Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!by ayyasamy ram Today at 12:55 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தஞ்சை ஓவியம்!
Page 1 of 1
தஞ்சை ஓவியம்!
நாம் வழிபடும் கோயில்களில் சாதாரணமாக கர்ப்பகிருகத்தில் மூலஸ்தான மூர்த்திகளையோ லிங்கங்களையோ இப்போது காண்கிறோம். ஆனால், ஆதிகாலத்தில் கர்ப்ப கிருகத்துச் சுவர்களில் - தீட்டிய சித்திரங்களையோ, அமைத்த சிற்பங்களையோ தெய்வங்களின் வடிவங்களாக பாவித்து வந்தார்கள்.
அவரவர் தாந்தாம்
அறிந்தவா றேத்தி
இவரிவர் எம்பெருமான்
என்று - சுவர்மிசைச்
சார்த்தியும் வைத்தும்
தொழுவர், உலகளந்த
மூர்த்தியுருவே முதல்
-பொய்கையாழ்வார்
(முதல் திருவந்தாதி)
பிறகு பூஜைக்கு என்று மூல விக்கிரகங்களை நிர்மாணித்தபோது சுதையால் (சுண்ணாம்பு கலந்த காரையால்) செய்து வர்ணமும் தீட்டியிருந்தார்கள். முகம், கை, கால், உடம்பு முதலிய அங்கங்களுக்கும் உடை, அணி ஆகியவற்றுக்கும் இன்ன இன்ன வர்ணங்கள் தீட்ட வேண்டுமென்று சிற்பசாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்தகைய அழகிய வடிவங்களை இன்றும் பல இடங்களில் காணலாம். ஆனால், பலநூறு வருடங்களாக அவற்றுக்கு எண்ணெய்க் காப்பிட்டதால் கறுத்து வனப்பு குறைந்து காண்கின்றன.
சித்திரம் வரையும் கலை நம் நாட்டுக்குப் புதிது அல்ல. முக்கியமாக, இந்தக் கலை கோயிலில் பூஜை சம்பந்தமாகவே ஆரம்ப காலத்தில் பெரிதும் பயன்பட்டு வந்திருக்கிறது. ஒவ்வொரு காலத்திலும் சித்திரம் வரையும் பாணி வெவ்வேறு விதமாக இருந்திருக்கிறது.
துரதிருஷ்டவசமாக, தமிழ்நாட்டு ஓவியங்கள், காலப் போக்கில் அழிந்துவிடக் கூடிய சுவரிலும் மரத்திலும் சித்திரங்களைத் தீட்டியிருந்தார்கள். எனவே, அவற்றின் பெருமையை இன்று உணர இயலாதபடி, அவற்றில் பெரும்பான்மையானவை அழிந்துவிட்டன. எஞ்சியிருப்பவை சிலவே.
புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள சித்தன்னவாசலில் இருக்கும் மண்டபங்களில் தமிழ்நாட்டு சித்திரக் கலையைக் காணலாம். தஞ்சாவூர்க் கோயில் பிராகாரத்தில் மறைந்திருந்த சுவர்ச் சித்திரங்களும் தமிழர்களின் ஓவியத் திறமைக்குச் சான்றாக விளங்குகின்றன.
கோயில்களில் விக்கிரகங்களை வைத்துப் பூஜை செய்து வருகிறோம். ஆனால், சாதாரணமாக வீடுகளில் விக்கிரகங்களை நிர்மாணித்து வழிபாடு செய்வதில்லை. விக்கிரக பூஜைகளுக்குக் கடைப்பிடிக்கும் கிரியைகளை வீட்டில் செய்ய இயலாது. பூஜை அறைகளில் பெரிய படல்களை வைத்து வணங்குவதுதான் வழக்கம்.பூஜைக்கென்றே தெய்வப் படங்களை தயாரிப்பதில் ஒரு காலத்தில் தஞ்சாவூர் நகரம்தான் தனிப்புகழ் பெற்றிருந்தது.
தஞ்சாவூரை ஆண்டுவந்த சரபோஜி மன்னர், பல கலைகளிலும் தேர்ந்தவர். அவர் வடஇந்தியாவிலிருந்து சித்திர நிபுணர்களை வரவழைத்து ஓவியக் கலைக்கு ஊட்டம் தந்தார். வடநாட்டிலிருந்து வந்தவர்கள் தமிழ்நாட்டு சித்திர பாணியையும் கலந்து புதுமையைப் புகுத்தினார்கள்.
மராட்டியரின் ஆதிக்கம் சீர்குலைந்த பிறகு இந்தக் கலைஞர்களை ஆதரிப்பவர்கள் குறைந்துவிட்டார்கள். எனவே, இந்த ஓவியக் கலைஞர்களுக்கு சரியான வேலை கிடைக்கவில்லை. வீடுகளில் பூஜை செய்வதற்குத் தேவையான தெய்வப் படங்களைத் தயாரிக்கத் தொடங்கினார்கள்.
தண்ணீரில் பல நாட்கள் ஊறவைத்து, நன்றாகத் தயார் செய்த மரப் பலகைகளில் உருவங்களை வரைவார்கள். பிறகு சித்திரங்களின் உருவம், ஆடை, அணி முதலியவைகளுக்குப் பொருத்தமாக வேவ்வேறு வர்ணங்கறைத் திட்டுவார்கள். தவிர, நகைகளுக்கு விலை உயர்ந்த கற்களையு முத்துக்களையும் ஆங்காங்கே பதிப்பார்கள்.
தெய்வ வடிவங்களுக்குப் பின்னணியாக அமைந்துள்ள விமானம், ஆசனம் முதலியவற்றுக்கு நுணுக்கமான வேலைப்பாடுகளைச் செய்து, தங்க ரேக்குகளை ஒட்ட வைப்பார்கள். இப்படித் தயாரித்த சித்திரங்கள் கண் கவரும் அழகும், தெய்வீகப் பொலிவும் பெற்று விளங்கும். இவையே பிற்காலத்தில் தஞ்சாவூர் சித்திரங்கள் என்றும் தஞ்சை ஓவியம் என்றும் தற்காலத்தில் டேஞ்சூர் பெயிண்டிங் என்றும், சிலாகித்துப் பேசப்பட்டன.
இந்தத் தஞ்சை ஓவியங்கள் தோன்றி இருநூறு ஆண்டுகள் ஆகியும் இன்றும் புத்தம் புதியனவாக ஒளியுடன் விளங்குகின்றன. நல்ல கற்கள் பதித்து உருவாக்கிய தஞ்சை சித்திரங்களை ஜமீன்தார்களும் செல்வந்தர்களும் அதிக விலை கொடுத்து வாங்கிக் கொண்டார்கள்.
சாதாரண மக்களும் இந்த ஓவியங்களை வாங்கும் விதத்தில் இமிடேஷன் கற்களையும் செயற்கை முத்துக்களையும் பதித்துத் தயாரித்து வந்தார்கள். இப்படிப் பதித்த கற்களில் மட்டும் பேதம் இருந்ததே தவிர, வர்ண அமைப்பிலோ சித்திரப் பாணியிலோ, கலை நுணுக்கத்திலோ சற்றும் சிறப்பு குறையவில்லை.
யசோதை ஒரு புறமும் நந்தகோபன் மறுபுறமும் நிற்க, வெண்ணெய்த் தாழியுடன் மஞ்சத்தில் பட்டுத் திண்டுகளுக்கிடையில் வீற்றிருக்கும் பாலகிருஷ்ணனின் சித்திரம் மிகவும் கவர்ச்சியானது. கண்ணனின் கண்கள் நம்முடன் பேச முயல்வது போலவே தோன்றும். படத்தைப் போலவே குழந்தையை இவ்வளவு பெரிதாகவும் வயது முதிர்ந்தவர்களைச் சிறு உருவங்களாகவும் சித்திரிப்பது தவறானது, முரணானது என்று சிலர் கருதலாம். ஆனால், சித்திர சாஸ்திரப்படி அவற்றையெல்லாம் ஒரே அளவில் தயாரிக்க வேண்டிய அவசியமில்லை. ஓவியத்தில் எது முக்கிய அம்சமோ அது பெரிய அளவிலும் மற்றவற்றைச் சிறிய அளவிலும் அமைப்பது பழைய முறை. இத்தகைய ஓவியங்களில் உள்ள உருவங்களைத் தனித் தனியேதான் பார்த்து அனுபவிக்க வேண்டும்.
இருபுறமும் வெண் சாமரம் வீசும் சேடியர்களுக்கு நடுவே, கவிந்த விமானத்தின் கீழே, இரு கரங்களில் பத்மம் தாங்கி, மற்ற இரு கரங்களால் அபய, வரத முத்திரையைக் காண்பிக்கும் மகாலட்சுமியின் தோற்றம், வீட்டுக்கே லட்சுமிகரமாய் இருக்கிறது.
பட்டாபிஷேகக் கோலத்துடன் வீற்றிருக்கும் ஸ்ரீராமசந்திர மூர்த்தியின் கம்பீரமும் அவரைச் சுற்றி உள்ளவர்களின் பொலிவும் சித்திரம் முழுவதும் நிரம்பி வழிகின்றன.
கண்ணனும் ராதையும் அணைத்து நிற்கும் காட்சி காதலும் தெய்வீகமும் கலந்த அற்புத சித்திரம். மீனாட்சி கல்யாண சித்திரம் எல்லோருடைய மனதையும் பரவசப்படுத்தக் கூடியது.
இப்படிப் பலவிதமாகச் சித்திரங்களை வரைந்து தமிழ் நாட்டில் வீடுகளிலும் மடங்களிலும் பக்தி மணம் கமழச் செய்த தஞ்சாவூர் சித்திரக்காரர்களுக்கு நூறு வருடங்களுக்கு முன்பிருந்த ஆதரவு குறைந்துவிட்டது. தஞ்சாவூர் சித்திரங்களை வெகுகாலமாகத் தீட்டிவந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வருவாய்க் குறைவை சரிக்கட்ட வேறு வேலைகளில் ஈடுபடலானார்கள். ஆன்மிக விழிப்புணர்வு பெற்றுள்ள மக்களின் ஆதரவால் நீண்ட நெடிய காலத்திற்குப் பிறகு மீண்டும் தஞ்சை ஓவியக் கலை புத்துயிர் பெற்று வருகிறது.
-ஆர்.சி. சம்பத்
அவரவர் தாந்தாம்
அறிந்தவா றேத்தி
இவரிவர் எம்பெருமான்
என்று - சுவர்மிசைச்
சார்த்தியும் வைத்தும்
தொழுவர், உலகளந்த
மூர்த்தியுருவே முதல்
-பொய்கையாழ்வார்
(முதல் திருவந்தாதி)
பிறகு பூஜைக்கு என்று மூல விக்கிரகங்களை நிர்மாணித்தபோது சுதையால் (சுண்ணாம்பு கலந்த காரையால்) செய்து வர்ணமும் தீட்டியிருந்தார்கள். முகம், கை, கால், உடம்பு முதலிய அங்கங்களுக்கும் உடை, அணி ஆகியவற்றுக்கும் இன்ன இன்ன வர்ணங்கள் தீட்ட வேண்டுமென்று சிற்பசாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்தகைய அழகிய வடிவங்களை இன்றும் பல இடங்களில் காணலாம். ஆனால், பலநூறு வருடங்களாக அவற்றுக்கு எண்ணெய்க் காப்பிட்டதால் கறுத்து வனப்பு குறைந்து காண்கின்றன.
சித்திரம் வரையும் கலை நம் நாட்டுக்குப் புதிது அல்ல. முக்கியமாக, இந்தக் கலை கோயிலில் பூஜை சம்பந்தமாகவே ஆரம்ப காலத்தில் பெரிதும் பயன்பட்டு வந்திருக்கிறது. ஒவ்வொரு காலத்திலும் சித்திரம் வரையும் பாணி வெவ்வேறு விதமாக இருந்திருக்கிறது.
துரதிருஷ்டவசமாக, தமிழ்நாட்டு ஓவியங்கள், காலப் போக்கில் அழிந்துவிடக் கூடிய சுவரிலும் மரத்திலும் சித்திரங்களைத் தீட்டியிருந்தார்கள். எனவே, அவற்றின் பெருமையை இன்று உணர இயலாதபடி, அவற்றில் பெரும்பான்மையானவை அழிந்துவிட்டன. எஞ்சியிருப்பவை சிலவே.
புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள சித்தன்னவாசலில் இருக்கும் மண்டபங்களில் தமிழ்நாட்டு சித்திரக் கலையைக் காணலாம். தஞ்சாவூர்க் கோயில் பிராகாரத்தில் மறைந்திருந்த சுவர்ச் சித்திரங்களும் தமிழர்களின் ஓவியத் திறமைக்குச் சான்றாக விளங்குகின்றன.
கோயில்களில் விக்கிரகங்களை வைத்துப் பூஜை செய்து வருகிறோம். ஆனால், சாதாரணமாக வீடுகளில் விக்கிரகங்களை நிர்மாணித்து வழிபாடு செய்வதில்லை. விக்கிரக பூஜைகளுக்குக் கடைப்பிடிக்கும் கிரியைகளை வீட்டில் செய்ய இயலாது. பூஜை அறைகளில் பெரிய படல்களை வைத்து வணங்குவதுதான் வழக்கம்.பூஜைக்கென்றே தெய்வப் படங்களை தயாரிப்பதில் ஒரு காலத்தில் தஞ்சாவூர் நகரம்தான் தனிப்புகழ் பெற்றிருந்தது.
தஞ்சாவூரை ஆண்டுவந்த சரபோஜி மன்னர், பல கலைகளிலும் தேர்ந்தவர். அவர் வடஇந்தியாவிலிருந்து சித்திர நிபுணர்களை வரவழைத்து ஓவியக் கலைக்கு ஊட்டம் தந்தார். வடநாட்டிலிருந்து வந்தவர்கள் தமிழ்நாட்டு சித்திர பாணியையும் கலந்து புதுமையைப் புகுத்தினார்கள்.
மராட்டியரின் ஆதிக்கம் சீர்குலைந்த பிறகு இந்தக் கலைஞர்களை ஆதரிப்பவர்கள் குறைந்துவிட்டார்கள். எனவே, இந்த ஓவியக் கலைஞர்களுக்கு சரியான வேலை கிடைக்கவில்லை. வீடுகளில் பூஜை செய்வதற்குத் தேவையான தெய்வப் படங்களைத் தயாரிக்கத் தொடங்கினார்கள்.
தண்ணீரில் பல நாட்கள் ஊறவைத்து, நன்றாகத் தயார் செய்த மரப் பலகைகளில் உருவங்களை வரைவார்கள். பிறகு சித்திரங்களின் உருவம், ஆடை, அணி முதலியவைகளுக்குப் பொருத்தமாக வேவ்வேறு வர்ணங்கறைத் திட்டுவார்கள். தவிர, நகைகளுக்கு விலை உயர்ந்த கற்களையு முத்துக்களையும் ஆங்காங்கே பதிப்பார்கள்.
தெய்வ வடிவங்களுக்குப் பின்னணியாக அமைந்துள்ள விமானம், ஆசனம் முதலியவற்றுக்கு நுணுக்கமான வேலைப்பாடுகளைச் செய்து, தங்க ரேக்குகளை ஒட்ட வைப்பார்கள். இப்படித் தயாரித்த சித்திரங்கள் கண் கவரும் அழகும், தெய்வீகப் பொலிவும் பெற்று விளங்கும். இவையே பிற்காலத்தில் தஞ்சாவூர் சித்திரங்கள் என்றும் தஞ்சை ஓவியம் என்றும் தற்காலத்தில் டேஞ்சூர் பெயிண்டிங் என்றும், சிலாகித்துப் பேசப்பட்டன.
இந்தத் தஞ்சை ஓவியங்கள் தோன்றி இருநூறு ஆண்டுகள் ஆகியும் இன்றும் புத்தம் புதியனவாக ஒளியுடன் விளங்குகின்றன. நல்ல கற்கள் பதித்து உருவாக்கிய தஞ்சை சித்திரங்களை ஜமீன்தார்களும் செல்வந்தர்களும் அதிக விலை கொடுத்து வாங்கிக் கொண்டார்கள்.
சாதாரண மக்களும் இந்த ஓவியங்களை வாங்கும் விதத்தில் இமிடேஷன் கற்களையும் செயற்கை முத்துக்களையும் பதித்துத் தயாரித்து வந்தார்கள். இப்படிப் பதித்த கற்களில் மட்டும் பேதம் இருந்ததே தவிர, வர்ண அமைப்பிலோ சித்திரப் பாணியிலோ, கலை நுணுக்கத்திலோ சற்றும் சிறப்பு குறையவில்லை.
யசோதை ஒரு புறமும் நந்தகோபன் மறுபுறமும் நிற்க, வெண்ணெய்த் தாழியுடன் மஞ்சத்தில் பட்டுத் திண்டுகளுக்கிடையில் வீற்றிருக்கும் பாலகிருஷ்ணனின் சித்திரம் மிகவும் கவர்ச்சியானது. கண்ணனின் கண்கள் நம்முடன் பேச முயல்வது போலவே தோன்றும். படத்தைப் போலவே குழந்தையை இவ்வளவு பெரிதாகவும் வயது முதிர்ந்தவர்களைச் சிறு உருவங்களாகவும் சித்திரிப்பது தவறானது, முரணானது என்று சிலர் கருதலாம். ஆனால், சித்திர சாஸ்திரப்படி அவற்றையெல்லாம் ஒரே அளவில் தயாரிக்க வேண்டிய அவசியமில்லை. ஓவியத்தில் எது முக்கிய அம்சமோ அது பெரிய அளவிலும் மற்றவற்றைச் சிறிய அளவிலும் அமைப்பது பழைய முறை. இத்தகைய ஓவியங்களில் உள்ள உருவங்களைத் தனித் தனியேதான் பார்த்து அனுபவிக்க வேண்டும்.
இருபுறமும் வெண் சாமரம் வீசும் சேடியர்களுக்கு நடுவே, கவிந்த விமானத்தின் கீழே, இரு கரங்களில் பத்மம் தாங்கி, மற்ற இரு கரங்களால் அபய, வரத முத்திரையைக் காண்பிக்கும் மகாலட்சுமியின் தோற்றம், வீட்டுக்கே லட்சுமிகரமாய் இருக்கிறது.
பட்டாபிஷேகக் கோலத்துடன் வீற்றிருக்கும் ஸ்ரீராமசந்திர மூர்த்தியின் கம்பீரமும் அவரைச் சுற்றி உள்ளவர்களின் பொலிவும் சித்திரம் முழுவதும் நிரம்பி வழிகின்றன.
கண்ணனும் ராதையும் அணைத்து நிற்கும் காட்சி காதலும் தெய்வீகமும் கலந்த அற்புத சித்திரம். மீனாட்சி கல்யாண சித்திரம் எல்லோருடைய மனதையும் பரவசப்படுத்தக் கூடியது.
இப்படிப் பலவிதமாகச் சித்திரங்களை வரைந்து தமிழ் நாட்டில் வீடுகளிலும் மடங்களிலும் பக்தி மணம் கமழச் செய்த தஞ்சாவூர் சித்திரக்காரர்களுக்கு நூறு வருடங்களுக்கு முன்பிருந்த ஆதரவு குறைந்துவிட்டது. தஞ்சாவூர் சித்திரங்களை வெகுகாலமாகத் தீட்டிவந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வருவாய்க் குறைவை சரிக்கட்ட வேறு வேலைகளில் ஈடுபடலானார்கள். ஆன்மிக விழிப்புணர்வு பெற்றுள்ள மக்களின் ஆதரவால் நீண்ட நெடிய காலத்திற்குப் பிறகு மீண்டும் தஞ்சை ஓவியக் கலை புத்துயிர் பெற்று வருகிறது.
-ஆர்.சி. சம்பத்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தஞ்சை ஓவியம்! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தஞ்சை - யுகபாரதி கவிதைகள்
» தஞ்சை வாசனும் - பக்கிரியும்
» தஞ்சை பெரிய கோவில்
» தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலய தரிசனம்
» தஞ்சை பெரிய கோயில்
» தஞ்சை வாசனும் - பக்கிரியும்
» தஞ்சை பெரிய கோவில்
» தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலய தரிசனம்
» தஞ்சை பெரிய கோயில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|