புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ், மெண்டரின் குறித்த டாக்டர் மகாதிரின் விவேகமற்ற கருத்து  Poll_c10தமிழ், மெண்டரின் குறித்த டாக்டர் மகாதிரின் விவேகமற்ற கருத்து  Poll_m10தமிழ், மெண்டரின் குறித்த டாக்டர் மகாதிரின் விவேகமற்ற கருத்து  Poll_c10 
6 Posts - 60%
வேல்முருகன் காசி
தமிழ், மெண்டரின் குறித்த டாக்டர் மகாதிரின் விவேகமற்ற கருத்து  Poll_c10தமிழ், மெண்டரின் குறித்த டாக்டர் மகாதிரின் விவேகமற்ற கருத்து  Poll_m10தமிழ், மெண்டரின் குறித்த டாக்டர் மகாதிரின் விவேகமற்ற கருத்து  Poll_c10 
2 Posts - 20%
heezulia
தமிழ், மெண்டரின் குறித்த டாக்டர் மகாதிரின் விவேகமற்ற கருத்து  Poll_c10தமிழ், மெண்டரின் குறித்த டாக்டர் மகாதிரின் விவேகமற்ற கருத்து  Poll_m10தமிழ், மெண்டரின் குறித்த டாக்டர் மகாதிரின் விவேகமற்ற கருத்து  Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ், மெண்டரின் குறித்த டாக்டர் மகாதிரின் விவேகமற்ற கருத்து


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 10, 2011 9:32 am

தமிழ், மெண்டரின் குறித்த டாக்டர் மகாதிரின் விவேகமற்ற கருத்து  Dr-m


முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் இப்படிச் சொல்வது முதல் தடவை அல்ல, இது கடைசித் தடவையாகவும் இருக்காது.

உலகில் எந்த நாடும் அதன் குடிமக்களுக்கு தேசிய மொழியில் அன்றி வேறெந்த மொழியிலும் பள்ளிகளில் கல்வி புகட்டுவதில்லை என்கிறார் மகாதிர். அவரின் கூற்று இணையத்தளத்தில் சர்ச்சையை உண்டு பண்ணியுள்ளது.

மலேசியாவில் தமிழும் மெண்டரினும் பலநூறு பள்ளிகளில் கற்றல்-கற்பிக்கும் மொழிகளாக இருப்பது உண்மை. மெண்டரின் மொழியில் பாடம் நடத்தும் இடைநிலைப் பள்ளிகளும் உண்டு.

மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகள் இருப்பதற்குக் காரணம் பிரிட்டிஷ் காலனித்துவவாதிகள். அவர்கள், ஓர் இனத்தவருக்கு அவர்களின் தாய்மொழியில் கல்விபுகட்டுவதே சிறந்தது என்பதை ஐக்கிய நாடுகள் சாசனம் உருவாக்கப்படுவதற்கு முன்பே செயல்படுத்தி விட்டார்கள்.

அது அவர்களுக்கு “சிறந்த பால்மரம் வெட்டும் தொழிலாளர்களை” உருவாக்கிக் கொடுப்பதற்கு உதவியாக இருந்தது என்பது வேறு விசயம். இதேபோல் சீனப் பள்ளிகளும் வேறு காரணங்களுக்காக உருவாக்கப்பட்டன.

பஞ்சாபியர்களுக்கு கல்சா பள்ளிகளும்கூட இருந்தன. இன்னும்கூட அங்கொன்றும் இங்கொன்றுமாக அவை இருக்கக்கூடும்.

பார்க்கப்போனால் நாம் எல்லாருமே, வீடு, தொழுகை இல்லங்கள், தாய்மொழி செய்தித்தாள்கள், தாய்மொழிப் பள்ளிகள் ஆகியவற்றுக்கு வெளியில் பகாசா மலேசியாவில் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தால் அது 1மலேசியா கோட்பாட்டுக்கு மிகவும் உகந்ததாக இருக்கும்.

ஆனால் நிலைமை அப்படி இல்லை, மலேசியாவில் வணிகம் என்று பார்த்தால் சில்லறை வணிகத்துக்குப் பயன்படும் மொழியாக மெண்டரின் விளங்குகிறது, உயர்க்கல்வி, உயர்நிலை வணிகம் ஆகியவற்றுக்கு ஆங்கிலம் பயன்படுகிறது. சந்தைகளில் பகாசா பசார் (பசார் மலாய்) ஆட்சி செய்கிறது.

கல்வியிலும் வணிகத்திலும் அரசமைப்பிலும்கூட பகாசா மலேசியா தேசியமொழியாக தலையெடுக்க முடியாமல் இருப்பதைக் காண்கிறோம். அரசமைப்பு பகாசா மலாயுதான் தேசியமொழி என்று இன்னமும் கூறிக்கொண்டிருக்கிறது. இது ஒரு தவறான சொல்வழக்காகும்.

பகாசாவின் சுருக்க வரலாறு


பகாசா மலாயு-ஜோகூர் ரியோ வடிவம்- பகாசா மலேசியா அல்ல. பகாசா மலேசியா என்பது பகாசா மலாயுவை அடிப்படையாகக்கொண்டு தமிழ், சீனம், பஞ்சாபி உள்பட உள்நாட்டு மொழிச் சொற்களும் ஆங்கிலமும் கலந்த ஒரு மொழியாகும்.

சுதந்திரம் பெற்றதிலிருந்து பகாசா மொழி வளர்ச்சிக்குப் பொறுப்பேற்றிருப்பது டேவான் பகாசா டான் புஸ்தகாவாகும்.

அது அண்மைய ஆண்டுகளில் பாட நூல்கள் பகாசா மலேசியாவில் இருந்தாலும் நூலின் அட்டைகளில் பகாசா மலேசியா என்று குறிப்பிடாமல் பகாசா மலாயு என்று குறிப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது.
இந்த மாற்றம், கபார் பாபா துணைப் பிரதமராக இருந்த காலத்தில் அவர் அடிக்கடி பகாசா மலாயுதான் இந்நாட்டின் தேசியமொழி- பகாசா மலேசியா அல்ல என்று சொல்லி வந்ததன் விளைவு.

பகாசா மலாயு-பகாசா ஜிவா பங்சா (மொழியே இனத்தின் உயிர்)- என்பது மலாய் இனம், மலாய்த் தேசியவாதம், மலேசியா என்ற உணர்வை எழுப்பக்கூடியது என்றவர் முழக்கமிட்டார்.

பகாசா, ஜீவா, பங்சா என்பதில் மூன்றுமே சமஸ்கிருதச் சொற்கள் அதில் “மலாய்த்தன்மை” அறவே இல்லை.

பகாசா மலாயு, முதலில் கம்போடியாவில் ஒரு பேச்சு மொழியாக இருந்தது. பின்னர் அது வணிகர்களும், சமயப் பரப்பாளர்களும் பயன்படுத்தும் மொழியாக உருவாகி தென்கிழக்காசிய தீவுகளில் பரவி இவ்வட்டாரத்துக்கே தொடர்புமொழியானது. இந்து, பவுத்த சமயங்கள் பரவியபோது சமஸ்கிருதமும் பாலியும் (சமஸ்கிருத கிளை மொழி) அதிக அளவில் அதில் கலந்து பகாசா மலாயு ஆனது.

காலப்போக்கில் தமிழ், பஞ்சாபி, சீனம், ஆங்கிலம், கடாசான்டூசுன்,இபான் ஆகியவையும் மற்ற மொழிகளும் அதில் கலக்கத் தொடங்கின.

இந்நாட்டில் எந்த ஒரு தரப்பினரும் மற்றவர்களின் தாய்மொழிகளை எந்தக் காரணத்தைக் காட்டியும் ஒழிக்க இடமளிக்கக்கூடாது. அப்படிச் செய்வதை அரசமைப்பு திட்டவட்டமாகத் தடுக்கிறது.

அதே வேளை பகாசா மலேசியாவுக்கு மலேசியர்கள் உரிய மரியாதை கொடுக்கிறார்களா என்றால் இல்லை என்பதுதான் உண்மை.

இக்குறையைப் போக்க, பகாசா மலேசியாதான் நாட்டின் தேசியமொழி என்று அரசமைப்பில் திருத்தம் செய்ய வேண்டும்.

அப்படிச் செய்தால், மலேசியர்கள், பகாசா மலேசியா, மலாய்க்காரர்களின் மொழி “அதனால் ஒதுக்கவேண்டிய ஒன்று” என்று நினையாமல் அது தங்களின் மொழி என்று எண்ணத் தொடங்குவர். மலேசிய தேசியம் என்னும் உணர்வும் தலைதூக்கும்.

பகாசா மலேசியாவுக்கு அதிகாரப்பூர்வ அங்கீகாரம் கொடுக்கப்படும்போது மலாய் தேசியவாத உணர்வை முன்னிறுத்தும் முயற்சி இருக்காது.

தமிழும் மெண்டரினும் மறைந்துபோவது நல்லதென்று நினைக்கலாம் ஆனால் அவை மறையப்போவதில்லை, இங்குதான் இருக்கப்போகின்றன.

அதே வேளை, வீடுகள், தொழுகை இல்லங்கள், தாய்மொழி செய்தித்தாள்கள், தாய்மொழிப் பள்ளிகள் ஆகியவற்றுக்கு அப்பால் மலேசியர்கள் பகாசா மலேசியாவில் பேசாமல் இருப்பதற்கு எந்தக் காரணத்தையும் கூற முடியாது.

பிலிப்பின்சில், மக்கள் பிலிப்பினோ மொழி பேசுகிறார்கள். அது, தக்கலோக்கை அடிப்படையாகக் கொண்டு அந்நாட்டின் வட்டார மொழிகள், ஸ்பேனிஷ், ஆங்கிலம் ஆகியவை கலந்து பேசப்படும் ஒரு மொழி.

இந்தோனேசியாவில் இந்தோனேசிய மொழி பேசப்படுகிறது. அது பகாசா மலாயுவை அடிப்படையாகக் கொண்டு பல கிளைமொழிகளும் டச்சு, ஆங்கிலம் ஆகிய மொழிகளும் கலந்த ஒரு மொழியாகும்.

இன்றைய இந்தோனேசிய மொழியில் ஒரு வாக்கியத்தில் உள்ள பத்து சொற்களை எடுத்துக்கொண்டால் பத்தும் ஆங்கிலச் சொற்களாக இருப்பதைக் காணலாம்.சூழ்நிலைக்கு ஏற்ப நிகழ்ந்துள்ள ஒரு மாற்றம் இது. உலகில் மறைந்துபோன ஆயிரக்கணக்கான மொழிகளில் ஒன்றாக மாறிவிடாமல் காலத்துக்கு ஏற்ப ஆற்றலுடன் விளங்க வேண்டுமென்பதற்காக நிகழ்ந்துள்ள ஒரு மாற்றம் அது.

மலேசியாவில் ஆளும் பாரிசான் நேசனலால் பெரிதுபடுத்திப்பேசப்படும் 1மலேசியா கோட்பாட்டையொட்டி இப்படிப்பட்ட மாற்றம் எப்போது தொடங்கும் என்று சொல்ல முடியாது.

இதனிடையே, மகாதிர் அப்படிப் பேசுவது அவருடைய தகுதிக்கு ஏற்புடையதல்ல. மலேசியாவில் எந்த விவகாரமானாலும் அதை இன விவகாரமாக்கி அதன்வழி, மலாய்க்காரர்களிடையே பீதியை உண்டாக்கி அவர்களை ஓர் அரசியல் தளத்தில் ஒன்றுபட வைக்கும் முயற்சியில் இறங்கி விடுகிறார் அவர். அதுதான் அம்னோவின் அரசியல்பாணி.

இப்படிப்பட்ட குறுகியநோக்கம் கொண்ட அரசியலால், ஆற்றல்மிக்கோரும் அறிவில் சிறந்தோரும் நமக்கு நல்வழிகாட்டிகளாக திகழ முடியாதபடி ஒதுக்கப்படுகிறார்கள். பெரும்பாலோருக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய வசதிவாய்ப்புகளும் மறுக்கப்படுகின்றன.

பெரும்பாலோரை அடிமட்டப் பொருளாதாரத்திற்குப் பங்காற்றுவதுதான் அவர்களின் பணி என்று அடக்கிஒடுக்கிவைத்து அவர்களின் மனிதாபிமான உணர்வுகளை அழித்து அவர்கள்மீது ஒரு சிலரின் மேலாண்மையை நிலைநிறுத்த முற்படும் இம்முயற்சியும்கூட ஒரு சாதீய கட்டமைப்பைப் புதுப்பிக்கும் ஒரு முயற்சிதான்.

மலேசியாஇன்று, - ஜோ பெர்னாண்டஸ்



தமிழ், மெண்டரின் குறித்த டாக்டர் மகாதிரின் விவேகமற்ற கருத்து  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Thu Feb 10, 2011 9:59 am

சாதீய கட்டமைப்பைப் புதுப்பிக்கும் ஒரு முயற்சிதான்....



தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக