ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 22:13

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 22:11

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

நிகழ்நிலை நிர்வாகிகள்

வருவாயா? - ஓ.எஸ். மசூது

Go down

வருவாயா? - ஓ.எஸ். மசூது Empty வருவாயா? - ஓ.எஸ். மசூது

Post by சிவா Wed 9 Feb 2011 - 11:03

இன்று வசந்தியை பெண் பார்க்க வருகிற மாப்பிள்ளை, நல்ல வசதியான இடம் என்பதில் வசந்தியின் அம்மாவிற்கும், அப்பாவிற்கும் மகிழ்ச்சி

தான்.குறித்தநேரத்தில் மாப்பிள்ளை ரமேஷ் தன் குடும்பத்தாருடன் வசந்தியை பெண் பார்க்க வந்தான். மாப்பிள்ளை ரமேஷ் சொந்தமாக மருந்து தயாரிக்கும் கம்பெனி நடத்துகிறான். சொந்த வீடு, கார் என்று வசதிகள்.

வசந்தியும், படிப்பிலும் அழகிலும் குறைவில்லாதவள் தான். பொறியியல் பட்டப்படிப்பு முடித்து ஒரு ஐ.டி.கம்பெனியில் வேலை செய்கிறாள்.

பெண்ணிடம் தனியே பேச வேண்டும் என்று ரமேஷ் சொன்ன போது வசந்தியின் பெற்றோர் 'அதுக்கென்ன பேசுங்கள்'' என்று சொன்னாலும், வசந்தி சற்று தயக்கத்துடனே சென்றாள்.

அவன் பேசியதெல்லாம் தன் வசதி, தன் கம்பெனி பற்றிய சுய தம்பட்டம் தான். வசதி கொட்டிக்கிடப்பதால் `நீ கல்யாணத்துக்கப்புறம், வேலை பார்க்கணும் என்பது கூட அவசியமில்லை' என்று அவள் சுயமரியாதைக்கு உலை வைத்தான்.

ரமேஷின் பேச்சும், நடவடிக்கையும் அவ்வளவு மன நிறைவை தரவில்லை என்றாலும், தன் பெற்றோரின் சந்தோஷத்திற்காக, அமைதியாகவே இருந்தாள் வசந்தி.

மாப்பிள்ளை வீட்டாருக்கு வசந்தியை ரொம்பவே பிடித்துப்போயிற்று. ஒரு நல்ல நாள் பார்த்து நிச்சயதார்த்தம் வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லிச் சென்றனர்.

ஒரு வாரம் கழித்து, வசந்திக்கு ஒரு போன் வந்தது. 'வசந்தி, நான் ரமேஷ் பேசுறேன், இன்று நாம் எங்காவது வெளியே போய் வரலாமா? எங்கு போகலாம்?'' என்றான் ரமேஷ்.

வசந்திக்கு மிகுந்த தயக்கம். எதுவும் பேசாமல் இருந்தாள்.

மீண்டும் ரமேஷ் 'ஒண்ணு செய்யலாம், நான் கம்பெனி விசயமா நாளை பெங்களூர் போகிறேன். போனவுடன் உடனே திரும்பி விடுவேன். நீயும் வாயேன். நாம் இருவரும் பேசிப்பழகி ஒருத்தருக்கொருத்தர் புரிந்து கொள்ளலாம் அல்லவா'' என்றான்.

'ஐயோ பெங்களூர் போனா, திரும்பிவர மறுநாளாயிடுமே. வீட்ல அனுமதிக்கமாட்டாங்க'' என்றாள் வசந்தி.

'வீட்டுல எதாவது மாத்தி சொல்லி...'' என்றவனின் பேச்சை இடைமறித்து, 'இல்லீங்க, நான் வரல, மன்னித்துக் கொள்ளுங்க'' என்று சொல்லி போனை வைத்து விட்டாள்.

மறுத்ததால் எங்கே தன்னை நிராகரித்து விடுவானோ என்ற தயக்கம் இருந்தாலும், ரமேஷின் வேண்டுகோளுக்கு இணங்குவதில்லை என்பதில் உறுதியாக இருந்தாள் வசந்தி.

ஒரு மூன்று நாள் கழித்து, வசந்தி வேலை பார்க்கும் அலுவலகத்துக்கே முன்னறிவிப்பின்றி வந்துவிட்டான்.

ரமேஷ் சிரித்த முகத்துடன் தென்பட்டான். ஒரு சின்ன பார்சலை நீட்டி 'உன்னைப் பார்க்கணும்ணு தோன்றியது. வரும் போது சும்மா வரக்கூடாதுன்னு இதை வாங்கி வந்தேன்''. என்றான். 'இல்லீங்க, இதெல்லாம் வேண்டாம்'' என்று சிரித்துக் கொண்டே மறுத்து விட்டாள் வசந்தி.

'அப்புறம் வசந்தி, அன்றைக்கு நான் உன்னை வெளியே போய் வரலாம் என்று கூப்பிட்டேனே, அதுக்கு வருத்தமா! அது வேறு ஒண்ணுமில்லை. அது உனக்கு நான் வச்ச டெஸ்ட்'' என்றான் ரமேஷ்.

'என்னது டெஸ்ட்டா?'' அதிர்ந்தாள் வசந்தி.

'ஆமா வசந்தி! உன்னோட வெளியே போகணும் என்பதற்காக நான் கூப்பிடல. அப்படி கூப்பிட்டா நீ என்ன சொல்கிறாய் என்று பார்ப்பதற்குத்தான். பரவாயில்ல! வர மாட்டேன்னு சொல்லி நான் வச்ச டெஸ்ட்ல நீ பாஸாயிட்டே!'' என்றான் ரமேஷ்.

அதிர்ச்சியடைந்த வசந்தி, மிகுந்த கோபத்தில் 'ஆனால் நீ தோத்துட்டியே'' என்றாள்.

'என்னது நான் தோத்துட்டேனா, என்ன சொல்ற வசந்தி?''

'ஆமா ரமேஷ். நீ வச்ச டெஸ்டிலேயே நீ எப்படிப்பட்டவன் என்பது தெரிஞ்சு போச்சு. வெளிய வரியான்னு கூப்பிட்டு டெஸ்ட் வைக்கிறியே, இது ஒரு நாகரீகமான செயலா? நான் என்ன உனக்கு வேலைக்காரியா? அல்லது உதவியாளரா? டெஸ்ட் வைக்கிறதுக்கு! ஆணுக்குப் பெண் சமம் என்ற மனப்பான்மையில்லாத, பெண்ணை மதிக்கத்தெரியாத உன்னை மதிச்சி நான் பேசிக்கிட்டிருப்பதே பெரிய விஷயம். உடனே கிளம்பு''

முகத்திலறைந்தாற் போல சொன்னாள் வசந்தி. சூடுபட்ட பூனையாய் தலை குனிந்து திரும்பினான் ரமேஷ்.


வருவாயா? - ஓ.எஸ். மசூது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum