Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ், மெண்டரின் குறித்த டாக்டர் மகாதிரின் விவேகமற்ற கருத்து
2 posters
Page 1 of 1
தமிழ், மெண்டரின் குறித்த டாக்டர் மகாதிரின் விவேகமற்ற கருத்து
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் இப்படிச் சொல்வது முதல் தடவை அல்ல, இது கடைசித் தடவையாகவும் இருக்காது.
உலகில் எந்த நாடும் அதன் குடிமக்களுக்கு தேசிய மொழியில் அன்றி வேறெந்த மொழியிலும் பள்ளிகளில் கல்வி புகட்டுவதில்லை என்கிறார் மகாதிர். அவரின் கூற்று இணையத்தளத்தில் சர்ச்சையை உண்டு பண்ணியுள்ளது.
மலேசியாவில் தமிழும் மெண்டரினும் பலநூறு பள்ளிகளில் கற்றல்-கற்பிக்கும் மொழிகளாக இருப்பது உண்மை. மெண்டரின் மொழியில் பாடம் நடத்தும் இடைநிலைப் பள்ளிகளும் உண்டு.
மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகள் இருப்பதற்குக் காரணம் பிரிட்டிஷ் காலனித்துவவாதிகள். அவர்கள், ஓர் இனத்தவருக்கு அவர்களின் தாய்மொழியில் கல்விபுகட்டுவதே சிறந்தது என்பதை ஐக்கிய நாடுகள் சாசனம் உருவாக்கப்படுவதற்கு முன்பே செயல்படுத்தி விட்டார்கள்.
அது அவர்களுக்கு “சிறந்த பால்மரம் வெட்டும் தொழிலாளர்களை” உருவாக்கிக் கொடுப்பதற்கு உதவியாக இருந்தது என்பது வேறு விசயம். இதேபோல் சீனப் பள்ளிகளும் வேறு காரணங்களுக்காக உருவாக்கப்பட்டன.
பஞ்சாபியர்களுக்கு கல்சா பள்ளிகளும்கூட இருந்தன. இன்னும்கூட அங்கொன்றும் இங்கொன்றுமாக அவை இருக்கக்கூடும்.
பார்க்கப்போனால் நாம் எல்லாருமே, வீடு, தொழுகை இல்லங்கள், தாய்மொழி செய்தித்தாள்கள், தாய்மொழிப் பள்ளிகள் ஆகியவற்றுக்கு வெளியில் பகாசா மலேசியாவில் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தால் அது 1மலேசியா கோட்பாட்டுக்கு மிகவும் உகந்ததாக இருக்கும்.
ஆனால் நிலைமை அப்படி இல்லை, மலேசியாவில் வணிகம் என்று பார்த்தால் சில்லறை வணிகத்துக்குப் பயன்படும் மொழியாக மெண்டரின் விளங்குகிறது, உயர்க்கல்வி, உயர்நிலை வணிகம் ஆகியவற்றுக்கு ஆங்கிலம் பயன்படுகிறது. சந்தைகளில் பகாசா பசார் (பசார் மலாய்) ஆட்சி செய்கிறது.
கல்வியிலும் வணிகத்திலும் அரசமைப்பிலும்கூட பகாசா மலேசியா தேசியமொழியாக தலையெடுக்க முடியாமல் இருப்பதைக் காண்கிறோம். அரசமைப்பு பகாசா மலாயுதான் தேசியமொழி என்று இன்னமும் கூறிக்கொண்டிருக்கிறது. இது ஒரு தவறான சொல்வழக்காகும்.
பகாசாவின் சுருக்க வரலாறு
பகாசா மலாயு-ஜோகூர் ரியோ வடிவம்- பகாசா மலேசியா அல்ல. பகாசா மலேசியா என்பது பகாசா மலாயுவை அடிப்படையாகக்கொண்டு தமிழ், சீனம், பஞ்சாபி உள்பட உள்நாட்டு மொழிச் சொற்களும் ஆங்கிலமும் கலந்த ஒரு மொழியாகும்.
சுதந்திரம் பெற்றதிலிருந்து பகாசா மொழி வளர்ச்சிக்குப் பொறுப்பேற்றிருப்பது டேவான் பகாசா டான் புஸ்தகாவாகும்.
அது அண்மைய ஆண்டுகளில் பாட நூல்கள் பகாசா மலேசியாவில் இருந்தாலும் நூலின் அட்டைகளில் பகாசா மலேசியா என்று குறிப்பிடாமல் பகாசா மலாயு என்று குறிப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது.
இந்த மாற்றம், கபார் பாபா துணைப் பிரதமராக இருந்த காலத்தில் அவர் அடிக்கடி பகாசா மலாயுதான் இந்நாட்டின் தேசியமொழி- பகாசா மலேசியா அல்ல என்று சொல்லி வந்ததன் விளைவு.
பகாசா மலாயு-பகாசா ஜிவா பங்சா (மொழியே இனத்தின் உயிர்)- என்பது மலாய் இனம், மலாய்த் தேசியவாதம், மலேசியா என்ற உணர்வை எழுப்பக்கூடியது என்றவர் முழக்கமிட்டார்.
பகாசா, ஜீவா, பங்சா என்பதில் மூன்றுமே சமஸ்கிருதச் சொற்கள் அதில் “மலாய்த்தன்மை” அறவே இல்லை.
பகாசா மலாயு, முதலில் கம்போடியாவில் ஒரு பேச்சு மொழியாக இருந்தது. பின்னர் அது வணிகர்களும், சமயப் பரப்பாளர்களும் பயன்படுத்தும் மொழியாக உருவாகி தென்கிழக்காசிய தீவுகளில் பரவி இவ்வட்டாரத்துக்கே தொடர்புமொழியானது. இந்து, பவுத்த சமயங்கள் பரவியபோது சமஸ்கிருதமும் பாலியும் (சமஸ்கிருத கிளை மொழி) அதிக அளவில் அதில் கலந்து பகாசா மலாயு ஆனது.
காலப்போக்கில் தமிழ், பஞ்சாபி, சீனம், ஆங்கிலம், கடாசான்டூசுன்,இபான் ஆகியவையும் மற்ற மொழிகளும் அதில் கலக்கத் தொடங்கின.
இந்நாட்டில் எந்த ஒரு தரப்பினரும் மற்றவர்களின் தாய்மொழிகளை எந்தக் காரணத்தைக் காட்டியும் ஒழிக்க இடமளிக்கக்கூடாது. அப்படிச் செய்வதை அரசமைப்பு திட்டவட்டமாகத் தடுக்கிறது.
அதே வேளை பகாசா மலேசியாவுக்கு மலேசியர்கள் உரிய மரியாதை கொடுக்கிறார்களா என்றால் இல்லை என்பதுதான் உண்மை.
இக்குறையைப் போக்க, பகாசா மலேசியாதான் நாட்டின் தேசியமொழி என்று அரசமைப்பில் திருத்தம் செய்ய வேண்டும்.
அப்படிச் செய்தால், மலேசியர்கள், பகாசா மலேசியா, மலாய்க்காரர்களின் மொழி “அதனால் ஒதுக்கவேண்டிய ஒன்று” என்று நினையாமல் அது தங்களின் மொழி என்று எண்ணத் தொடங்குவர். மலேசிய தேசியம் என்னும் உணர்வும் தலைதூக்கும்.
பகாசா மலேசியாவுக்கு அதிகாரப்பூர்வ அங்கீகாரம் கொடுக்கப்படும்போது மலாய் தேசியவாத உணர்வை முன்னிறுத்தும் முயற்சி இருக்காது.
தமிழும் மெண்டரினும் மறைந்துபோவது நல்லதென்று நினைக்கலாம் ஆனால் அவை மறையப்போவதில்லை, இங்குதான் இருக்கப்போகின்றன.
அதே வேளை, வீடுகள், தொழுகை இல்லங்கள், தாய்மொழி செய்தித்தாள்கள், தாய்மொழிப் பள்ளிகள் ஆகியவற்றுக்கு அப்பால் மலேசியர்கள் பகாசா மலேசியாவில் பேசாமல் இருப்பதற்கு எந்தக் காரணத்தையும் கூற முடியாது.
பிலிப்பின்சில், மக்கள் பிலிப்பினோ மொழி பேசுகிறார்கள். அது, தக்கலோக்கை அடிப்படையாகக் கொண்டு அந்நாட்டின் வட்டார மொழிகள், ஸ்பேனிஷ், ஆங்கிலம் ஆகியவை கலந்து பேசப்படும் ஒரு மொழி.
இந்தோனேசியாவில் இந்தோனேசிய மொழி பேசப்படுகிறது. அது பகாசா மலாயுவை அடிப்படையாகக் கொண்டு பல கிளைமொழிகளும் டச்சு, ஆங்கிலம் ஆகிய மொழிகளும் கலந்த ஒரு மொழியாகும்.
இன்றைய இந்தோனேசிய மொழியில் ஒரு வாக்கியத்தில் உள்ள பத்து சொற்களை எடுத்துக்கொண்டால் பத்தும் ஆங்கிலச் சொற்களாக இருப்பதைக் காணலாம்.சூழ்நிலைக்கு ஏற்ப நிகழ்ந்துள்ள ஒரு மாற்றம் இது. உலகில் மறைந்துபோன ஆயிரக்கணக்கான மொழிகளில் ஒன்றாக மாறிவிடாமல் காலத்துக்கு ஏற்ப ஆற்றலுடன் விளங்க வேண்டுமென்பதற்காக நிகழ்ந்துள்ள ஒரு மாற்றம் அது.
மலேசியாவில் ஆளும் பாரிசான் நேசனலால் பெரிதுபடுத்திப்பேசப்படும் 1மலேசியா கோட்பாட்டையொட்டி இப்படிப்பட்ட மாற்றம் எப்போது தொடங்கும் என்று சொல்ல முடியாது.
இதனிடையே, மகாதிர் அப்படிப் பேசுவது அவருடைய தகுதிக்கு ஏற்புடையதல்ல. மலேசியாவில் எந்த விவகாரமானாலும் அதை இன விவகாரமாக்கி அதன்வழி, மலாய்க்காரர்களிடையே பீதியை உண்டாக்கி அவர்களை ஓர் அரசியல் தளத்தில் ஒன்றுபட வைக்கும் முயற்சியில் இறங்கி விடுகிறார் அவர். அதுதான் அம்னோவின் அரசியல்பாணி.
இப்படிப்பட்ட குறுகியநோக்கம் கொண்ட அரசியலால், ஆற்றல்மிக்கோரும் அறிவில் சிறந்தோரும் நமக்கு நல்வழிகாட்டிகளாக திகழ முடியாதபடி ஒதுக்கப்படுகிறார்கள். பெரும்பாலோருக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய வசதிவாய்ப்புகளும் மறுக்கப்படுகின்றன.
பெரும்பாலோரை அடிமட்டப் பொருளாதாரத்திற்குப் பங்காற்றுவதுதான் அவர்களின் பணி என்று அடக்கிஒடுக்கிவைத்து அவர்களின் மனிதாபிமான உணர்வுகளை அழித்து அவர்கள்மீது ஒரு சிலரின் மேலாண்மையை நிலைநிறுத்த முற்படும் இம்முயற்சியும்கூட ஒரு சாதீய கட்டமைப்பைப் புதுப்பிக்கும் ஒரு முயற்சிதான்.
மலேசியாஇன்று, - ஜோ பெர்னாண்டஸ்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தமிழ், மெண்டரின் குறித்த டாக்டர் மகாதிரின் விவேகமற்ற கருத்து
சாதீய கட்டமைப்பைப் புதுப்பிக்கும் ஒரு முயற்சிதான்....
தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை
- பாரதியார்-
Similar topics
» கற்பு குறித்த கருத்து-குஷ்புவுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
» காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரிணியை தகாத வார்த்தை கூறி ஒருவர் திட்டியது குறித்த தங்களின் கருத்து என்ன?
» ஜாதி பெயரை கூறி திட்டிய இருவரிடம் விசாரணை - இந்தச் செய்தியின் உண்மைத் தன்மை குறித்த கருத்து தேவை.
» மிகப்பெரிய ஹீரோ: கவுரவ டாக்டர் பட்டத்தை ஆனந்த் ஏற்க வேண்டும்; அபினவ் பிந்த்ரா கருத்து
» தமிழ் புத்தாண்டு மாற்றம்: டாக்டர் ராமதாஸ் எதிர்ப்பு
» காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரிணியை தகாத வார்த்தை கூறி ஒருவர் திட்டியது குறித்த தங்களின் கருத்து என்ன?
» ஜாதி பெயரை கூறி திட்டிய இருவரிடம் விசாரணை - இந்தச் செய்தியின் உண்மைத் தன்மை குறித்த கருத்து தேவை.
» மிகப்பெரிய ஹீரோ: கவுரவ டாக்டர் பட்டத்தை ஆனந்த் ஏற்க வேண்டும்; அபினவ் பிந்த்ரா கருத்து
» தமிழ் புத்தாண்டு மாற்றம்: டாக்டர் ராமதாஸ் எதிர்ப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|