த்துக் கொண்டனர்.

இந்நிலையில், ஒரு நாள் காமவயப்பட்டு, பாண்டு மாத்ரியை அணுகிய போது, பண்டைய சாபத்தால், உயிரிழந்தான். மாத்ரியும் உடன் அவனுடன் இறந்தால், குந்தியும், பாண்டவர்களும், பீஷ்மரிடம் வந்தனர். திருதிராட்டினனும், அன்புள்ளவன் போல நடந்துக் கொண்டான். சத்யவதியும், அம்பிகையும், அம்பாலிகையும் தவத்தை நாடிச் சென்றனர்.

திருதிராட்டிரன் பார்வையற்றவனாய் இருந்த படியால், குருகுலத்து ஆட்சியை, பாண்டுவே நடத்தி வந்தான் என்பதால், பாண்டு புத்திரர்களிடம் மக்களுக்கு நாட்டம் அதிகம் இருந்தது.

இச்சமயத்தில் அஸ்தினாபுரத்து அரசியலில் மாற்றங்கள் ஏற்பட்டன. அரசகுமாரர்களில் யுதிஷ்டிரர் மூத்தவர் ஆனபடியால், இளவரசர் பட்டத்துக்கு அவரே உரியவர் ஆனார். பீஷ்மர், துரோணர், விதுரர் ஆகியோர்.... யுதிஷ்டிரரை இளவரசர் ஆக்கினர்.

இவர் சத்தியத்திற்கும், பொறுமைக்கும், இருப்பிடமாக இருந்தார். அவரது தம்பிகளும், நாட்டின் எல்லை விரிவடைய உதவினர். பாண்டவர்கள் உயர்வு கண்டு, துரியோதனன் மனம் புழுங்கினான். விரைவில் யுதிஷ்டிரர் நாட்டுக்கு மன்னன் ஆகிவிடுவாரோ என எண்னினான். தன் மனக்குமுறலை சகுனியிடமும், துச்சாதனனிடமும், கர்ணனிடமும் வெளிப்படுத்தினான்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 18, 2011 11:16 am

பகுதி இருபத்தி நான்கு : என்ன நேர்ந்தது தொடர்ச்சி :


துரியோதனன், பாண்டவர்கள் மீது பொறாமை கொண்டு இருக்கிறான். அவர்களின் புகழ் நாளுக்கு நாள், மக்கள் மத்தியில் பெருகுவது கண்டு, மனதுக்குள் புழுக்கம். இதில் அவனுக்கும் இல்லை பழக்கம். எனவே அதை சகுனியிடமும், துச்சாதனனிடமும், கர்ணனிடமும் பகிர்ந்து கொள்கிறான்.

அங்குதான் அவன் செய்த தவறு. சூழ்ச்சியின் மொத்த வடிவம் சகுனி. சுயநலத்தின் திருஉரு துச்சாதனன். இவர்களிடம் சொன்னால்... பிறகு வேறு எங்கே நல்ல வழியில் போவது.

கர்ணன் வழி வீர வழி தான்.. அவன் பேச்சு, சகுனியின் மயக்கும் மாய வலையின் முன்னே எடுபடவில்லை. நண்பனுக்காய், தானும் மனமின்றி அதை ஒப்புக் கொள்கிறான்.

சகுனி, பாண்டவர்களை சூதில் வெல்லலாம், என துரியோதனுக்கு உருவேற்றுகிறான். மூவரும் கூடிப் பேசி, எப்படியாவது, பாண்டவர்களை சிறுது காலம் ஊரை விட்டு அனுப்பினால், இவர்கள் நல்லன பல செய்து மக்கள் மனதில் இடம் பிடிக்கலாம் என யோசனை செய்து முடிவு செய்தனர்.

திருதிராட்டிரன், இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. ஆயிரம் புத்திமதிகள் சொல்லியும் அது வீணாகப் போயிற்று. முடிவில், துரியோதனன், அவர்களை தந்தை வெளியே அனுப்பவில்லை எனில் தன் உயிரை மாய்த்துக் கொள்வதாகச் சொல்லவும், பிள்ளை பாசத்தில் பாண்டவர்களை வாரனாவதம் அனுப்ப ஒப்புக் கொள்கிறார்.

இங்கும் சகுனியின் யோசனையின் பேரில், அரக்கு மாளிகை ஒன்றை சிற்பியும், அமைச்சனுமான புரோசேனன் என்பவனைக் கொண்டு அமைத்தனர். அவர்கள் உறங்குகையில், மாளிகைக்கு தீயிட்டு எரித்து அனைவரையும் சாம்பலாக்கும் எண்ணம்.

இதை அறிந்த விதுரர், பாண்டவர்களை தக்க படி எச்சரித்து அனுப்புகிறார். அவர்களும் மாளிகையில் இருந்து தப்பி விடுகின்றனர். பாண்டவர்களும், குந்தியும், இறந்ததாக எண்ணி, பீஷ்மர், முதலானோர் பெரும் துக்கம் கொள்கின்றனர்.

துரியோதனனும், தான் துக்கமாய் இருப்பது போல நடித்துக் கொள்கிறான்.

தப்பிய பாண்டவர்கள், காட்டினில் அலைந்து திரிகையில் தான் பீமனுக்கும் இடும்பிக்கும் திருமணம் நடந்து, கடோத்கஜன் பிறக்கிறான். பின்னர் அங்கே தோன்றும் வியாசரின் அறிவுரைப் படி, ஏகசக்ர நகரத்தில் ஒரு பிராமணர் வீட்டில் தங்குகின்றனர். அப்போது தான் பகாசூர வதம் நடக்கிறது.

அப்போது ஒரு நாள், திரௌபதி சுயம்வர செய்தி கிடைக்கப்பெறுகின்றனர். வியாசர் வந்து அங்கே இவர்களைப் போகப் பணிக்கிறார். பாஞ்சால தேசத்திற்கு செல்கின்றனர்.

அங்கே அர்ஜூனன் சவாலில் வென்று திரௌபதியை வீட்டுக்கு அழைத்து செல்கிறனர். பெண்ணை பாராமலே, கிடைத்ததை ஐவரும் பகிர்ந்து கொள்ளுங்கள் என அன்னை சொல்ல, அதன் படி இவள் ஐவருக்கும் மனைவி ஆகிறாள்.

திரௌபதியின் தந்தைக்கு, மகள் ஐவருக்கு மனைவி ஆவதில் உடன் பாடு இல்லை. மீண்டும் வியாசர் தோன்றி, அவள் முன் வினைப் பயன் தான் இது. அவள் கற்புக்கு இதனால் களங்கம் உண்டாகாது என சமாதானம் சொல்கிறார்.

இந்நிலையில், பாண்டவர்கள் உயிருடன் இருப்பது, அஸ்தினாபுர மக்களுக்கு தெரிய வருகிறது. அது அவரவர் மனதுக்கு தகுந்தவாரும், ஆனந்தத்தையும், அதிர்ச்சியையும் தருகிறது.

பீஷ்மர், விதுரர் போன்ற பெரியவர்களின் ஆலோசனைப் படி பாதி ராஜ்ஜியம் பாண்டவர்களுக்கு தரப் படுகிறது. காடும், மலையும் கொண்ட பகுதியான, காண்டப்பிரஸ்தம் அவர்களுக்கு தரப் படுகிறது.

எல்லாரும் அங்கே போய் இருக்காங்க. அங்கே தேவேந்திரன் கட்டளைப்படி, விசுவகர்மா என்னும் தேவசிற்பி மிகச் சிறந்த, அழகிய ஒரு நகரத்தை இவர்களுக்கு உருவாக்கினான். அதுவே இந்திரபிரஸ்தம் எனப்பட்டது. அப்போ, நாரதரின் அறிவுரைப் படி, இங்கே திரௌபதியுடன் வாழ, ஒரு உடன்படிக்கை வருகிறது. வருடத்துக்கு ஒருவர் என வாழ வேண்டும். அப்போது மற்ற நால்வர் இவர்கள் இருக்குமிடம் வராது இருக்க வேண்டும் என்பதுதான் அது.

இந்நிலையில் ஒரு நாள், திரௌபதி, தருமருடன் இருக்கையில், நள்ளிரவில் ஒரு அந்தணன் தருமரை, தன் பசுக்களை யாரோ களவாடி விட்டதாக, எழுப்ப விழைய, அவரைத் தடுத்து, அர்ஜூனன் தானே சென்று, அவன் பசுக்களை மீட்டுத் தருகிறான். அவர்கள் தனிமையில் குறுக்கிட்டதாய் எண்ணி, தானே அங்கிருந்து வெளியேறுகிறான்.

அபோதுதான் அர்ஜூனன், கிருஷ்ணரின் தங்கையான சுபத்திரையை மணந்து கொள்கிறான். இவர்களின் புதல்வனே அபிமன்யு..

கான்டவ வனம்-ன்னு ஒரு வனம் இருக்கு, அவங்களுக்கு பாகம் பிரிச்ச பகுதில. ஆனா அந்த வனத்தை அழிக்கவே முடியலே இவங்களாலே. அங்கே, பல அரக்கர்களும், விஷ ஜந்துக்களும் இருந்தது. அதனாலே பலருக்கு தொல்லை.

இந்நிலையில் அக்னி தேவனுக்கு பலத்த பசி ஏற்படுது. என்ன சாப்டும் அவர்க்கு பசி அடங்காததலே... அவர் பிரம்மாவை சரண் அடைய, அவர் கான்டவ வனம் தான் உன் பசிக்கு தீர்வு-ன்னு சொல்லிட்றார். இவர் மகிழ்ந்து அந்த வனத்தை அழிக்கப் போக, இந்திரன் அதை விட மாட்டேன்றார்.

மழையா பொழியறார். அப்போ அக்னி தேவன், நம்ம கிருஷ்ணன் மற்றும் அர்ஜூனன் உதவியை நாடி வராங்க. அக்னி தேவன் அப்போ சில ஆயுதங்களை இருவருக்கும் தந்ததா சொல்லப்படுது. அர்ஜுனனுக்கு, காண்டீபமும், எடுக்க எடுக்க அம்பு குறையாத ரெண்டு அம்பறாத் துணியும், நான்கு வெள்ளை குதிரைகள் பூட்டிய ஒரு அழகிய ரதமும் கெடைக்குது. கிருஷ்ணனுக்கு, சுதர்சன சக்கரமும், கௌமோதகி அப்டீன்ற ஆயுதமும் கெடைச்சதாம்.

அதைக் கொண்டு ரெண்டு பெரும் உதவி பண்ண, அக்னி அந்த வனத்தை அழிச்சாங்க. அதிலே மனம் மகிழ்ந்த அசுர சிற்பியான மயன், அர்ஜுனனுக்கு ஏதாவது கைம்மாறு செய்ய விரும்பறாரு. அர்ஜுனனும் சரி, கிருஷ்ணனும் சரி, செய்த உதவிக்கு கைம்மாறு வாங்க மறுக்கறாங்க.

சரி-ன்னு மயன் தருமர் கிட்டே போய், என்னால் உலகமே வியக்கும் ஒரு சபையை நிறுவ முடியும், அதை வந்து இந்திரபிரஸ்தத்துல நிறுவ அனுமதிக்கணும்-ன்னு வேண்டிக்கிறேன்-ன்னு பணிவா கேட்க. தருமர் சம்மதம் சொல்றார்.

மயன் நெறைய வேலை செஞ்சாரு அந்த சபைக்காக. இமயமலைக்கு அந்தப் பக்கம் போய், பொன்னும், மணியும், ரத்தினங்களும், கொண்டு வந்து சபா மண்டபம் அமைச்சாராம். சுவர்களும், தூண்களும், தங்கத்தால் செய்யப்பட்டு, விலை உயர்ந்த ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டன. படிக்கட்டு கூட பளிங்கால் கட்டப் பட்டதாம். செய்குன்றுகள், நீர்வீழ்ச்சிகள்-ன்னு பல விஷயங்கள் அங்கே ரொம்ப சிறப்பா இருந்தது.

முக்கியமான இன்னொரு விஷயம், தரை இருக்கும் இடம், தண்ணீர் இருப்பது போலவும், தண்ணீர் இருக்கும் இடம் தரை போலவும் இருக்கற மாதிரி அமைச்சு கொடுத்திருந்தார் மயன்.

பார்க்கரவங்க எல்லாம் அப்படியே அசந்து போய்ட்டாங்க. (பாவம் இங்கேதான் நம்ம துரியோதனன் வந்து தரை-ன்னு நெனச்சு தண்ணிலே விழுந்து, திரௌபதி அவங்களை பார்த்து சிரிச்சிடுவா.)

இந்த சபா மண்டபத்தை பார்க்க வர, நாரதன், மூவுலகத்திலும் இது போல ஒரு மண்டபத்தை நான் கண்டது இல்லை – ன்னு பாராடிட்டு, அப்புறம் தருமரை, ராஜசூய யாகம் செய்யச் சொல்லார்.

நாம முன்னவே படிச்ச மாதிரி, ராஜசூய யாகம் செய்யனும் – ன்னா, யாகம் செய்யற மன்னர் தலைமையை சுத்தி இருக்கற நாட்டுக்கார மன்னர்கள் ஏத்துக்கணும். இதிலே பலர் ஒத்துக்கிட்டாலும், மகத நாட்டு மன்னன் ஜராசந்தன், ஒத்துக்க மாட்டார்-ன்னு முடிவு பண்ணி அவரோட சண்டை போட பீமனை அனுப்பறாங்க. ஜராசந்தனிடம் முதலிலே அடிமையாக என்பத்தி ஆறு நாட்டு மன்னர்கள் இருந்தாங்களாம். கூடவே இன்னும் பதினாலு பேர் அந்த ராஜாவோட சிறையில் இருந்தாங்களாம்.

இவரை ஜெயிச்சுட்டா, அவங்க எல்லாம், தருமருக்கு கீழே வந்திடுவாங்க இல்ல. அதுக்குதான் இந்த ஏற்பாடு. பீமனும் அங்கே போய், ஜராசந்தனை, இரண்டாகக் கிழித்து, தலை மாற்றிப் போட்டு அவரை கொன்னுட்றாங்க.

யாகம் நல்ல படியா முடிஞ்சு, தருமர், மன்னாதி மன்னர் ஆனார்.

நம்ம துரியோதனுக்கு, பொறாமை இன்னும் கொழுந்து விட்டு எரிய ஆரம்பிச்சது. இந்த யாகத்திலே, சகோதரர்கள் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பொறுப்பு குடுத்தாங்க. நம்ம ஹீரோ நண்பருக்கும் ஒரு பொறுப்பு இருந்தது. அது என்னன்னா, யாகத்துக்கு அன்பளிப்பா வர பொருளை எல்லாம் வாங்கி வச்சிருக்கும் பொறுப்புதான்.

அங்கே வந்து குவிஞ்ச, பொன்னையும், மணியையும், ரத்தினங்களையும் பார்த்து பார்த்து இவருக்கு மனசுல அழுத்தம் அதிகமாகுது.

கூடவே, விழாவுக்கு வந்தவங்க, தருமர் தாழ் பணியும் போது, அவங்க மகுடம் தருமர் பாதம் படுது. அதை பார்த்து இவருக்கு உள்ளே படுத்துது. கூடவே பாஞ்சாலியும் இவரைப் பார்த்து ஏளனமா சிரிக்கறாங்க. தரை-ன்னு நெனச்சு தண்ணில விழுந்துட்றார். பாவம்.

அங்கே இருந்து அஸ்தினாபுரத்துக்கு வந்ததில இருந்த, இவரால, இவர் மனசைக் கட்டுப் படுத்த முடியாத அளவுக்கும், கோபத்திலும், பொறாமையிலும் புழுங்கறார்.

அவங்க இருக்கற வரை என்னோடதும் ஒரு ஆட்சியா??? அர்ஜுனனின் காண்டீபம் என்னை பார்த்து கேலி செய்கிரதா??? பீமனின் கதை என்னை பார்த்து கெக்கலி கொட்டி சிரிக்கிறதா??? அந்த தருமரின் புகழுக்கு முன்னே நான் எல்லாம் எம்மாத்திரம்???

அப்படி என்ன கண்டனர் மக்களும், பிற நாட்டு மன்னர்களும், தருமரிடம்??? எவ்வளவு பேர் வந்தனர்??? எத்துனை பரிசுகளைக் கொண்டு வந்து அவர் காலடியில் கொட்டினர்??? என எண்ணி எண்ணித் தவிக்கிறான்.

இப்போதான் நம்ம ஹீரோ துரியோதனுக்கு உதவி பண்றார். சுத்தி இருக்கற, வங்கம், கலிங்கம்–ன்னு எல்லாரையும் தோற்கடிச்சு, துரியோதணன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரான். ஆனாலும் ராஜசூய யாகம் செய்யக் கூடாது-ன்னு பெரியவங்க எல்லாம் சொல்லிடறாங்க.

அதனால அதற்கு ஈடான பலன் தர வைஷ்ணவ வேள்வி செய்யறாங்க.

என்னதான் செஞ்சாலும் துரியோதனன் மனம் ஆறவில்லை. அவங்க, புகழும், அவங்க கீர்த்தியும், இவனை தூங்க விடவே இல்லை.

அவனுக்கு ஆறுதலாய் பேசி சகுனி, ஒரு தெய்வீக மண்டபத்தை அமைத்து, அதை பார்வையிட வருமாறு பாண்டவர்களை அழைத்து, அப்புறம் அவர்களை சூதாட்டம் ஆடச் செய்யலாம். என்னை சூதாட்டத்தில் வெல்ல யாராலும் முடியாது-ன்னு உனக்கே தெரியும்.

அவர்களை நாட்டை வைத்து ஆடச் சொல்லி, அவங்க நாட்டை நாம வாங்கிடுவோம். அப்புறம் அவங்க இங்கே இருக்க முடியாது இல்லை-ன்னு பேசி பேசிப் அவனைக் கரைச்சு, அவங்க அப்பா கிட்டே சொல்லி சம்மதம் வாங்கராங்க.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 18, 2011 11:17 am

பகுதி இருபத்தி ஐந்து : சூதாட்டம் பகுதி ஒன்று


சுருக்கமாய் சொல்லி முடிக்கத்தான் ஆசை. ஆனாலும் என் ப்ரிய தங்கை ப்ரியாவுக்காய் விரிவாய் இந்த சூதாட்ட பகுதி...

சூதாட, பாண்டவர்களை அழைக்க தந்தையின் சம்மதம் வேண்டி துரியோதனனும், சகுனியும் கேட்க, திருதிராட்டிணன் அதை மறுக்கிறார். ஆனாலும் சகுனி விடாம துரியோதனுக்காய் பேசறார்.

துரியோதனன், புத்திசாலி, நல்ல திறனும் உடையவன். இயல்பாவே அவனுக்கு அரச நீதி தெரிஞ்சுதான் இருக்கு. பிற மன்னர்களின் புகழ் அதிகம் ஆவது, நமது அரசுக்கு ஆபத்து எனும் விஷயம் அவனுக்கு நன்கு புரிந்து உள்ளது.. அப்படி எல்லாம் சொல்றாங்க.

திருதிராஷ்டிரர் : (இவருக்கு கோவம் வருகிறது.) என் மகனை அழிக்க வந்த நாசகாரன் நீ. பேச்சாலும், தந்திரத்தாலும், அடுத்தவரை தோற்கடிக்கும் சாகசக்காரன் நீ. ஏன் அவன் மனதில் பாண்டவர்கள் மீது, வெறுப்பையும், துவேஷத்தையும் வளர்க்கிறாய்??? இவன் எத்துனை பிழைகள் செய்தாலும் அதை பொறுத்துக் கொண்டு அவர்கள் அமைதியாய் இருக்கிறார்கள் தானே. மேலும் மேலும் ஏன் இவனைத் தூண்டி விடுகிறாய்??

சகுனி : அந்த சபா மண்டபத்தில், நங்கையரும் இவனைப் பார்த்து நகைத்தனரே... அது கூட உமக்கு ஒரு பொருட்டு இல்லையா???

திருதிராஷ்டிரர் : தண்ணீருக்கும், தரைக்கும் வித்தியாசம் தெரியாது இவன் விழுந்ததற்கு அவர்கள் எப்படி பொறுப்பாக முடியும்??? தடுமாறும் ஒருவரைப் பார்த்து நகைப்பது மனித இயல்பு தானே???

துரியோதனன் : (தந்தையின் பேச்சைக் கேட்டு கடும் கோவம் கொள்கிறான்) நான் வேறு எதுவும் கூறி வாதாட விரும்பவில்லை. பாண்டவர்களை இங்கே அழையுங்கள். ஒரு சூதாட்டத்தில் அனைத்து சொத்துக்களையும் நாம் கவர்ந்திடலாம்.

திருதிராஷ்டிரர் : மகனே... நீ சொல்வது நியாயம் அல்ல. வஞ்சகத்தால் பிறர் பொருளை கவர நினைப்பது இழிவான செயல். வீரர்கள் யாரும் இதுபோல ஒரு செயலை செய்ய மாட்டார்கள். பாண்டவர்கள் எனக்கு உன் போன்றவர்கள் தான். நான் சொல்வதைக் கேள். இந்த என்னத்தைக் கைவிடு.

துரியோதனன் : எனக்கு முடிவுதான் முக்கியம். அதை எப்படி அடைவது என்பது பற்றி எனக்கு கவலை இல்லை. மாமா, சொன்னது போல, சூதாட்டத்தில் அவர்களை வெல்வேன். நாடு நகரம் என அனைத்தும் நான் அவர்களிடம் இருந்து கைப்பற்றுவேன் இது உறுதி. இதற்க்கு நீங்கள் சம்மதிக்கவில்லை எனில், இங்கேயே பெருகும் என் குருதி, என வாளைக் கையில் எடுக்க..

திருதிராஷ்டிரர் : பிள்ளைப் பாசம், கொள்கையைப் பறக்க விட, சம்மதிக்கிறார்.

பின்னர் துரியோதனனும், சகுனியும் சேர்ந்து, ஒரு தெய்வீக மண்டபத்தை அமைக்கின்றனர். அதன் விழாவுக்கு பாண்டவர்களை, திரௌபதி உட்பட அனைவரையும் அழைக்குமாறு துரியோதனன் சொல்கிறான்.

திருதிராஷ்டிரர் : (அருகே இருந்த விதுரரை அழைத்து) விதுரா, நீ பாண்டவரிடம் சென்று, இந்த தெய்வீக மண்டபத்தை பற்றிக் கூறி, திரௌபதி சமதியினராய் அனைவரையும் வரச் சொல்லி, நான் அழைத்தாய் சொல்வாயாக. கூடவே, துரியோதனன், சகுனி திட்டத்தை, குறிப்பால் உணர்துவாயாக..

விதுரர் அங்கே சென்று நடந்ததை கூறுகிறார். சூதாடும் எண்ணம் கண்டு, தருமர் கொஞ்சம் கலக்கம் கொள்கிறார். துரியோதனன் என்றுமே நமக்கு நல்லது செய்பவன் அல்ல. அப்போது இதிலும் ஏதோ சூழ்ச்சி உள்ளது என எண்ணுகிறார்.

சகோதர்களும் அவ்வாறே கோவம் கொண்டு பேச, தருமர் அவர்களை அமைதிப்படுத்துகிறார். பெரிய தந்தை நம்மை அழைத்து இருக்கிறார். சிறிய தந்தை அதனை கூற இங்கு வந்துள்ளார். இதை நாம் மறுப்பது சரியல்ல.. என அவர்களை சமாதானப் படுத்தி, அனைவரும் அஸ்தினாபுரம் வருகிறார்கள்.

(இந்த சூதாட்டப் பகுதியின் சிறப்பை.. நான் முன்னர் ஒரு வலை தளத்தில் படித்துள்ளேன். அனைத்தும் அறிந்தவர் தருமர். கூடவே அவரின் சகோதரன், சாஸ்திரங்களில் வல்லுனன். இருவரும் இருக்க சூதாடச் சென்றால் என்ன நேரும் என்பது தெரியாமலா இருந்திருக்கும்??? அப்படி இருப்பின், சூதாட ஏன் ஒப்புக் கொண்டார் இந்த தருமர். என ஆயிரம் கேள்விகள் எனக்கு நானே கேட்டதுண்டு)

தன் தந்தைக்கு, அவர் அன்னை சொன்னதை வைத்து எழுதிய பதிவை சொன்ன வலைத்தளம் அது. பிதாவின் கதைகள் எனும் பெயரில். அங்கே தான் இந்த விவரங்களைப் படித்தேன் நான். அதிலே கர்ணனும், தருமரின் சிறப்பை அரிய நேர்ந்த ஒரு சம்பவம் சொல்லப்பட்டது. அதை உங்களுடன் பகிர்கிறேன்.

சூதாட அழைத்தால் என்ன சொல்ல வேண்டும். என்ன பேச வேண்டும் என துரியோதனன், சகுனி, மற்றும் கர்ணன் மூவரும் ஒத்திகை பார்கின்றனர். அப்போது அங்கே.....

சகுனி: “ நான் யோசித்து ஒரு வழி உருவாக்கியிருக்கிறேன். அதன் மூலம் பாண்டவர்கள் ஐஸ்வர்யம் அனைத்தையும் அவர்கள் நாட்டையும் வென்று விடலாம். அதற்கு ஒரு நாடகம் நடத்த வேண்டும். நாடகம் எவ்வித தடங்கலும் இல்லாமல் நடக்க வேண்டுமானால் ஒரு முறையாவது ஒத்திகை பார்க்க வேண்டும்.”

துரியோதனன்: “நாடகமா? போர் இல்லாத வெற்றியா?”, அவநம்பிக்கை தொனிக்க விழைகிறான்.

சகுனி: “என்ன நாடகம் என்று சொல்லுகிறேன். அதைக்கேள்! யுதிட்டிரனையும் மற்ற பாண்டு புத்திரர்களையும் இங்கு விருந்துக்கு அழைக்க வேண்டும். பிறகு நிதானமாக சொக்கட்டான் ஆட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். யுதிட்டிரனை ஆட அழைக்க வேண்டும். ஆட ஆரம்பிக்கும் முன் ஆட்டம் சுவாரஸ்யமாய் இருப்பதற்காக சில பொற்காசுகள் வைத்து விளையாடலாம் என்று ஆரம்பித்து அதற்கு யுதிட்டிரன் சரி என்று சொன்னதும், வலை விரிப்பது போல் பகடைப் பாயை விரிக்க வேண்டும். பிறகு பகடை அஸ்திரத்தை எடுப்பதற்குமுன், ஒவ்வொரு முறை காயை உருட்டும் போதும் சில பல பணய பொருள்கள் வைக்கலாம் என்று ஆரம்பித்து, ஆட்ட முடிவில் யாரிடம் பணயம் வைக்க ஏதும் பொருள் இல்லையோ அவர்கள் நாட்டை - இராஜ்யத்தை வைத்து ஆட வேண்டும் என்று முடிக்க வேண்டும்.”

துரியோதனன்: “'மாமா, புரிகிறது! சொக்கட்டான் ஆடி வெல்லலாம் என்று சொல்கிறீர்கள். நாடகத்தில் நீங்களும், நானும், கர்ணனும் வேண்டுமானால் நடிக்கலாம். யுதிட்டிரன் வந்து நடிக்க வேண்டும். அவன் வந்தாலும், அதற்கு மேலாக பகடைக் காய்கள் நடிக்க வேண்டும். போகாத ஊருக்கு வழி என்பார்கள். இப்போது போகாவிட்டாலும், எப்போதாவது போகும் போது கேட்ட வழி உபயோகப்படும். ஆனால் தங்கள் யோசனை 'கிட்டாத பழத்திற்கு கொட்டாவி' என்று தான் முடியும். பழமே கிட்டாத போது வாயைத் திறந்து மூடினால் என்ன பயன்? இவ்வளவு நாட்கள் யோசித்து இப்படி ஒரு வழி. ஆட்டம் முழுவதும் அனைத்தும் தோற்று யுதிட்டிரன் நாட்டை வைக்கும் போது, நான் எதிர் பணயமாக எந்த நாட்டை வைப்பது? இந்த நாடு இன்னும் என் கைக்கே வரவில்லை! வரும் முன்பே பணயம்? இது சரிப்படாது. வேறு வழி உண்டானால் கூறுங்கள்!”

சகுனி: "துரியோதனா! நீ கேட்பது சரிதான். நானும் இப்படித்தான் ஆரம்பிப்பேன் - நீயும் இப்படித்தான் கூறவேண்டும். 'என்னிடம் நாடு இருந்தால் வைத்து விளையாடுவேன். இல்லாததால் இதுவரை வென்ற பொருள் அனைத்தும் பணயமாக வைத்து விளையாடுகிறேன்' என்று சொல். யுதிட்டிரனும் சரி என்பான்".

துரியோதனன்: "நாட்டுக்கு ஒரு சாக்கு சொல்லிவிட்டீர்கள். முதலாவதாக யுதிட்டிரன் பொருள் அனைத்தும் இழக்க வேண்டும். கடைசியாகத்தான் நாடு. நான் முன்பே கேட்டேன். நாம் நடிக்கலாம். பகடைக் காய்கள் நம் பக்கம் நடிக்க வேண்டுமே?"


சகுனி: "புரிகிறது துரியோதனா! காய்கள் தன்னிச்சையாகத்தானே விழும். வேண்டிய எண்ணிக்கை எப்படி விழும் என்று தானே கேட்கிறாய். இதோ பார்! இரண்டு விதமான பகடைக்காய்கள் வைத்திருக்கிறேன்." மடியிலிருந்து ஒரு ஜோடி மரத்தால் ஆனதும், மற்றொரு ஜோடி தந்தம் போன்ற வெள்ளை காய்களையும் எடுத்து வைத்தான் சகுனி. "துரியோதனா! முதலில் இந்த மரக்காய்களின் சக்தியைப் பார். நீ முன்று எண்ணிக்கைகளை சொல்".

துரியோதனன்: "ஒன்று, ஐந்து, பன்னிரண்டு"

சகுனி மூன்று முறை காய்களை உருட்ட, ஒன்று, ஐந்து, பன்னிரண்டு விழுகிறது. துரியோதனனும், கர்ணனும் கண்கள் அகல விரியப் பார்க்கிறார்கள். சகுனி, அருகில் அமர்ந்த கர்ணன் காதில் ஏதோ சொல்லிவிட்டு, துரியோதனைப் பார்த்து, "நீ இப்போது இந்த காய்களை எடுத்து மூன்று முறை உருட்டு" என்று கூற, துரியோதனன் உருட்டுகிறான். பன்னிரண்டு, ஐந்து, ஒன்று விழுகிறது. துரியோதனன் சந்தேகமாய்ப் பார்க்கிறான்.

கர்ணன்: "நண்பா! மாமா என் காதில் 'பன்னிரண்டு, ஐந்து, ஒன்று என்று விழும் பார்' என்று தான் கூறினார். ஆக மாமா காய்களை நடிக்க வைப்பார் என்று தான் தோன்றுகிறது.

துரியோதனன்: "மாமா, இந்த வெள்ளைக்காய்கள்?"

சகுனி: "இந்த காய்கள், மரக்காய்களைக் காட்டிலும் சக்தி வாய்ந்தது. முதல் ஆட்டத்தில் நான் வெள்ளைக்காய்களை வைத்துக்கொண்டு ஆடுவேன், யுதிட்டிரன் மரக்காய்களை வைத்துக்கொண்டு ஆடுவான். பிறகு இரண்டாவது ஆட்டத்தில் காய்களை மாற்றி ஆடலாம் என்று கூறி இந்த வெள்ளைக்காய்களை யுதிட்டிரனிடம் கொடுப்பேன். அவன் தோற்பான்.

கர்ணன்: "மாமா! அதிக சக்தி உள்ள காய்களை யுதிட்டிரன் கையில் கொடுத்தால்...எனக்குப் புரியவில்லையே?"

சகுனி: "சக்தி உள்ளது என்றால், என்னிடமிருந்து விலகி இருந்தாலும் , நான் சொன்னபடி கேட்கும் என்பதுதான். புத்திசாலி, அதிபுத்திசாலி இருவரில் அதிபுத்திசாலி பக்கத்தில் இல்லாது எதிரில் எங்கோ இருந்தாலும் குறிப்புணர்ந்து காரியம் செய்வான். அதுபோலத்தான் வெள்ளைக்காய்கள். புரிகிறதா?"

துரியோதனனும் கர்ணனும் வாய்பேசாது தலையை ஆட்டுகிறார்கள்.

துரியோதனன்: "மாமா! நீங்கள் முதல் ஆட்டத்தில் வெற்றி பெறுவது உறுதியான பின், இரண்டாவது ஆட்டம் ஏன்? முதல் ஆட்ட முடிவில் நாடு முழுவதும் நம் கையில். பின் என்ன?"

சகுனி பெரிதாகச் சிரிக்கிறான்.

சகுனி: "துரியோதனா! செல்வமும் நாடும் நம் கைக்கு வந்ததும் பகையை மறந்து விடுவதா? பாண்டு புத்திரர்களை அப்படியே விட்டுவிடலாமா? அடுத்த ஆட்டத்தில் ஐவரையும் அடிமைப்படுத்த வேண்டும்."

கர்ணன்: "ஐயோ! அடிமைப்படுத்துவதா?"

சகுனி: "துரியோதனா, தான் ஆடாவிட்டாலும் தன் தசையாடும் என்ற சொற்படி நீதான் கலவரப்பட வேண்டும். ஆனால் கர்ணன் 'ஐயோ' என்று துடித்துவிட்டான். இதோ பார்! கர்ணன் வாயாலேயே பாண்டவர் ஐவரும் அடிமை என் கூற வைக்கிறேன்....ம்...இரண்டாவது ஆட்ட ஒத்திகையை ஆரம்பிப்போமா? கர்ணா! நீ இங்கு என் எதிரில் வந்து அமர். நீதான் யுதிஷ்டிரன். நான் துரியோதனன் சார்பில் ஆடும் சகுனி. துரியோதனா - நீ துரியோதனன் தான்."

கர்ணன்: "எனக்கு மட்டும் வேறு வேடமா, அதுவும் யுதிஷ்டிரன் வேடம்?"

சகுனி: "என் பங்கை நான் தான் செய்ய வேண்டும். அதுபோல துரியோதனனும் தான். யார் இப்போது யுதிஷ்டிரனை அழைத்து வர முடியும்? அதற்காகத்தான் நீ!"

கர்ணன் எழுந்து எதிர் பக்கம் அமர்கிறான். துரியோதனன் சகுனியையும் கர்ணனையும் மாறி மாறிப் பார்க்கிறான்.

சகுனி: "இது துரியோதனன் பேசும் வசனம் - 'யுதிஷ்டிரா! முதலில் இரண்டு ஆட்டம் சொக்கட்டான் ஆடலாம் என்று சொன்னோம். எதிர்பாராத விதமாக முதல் ஆட்டத்திலேயே நீ நாட்டை இழக்கும் படி ஆகிவிட்டது. இரண்டாவது ஆட்டம் ஆட என்ன செய்வது? முதல் ஆட்டத்தில் இந்த வெள்ளைக் காய்கள் மாமா சகுனிக்கு அபரிமிதமான வெற்றியை கொடுத்தது. இரண்டாவது ஆட்டத்தில் அதன்மூலம் உனக்கு வெற்றி கிடைக்குமோ என்னவோ! யாருக்குத் தெரியும்? இரண்டாவது ஆட்டம் ஆடாது போனால் நான் ஏதோ இந்த வெள்ளைக்காய்களில் சூது செய்து வெற்றியைப் பெற்றுவிட்டேன் என்றுகூடச் சொல்லுவார்கள். ஆகையால் அவசியம் ஆட வேண்டும்.

இந்தமுறை பணயமாக பெரிதாக ஒன்றும் வேண்டாம். ஒருவருக்கு ஒருவர், நம் சகோதரர்களை மாற்றிக்கொண்டால் போதுமானது. அதாவது உன் சகோதரர்கள் ஒவ்வொருவருக்கும் என் சகோதரர்கள் எண்ணிக்கையில் இருபதுபேர் சமம். நீ முதல் தடவை காய்கள் உருட்டுவதில் வெற்றி பெற்றால், அதாவது குறிப்பிட்ட எண்ணிக்கை சொல்லி அது விழுந்தால் என்பக்கம் இருந்து இருபது பேர் உன்பக்கம் வந்து விடுவார்கள். உனக்கு அடிமை செய்வார்கள். நான் வென்றால் நகுல, சகாதேவன், இருவரில் ஒருவரை எனக்கு கொடுத்துவிட வேண்டும்.”

கர்ணன் தன்னை முழுவதுமாக யுதிஷ்டிரனாக பாவித்து யோசிக்கிறான்.

"யுதிஷ்டிரா, உன் பதில் என்ன?" என்று வாஞ்சையோடு சகுனி வினவுகிறான்.

"துரியோதனா! உன் வார்த்தைகள், எந்த தவறும் இல்லாதவை. இங்கு இருப்பவர்கள் அங்கு வந்தால் என்ன? அங்கு இருப்பவர்கள் இங்கு வந்தால் என்ன? பூரண சம்மதம்."

கர்ணன் வாயிலிருந்து இந்த வார்த்தைகள் வந்ததும் சகுனி உற்சாக மிகுதியில் பலமாக படபடவென கை தட்டுகிறான். கர்ணன் திடுக்கிட்டு விழிக்கிறான். "என்ன?", கர்ணன் வினவ,
துரியோதனன், "கர்ணா! நீ சொன்ன வார்த்தைகள் உனக்கே தெரியவில்லை. ஆட்டமிழந்து தோற்றால் நாங்கள் ஐவரும் அடிமை என்றுதான் சொன்னாய். 'என்ன?' என்று இப்போது
கேட்கிறாயே?"

கர்ணன் நடந்ததை முழுதும் கேட்டு மனம் துடிக்கிறான். ‘யுதிஷ்டிரனாக பாவித்த மாத்திரமே சகோதரர்கள் நூற்றியைந்து என்று கூறியிருக்கிறானா? யுதிஷ்டிரன் அப்படிப்பட்டவனா?'
கர்ணன் சிந்தனை தடைபடுகிறது. மனத்தால் ஒரு நிமிடம் தன்னை யுதிர்ஷ்டிரனாக நினைத்தமைக்கும், அவன் போல பேசியதருக்குமே இந்த மாதிரி வார்த்தைகள் என்னிலே வந்தால், எத்துனை சிறப்பு மிக்கவரா இருப்பார் அவர்??? என அவன் சிந்தனை ஓடுகிறது...



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 18, 2011 11:18 am

பகுதி இருபத்தி ஆறு – சூதாட்டம் : பகுதி இரண்டு :

சூதில் எப்படி வெல்லலாம் என துரியோதனன், சகுனி பேசிக் கொண்டு இருக்க, கர்ணன் அங்கே பார்வையாளனாய். சூதாட்ட நாடக ஒத்திகையில் கர்ணனுக்கு தருமர் வேடம் கிடைக்க,
தருமராக தன்னை நினைத்த மாத்திரத்தில் சகோதர்கள் நூற்றி ஐந்து என தன்னை அறியாமல் சொல்கிறான். அதை அவன் அரிய நேர்கையில், தருமர் மீதான மதிப்பு, மேலும்
உயர்கிறது.

அங்கே மேலும் என்ன நடக்கிறது என்பதைக் காண்போம்.

சகுனி அவர்கள் மீண்டும் ஒருமுறை, பாண்டவர்களை எப்படி சொக்கட்டான் ஆட அழைப்பது, அவர்களை எப்படி வலையில் சிக்க வைப்பது, என்பது பற்றி ஆவலாய் விவாதிக்க ஆரம்பித்தார். கனிவான பேச்சு எனும் தூண்டிலில், சகோதர பாசம் எனும் புழுவை வைத்து, யுதிர்ஷ்டிரனை பிடிக்கலாம் என முடித்த போது, சொல்லில் அடங்கா திருப்தி துரியோதனனுக்கு.

ஆனால், கர்ணனுக்கு மட்டும் உள்ளே கலக்கம். துரியோதனன், தன் சகோதரர்களைக் கூட இழக்கத் தயாராகி விட்டானா என. அதுவும் சகுனியின் ஊக்கமும், உற்சாகமும் நிறைந்த பேச்சில் மட்டுப்பட்டது.

மூவருக்கும் ஒரே நேரத்தில் சிந்தனை ஓடுகிறது. பாண்டவர்களை சூதாட்டம் மூலம் அடிமைப் படுத்தி விடலாம். ஆனால், திரௌபதி??? அவளை என்ன செய்வது??? கர்ணனுக்கு, அவள் சுயம்வரத்தில், அவமானப்பட்ட சிந்தனை. துரியோதனுக்கோ, சபா மண்டபத்தில், அனைவர் முன்னிலையில் தன் தடுமாற்றத்தைக் கண்டு நகைத்த அவமானம். என மூவர் சிந்தனையிலும் அவளே... இருந்தாள். இந்த எண்ண ஓட்டத்தின் முடிவாக திரௌபதி, திரௌபதி – அவளுக்கு அழிவு வேண்டும் என தங்களுக்கே கேடு வேண்டி நின்றனர்.

பலமுறை பல சந்தேகங்களை, துரியோதனனும் கர்ணனும் கேட்டுக் கேட்டு ஆட்டத்தில் வெற்றி என உறுதி செய்து கொண்டனர். வழி அனுப்பும் முன்பாக சகுனி துரியோதனன், கர்ணன் இருவரையும் பார்த்துக் கூறினான்.

"இந்த நாடகம் இத்துடன் முடிந்து விட்டது என்று எண்ணாதீர்கள். பாண்டு புத்திரர்கள் ஐவரையும் வென்ற பிறகு மிக முக்கியமான பகுதி இந்த நாடகத்தில் உண்டு. அதை இப்போது உங்களுக்கு கூற மாட்டேன். ஒத்திகை ஏதும் இல்லாமல் நான் நடத்தப் போகும் பகுதி அது.

துரியோதனா! அந்த நேரத்தில் நீ மிகவும் பொறுமையாகவும், நிதானத்துடனும் இருக்க வேண்டும். அதிலும், அதற்கு அடுத்த வெற்றிக்கும் பிறகு கூட மிக மிக நிதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும். இது மிக அவசியமானது. என்னிடம் இப்போது ஏதும் கேட்காதீர்கள்.

அந்த சந்தர்ப்பத்தில், துரியோதனா! நீ எதையும் யோசியாது நான் சொல்வதற்கு மட்டும் 'சரி' என்று சொல்ல வேண்டும். பிறகு பண்டவர்கள் வாசம் வனத்தில் தான். போய்வாருங்கள்!" என விடை கொடுத்தான் சகுனி.

நாடகத்தின் கடைசி பகுதி என்னவென்று சகுனி முன்பே முடிவு செய்துவிட்டான். சகுனியின் நினைப்பு இப்படிப் போனது! ‘கடைசிப் பகுதியை இப்போதே சொன்னால் துரியோதனன் தயக்கம் காட்டுவான். கர்ணனும் கூட உற்சாகப் படுத்த மாட்டான். ‘பாண்டவரை அடிமைப்படுத்த வேண்டும்' என்ற உடனேயே கர்ணன் கையைச் சுட்டுக்கொண்டவன் போல 'ஐயோ!' என்று
கூவிவிட்டான்.

யுதிஷ்டிரன் எல்லாவற்றையும், எல்லோரையும், தன்னையும் இழந்து நிற்கும் போது 'யுதிஷ்டிரா! உன்னிடம் விலை மதிப்பில்லா மாணிக்கம் ஒன்று உள்ளது. அது உனக்கு எப்போதும் சகல சௌபாக்கியத்தையும் தரவல்லது. அதை எதிர் நிறுத்தினால் நிச்சம் வெற்றி உனக்கு உண்டாகும்', என பலவாறு வார்த்தை ஜாலங்களை அள்ளி வீசி, திரௌபதியை பணயமாய் எதிர் நிறுத்தி, இதுவரை இழந்த பொன், பொருள், நாடு, நகரம் முதலியவற்றை மீட்க வேண்டி ஆடு எனச் சொல்ல வேண்டும். திரௌபதியை தாராளமாய் புகழ வேண்டும்; துதிக்க வேண்டும்.

தண்ணீரில் மூழ்குபவன் சிறு மரத்துண்டு மிதந்தாலும் அதைப் பற்றுவான். அதுபோல், கலங்கி நிற்கும் யுதிஷ்டிரன், புத்தி, மனம் ஏதும் செயல்படாது. பிரமித்து, திரௌபதியையும் வைத்து விளையாடுவான். தவிர தோற்றாலும் 'நீங்கள் அனைவரும் உள்ள இடத்திற்குத்தான் அவளும் வருவாள்' என புரிந்தும் புரியாமலும் வேகமாய் முன்னும் பின்னும் சொல்லி ஏதாவது குழப்பம் செய்து, ஆட வைத்து, வெற்றி கொண்டு, பிறகு யுதிஷ்டிரன் செய்தது அனைத்தும் தவறு, குற்றம், என குறைகள் கூறி, பாண்டவர்கள் வனவாசத்திற்கு வழி வகுத்துவிட வேண்டும்.

இந்த சாகசத்தில் துரியோதனன் ஒத்துழைப்பும் வேண்டும். 'நாட்டை வென்ற பிறகு இரண்டாவது ஆட்டம் ஏன்?' என்று கேட்டவன் அல்லவா? சிறு பொறியே, பெரு நெருப்புக்குக் காரணம் ஆகும். திரௌபதியோ அணையா நெருப்பு. அவளையும் அடிமை என்று கடைசியில் சொல்லி, நாட்டைவிட்டு வெளியேற்றிவிட வேண்டும். பாண்டவரை வென்ற வெற்றிக் களிப்பில்,
துரியோதனன் இருக்கும் போது இதைச் சொல்லி, சொல்லியபடி செய்து, எல்லோரையும் வனவாசத்திற்கு அனுப்பிவிட வேண்டும்.

துரியோதனன் தன் புஜபலத்தில் அதிகம் நம்பிக்கை கொண்டவன். பாண்டவர்களை எப்படியோ வெற்றி கொண்டு வனவாசம் அனுப்பிவிட்டால் போதும்; திரௌபதியால் ஏதும் செய்ய முடியாது என்று எண்ணுவான்.

எனக்குத் தெரியும் அவளால் பெருந்தீயை உருவாக்க முடியும் என்று. சட்டியில் இட்ட தீயைப் போல, அவளையும் அடிமை என்று கூறி, நாட்டை விட்டு எட்டி வைத்துவிட வேண்டும். அப்படி செய்யாமல் போனால், திரௌபதி நாட்டில் இருந்தாலும், காட்டில் இருந்தாலும் தீதுதான்.’

பெண் என்பவள் அளப்பறிய சக்தியை தன்னுள்ளே கொண்டவள். அதிலும் சக்தியின் வடிவாகவே யாகத்தில் தோன்றியவள் இவள். இவளிடம் சற்று எச்சரிக்கையைத்தான் இருக்க வேண்டும்.

சகுனி தனிமையில் அமர்ந்து மேலும் சிந்தித்தான். 'துரியோதனன் ஒன்று, ஐந்து, பன்னிரண்டு என்ற காய்களை உருட்டுதல் மூலம் வெற்றி என நினைக்கிறான். நாடகத்தில் காய்கள் ஒரு சிறு அங்கம். "காய்கள் நடிக்குமா?" என்றும் கேட்டான்! நடிக்க வைப்பேன் என நம்பவைத்தேன். இது ஆரம்பம்; அவ்வளவுதான்.

முதலில் யுதிஷ்டிரனை வரவழைக்க வேண்டும். காய் ஆட வைக்க வேண்டும். பிறகு ஆட்ட முடிவில் நாடு எங்களுடையது என்று முடிக்க வேண்டும். இது நாடகமோ அல்லது நிஜமோ. இந்த பகுதி, எதிர்பாராது கடைசியில் தான் வர வேண்டும். இந்த வனவாசத்தை முதலிலோ அல்லது ஆட்ட நடுவிலோ சொன்னால் எல்லாம் குலைந்து போய்விடும். துரியோதனன் ஒரு முரட்டு குழந்தை. அவனை நாடு எனும் பொம்மையக் காட்டிதான் வழிக்குக் கொண்டுவர வேண்டும்.

யாருக்கும் துளி சந்தேகம் கூட ஏற்படாதவாறு என் சொக்கட்டான் வலை பின்னப்பட வேண்டும். பாண்டவர்களோ, அல்லது விதுரர், பீஷ்மர் போன்றவர்களோ சற்று சந்தேகப் பட்டுவிட்டால், நான் என்ன சாமர்த்தியம் செய்தாலும் காரியம் கைகூடாது.

முதலில் சிறு எண்ணிக்கையில் பொற்காசுகள் பணயம். அப்போது, துரியோதனன் கைப்பொருள் மட்டும் தான் ஆட உபயோகப் படுத்தப்படுகிறது - என்ற எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும். அரசாங்க கருவூலத்திலிருந்து அரைக்காசு கூட துரியோதனன் பெறவில்லை என்று விதுரர் முதலில் நம்ப வேண்டும். பிறகு யுதிஷ்டிரன் கேட்டதைக் கொடுக்க வேண்டும்
என்ற எண்ணத்தோடு செயல்படும்படி செய்ய வேண்டும்.

மன்னன் என்பவன் தனக்கு பிரியமானவர்களுக்கு சந்தோஷ மிகுதியால் தான் அணிந்திருக்கும் ஆபரணங்களைத்தான் தருவான். துரியோதனனும் முதலில் யுதிஷ்டிரனின் முத்து மாலையைத்தான் கேட்க வேண்டும்.

யுதிஷ்டிரன் கண்ணில் சூது மறைந்து, தம்பி துரியோதனன் கேட்டதைக் கொடுக்க வேண்டும் என்ற மன ஆவலை உண்டாக்க வேண்டும். பிறகு பசு மந்தைகள், சில கிராமங்கள், பல கிராமங்கள் என வலையைப் பெரிதாக்க வேண்டும். ஒரு நிலையில் பல பிரதேசங்களை வென்று, கடைசியில் இந்திரப்பிரஸ்தம் என்று கேட்க வேண்டும்.

அப்போது யுதிஷ்டிரனின் நாட்டின் பல பகுதிகள் துரியோதனன் கையில் வந்திருக்கும். அந்த நிலையில் யுதிஷ்டிரனால் ஏதும் செய்ய முடியாது. வென்ற பகுதிகளை பணயமாய் காட்டி, இந்திரப்பிரஸ்தம் கவர வேண்டும். குரங்கு ஆப்பம் பிட்ட கதைதான் - நாடு முழுதும் நம்வசம்!

"ஐயோ!" என்று கூவிய கர்ணன் வாயால், "இங்கு இருப்பவர்கள் அங்கு வந்தால் என்ன? அங்கு இருப்பவர்கள் இங்கு வந்தால் என்ன? பூரண சம்மதம்" எனக் கூற வைத்தது போல்,
நாடகத்தின் மறுபகுதியை நடத்திவிட வேண்டும்'.

சகுனி யோசித்து திட்டமிட்ட நாடகம் நன்றாகவே நடந்து கொண்டிருந்தது. ஆனால் யுதிஷ்டிரன் திரௌபதியையும் தோற்றான் என்றவுடனேயே, சகுனியின் பிடிப்பை மீறி, துரியோதனனும், அவன் சகோதரர்களும் தன்னிச்சையாக செயல்பட ஆரம்பித்துவிட்டனர்.

சற்றும் எதிர்பாராமல் கர்ணனும் கூட அல்லவா, திரௌபதியிடம் தன் துவேஷத்தை, தாதி என விளித்து அவையில் கொட்டி விட்டான்.

ஆக, இதுவரை, ஆற அமர பல நாட்கள் ஒத்திகை பார்த்து நடத்திய நாடகத்தின் முடிவில் எது நடந்துவிடக் கூடாது என சகுனி நினைத்தானோ அதில் கொண்டு வந்து நிறுத்திவிட்டனர், துரியோதனனும் அவன் கூட்டமும்

(என்ன நடந்தது என்பதை நம்மில் பலரும் நன்கு அறிவர். எனவே அவை மிகச் சுருக்கமாய்....)

சூதாட்டம் தொடங்கியது. தாயம் உருட்டப்பட்டது. விதுரர், பீஷ்மர் போன்றோர் மௌனியானார்.

பந்தயம் என்ன? என்றார் தருமர்.

அளவிலா செல்வம் என்னிடம் உண்டு. ஒரு மடங்கு நீங்கள் வைத்தால் ஒன்பது மடங்கு நான் வைப்பேன் என்றான் துரியோதனன்...

ஒருவர் ஆடப் பணயம் வேறொருவர் வைப்பதா?? என்றார் தருமர்.

மாமன் ஆடப் பணயம், மருமகன் வைக்கக்கூடாதா? இதில் என்ன தவறு? என எதிர்வாதம் புரிந்தான் சகுனி.

பரபரப்பான ஆட்டத்தில், படிப்படியாக ஏராளமான பொருட்களை இழந்தார் தருமர். மாடிழந்தார். ஆடிழந்தார். அவர் படைகள் அனைத்தும் இழந்தார். நாடு இன்னும் இழக்க வில்லை தருமா, நாட்டை வைத்து ஆடு, என்று தூண்டினான் சகுனி.

விதுரர் இதை தடுக்க ஆன மட்டும் முயற்சி செய்கிறார். ஆனாலும் ஒன்றும் செய்ய முடியாது போய் விட்டது. இழந்தது எல்லாம் மீண்டும் பெறலாம். மீண்டும் ஆடு. வைத்து ஆட பொருள் இல்லை என எண்ணாதே, உனது தம்பிகளை வைத்து ஆடு. என மீண்டும் காயுருட்ட வைத்து, சகோதரர்கள் நால்வரை இழந்தார் தருமர்.

அதிலே மகிழ்ச்சி மிக அடைந்தான் துரியோதனன். அதற்கு சகுனி, வெந்த புன்னை கோல் கொண்டு குத்தாதே, இவர்கள் உன் சகோதரர்கள் என பாண்டவர்கள்பால் அன்பு மிக்கவரைப் போலே பேசி, திரௌபதியை வைத்து இழந்த அனைத்தையும் மீட்கலாம் என யோசனை கூறுகிறார்.

சிறிதும், சிந்தனையின்றித் திரௌபதியை அந்த கொடியவர் அவைக்களத்தில் பணயமாக வைத்தார் தருமர். திரௌபதியும் சூதில் வீழ்ந்தாள். கௌரவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

விதுரரிடம், நீங்கள் சென்று பாஞ்சாலியை இங்கே தாதியாய் பணிபுரிய அழைத்து வாருங்கள் எனக் கூற... கோபம் மிகுந்த விதுரர், கௌரவர்களே! பேராசை கொண்டு பிழைகள் பல செய்கிறீர். பாண்டவர் பாதம் பணிந்து, அவர்கள் இழந்ததை அவரிடமே கொடுத்து விடுங்கள். இதனை நீங்கள் மேற்கொள்ளவில்லை எனில் மகாபாரதப்போர் வரும். நீங்கள் அனைவரும் அழிந்து போவீர். என அறிவுரை கூறுகிறார்.

அதற்கும் சிரித்த துரியோதனன், என்னை சபிப்பதே உங்களுக்கு வேலையாகப் போய்விட்டது எனக் கூறி தேரோட்டியை அழைத்து திரௌபதியை அழைத்துவரப் பணிக்கிறான். திரௌபதி மறுக்க, துச்சாதனன் செல்கிறான். சென்று அங்கே தனித்திருந்த அவளை, தலை முடியைப் பற்றி அவைக்கு இழுத்து வருகிறான்.

அவள், கதறிக் கதறி அங்கே இருக்கும் அவையோரிடம் நியாயம் கேட்க, சகுனி முன் வாயில் வழியே வரும்போதே நியாயம் தான் பின் வாயில் வழியாகப் போய்விட்டதே. பின்னர் யார் சொல்லுவார் நியாயம்??

யுதிர்ஷ்டிரர், தன்னை இழந்து, என்னை இழந்தாரா??? அல்லது என்னை இழந்து தன்னை இழந்தாரா?? என பாஞ்சாலி கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவார் யாரும் இல்லை. தன்னை இழந்த பின், என்னை அவரால் எப்படி சூதில் வைத்து ஆட முடியும்??? எனக் கேட்டாள்.

பீஷ்மர் கூட, கணவனுக்கு கட்டுப் பட்டவள் மனைவி. எனவே தருமன் உன்னை வைத்து ஆடியதும் முறைதான் என்று சொல்லி விடுகிறார்.

அவை நடுவே விரித்த கூந்தலுடன் இவள் பேச பேச ஆத்திரம் கொண்ட அறிவிழந்தவர்கள், அடிமைகளுக்கு எதற்கு அங்கவஸ்திரம்??? நீக்குங்கள் அதை.. என சொல்ல, அவர்கள் ஆடைகளும் கூடவே திரௌபதியின் ஆடையும் நீக்கச் சொல்கின்றனர்.

கண்ணனின் அருளால், அவள் ஆடை வளர்ந்தது அவள் மானம் காக்க, அவள் உடுத்தி இருந்த மஞ்சள் ஆடையில்.. அவளே கொழுந்து விட்டு எரியும் நெருப்பு போல பிரகாசித்து, அவையில் இருந்தவர் அனைவரும் வெப்பத்தை உணர்ந்தனராம். நடந்த அவமானத்தில் வெளிறிய அவள் முகம், நெருப்பில் தோன்றும் வெள்ளை சுடராய் ஜொலிக்க, மேல்நோக்கி எரியும் நெருப்புக்கு புகை கீழ் நோக்கி போவது போல விரித்த அவள் கூந்தல்...

சபை நடுவில் அவள் நிற்க, ஒன்றுக்கு ஐந்தாய் கணவர்கள் இருக்க, தன் நிலை இப்படி ஆனதே என அவள் கலங்கி நின்றது சில நிமிடம் தான். துகிலுரிக்கும் அவமானம், நடந்த பின், காளியாய் ஆனாள் பாஞ்சாலி..

சகுனி கூட இதை எதிர்பார்க்க வில்லை. அவன் எண்ணியது எல்லாம், பாண்டவர் ஐவரையும் அடிமையாய் காட்டி, பாஞ்சாலியையும் கூட நாட்டைவிட்டு எட்டி வைத்துவிட வேண்டும் என்றுதான் நினைத்திருந்தான்.

ஆனால் பஞ்சபூதங்களின் துணையுடன் பட்டினப்பிரவேசம் புறப்பட்டதுபோல், பாஞ்சாலி அரச அவையில் விரித்த கூந்தலுடன் வளர்ந்த வஸ்திரத்துடன், ஊழி கூத்து நடத்தும் மாகாளி
போலே நின்று கேட்க ஆரம்பித்துவிட்டாள்.

சூதும் சதியும் அறிந்த சகுனியே கலங்கிவிட்டான். இனி நடப்பது எதுவும் நம் கையில் இல்லை. நடப்பது நடந்தே தீரும் - என்று எதிர்பார்த்து மனத்தை திடப்படுத்திக் கொண்டு அமர்ந்திருந்தான் சகுனி.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக