Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறுவன் ஆதித்யா கொலை: பூவரசிக்கு ஆயுள் தண்டனை
5 posters
Page 1 of 1
சிறுவன் ஆதித்யா கொலை: பூவரசிக்கு ஆயுள் தண்டனை
சிறுவன் ஆதித்யா கொலை: பூவரசிக்கு ஆயுள் தண்டனை! சென்னை செசன்சு கோர்ட்டு தீர்ப்பு
சென்னை, பிப்.16- சென்னையில் சிறுவன் ஆதித்யாவை கடத்தி கொலை செய்த வழக்கில், பூவரசிக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை செசன்சு கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
சிறுவன் ஆதித்யா கொலை
சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார்-ஆனந்தலட்சுமி தம்பதியின் மகன் ஆதித்யா (வயது 4). ஜெயக்குமாருக்கும், அவருடன் பணியாற்றிய பூவரசி என்ற பெண்ணுக்கும் ஏற்கனவே தொடர்பு இருந்தது. இந்த நிலையில், ஜெயக்குமாரின் மகன் ஆதித்யா கடந்த ஆண்டு ஜுலை மாதம் காணாமல் போனான். இதுகுறித்து ஜெயக்குமார் சென்னை எஸ்பிளனேடு போலீசில் புகார் செய்தார். காணாமல் போன சிறுவனை போலீசார் தேடி வந்தனர்.
இந்த சூழ்நிலையில், சிறுவன் ஆதித்யாவின் உடல் நாகப்பட்டினம் அருகே வெளிபாளையம் பஸ் நிலையத்தில் அனாதையாக கிடந்த சூட்கேசில் கண்டெடுக்கப்பட்டது. பின்னர் இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.
சாட்சி விசாரணை
சிறுவனை கொன்றது யார்? என்று போலீசார் விசாரணை நடத்தியபோது, ஜெயக்குமாருடன் பணியாற்றிய பெண் பூவரசி சிக்கினார். ஜெயக்குமார் மீது அவர் வைத்திருந்த நட்பு வெறுப்பாக மாறியதால் அவரது மகன் ஆதித்யா கடத்தி கொலை செய்யப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. எனவே பூவரசியை, போலீசார் 21.7.10 அன்று கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், பூவரசி ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுக்களை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து, இந்த கொலை வழக்கின் விசாரணையை 2 மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து சென்னை 6-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 24-ந் தேதி சாட்சி விசாரணை தொடங்கியது. முதலாவதாக சிறுவனின் தாய் ஆனந்தலட்சுமி சாட்சி அளித்தார். அதைத்தொடர்ந்து அரசு தரப்பு சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.
ஆயுள் தண்டனை
பூவரசி தரப்பிலும் உடனடியாக குறுக்கு விசாரணை செய்யப்பட்டது. அரசு தரப்பில் வக்கீல் பிரபாவதியும், பூவரசி தரப்பில் வக்கீல் வசந்தகுமாரும் ஆஜராகி விசாரணையை மேற்கொண்டனர். இந்த வழக்கு விசாரணை 6-வது செசன்சு கோர்ட்டில் தொடர்ந்து நடந்து வந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி சேதுமாதவன் வழங்கிய தீர்ப்பு வருமாறு:-
குற்றம் சுமத்தப்பட்ட பூவரசி குற்றவாளி என்று நிரூபணமாகி உள்ளது. சிறுவனை கடத்திய வழக்கில் 7 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. சிறுவனை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கிறேன். மொத்த அபராத தொகையான ரூ.1 லட்சத்தில், ரூ.90 ஆயிரத்தை சிறுவனின் தாயார் ஆனந்தலட்சுமிக்கு நிவாரணத்தொகையாக வழங்க வேண்டும். பூவரசி தண்டனை காலத்தை ஏககாலமாக அனுபவிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.
சென்னை, பிப்.16- சென்னையில் சிறுவன் ஆதித்யாவை கடத்தி கொலை செய்த வழக்கில், பூவரசிக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை செசன்சு கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
சிறுவன் ஆதித்யா கொலை
சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார்-ஆனந்தலட்சுமி தம்பதியின் மகன் ஆதித்யா (வயது 4). ஜெயக்குமாருக்கும், அவருடன் பணியாற்றிய பூவரசி என்ற பெண்ணுக்கும் ஏற்கனவே தொடர்பு இருந்தது. இந்த நிலையில், ஜெயக்குமாரின் மகன் ஆதித்யா கடந்த ஆண்டு ஜுலை மாதம் காணாமல் போனான். இதுகுறித்து ஜெயக்குமார் சென்னை எஸ்பிளனேடு போலீசில் புகார் செய்தார். காணாமல் போன சிறுவனை போலீசார் தேடி வந்தனர்.
இந்த சூழ்நிலையில், சிறுவன் ஆதித்யாவின் உடல் நாகப்பட்டினம் அருகே வெளிபாளையம் பஸ் நிலையத்தில் அனாதையாக கிடந்த சூட்கேசில் கண்டெடுக்கப்பட்டது. பின்னர் இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.
சாட்சி விசாரணை
சிறுவனை கொன்றது யார்? என்று போலீசார் விசாரணை நடத்தியபோது, ஜெயக்குமாருடன் பணியாற்றிய பெண் பூவரசி சிக்கினார். ஜெயக்குமார் மீது அவர் வைத்திருந்த நட்பு வெறுப்பாக மாறியதால் அவரது மகன் ஆதித்யா கடத்தி கொலை செய்யப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. எனவே பூவரசியை, போலீசார் 21.7.10 அன்று கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், பூவரசி ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுக்களை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து, இந்த கொலை வழக்கின் விசாரணையை 2 மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து சென்னை 6-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 24-ந் தேதி சாட்சி விசாரணை தொடங்கியது. முதலாவதாக சிறுவனின் தாய் ஆனந்தலட்சுமி சாட்சி அளித்தார். அதைத்தொடர்ந்து அரசு தரப்பு சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.
ஆயுள் தண்டனை
பூவரசி தரப்பிலும் உடனடியாக குறுக்கு விசாரணை செய்யப்பட்டது. அரசு தரப்பில் வக்கீல் பிரபாவதியும், பூவரசி தரப்பில் வக்கீல் வசந்தகுமாரும் ஆஜராகி விசாரணையை மேற்கொண்டனர். இந்த வழக்கு விசாரணை 6-வது செசன்சு கோர்ட்டில் தொடர்ந்து நடந்து வந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி சேதுமாதவன் வழங்கிய தீர்ப்பு வருமாறு:-
குற்றம் சுமத்தப்பட்ட பூவரசி குற்றவாளி என்று நிரூபணமாகி உள்ளது. சிறுவனை கடத்திய வழக்கில் 7 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. சிறுவனை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கிறேன். மொத்த அபராத தொகையான ரூ.1 லட்சத்தில், ரூ.90 ஆயிரத்தை சிறுவனின் தாயார் ஆனந்தலட்சுமிக்கு நிவாரணத்தொகையாக வழங்க வேண்டும். பூவரசி தண்டனை காலத்தை ஏககாலமாக அனுபவிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சிறுவன் ஆதித்யா கொலை: பூவரசிக்கு ஆயுள் தண்டனை
ஆயுள் தண்டணை என்று கூறியதும், தலையை குனிந்து கொண்டு அமைதியாக இருந்த பூவரசி
சிறுவன் ஆதித்யா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பூவரசிக்கு சென்னை செசன்சு கோர்ட்டு ஆயுள் தண்டணை விதித்து நேற்று தீர்ப்பு கூறியது.
தீர்ப்பை கேட்டதும் பூவரசி எந்தவித உணர்வையும் வெளிப்படுத்தாமல் தலையை குனிந்து கொண்டு அமைதியாக நின்று கொண்டிருந்தார். பின்பு அவரை போலீசார் புழல் பெண்கள் சிறைக்கு அழைத்துச்சென்றனர்.
அங்கு தண்டணை கைதிகளுக்கான பிரிவில் அடைக்கப்பட்டார். இதுவரை விசாரணை கைதியாக இருந்த பூவரசி, இனி சிறைச்சாலையில் இருக்கும் ஆயுள் தண்டணை கைதி ஆவார். அவருக்கு இனி சிறைச்சாலையில் நீல நிற சேலையும், வெள்ளை ஜாக்கெட்டும் கொடுக்கப்படும். அந்த உடைகளை அணிந்து கொண்டு பூவரசி சிறைச்சாலையில் கொடுக்கப்படும் சாப்பாட்டையே சாப்பிடுவார்.
தினதந்தி
சிறுவன் ஆதித்யா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பூவரசிக்கு சென்னை செசன்சு கோர்ட்டு ஆயுள் தண்டணை விதித்து நேற்று தீர்ப்பு கூறியது.
தீர்ப்பை கேட்டதும் பூவரசி எந்தவித உணர்வையும் வெளிப்படுத்தாமல் தலையை குனிந்து கொண்டு அமைதியாக நின்று கொண்டிருந்தார். பின்பு அவரை போலீசார் புழல் பெண்கள் சிறைக்கு அழைத்துச்சென்றனர்.
அங்கு தண்டணை கைதிகளுக்கான பிரிவில் அடைக்கப்பட்டார். இதுவரை விசாரணை கைதியாக இருந்த பூவரசி, இனி சிறைச்சாலையில் இருக்கும் ஆயுள் தண்டணை கைதி ஆவார். அவருக்கு இனி சிறைச்சாலையில் நீல நிற சேலையும், வெள்ளை ஜாக்கெட்டும் கொடுக்கப்படும். அந்த உடைகளை அணிந்து கொண்டு பூவரசி சிறைச்சாலையில் கொடுக்கப்படும் சாப்பாட்டையே சாப்பிடுவார்.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சிறுவன் ஆதித்யா கொலை: பூவரசிக்கு ஆயுள் தண்டனை
இதையெல்லாம் என்கவுண்டர்ல போடாம எதுக்கு விட்டு வைக்கணும்
ராம்
ராம்
கோவை ராம்- இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
Re: சிறுவன் ஆதித்யா கொலை: பூவரசிக்கு ஆயுள் தண்டனை
என்னது ஆயுள் தண்டனையா,அட நாசமா போராவணுகலா.இந்த மாதிரி தண்டனை கொடுத்தா இது போல தவறுகள் நடந்துகிட்டேதான் இருக்கும்.அந்த சிறுவனின் தந்தை ஏமாற்றி இருந்தால் அவனை கொன்று இருக்க வேண்டும்,அதை விடுத்து ஒரு அப்பாவி சிறுவனை கொன்று இருக்காளே,இவள் கல்லால் அடித்து கொல்ல படவேண்டியவள்.அவன் திருமணம் ஆனவன் என்று தெரிந்தும் அவன் கூட பழகியது இவளுடைய தவறு.தவரெல்லாம் இவள் சைடில் வச்சுக்கிட்டு அந்த சிறுவனை கொன்னு இருக்காளே, இவள் வெளியில் வந்தாலும் நிம்மதியாக வாழமுடியுமா
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: சிறுவன் ஆதித்யா கொலை: பூவரசிக்கு ஆயுள் தண்டனை
rarara wrote:இதையெல்லாம் என்கவுண்டர்ல போடாம எதுக்கு விட்டு வைக்கணும்
ராம்
உண்மைதான், என்கவுண்டரில் கொன்றிருந்தால் தமிழகத்தில் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு உறுதியாகியிருக்கும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: சிறுவன் ஆதித்யா கொலை: பூவரசிக்கு ஆயுள் தண்டனை
இனி காலம் முழுக்க தான் செய்த தவறை நினைத்து நினைத்து கூனி குறுகி குமுங்கி சாகும் இந்த தண்டனை பூவரசிக்கு அவசியமே.... திருமணம் ஆன ஆணை காதலித்தது முதல் குற்றம்.... குடும்பத்துடன் சந்தோஷமாக நிம்மதியாக வாழ்ந்துக்கொண்டிருந்தவரின் வாழ்க்கையில் நெருப்பாய் போய் சேர்ந்ததும் இல்லாமல் இப்படி அவர் குழந்தையை கொன்றதற்கு இறைவன் தண்டிப்பது எப்பவோ தெரியாது ஆனால் இனி பூவரசி தினம் தினம் சாகனும் தான் செய்த தவறை நினைத்து நினைத்து.... பிஞ்சு குழந்தை என்ன தவறு செய்தது அம்மான்னு பரிதாபமா தன் முகம் பார்த்திருந்திருக்குமே... அப்ப கூடவா மனம் இளகாமல் போய்விட்டது பாவிக்கு
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Similar topics
» ஜீவஜோதி கணவர் கொலை: சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை உறுதி
» முதலில் ஆயுள் தண்டனை மேல் முறையீட்டில் மரண தண்டனை
» 17 போலீசாருக்கு ஆயுள் தண்டனை
» பாலில் கலப்படம்; ஆயுள் தண்டனை
» இந்திய டாக்டருக்கு ஆயுள் தண்டனை
» முதலில் ஆயுள் தண்டனை மேல் முறையீட்டில் மரண தண்டனை
» 17 போலீசாருக்கு ஆயுள் தண்டனை
» பாலில் கலப்படம்; ஆயுள் தண்டனை
» இந்திய டாக்டருக்கு ஆயுள் தண்டனை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|