Latest topics
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சுby Anthony raj Today at 4:12 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 2:56 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 8:44 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 1:55 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:35 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:18 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Anthony raj |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Anthony raj |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
விஜய்காந்த் விஷயத்தில் மகா பொறுமை காக்கும் ஜெயலலிதா!!!
3 posters
Page 1 of 1
விஜய்காந்த் விஷயத்தில் மகா பொறுமை காக்கும் ஜெயலலிதா!!!
கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம், டாக்டர் சேதுராமன் தலைமையிலான மூவேந்தர் முன்னணி கழகம், செ.கு. தமிழரசன் தலைமையிலான இந்தியக் குடியரசுக் கட்சி, பி.வி.கதிரவன் பொதுச் செயலாளராக உள்ள அகில இந்திய பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகளுடன் அதிமுக தொகுதிப் பங்கீட்டை முடிவு செய்துவிட்டதாகத் தெரிகிறது.
மாசி மகம் மற்றும் பெளர்ணமி தினம் ஆகியவை தனக்கு மிக உகந்த எண்ணான 9 கூட்டுத் தொகை வரும் வகையில் வரும் 18ம் தேதி வருவதால் அன்றைய தினம் இந்த தொகுதிப் பங்கீடு குறித்த அறிவிப்பை அதி்முக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிடலாம் என்று தெரிகிறது.
நாள், நட்சத்திரம், நல்ல நேரம் பார்த்து எதையும் செய்பவர் ஜெயலலிதா. கட்சியினருக்கு இலவச திருமணம் நடத்தி வைத்தாலும் அதில் கூட்டுத் தொகை 9 இருப்பது போல பார்த்துக் கொள்வார். கடந்த சில ஆண்டுகளாக கூட்டுத் தொகை 6 வந்தால் நல்லது என்று கூறப்பட்டதால் அதையொட்டியே எந்தச் செயலையும் செய்து வந்தார். இப்போது மீண்டும் 9 தான் உகந்த நம்பர் என்று சொல்லப்பட்டுவிட்டதால் அந்த எண்ணைச் சுற்றியே ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.
இந்தத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்ய கடைசி தேதியாகவும் பிப்ரவரி 18 தான் கடைசி தேதியாகும்.
தேமுதிகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளிலும் கூட அதிமுகவுக்கு இத்தனை இடங்கள் நிச்சயம் வேண்டும் என்று 9 கூட்டுத் தொகை வருமாறு தான் பேசப்பட்டு வருகிறது. இந்த எண்ணிக்கை போக மீதி இடங்களைத் தான் உங்களுக்கும் மற்ற கட்சிகளுக்கும் பிரித்துத் தர முடியும் என்று தேமுதிகவிடம் அதிமுக பேசி வருகிறது.
தேமுதிகவுடன் பாமகவுக்கும் வலை விரித்துக் காத்துள்ளார் ஜெயலலிதா. ஆனால், தேமுதிக தனது டிமாண்டில் திட்டவட்டமாக உள்ளதால் கூட்டணியை இறுதி செய்ய முடியவில்லை. ஆனாலும் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து கொண்டே உள்ளன.
வழக்கமாக வெட்டு ஒன்று துண்டு இரண்டு என செயல்படும் ஜெயலலிதா, விஜய்காந்த் விஷயத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பொறுமை காட்டி வருகிறார். அவருடன் கூட்டணி் அமைந்தால் மட்டுமே அதிமுகாவுக்கு வெற்றி வாய்ப்பு என்று தனியார் அமைப்பு நடத்திய சர்வே கூறிவிட்டதால் விஜய்காந்த் என்ன இழுபறி செய்தாலும் பொறுமை காக்க வேண்டிய நிலையி்ல் ஜெயலலிதா உள்ளார்.
அதே போல அதிமுகவுடன் கூட்டணிக்கு பாமகவின் இளைஞரணித் தலைவர் அன்புமணி தயாராக இல்லை. இதனால் அதிலும் இழுத்தடிப்பு தொடர்கிறது.
அதிமுக கூட்டணியில் இப்போது மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், புதிய தமிழகம், கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, இந்தியக் குடியரசு கட்சி, பார்வார்டு பிளாக், மூவேந்தர் முன்னணி கழகம் ஆகிய கட்சிகள் உள்ளன. இதில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியும் இணையலாம் என்று தெரிகிறது.
இந் நிலையில் கார்த்திக்கின் கட்சிக்கு அதிமுக ஒரு தொகுதியையும், மனித நேய மக்கள் கட்சிக்கும், டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சிக்கும் தலா 2 தொகுதிகளையும் ஜெயலலிதா ஒதுக்கியுள்ளதாகத் தெரிகிறது.
அதே போல டாக்டர் சேதுராமன் தலைமையிலான மூவேந்தர் முன்னணி கழகம், செ.கு. தமிழரசன் தலைமையிலான இந்தியக் குடியரசுக் கட்சி, பி.வி.கதிரவன் பொதுச் செயலாளராக உள்ள அகில இந்திய பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகளுக்கும் தலா 1 சீட் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
திமுக தரப்பு காங்கிரசுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை ஆரம்பித்துவிட்டதோடு, அடுத்த மாதம் தேர்தல் பிரச்சாரத்தை துவக்க திருச்சியில் மாநில மாநாட்டுக்கும் ஏற்பாடுகளைத் தொடங்கிவிட்டதால் விஜய்காந்த் விஷயத்தில் அதிமுக தரப்பில் பொறுமை கரைய ஆரம்பித்துள்ளது.
விஜய்காந்த் இன்னும் வராததால் மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை செய்ய முடியாத நிலையில் அதிமுக உள்ளது.
காலம் கடந்து கொண்டே உள்ளதால் கூட்டணி விவகாரத்தில் ஏதாவது முடிவு எடுக்க வேண்டிய நிலைக்கு அதிமுக தள்ளப்பட்டுள்ளது. இதனால் தனக்கு உகந்த நாளான 18ம் தேதியன்று, கூட்டணி தொடர்பாக முக்கிய அறிவிப்பை ஜெயலலிதா அறிவிக்கலாம் என்று தெரிகிறது.
கார்த்திக், மனித நேய மக்கள் கட்சி, புதிய தமிழகம், மூவேந்தர் முன்னணி கழகம், இந்திய குடியரசுக் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகளுடான தொகுதி உடன்பாட்டை அன்றைய தினம் ஜெயலலிதா அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.
தட்ஸ் தமிழ்
மாசி மகம் மற்றும் பெளர்ணமி தினம் ஆகியவை தனக்கு மிக உகந்த எண்ணான 9 கூட்டுத் தொகை வரும் வகையில் வரும் 18ம் தேதி வருவதால் அன்றைய தினம் இந்த தொகுதிப் பங்கீடு குறித்த அறிவிப்பை அதி்முக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிடலாம் என்று தெரிகிறது.
நாள், நட்சத்திரம், நல்ல நேரம் பார்த்து எதையும் செய்பவர் ஜெயலலிதா. கட்சியினருக்கு இலவச திருமணம் நடத்தி வைத்தாலும் அதில் கூட்டுத் தொகை 9 இருப்பது போல பார்த்துக் கொள்வார். கடந்த சில ஆண்டுகளாக கூட்டுத் தொகை 6 வந்தால் நல்லது என்று கூறப்பட்டதால் அதையொட்டியே எந்தச் செயலையும் செய்து வந்தார். இப்போது மீண்டும் 9 தான் உகந்த நம்பர் என்று சொல்லப்பட்டுவிட்டதால் அந்த எண்ணைச் சுற்றியே ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.
இந்தத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்ய கடைசி தேதியாகவும் பிப்ரவரி 18 தான் கடைசி தேதியாகும்.
தேமுதிகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளிலும் கூட அதிமுகவுக்கு இத்தனை இடங்கள் நிச்சயம் வேண்டும் என்று 9 கூட்டுத் தொகை வருமாறு தான் பேசப்பட்டு வருகிறது. இந்த எண்ணிக்கை போக மீதி இடங்களைத் தான் உங்களுக்கும் மற்ற கட்சிகளுக்கும் பிரித்துத் தர முடியும் என்று தேமுதிகவிடம் அதிமுக பேசி வருகிறது.
தேமுதிகவுடன் பாமகவுக்கும் வலை விரித்துக் காத்துள்ளார் ஜெயலலிதா. ஆனால், தேமுதிக தனது டிமாண்டில் திட்டவட்டமாக உள்ளதால் கூட்டணியை இறுதி செய்ய முடியவில்லை. ஆனாலும் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து கொண்டே உள்ளன.
வழக்கமாக வெட்டு ஒன்று துண்டு இரண்டு என செயல்படும் ஜெயலலிதா, விஜய்காந்த் விஷயத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பொறுமை காட்டி வருகிறார். அவருடன் கூட்டணி் அமைந்தால் மட்டுமே அதிமுகாவுக்கு வெற்றி வாய்ப்பு என்று தனியார் அமைப்பு நடத்திய சர்வே கூறிவிட்டதால் விஜய்காந்த் என்ன இழுபறி செய்தாலும் பொறுமை காக்க வேண்டிய நிலையி்ல் ஜெயலலிதா உள்ளார்.
அதே போல அதிமுகவுடன் கூட்டணிக்கு பாமகவின் இளைஞரணித் தலைவர் அன்புமணி தயாராக இல்லை. இதனால் அதிலும் இழுத்தடிப்பு தொடர்கிறது.
அதிமுக கூட்டணியில் இப்போது மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், புதிய தமிழகம், கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, இந்தியக் குடியரசு கட்சி, பார்வார்டு பிளாக், மூவேந்தர் முன்னணி கழகம் ஆகிய கட்சிகள் உள்ளன. இதில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியும் இணையலாம் என்று தெரிகிறது.
இந் நிலையில் கார்த்திக்கின் கட்சிக்கு அதிமுக ஒரு தொகுதியையும், மனித நேய மக்கள் கட்சிக்கும், டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சிக்கும் தலா 2 தொகுதிகளையும் ஜெயலலிதா ஒதுக்கியுள்ளதாகத் தெரிகிறது.
அதே போல டாக்டர் சேதுராமன் தலைமையிலான மூவேந்தர் முன்னணி கழகம், செ.கு. தமிழரசன் தலைமையிலான இந்தியக் குடியரசுக் கட்சி, பி.வி.கதிரவன் பொதுச் செயலாளராக உள்ள அகில இந்திய பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகளுக்கும் தலா 1 சீட் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
திமுக தரப்பு காங்கிரசுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை ஆரம்பித்துவிட்டதோடு, அடுத்த மாதம் தேர்தல் பிரச்சாரத்தை துவக்க திருச்சியில் மாநில மாநாட்டுக்கும் ஏற்பாடுகளைத் தொடங்கிவிட்டதால் விஜய்காந்த் விஷயத்தில் அதிமுக தரப்பில் பொறுமை கரைய ஆரம்பித்துள்ளது.
விஜய்காந்த் இன்னும் வராததால் மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை செய்ய முடியாத நிலையில் அதிமுக உள்ளது.
காலம் கடந்து கொண்டே உள்ளதால் கூட்டணி விவகாரத்தில் ஏதாவது முடிவு எடுக்க வேண்டிய நிலைக்கு அதிமுக தள்ளப்பட்டுள்ளது. இதனால் தனக்கு உகந்த நாளான 18ம் தேதியன்று, கூட்டணி தொடர்பாக முக்கிய அறிவிப்பை ஜெயலலிதா அறிவிக்கலாம் என்று தெரிகிறது.
கார்த்திக், மனித நேய மக்கள் கட்சி, புதிய தமிழகம், மூவேந்தர் முன்னணி கழகம், இந்திய குடியரசுக் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகளுடான தொகுதி உடன்பாட்டை அன்றைய தினம் ஜெயலலிதா அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.
தட்ஸ் தமிழ்
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: விஜய்காந்த் விஷயத்தில் மகா பொறுமை காக்கும் ஜெயலலிதா!!!
கருத்துக் கணிப்பு
அதிமுகவின் முதல் தொகுதிப் பங்கீடு எப்படி?
ஆரம்பமே அமர்க்களம்
35.29%
ஆரம்பமே சறுக்கல் தான்
9.8%
விஜய்காந்த் வராதவரை கஷ்டமே
54.9%
இதனால்தான் ஜெயலலிதா பொறுமை காக்கிறது போல.
அவ்வளவு பெரிய ஆளா விஜய்காந்த்.
அதிமுகவின் முதல் தொகுதிப் பங்கீடு எப்படி?
ஆரம்பமே அமர்க்களம்
35.29%
ஆரம்பமே சறுக்கல் தான்
9.8%
விஜய்காந்த் வராதவரை கஷ்டமே
54.9%
இதனால்தான் ஜெயலலிதா பொறுமை காக்கிறது போல.
அவ்வளவு பெரிய ஆளா விஜய்காந்த்.
![சிரி சிரி](/users/1813/71/41/02/smiles/705463.gif)
![சிரி சிரி](/users/1813/71/41/02/smiles/705463.gif)
![சிரி சிரி](/users/1813/71/41/02/smiles/705463.gif)
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: விஜய்காந்த் விஷயத்தில் மகா பொறுமை காக்கும் ஜெயலலிதா!!!
அரசியல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது ஆனால் மக்களுக்கு நல்லது நடக்குமா என்பது தான் சந்தேகம்
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா- மகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
Re: விஜய்காந்த் விஷயத்தில் மகா பொறுமை காக்கும் ஜெயலலிதா!!!
இப்ப அப்பிடிதான் ,கூட்டணி அமைந்து ,ஆட்சி மட்டும் அமையட்டும் அப்புறம் பாருங்க அம்மாவ பார்க்க விஜயகாந்த் தோட்டத்தில் காவல் காக்கணும்
ராம்
ராம்
கோவை ராம்- இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» முதல்வராகப் பதவியேற்றார் ஜெயலலிதா: விஜய்காந்த்-மோடி பங்கேற்பு
» கடவுளின் பெயரால் முதல்வராகப் பதவியேற்றார் ஜெயலலிதா: விஜய்காந்த்-மோடி பங்கேற்பு
» ஜெயலலிதா புகழை காங்கிரஸ் கெடுக்கிறது: உங்கள் (ஜெயலலிதா) காலடியில் நான்...: சீமான் ஆவேசம்
» அந்த விஷயத்தில் அதிர்ஷ்டசாலி!
» பண விஷயத்தில் கறாரான பிரியங்கா
» கடவுளின் பெயரால் முதல்வராகப் பதவியேற்றார் ஜெயலலிதா: விஜய்காந்த்-மோடி பங்கேற்பு
» ஜெயலலிதா புகழை காங்கிரஸ் கெடுக்கிறது: உங்கள் (ஜெயலலிதா) காலடியில் நான்...: சீமான் ஆவேசம்
» அந்த விஷயத்தில் அதிர்ஷ்டசாலி!
» பண விஷயத்தில் கறாரான பிரியங்கா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|