ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருக்கலைப்புக்கு கறிக்குழம்பு...?

4 posters

Go down

கருக்கலைப்புக்கு கறிக்குழம்பு...? Empty கருக்கலைப்புக்கு கறிக்குழம்பு...?

Post by தாமு Fri Feb 11, 2011 9:54 am

பெண்ணுரிமை, பெண்கள் சுதந்திரம், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 விழுக்காடு தனி இட ஒதுக்கீடு இவ்வாறான கருத்துக்கள் பரபரப்பான விவாதத்தில் இருக்க, மறுபுறம் பெரிய பதவிகள் தொடங்கி பெட்ரோல் பங்குகள் வரை பெண்கள் சாதனை படைத்துக்கொண்டிருக்க, மற்றொரு புறமோ சத்தமின்றி பெண்களின் பிறப்பு விகிதத்தை குறைக்கும் காரியங்கள் நடைபெறுவதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிப்பவையாக உள்ளன.

பெண் குழந்தை பிறந்துவிட்டால், அதற்கு கள்ளிப்பால் ஊற்றியும், நெல்லை வாயில் திணித்தும் கொல்லும் கொடுமை சுமார் பத்து ஆடுகளுக்கு முன் தேனி மாவட்டம் உள்ளிட்ட சில தென்மாவட்டங்களில் தலைவிரித்து ஆடியபோது, அதை தடுக்கும் நோக்கில்,அன்றைய ஆட்சியாளர் 'தொட்டில் குழந்தை திட்டம்' கொண்டுவந்ததையும் , அரசின் கடும் நடவடிக்கைக்குப் பின் பெண் சிசுக்கொலை குறைந்ததையும் நாமறிவோம்.

மேலும் கருவுற்றிருக்கும் தாயின் வயிற்றில் வளரும் குழந்தை ஆணா- பெண்ணா என கண்டறிந்து, கருவிலேயே சமாதியாக்கும் காட்டுமிராண்டித்தனத்தை தடுக்க அரசு, ஸ்கேன் சென்டர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதித்தபோதிலும்,சங்கேத பாஷையில் ஆண்-பெண் என ஸ்கேன் சென்டர்கள் சிலவற்றில் அடையாளம் காட்டப்படுவதாகவும் பரவலான கருத்து நிலவுகிறது.

அடுத்து கருக்கலைப்பு நாளுக்கு நல நவீனமாகி வருகிறது. கருவுற்ற பெண்ணின் கருவைக் கலைக்க, பழங்காலத்து கிராமத்து வைத்திச்சிகள் எருக்கலங்குச்சியை பயன்படுத்துவர். பின்னர் கருக்கலைப்பு மாத்திரைகள்; அந்த அவ்ரிசையில் தற்போது கோழிக்குழம்பு மூலம் கருக்கலைப்பு செய்யும் நவீன யுத்தி பரவி வருகிறதாம்.

கோழிக்குஞ்சை பிடித்து, வழக்கத்தை விட அதிகமாக மிளகு, காரம், எண்ணெய், சீயக்காய் மற்றும் உள்ளூர் மறுத்துவர்கள் தரும் இரு மாத்திரைகள் சேர்த்து குழம்பாக்கி, ஒருநாள் விட்டு மறுநாள் சாப்பிட்டால், கர்ப்பிணிக்கு அபார்ஷன் ஆகிவிடுமாம். என்ன கொடுமை இது!

இந்த நவீன யுகத்திலும் பெண் குழந்தை பிறப்பை தடுக்க பெற்றோர் நினைப்பதை வெறும் சட்டங்கள் போட்டு தடுத்திட இயலாது. மாறாக நாட்டில் நிலவும் வரதட்சனை உள்ளிட்ட பென்களுக்கெதிரான கொடுமைகள் இரும்புக்கரம் கொண்டு தடுக்கப்பட்டு , பெண் குழந்தை விஷயத்தில் பெற்றோருக்கு நம்பிக்கையூட்டும் வழியை அரசு கண்டறிந்து அதை செயல்படுத்த முன்வரவேண்டும். அதை விடுத்து வெறுமனே கர்ப்பிணிப் பெண் உதவித்தொகை- திருமண உதவித்தொகை போன்ற சில உதவிகள் குறைந்துவரும் பெண்களின் விகிதாசாரத்தை உயர்த்தி விடாது என்பதை அரசு கவனத்தில் கொள்ளவேண்டும்.

மேலும், இன்றைய நவீன காலத்தையெல்லாம் விஞ்சும் வண்ணம் இறைத்தூதர்[ஸல்] அவர்கள், இஸ்லாத்தை எடுத்தியம்பத் தொடங்கிய காலத்தில் பெண்குழந்தையை உயிரோடு புதைக்கும் நடைமுறை அறியாமைக்கால மக்களிடம் இருந்தது. அப்படிப்பட்ட மக்களை இஸ்லாம் எனும் போதனை மூலம் மாற்றியமைத்து, பெண் குழந்தையை போட்டி போட்டு வளர்க்கும் நிலையை ஏற்படுத்தினார்கள் நபியவர்கள். அதற்கு ஒரே ஒரு சான்று;

ஹுதைஃபியா உடன்படிக்கையின் போது நடந்த சம்பவம்; நபி(ஸல்) அவர்களும் (மக்காவைவிட்டுப்) புறப்பட்டார்கள். அப்போது (உஹுதுப் போரில் கொல்லப்பட்டிருந்த) ஹம்ஸா(ரலி) அவர்களின் (அனாதை) மகள், 'என் சிறிய தந்தையே! என் சிறிய தந்தையே!" என்று (கூறிக் கொண்டே) அவர்களைப் பின்தொடர்ந்து வந்தாள். அலீ (ரலி) அச்சிறுமியை (பரிவோடு) எடுத்து அவளுடைய கையைப் பிடித்தார்கள். ஃபாத்திமா(ரலி) அவர்களிடம், 'இவளை எடுத்துக் கொள். (இவள்) உன் தந்தையின் சகோதரருடைய மகள். இவளை (இடுப்பில்) சுமந்து கொள்" என்று கூறினார்கள். அச்சிறுமியின் விஷயத்தில் அலீ (ரலி) அவர்களும், ஸைத் இப்னு ஹாரிஸா(ரலி) அவர்களும், ஜஅஃபர்(ரலி) அவர்களும் (ஒவ்வொருவரும், 'அவளை நானே வளர்ப்பேன்' என்று) ஒருவரோடொருவர் போட்டியிட்(டு சச்சரவிட்டுக் கொண்)டனர். அலீ(ரலி), 'நானே இவளுக்கு மிகவும் உரிமையுடையவன். ஏனெனில், இவள் என் சிறிய தந்தையின் மகள்" என்று கூறினார்கள். ஜஅஃபர்(ரலி), 'இவள் என் சிறிய தந்தையின் மகள். மேலும், இவளுடைய சிற்றன்னை என் (மணபந்தத்தின்) கீழ் இருக்கிறாள்" என்று கூறினார்கள். ஸைத்(ரலி), '(இவள்) என் சகோதரரின் மகள்" என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் அச்சிறுமியின் சிற்றன்னைக்கு சாதகமாக (சிற்றன்னையின் கணவரான ஜஅஃபர்(ரலி) அவளை வளர்க்கட்டும் என்று) தீர்ப்பளித்தார்கள். மேலும், 'சிற்றன்னை தாயின் அந்தஸ்தில் இருக்கிறாள்" என்று கூறினார்கள். [புகாரி]

எனவே இஸ்லாம் ஒன்றே பெண் சிசுக்கொலைக்கு அன்றே சாவுமணியடித்து, பெண்ணிற்கு பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்து உரிமையும் வழங்கியுள்ளது என்பதை எவரால்தான் மறுக்கமுடியும்..? கருக்கலைப்புக்கு கறிக்குழம்பு...?

-அபூ ஸைஃப்



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கருக்கலைப்புக்கு கறிக்குழம்பு...? Empty Re: கருக்கலைப்புக்கு கறிக்குழம்பு...?

Post by SK Fri Feb 11, 2011 11:42 am

ஒரு உயிரை கொன்னு
கரிக்குழம்பு வைகரங்க நு பாத்தா
அந்த கரிக்குழம்பை வைத்து
ஒரு உயிரை கொல்த்ராங்களே!! என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

கருக்கலைப்புக்கு கறிக்குழம்பு...? Baby_chicken.221141907_std
SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

கருக்கலைப்புக்கு கறிக்குழம்பு...? Empty Re: கருக்கலைப்புக்கு கறிக்குழம்பு...?

Post by அசோகன் Fri Feb 11, 2011 11:56 am

அய்யா மருத்துவ ஆராய்ச்சியாளர்களே எங்க ஊருக்கு வாங்க!இலவசமா மருந்து தர்ரோம்!நாங்கெல்லாம் கடவுளுக்கே கருக்கலைக்கும் வித்தையை கற்றுக் கொடுப்போம் என்று போர்டு வச்சு பிரச்சாரம் கூட செய்வாங்க ப்பொலிருக்குது.
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

கருக்கலைப்புக்கு கறிக்குழம்பு...? Empty Re: கருக்கலைப்புக்கு கறிக்குழம்பு...?

Post by ஸ்ரீஜா Fri Feb 11, 2011 12:08 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது எதிர்ப்பு எதிர்ப்பு


துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

கருக்கலைப்புக்கு கறிக்குழம்பு...? Empty Re: கருக்கலைப்புக்கு கறிக்குழம்பு...?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum