புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 8 I_vote_lcapநெகிழ வைத்த நிஜங்கள் - Page 8 I_voting_barநெகிழ வைத்த நிஜங்கள் - Page 8 I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 8 I_vote_lcapநெகிழ வைத்த நிஜங்கள் - Page 8 I_voting_barநெகிழ வைத்த நிஜங்கள் - Page 8 I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 8 I_vote_lcapநெகிழ வைத்த நிஜங்கள் - Page 8 I_voting_barநெகிழ வைத்த நிஜங்கள் - Page 8 I_vote_rcap 
237 Posts - 37%
mohamed nizamudeen
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 8 I_vote_lcapநெகிழ வைத்த நிஜங்கள் - Page 8 I_voting_barநெகிழ வைத்த நிஜங்கள் - Page 8 I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 8 I_vote_lcapநெகிழ வைத்த நிஜங்கள் - Page 8 I_voting_barநெகிழ வைத்த நிஜங்கள் - Page 8 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 8 I_vote_lcapநெகிழ வைத்த நிஜங்கள் - Page 8 I_voting_barநெகிழ வைத்த நிஜங்கள் - Page 8 I_vote_rcap 
19 Posts - 3%
prajai
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 8 I_vote_lcapநெகிழ வைத்த நிஜங்கள் - Page 8 I_voting_barநெகிழ வைத்த நிஜங்கள் - Page 8 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 8 I_vote_lcapநெகிழ வைத்த நிஜங்கள் - Page 8 I_voting_barநெகிழ வைத்த நிஜங்கள் - Page 8 I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 8 I_vote_lcapநெகிழ வைத்த நிஜங்கள் - Page 8 I_voting_barநெகிழ வைத்த நிஜங்கள் - Page 8 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 8 I_vote_lcapநெகிழ வைத்த நிஜங்கள் - Page 8 I_voting_barநெகிழ வைத்த நிஜங்கள் - Page 8 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 8 I_vote_lcapநெகிழ வைத்த நிஜங்கள் - Page 8 I_voting_barநெகிழ வைத்த நிஜங்கள் - Page 8 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெகிழ வைத்த நிஜங்கள்


   
   

Page 8 of 32 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 20 ... 32  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 08, 2011 10:02 am

First topic message reminder :

நெகிழ வைத்த நிஜங்கள் - தினதந்தி

வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட 'வலி'

நகைக்கடை ஒன்றில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறேன். வருடா வருடம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு புது வருட தேதி காலண்டரும், மாதாந்திர காலண்டரும் வழங்குவதுண்டு.

சமீபத்தில் எங்கள் கடைக்கு வந்த பெரியவர் ஒருவர் கேஷ் கவுண்டரில் இருந்தவரிடம் கஸ்டமர் என்ற உரிமையில் காலண்டர் கேட்டார். இதை கவனித்துக் கொண்டிருந்த எங்கள் கடை முதலாளி, வந்தவர் தங்கள் கடையின் ரெகுலர் கஸ்டமர் என்று தெரியாமல், `உங்களை இதற்கு முன்பு இங்கு பார்த்ததே கிடையாதே. வாடிக்கை யாளர்களுக்கு மட்டும்தான் கொடுப்போம்..' என முகத்தில் அடிக்காத குறையாக கூறி அனுப்பி விட்டார்.

சற்றுதூரத்தில் விற்பனை பிரிவில் மும்முரமாக இருந்த நான் அதை கவனித்தேன். முதலாளி அருகே சென்று, `இப்ப வந்துட்டுப் போனவர் என்ன கேட்டார்?' என கேட்டேன்.

`ஏன் அவர் நமது வாடிக்கையாளரா?' என்று என்னிடம் திருப்பிக்கேட்டார் முதலாளி.

``நம்ம கடைக்கு அடிக்கடி வந்து தாலி உருப்படியெல்லாம் வாங்கி செல்வாங்களே.. வசந்தா அக்கா, அவங்க புருஷன்தான் இவரு. இரண்டு மாசத்துக்கு முந்தி அந்தக்கா மாரடைப்பில் இறந்துட்டாங்க. எங்க தெருவுலதான் அவங்க வீடு..'' என்றேன்.

``அடடா! அவரது மனைவி பெயரும், நம்ம கடையின் பெயரும் ஒன்றாக இருப்பதால் மனைவியின் நினைவாக காலண்டர் கேட்டு வந்திருக்கிறார். இது எனக்கு விளங்காமப் போச்சே..!' என தன்னையே நொந்து கொண்ட முதலாளி, கடைப்பையனை அனுப்பி அவரை வரவழைத்தார். தேனீர் தந்து உபசரித்து, ஆறுதல்கூறி காலண்டரும் தந்து திருப்தியாக அனுப்பி வைத்தார்.

சுமதி பாபு, கோவூர்.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Jun 04, 2011 6:10 pm

சாரி தல spelling mistake கற்பழிப்பு தான்



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 11, 2011 5:08 pm

காணாமல் போன கர்ப்பிணியின் நிம்மதி

திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் திருச்சிக்கு வருவதற்காக பஸ்சுக்கு காத்திருந் தேன். என்னை போலவே ஒரு வாலிபர் நிறைமாத கர்ப்பிணி மனைவியுடன் பஸ்சை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். கூட்டம் அதிகமாக இருந்தது.

பஸ் வந்ததும் அந்த வாலிபர் முதலில் ஏறி தன் மனைவிக்காக இடம் பிடித்தார். அவரது மனைவி பஸ்ஸில் ஏறும்போது நடுத்தர வயது டைய ஒருவன் அந்தப் பெண்ணைத் தள்ளிக் கொண்டு பஸ்ஸில் ஏறினான். பிறகு மெதுவாக அந்தப் பெண்ணும் பஸ்சில் ஏறிவிட்டாள்.

பஸ் புறப்பட்டது. சிறிது நேரத்தில் அந்த பெண் பதறியபடி தன் கணவரிடம் பேசிக் கொண்டே அழத் தொடங்கினாள். அவளது கைப்பை பிளேடு கொண்டு கிழிக்கப்பட்டு உள்ளே இருந்த அவளுடைய பர்ஸ் திருடப்பட்டிருந்தது.

அந்தப் பர்ஸில் தான் பிரசவ செலவுக்காக சேமித்து வைத்திருந்த 6,000 ரூபாய் பணம் மற்றும் ஆஸ்பத்திரி மருத்துவ பரிசோதனை சீட்டு எல்லாம் இருந்துள்ளது. பணத்தோடு சேர்ந்து அதுவும் திருடு போய்விட்டது.

அந்தப் பெண் அழுது கொண்டே இருந்தார். கணவரோ ஆறுதல்படுத்திக்கொண்டே வந்தார். அந்த தகவல் பஸ் முழுவதும் பரவிவிட பலரும் இரக்கப்பட்டு கண் கலங்கினார்கள்.

பிக்பாக்கெட் ஆசாமி அந்த கர்ப்பிணி பெண்ணின் நிம்மதி, சந்தோஷம் எல்லாவற்றையும் தானே கொள்ளையடித்து விட்டான்.

பி.ஹரிகிருஷ்ணன், மேலகல்கண்டார் கோட்டை.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 11, 2011 5:09 pm

சிறுவனை அழ வைத்த பெரிய மனிதர்!

மூன்றாவது படிக்கும் எனது இளைய மகனை, அருகில் இருக்கும் பலசரக்கு கடைக்கு அனுப்பி வைத்து சில பொருட்கள் வாங்கி வரச் சொன்னேன். வழக்கம்போல கடைக்கு சென்றவன் அன்று அழுது கொண்டே திரும்பி வந்தான். நாங்கள், என்னவென்று கேட்டதற்கு பதில் சொல்லாமல் தனியாக சென்று அமர்ந்து கொண்டான்.

நான் அவனை சாந்தப்படுத்தி விசாரித்தேன். இவன் கடைக்கு போயிருந்தபோது, கடையில் நல்ல கூட்டம் இருந்திருக்கிறது. இவன் `மூக்குக் கண்ணாடி' அணிந்திருப்பான். இவன் கடைக்காரரிடம் சீக்கிரம் சாமான்கள் தரும்படி அவசரப்படுத்தவே, கடைக்காரர் இவனைப் பார்த்து ``பொறுடா கண்ணாடி!'' என்று சொல்லி இருக்கிறார்.

பல பேர் முன்னிலையில் அவர் அப்படிச் சொன்னது இவனுக்கு அவமானமாகி விட்டது. நிற்கப் பிடிக்காமல் சங்கடத்தோடு திரும்பி வந்திருக்கிறான். பிறகு நான் அந்த மளிகைக் கடைக்காரரிடம் இது குறித்து பேசினேன். அவரும் மன்னிப்பு கேட்டார்.

குழந்தைகள் சண்டைபோடும்போது ஏதாவது சொல்லிக் கொள்வார்கள். அது சகஜம்தான்! அவர்களுக்கு ஒன்றும் தெரிவதில்லை. அதனால் பரவாயில்லை என்று விட்டுவிடலாம். ஆனால் பெரியவர்கள் விளையாட்டுக்கு கூட இதுபோன்று சொல்லக்
கூடாது. குழந்தைகளின் மனம் புண்படாமல் ஊக்கப்படுத்துபவர்கள்தானே பெரியவர்கள்.

ப.உமா மகேஸ்வரி, நெய்வேலி.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 11, 2011 5:09 pm


திருவிழாவான திருமண விழா!


எங்கள் உறவினரின் மகன் திருமணத்திற்கு சென்றிருந்தோம். முதல் நாள் இரவு மாப்பிள்ளை அழைப்புக்குப் பிறகு சாப்பாடு முடிந்தவுடன் உறவினர்கள் எல்லோரும் ஆங்காங்கே அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தோம்.

மாப்பிள்ளையின் அம்மா கொஞ்சம் ஜாலி டைப். அவர் திடீரென்று மணமேடையில் ஏறி மைக்கில் பேசினார். ``இப்போது மேடைக்கு வந்து, அவரவர் திறமையைக் காட்டலாம்; எல்லோரும் அதைப் பார்த்து ரசிக்கலாம். என்ன ஓ.கே.வா'' என்று அவர் கேட்டவுடன் எல்லோரும் உற்சாகமாக ``டபுள் ஓ,கே. கேரி ஆன்!' என்று குரல் கொடுத்தோம்.

எல்லோரும் முதலில் கொஞ்சம் தயங்கினார்கள். ஒரு பெண்மணி எழுந்து போய் பாடினார். பிறகு அடுத்தடுத்து ஒவ்வொருவராக வந்து அவரவர் திறமையைக் காட்ட ஆரம்பித்து விட்டார்கள். பாட்டு, மிமிக்ரி, மோனோ ஆக்டிங், நடனம்... இப்படி ஆளாளுக்கு அசத்தினார்கள். எங்களுக் கும் நேரம் போனதே தெரியவில்லை. இரவு 2 மணி ஆன பிறகு நிகழ்ச்சியை முடித்துக் கொண்டோம்.

கலகலவென கழிந்தது பொழுது. கலைந்து செல்ல மனம் இல்லாமல்தான் தூங்கச் சென்றோம். இப்போது நினைத்தாலும் அந்த நிகழ்ச்சி மனதுக்கு சந்தோஷத்தை தருகிறது.

இளம் வயதில் பள்ளி, கல்லூரி நாட்களில் அரட்டை அடித்து ஜாலியாக, சந்தோஷமாக இருக்கிறோம். திருமணம் ஆனவுடன் எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்துவிடுகிறோம். ஆனால் இந்த திருமண விழா வித்தியாசமாக இருந்தது. திறமைகளை பகிர்ந்து கொண்ட அந்த திருமண விழா புதுமண தம்பதிக்கு மட்டுமல்லாமல் உறவினர்கள் அனைவருக்குமே ஒரு திருவிழாவாக இருந்தது. எல்லோரும் மிகவும் சந்தோஷம் அடைந்ததுடன் மாப்பிள்ளை யின் அம்மாவையும் பாராட்டி விட்டு வந்தோம்.

-ஆர்.பிருந்தா, பெங்களூர்.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 11, 2011 5:10 pm

திக்குத் தெரியாத ஊரில் திணறிய குடும்பம்

என் நண்பர் ஒருவர் சொந்தமாக கார் வைத்திருக்கிறார். இளைஞன் ஒருவனை டிரைவராக நியமித்திருந்தார். நண்பர் விடுமுறையில் குழந்தைகளுடன் சுற்றுலா செல்ல விரும்பினார்.

திட்டமிட்டபடி மனைவி மற்றும் குழந்தைகளுடன் சொந்த காரில் சுற்றுலா கிளம்பினார். பல இடங் களைச் சுற்றிப் பார்த்த அவர்கள் இரவில் ஒரு இடத்தில் தங்கி இருக்கிறார்கள். காலையில் எழுந்து பார்த்தால் டிரைவரை காணவில்லை.

டிரைவர் இரவோடு இரவாக காரை மட்டும் தனியாக விட்டு விட்டு கிளம்பி எங்கேயோ சென்று விட்டார். செல்போனில் தொடர்பு கொண்டபோது அணைத்து வைக்கப்பட்டிருந்தது. அது வேற்று மொழி பேசும் மாநிலம். நண் பருக்கு அந்த மொழியும் தெரியாது. காரை ஓட்டிக் கொண்டு வர டிரைவிங்கும் தெரியாது. என்ன செய்வதென்று தெரியாமல் குடும்பத்துடன் தவித்துக் கொண்டிருந்தார் அவர்.

பிறகு அங்கு நின்ற டூரிஸ்ட் பஸ்காரர்களிடம் விவரத்தைக் கூறி அவர்களது கம்பெனியில் இருந்து ஒரு டிரைவரை சம்பளத்திற்கு அழைத்துக் கொண்டு ஊர் திரும்பினார். பிறகு டிரைவரை விசாரித்தபோது சம்பளம் கூட்டித் தர மறுத்ததை மனதில் வைத்துக் கொண்டு பழி வாங்குவதற்காக அப்படி நடந்து கொண்டது தெரியவந்தது..

சொந்தமாக வண்டி வாங்குவோர், டிரைவிங்கையும் கற்றுக் கொள்வது நல்லது. அவசர காலத்தில் அது உதவும்.

கு.சபிதா, தஞ்சாவூர்.




நெகிழ வைத்த நிஜங்கள் - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jun 11, 2011 5:53 pm

இது போல எங்க ஆஃபீஸ்லயும் நான் பண்ணலாமானு யோசிக்கிறேன்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jun 11, 2011 5:55 pm

சிவா wrote:திக்குத் தெரியாத ஊரில் திணறிய குடும்பம்

என் நண்பர் ஒருவர் சொந்தமாக கார் வைத்திருக்கிறார். இளைஞன் ஒருவனை டிரைவராக நியமித்திருந்தார். நண்பர் விடுமுறையில் குழந்தைகளுடன் சுற்றுலா செல்ல விரும்பினார்.

திட்டமிட்டபடி மனைவி மற்றும் குழந்தைகளுடன் சொந்த காரில் சுற்றுலா கிளம்பினார். பல இடங் களைச் சுற்றிப் பார்த்த அவர்கள் இரவில் ஒரு இடத்தில் தங்கி இருக்கிறார்கள். காலையில் எழுந்து பார்த்தால் டிரைவரை காணவில்லை.

டிரைவர் இரவோடு இரவாக காரை மட்டும் தனியாக விட்டு விட்டு கிளம்பி எங்கேயோ சென்று விட்டார். செல்போனில் தொடர்பு கொண்டபோது அணைத்து வைக்கப்பட்டிருந்தது. அது வேற்று மொழி பேசும் மாநிலம். நண் பருக்கு அந்த மொழியும் தெரியாது. காரை ஓட்டிக் கொண்டு வர டிரைவிங்கும் தெரியாது. என்ன செய்வதென்று தெரியாமல் குடும்பத்துடன் தவித்துக் கொண்டிருந்தார் அவர்.

பிறகு அங்கு நின்ற டூரிஸ்ட் பஸ்காரர்களிடம் விவரத்தைக் கூறி அவர்களது கம்பெனியில் இருந்து ஒரு டிரைவரை சம்பளத்திற்கு அழைத்துக் கொண்டு ஊர் திரும்பினார். பிறகு டிரைவரை விசாரித்தபோது சம்பளம் கூட்டித் தர மறுத்ததை மனதில் வைத்துக் கொண்டு பழி வாங்குவதற்காக அப்படி நடந்து கொண்டது தெரியவந்தது..

சொந்தமாக வண்டி வாங்குவோர், டிரைவிங்கையும் கற்றுக் கொள்வது நல்லது. அவசர காலத்தில் அது உதவும்.

கு.சபிதா, தஞ்சாவூர்.
இது போல எங்க ஆஃபீஸ்லயும் பண்ணலாமானு யோசிக்கிறேன்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Jun 13, 2011 10:30 am

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 8 677196 நெகிழ வைத்த நிஜங்கள் - Page 8 677196 நெகிழ வைத்த நிஜங்கள் - Page 8 677196 நெகிழ வைத்த நிஜங்கள் - Page 8 677196 நெகிழ வைத்த நிஜங்கள் - Page 8 677196



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 15, 2011 7:10 pm

தியாக மாப்பிள்ளை... தேடித்தந்த வாழ்க்கை...

என் தோழியின் தங்கைக்கு மூல நட்சத்திரம். அதனால் அவளுக்கு எந்த வரனும் அமையவில்லை. மாப்பிள்ளையாக வருகிறவருக்கு அப்பா அல்லது அம்மா உயிரோடு இருக்கக்கூடாது என்று ஜோதிடர் கூறியிருக்கிறார்.

சில மாதங்களுக்கு பிறகு வந்த ஒரு மாப்பிள்ளை வீட்டார் தோழியின் தங்கையை மணக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள். இதை என்னிடம் சந்தோஷமாக சொன்ன என் தோழி, மாப்பிள்ளையிடம் ஒரே ஒரு குறை தான். அவருக்கு எப்போதாவது வலிப்பு வருமாம் என்று சர்வ சாதாரணமாக சொன்னாள்.

அதிர்ந்து போன நான், உன்தங்கை இதற்கு எப்படி சம்மதித்தாள்? என்று கேட்டேன். பதிலுக்கு தோழி, என் தங்கையிடம் நாங்கள் இதுபற்றி பேசினோம். அவளோ `மூல நட்சத்திரத்தால் எனக்கு திருமணமே நடக்காது என்று நினைத்துக்கொண்டிருந்தேன். இப்போதுதான் வரன் அமைந்திருக்கிறது. மாப்பிள்ளைக்கு வலிப்புநோய் என்றாலும் பிரச்சினை இல்லை. எனக்கு வலிப்புவந்தமாதிரி நினைத்துக் கொள்கிறேன் என்று சம்மதித்து விட்டாள்' என்றாள்.

நிச்சயதார்த்தத்திற்கு அழைப்பு வந்து, போனேன். அங்கு சிலர் அரசல் புரசலாக பேசிக் கொண்டார்கள். `பொண்ணு தங்கச் சிலையாட்டம் இருக்கிறாள். மாப்பிள்ளைக்கு வலிப்பு இருக்காம். பாவம்' என்று வருத்தத்தோடு கூறிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் பேசியது என் தோழி காதிலும் விழவே செய்தது. நிச்சயதார்த்தம் நல்லபடியாக முடிந்தது.

ஒரு வாரத்தில் தோழியின் பெற்றோருக்கு பெண் பார்த்துப்போனவர் கடிதம் எழுதியிருந்தார். அதில், `எனக்கு வலிப்பு எப்போ வரும் எப்படி வரும் என்று தெரியவில்லை. அதற்கான சிகிச்சை எடுத்தும் பலனில்லை. என் உறவினர் வீட்டிற்கு கோவில்பட்டிக்கு சென்றிருந்தேன். அங்கே போயிருந்த போது எனக்கு வலிப்பு வந்து விட்டது. அவர்கள் என்னை ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்தார்கள். உங்கள் பெண்ணின் வாழ்க்கை என்னால் கெட வேண்டாம். என்னை மன்னிக்கவும். உங்கள் பெண்ணிற்கு வேறு ஒரு நல்ல மாப்பிள்ளையாக பார்த்து கல்யாணம் செய்து வையுங்கள். நமது சங்கத்திற்கும் கடிதம் அனுப்பியுள்ளேன். அவர்கள் நல்ல மாப்பிள்ளையாக பார்த்து உங்கள் பெண்ணுக்கு கல்யாணம் செய்து வைப்பார்கள்' என்று முடித்திருந்தார்.

கடிதம் எழுதிய அன்றே ரெயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவர் இறந்த அதிர்ச்சி ஒருபுறம். இனிமேல் தோழியின் தங்கைக்கு திருமணம் எப்படி நடக்கும் என்ற கேள்வி மறுபுறம்.

ஆனால் அடுத்தடுத்து நடந்தது அதிசயம். இறப்பதற்கு முன் மாப்பிள்ளை எழுதிய கடிதத்தின் மூலமாக அவர்கள் சார்ந்திருந்த சாதி சங்கத்தினர் தோழியின் தங்கைக்கு நல்ல மாப்பிள்ளை பையனாகப் பார்த்து பேசி முடித்தனர். அவள் திருமணமும் நல்லபடியாக நடந்தது.

எம்.சுவீட் விஜிமா, திருமங்கலம்.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 15, 2011 7:11 pm

முதலிரவில் ஓடிப்போன கணவன்!

எனது நண்பரின் மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருமணமும் சிறப்பாக நடைபெற்றது. அன்றே மாப்பிள்ளை வீட்டில் முதலிரவு. மணப்பெண் முதலிரவு அறைக்குள் சென்றாள். சில மணி நேரம் அறைக்குள்ளே காத்திருந்துவிட்டு, கணவரை காணாததால் அழுதுகொண்டு கதவைத்திறந்து வெளியே வந்தாள்.

வீட்டிலுள்ள அனைவரும் பதறிப்போய் அவளை விசாரித்த போது, அறைக்குள் வந்ததும் பாத்ரூம் போய்விட்டு வருவதாக சொல்லிப்போன கணவர் திரும்ப வரவேயில்லை. போய்ப்பார்த்தால் அவர் பாத்ரூமிலும் இல்லை. எங்கு போனார் என்று தெரியவில்லை என்று அழுதாள்.

உடனே மாப்பிள்ளை வீட்டார் வீதிகளில் இறங்கி ஆளாளுக்கு மணமகனை தேடத்தொடங்கினார்கள். ஒருவர் கண்டுபிடித்து கூட்டிக் கொண்டு வந்தார். இதற்கிடையே பெண் வீட்டார் பெரும் பிரச்சினையாக்கி விட்டனர். மணமகன் வந்த பிறகு தான் அவர் தாம்பத்தியத்திற்கு லாயக்கற்றவர் என்ற உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.

அதன்பிறகு குடும்பத்திற்குள் நடந்த பஞ்சாயத்தில் மணப்பெண் வீட்டாருக்கு நஷ்டஈடு வழங்கப்பட்டு திருமணமும் ரத்து செய்யப்பட்டது. அந்தப் பெண் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறாள்.

மணமகன் உண்மையை மறைத்ததால் அவர்கள் குடும்பத்தாருக்கு எவ்வளவு அவமானம்! அதோடு அந்தப்பெண்ணின் வாழ்க்கையும் வீணாகி விட்டதே!

எம்.ஜெயராஜ், வாலஜாபேட்டை.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 8 of 32 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 20 ... 32  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக