புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தஞ்சை ஓவியம்! I_vote_lcapதஞ்சை ஓவியம்! I_voting_barதஞ்சை ஓவியம்! I_vote_rcap 
30 Posts - 39%
ayyasamy ram
தஞ்சை ஓவியம்! I_vote_lcapதஞ்சை ஓவியம்! I_voting_barதஞ்சை ஓவியம்! I_vote_rcap 
22 Posts - 29%
Dr.S.Soundarapandian
தஞ்சை ஓவியம்! I_vote_lcapதஞ்சை ஓவியம்! I_voting_barதஞ்சை ஓவியம்! I_vote_rcap 
12 Posts - 16%
Rathinavelu
தஞ்சை ஓவியம்! I_vote_lcapதஞ்சை ஓவியம்! I_voting_barதஞ்சை ஓவியம்! I_vote_rcap 
7 Posts - 9%
mohamed nizamudeen
தஞ்சை ஓவியம்! I_vote_lcapதஞ்சை ஓவியம்! I_voting_barதஞ்சை ஓவியம்! I_vote_rcap 
3 Posts - 4%
Sindhuja Mathankumar
தஞ்சை ஓவியம்! I_vote_lcapதஞ்சை ஓவியம்! I_voting_barதஞ்சை ஓவியம்! I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
தஞ்சை ஓவியம்! I_vote_lcapதஞ்சை ஓவியம்! I_voting_barதஞ்சை ஓவியம்! I_vote_rcap 
1 Post - 1%
mruthun
தஞ்சை ஓவியம்! I_vote_lcapதஞ்சை ஓவியம்! I_voting_barதஞ்சை ஓவியம்! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தஞ்சை ஓவியம்! I_vote_lcapதஞ்சை ஓவியம்! I_voting_barதஞ்சை ஓவியம்! I_vote_rcap 
105 Posts - 48%
ayyasamy ram
தஞ்சை ஓவியம்! I_vote_lcapதஞ்சை ஓவியம்! I_voting_barதஞ்சை ஓவியம்! I_vote_rcap 
67 Posts - 31%
Dr.S.Soundarapandian
தஞ்சை ஓவியம்! I_vote_lcapதஞ்சை ஓவியம்! I_voting_barதஞ்சை ஓவியம்! I_vote_rcap 
16 Posts - 7%
mohamed nizamudeen
தஞ்சை ஓவியம்! I_vote_lcapதஞ்சை ஓவியம்! I_voting_barதஞ்சை ஓவியம்! I_vote_rcap 
11 Posts - 5%
Rathinavelu
தஞ்சை ஓவியம்! I_vote_lcapதஞ்சை ஓவியம்! I_voting_barதஞ்சை ஓவியம்! I_vote_rcap 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
தஞ்சை ஓவியம்! I_vote_lcapதஞ்சை ஓவியம்! I_voting_barதஞ்சை ஓவியம்! I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel
தஞ்சை ஓவியம்! I_vote_lcapதஞ்சை ஓவியம்! I_voting_barதஞ்சை ஓவியம்! I_vote_rcap 
3 Posts - 1%
மொஹமட்
தஞ்சை ஓவியம்! I_vote_lcapதஞ்சை ஓவியம்! I_voting_barதஞ்சை ஓவியம்! I_vote_rcap 
2 Posts - 1%
manikavi
தஞ்சை ஓவியம்! I_vote_lcapதஞ்சை ஓவியம்! I_voting_barதஞ்சை ஓவியம்! I_vote_rcap 
2 Posts - 1%
mruthun
தஞ்சை ஓவியம்! I_vote_lcapதஞ்சை ஓவியம்! I_voting_barதஞ்சை ஓவியம்! I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தஞ்சை ஓவியம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 14, 2011 10:54 pm

நாம் வழிபடும் கோயில்களில் சாதாரணமாக கர்ப்பகிருகத்தில் மூலஸ்தான மூர்த்திகளையோ லிங்கங்களையோ இப்போது காண்கிறோம். ஆனால், ஆதிகாலத்தில் கர்ப்ப கிருகத்துச் சுவர்களில் - தீட்டிய சித்திரங்களையோ, அமைத்த சிற்பங்களையோ தெய்வங்களின் வடிவங்களாக பாவித்து வந்தார்கள்.

அவரவர் தாந்தாம்
அறிந்தவா றேத்தி
இவரிவர் எம்பெருமான்
என்று - சுவர்மிசைச்
சார்த்தியும் வைத்தும்
தொழுவர், உலகளந்த
மூர்த்தியுருவே முதல்

-பொய்கையாழ்வார்
(முதல் திருவந்தாதி)

பிறகு பூஜைக்கு என்று மூல விக்கிரகங்களை நிர்மாணித்தபோது சுதையால் (சுண்ணாம்பு கலந்த காரையால்) செய்து வர்ணமும் தீட்டியிருந்தார்கள். முகம், கை, கால், உடம்பு முதலிய அங்கங்களுக்கும் உடை, அணி ஆகியவற்றுக்கும் இன்ன இன்ன வர்ணங்கள் தீட்ட வேண்டுமென்று சிற்பசாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தகைய அழகிய வடிவங்களை இன்றும் பல இடங்களில் காணலாம். ஆனால், பலநூறு வருடங்களாக அவற்றுக்கு எண்ணெய்க் காப்பிட்டதால் கறுத்து வனப்பு குறைந்து காண்கின்றன.

சித்திரம் வரையும் கலை நம் நாட்டுக்குப் புதிது அல்ல. முக்கியமாக, இந்தக் கலை கோயிலில் பூஜை சம்பந்தமாகவே ஆரம்ப காலத்தில் பெரிதும் பயன்பட்டு வந்திருக்கிறது. ஒவ்வொரு காலத்திலும் சித்திரம் வரையும் பாணி வெவ்வேறு விதமாக இருந்திருக்கிறது.

துரதிருஷ்டவசமாக, தமிழ்நாட்டு ஓவியங்கள், காலப் போக்கில் அழிந்துவிடக் கூடிய சுவரிலும் மரத்திலும் சித்திரங்களைத் தீட்டியிருந்தார்கள். எனவே, அவற்றின் பெருமையை இன்று உணர இயலாதபடி, அவற்றில் பெரும்பான்மையானவை அழிந்துவிட்டன. எஞ்சியிருப்பவை சிலவே.

புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள சித்தன்னவாசலில் இருக்கும் மண்டபங்களில் தமிழ்நாட்டு சித்திரக் கலையைக் காணலாம். தஞ்சாவூர்க் கோயில் பிராகாரத்தில் மறைந்திருந்த சுவர்ச் சித்திரங்களும் தமிழர்களின் ஓவியத் திறமைக்குச் சான்றாக விளங்குகின்றன.

கோயில்களில் விக்கிரகங்களை வைத்துப் பூஜை செய்து வருகிறோம். ஆனால், சாதாரணமாக வீடுகளில் விக்கிரகங்களை நிர்மாணித்து வழிபாடு செய்வதில்லை. விக்கிரக பூஜைகளுக்குக் கடைப்பிடிக்கும் கிரியைகளை வீட்டில் செய்ய இயலாது. பூஜை அறைகளில் பெரிய படல்களை வைத்து வணங்குவதுதான் வழக்கம்.பூஜைக்கென்றே தெய்வப் படங்களை தயாரிப்பதில் ஒரு காலத்தில் தஞ்சாவூர் நகரம்தான் தனிப்புகழ் பெற்றிருந்தது.

தஞ்சாவூரை ஆண்டுவந்த சரபோஜி மன்னர், பல கலைகளிலும் தேர்ந்தவர். அவர் வடஇந்தியாவிலிருந்து சித்திர நிபுணர்களை வரவழைத்து ஓவியக் கலைக்கு ஊட்டம் தந்தார். வடநாட்டிலிருந்து வந்தவர்கள் தமிழ்நாட்டு சித்திர பாணியையும் கலந்து புதுமையைப் புகுத்தினார்கள்.

மராட்டியரின் ஆதிக்கம் சீர்குலைந்த பிறகு இந்தக் கலைஞர்களை ஆதரிப்பவர்கள் குறைந்துவிட்டார்கள். எனவே, இந்த ஓவியக் கலைஞர்களுக்கு சரியான வேலை கிடைக்கவில்லை. வீடுகளில் பூஜை செய்வதற்குத் தேவையான தெய்வப் படங்களைத் தயாரிக்கத் தொடங்கினார்கள்.

தண்ணீரில் பல நாட்கள் ஊறவைத்து, நன்றாகத் தயார் செய்த மரப் பலகைகளில் உருவங்களை வரைவார்கள். பிறகு சித்திரங்களின் உருவம், ஆடை, அணி முதலியவைகளுக்குப் பொருத்தமாக வேவ்வேறு வர்ணங்கறைத் திட்டுவார்கள். தவிர, நகைகளுக்கு விலை உயர்ந்த கற்களையு முத்துக்களையும் ஆங்காங்கே பதிப்பார்கள்.

தெய்வ வடிவங்களுக்குப் பின்னணியாக அமைந்துள்ள விமானம், ஆசனம் முதலியவற்றுக்கு நுணுக்கமான வேலைப்பாடுகளைச் செய்து, தங்க ரேக்குகளை ஒட்ட வைப்பார்கள். இப்படித் தயாரித்த சித்திரங்கள் கண் கவரும் அழகும், தெய்வீகப் பொலிவும் பெற்று விளங்கும். இவையே பிற்காலத்தில் தஞ்சாவூர் சித்திரங்கள் என்றும் தஞ்சை ஓவியம் என்றும் தற்காலத்தில் டேஞ்சூர் பெயிண்டிங் என்றும், சிலாகித்துப் பேசப்பட்டன.

இந்தத் தஞ்சை ஓவியங்கள் தோன்றி இருநூறு ஆண்டுகள் ஆகியும் இன்றும் புத்தம் புதியனவாக ஒளியுடன் விளங்குகின்றன. நல்ல கற்கள் பதித்து உருவாக்கிய தஞ்சை சித்திரங்களை ஜமீன்தார்களும் செல்வந்தர்களும் அதிக விலை கொடுத்து வாங்கிக் கொண்டார்கள்.

சாதாரண மக்களும் இந்த ஓவியங்களை வாங்கும் விதத்தில் இமிடேஷன் கற்களையும் செயற்கை முத்துக்களையும் பதித்துத் தயாரித்து வந்தார்கள். இப்படிப் பதித்த கற்களில் மட்டும் பேதம் இருந்ததே தவிர, வர்ண அமைப்பிலோ சித்திரப் பாணியிலோ, கலை நுணுக்கத்திலோ சற்றும் சிறப்பு குறையவில்லை.

யசோதை ஒரு புறமும் நந்தகோபன் மறுபுறமும் நிற்க, வெண்ணெய்த் தாழியுடன் மஞ்சத்தில் பட்டுத் திண்டுகளுக்கிடையில் வீற்றிருக்கும் பாலகிருஷ்ணனின் சித்திரம் மிகவும் கவர்ச்சியானது. கண்ணனின் கண்கள் நம்முடன் பேச முயல்வது போலவே தோன்றும். படத்தைப் போலவே குழந்தையை இவ்வளவு பெரிதாகவும் வயது முதிர்ந்தவர்களைச் சிறு உருவங்களாகவும் சித்திரிப்பது தவறானது, முரணானது என்று சிலர் கருதலாம். ஆனால், சித்திர சாஸ்திரப்படி அவற்றையெல்லாம் ஒரே அளவில் தயாரிக்க வேண்டிய அவசியமில்லை. ஓவியத்தில் எது முக்கிய அம்சமோ அது பெரிய அளவிலும் மற்றவற்றைச் சிறிய அளவிலும் அமைப்பது பழைய முறை. இத்தகைய ஓவியங்களில் உள்ள உருவங்களைத் தனித் தனியேதான் பார்த்து அனுபவிக்க வேண்டும்.

இருபுறமும் வெண் சாமரம் வீசும் சேடியர்களுக்கு நடுவே, கவிந்த விமானத்தின் கீழே, இரு கரங்களில் பத்மம் தாங்கி, மற்ற இரு கரங்களால் அபய, வரத முத்திரையைக் காண்பிக்கும் மகாலட்சுமியின் தோற்றம், வீட்டுக்கே லட்சுமிகரமாய் இருக்கிறது.

பட்டாபிஷேகக் கோலத்துடன் வீற்றிருக்கும் ஸ்ரீராமசந்திர மூர்த்தியின் கம்பீரமும் அவரைச் சுற்றி உள்ளவர்களின் பொலிவும் சித்திரம் முழுவதும் நிரம்பி வழிகின்றன.

கண்ணனும் ராதையும் அணைத்து நிற்கும் காட்சி காதலும் தெய்வீகமும் கலந்த அற்புத சித்திரம். மீனாட்சி கல்யாண சித்திரம் எல்லோருடைய மனதையும் பரவசப்படுத்தக் கூடியது.

இப்படிப் பலவிதமாகச் சித்திரங்களை வரைந்து தமிழ் நாட்டில் வீடுகளிலும் மடங்களிலும் பக்தி மணம் கமழச் செய்த தஞ்சாவூர் சித்திரக்காரர்களுக்கு நூறு வருடங்களுக்கு முன்பிருந்த ஆதரவு குறைந்துவிட்டது. தஞ்சாவூர் சித்திரங்களை வெகுகாலமாகத் தீட்டிவந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வருவாய்க் குறைவை சரிக்கட்ட வேறு வேலைகளில் ஈடுபடலானார்கள். ஆன்மிக விழிப்புணர்வு பெற்றுள்ள மக்களின் ஆதரவால் நீண்ட நெடிய காலத்திற்குப் பிறகு மீண்டும் தஞ்சை ஓவியக் கலை புத்துயிர் பெற்று வருகிறது.

-ஆர்.சி. சம்பத்



தஞ்சை ஓவியம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக