புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிலைக்கு விலையான உயிர்கள்... Poll_c10சிலைக்கு விலையான உயிர்கள்... Poll_m10சிலைக்கு விலையான உயிர்கள்... Poll_c10 
77 Posts - 43%
heezulia
சிலைக்கு விலையான உயிர்கள்... Poll_c10சிலைக்கு விலையான உயிர்கள்... Poll_m10சிலைக்கு விலையான உயிர்கள்... Poll_c10 
61 Posts - 34%
mohamed nizamudeen
சிலைக்கு விலையான உயிர்கள்... Poll_c10சிலைக்கு விலையான உயிர்கள்... Poll_m10சிலைக்கு விலையான உயிர்கள்... Poll_c10 
10 Posts - 6%
prajai
சிலைக்கு விலையான உயிர்கள்... Poll_c10சிலைக்கு விலையான உயிர்கள்... Poll_m10சிலைக்கு விலையான உயிர்கள்... Poll_c10 
6 Posts - 3%
வேல்முருகன் காசி
சிலைக்கு விலையான உயிர்கள்... Poll_c10சிலைக்கு விலையான உயிர்கள்... Poll_m10சிலைக்கு விலையான உயிர்கள்... Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
சிலைக்கு விலையான உயிர்கள்... Poll_c10சிலைக்கு விலையான உயிர்கள்... Poll_m10சிலைக்கு விலையான உயிர்கள்... Poll_c10 
6 Posts - 3%
Raji@123
சிலைக்கு விலையான உயிர்கள்... Poll_c10சிலைக்கு விலையான உயிர்கள்... Poll_m10சிலைக்கு விலையான உயிர்கள்... Poll_c10 
4 Posts - 2%
mruthun
சிலைக்கு விலையான உயிர்கள்... Poll_c10சிலைக்கு விலையான உயிர்கள்... Poll_m10சிலைக்கு விலையான உயிர்கள்... Poll_c10 
3 Posts - 2%
Saravananj
சிலைக்கு விலையான உயிர்கள்... Poll_c10சிலைக்கு விலையான உயிர்கள்... Poll_m10சிலைக்கு விலையான உயிர்கள்... Poll_c10 
3 Posts - 2%
Guna.D
சிலைக்கு விலையான உயிர்கள்... Poll_c10சிலைக்கு விலையான உயிர்கள்... Poll_m10சிலைக்கு விலையான உயிர்கள்... Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிலைக்கு விலையான உயிர்கள்... Poll_c10சிலைக்கு விலையான உயிர்கள்... Poll_m10சிலைக்கு விலையான உயிர்கள்... Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
சிலைக்கு விலையான உயிர்கள்... Poll_c10சிலைக்கு விலையான உயிர்கள்... Poll_m10சிலைக்கு விலையான உயிர்கள்... Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
சிலைக்கு விலையான உயிர்கள்... Poll_c10சிலைக்கு விலையான உயிர்கள்... Poll_m10சிலைக்கு விலையான உயிர்கள்... Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
சிலைக்கு விலையான உயிர்கள்... Poll_c10சிலைக்கு விலையான உயிர்கள்... Poll_m10சிலைக்கு விலையான உயிர்கள்... Poll_c10 
21 Posts - 4%
prajai
சிலைக்கு விலையான உயிர்கள்... Poll_c10சிலைக்கு விலையான உயிர்கள்... Poll_m10சிலைக்கு விலையான உயிர்கள்... Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
சிலைக்கு விலையான உயிர்கள்... Poll_c10சிலைக்கு விலையான உயிர்கள்... Poll_m10சிலைக்கு விலையான உயிர்கள்... Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
சிலைக்கு விலையான உயிர்கள்... Poll_c10சிலைக்கு விலையான உயிர்கள்... Poll_m10சிலைக்கு விலையான உயிர்கள்... Poll_c10 
8 Posts - 2%
Guna.D
சிலைக்கு விலையான உயிர்கள்... Poll_c10சிலைக்கு விலையான உயிர்கள்... Poll_m10சிலைக்கு விலையான உயிர்கள்... Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சிலைக்கு விலையான உயிர்கள்... Poll_c10சிலைக்கு விலையான உயிர்கள்... Poll_m10சிலைக்கு விலையான உயிர்கள்... Poll_c10 
7 Posts - 1%
mruthun
சிலைக்கு விலையான உயிர்கள்... Poll_c10சிலைக்கு விலையான உயிர்கள்... Poll_m10சிலைக்கு விலையான உயிர்கள்... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிலைக்கு விலையான உயிர்கள்...


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 14, 2011 11:10 pm

சூரியக் கடவுளான ஹெலியாஸ் (Helios) தேவனின் 120 அடி உயர (இவனை அப்பல்லோ என்றும் வழங்குவர்). பிரம்மாண்டமான சிலை இன்றைக்குச் சுமார் 2300 ஆண்டுகளுக்கு முன் ரோட்ஸ் (Rhodes) தீவின் (மத்தியதரைக் கடலும் ஆசியக் கடலும் கூடும் இடத்திலிருக்கும் தீவு) துறைமுக நுழைவாயிலில் ஒரு கால் ஒரு கரையிலும் மறுகால் மறு கரையிலும் இரு கால்களை அகல விரித்தவாறு, காலையில் உதிக்கும் கதிரவன் கதிர்கள் அதன் முகத்திற்கு ஒளியூட்டிப் பிரகாசப்படுத்த கிழக்கு நோக்கி, வானளவு உயர்ந்து கம்பீரமாக நின்று கொண்டிருந்தது.

அந்த இரு கால்களுக்கிடையில் தான் கலங்கள் துறைமுகத்துள் சென்று வந்தன.

கடல்வழி உப்புக் காற்று, சூறாவளி, புயல், மழை போன்றவை தாக்கினும், நிலைகுலையாதவாறு சிலை மிக உறுதியுடன் நிற்குமாறு நிர்மாணிக்கப்பட்டிருந்தது.

பளிங்குக் கற்களால் அடித்தளம் அமைக்கப்பட்டு, பெரிய பெரிய கற்களால் அடிப்படை உருவம் இயற்றி, அதன் உறுப்புகளுக்கான பகுதிகளை இரும்புக் கம்பிகளால் இணைத்து, மேனி முழுவதும் செப்புத் தகடுகள் மேவப்பட்டு உறுதியான கட்டமைப்பில் சிற்பம் உருவாக்கப்பட்டது.

அச்சிலைக்காக 15 டன் செப்புத் தகடுகளும் 9 டன் இரும்புப் பாலம் கம்பிகளும் பயன்படுத்தப்பட்டன. மிகப் பிரம்மாண்டமான சிலை ஆதலால், சிலையின் உறுப்புக்களைச் சிறுசிறு பகுதிகளாகத் தரையில் செய்து அவற்றை உயரே எடுத்துச் சென்று அந்தந்த இடங்களில் சரியாகப் பொருத்தினர்.

அந்தச் சிறு சிறு பகுதிகளை மேலே எடுத்துச் செல்ல மிக உயரமான ஏணி போன்ற சரிவான மண்பாதை ஒன்றைச் சிலை உயரத்திற்கு உருவாக்கி, முழுச் சிலை இயற்றி முடிந்த பின்னர் பாதையைச் சரித்துக் கரைத்துவிட்டனர்.

"ஹெலியாஸ் சிலையிலுள்ள காலின் கட்டை விரலைத் தன் இரு கைகளாலும் கட்டிப்பிடிக்க ஒரு கட்டுமஸ்தான பயில்வானால் மட்டுமே முடியும்... இதனை ஒரு நோயாளியைப் போல் தரையில் கிடத்தி வைத்தாலும் கூட அது அதிசயமாகத்தான் கருதப்பட்டிருக்கும்' என்பார் வரலாற்றாசிரியர் பிளினி. அப்படியாயின், அது எவ்வளவு பிரம்மாண்டமான சிலையாக இருந்திருக்கக்கூடும்.

மாசிடோனிய மாமன்னன் மகா அலெக்ஸாண்டர் கட்டுப்பாட்டில் இருந்த ரோட்ஸ் ராஜ்ஜியம், அவன் மரித்ததும் அவனது மூன்று தளபதியர் அன்டிகோபஸ், செல்யூக்கஸ், டாலமி ஆகியோருக்கிடையே சிக்கிச் சிதறுண்டது. ரோட்ஸ் நகரவாசிகள் டாலமியை ஆதரித்ததால், ஆத்திரமுற்ற அன்டிகோபஸ் பெரும் படையுடன் வந்து ரோட்ஸ் மீது பாய்ந்தான். இரு தரப்பிடையே நடந்த அந்த நீண்ட காலப் போரில் டாலமியின் உதவியால் ரோட்ஸ் நகர மக்கள் வெற்றிவாகை சூடினர்.

அந்த வெற்றியின் நினைவாக உருவானதே அந்த வெற்றிச் சிலையான ஹெலியாஸ் சிலை. போரில் தோற்றோடிய அன்டிகோபஸ் படைகள் விட்டுச் சென்ற படைக்கலன்களே சிலை இயற்றத் தேவையான செப்புத் தகடுகளாயின. கிமு 292-ல் சிலையெடுக்க முடிவெடுக்கப்பட்டு, பன்னிரண்டு ஆண்டுகளில் பணி நிறைவுற்றது.

தனியாக உடையலங்காரமின்றி சிரசில் கிரீடத்துடன் நிர்வாணக் கோலத்தில் கம்பீரமாக நின்று கொண்டிருந்த சூரியதேவனின் சிலை, அது நிறுவப்பட்டு, 56 ஆண்டுகள் கழித்து நேரிட்ட நிலநடுக்கம் ஒன்றில் முழுங்கால் உடைப்பட்டுத் தரைதட்டிப் போனது.

அப்போது எகிப்தை ஆண்ட 3ஆம் டாலமி அச்சிலையை மீண்டும் நிறுவ முன்வந்தான்.

ஆனால் ரோட்ஸ் நகர மக்கள் அதை விரும்பவில்லை. அச்சிலையை நிர்மாணித்த உள்ளூர் சிற்பி சாரஸ் சரமாரியான குற்றச்சாட்டுகளுக்கும் பயங்கரமான பழிச்சொற்களுக்கும் ஆளாகி வசைச் சொற்களை வரிசையாகப் பெற்றான்.

"சிற்பம் சரியாக இயற்றப் பெறாததால்தான் சூரியனாகிய ஹெலியாஸ் வெகுண்டு. பூகம்பத்தை உண்டாக்கித் தன் சிலையோடு ரோட்ஸ் நகரத்தையும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாக்கினான். சிற்பம் சீர்செய்யப்பட்டால் சூரியன் திரும்பவும் சினம் கொள்வான் என்பது திண்ணம்' என்று மக்கள் மன்னனை எச்சரித்தனர். அதனால் அச்சப்பட்ட டாலமி தன் திட்டத்தைக் கைவிட்டான்.

அளவுக்கு அதிகமாகவே அவமானப்பட்ட சிற்பி சாரஸ் தற்கொலையில் தன் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி இட்டுக் கொண்டான். அவன் தற்கொலைக்குக் காரணங்களாக இரண்டினை எடுத்துக் கூறுகின்றன வரலாற்றுக் குறிப்புகள்.

அவற்றுள் ஒன்று. சிற்பத்தின் கட்டுமான காலம் 12 ஆண்டுகள் என்று சரிவர திட்டமிடாத சிற்பி சாரஸ். அதை முடிக்கும் தருவாயில், அதிலொரு சிறு குறை இருப்பதாக கூறப்படவே, பெரும் பிரசித்தி பெற்ற சிற்பியான தனக்கு இஃதொரு பெருத்த அவமானம் எனக் கருதி, தற்கொலை செய்து கொண்டான் எனச் சில செய்திகள் சொல்கின்றன.

மற்றொரு காரணம்: சிலை செய்ய உத்தரவு கொடுத்த ரோட்ஸ் நகரத் தந்தை, பின்னாளில் அச்சிலையின் பரிமாணங்களை இரட்டிப்பாக்கினான். அப்படியானால் செலவும் இரட்டிப்பாகும் எனச் சிற்பி சொல்ல, ஒத்துக்கொள்ளப்பட்டு அவ்வாறே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் பொருட்களுக்கான போக்குவரத்துச் செலவு மற்றும் இதர செலவுகள் அதிகமாகும் என்பதைக் கணக்கிட சிற்பி தவறிவிட்டான். அதைப் பின்னர் தான் உணர்ந்தான். ஒப்பந்தம் என்பதால் நிதி ஒதுக்கீடு கிட்டாமல் போகவே, சொத்து சுகத்தை இழந்தும் அளவுக்கதிகமான கடன் சுமையாலும் தன் கதையைத் தானே முடித்துக் கொண்டான் என்று குறிப்புகள் சில கூறுகின்றன.

கிபி 654ல் அரேபிய இஸ்லாமியர் படையெடுப்பில் ரோட்ஸ் அவர்கள் வசம் அகப்பட்டது.

அதுவரை கேட்பாரற்றுக் கிடந்த அந்த ஹெலியாஸ் சிற்பத்தை உடைத்து, அச்சிதறல்களைச் சிரியா நாட்டவன் ஒருவனுக்கு விற்றுவிடவே, அவற்றை மட்டும் 900 ஒட்டகங்கள் மேல் ஏற்றிக் கொண்டு தன் தேசம் சென்று சேர்ந்தான் அந்த தனவான்.

ஹெலியாஸ் சிலையை மாதிரியாகக் கொண்டுதான் பிரெஞ்ச் தேசத்தார் 225 டன் எடையில் சுதந்திரதேவிச் சிலையை இயற்றி, அமெரிக்காவுக்கு அன்பளிப்பாக வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு சிற்பியின் முடிவு இவ்வாறிருக்க மற்றொரு சிற்பியின் முடிவைப் பார்ப்போம்.

ஒலிம்பியா நகரில் ஒலிம்பிக் போட்டி உருவானதாகக் கருதப்படும் கிமு 776க்கு முன்பிருந்தே ஒரு சிறிய கோயிலில் கிரேக்கத்தின் தேவாதி தேவனான சீயுஸ் (Zeus) கடவுளுக்கு வழிபாடு நடந்து வந்திருக்கிறது.

கிமு 450ல் ஒலிம்பியா நகர விளையாட்டரங்கத்தின் மேற்கே அதனருகில் பிஸோபொனெஸ்சஸ் என்ற இடத்தில் சீயுஸ் தேவனுக்காகப் புதுக்கோயிலொன்றைப் பெரிதாகப் புதுக்கத் திட்டமிட்டனர்.

அப்போதைய புகழ்பெற்ற சிற்பி எலிஸ் நகரத்து லிபன் என்பவன் 6 ஆண்டுகள் கடுமையாக உழைத்து பக்கவாட்டில் தலா 13 தூண்களும் முன்னும் பின்னும் தலா 6 தூண்களும் உள்ளவாறு செவ்வக வடிவில் ஒரு பிரம்மாண்டமான கோயிலை எழுப்பினான். உயரே சாய்ந்த வடிவில் கூரை உருவாக்க மேலும் 6 ஆண்டுகள் எடுத்துக் கொண்டான்.

அந்தப் பெரிய கோயிலில் சீயுஸ் தேவன் சிலை சிறியதாக இருந்ததால் கிமு 440ல் அத்தேவனுக்குப் பெரிய உருவில் சிலையெடுக்க முடிவெடுக்கப்பட்டது.

சிலை வனையும் பொறுப்பு, ஏதென்ஸ் நகரப் பார்த்தினான் கோயிலில் 40 அடி உயர அதீனா தேவனை சிலையைச் செய்த பிரசித்த பெற்ற ஸ்தபதி பிடியாஸ் என்பவன் வசம் ஒப்படைக்கப்பட்டது. உலகப் புகழ்பெற்ற ஓவியரின் சித்திரங்களை மாதிரியாகக் கொண்டுதான் சீயுஸ்தேவன் சிலை இயற்றப்பட வேண்டும் என்பதும், கோயிலின் பிரம்மாண்டத்திற்குச் சிறிதும் குறையாமல் அச்சிற்பம் இருக்க வேண்டும் என்பதும் சிற்பிக்கு இடப்பட்ட கட்டளை

சிற்பம் இயற்றுவதன் அகரமாகச் சிலை முதலில் ஒரு கொல்லன் கூடத்தை உருவாக்கினான். பின்னர் 20 அடி அகலம் 3 அடி உயரம் கொண்ட அடித்தளம் அமைத்து, அதன் மேல் சீர்மிகுந்த கம்பீரமான ஒரு சிம்மாசனம் செய்தான்.

சிம்மாசனத்தின் கால்களில் ஆர்டிமிஸ் மற்றும் அப்போல்லோ ஆகிய தேவதைகள், இறக்கை விரித்த பறவைகள், தேவலோக விலங்குகள் ஆகியவற்றைப் பென்னால் புனைந்து அவற்றில் நவரத்தினங்களைப் பதித்து, ஆசனத்தை அழகுற அலங்கரித்தான் சிற்பி.

சிம்மாசனத்தில் 22 அடி அகலம் 40 அடி உயரம் அளவில் வனப்பாக வீற்றிருக்கும் சீயுஸ் தேவனின் வலக்கையில் ஒரு கழுகு அமர்ந்திருக்கும். பூகோளத்தைத் தாங்க, இடக்கை நைக் (Nike) எனும் கிரேக்க வெற்றி தேவைதையின் சின்னமான கோலைப் பிடித்திருக்க, அவற்றை எல்லாம் தங்கத்தாலும் தந்தத்தாலும் செய்திருந்தான் ஸ்தபதி.

உலோகத் தகடுகளால் உருவம் கொடுத்து தந்தத்தாலும் தங்கத்தாலும் இழைத்து சியுஸ் சிற்பத்திற்கு இறுதி வடிவம் கொடுத்த பிடியாஸ், தேவனின் பாதத்திற்குப் பொற்காலணி சூட்டினான்.

சிரியா நாட்டரான் ஆண்டியோசெஸ் வழங்கிய ரோமத்தாலான அங்கவஸ்திரம் அணிவித்து மார்பின் குறுக்கே பொன்னாலான அலங்காரப் பட்டையிட்டு, அன்றைய நாள்படி தாடி மீசையுடன் சீயுஸ் தேவனின் மிடுக்கான சிலையெடுக்க சிற்பி எடுத்துக் கொண்ட ஆண்டுகள் ஆறு.

ஒலிம்பியாவில் எந்நேரமும் காற்றில் ஈரப்பதம் நிரம்பியிருப்பதால் விக்ரகத்தில் வெடிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக இறைவனுக்கு எண்ணைய்க் குளியல் நிகழ்த்த, சிற்பத்தின் அருகே எண்ணெய்க் குளம் ஒன்று நிறுவித் தன் பணியை நிறைவு செய்தான் பிடியாஸ்.

எழிலான அதிசயச் சிலை எழுந்ததுதான் தாமதம், சிற்பியின் சிந்தையைச் சிதைக்கும் விமர்சனங்கள், குற்றச்சாட்டுகள், வசைச் சொற்கள் ஆகியவையும் கூடவே எழுந்தன.

முதல் விமர்சனம்: சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் சீயுஸ், அதிலிருந்து எழுந்து நின்றால் கூரை அவனது தலையில் இடிக்காதோ? இதுகூடத் தெரியாமல் சிற்பி ஒரு சிலை செய்வான்?

"கோயில்ன் பிரம்மாண்டத்திற்குச் சிறிதும் குறையாமல் தேவனை உருவாக்க வேண்டும் உத்தரவால் காட்டிய இடம் நிரம்பியிருக்கும் வகையில் தேவனை இயற்றினேன்' என்று கண்டனத்திற்குப் பதிலுரைத்தன் பிடியாஸ்.

அவ்வேளையில் அவனுக்குச் சார்பாகக் கவிஞர் சிலர் தாங்கள் யாத்த பாக்களில் இவ்வாறாக வரைந்தனர். "கோயிலின் கூரைக்கும் ஆற்றல் உண்டு. சீயுஸ் தேவன் தன் சிம்மாசனத்தை விட்டு எழுந்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் கூரை இரண்டாகப் பிளந்து, தேவனின் தலை தட்டாதவாறு விலகி வழிவிடும்'

இந்த விமர்சனத்திலிருந்து தப்பிய பிடியாஸ் அடுத்த கண்டனத்தைக் கண்டான்:

சிற்பத்தின் உறுப்புகளில் ஒன்றின் இயல்புக்கு ஏற்ப, மற்றது ஒப்பிட இயலாததாய் வனையப் பெற்றுள்ளது. மொத்தத்தில் சிற்பத்தின் பரிமாணங்கள் சரியில்லை என்பதே அது.

"இறைவனின் பரிமாணங்கள் மனிதனிடமிருந்து முற்றிலும் வேறுபட்டவை' என்று கூறி, மறுபடியும் தப்பிவிட்டான் சிற்பி.

ஏதென்ஸ் வேந்தன் பெரிக்கிள்ஸ் சிற்பியின் சிறந்த நண்பர்களுள் ஒருவன். மன்னனைப் பிடிக்காத பலர், அவனைக் குறை கூற அஞ்சி சிற்பியின் மீது சீற்றம் கொண்டு குற்றம் சாட்டலாயினர்.

முதல் குற்றச்சாட்டு: "ஏதென்ஸ் நகர அதீனா சிலை செய்யத் தரப்பட்ட தங்கத்தையும் தந்தத்தையும் திருடிச் சென்று, சீயுஸ் சிலை செய்துவிட்டான் பிடியாஸ்'

அதற்காக நடந்த விசாரணையில் சிற்பி நிரபராதி என நிரூபிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டான். அபாண்டமான அடுத்த குற்றச்சட்டு.

"சீயுஸின் முழுச் சிலை எழுப்ப பிடியாஸ் கையாண்ட மாதிரிகளில் பல, பார்த்தினான் கோயில் அதீனா சிலையில் உள்ளவை போன்று இருக்கின்றன. இத்துட்ன சரித்திரத்தில் தன் பெயரைப் பொறித்துக் கொள்ள வேண்டும் என்ற பேராசையில் தன் உருவத்தையே சீயுஸ் சிலையாக வனைந்துவிட்ட சிற்பி பெரிக்கிள்ஸ் அரசனைக்கூட அடுத்தபட்சமாக்கிவிட்டான்' என்றனர்.

வலுவான் இந்தக் குற்றச்சாட்டால் பிடியாஸ் கைதியாகி, சிறையிலடைக்கப்பட்டான். விசாரணை முடிவுறும் முன்னரே சிறையிலேயே மாண்டான் அந்த சீர்மிகு கலைஞன்.

சீயுஸ் சிலை இப்படித்தான் இருந்திருக்க வேண்டும் என்பதை அக்கால நாணயங்களில் பொறிக்கப்பட்ட சீயுஸ் உருவம் அடையாளம் காட்டுகிறது.

கி.பி. 225ல் ரோமாபுரி அரசன் முதலாம் தியோடஸஸ் தம் கிருஸ்தவ மதம் பரவ சீயுஸ் வழிபாடு ஒரு பெருந்தடையாக இருப்பதாகக் கருதி ஒலிம்பிக் விளையாட்டோடு சேர்த்து அதனைத் தடை செய்யவே, அடித்தளத்தோடு பெயர்த்தெடுக்கப்பட்ட சீயுஸ் தேவன் சிலை கான்ஸ்டாண்டிநோபிள் (இஸ்தன்புல்) சென்று கி.பி. 462ல் அங்கே தீக்கிரையாகி உருமாறிப்போனது.

கி.பி. 1829ல் அவ்விடத்தில் அகழாய்வு செய்த பிரெஞ்ச் ஆய்வாளர், கிடைத்தவற்றைப் பாரிஸ் நகருக்கு எடுத்துச் சென்று விட்டனர்.

கி.பி. 1875-ல் அவ்விடத்தில் அகழாய்வு செய்த ஜெர்மன் ஆய்வாளர் தேவன் குளித்த எண்ணெய்க் குளத்தைக் கண்டு பிடித்தனர்.

1950-ல் நடந்த அகழாய்வில் கொல்லன் கூடத்து உருக்குக் குழிகள், உபகரணங்கள், அடையாள எண்கள் இடப்பட்ட களிமண் அச்சுகள், தந்தத்தின் மிச்சங்கள் ஆகியவற்றைக் கண்டறிந்தனர்.

மேலும் அவ்விடத்தில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று இருந்ததற்கான சான்றும் கண்டறியப்பட்டது.

புவனத்தின் புராதன அதிசயங்கள் ஹெலியாஸ் சிலை மற்றும் சீயுஸ் சிலை ஆகியவற்றை வனைந்த சிறப்பு வாய்ந்த சிற்பிகள் சாரஸ் மற்றும் பிடியாஸ் ஆகியோரின் வாழ்க்கை இவ்வாறாகத்தான் பரிதாபகரமாக முற்றுப்பெற்றது. கவின்மிககலைகளை உருவாக்கும் கலைஞர்களுக்குக் கடவுள் கொடுக்கும் கொடை இதுதானோ?

- இரா.கு. பாலசுப்பிரமணியன்



சிலைக்கு விலையான உயிர்கள்... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Feb 15, 2011 12:12 pm

பயனுள்ள தகவல்கள் அண்ணா



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக